ShareChat
click to see wallet page
search
#🚩அய்யா வைகுண்டர் 🚩 #அய்யா வைகுண்டர் {1008} #💚Ayya 💗 Vaikundar💚 #அய்யா வைகுண்டர் கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை 11ஆம் நாள் வாசிப்பு ஆரம்பம் - நாள் 28.05.2026 . அய்யா துணை . தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால் பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர். . . அகிலம் ======== வைகுண்டர் முருகனுக்கு அருளல் ==================================== அன்றந்தத் தேவர்முனி எல்லோருந் தாங்கூடி சென்றந்தக் கயிலை செகத்தூணி லேதரித்து . விளக்கம் ========== அன்றைக்குத் தேவர்கள் முனிவர்கள் ஆகிய எல்லாரும் வைகுண்டருடன் கூடிச் சென்று அந்தக் கயிலை உலகத் தூணில் எழுதினர். . . அகிலம் ======= வைகுண்டர் பாதமதை வாழ்த்திக் குவித்துவர மெய்கொண்ட நாதன் வேலவன்செந் தூரணுகி நடக்க அறுமுகனும் நடுங்கி மிகப்பதறி வடக்குமுக மாய்விழுந்து வைகுண்ட ரைப்போற்றி . விளக்கம் ========= வைகுண்டர் தமது பாதங்களை எல்லாரும் வணங்கி வர, வேலவனுக்குரிய திருச்செந்தூரை, நோக்கி நடந்து சென்றார். திருச்செந்தூரை அணுகும்போது, ஆறுமுகன் வைகுண்டரைக் கண்டு நடுங்கி, மிகவும் பதறி வடக்கு முகமாய் வீழ்ந்து வணங்கி வைகுண்டரைப் போற்றித் துதித்தான். . . அகிலம் ======== அப்போது வேலவனை ஆதிவைகுண் டர்பார்த்துச் செப்புகிறார் குண்ட சிவநாத கண்மணியும் நாடுகேட் கப்போறேன் நாரணன் நான்தானும் கேடு வருமுனக்குக் கேள்விகே ளாதிருந்தால் இத்தனை நாளும் என்னைக் கெணியாமல் புத்தியறி யாதவர்போல் புலம்பினீ ரித்தனைநாள் இனிவைகுண் டம்பிறந்து ஏகமொரு குடைக்குள் மனுவொரு சொல்லாள மகாதர்ம மேநினைத்து மாய்கை யறுத்து மாற்றான் கருவறுத்துத் தோயக் குழிமூடி தொல்புவியைத் தானாள நல்லோர்க ளெடுக்க நான்போறேன் கண்டாயே . விளக்கம் ========= வேலவனை ஆதி வைகுண்டர் பார்த்து, சிவநாதக் கண்மணியே, நான் நீதி கேட்கப் போகிறேன். ஏன்? எதற்கு? என்று சிந்திக்காமலும் நான் கூறக் கூடிய உபதேசங்களைக் கேட்காமலும் இருந்தால் உனக்கு இனிமேல் கேடு வந்து முடியும். இவ்வளவு காலமும் என் சக்தியைப் பற்றிச் சிந்திக்காமல் அறிவு இல்லாதவர் போல் வாழ்ந்தீர்கள். இனித் தருமபூமி பிறந்து எல்லாரையும் ஒரு குடைக்குள் ஒரு சொல்லுக்குக் கீழாகப் பெரிய தரும சிந்தனையை மட்டுமே நினைந்து மாய நினைவுகளை அறுத்தெறிந்து கலியனை முழுவதுமாக அழித்துத் துன்பக் குழியை மூடி, இந்த மதிப்புக்குரிய பூமியை நான் ஆட்சி புரிந்து நல்லவர்களைத் தெரிந்தெடுத்து உயர்பதவி கொடுக்கப் போகிறேன். இதை அறிந்து கொள்வாயாக. . . அகிலம். ======== கல்லார் தமக்குக் கசப்பினிமேல் கண்டாயே தர்மவை குண்டம் தான்பிறந்தேன் இப்போது தர்மச் சிறப்புத் தானினிமேல் கண்டாயே நன்மை யினிக்காணும் நாரணன்கண் ணல்லாது தின்மையென்ற சொல்லு ஆகாது கண்டாயே ஆனதா லுன்றனக்கு யானினிமேல் சொல்லும்புத்தி . விளக்கம் ========= மெய்யறிவு பற்றிய கல்வி கற்காதவரர்களுக்கு இனிமேல் துன்பமான வாழ்வுதான் என்பதையும், தருமபூமியை அடையும் வைகுண்டமாக நான் பிறந்துள்ளேன் என்பதையும், இனி நன்மையே காணும் என்பதையும் நான் நாரணன் என்பதையும் அறிந்து கொள். தீய எண்ணம் தீய பேச்சு என்னும் சொல்லுக்கே இங்கு இடம் கிடையாது. இனித் தருமயுகத்துக்குரிய சிறப்புகள் தோன்றிவரும் காண்பாயாக. எனவே, இனிமேல் நீ நடக்க வேண்டிய விதிமுறை பற்றி நான் உனக்குக் கூறுகிறேன். . . தொடரும்... அய்யா உண்டு.
🚩அய்யா வைகுண்டர் 🚩 - அய்யா சிவசிவ சிவசிவா அரகர அரகரா விள்ளாத ஞாயம் மேல்ஞாய மென்மகனே துள்ளாத யானை துடியானை யென்மகனே அடக்கம் பெரிது அறிவுள்ள என்மகனே கடக்கக் கருதாதே கற்றோரைக் கைவிடாதே! அய்யா 28.05.2026 D Muthu Prakash |ருங்கோ வீரத்தனமாய் விளக்கின் போல் ஒளி அய்யா சிவசிவ சிவசிவா அரகர அரகரா விள்ளாத ஞாயம் மேல்ஞாய மென்மகனே துள்ளாத யானை துடியானை யென்மகனே அடக்கம் பெரிது அறிவுள்ள என்மகனே கடக்கக் கருதாதே கற்றோரைக் கைவிடாதே! அய்யா 28.05.2026 D Muthu Prakash |ருங்கோ வீரத்தனமாய் விளக்கின் போல் ஒளி - ShareChat