⍣⃝𓄂☞coffee day ⍣⃝𓄂☞
*இன்று(12-8-26)ஆடி* *அமாவாசை வீட்டிலேயே* *எளிமையாக செய்ய* *வேண்டிய தர்ப்பண* *வழிபாடு*!
முன்னோர்களுக்கு வருடாந்திர திதி
கொடுக்க இயலாதவர்கள் ஒரு வருடத்தில் ஆடி,புரட்டாசி, மற்றும் தை இந்த மூன்று மாதங்களில் வரும் அமாவாசை தர்ப்பணங்களைச் செய்தாலே போதுமானது என்று முன்னோர்கள் வகுத்துள்ளனர்...
கடலில் ஆற்றில் ஆலயங்களில் அல்லது வீடுகளில் வாத்தியார்
(பிராமணர்) வைத்து அமாவாசை தர்ப்பணங்களைச்
செய்வது வழக்கமான நடைமுறையில் உள்ளது.
அன்பர்கள் அனைவரும் வீட்டிலேயே எளிமையாக அமாவாசை தர்ப்பணங்களைச்
செய்து கொள்ளும் முறை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
ஒரே ஒரு ஆடி அமாவாசை அன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால்,
12 ஆண்டுகள் பித்ரு(முன்னோர்கள்) தர்ப்பணம் செய்த பலன் கிடைக்கும்.
இன்று ஆடி அமாவாசை திதி நாளில் காலை எழுந்து நித்திய கர்மங்களை முடித்து விட்டு மூதாதையர்களை
மனதில் தியானித்தபடி
வலது கையில்
எள்ளை வைத்தபடி
துளசிச்செடியின் அருகில் இருந்து கொண்டு.......
காசியிலே கங்கையிலே 108விஷ்ணுஆலயத்திலே
1008சிவாலயத்திலே
நர்மதையிலே கோதாவரியிலே
காவேரியிலே
வைகைநதி தீரத்திலே
விஷ்ணு பாதத்திலே சிவபாதத்திலே
திதி கொடுப்பதனால் என்ன பலனுண்டோ அந்த பலனை கொடுத்து ரட்சிக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டு
அவரவர் கோத்திரப்பெயர் சொல்லி
முதலில் தகப்பனார் பெயரைச் சொல்லியபடி காசி காசி என்றபடி
வலதுகையில் உள்ள எள்மீது தண்ணீர் விட்டு (மனைவி இருப்பவர்கள் அவர்களை நீர் விடச்சொல்லலாம்)
அது வலதுகை கட்டைவிரல் இடுக்கு வழியாக செடியில் விழும்படி ஊற்ற வேண்டும்......
இப்படியாக பாட்டனார் முப்பாட்டனார்
அம்மா இல்லை எனில் அவர்களின் பெயரும் சொல்லி தனித்தனியாக எள்தண்ணீர் ஊற்ற வேண்டும்....
பின்னர் அறிந்த பேர் அறியாத பேர் மூவேழு தலைமுறையிலும் இருந்த மூதாதையர்களை நினைத்து தனியாக எள் தண்ணீர் ஊற்றி விட்டு
துளசியை மூன்றுமுறை தொட்டு வணங்கியபின் ஆகாயத்தைப்பார்த்து வணங்கி பித்ருக்களின் ஆசிகளைப் பெற
வேண்டும்.....
துளசிச்செடி இல்லை என்பவர்கள் ஆறு அல்லது குளத்தில் இறங்கி மேலே கூறியபடி செய்யலாம்.
இப்படி ஏதும் செய்ய இயலாதவர்கள்
குளித்து முடித்து பின் வெளியில் வந்து ஆகாயத்தைப் பார்த்து இருகைகளையும் விரித்து காட்டி இந்த அமாவாசை நாளில் தர்ப்பணம் ஏதும் செய்ய இயலாதவனாய் இருக்கிறேன் என்று மனதிற்குள் சொல்லி மன்னித்தருளும்படி அவரவர் மூதாதையர்களை வேண்டிக்கொள்ளலாம்.....
இந்த எளிய முறையிலான தர்ப்பணங்களும் ஏற்றுக்கொள்ளப்படும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர்.
பித்ரு தர்ப்பணம் செய்வதற்கு ஏற்ற அபரான்ன காலம்.
சூர்யோதயத்திலிருந்து சூர்யாஸ்தமனம் வரையுள்ள பன்னிரண்டு மணியை ஒவ்வொன்றும் ஆறு நாழிகை கொண்ட ஐந்து பாகங்களாகவும் பஞ்சாங்கம் பிரித்திருக்கிறது.
இதன்படி காலை ஆறு மணிக்கு சூர்யோதயம் என்றால் காலை 8.24 வரை பிராதஃகாலம்.
காலை8.24லிருந்து காலை10.48 வரை ஸங்கவ காலம்.
காலை10.48லிருந்து பகல் 1.12 வரை மாத்யான்னிக காலம் (மத்தியான்னம் என்பது)
பகல்1.12லிருந்து 3.36வரை அபரான்ன காலம்.
பகல்3.36லிருந்து 6 மணி வரை (அதாவது சூர்ய அஸ்தமனம் வரை) ஸாயங்காலம்.
பித்ரு தர்ப்பணத்தை அபரான்ன காலத்தில் செய்தால் மட்டுமே அது பித்ருக்களை சென்றடையும் என சேலம் ஸ்ரீனிவாசனின் பஞ்சாங்க கர்த்தா திரு நர.நாராயணன் அவர்கள் எழுதிய பஞ்சாங்க ரகசியங்கள் என்ற நூலில் கூறியுள்ள்ளார்.
அபரான்ன காலம் என்பது மதியம் 1-12 மணி முதல் 3-36 மணிவரை உள்ள காலமாகும்.
அபரான்ன காலத்தில்
பூமி வெப்பத்தால் தகிக்கும்.
நம்மால் வெறும் காலால் பூமியின் வெப்பத்தை தகிக்க முடியவில்லை எனில் அதுவே பித்ரு தர்ப்பணம் செய்வதற்கு தகுந்த நேரம்.
இதுவே பித்ருகளுக்கு தர்ப்பணம் செய்வதற்கு ஏற்ற விஷேசமான காலம்.
இந்த நேரத்தில் தர்ப்பணம் செய்தால் பித்ருக்கள் மிக்க சந்தோசமடைவார்கள்.
*முடிந்தவரை அமாவாசை அன்று யாராவது* *ஒரு இயலாதவருக்கு* *உணவளிப்பது*
*இன்னும் சிறப்பு.✍🏼🌹* #god