நல்ல செயல்கள் பெரும்பாலும் துயரத்தையே கொண்டு வருமா?
சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த ஒரு இளைஞர், ஒரு அடுக்குமாடிக் கட்டிடத்தின் ஐந்தாவது மாடியிலிருந்து ஒரு குழந்தை கீழே விழுவதைக் கண்டார். அவர் கையில் வைத்திருந்த டீ கோப்பையைக் கீழே போட்டுவிட்டு, அந்த குழந்தையைக் காப்பாற்ற வேகமாக ஓடினார் லாபகமாக குழந்தையை கையில் ஏந்தி காப்பாற்றினார். மேலே இருந்து கீழே விழுந்த வேகத்தில் குழந்தைக்குச் சிறு எலும்பு முறிவுகள் ஏற்பட்டபோதிலும், அது உயிர் பிழைத்தது.
ஆனால் நடந்தது என்னவென்றால், விசித்திரமாக இருந்தது! தன் குழந்தையின் உயிரைக் காப்பாற்றியதற்காகக் அந்த இளைஞருக்கு நன்றி சொல்வதற்குப் பதிலாக, குழந்தையின் தாய், குழந்தைக்குக் காயம் ஏற்பட்டதாகக் கூறி, அந்த இளைஞன் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்; மேலும், பெரும் தொகையை இழப்பீடாகவும் கோரினார்.
ஆனால், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி உண்மையை விரைவாக உணர்ந்துகொண்டார். பண ஆசை கொண்ட அந்தத் தாய், தன் குழந்தையை காப்பாற்றியவருக்கே எதிராகத் திரும்பியதை நீதிமன்றம் கடுமையாகக் கண்டித்தது. வழக்கை தள்ளுபடி செய்ததுடன், அந்த இளைஞருக்குத் தேவையற்ற தொல்லை கொடுத்ததற்காக அந்தப் பெண்ணுக்கு 30,000 டாலர் அபராதமும் விதித்தது.
கருணையைப் பாராட்ட தவறியவர்களுக்கு இதுதான் பதிலடி!
#🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️


