ShareChat
click to see wallet page
search
எங்களுக்கு (DMK) 96 போதும், உங்களுக்கு (TVK) 108 போதாது! "அதையும் பாத்துரலாம்" என்கிறார் விஜய்! திமுக 96 MLA க்களை மட்டும் வைத்துக்கொண்டு காங்கிரஸ் (வெளியில் இருந்து) தந்த ஆதரவுடன் தமிழகத்தை 5 வருடங்கள் கத்தி முனையில் நின்று ஆண்டது வரலாறு. அதனை ஜெ மைனாரிட்டி அரசு என்றே குறிப்பிட்டு வந்தார். அதே திமுக, இன்று 108 சட்டமன்ற உறுப்பினர்களுடன் இருக்கும் தவெக ஆட்சி அமைக்கக்கூடாது என்று செயல்படுவதாக பேச்சு. ஏற்கனவே தவெகவுடன் காங்கிரஸ் சேர்ந்திருப்பது எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலுக்கு அச்சாரமாகப் பார்க்கப் படுகிறது. இந்த பின்புலத்தில், VCKவும் கம்யூனிஸ்டுகளும் தவெக ஆட்சி அமைப்பதற்கு இன்று ஆதரவு கொடுத்து விட்டால் நாளை அதுவே பாராளுமன்றத் தேர்தலிலும் தொடரும் என திமுக அஞ்சுகிறது. இன்றைக்கு நிலவுகிற அரசியல் சூழ்நிலையில், உதிரிக் கட்சிகள் தவெக ஆட்சி அமைப்பதற்கு ஆதரவளிக்கும்போது அடுத்த பாராளுமன்றத் தேர்தலிலும் கூட்டணி தொடரவேண்டும் என உடன்படிக்கை செய்துகொள்வது நல்லது. அதைத்தான் காங்கிரஸ் செய்துள்ளது. அதற்குக் காரணம், திராவிடக் கட்சிகளுக்கு இனிமேல் தமிழக அரசியலில் மறுமலர்ச்சி கிடையாது என்பதால்தான். திமுகவைப் பொறுத்த வரை, அதிமுக ஆட்சி அமைத்தாலும் பரவாயில்லை, தவெக ஆட்சி அமைப்பதை தடுத்துவிட வேண்டும் என முயன்று பார்க்கிறது. முயலலாம், ஆனால் முடிவது சந்தேகமே! அப்படி ஒருவேளை முடிந்தால் அதுவே திராவிடக் கட்சிகளின் கடைசி ஆட்சியாக இருக்கும். அதுவும் நீண்ட நாட்கள் நீடிக்காது. மேலும் இது, "பதவி வெறி பிடித்த திராவிடக் கட்சிகள்" என்று சொல்லி நாளை களத்தில் கழகங்களின் சோலியை முடிப்பது தவெகவிற்கு எளிதாக இருக்கும். இருப்பினும், தவெகவை இன்று ஆட்சி அமைப்பதற்கு விட்டுவிட்டால் தானாகவே அடுத்து வரும் தேர்தலில் திமுக தனிமைப் படுத்தப்படும் என்ற பயம்தான் திமுகவை இப்போது ஆட்டிப் படைக்கிறது. திமுகவின் தயவில் ஆட்சி நடக்கும்போது அது தனக்கு உகந்த நேரத்தில் ஆதரவை வாபஸ் வாங்கி அடுத்த தேர்தலுக்கு வழிகோல முடியும். அதே சமயம் தவெக ஆட்சியில் இருந்தால், அது தனக்கு சாதகமான நேரத்தில் சட்டசபையை கலைத்துவிட்டு மக்கள் நலத்திட்டங்களை வாக்குறுதி அளித்தபடி நிறைவேற்ற, எமக்கு முழு மெஜாரிட்டியை தாருங்கள்" மறு தேர்தலுக்காக மக்களிடம் செல்லலாம். திமுக - அதிமுக கூட்டணியின் சாத்தியக்கூறுகள் மற்றும் அதன் அவசியம் பற்றி "திமுக - அதிமுக கூட்டணி அமையுமா?" என்ற தலைப்பில் நேற்று ஒரு பதிவினைப்போட்டோம். தற்போது திமுகவின் நிலைப்பாடும் அதனையே பிரதிபலிக்கிறது. திமுக மற்றும் அதிமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் யதார்த்தத்தை உணர்ந்து தவெக ஆட்சி அமைப்பதற்கு ஆதரவளிக்கும் என நம்புகிறோம். ஒரு வேளை ஆட்சி அமைப்பதற்கு தவெகவிற்கு வாய்ப்பே கிடைக்காமல் போனால், மக்களுடைய கோபத்தினால் அடுத்த தேர்தலில் கழகங்களுக்கு ஓரிரண்டு தொகுதிகள் கிடைத்தாலே அது பெரிய விஷயம். தவெக 210 தொகுதிகளுக்கும் மேலாக கைப்பற்றும். உதிரிக் கட்சிகளின் நிலையை சொல்ல வேண்டியதே இல்லை! உஷார்! #🚹உளவியல் சிந்தனை #📺அரசியல் 360🔴
🚹உளவியல் சிந்தனை - ShareChat
00:05