ShareChat
click to see wallet page
search
திருஞானசம்பந்த பெருமான் அருளிய தேவாரம்  முதலாம் திருமுறை 76வது  திருத்தலம் இலம்பையங்கோட்டூர் அருள்மிகு கோடேந்து முலையம்மை உடனுறை சந்திரசேகரர் மரம்: வில்வம் குளம்: சந்திர தீர்த்தம் பாடல் 8 குறிஞ்சி வேர் உலா ஆழ்கடல் வரு திரை இலங்கை வேந்தன தடக்கைகள் அடர்த்தவன் உலகில் ஆருலா எனது உரை தனது உரையாக வாக ஒர அரவு அணிந்து உழிதரும் அண்ணல் வாரு உலா நல்லன மாக்களும் சார வாரண முழிதரு மல்லலங் கானல் ஏர் உலாம் பொழில் அணி இலம்பையங்கோட்டூர் இருக்கையாப்பேணி என் எழில் கொள்வது இயல்பே. பொழிப்புரை: நிலத்தின் வேர்வரை உலாவுகின்ற ஆழ்ந்த கடலின் அலைகள் தவழ்கின்ற இலங்கை வேந்தனாகிய இராவணனின் நீண்டகைகள் இருபதையும் நெரித்தவன். உலகின்கண் நிறைந்து விளங்கும் தன்னுடைய உரைகளை என் உரைகளாக வெளிப்படுத்தியவன். தன்னுடைய மார்பில் பெரியதொரு பாம்பினை அணிந்து திரியும் தலை வன். அத்தகையோன், கழுத்தில் வார் கட்டப்பட்ட நல்ல வளர்ப்பு விலங்குகளும், யானைகளும் திரியும் வளமான காடுகளும் அழகிய பொழில்களும் சூழ்ந்த இலம்பையங்கோட்டூரைத் தனது இருப்பிட மாகக்கொண்டு என் எழிலைக் கவர்தல் முறையோ? குறிப்புரை: இராவணனை அடர்த்தவன்; இந்த உலகில் எனதுரை தனதுரையாக, மார்பில் பாம்பணிந்து திரியும் அண்ணல் இவ்வூரை இடமாகக்கொண்டு என் நலங்கவர்தல் இயல்போ என்கிறாள். வேர் உலாம் - பூமியின் அடிவரை உலாவுகின்ற, ஆருலாம் - நிறைதல் மலிந்த. ஆகம் - மார்பு. வாரணம் - யானை. மல்லல் - வளம். ஏர் உலாம்பொழில் - எழுச்சிமிக்க சோலை. நல்லன மாக்கள் - நல்ல விலங்குகள். #🙏கோவில் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏🏼ஓம் நமசிவாய #🙏🏾சனி பகவான் #🙏ஆன்மீகம்
🙏கோவில் - ShareChat