ShareChat
click to see wallet page
search
#innraya SINTHANAY சிந்தனை* 🌷28.04.2026🌷 மனம் போல் வாழ்வு இந்த உலகில் வெற்றியை நோக்கி வாழ்க்கையில் முன்னேறுவதற்கு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதத்தில் சோதனைகள் ஏற்படும். அப்படி சோதனை செய்வதில் முக்கியமான ஒன்று தான் மனம். வாழ்வில் முன்னேறும் போது நிறைய பேர் என்னென்னவோ சொல்வார்கள். இதில் அதிகம் நம்மைப் பற்றி சொல்பவர்கள் யார் என்று பார்த்தால், குடும்பம், நண்பர்கள், உறவினர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள் அல்லது ஆசிரியர்கள் தான். இவர்கள் சொல்வது நமது நலத்திற்காகவே இருக்கட்டும். ஏன் நாம் எதை விருப்பப்பட்டு செய்தாலும் மூக்கை அறுப்பது போல் நிறைய தடைகளை சந்திக்க நேரிடும். இந்த நேரத்தில் மனதைத் தளர விடாமல், தன் எண்ணத்தில் மட்டும் முழு கவனத்தைக் கொண்டு வாழ்வை மேற்கொண்டால், வெற்றியை நிச்சயம் அடையலாம். எப்போதும் மற்றவர்கள் கூறுவதைக் கேட்காமல், உங்கள் உள்ளம் சொல்வதைக் கேளுங்கள். உங்கள் உள்ளம் என்ன சொல்கிறதோ, அதை செய்யுங்கள். மற்றவர்கள் சொல்வதைக் கேட்டு நடப்பதால், வெற்றியை அடைய முடியாது. ஆகவே உங்கள் மனம் சொல்லும் வார்த்தைகளைக் கேட்டு, அதன்படி நடக்க வேண்டும். உதாரணமாக, உங்களுக்கு ஏதேனும் ஒரு புதிய விஷயங்களை செய்யும் போது, மற்றவர்கள் முடியாது என்று நினைப்பதைக் கூட, நீங்கள் முழு கவனத்தோடு, செய்து முடிப்பீர்கள். எந்த நேரத்திலும் நீங்களே முடிவெடுங்கள். இதுவரை சிறுவயதில் உங்களுக்கு உங்கள் வீட்டில் இருக்கும் பெற்றோர்கள் முடிவெடுப்பார்கள். இப்போது நீங்கள் வளர்ந்து விட்டீர்கள். இந்த நேரம் தான் நீங்கள் சுயமாக உங்கள் முடிவுகளை எடுக்க வேண்டிய தருணம். எப்போதும் எதையும் செய்ய முடியவில்லை என்று மற்றவர்களிடம் மன்னிப்பு கேட்காமல், பொறுப்புணர்வோடு இருக்க வேண்டும். வாழ்க்கையில் முன்னேற வேண்டுமென்றால், நினைத்தால் மட்டும் போதாது, சுயமாக முடிவு எடுக்கத் தெரிந்திருக்க வேண்டும். இது தான் மிகவும் முக்கியமான ஒன்று. மேலே சொன்னது போல், வாழ்க்கையில் முன்னேறும் போது தோல்விகளை சந்தித்துத் தான் ஆக வேண்டும். அதற்காக அந்தத் தோல்விகளையே மனதில் வைத்துக் கொண்டு வாழ்க்கையில் இருக்கக் கூடாது. "தோல்வி தான் வெற்றியின் முதல் படி". தோல்விகளை சந்திக்க சந்திக்கத் தான் மனம் தெம்பாக, அனைத்தையும் எதிர்த்து நின்று, தைரியமாக செல்ல முடியும். இதனால் வெற்றியையும் எளிதில் அடைய முடியும். மேற்கூறியவாறெல்லாம் நடந்து வந்தால், வாழ்க்கையில் பெரிய வெற்றியை அடைவதோடு, வாழ்வில் ஒரு நல்ல நிலைக்கும் வரலாம். வாழ்த்துகள். வாழ்க வளமுடன். 😊😊😊
innraya SINTHANAY - வாழ வேண் டமே என்று நினைக்காதீர்கள் வாழ்ந்தே ஆக வேண்டும் என்று முடிவு எடுங்கள் துன்பமும் தூசியாய் தெரியும்! வாழ வேண் டமே என்று நினைக்காதீர்கள் வாழ்ந்தே ஆக வேண்டும் என்று முடிவு எடுங்கள் துன்பமும் தூசியாய் தெரியும்! - ShareChat