பெரம்பலூர் மாவட்டம் வேப்பம் க கிராமத்தை சேர்ந்தவர் குணசேகரன் என்பவரின் மனைவி நிஷாந்தினி...
இவர்களுக்கே கிருத்திகா என்ற ஒன்பது மகள் இருந்தார்.....
கணவரின் வருமானம் குடும்பம் நடத்தப் போதவில்லை என ஏற்பட்ட தகராறால், கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு கணவனைப் பிரிந்த நிஷாந்தினி, மகளுடன் காரை சமத்துவபுரத்தில் உள்ள தன் தாய் வீட்டில் வசித்து வந்தார். பெரம்பலூரில் உள்ள கட்டுமான தொழிலாளர் சங்க அலுவலகத்தில் வேலை பார்த்து வந்தபோது, அங்கு மணிகண்டன்(30) என்பவருடன் நிஷாந்தினிக்குத் திருமணத்திற்கு மீறிய உறவு ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் இருவரும் சேர்ந்து வாழ முடிவு செய்தபோது, அதற்குத் தனது 9 வயது மகள் தடையாக இருப்பதாக நிஷாந்தினி கருதியுள்ளார்.
இதையடுத்து, நேற்று மதியம் பள்ளியிலிருந்து வீட்டிற்கு வந்த குழந்தை கிரித்திஷாவை, நிஷாந்தினி கயிற்றால் கழுத்தை நெரித்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். பின்னர், சடலத்தைக் கட்டிலில் உறங்குவது போலக் கிடத்திவிட்டு, மகள் பேச்சு மூச்சின்றி இருப்பதாக நாடகமாடி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் காரை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளார். அங்கு குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதை உறுதி செய்ததுடன் கழுத்தில் கயிறு நெரிக்கப்பட்ட தழும்புகள் இருந்ததால் பாடாலூர் போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர். நிஷாந்தினியின் தாய்மாமன் லோகநாதன் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து நிஷாந்தினியைக் கைது செய்து விசாரித்ததில் கள்ளக்காதலுக்காகப் பெற்ற மகளையே கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
#காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔 #வாழ்க்கையை அழிக்கும் கள்ளக்காதல் 💔 #கள்ளகாதல் விவகாரம் #இன்றைய ட்ரெண்டிங் நியூஸ்


