MEDIA 1TAMIL web news
*கேரளாவில் போதைப்பொருள் விற்பனை மற்றும் கடத்தல் வழக்கில் 3 பள்ளி பெண் ஆசிரியைகள் கைது*
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் #📺வைரல் தகவல்🤩 'ஆபரேஷன் தூஃபான்' நடவடிக்கையின் கீழ், செயற்கை போதைப்பொருளான MDMA கடத்தல் மற்றும் நிதி முறைகேடு தொடர்பாக மூன்று பெண் ஆசிரியைகளை போலீசார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் செருவள்ளூர் பள்ளியில் பணியாற்றிய சிறப்பு ஆசிரியைகள். இவர்கள் சமூக வலைதளங்கள், குறிப்பாக இன்ஸ்டாகிராம் மூலம் வாடிக்கையாளர்களை தொடர்புகொண்டு, QR கோடு மற்றும் வங்கி கணக்குகள் வழியாக பணம் பெற்று, பின்னர் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்த இடத்தின் விவரங்களை ரகசியமாக பகிர்ந்து வந்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், கைது செய்யப்பட்ட மூவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்ததுடன், தாங்களும் MDMA பயன்படுத்தி வந்ததாக விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.