#innraya SINTHANAY சிந்தனை*
🌷04.05.2026🌷
கடினமான பாதைகள் தான்..
அழகான இடங்களுக்கு
அழைத்துச் செல்கிறது..!!
🔸🔹உலகியல் வாழ்வில் நாம் ஒரு சிறு துரும்பு கூட இல்லை என்பதை உணர்ந்து கொண்டோமா....
"இழந்ததை"
மறந்து விடு..!
"இருப்பதை"
இழக்காமல் இருக்க..!!
🔹🔸நம்மை எதிர்பார்த்து உலகம் இயங்கிக் கொண்டிருப்பதில்லை
🔸🔹நாம் தான் எல்லாம் நம் கையில் உள்ளதாக எண்ணிக் கொண்டிருக்கிறோம்
கற்பனையில் மிதந்து கொண்டிருக்கிறோம்.
🔸🔹இந்தக் காலம் சிக்கலான முடிச்சுகளை சுமந்தபடி
மாறாத தேகத்தில் மாறுகின்ற காலம்
🔹🔸எதற்குமே சஞ்சலமின்றி சரணம் என்றே சுழன்று கொண்டிருக்கின்ற காலம்....
தன்னுள் அடக்கியபடி இயல்பாய் இயங்குகின்றது....
🔸🔹வாழ்வின் அவசர ஓட்டத்தில் இதைப் புரிந்து கொள்ளத் தான் நமக்கு நேரம் இருப்பதில்லை...
காலம் கடந்து புரிந்து கொள்கின்றோம்.....
🔹🔸எனவே நிச்சயமில்லாத இந்த வாழ்வில் பெருமையடித்துக் கொள்வதற்கு எதுவுமில்லை,
🔸🔹உலகில் நானே அறிவாளி...
என்னால் எல்லாம் முடியும்...
என்று தம்பட்டம் அடித்தவர்கள் எங்கு என்று தேடிக் கொண்டிருக்கின்றோம்... உண்மை இது தான்.....
🔹🔸நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் காலம் வரை ..
நிம்மதியாய்....
மகிழ்ச்சியாய்...
கொண்டாட்டமாய்....
குதூகலத்தோடு...
அமைதியாய்...
ஆனந்தத்தோடு....
துள்ளல் குறையாமல்...
இயந்திரத்தனமாக வாழாமல்.....
வாழ்வினை
அனுபவித்து.....
நண்பர்கள்,
சுற்றார்கள்,
உற்றார்
உறவினர்கள்
என்று அனைவரிடமும் அன்பு செலுத்தி
வாழ்வோம்...
🔸🔹இந்தத் தெளிவும் புரிதலும் மட்டுமே வாழ்வை எளிதாய் இன்பத்தை நோக்கி அழைத்துச் செல்லும்....
இயல்பையும் காலத்தையும் நேரத்தையும்
ஆழ்ந்த புரிதல் கொண்டே
அவற்றை அனுபவிக்க
இயலும்
😊😊😊


