#innraya SINTHANAY சிந்தனை*
🌷08.05.2026🌷
******************
மகிழ்ச்சி ..புரிதல்..
*******************
நம் வாழ்நாள் முழுவதும் தேடிக் கொண்டே இருப்பது மகிழ்ச்சி மட்டுமே...
ஆனால் ,
மனிதன் உள்ளடக்கி
மனதில் வைத்து இருப்பது எல்லாம்
குழப்பமும்.. கேள்வியும்...
அறிவு என்ற பெயரில்
அகப்பட்டது எல்லாவற்றையும் மனதிற்குள் அடைத்து வைத்து,
அறிவுப் போர்வையை போர்த்திக் கொண்டு..,,
மேலும் மேலும்
விவரங்களையும்,
விளக்கங்களையும்,
தேடித்தேடி.....
வாழ்நாளைத் தொலைத்துக் கொண்டிருக்கும் மனிதன்..
இறுதியில் முரண்பாடுகளின் மொத்த உருவமாக போகின்றான்....
இதற்கெல்லாம்
விடை என்ன ...
தீர்வு என்ன ...
முடிவு என்ன....
"புரிதல்" தான்...
எல்லா செய்திகளையும், தகவல்களையும்
கிளை விட்டுப்
பரப்பி இருக்கும் மனதை பற்றிய எளிய "புரிதல் மட்டுமே"
இந்தப் புரிதல் இல்லாததே
எல்லா குழப்பங்களுக்கும், முரண்பாடுகளுக்கும், முட்டுக்கட்டைகளுக்கும், காரணமாகின்றது....
நம் வாழ்வில் எதைத் தேர்ந்தெடுக்கும் போதும்,
செயல்படுத்தும் போதும்,
இது நமக்கு மகிழ்ச்சியைத் தருமா?
நிம்மதியைத் தருமா?
கொண்டாட்டத்திற்கான வழியா?
குதூகலத்திற்கான சாவியா?
உற்சாக ஊற்று எடுத்து ,
உவகை பொங்க,
உள்ளமெல்லாம் பூரிப்படையும் செயலா?
செயலுக்கான வழியா?
என்ற
எளிய கேள்வியை
ஆழமான புரிதலுடன்
கேட்டுக் கொள்வது ஒன்று தான்
புரிதலை நோக்கி பயணப்படுவதற்கும்...
புரிந்து கொள்வதற்கான
மகிழ்ச்சியாக வாழ்வதற்கான
சிறந்த வழி...
😊😊😊


