விதைத்த கனவுகளை
விறகாக்கி எரிக்காதே!
சிங்காரக் குடும்பத்தின்
சிறுபுன்னகையைப் பிரிக்காதே!
கள்ளமில்லாப் பிஞ்சுகளின்
கண்ணீரைத் துடைக்கவே,
வெள்ளமெனப் பாயும்
வேதனையைத் தடுக்கவே!
மண்ணில் உன் வாழ்வை
மருந்தோடு முடிக்காதே,
புண்ணை வழங்கும்
புகையிலையைச் சுவைக்காதே!
மாறாத வடுக்களை
மனைவிக்கு அளிக்காதே!
ஆறாத ரணம் தரும்
ஆலகாலத்தைத் துறந்திடு!
⚫ *மே 31 புகையிலை எதிர்ப்பு நாள்*
✍🏽 *ஆரூர் மரு ம எழிலன்* #உலக புகையிலை ஒழிப்பு தினம் #உலக புகையிலை ஒழிப்பு தினம் 2021 #31-05-2022 சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினம் #சர்வதேசபுகையிலை எதிர்ப்புதினம் #உலக புகையிலை எதிர்ப்பு நாள்


