சற்குருவின் அற்புதங்கள் - 13
ஒரு நாள் என் மகள் ஆசையாக சாப்பிட பப்ஸ் கேட்க, அருகில் உள்ள பேக்கரியில் இருந்து காளான் பப்ஸ் வாங்கி கொடுக்க, அதை சாப்பிட்ட அன்றைய இரவே என் மகளுக்கு வாந்தியும், வயிற்றுப்போக்கும் ஏற்பட்டது.
டாக்டரிடம் மகளை அழைத்து சென்று காண்பித்த போது, ஹாஸ்பிடலில் அட்மிட் ஆக சொன்னார்.
உடனே என் மனைவி ஆழத் தொடங்க, நான் ஒரே ஒரு வார்த்தை தான் சொன்னேன்,
" அனைத்தையும் நம் சற்குரு ஐயா பார்த்துக் கொள்வார் "
உடனே நானும் என் மனைவி சற்குரு ஐயாவை மனதார வேண்டிக்கொண்டு, மகளை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சையை தொடங்கினோம்.
நான் என் மனதில் சற்குரு ஐயாவிடம்
"என் மகள் சீக்கிரம் குணமாகி வீட்டுக்கு வந்தால், அரிசி ஒரு சிப்பம் அன்னதானத்திற்காக கணக்கன்பட்டி சற்குரு ஆலயத்திற்கு வாங்கி கொடுப்பதாக " வேண்டிக் கொண்டேன்.
சரியாக மூன்று நாட்களில் என் மகள் குணமடைந்து வீடு திரும்பினாள்.
சற்குரு ஐயாவிற்கு நன்றியை சொல்லி, உடனடியாக அரிசி ஒரு சிப்பமும், சமையல் எண்ணெய் 5 லிட்டர் கேனும் வாங்கி வீட்டில் வைத்தேன்.
ஒரு மாதம் கழிந்தது.
அன்னதானத்திற்கான பொருட்களை கணக்கன்பட்டி கொண்டு சேர்ப்பதற்கு எனக்கு நேரம் அமையவில்லை.
எவ்வளவோ முயன்றும் கணக்கன்பட்டிக்கு செல்ல வாய்ப்பு கிடைக்கவில்லை.
அது சரி நம் சற்குரு ஐயா மனது வைத்தால் தானே நாம் செல்ல முடியும் அங்கே...
ஒரு நாள் ஐயா மனது வைத்தார்.
ஒருநாள் இரவு ஒரு மணிக்கு சவாரி எல்லாம் முடித்துக் கொண்டு வீட்டிற்கு போகலாம் என்று காரை வீட்டுக்கு திருப்பினேன்.
ஒருவர் போன் செய்து பஸ் ஸ்டாண்டில் இருந்து அவர் வீட்டிற்கு டிராப் செய்ய சொன்னார்.
சரி கடைசி சவாரி என்று எண்ணிக்கொண்டு, வீட்டில் அவரை இறக்கி விடும்போது அவர்,
" பொள்ளாச்சி வரை என் மனைவியை கொண்டு போய் விட்டுவிட்டு வர முடியுமா " ? என்று கேட்டார்.
அவர் மனைவியின் பாட்டி பொள்ளாச்சியில் உடல்நலம் சரியில்லாமல் இருப்பதாகவும், உடனடியாக பொள்ளாச்சிக்கு அவர் மனைவி செல்ல வேண்டி இருப்பதாகவும் தெரிவித்தார்.
நானும் உடனே சரி என்று ஒப்புக்கொண்டு,
" ஐயா ! காருக்கு பெட்ரோல் நிரப்பி விட்டு வருகிறேன் "
என்று சொல்லி,
மின்னல் வேகத்தில் அங்கிருந்து கிளம்பி,
என் வீட்டிற்கு வந்து அரிசி சிப்பத்தையும், சமையல் எண்ணையையும், டிக்கியில் வைத்துக் கொண்டு வேகமாக வண்டிக்கு பெட்ரோல் நிரப்பி விட்டு அவர்கள் வீட்டிற்கு சென்றேன்.
பொள்ளாச்சியில் இருந்து பழனிக்கு 65 கிலோமீட்டர் தூரம் தான். காரில் சென்றால் ஒரு மணி நேரம் தான்.
நம் சற்குரு ஐயா அவரை தரிசிப்பதற்கான சிக்னல் கொடுத்து விட்டார் என்பதை புரிந்து கொண்டேன்.
இரவோடு இரவாக அவர் மனைவியை பொள்ளாச்சியில் இறக்கி விட்டு விட்டு வண்டியை நேரே பழனிக்கு திருப்பினேன்.
இரவு முழுவதும் உறங்காததால், இடையே வந்த சிறிய உறக்கத்தை கட்டுப்படுத்திக் கொண்டு, நம் சற்குரு ஐயாவை காணும் ஆவலோடு வேகமாக சென்றேன்.
கணக்கன்பட்டிக்கு சென்று முதலில் குளித்துவிட்டு, உடைமாற்றி, அன்னதானத்திற்கான பொருட்களை சற்குரு ஐயாவின் சன்னதியில் சேர்ப்பித்து விட்டு, மதியம் நடைபெறும் பூஜையை கண் குளிர கண்டு, என் மகளைக் காப்பாற்றிய சற்குரு ஐயாவை வணங்கி, கண்கள் நிறைந்த நீரோடு, நா தழுதழுக்க நன்றியை சொன்னேன் நம் சற்குருவிடம்...
சற்குருவின் அற்புதங்கள் தொடரும்...
பின்குறிப்பு :
அதன் பிறகு இன்று வரை பொள்ளாச்சிக்கு சவாரியே வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
#பழனி
#கணக்கன்பட்டி
#மூட்டைசாமி
#சத்குரு
#சற்குரு
#அழுக்குமூட்டைசுவாமிகள்
#சற்குருஐயா
#சித்தர்கள்
#ஆன்மீகம்
#சித்தர்அதிசயம்
#சித்தர்கள்
#ஜீவசமாதி
#சித்தர்பீடம்
#பழனிசாமிசுவாமிகள்
#பழனிசித்தர்
#அழுக்குமூட்டைசித்தர்
#சாமி
#பழனிசாமி
#காளிமுத்து
#அன்னதானம்
#மூட்டைசித்தர்
#மூட்டைசாமி
#அழுக்குமூட்டைசாமி
#சித்தர்அற்புதம்
#சித்தர்தரிசனம்
#சித்தர்ரகசியம்
#சித்தர்வழிபாடு
#குருவழிபாடு
#சற்குருவழிபாடு
#குருவேசரணம் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏கோவில் #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #😔தனிமை வாழ்க்கை 😓 #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ்


