ShareChat
click to see wallet page
search
ஆ. ராசா மறைமுகமாக யாரை எதிர்க்கிறார்? ஆ. ராசா இன்று நேற்றல்ல, காலங்காமாகவே விசிக தலைவர் திருமாவளவனை எதிர்த்து மறைமுகமாக நகர்த்தப்பட்டு வரும் துருப்புச்சீட்டு என திமுகவின் உள்கட்சி விவகாரங்களை நன்கு அறிந்தவர்களால் கருதப்படுபவர். கலைஞர் காலத்தில் வலிமையாக இருந்த ஃபார்வர்டு பிளாக், முஸ்லிம் லீக் போன்ற கட்சிகள் உடைந்ததில் அவருடைய கைங்கரியம் இருந்தது. காங்கிரஸ் மற்றும் வலது கம்யூனிஸ்டு கட்சிகள்கூட கலைஞரின் கட்சி உடைப்பு ராஜதந்திர(!) நடவடிக்கைகளில் இருந்து தப்பவில்லை. அதிமுக, மதிமுக ஆகியவை பிற்சேர்க்கைகள். மேலும் திமுகதான் அவற்றிற்கு தாய்வீடு மாதிரி. அந்த கட்சிகளில் இருந்து வந்தவர்கள்தான் திமுகவில் இன்றுவரை செல்வாக்குடன் வலம் வருகிறார்கள். திருமாவளவனை எடுத்துக் கொண்டால், அவர் தலித் சமுதாயத்தைத் தாண்டி சிறுபான்மை மக்களின் தனிப்பெரும் தலைவராக வளர்ந்து வருவதை திமுக விரும்பவில்லை. அதே சமயம் நேற்றுவரை வேகமாக வளர்ந்து வந்த நாதக கட்சித் தலைவர் சீமானும் அதை விரும்பவில்லை. சீமானுக்கு திருமாவளவனை சீண்டுவதே வேலையாக இருந்தது. அதே கால கட்டத்தில் ஆ. ராசா விசிகவை சாதிக்கட்சி என்று விமர்சனம் செய்ததும், அப்போதெல்லாம் சீமான் ஆ. ராசாவை படித்த அறிவாளி என்று புகழ்ந்ததும் பலருக்கு நினைவிருக்கலாம். ஆனால் இந்த கடந்தகால சூழ்நிலை வேறு, இன்றைய சூழ்நிலை வேறு. முன்பு ஆ. ராசா ஆ. ராசா தனிமையில் இருந்தபோது தலைமைக்கு எதிராக சிலரிடம் ரகசியமாகத் பேசியுள்ளார். அவர் 2G ஊழல் வழக்கில் கைதானபோது பேசிய அந்தப் பேச்சின் பதிவு இன்று இணைய தளங்களில் உலா வருகிறது. அதை சமன் செய்யும் நோக்குடன் தற்போது ஆ. ராசா, தவெகவின் அமைச்சரவையில் விசிக சேர்ந்ததைப் பற்றி தரம் தாழ்ந்து விமர்சனம் செய்துள்ளதாக சிலர் தெரிவிக்கின்றனர். ஆனால், மேற்கண்ட செய்தியில் உண்மை இல்லை என இன்னொரு தரப்பு கூறுகிறது. அதாவது, திமுக தலைமையின் அறிவுறுத்தலின் பேரிலேயே ஆ. ராசா தற்போது விசிகவை எதிர்த்துப் பேசியுள்ளார். கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு அவர் முதலில் போட்ட இலக்கிய நயம் வாய்ந்த கவிதையை பின்னர் நீக்க வேண்டியிருந்தது தனிக்கதை! ஆனால், விஷயம் தெரிந்த திமுகவினர் கூறுவது "அடேங்கப்பா" ரகம்! அதாவது இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி விசிகவை நிரந்தரமாக திமுகவிடமிருந்து பிரித்து விடுவதே ஆ. ராசாவின் திட்டம் எனப்படுகிறது. அதாவது, திமுகவின் தலித் முகமாகத் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும் என்பதே ஆ. ராசாவின் வியூகம் என்று சொல்லப்படுகிறது. இப்போது சொல்லுங்கள், ஆ. ராசா மறைமுகமாக யாரை எதிர்க்கிறார்? எப்படிப் பார்த்தாலும், கட்சியில் யாரும் தன்னை உதாசீனப்படுத்திவிட முடியாத அளவிற்கு அவர் தன்னை பலப்படுத்திக் கொண்டார் என்றுதான் சொல்லவேண்டும். Have you subscribed to our channel? If not, please subscribe now. This is your channel! #விசிக #நாதக #அதிமுக #திமுக #தவெக #தமிழகஅரசியல் #கலைஞர் #திருமாவளவன் #சீமான் #ஆராசா #🚹உளவியல் சிந்தனை #📺அரசியல் 360🔴
🚹உளவியல் சிந்தனை - ShareChat
00:05