#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #ஆன்மீக #திருமுறை #பன்னிரு திருமுறை
*"திருமுறை ஓதாய் திருமுறையே தாய்"*
தினம் ஒரு திருமுறை அறிவோம் 🙏
*பதினோராம் திருமுறை*
*பதினோராம் திருமுறை என்பது காரைக்கால் அம்மையார், நம்பியாண்டார் நம்பி உட்பட 12 பன்னிரு சைவ அடியவர்கள் பாடிய 40 பிரபந்தங்களின் (சிற்றிலக்கியங்கள்) தொகுப்பாகும். இது "சைவப் பிரபந்த மாலை" என்றும் அழைக்கப்படுகிறது.*
*பதினோராம் திருமுறை ஆசிரியர்கள் (12 பேர்)* :
*1 திரு ஆலவாய் உடையார்
2 காரைக்கால் அம்மையார்
3 ஐயடிகள் காடவர்கோன் நாயனார்
4 சேரமான் பெருமாள் நாயனார்
5 நக்கீரதேவ நாயனார்
6 கல்லாடதேவ நாயனார்
7 கபிலதேவ நாயனார்
8 பரணதேவ நாயனார்
9 இளம்பெருமான் அடிகள்
10 அதிராவடிகள்
11 பட்டினத்து அடிகள்
12 நம்பியாண்டார் நம்பி.*
*தொகுப்பாளர் : இத்திருமுறையைத் தொகுத்தவர் நம்பியாண்டார் நம்பி ஆவார்.*
*சிறப்பு : இத்திருமுறையில் விநாயகர் வழிபாடு மற்றும் அடியார் சிறப்புகள் இடம்பெற்றுள்ளன.*
*பொருளடக்கம் : திருஈங்கோய்மலை எழுபது, திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம், போற்றித் திருக்கலிவெண்பா, ஆளுடைய பிள்ளையார் திருவுலாமாலை போன்ற இலக்கியங்கள் இதில் உள்ளன.*
இறைவனின் திருநாமம் - சிவபெருமான்
இறைவி - உமையம்மை
அமைவிடம் : பொது
பதிகம் பற்றிய சுருக்கமான விளக்கம் :
*பதினோராம் திருமுறையில் இருந்து நக்கீரதேவ நாயனார் அருளிய திருமுருகாற்றுப்படை - குன்றுதோறாடல்*
*குன்றுதோறாடல் என்பது முருகப்பெருமான் எழுந்தருளியிருக்கும் மலைத்தலங்கள் அனைத்தையும் குறிக்கும் பொதுவான சொல்லாகும். எனினும், இது பொதுவாக ஆறுபடை வீடுகளில் ஒன்றான "திருத்தணி" திருத்தலத்தைக் குறிப்பதாகும். திருமுருகாற்றுப்படையில், நக்கீரர் முருகனின் ஐந்தாம் படைவீடாகிய இத்தலத்தை மலைகளின் சிறப்போடும், இயற்கை வனப்போடும் "குன்றுதோறாடல்" எனப் போற்றியுள்ளார்.*
பாடல் வரிகள் :
*பதினோராம் திருமுறையில் இருந்து நக்கீரதேவ நாயனார் அருளிய திருமுருகாற்றுப்படை - குன்றுதோறாடல்*
பைங்கொடி நறைக்காய்
இடையிடுபு வேலன் (190)
அம்பொதிப் புட்டில்
விரைஇக் குளவியொடு
வெண்கூ தாளந்
தொடுத்த கண்ணியன்
நறுஞ்சாந் தணிந்த
கேழ்கிளர் மார்பின்
கொடுந்தொழில் வல்வில்
கொலைஇய கானவர்
நீடுஅமை விளைந்த
தேக்கள் தேறல் (195)
குன்றகச் சிறுகுடிக்
கிளையுடன் மகிழ்ந்து
தொண்டகச் சிறுபறைக்
குரவை அயர
விரலுளர்ப்ப அவிழ்ந்த
வேறுபடு நறுங்கால்
குண்டுசுனை பூத்த
வண்டுபடு கண்ணி
இணைத்த கோதை
அணைத்த கூந்தல் (200)
முடித்த குல்லை
இலையுடை நறும்பூச்
செங்கால் மராஅத்த
வாலிணர் இடையிடுபு
சுரும்புணத் தொடுத்த
பெருந்தண் மாத்தழை
திருந்துகாழ் அல்குல்
திளைப்ப உடீஇ
மயில்கண் டன்ன
மடநடை மகளிரொடு (205)
செய்யன் சிவந்த
ஆடையன் செவ்வரைச்
செயலைத் தண்தளிர்
துயல்வருங் காதினன்
கச்சினன் கழலினன்
செச்சைக் கண்ணியன்
குழலன் கோட்டன்
குறும்பல் இயத்தன்
தகரன் மஞ்ஞையன்
புகரில் சேவல்அம் (210)
கொடியன் நெடியன்
தொடியணி தோளன்
நரம்பார்த் தன்ன
இன்குரல் தொகுதியொடு
குறும்பொறிக் கொண்ட
நறுந்தண் சாயல்
மருங்கில் கட்டிய
நிலன்நேர்பு துகிலினன்
முழவுறழ் தடக்கையின்
இயல ஏந்தி (215)
மென்தோள் பல்பிணை
தழீஇத் தலைத்தந்து
குன்றுதோ றாடலும் நின்றதன்
பண்பே, அதாஅன்று 5
திருச்சிற்றம்பலம் 🕉️🙏
ஓம் நமசிவாயம் 🕉️🙏
சிவாய நம ஓம் 🕉️🙏
நற்றுணையாவது நாதன் நாமம் நமச்சிவாயவே🕉️
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
00:17

