ShareChat
click to see wallet page
search
போற்றி திருஅகவல் பதிகத்தை ஒரு முறை படித்ததிலிருந்து அதையும் பாடி வழிபடுவது வழக்கமாகியது. நான் முதன்முறை இந்த பதிகத்தை படித்த போது, இதை ஏன் கோவில்களில் தமிழ் அர்ச்சனைக்கு பாடக் கூடாது? என்று தோன்றியது. பிறகு, பதிகத்தின் பாதியிலிருந்து தான் "போற்றி" என்று முடியும் வரிகள் வருகிறது என்பதால் பாடப்படுவதில்லை என்று நினைத்தேன். சில நாட்களுக்கு முன்பு சிவக்குமார் ஐயா அவர்களின் "திருவாசகம் போற்றி திருஅகவல்" பேச்சின் போது "போற்றி திருத்தாண்டகம்" என்ற பெயரிலேயே அப்பர் சுவாமிகள் பாடிய பல பதிகங்கள் உள்ளன என்று தெரிய வந்தது!! 😂😄 ஏனோ இதற்கு முன் கவனிக்கவில்லை!! இதில் கயிலாய போற்றி திருத்தாண்டகம், திருவதிகை போற்றி திருத்தாண்டகம் என்று பல பதிகங்கள் உள்ளன என்று தெரிந்து இந்த வார சனிக்கிழமை அவற்றை பாடி வழிபட்டது எனக்கு சிறந்த ஆன்மீக அனுபவமாக இருந்தது!! கயிலாய திருத்தாண்டகத்தில் "வேற்றாகி விண்ணாகி..." என்று ஆரம்பிக்கிறார்! ஒன்றாய், உடனாய், வேறாய் சிவபெருமான் விளங்கும் நிலைகளில் இது "வேறாய்" இருக்கும் நிலையை குறிக்கிறதோ?! ஆனால், தென்னாட்டு சிவபெருமானை பாடும் போது "எல்லாம் சிவனாகி..." என்று ஆரம்பிக்கிறார்!! 😄 இது "ஒன்றாய்" விளங்கும் தன்மையை குறிக்கிறது!! எல்லா பொருள்களிலும் கலந்து ஒன்றாய் இருக்கும் தன்மை தென்னாடுடைய சிவபெருமானுக்கே உரிய தனிப்பெருமை என்பதாலோ...?!! நேரம் கிடைக்கும் போது எல்லா பதிகங்களையும் பொறுமையாக படிக்க வேண்டும்!! ************************************************** தமிழ்நாட்டில் சிவன் கோவில்களில் ஏன் "போற்றி திருத்தாண்டகங்களை" தீபாராதனை போது பாடக்கூடாது?! By default, தமிழில் தான் அர்ச்சனை செய்ய வேண்டும்; யாராவது சமஸ்கிருதத்தில் அர்ச்சனை செய்ய சொல்லி விரும்பி கேட்டால் மட்டும் சமஸ்கிருதத்தில் அர்ச்சனை செய்ய வேண்டும் என்று சட்டம் கொண்டு வர வேண்டும். இப்போதைய சிவாச்சாரியார்களுக்கு சமஸ்கிருத அர்ச்சனை ஸ்தோத்திரங்கள் தெரியும்; ஆனால், தேவார திருவாசகங்கள் தெரியாது!! அதனால் தான் கேட்டால் மட்டும் தமிழில் அர்ச்சனை!! (பிறகு ஏன் "தென்னாடுடைய சிவன்?!") தேவார திருவாசகம் தெரியாதவர்கள் அர்ச்சகர்கள் ஆக முடியாது என்று சட்டம் கொண்டு வர வேண்டும். "தமிழ், தமிழ்" என்று பேசும் அரசியல்வாதிகள் இது குறித்து எதுவும் செய்ய இயலாதவர்களாக இருந்தார்கள்!! பாஜக கண்டிப்பாக செய்யாது. ஒரு வேளை விஜய் முதல்வரானால் இதை செய்யக் கூடிய தைரியம் அவருக்கு இருக்குமா?! ************************************************* #ஆன்மீக வாழ்க்கை #ஓம் நமோ நாராயணா #ஓம் சிவாயநம
ஆன்மீக வாழ்க்கை - பொறறிதருத்தய்டம திருலத் எல்யாம் சிவன்ன நமாய் ாmm பொறறிதருத்தய்டம திருலத் எல்யாம் சிவன்ன நமாய் ாmm - ShareChat