ShareChat
click to see wallet page
search
கழக ஒருங்கிணைப்பாளர் @O Panneerselvam அவர்களின் அறிக்கை!   செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் நிகழ்ந்தது போன்ற துயரச்சம்பவங்கள் இனிவரும்காலங்களில் நிகழாமல்தடுக்க தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் துரிதமாக மேற்கொண்டு பொதுமக்கள் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டுமென தமிழக முதல்வர் திரு.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன். #🦠 NEW: கொரோனா - அதிகாரபூர்வ செய்திகள்
🦠 NEW: கொரோனா - அதிகாரபூர்வ செய்திகள் - திரு.ஓ.பன்னீர்செல்வம் கழக ஒருங்கிணைப்பாளர் - அஇஅதிமுக ஆக்சிஜன் பற்றாக்குறையால் அப்பாவி மக்கள் உயிரிழப்பதை தடுக்க வேண்டும் ! செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் 13 நோயாளிகள் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் மிகுந்த அதிர்ச்சியையும் துயரத்தையும் அளிக்கிறது . உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் . கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவிவரும் இச்சூழலில் போதிய மருந்துகள் , தடுப்பூசிகள் மற்றும் ஆக்சிஜன் ஆகியவற்றை இருப்பு வைத்துக் கொள்வதை அரசு உறுதி செய்ய வேண்டும் . ஆக்சிஜன் பற்றாக்குறையால் அப்பாவி மக்கள் உயிரிழப்பதை தடுக்க வேண்டும் . இனிவரும் காலங்களில் இது போன்ற துயரச் சம்பவங்கள் நிகழாமல் இருக்க மாநிலம் முழுவதும் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் போர்க்கால அடிப்படையில் துரிதமாக மேற்கொண்டு பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டுமென தமிழக அரசையும் , தமிழக முதல்வர் திரு.ஸ்டாலின் அவர்களையும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன் . 000 / officeOfOPS @ / officeof_ops O / o Panneerselvam - ShareChat