ShareChat
click to see wallet page
search
கழக ஒருங்கிணைப்பாளர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் அறிக்கை!! #📠 📃 செய்தி
📠 📃 செய்தி - அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தலைமைக் கழகம் 226 , அவ்வை சண்முகம் சாலை , இராயப்பேட்டை , சென்னை - 600014 கொலைவாமன் annanas a மான போக்லை ஓ.பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளர் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ' மக்களால் நான் , மக்களுக்காகவே நான் புரட்சித்தலைவி லெ . ஜெயலலிதா விலைவாசி உயர்வுக்கு பல்வேறு பொருளாதாரக் காரணங்கள் இருந்தாலும் , இந்தச் சூழ்நிலையில் விலைவாசி உயர்வு ஏற்படுவதற்கு காரணம் அத்தியாவசியப் பொருட்கள் கடத்தப்படுவதும் , பதுக்கப்படுவதும்தான் . மாண்புமிகு அம்மா அவர்கள் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தபோது , வெளிச் சந்தையில் விற்கப்படும் உணவுப் பொருள்களின் விலைகளை கட்டுப்படுத்தும் வகையில் , விலைநிறுத்தல் நிதி , அதாவது Price Stabilisation Fund என்ற ஒன்றினை ஏற்படுத்தி , அதற்கு 100 கோடி ரூபாய் நிதியினை ஒதுக்கி , சன்னாக அரிசி ஒரு கிலோ 25 ரூபாய்க்கும் , மிக சன்னரக அரிசி ஒரு கிலோ 31 ரூபாய்க்கும் விற்க நடவடிக்கை எடுத்ததோடு , அத்தியாவசியப் பொருட்களின் விலையினை வெகுவாக குறைத்தார்கள் . எனவே , விலைவாசி உயர்வதற்கு முக்கியக் காரணமாக விளங்கும் கடத்தலையும் , பதுக்கலையும் தடுக்கவும் , சமுதாயத்தின் அடித்தளத்தில் உள்ள மக்கள் நியாயமான விலையில் வெளிச் சந்தையில் அத்தியாவசியப் பொருட்களை பெறவும் , தேவைப்பட்டால் , விலைநிறுத்தல் நிதியத்தை ஏற்படுத்தி அதன் மூலம் மக்களுக்கு நியாயமான விலையில் அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை கேட்டுக் கொள்கிறேன் . அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்பாளர் திரு . ஓ . பன்னீர்செல்வம் அவர்களின் அறிக்கை - 3-06-2021 இழந்து , அவர்களின் கொரோனா நோயின் தாக்கம் ஒரு புறம் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கின்ற சூழ்நிலையில் , மறுபுறம் விலைவாசி உயர்வு அதைவிட மோசமான தாக்கத்தினை மக்களிடையே ஏற்படுத்தி உள்ளது . கொரோனா பாதிப்பின் கொடூரத் தாக்கத்தையடுத்து முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதன் காரணமாக , பொதுமக்கள் வேலைவாய்ப்பினையும் , வருமானத்தினையும் வாழ்வாதாரமே கேள்விக்குறியாக்கப்பட்டிருக்கின்ற இந்தச் சூழ்நிலையில் , அத்தியாவசியப் பொருட்களில் விலை உயர்வு பொதுமக்களை விழிபிதுங்க வைத்துள்ளது . குறிப்பாக , பக்கள் அன்றாடம் சமையலுக்கு உபயோகிக்கும் அரிசி , கோதுமை , பருப்பு வகைகள் , சமையல் எண்ணெய் , எண்ணெய் , நல்லெண்ணெய் ஆகியவற்றின் விலைகள் உச்சத்தில் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன . கொரோனா தாக்கம் என்பது சென்ற ஆண்டு மார்ச் மாதம் முதல் தொடர்ந்து இருந்து வந்தாலும் , அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் இந்த மாதம் உச்சத்திற்கு சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன . கடந்த ஆண்டுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது , சமையல் எண்ணெயின் விலை கிட்டத்தட்ட 20 விழுக்காடும் , சூரியகாந்தி எண்ணெயின் விலை 56 விழுக்காடும் , கடுகு எண்ணெய் விலை 42 விழுக்காடும் , வனஸ்பதியின் விலை 42 விழுக்காடும் , பாமாயில் விலை 52 விழுக்காடும் , பருப்பு வகைகளின் விலை 15 விழுக்காடும் அதிகரித்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன . இதேபோன்று , அரிசி , சர்க்கரை , உப்பு போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலையும் அதிகரித்து உள்ளன . இதன் காரணமாக , பொதுமக்களின் மாத பட்ஜெட்டில் 500 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன . பெண் ஓ . பன்னீர்செல்வம் கழக ஒருங்கிணைப்பாளர் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் - ShareChat