🔴🔴🟡🟡🔴🔴
*வெயில் காலங்களில் சர்க்கரை நோயாளிகள் என்ன சாப்பிடுவது ?*
🔴 வெயில் காலம் சாதாரண மனிதர்களையே வாட்டி வதைக்கும். சர்க்கரை நோயாளிகள் என்றால் கேட்கவே வேண்டாம். அவர்கள் மிகவும் சோர்ந்து போகக்கூடும். மற்றவர்கள் ஜூஸ் அது இது என்று என்ன வேண்டுமானாலும் சாப்பிடலாம்.
மற்ற எல்லாரையும் போல் சர்க்கரை நோயாளிகளும் இந்த விடுமுறை காலத்தில் குடும்பத்தோடு வெளியூர் செல்ல வேண்டிவரலாம். ரயில் அல்லது பேருந்து பயணங்கள் மேற்கொள்ள நேரிடலாம். அந்த சமயங்களில் வீட்டில் இருப்பது போல் நேரத்திற்கு உணவு சாப்பிட முடியாது. ஆனால் சரியான நேரத்திற்கு அவர்கள் உணவு எடுத்துக்கொள்வது அவசியம். சரியான உணவு இல்லையெனில் அவர்களின் எனர்ஜி டவுனாகி விடும்.
🔴 சர்க்கரை நோயாளிகள் நேரத்திற்கு சாப்பிட வேண்டும். உணவினை வயிறு முட்ட அளவுக்கு அதிகமாக சாப்பிடக்கூடாது. சாப்பிடாமலும் இருக்கக்கூடாது. உணவினை மூன்று வேளையாக சாப்பிடாமல் கொஞ்சம் கொஞ்சமாக ஆறு வேளைகளாக பிரித்து சாப்பிடலாம்.
🔴 காலை எட்டு மணி, பதினோரு மணி, மதியம் ஒரு மணி, மாலை 4 மணி, ஆறு மணி, இரவு எட்டு மணி என இப்படி பிரித்து சாப்பிட வேண்டும். இதற்கிடையில் வெயில் நேரம் என்பதால் திரவ உணவுகள் எடுத்துக்கொள்ள வேண்டும். அதற்காக சர்க்கரை போட்ட ஜூஸ் ஆகியவை குடிக்கக் கூடாது. சர்க்கரை நோயாளிகளுக்கென்று சில கட்டுப்பாடுகள் உண்டு.
🔴 பொதுவாக வெயில் காலத்தில் அனைவருக்குமே வியர்வை நிறைய வெளியேறும், அதனால் உடலில் நீர்ச்சத்து குறைந்து போகும் என்பதால் சர்க்கரை நோயாளிகள் தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும்.
🔴 *இளநீர் குடிக்க வேண்டும்*
தயிர் அவ்வளவாக வேண்டாம். அதற்குப் பதிலாக கொழுப்பு நீக்கிய மோர் குடிக்கலாம். சிறிதளவு வெந்தயம் சேர்த்தும் மோர் குடிக்கலாம்.
எலுமிச்சைச் சாறு குடிக்கலாம். சர்க்கரை போட வேண்டாம். அதற்குப் பதில் அரை உப்புப் போட்டு எலுமிச்சைச் சாறை குடிக்கலாம்.
🔴 *நீராகாரம் சாப்பிடலாம்*
கூழ் கரைத்துச் சாப்பிடலாம். மோர் கலந்து பச்சை வெங்காயம் சேர்த்து சாப்பிடலாம். இது போன்ற திரவ உணவுகளை உணவு
இடைவேளைகளில் எடுத்துக் கொள்ளலாம்.
🔴 *தூங்கும் போது பாலில் பாதாம் பொடி கலந்து சாப்பிடலாம்*
உணவில் நிறைய பச்சை காய்கறிகள், கீரை வகைகள் சேர்த்துக்கொள்ள வேண்டும். வெயில் காலத்தில் பூசணிக்காய், வெள்ளரிக்காய், சுரைக்காய், புடலங்காய், வெண்டைக்காய் போன்ற காய்கறிகள் அதிகம் எடுத்துக்கொள்ளலாம். முள்ளங்கி கீரை, அரைக்கீரை, தண்டுக்கீரை, முருங்கைகீரை மற்றும் அகத்தி கீரை போன்ற கீரை வகைகள் எடுத்துக்கொள்ளலாம்.
🔴 *வாழைக்காய் சாப்பிட வேண்டாம். அதற்கு பதில் வாழைத்தண்டு சாப்பிடலாம். *
காய்களை அவித்து சாப்பிடுதல் நல்லது. பச்சையாக சாப்பிடலாம். காலை பதினோரு மணி அளவில் ஃப்ரூட் சாலட், காய்கறி சாலட் போன்றவற்றை சாப்பிட வேண்டும்.
🔴 தர்பூசணி, முலாம் பழம், கிர்ணி பழம் போன்ற நீர்ச்சத்துள்ள பழங்கள் எடுக்கலாம். இனிப்பு சேர்க்க வேண்டாம். இனிப்பான பழங்களை கொஞ்சமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
🔴 தக்காளி, அத்திப்பழம் போன்ற
விதையிருக்கும் பழங்கள் சாப்பிடலாம்.
வெயில் காலத்தில் பச்சரியை தவிர்க்கலாம். ஜீரணமாக
தாமதமாகும்.
கேழ்வரகு உணவு வகைகளை
சாப்பிடலாம்.
🔴 பீட்சா, பர்கர் போன்றவை எப்போதும் வேண்டாம். பிரியாணி வேண்டவே வேண்டாம்.
மாலை நேரங்களில் கடலை, பயறு வகைகள் வேக வைத்து சாப்பிடலாம். வெயில் காலத்தில் வேர்க்கடலை வேண்டாம். ஜீரணமாகாது. புரதச் சத்து அதிகமுள்ள உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்.
🔴 மாலை நேரங்களில் கேழ்வரகு பிஸ்கெட் சாப்பிடலாம். கோதுமை பிஸ்கெட் சாப்பிடலாம்.
வெளியிடங்களில் சாப்பிட வேண்டாம்.
தவிர்க்க முடியாத நேரத்தில் மட்டுமே ஹோட்டல்களில் சாப்பிட வேண்டும். வீட்டில் எண்ணெய், மசாலா போன்றவற்றை குறைவாக பயன்படுத்துவோம்.
ஹோட்டல்களில் மசாலா மற்றும் எண்ணெய் அதிகமாக பயன் படுத்துவார்கள். அது மட்டுமல்லாமல் அஜினோமோட்டோ மற்றும் நிறமூட்டிகளையும் பயன்படுத்தி செய்வார்கள் என்பதால் வெளியிடங்களில் சாப்பிடாமல் இருத்தல் நல்லது.
வெளியே செல்லும் போது ஓட்டலில் சாப்பிட வேண்டிய அவசியம் வந்தால் சுத்தமாக இருக்கும் ஓட்டல்களில் இட்லி, இடியாப்பம் போன்ற ஆவியில் வேகவைத்த உணவுகள் மற்றும் தயிர் மற்றும் சாம்பார் சாதம் போன்றவற்றை சாப்பிடலாம்.
பொரித்தது, வறுத்தது எல்லாம் வேண்டாம். அது கூட ஓரிரு நாள் தான் வெளியில் சாப்பிடலாம். நான்வெஜ் வெளியில் சாப்பிட வேண்டாம்.
🔴 பொதுவாக சர்க்கரை நோயாளிகள் பாட்டில் மற்றும் டின்களில் அடைத்து விற்கப்படும் கூல்டிரிங்க்ஸ் மற்றும் ரெடிமேட் உணவுகளை தவிர்க்க வேண்டும். ஜாம், சாஸ், நூடுல்ஸ் போன்ற பொருட்களையும் தவிர்க்க வேண்டும்.
🔴 சத்துள்ள உணவுகள் சாப்பிட வேண்டும்.
விருந்துகளுக்கு செல்லும் போது என்ன சாப்பிட வேண்டும்... என்ன சாப்பிடக்கூடாது என்று யோசித்துப் பார்த்து சாப்பிட வேண்டும். சுய சிந்தனை வேண்டும். மற்றவர்கள் வற்புறுத்தினாலும் நம் உடல் குறித்து நாம் தான் அக்கறை செலுத்த வேண்டும். அதற்கேற்றபடி சாப்பிடுவது நல்லது.
🔴 பொதுவாக நம்ம ஊர் சூழ்நிலைக்கு நமது பாரம்பரிய உணவுகளான கம்பு, வரகு, சாமை, குதிரைவாலி, தினை போன்றவற்றை வருடத்தில் 365 நாளும் சாப்பிடலாம்.
முளைகட்டின பயறு சாலட் காலை
11 மணி போல சாப்பிடலாம்.
🔴 சர்க்கரை நோயாளிகள் உடற்பயிற்சி செய்வது அவசியம். ஆனால் வெயில் காலத்தில் உடற்பயிற்சியை குறைத்துக்கொள்ள வேண்டும். வெயில் வருவதற்கு முன் காலை நேரத்தில் வெயில் தாழ்ந்த பின் மாலை நேரத்தில் உடற்பயிற்சி மேற்கொள்வது நல்லது அல்லது நிழலில் பயிற்சி மேற்கொள்வது நல்லது.
🔴 சர்க்கரை_நோயாளிகள் பயணங்கள்
போதும் வெளியே வாங்கி சாப்பிடாமல் அதே சமயம் ஆரோக்யமான உணவு சாப்பிட வேண்டுமானால் கையில் என்னென்ன உணவு வகைகள் கொண்டு செல்லலாம்.
🔴 சர்க்கரை நோயாளிகள் வெயிலில் அலைச்சலை குறைத்துக்கொள்வது நல்லது. வெளியே செல்லும் போது கட்டாயம் தண்ணீர் எடுத்து செல்வது நல்லது.
🔴 சர்க்கரை நோயாளிகள் வயதானவர்களாக இருந்தால் வெயிலில் வெளியே செல்ல நேர்ந்தால் தலைவலி, மயக்கம் போன்றவை ஏற்படலாம் என்பதால் துணைக்கு யாரையாவது அழைத்துப் போகலாம்.
🔴 #ராகி_கூழ்
* ராகி கூழ் பெரும்பாலான வீடுகளில் செய்வார்கள். அதனை எடுத்துச் செல்லலாம். மோர் கலந்து சாப்பிடலாம்.
🔴 முளைகட்டின_பயறு_மாவு
காயவைத்து அரைத்த முளைகட்டின பயறு மாவை எடுத்துச் சென்றால்
அதனுடன் சுடுநீரோ அல்லது பாலோ கலந்து சாப்பிடலாம்.
அவல்
🔴 சிவப்பு அவலை ஒரு டப்பியில் போட்டு எடுத்துச் செல்லலாம். சாப்பிடுவதற்கு ஒரு 20 நிமிடங்களுக்கு முன் அதனை நீர் ஊற்றி ஊற வைத்து பின் அதில் பால் கலந்து சாப்பிடலாம். பழங்களும் கூட கலந்து சாப்பிடலாம்.
🔴 பழங்கள்
* ஃப்ரூட் சாலட் தயார் செய்து எடுத்துச் செல்லாம் அல்லது ஒரு ஆப்பிள்
சாப்பிடலாம்.
* வெள்ளரிக்காய் சாப்பிடலாம்.
ராகி_உருண்டை
அடுப்பில் ஒரு பாத்திரத்தில் வறுத்த ராகி மாவு போட்டு அதில் கொஞ்சம் கொஞ்சமாக சுடுநீர் கலந்து அது களி பதத்திற்கு வரும் வரை கிளறி அதை தட்டில் எடுத்து தண்ணீர் தொட்டு உருண்டைகளாக்கி ஆறிய பின் அதை ஒரு டிபன் பாக்ஸில் தண்ணீரில் போட்டு எடுத்துச் செல்லலாம். தேவைப்படும் போது அதே தண்ணீரிலோ அல்லது வேறு தண்ணீர் ஊற்றியோ அல்லது மோரிலோ கரைத்து சாப்பிடலாம்
மூட்டு வலி, குதிகால் மற்றும் கணுக்கால் வலி உடனே தீர 3 எளிய வழிமுறைகள்!
நமது மொத்த எடையையும் தாங்கி நிற்பது நம்முடைய கால்கள் தான். இந்த கால்களுக்கு ஓய்வின்றி அழுத்தம் கொடுத்துக் கொண்டே இருந்தால் அங்கு வலிக்கான தூண்டுதல்கள் உருவாகின்றன. ஒருவர் உயரத்திற்கு ஏற்ற எடையை கொண்டிருந்தால் அவர்களுக்கு எந்த விதமான பிரச்சனையும் வருவதில்லை ஆனால் உடல் பருமன் உடையவர்கள் நீண்ட நேரம் நின்று கொண்டிருந்தால் அவர்களுக்கு குதிகால் வலி, கணுக்கால் வலி, மூட்டு வலி போன்ற பிரச்சனைகள் தோன்ற ஆரம்பிக்கின்றன. உடல் பருமன் மட்டுமல்லாமல் இந்த வலிக்கு வேறு சில காரணங்களும் உண்டு, எனினும் உடல் பருமன் என்பது தான் முக்கிய காரணமாக அமைந்திருக்கும்.
தங்களுடைய உயரத்திற்கு ஏற்ற எடையை கொண்டிருப்பவர்கள் அதிக நேரம் நின்று கொண்டு வேலை செய்யக் கூடாது. அப்படி அதிக நேரம் நிற்கும் படியான வேலையில் தொடர்ந்து ஈடுபட்டால் அவர்களுக்கு நாளடைவில் காலில் வலியும், எரிச்சலும், அசௌகரியத்தையும் உண்டு பண்ணி விடும். இதிலிருந்து எளிதாக நிவாரணம் பெற நாம் என்ன செய்யலாம்? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம், வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.
முதல் வழிமுறை:
அத்தியாவசிய எண்ணெய் என்று கூறப்படும் எண்ணெய் வகைகளில் யூகலிப்டஸ் எண்ணெய், லாவண்டர் எண்ணெய், கிராம்பு எண்ணெய் ஆகியவையும் அடங்கும். இந்த மூன்று எண்ணெய்களில் உங்களிடம் இருக்கும் ஏதாவது ஒரு எண்ணெயை எடுத்துக் கொள்ளுங்கள் அல்லது கடைகளில் சென்று வாங்கிக் கொள்ளுங்கள். ஒரு வாளியில் பாதி அளவிற்கு நல்ல சூடான தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் மேற்கூறிய எண்ணெய் வகைகளில் ஏதாவது ஒன்றை திறந்து மூன்று துளிகள் மட்டும் எண்ணெயை தண்ணீரில் விடுங்கள்.
அந்த தண்ணீரில் உங்களுடைய கால்கள் பத்திலிருந்து, பதினைந்து நிமிடங்கள் வரை வைத்திருந்தால் பாத வலி, கணுக்கால் வலி, மூட்டு வலி அத்தனையும் சரியாகிவிடும். பின்பு சுத்தமான தண்ணீர் கொண்டு கால்களை கழுவி விடலாம். யூகலிப்டஸ் எண்ணெயில் வலியை நீக்கக்கூடிய மற்றும் அழற்சியில் இருந்து பாதுகாப்பாகவும் வைத்திருக்க உதவும் ஆற்றல் உண்டு. கிராம்பு எண்ணெயில் வலி நிவாரணியாக செயல்படக் கூடிய தன்மைகள் உண்டு. லாவண்டர் எண்ணெய் வலியை கட்டுப்படுத்துகிறது.
இரண்டாம் வழிமுறை:
சூடான தண்ணீரை அரை பக்கெட் அளவிற்கு எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு டீஸ்பூன் எப்சம் சால்ட் மற்றும் ஒரு டீஸ்பூன் பேக்கிங் சோடா கலந்து கால்களை பத்திலிருந்து, பதினைந்து நிமிடம் வரை அப்படியே அமிழ்த்தி வையுங்கள். இப்படி செய்து வர சட்டென வலி எல்லாம் நீங்குவதை நீங்களே உணரலாம். எப்சம் சால்டில் மெக்னீசியம் சல்பேட் இருக்கின்றது. இது மூட்டு வலி, வீக்கம் போன்றவற்றை குறைத்து தசை பதற்றம் மற்றும் பிடிப்பு போன்றவை ஏற்படாமல் தடுக்கும்.
மூன்றாம் வழிமுறை :
3 டீஸ்பூன் அளவிற்கு ஆலிவ் எண்ணெய் மற்றும் 2 சொட்டு லேவண்டர் எண்ணெய் கலந்து லேசாக அடுப்பில் வைத்து சூடேற்றி அதை மூட்டு மற்றும் கணுக்கால் மற்றும் குதிகால் ஆகிய இடங்களில் எங்கு வலி இருக்கிறதோ அந்த இடங்களில் சூடு பறக்கத் தேய்த்து விட்டால் போதும்! வலியெல்லாம் பறந்து நிம்மதியான உறக்கம் வரும். இவற்றில் எது உங்களுக்கு வசதியாக இருக்கின்றதோ, அதனை பின்பற்றி அனைவரும் பயனடையலாமே. நன்றி வாழ்க நலமுடன் ..
நன்றி. தங்கள் கிருஷ் 🙏🙏 #💊சர்க்கரை நோய் #😎Summer ஹெல்த் டிப்ஸ் #😷சுகாதார ஹெல்த் டிப்ஸ் #🍃வீட்டு ஆயுர்வேத குறிப்புகள் #ஆரோகிய குறிப்புகள்🚹
வாழ்க்கையின் யதார்த்தங்கள் 🙏🙏 #🚹உளவியல் சிந்தனை #💪Motivational Quotes #👉வாழ்க்கை பாடங்கள் #💯எண்ணம் போல் வாழ்க்கை💯👍
Morning exercise.. இடுப்பு வலிக்கு.. Try பண்ணுங்க 🏃🏃🏃♀️🏃♀️ #🏋️உடற்பயிற்சி #😎Summer ஹெல்த் டிப்ஸ் #😷சுகாதார ஹெல்த் டிப்ஸ் #ஆரோகிய குறிப்புகள்🚹
என்னத்த சொல்ல 😄😄 #😅Funny Caption வீடியோ மீம்ஸ்📱 #🤣 முடிஞ்சா சிரிக்காம இருங்க 😂 #😂 வேடிக்கை வீடியோக்கள்😅 #💑கணவன் மனைவி காமெடி😂
நாட்டில் மனிதமானம் இன்னும் இருப்பந்தால்தான் நாடு நாடக இருக்கிறது 🙏🙏 #🚹உளவியல் சிந்தனை #👌இன்றைக்கான சிறந்த கோட்ஸ்✍️ #💪Motivational Quotes #🤔புதிய சிந்தனைகள்
Good morning to all guys🙏 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏
ஓம் நம சிவாய சிவ சிவ 🙏🙏🙏... #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #🙏கோவில் #🙏நமசிவாய ஓம்✨ #🙏ஆன்மீகம்
ஓம் முருகா போற்றி போற்றி 🙏🙏🙏... #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #🙏கோவில் #🙏ஆன்மீகம்
என்னத்த சொல்ல 😄😄 #😅Funny Caption வீடியோ மீம்ஸ்📱 #🤣 முடிஞ்சா சிரிக்காம இருங்க 😂 #😂 வேடிக்கை வீடியோக்கள்😅
இயற்கை காட்சி.. பறவையை கண்டான். விமானம் படைத்தான் 🫢🫢 #🐥கியுட் பறவைகள் #🏞இயற்கை காட்சி #🦜Love birds #🕊பறவைகள்






