
A Mohan Raj
@19106433
SM Money Flow
(Money Makes Money)
MF Distributor
#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #ஆன்மீக #திருமுறை #பன்னிரு திருமுறை
*"திருமுறை ஓதாய் திருமுறையே தாய்"*
தினம் ஒரு திருமுறை அறிவோம் 🙏
*பதினோராம் திருமுறை*
*பதினோராம் திருமுறை என்பது காரைக்கால் அம்மையார், நம்பியாண்டார் நம்பி உட்பட 12 பன்னிரு சைவ அடியவர்கள் பாடிய 40 பிரபந்தங்களின் (சிற்றிலக்கியங்கள்) தொகுப்பாகும். இது "சைவப் பிரபந்த மாலை" என்றும் அழைக்கப்படுகிறது.*
*பதினோராம் திருமுறை ஆசிரியர்கள் (12 பேர்)* :
*1 திரு ஆலவாய் உடையார்
2 காரைக்கால் அம்மையார்
3 ஐயடிகள் காடவர்கோன் நாயனார்
4 சேரமான் பெருமாள் நாயனார்
5 நக்கீரதேவ நாயனார்
6 கல்லாடதேவ நாயனார்
7 கபிலதேவ நாயனார்
8 பரணதேவ நாயனார்
9 இளம்பெருமான் அடிகள்
10 அதிராவடிகள்
11 பட்டினத்து அடிகள்
12 நம்பியாண்டார் நம்பி.*
*தொகுப்பாளர் : இத்திருமுறையைத் தொகுத்தவர் நம்பியாண்டார் நம்பி ஆவார்.*
*சிறப்பு : இத்திருமுறையில் விநாயகர் வழிபாடு மற்றும் அடியார் சிறப்புகள் இடம்பெற்றுள்ளன.*
*பொருளடக்கம் : திருஈங்கோய்மலை எழுபது, திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம், போற்றித் திருக்கலிவெண்பா, ஆளுடைய பிள்ளையார் திருவுலாமாலை போன்ற இலக்கியங்கள் இதில் உள்ளன.*
இறைவனின் திருநாமம் - சிவபெருமான்
இறைவி - உமையம்மை
அமைவிடம் : பொது
பதிகம் பற்றிய சுருக்கமான விளக்கம் :
*ஐயடிகள் காடவர்கோன் நாயனார் அருளிய, பதினோராம் திருமுறையில் உள்ள ஒரு சிறப்பு பக்தி நூல் "திருக்கோயில் திருவெண்பா" ஆகும்.. இதில், மூப்பு (வயது) வருவதற்கு முன்பே சிவபெருமானை ஒவ்வொரு தலமாகச் சென்று வழிபட வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.*
பாடல் வரிகள் :
*"திருக்கோயில் திருவெண்பா"*
*ஐயடிகள் காடவர்கோன் நாயனார் அருளியது*
ஒடுகின்ற நீர்மை ஒழிதலுமே உற்றாரும்
கோடுகின்றார் மூப்புங் குறுகிற்று - நாடுகின்ற
நல்லச்சிற் றம்பலமே நண்ணாமுன் நன்னெஞ்சே
தில்லைச்சிற் றம்பலமே சேர்.
கடுவடுத்த நீர்கொடுவா காடிதா என்று
நடுநடுத்து நாஅடங்கா முன்னம் பொடியடுத்த
பாழ்க்கோட்டஞ் சேராமுன் பன்மாடத் தென்குடந்தைக்
கீழ்க்கோட்டஞ் செப்பிக் கிட.
குந்தி நடந்து குனிந்தொருகை கோலூன்றி,
நொந்திருமி ஏங்கி நுரைத்தேறி வந்துந்தி
ஐயாறு வாயாறு பாயாமுன் நெஞ்சமே
ஐயாறு வாயால் அழை.
காளை வடிவொழிந்து கையறவோ டையுறவாய்
நாளும் அணுகி நலியாமுன் பாளை
அவிழ்கமுகம் பூஞ்சோலை ஆரூரற் காளாய்க்
கவிழ்கமுகம் கூம்புகஎன் கை.
வஞ்சியன நுண்ணிடையார் வாள்தடங்கண் நீர்சோரக்
குஞ்சி குறங்கின்மேற் கொண்டிருந்து கஞ்சி
அருத்தொருத்தி கொண்டுவா என்னாமுன் நெஞ்சே
திருத்துருத்தி யான்பாதஞ் சேர்.
காலைக் கரையிழையாற் கட்டித்தன் கைஆர்த்து
மாலை தலைக்கணிந்து மையெழுதி மேலோர்
பருக்கோடி மூடிப் பலரழா முன்னம்
திருக்கோடி காஅடைநீ சென்று.
மாண்டு வாய் அங்காவா முன்னம் மடநெஞ்சே
வேண்டுவா யாகி விரைந்தொல்லைப் பாண்டவாய்த்
தென்னிடை வாய் மேய சிவனார் திருநாமம்
நின்னிடைவாய் வைத்து நினை.
தொட்டுத் தடவித் துடிப்பொன்றுங் காணாது
பெட்டப் பிணமென்று பேரிட்டுக் - கட்டி
எடுங்களத்தா என்னாமுன் ஏழைமட நெஞ்சே
நெடுங்களத்தான் பாதம் நினை.
அழுகு திரிகுரம்பை ஆங்கதுவிட் டாவி
ஒழுகும் பொழுதறிய ஒண்ணா கழுகு
கழித்துண் டலையாமுன் காவிரியின் தென்பாற்
குழித்தண் டலையானைக் கூறு.
படிமுழுதும் வெண்குடைக்கீழ்ப் பாரெலாம் ஆண்ட
முடியரசர் செல்வத்து மும்மைக் கடியிலங்கு
தோடேந்து கொன்றையந்தார்ச் சோதிக்குத் தொண்டுபட்
டோடேந்தி யுண்ப துறும்.
குழீஇயிருந்த சுற்றம் குணங்கள்பா ராட்ட
வழீஇயிருந்த அங்கங்கள் எல்லாந் தழீஇயிருந்தும்
என்னானைக் காவா இதுதகா தென்னாமுன்
தென்னானைக் காஅடைநீ சென்று.
குயிலொத் திருள்குஞ்சி கொக்கொத் திருமல்
பயிலப் புகாமுன்னம் நெஞ்சே மயிலைத்
திருப்புன்னை யங்கானல் சிந்தியா யாகில்
இருப்பின்னை யங்காந் திளைத்து.
காளையர்கள் ஈளையர்க ளாகிக் கருமயிரும்
பூளையெனப் பொங்கிப் பொலிவழிந்து சூளையர்கள்
ஓகாளஞ் செய்யாமுன் நெஞ்சமே உஞ்சேனை
மாகாளங் கைதொழுது வாழ்த்து.
இல்லும் பொருளும் இருந்த மனையளவே
சொல்லும் அயலார் துடிப்பளவே நல்ல
கிளைகுளத்து நீரளவே கிற்றியே நெஞ்சே
வளைகுளத்துள் ஈசனையே வாழ்த்து.
அஞ்சனஞ்சேர் கண்ணார் அருவருக்கும் அப்பதமாய்க்
குஞ்சி வெளுத்துடலங் கோடாமுன் நெஞ்சமே
போய்க்காடு கூடப் புலம்பாது பூம்புகார்ச்
சாய்க்காடு கைதொழுநீ சார்ந்து.
இட்ட குடிநீர் இருநாழி ஒருழக்காச்
சட்டவொரு முட்டைநெய் தான்கலந் தட்ட
அருவாய்ச்சா றென்றங் கழாமுன்னம் பாச்சில்
திருவாச்சி ராமமே சேர்.
கழிந்தது நென்னற்றுக் கட்டுவிட்டு நாறி
ஒழிந்த துடல்இரா வண்ணம் அழிந்தது
இராமலையா கொண்டுபோ என்னாமுன் நெஞ்சே
சிராமலையான் பாதமே சேர்.
இழவாடிச் சுற்றத்தார் எல்லாருங் கூடி
விழவாடி ஆவி விடாமுன்னம் மழபாடி
ஆண்டானை ஆரமுதை அன்றயன்மால் காணாமை
நீண்டானை நெஞ்சே நினை.
உள்ளிடத்தான் வல்லையே நெஞ்சமே ஊழ்வினைகள்
கள்ளிடத்தான் வந்து கலவாமுன் கொள்ளிடத்தின்
தென்திருவாப் பாடியான் தெய்வமறை நான்கினையும்
தன்திருவாய்ப் பாடியான் தாள்.
என்னெஞ்சே உன்னை இரந்தும் உரைக்கின்றேன்
கன்னஞ்செய் வாயாகிற் காலத்தால் வன்னஞ்சேய்
மாகம்பத் தானை உரித்தானை வண்கச்சி
ஏகம்பத் தானை இறைஞ்சு.
கரமூன்றிக் கண்ணிடுங்கிக் கால்குலைய மற்றோர்
மரமூன்றி வாய்குதட்டா முன்னம் புரம்மூன்றுந்
தீச்சரத்தாற் செற்றான் திருப்பனந்தாள் தாடகைய
ஈச்சரத்தான் பாதமே ஏத்து.
தஞ்சாக மூவுலகும் ஆண்டு தலையளித்திட்
டெஞ்சாமை பெற்றிடினும் யான்வேண்டேன் நஞ்சங்
கரந்துண்ட கண்டர்தம் ஒற்றியூர் பற்றி
இரந்துண் டிருக்கப் பெறின்.
நூற்றனைத்தோர் பல்லூழி நுண்வயிர வெண்குடைக்கீழ்
வீற்றிருந்த செல்வம் விழையாதே கூற்றுதைத்தான்
ஆடரவங் கச்சா அரைக்கசைத்த அம்மான்தன்
பாடரவம் கேட்ட பகல்.
உய்யும் மருந்திதனை உண்மின் எனவுற்றார்
கையைப் பிடித்தெதிரே காட்டியக்காற் பைய
எழுந்திருமி யான்வேண்டேன் என்னாமுன் நெஞ்சே
செழுந்திரும யானமே சேர்.
திருச்சிற்றம்பலம் 🕉️🙏
ஓம் நமசிவாயம் 🕉️🙏
சிவாய நம ஓம் 🕉️🙏
நற்றுணையாவது நாதன் நாமம் நமச்சிவாயவே🕉️
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
#💪 தன்னம்பிக்கை #🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #ஆன்மீக
Good Morning🌞🙏
Give Priority to LISTENING than TELLING because
when we tell,
we repeat only what we Know already but when we listen, we may know something new...!!!
Have a Great Day👍💐
_*`Ⓜ️ohan Raj A`*_
_*`SM Money Flow`*_
#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #ஆன்மீக #திருமுறை #பன்னிரு திருமுறை
*"திருமுறை ஓதாய் திருமுறையே தாய்"*
தினம் ஒரு திருமுறை அறிவோம் 🙏
*பதினோராம் திருமுறை*
*பதினோராம் திருமுறை என்பது காரைக்கால் அம்மையார், நம்பியாண்டார் நம்பி உட்பட 12 பன்னிரு சைவ அடியவர்கள் பாடிய 40 பிரபந்தங்களின் (சிற்றிலக்கியங்கள்) தொகுப்பாகும். இது "சைவப் பிரபந்த மாலை" என்றும் அழைக்கப்படுகிறது.*
*பதினோராம் திருமுறை ஆசிரியர்கள் (12 பேர்)* :
*1 திரு ஆலவாய் உடையார்
2 காரைக்கால் அம்மையார்
3 ஐயடிகள் காடவர்கோன் நாயனார்
4 சேரமான் பெருமாள் நாயனார்
5 நக்கீரதேவ நாயனார்
6 கல்லாடதேவ நாயனார்
7 கபிலதேவ நாயனார்
8 பரணதேவ நாயனார்
9 இளம்பெருமான் அடிகள்
10 அதிராவடிகள்
11 பட்டினத்து அடிகள்
12 நம்பியாண்டார் நம்பி.*
*தொகுப்பாளர் : இத்திருமுறையைத் தொகுத்தவர் நம்பியாண்டார் நம்பி ஆவார்.*
*சிறப்பு : இத்திருமுறையில் விநாயகர் வழிபாடு மற்றும் அடியார் சிறப்புகள் இடம்பெற்றுள்ளன.*
*பொருளடக்கம் : திருஈங்கோய்மலை எழுபது, திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம், போற்றித் திருக்கலிவெண்பா, ஆளுடைய பிள்ளையார் திருவுலாமாலை போன்ற இலக்கியங்கள் இதில் உள்ளன.*
இறைவனின் திருநாமம் - சிவபெருமான்
இறைவி - உமையம்மை
அமைவிடம் : பொது
பதிகம் பற்றிய சுருக்கமான விளக்கம் :
*அற்புதத் திருவந்தாதி என்பது நாயன்மார்களில் ஒருவரான காரைக்கால் அம்மையாரால் பாடப்பட்ட, சைவத் திருமுறைகளில் பதினோராம் திருமுறைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள ஒரு மிகச்சிறந்த பக்தி நூல். 101 வெண்பாக்களால் ஆன இந்த அந்தாதி நூல், சிவபெருமானின் திருவுருவச் சிறப்பையும், அருளையும் பாடுகிறது. இது தமிழில் அந்தாதி முறையில் பாடப்பெற்ற முதல் நூல் என்பதால் 'ஆதி அந்தாதி' என்றும் அழைக்கப்படுகிறது.*
பாடல் வரிகள் :
*அற்புதத் திருவந்தாதி*
பிறந்து மொழி பயின்ற
பின்னெல்லாம் காதல்
சிறந்துநின் சேவடியே
சேர்ந்தேன் - நிறந்திகழும்
மைஞ்ஞான்ற கண்டத்து
வானோர் பெருமானே
எஞ்ஞான்று தீர்ப்ப திடர். 1
இடர்களையா ரேனும்
எமக்கிரங்கா ரேனும்
படரும் நெறிபணியா
ரேனும் -சுடர்உருவில்
என்பறாக் கோலத்
தெரியாடும் எம்மானார்க்
கன்பறா தென்னெஞ் சவர்க்கு. 2
அவர்க்கே எழுபிறப்பும்
ஆளாவோம் என்றும்
அவர்க்கேநாம் அன்பாவ
தல்லாற் - பவர்ச்சடைமேற்
பாகாப்போழ் சூடும்
அவர்க்கல்லால் மற்றொருவர்க்
காகாப்போம் எஞ்ஞான்றும் ஆள். 3
ஆளானோம் அல்லல்
அறிய முறையிட்டாற்
கேளாத தென்கொலோ
கேளாமை - நீளாகம்
செம்மையா னாகித்
திருமிடறு மற்றொன்றாம்
எம்மைஆட் கொண்ட இறை. 4
இறைவனே எவ்வுயிரும்
தோற்றுவிப்பான் தோற்றி
இறைவனே ஈண்டிறக்கம்
செய்வான் - இறைவனே
எந்தாய் எனஇரங்கும்
எங்கள்மேல் வெந்துயரம்
வந்தால் அது மாற்றுவான். 5
வானத்தான் என்பாரும்
என்கமற் றும்பர்கோன்
தானத்தான் என்பாரும்
தாமென்க - ஞானத்தான்
முன்நஞ்சத் தாலிருண்ட
மொய்யொளிசேர் கண்டத்தான்
என்நெஞ்சத் தானென்பன் யான். 6
யானே தவமுடையேன்
என்நெஞ்சே நன்னெஞ்சம்
யானே பிறப்பறுப்பான்
எண்ணினேன் - யானேயக்
கைம்மா உரிபோர்த்த
கண்ணுதலான் வெண்ணீற்ற
அம்மானுக் காளாயி னேன். 7
ஆயினேன் ஆள்வானுக்
கன்றே பெறற்கரியன்
ஆயினேன் அஃதன்றே
யாமாறு - தூய
புனற்கங்கை ஏற்றானோர்
பொன்வரையே போல்வான்
அனற்கங்கை ஏற்றான் அருள். 8
அருளே உலகெலாம்
ஆள்விப்ப தீசன்
அருளே பிறப்பறுப்ப
தானால் - அருளாலே
மெய்ப்பொருளை நோக்கும்
விதியுடையேன் எஞ்ஞான்றும்
எப்பொருளு மாவ தெனக்கு. 9
எனக்கினிய எம்மானை
ஈசனையான் என்றும்
மனக்கினிய வைப்பாக
வைத்தேன் - எனக்கவனைக்
கொண்டேன் பிரானாகக்
கொள்வதுமே இன்புற்றேன்
உண்டே யெனக்கரிய தொன்று. 10
ஒன்றே நினைந்திருந்தேன்
ஒன்றே துணிந்தொழிந்தேன்
ஒன்றேஎன் உள்ளத்தின்
உள்ளடைத்தேன் - ஒன்றேகாண்
கங்கையான் திங்கட்
கதிர்முடியான் பொங்கொளிசேர்
அங்கையாற் காளாம் அது. 11
அதுவே பிரானாமா
றாட்கொள்ளு மாறும்
அதுவே இனியறிந்தோ
மானால் - அதுவே
பனிக்கணங்கு கண்ணியா
ரொண்ணுதலின் மேலோர்
தனிக்கணங்கு வைத்தார் தகவு. 12
தகவுடையார் தாமுளரேல்
தாரகலஞ் சாரப்
புகவிடுதல் பொல்லாது
கண்டீர் - மிகவடர
ஊர்ந்திடுமா நாகம்
ஒருநாள் மலைமகளைச்
சார்ந்திடுமே லேபாவந் தான். 13
தானே தனிநெஞ்சந்
தன்னையுயக் கொள்வான்
தானே பெருஞ்சேமஞ்
செய்யுமால் - தானேயோர்
பூணாகத் தாற்பொலிந்து
பொங்கழல்சேர் நஞ்சுமிழும்
நீணாகத் தானை நினைந்து. 14
நினைந்திருந்து வானவர்கள்
நீள்மலராற் பாதம்
புனைந்தும் அடிபொருந்த
மாட்டார் - நினைந்திருந்து
மின்செய்வான் செஞ்சடையாய்
வேதியனே என்கின்றேற்
கென்செய்வான் கொல்லோ இனி. 15
இனியோ நாம்உய்ந்தோம்
இறைவன் அருள்சேர்ந்தோம்
இனியோ ரிடரில்லோம்
நெஞ்சே - இனியோர்
வினைக்கடலை யாக்குவிக்கும்
மீளாப் பிறவிக்
கனைக்கடலை நீந்தினோம் காண். 16
காண்பார்க்குங் காணலாந்
தன்மையனே கைதொழுது
காண்பார்க்குங் காணலாங்
காதலாற் - காண்பார்க்குச்
சோதியாய்ச் சிந்தையுளே
தோன்றுமே தொல்லுலகுக்
காதியாய் நின்ற அரன். 17
அரனென்கோ நான்முகன்
என்கோ அரிய
பரனென்கோ பண்புணர
மாட்டேன் - முரணழியத்
தானவனைப் பாதத்
தனிவிரலாற் செற்றானை
யானவனை எம்மானை இன்று. 18
இன்று நமக்கெளிதே
மாலுக்கும் நான்முகற்கும்
அன்றும் அளப்பரியன்
ஆனானை - என்றுமோர்
மூவா மதியானை
மூவே ழுலகங்கள்
ஆவானைக் காணும் அறிவு. 19
அறிவானுந் தானே
அறிவிப்பான் தானே
அறிவாய் அறிகின்றான்
தானே - அறிகின்ற
மெய்ப்பொருளுந் தானே
விரிசுடர்பார் ஆகாயம்
அப்பொருளுந் தானே அவன். 20
அவனே இருசுடர்தீ
ஆகாசம் ஆவான்
அவனே புவிபுனல்காற்
றாவான் - அவனே
இயமானனாய் அட்ட
மூர்த்தியுமாய் ஞான
மயனாகி நின்றானும் வந்து. 21
வந்திதனைக் கொள்வதே
யொக்கும்இவ் வாளரவின்
சிந்தை யதுதெரிந்து
காண்மினோ- வந்தோர்
இராநீர் இருண்டனைய
கண்டத்தீர் எங்கள்
பிரானீர்உம் சென்னிப் பிறை. 22
பிறையும் புனலும்
அனலரவுஞ் சூடும்
இறைவர் எமக்கிரங்கா
ரேனுங் - கறைமிடற்ற
எந்தையார்க் காட்பட்டேம்
என்றென் றிருக்குமே
எந்தையா உள்ள மிது. 23
இதுவன்றே ஈசன்
திருவுருவம் ஆமா
றிதுவன்றே என்றனக்கோர்
சேமம் - இதுவன்றே
மின்னுஞ் சுடருருவாய்
மீண்டாயென் சிந்தனைக்கே
இன்னுஞ் சுழல்கின்ற திங்கு. 24
இங்கிருந்து சொல்லுவதென்
எம்பெருமான் எண்ணாதே
எங்கும் பலிதிரியும்
எத்திறமும் - பொங்கிரவில்
ஈமவனத் தாடுவதும்
என்னுக்கென் றாராய்வோம்
நாமவனைக் காணலுற்ற ஞான்று. 25
ஞான்ற குழற்சடைகள்
பொன்வரைபோல் மின்னுவன
போன்ற கறைமிடற்றான்
பொன்மார்பின் - ஞான்றெங்கும்
மிக்கயலே தோன்ற
விளங்கி மிளிருமே
அக்கயலே வைத்த அரவு. 26
அரவமொன் றாகத்து
நீநயந்து பூணேல்
பரவித் தொழுதிரந்தோம்
பன்னாள் - முரணழிய
ஒன்னாதார் மூவெயிலும்
ஓரம்பால் எய்தானே
பொன்னாரம் மற்றொன்று பூண். 27
பூணாக வொன்று
புனைந்தொன்று பொங்கதளின்
நாணாக மேல்மிளிர
நன்கமைத்துக் - கோள்நாகம்
பொன்முடிமேற் சூடுவது
மெல்லாம் பொறியிலியேற்
கென்முடிவ தாக இவர். 28
இவரைப் பொருளுணர
மாட்டாதா ரெல்லாம்
இவரை இகழ்வதே
கண்டீர் -இவர் தமது
பூக்கோல மேனிப்
பொடிபூசி என்பணிந்த
பேய்க்கோலங் கண்டார் பிறர். 29
பிறரறிய லாகாப்
பெருமையருந் தாமே
பிறரறியும் பேருணர்வுந்
தாமே - பிறருடைய
என்பே அணிந்திரவில்
தீயாடும் எம்மானார்
வன்பேயும் தாமும் மகிழ்ந்து. 30
மகிழ்தி மடநெஞ்சே
மானுடரில் நீயும்
திகழ்தி பெருஞ்சேமஞ்
சேர்ந்தாய் - இகழாதே
யாரென்பே யேனும்
அணிந்துழல்வார்க் காட்பட்ட
பேரன்பே இன்னும் பெருக்கு. 31
பெருகொளிய செஞ்சடைமேற்
பிள்ளைப் பிறையின்
ஒருகதிரே போந்தொழுகிற்
றொக்கும் - தெரியின்
முதற்கண்ணான் முப்புரங்கள்
அன்றெரித்தான் மூவா
நுதற்கண்ணான் தன்மார்பின் நூல். 32
நூலறிவு பேசி
நுழைவிலா தார்திரிக
நீல மணிமிடற்றான்
நீர்மையே - மேலுவந்த
தெக்கோலத் தெவ்வுருவா
யெத்தவங்கள் செய்வார்க்கும்
அக்கோலத் தவ்வுருவே ஆம். 33
ஆமா றறியாவே
வல்வினைகள் அந்தரத்தே
நாமாளென் றேத்தார்
நகர்மூன்றும் - வேமாறு
ஒருகணையாற் செற்றானை
உள்ளத்தால் உள்ளி
அருகணையா தாரை அடும். 34
அடுங்கண்டாய் வெண்மதியென்
றஞ்சி யிருள்போந்
திடங்கொண் டிருக்கின்ற
தொக்கும் - படங்கொள்
அணிமிடற்ற பேழ்வாய்
அரவசைத்தான் கோல
மணிமிடற்றின் உள்ள மறு. 35
மறுவுடைய கண்டத்தீர்
வார்சடைமேல் நாகம்
தெறுமென்று தேய்ந்துழலும்
ஆஆ - உறுவான்
தளரமீ தோடுமேல்
தான்அதனை அஞ்சி
வளருமோ பிள்ளை மதி. 36
மதியா அடலவுணர்
மாமதில்மூன் றட்ட
மதியார் வளர்சடையி
னானை - மதியாலே
என்பாக்கை யாலிகழா
தேத்துவரேல் இவ்வுலகில்
என்பாக்கை யாய்ப்பிறவார் ஈண்டு. 37
ஈண்டொளிசேர் வானத்
தெழுமதியை வாளரவம்
தீண்டச் சிறுகியதே
போலாதே - பூண்டதோர்
தாரேறு பாம்புடையான்
மார்பில் தழைந்திலங்கு
கூரேறு காரேனக் கொம்பு. 38
கொம்பினைஓர் பாகத்துக்
கொண்ட குழகன்தன்
அம்பவள மேனி
அதுமுன்னஞ் - செம்பொன்
அணிவரையே போலும்
பொடியணிந்தால் வெள்ளி
மணிவரையே போலும் மறித்து. 39
மறித்து மடநெஞ்சே
வாயாலுஞ் சொல்லிக்
குறித்துத் தொழுதொண்டர்
பாதம் - குறித்தொருவர்
கொள்ளாத திங்கள்
குறுங்கண்ணி கொண்டார்மாட்
டுள்ளாதார் கூட்டம் ஒருவு. 40
ஒருபால் உலகளந்த
மாலவனாம் மற்றை
ஒருபால் உமையவளாம்
என்றால் - இருபாலும்
நின்னுருவ மாக
நிறந்தெரிய மாட்டோமால்
நின்னுருவோ மின்னுருவோ நேர்ந்து. 41
நேர்ந்தரவங் கொள்ளச்
சிறுகிற்றோ நீயதனை
ஈர்ந்தளவே கொண்டிசைய
வைத்தாயோ - பேர்ந்து
வளங்குழவித் தாய்வளர
மாட்டாதோ என்னோ
இளங்குழவித் திங்கள் இது. 42
திங்க ளிதுசூடிச்
சில்பலிக்கென் றூர்திரியேல்
எங்கள் பெருமானே
என்றிரந்து - பொங்கொளிய
வானோர் விலக்காரேல்
யாம்விலக்க வல்லமே
தானே அறிவான் தனக்கு. 43
தனக்கே அடியனாய்த்
தன்னடைந்து வாழும்
எனக்கே அருளாவா
றென்கொல் - மனக்கினிய
சீராளன் கங்கை
மணவாளன் செம்மேனிப்
பேராளன் வானோர் பிரான். 44
பிரானவனை நோக்கும்
பெருநெறியே பேணிப்
பிரானவன்தன் பேரருளே
வேண்டிப் - பிரானவனை
எங்குற்றான் என்பீர்கள்
என்போல்வார் சிந்தையினும்
இங்குற்றான் காண்பார்க் கெளிது. 45
எளிய திதுவன்றே
ஏழைகாள் யாதும்
அளியீர் அறிவிலீர்
ஆஆ - ஒளிகொள்மிடற்
றெந்தைஅராப் பூண்டுழலும்
எம்மானை உள்நினைந்த
சிந்தையராய் வாழுந் திறம். 46
திறத்தான் மடநெஞ்சே
சென்றடைவ தல்லால்
பெறத்தானும் ஆதியோ
பேதாய் - நிறத்த
இருவடிக்கண் ஏழைக்
கொருபாகம் ஈந்தான்
திருவடிக்கட் சேருந் திரு. 47
திருமார்பில் ஏனச்
செழுமருப்பைப் பார்க்கும்
பெருமான் பிறைக்கொழுந்தை
நோக்கும் - ஒருநாள்
இதுமதியென் றொன்றாக
இன்றளவுந் தேரா
ததுமதியொன் றில்லா அரா. 48
அராவி வளைத்தனைய
அங்குழவித் திங்கள்
விராவு கதிர்விரியஓடி - விராவுதலால்
பொன்னோடு வெள்ளிப்
புரிபுரிந்தாற் போலாவே
தன்னோடே யொப்பான் சடை. 49
சடைமேல்அக் கொன்றை
தருகனிகள் போந்து
புடைமேவித் தாழ்ந்தனவே
போலும் - முடிமேல்
வலப்பால்அக் கோல
மதிவைத்தான்தன் பங்கின்
குலப்பாவை நீலக் குழல். 50
குழலார் சிறுபுறத்துக்
கோல்வளையைப் பாகத்
தெழிலாக வைத்தேக
வேண்டா - கழலார்ப்பப்
பேரிரவில் ஈமப்
பெருங்காட்டில் பேயோடும்
ஆரழல்வாய் நீயாடும் அங்கு. 51
அங்கண் முழுமதியஞ்
செக்கர் அகல்வானத்
தெங்கும் இனிதெழுந்தால்
ஒவ்வாதே - செங்கண்
திருமாலைப் பங்குடையான்
செஞ்சடைமேல் வைத்த
சிரமாலை தோன்றுவதோர் சீர். 52
சீரார்ந்த கொன்றை
மலர்தழைப்பச் சேணுலவி
நீரார்ந்த பேரியாறு
நீத்தமாய்ப் - போரார்ந்த
நாண்பாம்பு கொண்டசைத்த
நம்மீசன் பொன்முடிதான்
காண்பார்க்குச் செவ்வேயோர் கார். 53
காருருவக் கண்டத்தெங்
கண்ணுதலே எங்கொளித்தாய்
ஓருருவாய் நின்னோ
டுழிதருவான் - நீருருவ
மேகத்தாற்செய்தனைய
மேனியான் நின்னுடைய
பாகத்தான் காணாமே பண்டு. 54
பண்டமரர் அஞ்சப்
படுகடலின் நஞ்சுண்டு
கண்டங் கறுத்ததுவு
மன்றியே - உண்டு
பணியுறுவார் செஞ்சடைமேற்
பால்மதியி னுள்ளே
மணிமறுவாய்த் தோன்றும் வடு. 55
வடுவன் றெனக்கருதி
நீமதித்தி யாயின்
சுடுவெண் பொடிநிறத்தாய்
சொல்லாய் - படுவெண்
புலாற்றலையின் உள்ளூண்
புறம்பேசக் கேட்டோம்
நிலாத்தலையிற் சூடுவாய் நீ. 56
நீயுலகம் எல்லாம்
இரப்பினும் நின்னுடைய
தீய அரவொழியச்
செல்கண்டாய் - தூய
மடவரலார் வந்து
பலியிடார் அஞ்சி
விடஅரவம் மேலாட மிக்கு. 57
மிக்க முழங்கெரியும்
வீங்கிய பொங்கிருளும்
ஒக்க வுடனிருந்தால்
ஒவ்வாதே - செக்கர்போல்
ஆகத்தான் செஞ்சடையும்
ஆங்கவன்தன் பொன்னுருவில்
பாகத்தாள் பூங்குழலும் பண்பு. 58
பண்புணர மாட்டேன்நான்
நீயே பணித்துக்காண்
கண்புணரும் நெற்றிக்
கறைக்கண்டா - பெண்புணரும்
அவ்வுருவோ மாலுருவோ
ஆனேற்றாய் நீறணிவ
தெவ்வுருவோ நின்னுருவ மேல். 59
மேலாய மேகங்கள்
கூடியோர் பொன்விலங்கல்
போலாம் ஒளிபுதைத்தால்
ஒவ்வாதே - மாலாய
கைம்மா மதக்களிற்றுக்
காருரிவை போர்த்தபோ
தம்மான் திருமேனி அன்று. 60
அன்றுந் திருவுருவங்
காணாதே ஆட்பட்டேன்
இன்றுந் திருவுருவங்
காண்கிலேன் - என்றுந்தான்
எவ்வுருவோன் உம்பிரான்
என்பார்கட் கென்னுரைக்கேன்
எவ்வுருவோ நின்னுருவம் ஏது. 61
ஏதொக்கும் ஏதொவ்வா
தேதாகும் ஏதாகா
தேதொக்கும் என்பதனை
யாரறிவார் - பூதப்பால்
வில்வேட னாகி
விசயனோ டேற்றநாள்
வல்வேட னான வடிவு. 62
வடிவுடைய செங்கதிர்க்கு
மாறாய்ப் பகலே
நெடிதுலவி நின்றெறிக்குங்
கொல்லோ - கடியுலவு
சொன்முடிவொன் றில்லாத
சோதியாய் சொல்லாயால்
நின்முடிமேல் திங்கள் நிலா. 63
நிலாஇலங்கு வெண்மதியை
நேடிக்கொள் வான்போல்
உலாவி உழிதருமா
கொல்லோ - நிலாஇருந்த
செக்கரவ் வானமே
ஒக்குந் திருமுடிக்கே
புக்கரவங் காலையே போன்று. 64
காலையே போன்றிலங்கும்
மேனி கடும்பகலின்
வேலையே போன்றிலங்கும்
வெண்ணீறு - மாலையின்
தாங்குருவே போலுஞ்
சடைக்கற்றை மற்றவற்கு
வீங்கிருளே போலும் மிடறு. 65
மிடற்றில் விடமுடையீர்
உம்மிடற்றை நக்கி
மிடற்றில் விடங்கொண்ட
வாறோ - மிடற்றகத்து
மைத்தாம் இருள்போலும்
வண்ணங் கரிதாலோ
பைத்தாடும் நும்மார்பிற் பாம்பு. 66
பாம்பும் மதியும்
மடமானும் பாய்புலியுந்
தாம்பயின்று தாழருவி
தூங்குதலால் - ஆம்பொன்
உருவடிவில் ஓங்கொளிசேர்
கண்ணுதலான் கோலத்
திருவடியின் மேய சிலம்பு. 67
சிலம்படியாள் ஊடலைத்
தான்தவிர்ப்பான் வேண்டிச்
சிலம்படிமேற் செவ்வரத்தஞ்
சேர்த்தி - நலம்பெற்
றெதிராய செக்கரினும்
இக்கோலஞ் செய்தான்
முதிரா மதியான் முடி. 68
முடிமேற் கொடுமதியான்
முக்கணான் நல்ல
அடிமேற் கொடுமதியோங்
கூற்றைப் - படிமேற்
குனியவல மாம்அடிமை
கொண்டாடப் பெற்றோம்
இனிஅவலம் உண்டோ எமக்கு. 69
எமக்கிதுவோ பேராசை
யென்றுந் தவிரா
தெமக்கொருநாள் காட்டுதியோ
எந்தாய் - அமைக்கவே
போந்தெரிபாய்ந் தன்ன
புரிசடையாய் பொங்கிரவில்
ஏந்தெரிபாய்ந் தாடும் இடம். 70
இடப்பால வானத்
தெழுமதியை நீயோர்
மடப்பாவை தன்னருகே
வைத்தால் - இடப் பாகங்
கொண்டாள் மலைப்பாவை
கூறொன்றுங் கண்டிலங்காண்
கண்டாயே முக்கண்ணாய் கண். 71
கண்டெந்தை என்றிறைஞ்சிக்
கைப்பணியான் செய்யேனேல்
அண்டம் பெறினும்
அதுவேண்டேன் - துண்டஞ்சேர்
விண்ணாளுந் திங்களாய்
மிக்குலகம் ஏழினுக்கும்
கண்ணாளா ஈதென் கருத்து. 72
கருத்தினால் நீகருதிற்
றெல்லாம் உடனே
திருத்தலாஞ் சிக்கென
நான்சொன்னேன் - பருத்தரங்க
வெள்ளநீ ரேற்றான்
அடிக்கமலம் நீவிரும்பி
உள்ளமே எப்போதும் ஓது. 73
ஓத நெடுங்கடல்கள்
எத்தனையும் உய்த்தட்ட
ஏது நிறைந்தில்லை
என்பரால் - பேதையர்கள்
எண்ணா திடும்பலியால்
என்னோ நிறைந்தவா
கண்ணார் கபாலக் கலம். 74
கலங்கு புனல்கங்கை
ஊடால லாலும்
இலங்கு மதிஇயங்க
லாலும் - நலங்கொள்
பரிசுடையான் நீண்முடிமேற்
பாம்பியங்க லாலும்
விரிசடையாங் காணில் விசும்பு. 75
விசும்பில் விதியுடைய
விண்ணோர் பணிந்து
பசும்பொன் மணிமகுடந்
தேய்ப்ப - முசிந்தெங்கும்
எந்தாய் தழும்பேறி
யேபாவம் பொல்லாவாம்
அந்தா மரைபோல் அடி. 76
அடிபேரிற் பாதாளம்
பேரும் அடிகள்
முடிபேரின் மாமுகடு
பேரும் - கடகம்
மறிந்தாடு கைபேரின்
வான்திசைகள் பேரும்
அறிந்தாடும் ஆற்றா தரங்கு. 77
அரங்கமாய்ப் பேய்க்காட்டில்
ஆடுவான் வாளா
இரங்குமோ எவ்வுயிர்க்கும்
ஏழாய் - இரங்குமேல்
என்னாக வையான்தான்
எவ்வுலகம் ஈந்தளியான்
பன்னாள் இரந்தாற் பணிந்து. 78
பணிந்தும் படர்சடையான்
பாதங்கள் போதால்
அணிந்தும் அணிந்தவரை
ஏத்தத் - துணிந்தென்றும்
எந்தையார்க் காட்செய்யப்
பெற்ற இதுகொலோ
சிந்தையார்க் குள்ள செருக்கு. 79
செருக்கினால் வெற்பெடுத்த
எத்தனையோ திண்டோள்
அரக்கனையும் முன்னின்
றடர்த்த - திருத்தக்க
மாலயனுங் காணா
தரற்றி மகிழ்ந்தேத்தக்
காலனையும் வென்றுதைத்த கால். 80
காலனையும் வென்றோம்
கடுநரகம் கைகழன்றோம்
மேலை இருவினையும்
வேரறுத்தோம் - கோல
அரணார் அவிந்தழிய
வெந்தீயம் பெய்தான்
சரணார விந்தங்கள் சார்ந்து. 81
சார்ந்தார்க்குப் பொற்கொழுந்தே
ஒத்திலங்கிச் சாராது
பேர்ந்தார்க்குத் தீக்கொடியின்
பெற்றியதாம் - தேர்ந்துணரில்
தாழ்சுடரோன் செங்கதிருஞ்
சாயுந் தழல்வண்ணன்
வீழ்சடையே என்றுரைக்கும் மின். 82
மின்போலும் செஞ்சடையான்
மாலோடும் ஈண்டிசைந்தால்
என்போலுங் காண்பார்கட்
கென்றிரேல் - தன்போலும்
பொற்குன்றும் நீல
மணிக்குன்றும் தாமுடனே
நிற்கின்ற போலும் நெடிது. 83
நெடிதாய பொங்கெரியுந்
தண்மதியும் நேரே
கடிதாங் கடுஞ்சுடரும்
போலும் - கொடிதாக
விண்டார்கள் மும்மதிலும்
வெந்தீ யினில்அழியக்
கண்டாலும் முக்கணான் கண். 84
கண்ணாரக் கண்டும்என்
கையாரக் கூப்பியும்
எண்ணார எண்ணத்தால்
எண்ணியும் - விண்ணோன்
எரியாடி என்றென்றும்
இன்புறுவன் கொல்லோ
பெரியானைக் காணப் பெறின். 85
பெறினும் பிறிதியாதும்
வேண்டேம் நமக்கீ
துறினும் உறாதொழியு
மேனும் - சிறிதுணர்த்தி
மற்றொருகண் நெற்றிமேல்
வைத்தான்தன் பேயாய
நற்கணத்தி லொன்றாய நாம். 86
நாமாலை சூடியும்
நம்ஈசன் பொன்னடிக்கே
பூமாலை கொண்டு
புனைந்தன்பாய் - நாமோர்
அறிவினையே பற்றினால்
எற்றே தடுமே
எறிவினையே என்னும் இருள். 87
இருளின் உருவென்கோ
மாமேகம் என்கோ
மருளின் மணிநீலம்
என்கோ - அருளெமக்கு
நன்றுடையாய் செஞ்சடைமேல்
நக்கிலங்கு வெண்மதியம்
ஒன்றுடையாய் கண்டத் தொளி. 88
ஒளிவி லிவன்மதனை
ஒண்பொடியா நோக்கித்
தெளிவுள்ள சிந்தையினிற்
சேர்வாய் - ஒளிநஞ்சம்
உண்டவா யஃதிருப்ப
உன்னுடைய கண்டமிருள்
கொண்டவா றென்இதனைக் கூறு. 89
கூறெமக்கீ தெந்தாய் குளிர்சடையை
மீதழித் திட்
டேற மிகப்பெருகின்
என்செய்தி - சீறி
விழித்தூரும் வாளரவும்
வெண்மதியும் ஈர்த்துத்
தெழித்தோடுங் கங்கைத் திரை. 90
திரைமருவு செஞ்சடையான்
சேவடிக்கே ஆளாய்
உரைமருவி யாமுணர்ந்தோங்
கண்டீர் - தெரிமினோ
இம்மைக்கும் அம்மைக்கும்
எல்லாம் அமைந்தோமே
எம்மைப் புறம்உரைப்ப தென். 91
என்னை உடையானும்
ஏகமாய் நின்றானுந்
தன்னை அறியாத
தன்மையனும் - பொன்னைச்
சுருளாகச் செய்தனைய
தூச்சடையான் வானோர்க்
கருளாக வைத்த அவன். 92
அவன்கண்டாய் வானோர்
பிரானாவான் என்றும்
அவன்கண்டாய் அம்பவள
வண்ணன் - அவன் கண்டாய்
மைத்தமர்ந்த கண்டத்தான்
மற்றவன்பால் நன்னெஞ்சே
மெய்த்தமர்ந்தன் பாய்நீ விரும்பு. 93
விருப்பினால் நீபிரிய
கில்லாயோ வேறா
இருப்பிடமற் றில்லையோ
என்னோ - பொருப்பன்மகள்
மஞ்சுபோல் மால்விடையாய்
நிற்பிரிந்து வேறிருக்க
அஞ்சுமோ சொல்லாய் அவள். 94
அவளோர் குலமங்கை
பாகத் தகலாள்
இவளோர் சலமகளும்
ஈதே - தவளநீ
றென்பணிவீர் என்றும்
பிரிந்தறியீர் ஈங்கிவருள்
அன்பணியார் சொல்லுமின்இங் கார். 95
ஆர்வல்லார் காண
அரனவனை அன்பென்னும்
போர்வை அதனாலே
போர்த்தமைத்துச் - சீர்வல்ல
தாயத்தால் நாமுந்
தனிநெஞ்சி னுள்ளடைத்து
மாயத்தால் வைத்தோம் மறைத்து. 96
மறைத்துலகம் ஏழினிலும்
வைத்தாயோ அன்றேல்
உறைப்போடும் உன்கைக்
கொண்டாயோ - நிறைத்திட்
டுளைந்தெழுந்து நீயெரிப்ப
மூவுலகும் உள்புக்
களைந்தெழுந்த செந்தீ யழல். 97
அழலாட அங்கை
சிவந்ததோ அங்கை
அழகால் அழல்சிவந்த
வாறோ - கழலாடப்
பேயோடு கானிற்
பிறங்க அனலேந்தித்
தீயாடு வாயிதனைக் செப்பு. 98
செப்பேந் திளமுலையாள்
காணவோ தீப்படுகாட்
டப்பேய்க் கணமவைதாங்
காணவோ - செப்பெனக்கொன்
றாகத்தான் அங்காந்
தனலுமிழும் ஐவாய
நாகத்தா யாடுன் நடம். 99
நடக்கிற் படிநடுங்கும்
நோக்கிற் திசைவேம்
இடிக்கின் உலகனைத்தும்
ஏங்கும் - அடுக்கற்
பொருமேறோ ஆனேறோ
பொன்னொப்பாய் நின்னே
றுருமேறோ ஒன்றா உரை. 100
உரையினால் இம்மாலை
அந்தாதி வெண்பாக்
கரைவினாற் காரைக்காற்
பேய்சொல் - பரவுவார்
ஆராத அன்பினோ
டண்ணலைச்சென் றேத்துவார்
பேராத காதல் பிறந்து. 101
திருச்சிற்றம்பலம் 🕉️🙏
ஓம் நமசிவாயம் 🕉️🙏
சிவாய நம ஓம் 🕉️🙏
நற்றுணையாவது நாதன் நாமம் நமச்சிவாயவே🕉️
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
#💪 தன்னம்பிக்கை #🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #ஆன்மீக
Good Morning🌞🙏
"Attraction is the temporary love.."
but.
"love is the permanent attraction.."
Just a game of words..
But makes lot of difference in life....
Have a Great Day👍💐
_*`Ⓜ️ohan Raj A`*_
_*`SM Money Flow`*_
#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #ஆன்மீக #திருமுறை #பன்னிரு திருமுறை
*"திருமுறை ஓதாய் திருமுறையே தாய்"*
தினம் ஒரு திருமுறை அறிவோம் 🙏
*பதினோராம் திருமுறை*
*பதினோராம் திருமுறை என்பது காரைக்கால் அம்மையார், நம்பியாண்டார் நம்பி உட்பட 12 பன்னிரு சைவ அடியவர்கள் பாடிய 40 பிரபந்தங்களின் (சிற்றிலக்கியங்கள்) தொகுப்பாகும். இது "சைவப் பிரபந்த மாலை" என்றும் அழைக்கப்படுகிறது.*
*பதினோராம் திருமுறை ஆசிரியர்கள் (12 பேர்)* :
*1 திரு ஆலவாய் உடையார்
2 காரைக்கால் அம்மையார்
3 ஐயடிகள் காடவர்கோன் நாயனார்
4 சேரமான் பெருமாள் நாயனார்
5 நக்கீரதேவ நாயனார்
6 கல்லாடதேவ நாயனார்
7 கபிலதேவ நாயனார்
8 பரணதேவ நாயனார்
9 இளம்பெருமான் அடிகள்
10 அதிராவடிகள்
11 பட்டினத்து அடிகள்
12 நம்பியாண்டார் நம்பி.*
*தொகுப்பாளர் : இத்திருமுறையைத் தொகுத்தவர் நம்பியாண்டார் நம்பி ஆவார்.*
*சிறப்பு : இத்திருமுறையில் விநாயகர் வழிபாடு மற்றும் அடியார் சிறப்புகள் இடம்பெற்றுள்ளன.*
*பொருளடக்கம் : திருஈங்கோய்மலை எழுபது, திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம், போற்றித் திருக்கலிவெண்பா, ஆளுடைய பிள்ளையார் திருவுலாமாலை போன்ற இலக்கியங்கள் இதில் உள்ளன.*
இறைவனின் திருநாமம் - சிவபெருமான்
இறைவி - உமையம்மை
அமைவிடம் : பொது
பதிகம் பற்றிய சுருக்கமான விளக்கம் :
*பதினோராம் திருமுறையில் இருந்து காரைக்கால் அம்மையார் அருளிய திரு இரட்டை மணிமாலை*
*காரைக்கால் அம்மையார் அருளிய திரு இரட்டை மணிமாலை, சைவத் திருமுறைகளில் 11-ஆம் திருமுறையில் இடம் பெற்றுள்ள, வெண்பா மற்றும் கட்டளைக் கலித்துறை என இரு பா வகைகளால் மாறி மாறி அந்தாதியாகப் பாடப்பட்ட 20 பாடல்களைக் கொண்ட சிற்றிலக்கிய நூல். இது சிவபெருமானின் பெருமைகளை உணர்த்தும், பக்திச் சுவைமிக்க நூலாகும்.*
பாடல் வரிகள் :
*காரைக்கால் அம்மையார் அருளிய திரு இரட்டை மணிமாலை*
கிளர்ந்துந்து வெந்துயர் வந்தடும்
போதஞ்சி நெஞ்சமென்பாய்த்
தளர்ந்திங் கிருத்தல் தவிர்திகண்
டாய்தள ராதுவந்தி
வளர்ந்துந்து கங்கையும் வானத்
திடைவளர் கோட்டுவெள்ளை
இளந்திங் களும்எருக் கும்இருக்
குஞ்சென்னி ஈசனுக்கே.
ஈசன் அவனல்லாது இல்லை எனநினைந்து
கூசி மனத்தகத்துக் கொண்டிருந்து - பேசி
மறவாது வாழ்வாரை மண்ணுலகத் தென்றும்
பிறவாமை காக்கும் பிரான்.
பிரானென்று தன்னைப்பன் னாள்பர
வித்தொழு வார்இடர்கண்
டிரான்என நிற்கின்ற ஈசன்கண்
டீர்இன வண்டுகிண்டிப்
பொராநின்ற கொன்றை பொதும்பர்க்
கிடந்துபொம் மென்துறைவாய்
அராநின் றிரைக்குஞ் சடைச்செம்பொன்
நீள்முடி அந்தணனே.
அந்தணனைத் தஞ்சம்என் றாட்பட்டார் ஆழாமே
வந்தணைந்து காத்தளிக்கும் வல்லாளன் - கொந்தணைந்த
பொன்கண்டால் பூணாதே கோள்அரவம் பூண்டானே
என்கண்டாய் நெஞ்சே இனி.
இனிவார் சடையினில் கங்கையென்
பாளைஅங் கத்திருந்த
கனிவாய் மலைமங்கை காணில்என்
செய்திகையிற் சிலையால்
முனிவார் திரிபுரம் மூன்றும்வெந்
தன்றுசெந் தீயின்மூழ்கத்
தனிவார் கணையொன்றி னால்மிகக்
கோத்தஎம் சங்கரனே.
சங்கரனைத் தாழ்ந்த சடையானை அச்சடைமேற்
பொங்கரவம் வைத்துகந்த புண்ணியனை - அங்கொருநாள்
ஆவாஎன்று ஆழாமைக் காப்பானை எப்பொழுதும்
ஒவாது நெஞ்சே உரை.
உரைக்கப் படுவதும் ஒன்றுண்டு
கேட்கின்செவ் வான்தொடைமேல்
இரைக்கின்ற பாம்பினை என்றுந்
தொடேல்இழிந் தோட்டத்தெங்கும்
திரைக்கின்ற கங்கையுந் தேன்நின்ற
கொன்றையுஞ் செஞ்சடைமேல்
விரைக்கின்ற வன்னியுஞ் சென்னித்
தலைவைத்த வேதியனே.
வேதியனை வேதப் பொருளானை வேதத்துக்
காதியனை ஆதிரைநன் னாளானைச் - சோதிப்பான்
வல்லேன மாய்ப்புக்கு மாலவனும் மாட்டாது
கில்லேன மாஎன்றான் கீழ்.
கீழா யினதுன்ப வெள்ளக்
கடல்தள்ளி உள்ளுறப்போய்
வீழா திருந்தின்பம் வேண்டுமென் பீர்
விர வார்புரங்கள்
பாழா யிடக்கண்ட கண்டன் எண்
தோளன்பைம் பொற்கழலே
தாழா திறைஞ்சிப் பணிந்துபன்
னாளுந் தலைநின்மினே.
தலையாய ஐந்தினையுஞ் சாதித்துத் தாழ்ந்து
தலையா யினவுணர்ந்தோர் காண்பர் - தலையாய
அண்டத்தான் ஆதிரையான் ஆலாலம் உண்டிருண்ட
கண்டத்தான் செம்பொற் கழல்.
கழற்கொண்ட சேவடி காணலுற்
றார்தம்மைப் பேணலுற்றார்
நிழற்கண்ட போழ்தத்தும் நில்லா
வினைநிகர் ஏதுமின்றித்
தழற்கொண்ட சோதிச்செம் மேனியெம்
மானைக்கைம் மாமலர்தூய்த்
தொழக்கண்டு நிற்கிற்கு மோதுன்னி
நம்அடுந் தொல்வினையே.
தொல்லை வினைவந்து சூழாமுன் தாழாமே
ஒல்லை வணங்கி உமையென்னும் - மெல்லியலோர்
கூற்றானைக் கூற்றுருவங்காய்ந்தானை வாய்ந்திலங்கு
நீற்றானை நெஞ்சே நினை.
நினையா தொழிதிகண் டாய்நெஞ்ச
மேஇங்கொர் தஞ்சமென்று
மனையா ளையும்மக்கள் தம்மையுந்
தேறிஓர் ஆறுபுக்கு
நனையாச் சடைமுடி நம்பன் நந்
தாதைநொந் தாதசெந்தீ
அனையான் அமரர் பிரான்அண்ட
வாணன் அடித்தலமே.
அடித்தலத்தின் அன்றரக்கன் ஐந்நான்கு தோளும்
முடித்தலமும் நீமுரித்த வாறென் - முடித்தலத்தின்
ஆறாடி ஆறாஅனலாடி அவ்வனலின்
நீறாடி நெய்யாடி நீ.
நீநின்று தானவர் மாமதில்
மூன்றும் நிரந்துடனே
தீநின்று வேவச் சிலைதொட்ட
வாறென் திரங்குவல்வாய்ப்
பேய்நின்று பாடப் பெருங்கா
டரங்காப் பெயர்ந்துநட்டம்
போய்நின்று பூதந் தொழச்செய்யும்
மொய்கழற் புண்ணியனே.
புண்ணியங்கள் செய்தனவும் பொய்ந்நெறிக்கட் சாராமே
எண்ணியோ ரைந்தும் இசைந்தனவால் - திண்ணிய
கைம்மாவின் ஈருரிவை மூவுருவும் போர்த்துகந்த
அம்மானுக் காட்பட்ட அன்பு.
அன்பால் அடைவதெவ் வாறுகொல்
மேலதோ ராடரவம்
தன்பால் ஒருவரைச் சாரவொட்
டா ததுவேயுமன்றி
முன்பா யினதலை யோடுகள்
கோத்தவை ஆர்த்துவெள்ளை
என்பா யினவும் அணிந்தங்கோர்
ஏறுகந் தேறுவதே.
ஏறலால் ஏறமற் றில்லையே எம்பெருமான்
ஆறெலாம் பாயும் அவிர்சடையார் - வேறோர்
படங்குலவு நாகமுமிழ் பண்டமரர்ச் சூழ்ந்த
தடங்கடல்நஞ் சுண்டார் தமக்கு.
தமக்கென்றும் இன்பணி செய்திருப்
பேமுக்குத் தாமொருநாள்
எமக்கென்று சொன்னால் அருளுங்கொ
லாமிணை யாதுமின்றிச்
சுமக்கின்ற பிள்ளைவெல் ளேறொப்ப
தொன்றுதொண் டைக்கனிவாய்
உமைக்கென்று தேடிப் பொறாதுட
னேகொண்ட உத்தமரே.
உத்தமராய் வாழ்வார் உலந்தக்கால் உற்றார்கள்
செத்த மரமடுக்கித் தீயாமுன் - உத்தமனாய்
நீளாழி நஞ்சுண்ட நெய்யாடி தன்திறமே
கேளாழி நெஞ்சே கிளர்ந்து.
திருச்சிற்றம்பலம் 🕉️🙏
ஓம் நமசிவாயம் 🕉️🙏
சிவாய நம ஓம் 🕉️🙏
நற்றுணையாவது நாதன் நாமம் நமச்சிவாயவே🕉️
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
#💪 தன்னம்பிக்கை #🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #ஆன்மீக
Good Morning🌞🙏
Nothing can be Changed by Changing the Face, but Everything can be Changed by Facing the Change!!! Go ahead with Confidence. Life is Yours.
Have a Great Day👍💐
_*`Ⓜ️ohan Raj A`*_
_*`SM Money Flow`*_
#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #ஆன்மீக #திருமுறை #பன்னிரு திருமுறை
*"திருமுறை ஓதாய் திருமுறையே தாய்"*
தினம் ஒரு திருமுறை அறிவோம் 🙏
*பதினோராம் திருமுறை*
*பதினோராம் திருமுறை என்பது காரைக்கால் அம்மையார், நம்பியாண்டார் நம்பி உட்பட 12 பன்னிரு சைவ அடியவர்கள் பாடிய 40 பிரபந்தங்களின் (சிற்றிலக்கியங்கள்) தொகுப்பாகும். இது "சைவப் பிரபந்த மாலை" என்றும் அழைக்கப்படுகிறது.*
*பதினோராம் திருமுறை ஆசிரியர்கள் (12 பேர்)* :
*1 திரு ஆலவாய் உடையார்
2 காரைக்கால் அம்மையார்
3 ஐயடிகள் காடவர்கோன் நாயனார்
4 சேரமான் பெருமாள் நாயனார்
5 நக்கீரதேவ நாயனார்
6 கல்லாடதேவ நாயனார்
7 கபிலதேவ நாயனார்
8 பரணதேவ நாயனார்
9 இளம்பெருமான் அடிகள்
10 அதிராவடிகள்
11 பட்டினத்து அடிகள்
12 நம்பியாண்டார் நம்பி.*
*தொகுப்பாளர் : இத்திருமுறையைத் தொகுத்தவர் நம்பியாண்டார் நம்பி ஆவார்.*
*சிறப்பு : இத்திருமுறையில் விநாயகர் வழிபாடு மற்றும் அடியார் சிறப்புகள் இடம்பெற்றுள்ளன.*
*பொருளடக்கம் : திருஈங்கோய்மலை எழுபது, திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம், போற்றித் திருக்கலிவெண்பா, ஆளுடைய பிள்ளையார் திருவுலாமாலை போன்ற இலக்கியங்கள் இதில் உள்ளன.*
இறைவனின் திருநாமம் - சிவபெருமான்
இறைவி - உமையம்மை
அமைவிடம் : பொது
பதிகம் பற்றிய சுருக்கமான விளக்கம் :
*பதினோராம் திருமுறையில் இருந்து திருஆலங்காட்டு மூத்த திருப்பதிகம்2*
*காரைக்கால் அம்மையார் அருளிய திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகத்தின் "எட்டி இலவம்" எனத் தொடங்கும் இந்தளப் பண் பாடலாகும். திருவாலங்காட்டுச் சுடுகாட்டில் பேய்கள் சூழ, இறைவன் ஆடும் கூத்தை விவரிக்கும் இப்பதிகம், மயானத்தின் பயங்கர சூழலையும், அதில் ஆடும் இறைவனின் அழகையும் (குழகன்) காட்சிப்படுத்துகிறது.*
*மயானக் காட்சி : சுட்ட பிணங்கள் கிடக்கும் சுடுகாட்டில், எட்டி, இலவம், ஈகை, சூரை போன்ற செடி, கொடிகள் பரவி உள்ளன.*
*பேய்களின் செயல் : நிணம் உருகி நிலம் நனைக்க, நீண்ட பற்களையும் குழிந்த கண்களையும் உடைய பேய்கள், துணங்கை ஆடிக்கொண்டும், மயானத்தைச் சுற்றிலும் பார்த்துக் கொண்டும், சுட்ட பிணங்களை உண்டு களித்து மகிழ்கின்றன.*
*இறைவன் ஆடல் : இத்தகைய பயங்கரமான, துன்பம் தரும் சுடுகாட்டில், சிவபெருமான் (அழகன்) கையில் நெருப்பு ஏந்தி ஆடுகிறார்.*
*பதிக சிறப்பு : காரைக்கால் அம்மையார் பேய் வடிவம் பெற்ற பின் பாடிய முதல் இரண்டு பதிகங்களில் இதுவும் ஒன்று. இது 'இந்தளம்' பண்ணில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தளப் பதிகத்தின் மூலம், சிவம் அசுத்தமான இடத்திலும், பேய்கள் சூழவும், எல்லா இடங்களிலும் நிறைந்திருக்கும் பரம்பொருள் என்பதை அம்மையார் உணர்த்துகிறார்.*
பாடல் வரிகள் :
*திருஆலங்காட்டு மூத்த திருப்பதிகம்2*
எட்டி இலவம் ஈகை
சூரை காரை படர்ந்தெங்கும்
சுட்ட சுடலை சூழ்ந்த
கள்ளி சோர்ந்த குடர்கௌவப்
பட்ட பிணங்கள் பரந்த
காட்டிற் பறைபோல் விழிகட்பேய்
கொட்ட முழவங் கூளி
பாடக் குழகன் ஆடுமே.
நிணந்தான் உருகி நிலந்தான்
நனைப்ப நெடும்பற் குழிகட்பேய்
துணங்கை யெறிந்து சூழும்
நோக்கிச்சுடலை நவிழ்த் தெங்கும்
கணங்கள் கூடிப் பிணங்கள்
மாந்திக் களித்த மனத்தவாய்
அணங்கு காட்டில் அனல்கை
யேந்தி அழகன் ஆடுமே.
புட்கள் பொதுத்த புலால்வெண்
தலையைப் புறமே நரிகவ்வ
அட்கென் றழைப்ப ஆந்தை
வீச அருகே சிறுகூகை
உட்க விழிக்க ஊமன்
வெருட்ட ஓரி கதித்தெங்கும்
பிட்க நட்டம் பேணும்
இறைவன் பெயரும் பெருங்காடே.
செத்த பிணத்தைத் தெளியா
தொருபேய் சென்று விரல்சுட்டிக்
கத்தி உறுமிக் கனல்விட்
டெறிந்து கடக்கப் பாய்ந்துபோய்ப்
பத்தல் வயிற்றைப் பதைக்க
மோதிப் பலபேய் இரிந்தோடப்
பித்த வேடங் கொண்டு
நட்டம் பெருமான் ஆடுமே.
முள்ளி தீந்து முளரி
கருகி மூளை சொரிந்துக்குக்
கள்ளி வற்றி வெள்ளில்
பிறங்கு கடுவெங் காட்டுள்ளே
புள்ளி உழைமான் தோலொன்
றுடுத்துப் புலித்தோல் பியற்கிட்டுப்
பள்ளி யிடமும் அதுவே
ஆகப் பரமன் ஆடுமே.
வாளைக் கிளர வளைவாள்
எயிற்று வண்ணச் சிறுகூகை
மூளைத் தலையும் பிணமும்
விழுங்கி முரலும் முதுகாட்டில்
தாளிப் பனையின் இலைபோல்
மயிர்க்கட் டழல்வாய் அழல்கட்பேய்
கூளிக் கணங்கள் குழலோ
டியம்பக் குழகன் ஆடுமே.
நொந்திக் கிடந்த சுடலை
தடவி நுகரும் புழுக்கின்றிச்
சிந்தித் திருந்தங் குறங்குஞ்
சிறுபேய் சிரமப் படுகாட்டின்
முந்தி அமரர் முழவின்
ஒசை முறைமை வழுவாமே
அந்தி நிருத்தம் அனல்கை
யேந்தி அழகன் ஆடுமே.
வேய்கள் ஓங்கி வெண்முத்
துதிர வெடிகொள் சுடலையுள்
ஒயும் உருவில் உலறு
கூந்தல் அலறு பகுவாய
பேய்கள் கூடிப் பிணங்கள்
மாந்தி அணங்கும் பெருங்காட்டில்
மாயன் ஆட மலையான்
மகளும் மருண்டு நோக்குமே.
கடுவன் உகளுங் கழைசூழ்
பொதும்பிற் கழுகும் பேயுமாய்
இடுவெண் டலையும் ஈமப்
புகையும் எழுந்த பெருங்காட்டில்
கொடுவெண் மழுவும் பிறையுந்
ததும்பக் கொள்ளென் றிசைபாடப்
படுவெண் துடியும் பறையுங்
கறங்கப் பரமன் ஆடுமே.
குண்டை வயிற்றுக் குறிய
சிறிய நெடிய பிறங்கற்பேய்
இண்டு படர்ந்த இருள்சூழ்
மயானத் தெரிவாய் எயிற்றுப்பேய்
கொண்டு குழவி தடவி
வெருட்டிக் கொள்ளென் றிசைபாட
மிண்டி மிளிர்ந்த சடைகள்
தாழ விமலன் ஆடுமே.
சூடும் மதியம் சடைமேல்
உடையார் சுழல்வார் திருநட்டம்
ஆடும் அரவம் அரையில்
ஆர்த்த அடிகள் அருளாலே
காடு மலிந்த கனல்வாய்
எயிற்றுக் காரைக் காற்பேய்தன்
பாடல் பத்தும் பாடி
யாடப் பாவம் நாசமே.
திருச்சிற்றம்பலம் 🕉️🙏
ஓம் நமசிவாயம் 🕉️🙏
சிவாய நம ஓம் 🕉️🙏
நற்றுணையாவது நாதன் நாமம் நமச்சிவாயவே🕉️
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
#💪 தன்னம்பிக்கை #🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #ஆன்மீக
Good Morning🌞🙏
When we think
'NOT NOW...
success becomes 'NEVER'.
But if We develop attitude of
'WHY NOT NOW',
success will be 'YOURS'.
Think positive.... Be positive....
Have a Great Day 👍💐
_*`Ⓜ️ohan Raj A`*_
_*`SM Money Flow`*_
#💪 தன்னம்பிக்கை #🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #ஆன்மீக
Good Morning🌞🙏
A paper flying in air is due to its luck but
a bird is flying due to its effort.
So if luck is not with you, efforts are always there to support you.
Have a Great Day👍💐
_*`Ⓜ️ohan Raj A`*_
_*`SM Money Flow`*_
#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #ஆன்மீக #திருமுறை #பன்னிரு திருமுறை
*"திருமுறை ஓதாய் திருமுறையே தாய்"*
தினம் ஒரு திருமுறை அறிவோம் 🙏
*பதினோராம் திருமுறை*
*பதினோராம் திருமுறை என்பது காரைக்கால் அம்மையார், நம்பியாண்டார் நம்பி உட்பட 12 பன்னிரு சைவ அடியவர்கள் பாடிய 40 பிரபந்தங்களின் (சிற்றிலக்கியங்கள்) தொகுப்பாகும். இது "சைவப் பிரபந்த மாலை" என்றும் அழைக்கப்படுகிறது.*
*பதினோராம் திருமுறை ஆசிரியர்கள் (12 பேர்)* :
*1 திரு ஆலவாய் உடையார்
2 காரைக்கால் அம்மையார்
3 ஐயடிகள் காடவர்கோன் நாயனார்
4 சேரமான் பெருமாள் நாயனார்
5 நக்கீரதேவ நாயனார்
6 கல்லாடதேவ நாயனார்
7 கபிலதேவ நாயனார்
8 பரணதேவ நாயனார்
9 இளம்பெருமான் அடிகள்
10 அதிராவடிகள்
11 பட்டினத்து அடிகள்
12 நம்பியாண்டார் நம்பி.*
*தொகுப்பாளர் : இத்திருமுறையைத் தொகுத்தவர் நம்பியாண்டார் நம்பி ஆவார்.*
*சிறப்பு : இத்திருமுறையில் விநாயகர் வழிபாடு மற்றும் அடியார் சிறப்புகள் இடம்பெற்றுள்ளன.*
*பொருளடக்கம் : திருஈங்கோய்மலை எழுபது, திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம், போற்றித் திருக்கலிவெண்பா, ஆளுடைய பிள்ளையார் திருவுலாமாலை போன்ற இலக்கியங்கள் இதில் உள்ளன.*
இறைவனின் திருநாமம் - சிவபெருமான்
இறைவி - உமையம்மை
அமைவிடம் : பொது
பதிகம் பற்றிய சுருக்கமான விளக்கம் :
*பதினோராம் திருமுறையில் இருந்து திருமுகப் பாசுரம் திருஆலவாய் உடையார் (சிவபெருமானார்) பாணபத்திரருக்கு எழுதியனுப்பியதாகக் கூறப்படும் திருமுகப் பாசுரம்.*
பாடல் வரிகள் :
*திருமுகப் பாசுரம்*
மதிமலி புரிசை மாடக் கூடற்
பதிமிசை நிலவு பால்நிற வரிச்சிற கன்னம் பயில்பொழில் ஆல வாயில்
மன்னிய சிவன்யான் மொழிதரு மாற்றம்
பருவக் கொண்மூப் படியெனப் பாவலர்க் குரிமையின் உரிமையின் உதவி ஒளிதிகழ்
குருமா மதிபுரை குலவிய குடைக்கீழ்ச்
செருமா உகைக்குஞ் சேரலன் காண்க பண்பா லியாழ்பயில் பாண பத்திரன்
தன்போல் என்பால் அன்பன் தன்பால் காண்பது கருதிப் போந்தனன்
மாண்பொருள் கொடுத்து வரவிடுப் பதுவே.
திருச்சிற்றம்பலம் 🕉️🙏
ஓம் நமசிவாயம் 🕉️🙏
சிவாய நம ஓம் 🕉️🙏
நற்றுணையாவது நாதன் நாமம் நமச்சிவாயவே🕉️
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏


