
திருநீற்றுச் சுவடு
@193036147
நல்லதே நினை நல்லதே நடக்கும் திருச்சிற்றம்பலம்
மதுரை சித்திரை திருவிழா ஸ்பெஷல்🌹
மதுரை சித்திரை திருவிழா ஸ்பெஷல்..
🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏
*மீனாஷியும் மூக்குத்தியும்...!!!*
"அம்மாடி!! மீனாக்ஷி!! ராஜ உத்தரவு!! மடப்பள்ளில நிறைய நைவேத்யம் பண்ணனும்!! முடியல்லே!! சித்த தூங்கிக்கறேன்!! மறக்காத நேரத்துக்கு எழுப்பிடுடீ!! மறந்துடாதே" மீனலோசனையின் மீதுள்ள அதீதமான உரிமையால் ஶ்ரீநிவாஸர் தேவிக்கே உத்தரவிட்டு, மடப்பள்ளியை உள்பக்கமாய் தாழ் போட்டுக்கொண்டு உறங்கிப்போனார்.
தடதடவென சத்தம்!! "யார் மடப்பள்ளி கதவை இப்படி உடைக்கறது!!" கோபத்துடன் எழுந்த ஶ்ரீநிவாஸர் கதவைத் திறந்து பார்த்தால் ராஜ ஸேவகர்கள்!!
"என்னங்கானும்!! நீர் கதவை அடைச்சுண்டு உள்ள என்ன பண்றீர்!! காலத்துக்கு அம்பாளுக்கு நைவேத்யம் ஆக வேண்டாமா!! குருக்கள் காத்துண்ட்ருக்கார்!! நைவேத்யம் எடுத்துண்டு வாங்கோ!!" ராஜ ஸேவகர்களோடு வந்த பட்டரின் குரல்.
"ஐயோ!! மீனாக்ஷி!! கைவிட்டுட்டியேடீ!! எழுப்பி விடுன்னு சொன்னேனே!! ஒரு நைவேத்யமும் தயாராகலையே!! நான் என்ன பண்ணுவேன்!! அம்மா!! ராஜ தண்டனை தான் எனக்கு இன்னிக்கு!!" பயத்திலும் அதிர்ச்சியிலும் உறைந்தார் ஶ்ரீநிவாஸர்.
"நகருங்காணும்!!" பட்டரொடு நான்கைந்து பேர் நுழைந்தனர் உள்ளே!!
"ஆஹா!! சக்கரைப் பொங்கல்!! தேங்காய் சாதம்!! புளியஞ்சாதம்!! எலுமிச்சை சாதம்!! போளி!! வடை!! பால் பாயசம்!! ஒன்னு பாக்கியில்லையே ஓய்!! இத்தனையும் தனியாவா பண்ணேள்!! ஒன் சிஷ்யாள்ல்லாம் அண்ணா கதவை சாத்திண்டார்!! எப்படி திறக்கறதுன்னு தெரியல்லேன்னு புலம்பிண்ட்ருந்தாளே!! " சொன்னவரின் கண்கள் சர்க்கரை பொங்கலிலும், போளியிலுமே இருந்தது.
மீனாக்ஷிக்கு நைவேத்யம் ஆனதும் ஸோமசுந்தரன் இதை சாப்டறானோ இல்லையோ, நாம சாப்டுடனும் அவர் மனது துடித்துக் கொண்டிருந்தது.
ஶ்ரீநிவாஸருக்கு ஒரே குழப்பம்!! "என்னதிது!! நாம தான் எழுந்துக்கவே இல்லையே!! யார் இதெல்லாம் பண்ணிருப்பா!!" நிகழ்வின் ப்ரமிப்பில் ஶ்ரீநிவாஸர் விலகவில்லை.
"உம் கைக்கு தங்க மோதரம் போடனும் ஒய்!! வாரும்!! மீனாக்ஷிக்கு தீபாராதனை ஆகப்போறது!! பார்ப்போம்!!" எல்லோரும் சிவராஜமாதங்கியின் ஸந்நிதிக்கு விரைந்தனர்.
குருக்கள் அம்பாளுக்கு நைவேத்யம் செய்து பின் தீபாராதனைக்கு திரையை விலக்கினார்.
"ஐயோ!! மாணிக்க மூக்குத்தி காணுமே!! அம்மா!! மீனாக்ஷி!! என்னடி சோதனை இது!!" குருக்களின் கதறல் மீனாக்ஷி கோவிலுக்கு வெளி வரை எதிரொலித்தது.
மீனலோசனையின் அழகையே மெருகூட்டும் மூக்குத்தி தொலைந்த துக்கம் ராஜாவிற்கும், மற்ற அனைவருக்கும்!! ஶ்ரீநிவாஸருக்கோ நடப்பதைக் கண்டு பயம்!! அபசாரம் நிகழ்ந்ததோ என்று!!
அசரீரி கேட்டது
"அஞ்சற்க!! என் பிள்ளை ஶ்ரீநிவாஸன் சரீர களைப்பால் என்னை எழுப்பிவிடச் சொல்லி உறங்கிப்போனான்!! காலத்தில் எழுப்பிடத் தான் நானே சென்றேன்!! அயர்ந்து அவன் உறங்குவதைக் கண்ட நான் அவனை எழுப்ப மனமில்லாது மடப்பள்ளிக்குள் சென்றேன். துளி வெளிச்சமும் இல்லாத இம்மடப்பள்ளியில் சமைப்பதற்கு வெளிச்சம் வேண்டுமே என்று எனது மூக்குத்தியை கழற்றி வைத்து, அதன் ஒளியில் நானே எனது நைவேத்யங்களை சமைத்தேன்!! குழந்தை உறங்குவதைக் கண்ட தாய் அதனை எழுப்புவாளோ!! அவனால் செய்ய வேண்டிய பணி என்னால் முடிக்கப்பட்டது!! மடப்பள்ளிக்கு சென்று பாருங்கள் !! மூக்குத்தி இருக்கும்!!" சட்டென நின்றது அசரீரீ
நடப்பது கனவா நினைவா என யோசிப்பதற்க்குள் மீனாக்ஷி மூக்குத்தி மடப்பள்ளியிலிருந்து வந்தது.
"அம்மா!! மீனாக்ஷி!!" ஶ்ரீநிவாஸர் கண்களில் ஜலம் பெருக கதறி மீனாம்பாளின் பாதத்தில் விழுந்தார். "அம்மா!! அம்மா!!ன்னு ஸதா கூப்பிட்டதற்கு நீயே எனக்காக நைவேத்யம் சமைச்சிருக்கியே!! தாயே!! நான் என்ன பாக்யம் பண்ணேன்!!" கண்ணீர் கண்களை மறைக்க கதறினார் ஶ்ரீநிவாஸர்.
"தாயே!! மீனாக்ஷி!! தாயே!! மீனாக்ஷி!!" லக்ஷக்கணக்கான ஜனங்கள் நடந்த அதிசயத்தைக் கண்டு திரண்டனர் கோவிலில்!!
ராஜனும் அமைச்சரும் ஶ்ரீநிவாஸரை ஸாஷ்டாங்கமாய் நமஸ்கரித்தனர் "ஸ்வாமீ!! நீரே மீனாக்ஷி!! மீனாக்ஷியே நீங்க!!" வேறொன்றும் சொல்லத் தோணவில்லை யார்க்கும்!!
"மீனாக்ஷி!! மீனாக்ஷி!!" திக்கெட்டும் அம்மையின் நாமம் ஒலித்தது.
ராஜராஜேச்வரியான மாதங்கிக்கு தீபாராதனை காட்டப்பட்டது.
"பாகம் செய்து என் நாவை பாடவும் செய்தாய் தாயே
ஊகமிலார்க்கு இன்னும் உதவினாய் சோகந்நீர்
நாதநலம் நாட்டுகின்ற நான்மறையாம் தண்டை சேர்
பாதநிழல் யான் தங்கப்பண்"
ஶ்ரீநிவாஸரின் நா பாடத்தொடங்கியது!! ஆம் கல்வியறிவு இல்லாத ஶ்ரீநிவாஸர் கவிஶ்ரீநிவாஸர் ஆனார்.
காமாக்ஷி பட்டாரிகை மூககவிக்கருளியது போல், அகிலாண்டநாயகி காளமேகத்திற்கு அருளியது போல், மீனாக்ஷம்மை ஶ்ரீநிவாஸர்க்கு அருளி விட்டாள்.
படிப்பறிவில்லா ஶ்ரீநிவாஸர் பராசக்தி கடாக்ஷத்தால் கவிமாரி பொழிந்தார்.
"மீனாக்ஷி!! மீனாக்ஷி!!" நாமம் ஒன்று போதாதோ!! மோக்ஷமே கைமேல்!!
தேவிசரணம்..
🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏 #🦚🦚🦚ஓம் முருக 🦚🦚🦚 #முருகன் ஸ்டேட்டஸ் #முருகன் வீடியோஸ்#முருக கடவுள் #பக்தி வீடியோஸ் # #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏
#🖌பக்தி ஓவியம்🎨🙏 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #முருகன் ஸ்டேட்டஸ் #முருகன் வீடியோஸ்#முருக கடவுள் #பக்தி வீடியோஸ் ##🦚🦚🦚ஓம் முருக 🦚🦚🦚 Krishna
Good morning
#🦚🦚🦚ஓம் முருக 🦚🦚🦚 #முருகன் ஸ்டேட்டஸ் #முருகன் வீடியோஸ்#முருக கடவுள் #பக்தி வீடியோஸ் ##திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🖌பக்தி ஓவியம்🎨🙏 தரிசனம் என்றும் கோடி புண்ணியம் தருமே...!
அருள்மிகு ஸ்ரீ மோகநாயகி , மேகலாம்பிகை தாயார் உடனுறை ஸ்ரீ ஆதிமூலேஸ்வரர் திருக்கோயில்.
திருப்பாலத்துறை.
திருப்பாலத்துறை அஞ்சல்.
வழி : திருவானைக்காவல்.
திருச்சி வட்டம்.
திருச்சி மாவட்டம்.
வருடத்தில் ஒரு நாள்*
அக்ஷய திரிதியை
அன்று மட்டுமே*
நடைபெறும் கும்பகோணம் 12 கருட சேவைகள் மஹா தரிசனம்* ஓம் நமோ நாராயணா. 20.4.26 #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #முருகன் ஸ்டேட்டஸ் #முருகன் வீடியோஸ்#முருக கடவுள் #பக்தி வீடியோஸ் # #🦚🦚🦚ஓம் முருக 🦚🦚🦚
#திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #good morning #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #🖌பக்தி ஓவியம்🎨🙏 மைந்தன் ஸ்ரீ ஆஞ்சநேயர் பகவானின் இரவு நேர தரிசனம். Namakkal. 20.4.26
#🖌பக்தி ஓவியம்🎨🙏 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #good morning #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 சத்தமாகச் சொல்லு!"*
மகாபெரியவர் திருத்தல யாத்திரைகள் செய்து கொண்டிருந்த காலகட்டம் அது.
அந்த சமயத்தில் ஆந்திர மாநிலத்தில் ஓரிடத்தில் சில நாட்கள் முகாமிட்டிருந்தார் அவர். அந்த மாதிரியான சமயங்களில் உபன்யாசம் மாதிரியான சொற்பொழிவுகள் போன்றவை நடப்பது வழக்கம். அந்த மாதிரி ஒருநாள், மகாபெரியவர் முன்னிலையில் ராமாயண உபன்யாசம் நடத்தினார் ஒரு பண்டிதர். மிக அழகாக எளிமையாக ராம காவியத்தை அவர் சொன்னதை மகாபெரியவர் ரொம்பவே ரசித்துப் பாராட்டினார்.
பெரியவரின் பாராட்டால் நெகிழ்ந்துபோன உபன்யாசகர், நெகிழ்வோடு மகானை நமஸ்கரித்தார். அப்போது, "நீ இப்படி உபன்யாசம் செய்வது மட்டுமல்லாமல், இன்னொரு உபகாரமும் முன்பு செய்து கொண்டு இருந்தாயே, அதை இங்கேயும் செய்யலாமே" என்றார் மகான்.
அந்த உபன்யாசகர், தான் நிகழ்ச்சி நடத்தப் போகும்போது, சின்னச் சின்னதாக சில நோட்டுகளை கையோடு கொண்டு செல்வார். உபன்யாச நிகழ்ச்சி முடிந்ததும், அந்த நோட்டுகளை அங்கே இருக்கும் சிறுவர் சிறுமிகளிடம் தந்து ஸ்ரீராமஜயம் எழுதச் சொல்வார். அனால் கொஞ்சநாளாக அவருக்கு ஒரு விரக்தி இருந்தது. ஸ்ரீராமஜயம் எழுதச் சொல்லி நோட்டுகளை தருகிறோம். ஆனால், அவர்கள் எழுதுகிறார்களா இல்லையா? என்பதே தெரியாது. அதோடு, இப்படி எழுதச் சொல்வதால் என்ன பிரயோஜனம் என்ற விரக்திதான் அது.
மகாபெரியவர் எப்படியோ அதைத் தெரிந்து கொண்டு சொல்லவும், அந்த உபன்யாசகருக்கு ஆச்சரியம்! மகானே சொல்லிவிட்டதால், ஸ்ரீராமஜயம் நோட்டுகளை வழக்கத்தைவிட நிறையவே குழந்தைகளுக்குக் கொடுத்தார்.
குழந்தைகளும் போட்டி போட்டுக்கொண்டு வாங்கிக் கொள்ள, "எல்லோரும் நாளைக்கு இதே நேரத்துக்குள் அந்த நோட்டு முழுக்க ஸ்ரீராமஜயம் எழுதிக் கொண்டு வந்து என்கிட்டே தரணும்!" சொன்னார், மகான்.
மறுநாள் எல்லாக் குழந்தைகளுமே ஸ்ரீராமஜயம் எழுதி முடித்த நோட்டுகளுடன் வந்து விட்டார்கள்.
அன்றைக்கும் உபன்யாசம் உண்டு என்பதால், உபன்யாசகரும் வந்திருந்தார்.
குழந்தைகள் வரிசையாக நின்று ஒவ்வொருவராக ஸ்ரீராமஜயம் நோட்டை பெரியவரிடம் சமர்ப்பிக்க, கல்கண்டு பிரசாதமும் வெள்ளிக்காசும் கொடுத்து ஆசிர்வதித்த பெரியவர், குறிப்பாக ஒரு பையன் வந்து நோட்டைத் தன்னிடம் சமர்ப்பித்ததும் அவனை ஆதூரத்துடன் உற்றுப் பார்த்தார்.
"நோட்டு முழுக்க ஸ்ரீராமஜயம் எழுதியிருக்கியே, எங்கே ஸ்ரீராமஜயம்னு உரக்கச் சொல்லு பார்ப்போம்" என்று சொல்ல, அங்கே திடீரென்று அமைதி நிலவியது.
நோட்டினைத் தந்த சிறுவன் மிரள மிரள விழிக்க, "உன்னைத்தான் சொல்றேன். ஸ்ரீராமஜயம் சொல்லு!" மறுபடியும் சொன்னார், மகான்.
"பெரியவா...அவனால பேச முடியாது....!" கூட்டத்தில் இருந்த இன்னொரு சிறுவன் சொல்ல, அங்கே திடீரென்று ஒரு சலசலப்பு எழுந்தது.
சட்டென்று கையைச் சொடுக்கிய மகான், "கொஞ்சம் எல்லோரும் அமைதியா இருங்கோ... அந்தப் பையன் ஸ்ரீராமஜயம் சொல்லட்டும்!" கொஞ்சம் அழுத்தமாகவே சொல்ல, அங்கே பேரமைதி நிலவிய அந்த நிலையில்தான் நடந்தது அந்த அதிசயம்.
எந்தப் பையன் பிறவியிலேயே பேசும் திறன் அற்று இருந்தானோ அவன், மகாபெரியவர் முன்னிலையில், மெதுவாகத் திக்கித் திணறி..."ஸ்ஸ்...ரீ...ரா..ஆ.ஆ..ஆ..ம.. ஜ்..ஜய்ய்யம்ம்!" என்று மூன்றுமுறை தடுமாறிச் சொல்லிவிட்டு, பிறகு மளமளவென்று ஸ்ரீராமஜயம், ஸ்ரீராமஜயம் என்று உரக்கச் சொல்லத் தொடங்கினான்.
ஆமாம்..அவனுக்குப் பேசும் திறன் வந்துவிட்டது. அதிசயித்துப் போனவர்கள் பெரியவரின் அனுகிரஹத்தை நினைத்து ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர என்று குரல் எழுப்ப, மெதுவாகக் கையை உயர்த்திய மகான், கொஞ்சம் தள்ளி நின்று கொண்டிருந்த உபன்யாசகரை அழைத்தார்.
"நான் எதுவும் பண்ணலை ...எல்லாம் இவரால வந்தது. இவர் ஸ்ரீராமஜயம் எழுதச் சொல்லி நோட்டு கொடுத்தார் இல்லையா? ஸ்ரீராமஜயம் எழுதின புண்ணியம் இவனுக்கு வாக்கு வந்திருக்கு..! அதனால, இந்தப் பெருமை இவருக்குத்தான்!" உபன்யாசகரைச் சுட்டிக்காட்டி மகாபெரியவர் சொல்ல, அப்படியே நெக்குருகி நெகிழ்ந்து போனார் உபன்யாசகர்.
ஸ்ரீராமஜயம் எழுதச் சொல்கிறோமே, அதனால் என்ன பயன் என்று உபன்யாசகர் நினைத்தது மகானுக்கு எப்படித் தெரிந்தது? பேசாமல் இருந்த சிறுவன் பேசியது எப்படி? எல்லாம் அந்த மகானுக்கு மட்டுமே தெரிந்த தெய்வ ரகசியம்!
ஜய ஜய சங்கர! ஹர ஹர சங்கர! காஞ்சி சங்கர! காமகோடி சங்கர!
மகாபெரியவா சரணம்!! குருவே சரணம்!!🙏
மாவட்டம் திருத்தங்கல், நின்ற நாராயண பெருமாள்: 5 தேவியருடன் பெருமாள் அருளும் அற்புதத் தலம்*🌹
ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்த தலங்கள் அனைத்துமே மிகவும் சிறப்புப் பெற்றவை. அத்தகைய தலங்களுக்குச் சென்று வந்தாலே வாழ்வில் திருப்பம் ஏற்படும். அப்படிப்பட்ட ஒருதலம் தான் திருத்தங்கள்.
பெருமாள் சயன கோலம், அமர்ந்த கோலம், நின்ற கோலம் என மூன்று திருக்கோலங்களையும் அருளும் தலமிது. திருத்தண்கால் எனப் பாசுரங்கள் பாடி மகிழ்ந்த தலமிது. பூதத்தாழ்வாரும் திருமங்கையாழ்வாரும் இக்கோயிலை மங்களாசாசனம் செய்துள்ளனர்.
சிவகாசியில் இருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் இருக்கிறது திருத்தங்கல். ஊரின் மத்தியில் சிறிய மலை மேல் அமைந்துள்ளது ஸ்ரீநின்ற நாராயணப் பெருமாள் கோயில். அருகே கருநெல்லிநாதர் என்கிற சிவாலயமும் அமைந்துள்ளது. இந்த மலையின் மேலே பழநி ஆண்டவர் கோயில் கொண்டுள்ளார்.
நின்ற நாராயணப் பெருமாளுக்குத் துணையாக ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி, ஜாம்பவதி ஆகிய நான்கு நாச்சியார்களும், உடன் பேரன் அநிருத்தன் அவரின் மனைவி உஷை, அருணன், மார்க்கண்டேயர், பிருகு முனிவர் ஆகியோர் கருவறையில் காட்சி தருகிறார்கள்.
இப்படி ஒரு காட்சியை வேறு தலங்களில் காண்பது அரிது. இத்தலம் ஒன்றுக்கு நான்காக தேவியர்களுடன் பெருமாள் அருளுவதால்... இது கல்யாண வரமருளும் தலமாக உள்ளது. உற்சவராக செங்கமல நாச்சியார் உடனுறை திருத்தண்காலப்பன் அருளுகிறார்.
ஒருமுறை ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி மூவருக்கிடையே யார் சிறந்தவர் என்ற சர்ச்சை எழுந்தது. இதனால் மூவரும் பூலோகம் புறப்பட்டனர். இதில், ஸ்ரீதேவி முதலில் வந்து தங்கிய இடம் என்பதால் இது திருத்தங்கல் என்றானது. பிறகு, மற்ற தேவியரும் வந்து பெருமாளை சரண் அடைந்து இணைந்த இடம் இது.
இதனால் இங்கு வந்து வழிபட, பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர்வர், அவர்கள் பிணக்குகள் மாறி ஒற்றுமை கூடும் என்கிறார்கள். மேலும் இங்குதான் பெருமாள் ஜாம்பவதியை மணந்துகொண்டார் என்கிறது தலவரலாறு. திருமகளே செங்கமலத் தாயாராக இங்கு அவதரித்து பெருமாளை மணந்தார் என்றும் கூறுகின்றது.
மூலவர் சுதைத் திருமேனி என்பதால் இங்கே அவருக்குத் திருமஞ்சனம் கிடையாது. செங்கமலவல்லித் தாயாருக்கு மட்டும் தினந்தோறும் எண்ணெய்க் காப்பு திருமஞ்சனம் நடைபெறும். குடைவரைக் கோவிலாக அமைந்துள்ள இந்த அற்புதத் திவ்யதேசத்தில் ரங்கநாதர், கருடாழ்வார், ஆஞ்சநேயர், ராமாநுஜர், சக்கரத்தாழ்வார், ஆண்டாள், நாகமுனிவர் சந்நிதிகளும் உள்ளன.
செங்கமலத் தாயார் வேறெங்கும் காண முடியாத அளவுக்கு நின்ற திருக்கோலத்தில் தனிச் சந்நிதியில் ஆறடி உயரத்தில் எழுந்தருளி இருக்கிறார். வந்தவருக்கு எல்லாம் மங்கல வாழ்வு அருளி வாழ்வித்துவருகிறார். பிரம்மாண்ட புராணத்தின் ஷேத்திர காண்டத்தில் எட்டு அத்தியாயங்களில் இந்தத் தலத்தின் விசேஷம் கூறப்பட்டுள்ளது.
புரூரவ மன்னன் இங்கே பெருமாளை சேவித்து வரம் பெற்றார். மன்னனது வேண்டுதலால்தான் துவாரகையில் நடக்க வேண்டிய அநிருத்தன்-உஷை திருமணம் இங்கு நடந்ததாம். கருடாழ்வார் இங்கு விசேஷமாக நான்கு திருக்கரங்களுடன் உள்ளார்.
முன் கைகள் வணங்கியும், பின் கைகளில் அமிர்த கலசமும், நாகமும் உள்ளன. இதனால் சர்ப்ப தோஷங்களுக்கும் ராகுகேது தோஷங்களுக்கும் பரிகாரம் செய்ய சிறந்த கோயிலிது என்கிறார்கள்.
பாஸ்கர, பாபநாச தீர்த்தங்களும், அர்ச்சுனா நதியும் தல தீர்த்தமாக உள்ளன. விசேஷமான தேவச்சந்திர விமானம் அமைந்துள்ளது.
மார்கழி மாதம் முழுக்க இங்கு விசேஷ விழாக்கள் நடைபெறும். அதேபோல ஆனி மாத பிரம்மோற்சவமும் இங்கு வெகு விமர்சை. 9-ம் நாள் தேரோட்டம், 5-ம் நாள் மங்களாசாசனம், கருடசேவை கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.
இவ்விழாவில் உற்சவர் திருத்தங்கலாப்பன், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்குச் சென்று அங்கு திருமாலையைப் பெறுவது சிறப்பு. இந்தத் திருக்கோயிலில் அனைத்து திவ்யதேசங்களின் திருமால் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.
செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் செங்கமலத்தாயாருக்குப் பட்டு சாத்தி, வழிபட்டால் திருமண வாழ்க்கையில் ஏற்படும் அனைத்துப் பிரச்னைகளும் முடிவுக்கு வரும்.
தாயாரின் விக்கிரகம் பிரமாண்டம் என்பதால், ஒன்பது கஜ புடவை வாங்கி வர வேண்டும் என்பது முக்கியம். புடவை சாத்தி வழிபட்டால் எந்தக் கோரிக்கையையும் நாற்பத்தெட்டே நாள்களில் இந்தத் தாயார் நிறைவேற்றி விடுவாள் என்கிறார்கள் பக்தர்கள்.
இத்தகைய சிறப்புகளை உடைய பெருமாள் தலத்துக்கு ஒருமுறை சென்று வாருங்கள். வாழ்க்கை வளமாகும், நலமாகும்.🌹 #🦚🦚🦚ஓம் முருக 🦚🦚🦚 #🙏ஓம் முருக சரணம்🙏 #முருகன் ஸ்டேட்டஸ் #முருகன் வீடியோஸ்#முருக கடவுள் #பக்தி வீடியோஸ் # #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🕉️ஓம் முருகா
#🖌பக்தி ஓவியம்🎨🙏 #🕉️ஓம் முருகா #முருகன் ஸ்டேட்டஸ் #முருகன் வீடியோஸ்#முருக கடவுள் #பக்தி வீடியோஸ் ##🙏ஓம் முருக சரணம்🙏 #🦚🦚🦚ஓம் முருக 🦚🦚🦚 தரிசனம்..*
#🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #good morning #💪Motivational Quotes #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #👌இந்த நாள் நல்ல நாள்🤝
#🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🖌பக்தி ஓவியம்🎨🙏 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 நேர அலங்காரத்தில் மேச்சேரி ஸ்ரீ பத்ரகாளியம்மன் தரிசனம்...🙏🙏🙏🙏 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞










![🥰அன்புடன் காலை வணக்கம்🌞 - NEWS18| தமிழ்நாடு 21-04-2026 ] INDIA 0 ५ COIIIIISSION ( ELECTION 0 இன்று (ப்21) மாலை 6 மணிக்கு மேல் வாக்காளர்கள் அல்லாதோர் தொகுதியில் இருக்கக்கூபாது அல்லது மீறினால் 2 ஆண்டுகள் சிறை அபராதம் 8608| இரண்டும் விதிக்கப்படும் மணியுடன் பரப்புரைநிறைவடையும் இன்று மாலை 6 நிலையில் அதற்குமேல் பொதுக்கூட்ம் ஊர்வலம் நடத்தவோ, அதில் பங்கேற்கவோ கூபாது தேர்தல் ஆணையம் நியூஸ்18 தமிழ்நாடு NEWS18 TAMILNADU NEWS18| தமிழ்நாடு 21-04-2026 ] INDIA 0 ५ COIIIIISSION ( ELECTION 0 இன்று (ப்21) மாலை 6 மணிக்கு மேல் வாக்காளர்கள் அல்லாதோர் தொகுதியில் இருக்கக்கூபாது அல்லது மீறினால் 2 ஆண்டுகள் சிறை அபராதம் 8608| இரண்டும் விதிக்கப்படும் மணியுடன் பரப்புரைநிறைவடையும் இன்று மாலை 6 நிலையில் அதற்குமேல் பொதுக்கூட்ம் ஊர்வலம் நடத்தவோ, அதில் பங்கேற்கவோ கூபாது தேர்தல் ஆணையம் நியூஸ்18 தமிழ்நாடு NEWS18 TAMILNADU - ShareChat 🥰அன்புடன் காலை வணக்கம்🌞 - NEWS18| தமிழ்நாடு 21-04-2026 ] INDIA 0 ५ COIIIIISSION ( ELECTION 0 இன்று (ப்21) மாலை 6 மணிக்கு மேல் வாக்காளர்கள் அல்லாதோர் தொகுதியில் இருக்கக்கூபாது அல்லது மீறினால் 2 ஆண்டுகள் சிறை அபராதம் 8608| இரண்டும் விதிக்கப்படும் மணியுடன் பரப்புரைநிறைவடையும் இன்று மாலை 6 நிலையில் அதற்குமேல் பொதுக்கூட்ம் ஊர்வலம் நடத்தவோ, அதில் பங்கேற்கவோ கூபாது தேர்தல் ஆணையம் நியூஸ்18 தமிழ்நாடு NEWS18 TAMILNADU NEWS18| தமிழ்நாடு 21-04-2026 ] INDIA 0 ५ COIIIIISSION ( ELECTION 0 இன்று (ப்21) மாலை 6 மணிக்கு மேல் வாக்காளர்கள் அல்லாதோர் தொகுதியில் இருக்கக்கூபாது அல்லது மீறினால் 2 ஆண்டுகள் சிறை அபராதம் 8608| இரண்டும் விதிக்கப்படும் மணியுடன் பரப்புரைநிறைவடையும் இன்று மாலை 6 நிலையில் அதற்குமேல் பொதுக்கூட்ம் ஊர்வலம் நடத்தவோ, அதில் பங்கேற்கவோ கூபாது தேர்தல் ஆணையம் நியூஸ்18 தமிழ்நாடு NEWS18 TAMILNADU - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_633101_13725b11_1776745631898_sc.jpg?tenant=sc&referrer=user-profile-service%2FrequestType50&f=898_sc.jpg)
