
திருநீற்றுச் சுவடு
@193036147
நல்லதே நினை நல்லதே நடக்கும் திருச்சிற்றம்பலம்
#தலைவர் விஜய் (TVK) ##TVK Vijay #தமிழக வெற்றி கழகம் (TVK) #அரசியல் TVK... #Tvk Thalapathy vijay
#🙏நமசிவாய ஓம்✨ #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏🏾சனி பகவான் #💥ஓம் ந ம சி வா ய💥 #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶
#🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🖌பக்தி ஓவியம்🎨🙏 #💥ஓம் ந ம சி வா ய💥 #🙏நமசிவாய ஓம்✨ #🙏🏾சனி பகவான்
#🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #💥ஓம் ந ம சி வா ய💥 #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 *கோவில்*
#good morning #motivational #motivation #✍️Quotes #🥰அன்புடன் காலை வணக்கம்🌞
#🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #🔍ஜோதிட உலகம் 🌍 #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #💥ஓம் ந ம சி வா ய💥 இன்று உங்கள் இதயத்தை கவலைகளால் அல்ல…
ஸ்ரீமன் நாராயணன் நாமத்தால் நிரப்புங்கள்…
✨ எல்லா விஷயங்களும் உடனே மாற வேண்டியதில்லை…
சில மாற்றங்கள் அமைதியாக நடக்கின்றன…
✨ இன்று நீங்கள் பார்க்காத பல நன்மைகள்…
ஏற்கனவே உங்கள் வாழ்க்கைக்காக தயாராகிக் கொண்டிருக்கின்றன…
💫 நம்பிக்கை வைத்த மனம் ஒருபோதும் வெறுமையாகாது…
அதில் அருள் மெதுவாக நிரம்பிக் கொண்டே இருக்கும்…
🌼 இன்று அமைதியாக சிரித்து முன்னேறுங்கள்…
அவர் உங்கள் பாதையை கவனித்து கொண்டிருக்கிறார்…
🕉️ “ஓம் நமோ நாராயணாய” என்று மனதார ஜபியுங்கள்…
அவர் அருள் உங்கள் நாளை இனிமையாக்கும்! 🙏✨
#🔍ஜோதிட உலகம் 🌍 #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #🙏நமது கலாச்சாரம் #motivational உபாசனை பற்றி -1
ஏதேனும் ஒரு தேவதையைத் தொடர்ந்து உபாசிப்பதன் மூலம் உயர்ந்த வாழ்வை உறுதியாய்ப் பெறலாம்.
அதனால்தான் உயர்ந்த வாழ்வளிக்கும் உபாசனை சித்தி யோகம் என்று சொல்கிறோம்.
மனதை ஒருமுகப் படுத்தினால் ஏராளமான சக்திகளைப் பெற முடியும். அதற்கு உதவி செய்வது உபாசனை.
யார் ஒருவர் குரு மூலம் சரியாக உபாசனை செய்கிறாரோ அவர் அஷ்டமா சித்திகளை அடைவதோடல்லமல் அனைத்துப் பிரச்சினைகளில் இருந்தும் விடுதலை பெறுவார்.
ஒருவரது ஜாதகத்தின் மூலம் உரிய தெய்வத்தைத் தேர்ந்தெடுப்பதைக் காட்டிலும் சித்தர்கள் எழுதி வைத்த நாடி மூலமோ அல்லது ஜீவ நாடி மூலமோ உரிய தெய்வத்தைத் தேர்ந்தெடுப்பது உடனடி பலனைத் தருவதை அனுபவத்தில் பார்க்க முடிகிறது.
ஒர் உபாயத்தைப் பயன்படுத்தி உபாசனையால் ஏற்படும் அதிர்வுகளை எதேனும் ஒரு பொருளில் சேமித்து வைத்து அதை மற்றவர்களும் உப்யோகப் படுத்த வேண்டும் எனத் தீர்மானித்த சித்தர்கள் அருள் சாதனங்களை அனுபவத்தில் உபயோகம் செய்து பார்த்து அதை அனைவரும் கடைபிடிக்கும்படி உலகத்திற்கு அறிமுகம் செய்து வைத்தனர்.
விபூதி, எலுமிச்சை, ருத்திராட்சம், சங்கு, யந்திரங்கள், வெற்றிலை, தர்ப்பைப்புல், போன்றவை அத்தகைய அருள் சாதனங்கள் .
நாம் மந்திரங்களைத் தொடர்ந்து ஜபம் செய்யச் செய்ய அதன் அதிர்வுகள் மேற்குறிப்பிட்ட பொருட்களில் பதிந்து அதன் சக்திகளை வெளியிடும் அமைப்பில் இறைவன் அவற்றைப் படைத்துள்ளான்.
அருளை வாங்கி வெளியிடும் தன்மை உடையதால் அவை அருள் சாதனங்கள் எனப் பெயர் பெறுகின்றன.
ஜபம் செய்யும் போது வருகின்ற அருள் நிலையை அப்படியே தேக்கி வைக்க அருள்சாதனங்கள் உதவும்.
மனதை இறைவனிடம் வைத்து, மனதில் இறைவனின் உருவத்தையே பதித்து, மந்திர ஜபம் செய்வது உபாசனை ஆகும்
இதில் ஈடுபடுபவர்கள் தனிமையான இடத்தில் அமர்ந்து செய்வது சிறப்பு.
ஜன சந்தடியோ, வேறு ஏதாவது சப்தமோ இருக்கக் கூடாது.
ஏதேனும் ஒரு ஆசனத்தின் மீது அமர்ந்து தான் தியானம் செய்ய வேண்டும்.
பொதுவாக ஆசனமானது நமது ஆற்றல்களை புவி ஈர்ப்ப்பு விசை ஈர்த்துக் கொள்ளாமல் தடை செய்கிறது. எனவே எந்த ஒரு பூஜை, அல்லது உபாசனை ஆனாலும் வெறும் தரையில் அமர்ந்து செய்யக்கூடாது.
ஜபம் செய்ய நதிக்கரை, மலை, புனித தலங்கள், சுத்தமான காற்று வீசும் இடங்கள் சிறந்தவை.
பசுத் தொழுவத்தில் செய்யப்படும் ஜபம் பல மடங்கு பலன் தருகிறது. இதை அனுபவபூர்வமக உணரலாம்.
ஜபம் செய்ய ருத்ராட்சம், மணிமாலை, தாமரை மாலை, பவழம் போன்ற மாலைகளும், முத்து மாலைகளும் உபயோகப்படுகின்றன.
முக்கியமாக, மனம் இறைவனிடம் இருக்க வேண்டும். அவ்வாறு இல்லமல் வெறும் மாலையை மட்டும் உருட்டிக் கொண்டு, உட்கார்ந்தபடி வேறு ஏதெனும் எண்ணிக் கொண்டிருந்தால், அது தியானமாகாது.
இத்தனை விஷயங்களை கவனித்து ஜபம் செய்ய வேண்டும். ஆரம்பத்தில் மனம் அங்கும் இங்கும் அலை பாயும்.
குருவைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு மனம் தளராமல் ஜபம் செய்யச் செய்ய தாரணை சித்தியாகிறது.
கீழ்க்கானும் வழிமுறையைக் கடைபிடித்தால் உபாசனயில் ஓரளவு வெற்றி பெறலாம்.
1. உங்கள் உபாசனை தெய்வத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளவும்.
அதை ஜாதகம் மூலமோ அல்லது ஜீவ நாடி மூலமோ கண்டறிந்து கொள்ளவும். குரு மிக மிக அவசியம்.
குரு முறைப்படி உபாசிப்பதே மிக உயர்வானது. யாரை குருவாக எற்றுக் கொள்வது யாரிடம் தீட்சை பெறுவது என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.
உண்மையான ஆர்வம் இருப்பின் குரு உங்களைத் தேடி வருவார்.யார் உங்களது ஆத்மாவை எவர் கவருகிறாரோ அவரை குருவாக எற்றுக் கொள்ளலாம்.
ஜீவ சமாதி ஆகியுள்ளவர்களை அதில் நீங்கள் விருப்பப் படுபவரை முதலில் மானசீக குருவாகக் கொண்டு அவரிடமே ஒரு உயிருடன் உள்ள குருவைக் காண்பிக்கச் சொல்லுங்கள். நிச்சயம் நடக்கும்.
2. உபாசனைக்காக ஒரு நாளில் இரண்டு நேரங்களைத் தேர்வு செய்து கொள்ளுங்கள். உதாரணமாகக் காலை 5 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 7 மணி வரை .
முடிந்தவரை இதே நேரத்தில் தினமும் உபாசனையில் அமர வேண்டும்.
நேரத்தைப் பற்றிக் குறிப்பிடும் போது தீவிர சாதனை புரிய பிரம்ம முகூர்த்தத்தில் உபாசிப்பது விரைவான பலனைத் தரும். நடு நிசி பூஜையைத் தவிர்க்கவும்
3. வீட்டில்ஒரு குறிப்பிட்ட இடத்தை உபாசனைக்காகத் தேர்ந்தெடுங்கள்.
அது பூஜை அறையாகவோ, வேறு அமைதியான இடமாகவோ இருக்கலாம். பூஜை அறை இல்லையென்றால், இஷ்ட தெய்வத்தை வைப்பதற்கு ஒரு சிறு இடத்தை ஏற்படுத்திக் கொள்ளவும்.
4. அங்கு ஆசனத்தை விரித்து அதில் அமரவும். தலை, கழுத்து, மற்றும் முதுகெழும்பு நேராக இருக்கும் படி பார்த்துக் கொள்ளவும்.
கைகள் மடி மீது இருக்கட்டும். கண்களை மூடிக் கொள்ளவும். வெறும் தரையில் அமர்ந்து செய்யக்கூடாது.
5. உங்கள் மூச்சின் மீது கவனம் வையுங்கள். உங்கள் மூச்சு இயல்பானதாக இருக்கட்டும்.
மூச்சை மெதுவாக இழுத்து விடவும். பிரணாயாமம் செய்வது இன்னும் விரைவான பலன் தரும்.
6. மூச்சு சீரான பிறகு குருவிடம் உபதேசம் பெற்ற மந்திரத்தை மௌனமாக மனதிற்குள் சொல்ல ஆரம்பியுங்கள்.
ஆரம்பத்தில் அது சிரமமாகத் தோன்றுபவர்கள் சில நாட்களுக்கு மட்டும் வாய் விட்டே மெல்ல சொல்லலாம். ஆனால் சில நாட்கள் கழிந்த பின் மனதிற்குள் மௌனமாக உச்சரிக்க ஆரம்பித்து விட வேண்டும்.
7. உங்கள் உபாசனை தெய்வத்திடம் மனமுருகிப் பிரார்த்தனை செய்யவும். உங்கள் கோரிக்கை என்னவோ அதைப் பிரார்த்திக்கவும்.
இதற்கு சங்கல்பம் என்று பெயர். எவன் ஒருவன் சங்கல்பிக்கிறானோ அவன் சிந்திக்கிறான் பின்னர் செயல்படுகிறான் அதன் மூலம் சாதிக்கிறான் என்பதை நினைவில் கொள்ளவும்.
8. ஐந்து அல்லது பத்து நிமிடங்கள் உபாசனை தெய்வத்தைத் தியானிக்கவும்.
மனம் அங்கும் இங்கும் ஓடினாலும் அதை இழுத்து வந்து உங்கள் உபாசனை தெய்வத்திடம் வைராக்கியத்துடன் நிறுத்தவும்.
9. பின்பு குருவிடம் உபதேசம் பெற்ற மந்திரத்தை ஜபம் செய்யவும்.
குறைந்த பட்சம் 108 முறையாவது ஜபம் செய்ய வேண்டும். சிலர் அதிகமாக செய்ய விரும்பினால் அது 1008, 10008, 10008 ஆக இருக்கட்டும்.
10. உங்கள் முழு கவனமும் நீங்கள் மனதில் உச்சரிக்கும் அந்த மந்திரத்தின் மீதே இருக்கட்டும்.
11. எந்த ஒரு மந்திரமாக இருந்தாலும் ஒரு இலட்சம் முறை ஜபித்தால்தான் பலன் தர ஆரம்பிக்கும் என்பதை மறக்க வேண்டாம்.
12. தியானத்தை முடித்த பின்னர் ஓரிரு நிமிடங்கள் அமைதியாக அமர்ந்திருந்து பின்னர் எழுங்கள்
13. குருவிடம் அவ்வப்போது சத்-சங்கம் வைத்துக் கொள்ளவும்.
அது மேலும் உபாசனை சித்திக்கு வழி கொடுக்கும்.
#🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #🔍ஜோதிட உலகம் 🌍 #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #💥ஓம் ந ம சி வா ய💥 திருவடி - கருட பகவான் மந்திரங்கள், பலன்கள், வழிபாட்டு முறை* 🦅🙏
பெருமாளோட வாகனமான கருடனை "பெரிய திருவடி"ன்னு சொல்வாங்க. விஷ்ணு பக்தர்களுக்கு கருடன் ரொம்ப முக்கியம். ராகு-கேது தோஷம், விஷ பயம், வியாதிக்கு பெரிய வைத்தியர் கருடன் தான்.
---
_1. சக்தி வாய்ந்த கருட மந்திரங்கள்_
*A. மூல மந்திரம் - தினமும் சொல்ல வேண்டியது*
`ஓம் சுபர்ணாய வித்மஹே
கருடாய தீமஹி
தன்னோ கருட: ப்ரசோதயாத்`
*பலன்:* ஞானம், வீரம், ஆரோக்கியம் கிடைக்கும். தினமும் 108 முறை சொன்னா போதும்.
*B. கருட காயத்ரி மந்திரம்*
`ஓம் தத்புருஷாய வித்மஹே
ஸ்வர்ண பக்ஷாய தீமஹி
தன்னோ கருட: ப்ரசோதயாத்`
*பலன்:* ராகு-கேது தோஷம், நாக தோஷம், கால சர்ப தோஷம் போகும். வியாழன், ஞாயிறு அன்னிக்கு சிறப்பு.
*C. விஷ நாசன மந்திரம் - விஷம், பாம்பு பயத்துக்கு*
`ஓம் கருடாய வித்மஹே
விஷ ஹராய தீமஹி
தன்னோ கருட: ப்ரசோதயாத்`
*பலன்:* பாம்பு கடி, விஷ பயம், ஏவல், பில்லி சூனியம் போகும். பாம்பு பிடிக்கிறவங்க கூட இதை சொல்வாங்க.
*D. கருட தண்டகம் - முழு பலனுக்கு*
"வேதாந்த வேத்ய விபவோ ஹரி: ..." ஆரம்பிக்கும் 33 ஸ்லோகம் கொண்டது.
*பலன்:* எல்லா வியாதியும் தீரும், வாழ்வில் தடை போகும். 11, 21, 41 நாள் பாராயணம் செஞ்சா மிகப்பெரிய பலன்.
---
_2. பலன்கள் - ஏன் வணங்கணும்?_
1. *ராகு-கேது தோஷம் நீங்கும்* - கருடன் ராகு-கேதுவின் எதிரி. நாக தோஷம் உள்ளவங்க கருடனை வணங்கினா உடனே நிவாரணம்.
2. *விஷம், பாம்பு பயம் போகும்* - கருடன் பாம்புகளோட எதிரி. வீட்ல பாம்பு வராம இருக்க, பாம்பு கடி பயம் போக இவரை வணங்குவாங்க.
3. *ஆஸ்துமா, சுவாச நோய் குணம்* - கருடன் வாயுவோட அதிபதி. சுவாச கோளாறு, ஆஸ்துமா உள்ளவங்க கருட மந்திரம் சொன்னா நல்லது.
4. *வாகன விபத்து தவிர்க* - பெருமாள் கோவில்ல கருடனை வணங்கிட்டு போனா வாகன விபத்து வராதுன்னு நம்பிக்கை.
5. *ஏவல், பில்லி சூனியம் போகும்* - கருடனோட சக்தி எதிர்மறை சக்தியை அழிக்கும். திருஷ்டி, செய்வினை போகும்.
6. *வியாபார விருத்தி* - பெருமாள் கோவில்ல கருட சேவை பார்தா வியாபாரம் பெருகும்.
---
_3. வணங்க வேண்டிய முறைகள்_
*எப்போ வணங்கணும்:*
- *சுவாதி நட்சத்திரம்* - கருடனோட நட்சத்திரம். இந்த நாள்ல வணங்கினா ரொம்ப விசேஷம்.
- *ஞாயிறு, வியாழன்* - கருடனுக்கு உகந்த நாள்.
- *மாலை நேரம்* - 5-6 PM நல்லது.
- *பெருமாள் கோவில்ல கருட சேவை நாள்* - வைகுண்ட ஏகாதசி, கருட சேவை அன்னிக்கு மிஸ் பண்ணாதீங்க.
*எப்படி வணங்கணும்:*
*Step 1: சுத்தம்*
குளிச்சிட்டு வெள்ளை/மஞ்சள் வேட்டி சட்டை போட்டுக்கோங்க. கருடனுக்கு வெள்ளை பிடிக்கும்.
*Step 2: தீபம்*
நெய் தீபம் ஏத்துங்க. கருடனுக்கு நெய் தீபம் ரொம்ப பிடிக்கும்.
*Step 3: பூஜை பொருட்கள்*
- *துளசி மாலை* - பெருமாள் வாகனம், அதனால துளசி முக்கியம்
- *சர்கரை பொங்கல்* - நைவேத்தியம்
- *வெள்ளை மலர்* - அரளி, மல்லி
*Step 4: மந்திர ஜபம்*
மேலே சொன்ன கருட காயத்ரி மந்திரத்தை 108 முறை சொல்லுங்க. கையில ருத்ராட்ச மாலை வச்சிக்கோங்க.
*Step 5: வலம் வருதல்*
கருட சன்னதியை 11 முறை வலம் வாங்க. ஒவ்வொரு வலமும் ஒரு தோஷம் போகும்.
*வீட்ல வணங்குறவங்க:*
கருடன் படம் வச்சி மேலே சொன்ன மாதிரி தீபம் ஏத்தி மந்திரம் சொல்லுங்க. கிழக்கு முகமா வச்சி வணங்கணும்.
---
_4. முக்கிய கருட தலங்கள் தமிழ்நாட்டுல_
1. *திருப்புல்லாணி* - ராமநாதபுரம். இங்க கருடன் ராமருக்கு வழிகாட்டினார்.
2. *திருவல்லிக்கேணி பார்தசாரதி கோவில்* - சென்னை. பெரிய கருட சேவை பிரசித்தம்.
3. *நாமக்கல் நரசிம்மர் கோவில்* - கருடன் பெரிய சன்னதி.
4. *ஸ்ரீரங்கம்* - ரெங்கநாதர் கோவில்ல கருட சேவை ரொம்ப விசேஷம்.
---
*சுருக்கமா:* ராகு-கேது தோஷம், விஷ பயம், சுவாச நோய், வாகன பயம் இருந்தா *பெரிய திருவடி கருடனை* வணங்குங்க.
`ஓம் கருடாய வித்மஹே...` மந்திரத்தை தினமும் 108 முறை சொல்லுங்க. ஞாயிறு/சுவாதி அன்னிக்கு நெய் தீபம் ஏத்தி வழிபட்டா போதும். எல்லா தடையும் போய் வாழ்கை வேகமா பறக்கும் 🦅
#🔍ஜோதிட உலகம் 🌍 #🙏நமது கலாச்சாரம் #motivational #motivation #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 பற்றி கிருஷ்ணர் கூறிய வார்த்தைகள்....
பீஷ்மர் தான் அறிந்த அரிய ஞானத்தை தருமனின் வாயிலாக உலகிற்கு எடுத்துரைக்க எண்ணினார். தருமருக்கும் திருதராஷ்டிரருக்கும் பீஷ்மர் ஆறுதல் அளித்தார். மகாபாரத யுத்தம் முற்றுப் பெறும் வகையில் பீஷ்மர் தியானத்தில் அமர்ந்தார். அவருடைய மேனியிலிருந்து அம்புகள் தானாக உதிர்ந்தது. இவ்வுலகை விட்டு வெளியேற பீஷ்மர் கிருஷ்ணனுடைய அனுக்கிரகத்தை நாடினார். கிருஷ்ணரும் அவரை ஆசிர்வதித்தார்.
பீஷ்மர் வடிவத்திலிருந்து ஆன்மா விண்ணுலகை நோக்கி மேலே சென்றது. அப்பொழுது விண்ணுலகிலிருந்து பூமாரி பொழிந்தது. அங்கு கிளம்பிய இசை மண்ணுலகுக்கு எட்டியது. குரு வம்ச தலைவர் பீஷ்மரை எண்ணி திருதராஷ்டிரரும் பாண்டவ சகோதரர்களும் கண்ணீர் சிந்தினர். அவருக்குச் சிராத்தம் போன்றவற்றை செய்ய யாருமில்லாமல் திருமணம் ஆகாத நைஷ்டிக பிரம்மச்சாரியாக உயிர் நீத்ததை நினைத்து தருமன் வருந்தினான்.
அப்போது தருமரிடம் வியாசர், வருந்தாதே. ஒழுக்கமே தவறாத பிரம்மச்சாரிக்கும் துறவிக்கும் பிதுர்க்கடன் என்பது அவசியமே இல்லை. அவர்கள் மேம்பட்ட ஒரு நிலைக்குப் போய்விடுகிறார்கள் என்று ஆறுதல் சொன்னார். பின்பு தக்க முறையில் அவருடைய தேகத்தை தகனம் செய்தார்கள். பீஷ்மருடைய சாம்பலை அவர்கள் கங்கையில் கரைக்க கங்கைக்கு கொண்டு சென்றனர். கங்காதேவி மானிட வடிவெடுத்து வந்து அந்த சாம்பலை ஏற்றுக் கொண்டாள். அப்போது அவளுடைய முகத்தில் துயரம் தென்பட்டது.
பல ஆண்டுகளுக்கு முன்பு சொர்க்கத்தில் உள்ள அஷ்ட வசுக்களில் ஒருவனை சந்தனுவுக்காக மகனாக பெற்றேன். இவன் தலை சிறந்த தரமான பயிற்சிகள் பல பெற்று நிறை ஞானத்தை பெற்றான். யாராலும் தோற்கடிக்க முடியாத வல்லமையை பெற்றான். மானிடர்கள் எவராலும் சாதிக்க முடியாத அரும்பெரும் செயல்கள் சாதிப்பான் என்று நான் எதிர்பார்த்தேன். ஆனால் இவனோ தன் வாழ்க்கையை எளிமையாக முடிவுக்குக் கொண்டு வந்து விட்டான் என்று வருத்தத்துடன் கூறினாள்.
கிருஷ்ணன் கங்கையிடம், தாயே உன்னுடைய தமையன் தேவவிரதன். செயற்கரிய செயலை செய்து பீஷ்மர் என்னும் பெயர் பெற்றார். அவருடைய மண்ணுலக வாழ்வு ஒப்பு உயர்வு அற்றது. தர்மத்திற்கு விளக்கமாக அவர் திகழ்ந்தார். தீயவர்களை அழிக்க பரம்பொருளின் கையில் கருவியாக அமைந்திருந்தார். அம்முறையில் அவருடைய தியாகம் உச்சநிலையை அடைந்தது. அதன் பிறகு தன்னுடைய சந்ததிகளில் பொருத்தமான தருமரிடம் தம்முடைய ஞான பொக்கிஷத்தை அவர் ஒப்படைத்துள்ளார்.
யாவற்றுக்கும் மேலாக தர்மமே வடிவெடுத்துள்ள தருமனை அவர் சிம்மாசனத்தில் அமர்த்தி வைத்துள்ளார். இவருக்கு நிகரான மூர்த்தி மண்ணுலகிலும் விண்ணுலகிலும் இல்லை என்று கிருஷ்ணர் கங்கா தேவியிடம் கூறினார். தன் வீரச்செல்வனை பற்றிய இந்த விமர்சனத்தை கேள்விப்பட்ட கங்காதேவியும் மகிழ்வடைந்தாள். தன் செல்வனை பெருமை பாராட்டி அங்கிருந்து கிளம்பினாள்.
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் 🙏🏻
#🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🔍ஜோதிட உலகம் 🌍 #💥ஓம் ந ம சி வா ய💥 #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 வகை இனிய சிவலிங்கங்கள்!*
அகிலம் காக்கும் தந்தை அண்ணாமலை ஈசனே எனை ஆளும் நேசனே உன் பொற் பாதம் பணிந்து 🌹
"ௐ நம சிவாய! என்று நாம் நெக்குருகி பிரார்த்திக்கும்போது நம் கண் முன்னால் நிற்பது ஈசனின் லிங்க ரூபம்தான்.
*ஏன் இப்படி சிவன் சிலா ரூபமாக இல்லாமல் லிங்க ரூபமாக வழிபடப்படுகிறார்? என்பதற்கு, லிங்க புராணம் ஒரு கதை சொல்கிறது.*
ஒருமுறை பிரம்மாவுக்கும் மகாவிஷ்ணுவுக்கும் இடையே தங்களில் யார் பெரியவர்? என்ற வாக்குவாதம் ஏற்பட்டது
அப்போது, மிகப்பெரிய அக்னிகோளமாக அவர்கள் நடுவே தோன்றினார் சிவபெருமான். அதுவே முதன் முதலாக இறைவன் எடுத்த லிங்க வடிவம். அன்று முதல் லிங்கோத்பவம் உதயமாயிற்று.
லிங்கோத்பவம் என்றால் லிங்கம் தோன்றுதல் என்று பொருள். அன்று முதல் இன்று வரை சிவபெருமான் லிங்க உருவத்திலேயேதான் வழிபடப்பட்டு வருகிறார். அவ்வாறு வழிபாட்டுக்குரிய லிங்கங்கள் பலவகையாகப் பகுக்கப்பட்டுள்ளன. அவை:
*சுயம்பு லிங்கம் -* தானாகவே இறைவனின் இச்சைப்படி தோன்றிய லிங்கம்.
*தெய்வீக லிங்கம் -* தேவர்களால் பூஜிக்கப்பட்டு ரிஷிகள் மூலமாக பூமிக்கு வந்த லிங்கம்.
*அர்ஷ லிங்கம் -* ரிஷிகளும் முனிவர்களும் தங்கள் வழிபாட்டுக்கென உருவாக்கிய லிங்கம்.
*மனுஷ்ய லிங்கம் -* சாதாரண மனிதர்களால் உருவாக்கப்பட்ட லிங்கம். இந்த லிங்கம் மேலும் பல வகைகளாகப் பிரிக்கப்படுகிறது. குறைந்தது 96 வகை மனுஷ்ய லிங்கங்கள் இருக்கலாம் என்று மகுடாகமம் என்னும் ஆகம நூல் கூறுகிறது.
இந்த 96 வகை லிங்கங்கள் அவற்றின் அமைப்பு அதாவது பீடத்தின் அளவு பாணத்தின் அளவு ஆகியவற்றைப் பொறுத்து மேலும் பிரிக்கப்படுகிறது.
கீழே இருக்கும் சதுரப் பகுதி பிரம்ம பாகம் எனவும், நடுப்பகுதி விஷ்ணு பாகம் எனவும் மேற்பகுதி ருத்ர பாகம் எனவும் வழங்கப்படுகின்றன.
*க்ஷணிக லிங்கம் :*
தற்காலிக வழிபாட்டுக்குப் பயன்படுவது. அந்தக் காலத்தில் நீண்ட தூரம் பயணம் செல்பவர்கள் தங்களுடன் லிங்கத்தை எடுத்துச் செல்லாமல் ஆங்காங்கே கிடைக்கும் தெய்வீகப் பொருட்களைக் கொண்டு அன்றைய பூஜைக்காக உருவாக்கும் லிங்கமே க்ஷணிக லிங்கம் எனப்படுகிறது.
இத்தகைய லிங்கங்கள், மலர், அன்னம், சந்தனம், விபூதி ஆகிய பொருட்களைக் கொண்டு உருவாக்கப்படலாம். அவை உருவாக்கப்படும் பொருட்களுக்கேற்றவாறு பெயர் பெறுகின்றன. உதாரணம், பூக்களால் உருவாக்கப்பட்ட லிங்கம் க்ஷணிக புஷ்ப லிங்கம் எனப்படுகிறது.
*வர்த்தமானக லிங்கம் :*
வழிபாட்டுப் பெருமைக்குரியது. பிரம்ம பாகமும், விஷ்ணு பாகமும் ஒரே அளவு இருந்து ருத்ர பாகம் மட்டும் அதைப்போல இரு மடங்கு இருப்பதே வர்த்தமானக லிங்கம் எனப்படும். இத்தகைய லிங்கம் வழிபடுவோருக்கு முக்தி அளிக்கவல்லது.
*ஆத்ய லிங்கம் :*
இதில் மூன்று பாகங்களும் சமமான அளவு இருக்கும். இவை தவிர புண்டரீகம், விசாலா, வத்சா மற்றும் சத்ரு மர்த்தனா என்று நான்கு வகையாகப் பிரிக்கப்படுகிறது.
புண்டரீக வகை லிங்கத்தை வழிபட்டால் பெரும் புகழும், விசாலா வகை லிங்கம் பெரும் பொருளும், வத்சா லிங்கம் எல்லா வளங்களும், சத்ரு மர்த்தனா எல்லாவற்றிலும் வெற்றியையும் தருவன என்கிறது ஆகம சாஸ்திரம்.
*ஏக முக லிங்கம், சதுர் முக லிங்கம், பஞ்ச முக லிங்கம் என முகங்களின் அடிப்படையிலும் லிங்கங்கள் பகுக்கப்படுகின்றன.*
இதில் பஞ்ச முக லிங்கம் என்பது சிவனுடைய தத் புருஷ, அகோர, சத்யோஜாத, வாமதேவ, ஈசான முகங்களைக் குறிக்கும். சதுர்முக லிங்கம் என்பது ஈசான முகம் தவிர மற்ற நான்கும் கொண்டது.
*பஞ்சபூத லிங்கங்கள் என்றும் ஒரு வகை இருக்கிறது.*
அவை ப்ரித்வி லிங்கம் (பூமி), வாயு லிங்கம், ஜலலிங்கம், ஆகாச லிங்கம், தேஜோ லிங்கம் (அக்னி). இவை எல்லாமே மனுஷ்ய லிங்க வகைகள்தான்.
*களிமண், உலோகம் அல்லது கற்களாலும் லிங்கங்கள் செய்து வழிபடலாம் என்று காமிக ஆகய நூல் கூறுகிறது.*
களி மண்ணிலேயே இரண்டு வகை லிங்கங்கள் செய்யப்படுகின்றன. சுட்ட களிமண் லிங்கம், சுடாத பச்சைக் களிமண் லிங்கம், சுட்ட களி மண் லிங்கம் பொதுவாக தாந்திரீகர்களாலும், அபிசார (பில்லி சூனிய) தோஷம் உடையவர்களாலும் வணங்கப்படுகிறது.
இவை தவிர நவரத்தினங்களால் ஆன லிங்கங்களும் உண்டு. அவை பன லிங்கங்கள் எனப்படுகின்றன.
*சில முக்கியமான வகை லிங்கங்களையும் அவை தரும் பலன்களையும் பார்ப்போம்.*
*1. கந்த லிங்கம் :* சந்தனம், குங்குமம், மற்றும் கஸ்தூரி ஆகியன கலந்து உருவாக்கப்படுவது. இது க்ஷணிக லிங்க வகையைச் சார்ந்தது. நம் தேவைக்கேற்ற அளவில் இதை உருவாக்கிக் கொள்ளலாம். வழிபடுவதால் சிவசாயுஜ்ய மோட்சம் எனப்படும் பிறப்பில்லாத நிலை சித்திக்கும்.
*2. புஷ்ப லிங்கம் :* பலவகையான வாசனையுள்ள மலர்களாலும், பல நிறம் கொண்ட அழகிய மலர்களாலும்,உருவாக்கப்படுவது. வழிபடுவதால் நில சம்பந்தமான பிரச்னைகள் தீரும், நல்ல சொத்தும் சேரும்.
*3. கோசாக்ரு லிங்கம் :* பழுப்பு நிறத்தில் உள்ள பசுவின் சாணத்திலிருந்து உருவாக்கப்படும் லிங்கம் இது. இதை வணங்கினால் வளம் பெருகும். இதுவும் க்ஷணிக லிங்க வகையே ஆகும்.
*4. வாலுக லிங்கம் :* சுத்தமான மணல் கொண்டு உருவாக்கப்படும் இதை வணங்கினால் கல்வியும் ஞானமும் உண்டாகும்.
*5. யவாகோதுமாசாலிஜ்ஜ லிங்கம் :* இந்த லிங்கம் யவை, சோளம், கோதுமை போன்ற தானியங்களின் மாவினால் உருவாக்கப்படுகிறது. இது குழந்தை பாக்கியத்தை அருளும்.
*6. சீதாகண்ட லிங்கம் :* இனிப்புகளால் உருவாக்கப்படும் இது, நல்ல உடல் ஆரோக்கியத்தை அளிக்க வல்லது.
*7. லவண லிங்கம் :* உப்போடு மஞ்சள் மற்றும் திரிகடுகம் எனப்படும் சித்த மருந்து கலந்து செய்யப்படுகிறது. இது மற்றவர்களை வசீகரிக்கும் சக்தியை அருள்கிறது.
*8. திலாப்சிஷ்த லிங்கம் :* எள்ளை அரைத்து செய்யப்படும் இது, எல்லா ஆசைகளையும் விருப்பங்களையும் பூர்த்தி செய்யும்.
*9. பாம்ச லிங்கம் :* சாம்பல் கொண்டு செய்யப்படும் இது, எல்லா நற்குணங்களையும் வளர்க்கும்.
*10. கூட லிங்கம் அல்லது சீதா லிங்கம் :* வெல்லத்தால் செய்யப்படும் இது, மன நிம்மதியை அருளும்.
*11. வன்சங்குர லிங்கம் :* மென்மையான மூங்கில் இலைகளால் ஆனது இந்த வகை லிங்கம். வழிபடுவோருக்கு நோய் நொடியற்ற நீண்ட ஆயுளைத் தரும்.
*12. பிஷ்டா லிங்கம் :* அரிசிமாவினால் செய்யப்படும் இந்த லிங்கம், நல்ல கல்வியறிவைத் தரும்.
*13. ததிதுக்த லிங்கம் :* பாலிலிருந்தும் தயிரிலிருந்தும் முழுவதுமாக தண்ணீரை நீக்கிய பிறகு இந்த லிங்கம் உருவாக்கப்படுகிறது. வணங்கியோருக்கு மன மகிழ்ச்சியையும் வளங்களையும் அருளும் தன்மையது.
*14. தான்ய லிங்கம் :* நவ தானியங்களால் உருவாக்கப்படும் இந்த லிங்கம், விவசாயிகளுக்கு நல்ல விளைச்சலைத் தரும்.
*15. பழ லிங்கம் :* பல்வகையான பழங்களால் உருவான இது, பழத்தோட்டம் வைத்திருப்பவர்களுக்கு நல்ல பலனைத் தரும்.
*16. தாத்ரி லிங்கம் :* நெல்லிக்காயைக் கொண்டு உருவாக்கப்படும் இது, மிகவும் கஷ்டப்படுபவர்களுக்கு அந்த வாழ்விலிருந்து விடுதலையைத் தரும்.
*17. நவநீத லிங்கம் :* வெண்ணெயால் உருவான இது, பணமும் புகழும் தரும்.
*18. கரிக லிங்கம் :* விசேஷ வகைப் புல்லால் உருவாக்கப்படும் இது, துர்மரணத்தைத் தடுக்கும்.
*19. கற்பூர லிங்கம் :* கற்பூரத்தினால் இது உருவாக்கப்படுகிறது. சிறந்த ஞானத்தைத் தந்து மாயையை அழிக்கும்.
*20. ஆயஸ்காந்த லிங்கம் :* காந்தத்தால் உருவான இது, சித்தர்கள் வணங்கும் லிங்கம். அஷ்டமா சித்திகளையும் எளிதாக அளிக்க வல்லது.
*21. மவுகித்க லிங்கம் :* முத்துகளை எரித்த சாம்பலிலிருந்து உருவாக்கப்படும் லிங்கம். மங்களமும், செல்வ வளமும் அருளும் தன்மையது.
*22. ஸ்வர்ண லிங்கம் :* தங்கத்தால் உருவானது. முக்தி அளித்து பிறவா நிலைக்கு உயர்த்தும்.
*23. ரஜத லிங்கம் :* வெள்ளி லிங்கம். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.
*24. பித்தாலா லிங்கம் :* பித்தளையால் உருவாக்கப்படும் இது, பழுத்த இலை மரத்திலிருந்து உதிர்வது போன்ற பயமில்லாத மரணத்தைத் தரும்.
*25. திராபு லிங்கம் :* தகரத்தால் செய்யப்படும் இந்த லிங்கம், வணங்குபவருக்கு எதிரிகளே இல்லாமல் செய்து விடும் தன்மை உடையது.
*26. ஆயச லிங்கம் :* கந்தக அமிலத்தால் செய்யப்படும் இந்த லிங்கம் எதிரிகளின் தொந்தரவை அழிக்கும்.
*27. சீசா லிங்கம் :* வெள்ளீயத்தால் செய்யப்படுகிறது இந்த லிங்கம். இதை வணங்குபவர்களை எதிரிகளால் நெருங்கவே முடியாதவாறு செய்யும் தன்மையது.
*28. அஷ்டதாது லிங்கம் :* எட்டு வகையான தாதுக்களால் உருவாக்கப்படும் இது, சித்தி அளிக்கவல்லது.
*29. அஷ்ட லோக லிங்கம் :* எட்டு வகையான உலோகங்களால் செய்யப்படும் இதை வணங்கினால் தொழுநோய் குணமாகும்.
*30. வைடூர்ய லிங்கம் :* நவ ரத்தினங்களுள் ஒன்றான வைடூரியத்தால் உருவான இது, எதிரிகளின் எதிர்பாராத தாக்குதலிலிருந்து காப்பாற்றும்.
*31. ஸ்படிக லிங்கம் :* ஸ்படிகத்தால் ஆன இது, எல்லா ஆசைகளையும் நிறைவேற்றும்.
*32. பாதரச லிங்கம் :* பாதரசத்தால் ஆனது இந்த லிங்கம். அளவிட முடியாத செல்வத்தைக் கொடுக்கும்.
மேற்கூறிய 32 வகைகளில் முதல் 19 க்ஷணிக லிங்க வகையைச் சேர்ந்தவை. மற்றவை மனுஷ்ய லிங்க வகையைச் சேர்ந்தவை.
இந்திரன் மணி மாய லிங்கத்தையும், சூரியன் தாமரமய லிங்கத்தையும், சந்திரன் முக்தி லிங்கம் எனப்படும் முத்துகளால் ஆன லிங்கத்தையும், குபேரன் ஹேம லிங்கம் எனப்படும் தங்கத்தால் ஆன லிங்கத்தையும் அணிந்திருப்பதாகப் புராணங்கள் கூறுகின்றன.
*நாமும் ஆகம சாஸ்திரங்கள் கூறும் பலவிதமான லிங்கங்களையும் வழிபட்டு எல்லா வளங்களும் பெற்று இந்த உலகில் வாழ்வாங்கு வாழ்வோம்!*
🌷சிவாய நம🙏🙏 சிவமே ஜெயம் சிவமே தவம். சிவமே என் வரமே. .எங்கும் சிவ நாமம் ஒலிக்கட்டும் இப்பிறவி இனிதே சாமி 🌷
🌺உலகின் முதல்வன் எம் பெருமான் நம் தந்தை சிவனாரின் இனிய ஆசியுடன் அன்பான சிவ காலை வணக்கங்கள் 🌺
🙇அப்பனே அருணாச்சலா உன்பொற் கழல் பின்பற்றி ஷிவானி கௌரி🦜
அடியேனுடன் பயணிக்கும் நண்பர் சிவ சண்முகம் அவர்களின் அருமையான பதிவு
நன்றியும் பாராட்டுகளும் 🌹🌹












