
திருநீற்றுச் சுவடு
@193036147
நல்லதே நினை நல்லதே நடக்கும் திருச்சிற்றம்பலம்
#🙏ஓம் நமோ நாராயணா கோவிந்தா கோவிந்தா🙏 #🙏 ஓம் நமசிவாய #காலை வணக்கம் #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 பொறுக்கி ஆறுமுக சுவாமிகள் தனது வாழ்நாளின் பெரும் பகுதியை விராலிமலையில் கழித்தார்.
இவர் அடியவர்களின் கர்மவினைகளையும் தீவினைகளையும் (எச்சிக் கர்மங்கள்) நீக்கும் வல்லமை கொண்டவர் என்பதால் "எச்சிக்கலும் போக்கும் ஆறுமுக சுவாமிகள்" என்று அழைக்கப்பட்டார். காலப்போக்கில் இப்பெயர் மருவி "எச்சில் பொறுக்கி ஆறுமுக சுவாமிகள்" என்றானது.
சுவாமிகளின் உபாசனை தெய்வம் மூதேவி. அதாவது ஜேஷ்டா தேவி உபாசனை. மூதேவி உபாசனை மூலம் பெரு நிலை பெற்ற அபூர்வ சித்த பெருமக்களில் பிரதானமானவர்.
சில நேரங்களில் ,பக்தர்கள் சாப்பிட்டு முடித்த பின் எறியும் எச்சில் இலைகளில் சிலவற்றை எடுத்து, அவற்றைச் கழுவி மடித்து வைக்கும் பழக்கம் இவருக்கு இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனை ஒரு ஆன்மீகச் செயலாகவும், பிறரது கர்மாவைப் போக்கும் வழியாகவும் பக்தர்கள் கருதுகின்றனர்.
அதேபோல் எச்சில் இலைகளில் எஞ்சியிருக்கும் உணவை அவர் உண்பார். இதைப் பார்த்து முகம் சுளித்தவர்களுக்கு, "நீங்கள் உண்பது வெறும் சோறு, நான் உண்பது உங்கள் கர்மவினை" என்று உணர்த்தி அவர்களின் அறியாமையைப் போக்கினார். எண்ணிலடங்காத சித்துக்களை நிகழ்த்தியுள்ளார்.
இவர் 18 சித்தர்களுக்கு அடுத்தபடியாக 19-வது சித்தராக பக்தர்களால் போற்றப்படுகிறார்.
விராலிமலை முருகன் கோயிலுக்குச் செல்லும் வழியில், தெற்குமலை அடிவாரத்தில் உள்ள ஒரு சிறு குகையில் சுவாமிகள் பல காலம் தங்கி தவம் செய்தார்.
அவர் தங்கியிருந்த அந்தக் குகையில் வேல் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தார். சுவாமிகள் விராலிமலையில் இருந்தபோது, பக்தர்களின் கர்மவினைகளை நீக்கும் சக்தி படைத்தவர் என்ற செய்தி பரவியது. இதனால் பல ஊர்களிலிருந்தும் மக்கள் அவரைத் தேடி வரத் தொடங்கினர்.
சுவாமிகள் வசித்த அந்தக் குகை இன்றும் விராலிமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் செல்லும் மலைப்பாதையின் தொடக்கத்தில் உள்ளது.
தான் முக்தி அடையும் நாளை (வைகாசி விசாகம்) முன்னரே தனது சீடர்களிடம் விராலிமலையில் இருந்தபோதே அவர் தெரிவித்திருந்தார்.
சுவாமிகளின் ஜீவசமாதி சிவகங்கை மாவட்டம், காரைக்குடிக்கு அருகில் உள்ள கோட்டையூர் என்னும் ஊரில் அமைந்துள்ளது.
காரைக்குடி புதிய பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 5 கி.மீ தொலைவில் கோட்டையூர் உள்ளது. காரைக்குடியிலிருந்து திருச்சி செல்லும் சாலையில் (NH 210) பயணித்தால் எளிதில் அடையலாம்.
காரைக்குடியிலிருந்து திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை செல்லும் அனைத்துப் பேருந்துகளும் கோட்டையூரில் நிற்கும்.
ஒவ்வொரு ஆண்டும் வைகாசி விசாகம் அன்று சுவாமிகளின் குருபூஜை கோட்டையூரில் வெகு விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது.
தரிசன நேரம்: காலை 6:00 மணி முதல் நண்பகல் 12:00 மணி வரையிலும், மாலை 4:00 மணி முதல் இரவு 8:00 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.
ஹரி ஓம் மஹா காளி !
#காலை வணக்கம் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏 ஓம் நமசிவாய #ஓம் நமோ நாராயணா 🙏🕉️🙏🌺👣🌺# #🙏ஓம் நமோ நாராயணா கோவிந்தா கோவிந்தா🙏 விஜய ஏகாதசி தின தரிசனம் !!*
🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம,
ராம ராம, ஹரே ஹரே
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
இன்று
*தமிழ் மாத பிறப்பு*
*விஷ்ணுபதி புண்ணிய காலம்*
வெள்ளிக்கிழமை !
#காலை வணக்கம் #✡️ஜோதிட பரிகாரங்கள் #😎Summer ஹெல்த் டிப்ஸ் #💪ஆரோக்கிய தகவல்கள்🩺 #🎥Trending வீடியோஸ்📺 எனும்
பூலோக அமிர்தத்தின் பிறப்பை பற்றியும்
வேறு எந்த மூலிகைக்கும் இல்லாத
அதன் சிறப்பை பற்றியும்
அகஸ்தியர் பெருமான் கூறும் விளக்கம்
தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைய
இதன் விளைவாக சாகா நிலையை தரும் அமிர்தம் கிடைக்க
இந்த அமிர்தத்தை மகாவிஷ்ணு பெண் ரூபமாய் மாறி
அழகிய மோகினியாக அவதாரம் தரித்து தேவர்களுக்கு இந்த அமிர்தத்தை பந்தி வைத்து பரிமாற
இதை பார்த்த அசுரர்களில் ஒருவன் அமிர்தத்தை எப்படியும் ருசித்து சாகாவரம் பெற வேண்டும் என விரும்பி தனது மாயா சக்தியால் தேவ ரூபம் தரித்து தேவர்களைப் போல பந்தியில் அமர்ந்திருக்க
தனது ஞான சக்தியால் இதை அறிந்த தேவர்களான சந்திரனும் சூரியனும் இதை மோகினியாய் மாறி பந்தியில் அமிர்தத்தை பரிமாறி வரும் மகாவிஷ்ணுவுக்கு உணர்த்த
இதை புரிந்துகொண்ட பகவான் மகாவிஷ்ணு சுவர்பானு எனும் அரக்கன் தேவரூபம் பெற்று பந்தியில் அமர்ந்திருப்பதை அறிந்து கொள்ள
தான் அசுரன் என்பதை மகாவிஷ்ணு அறிந்து கொண்டார் என்பதை சுவர்பானு உணர்ந்து கொண்டு உடனே அந்த அமிர்தத்தை வாயில் விட்டு விழுங்க
அமிர்தத்தை விழுங்கிவிட்டால் அசுரனுக்கு சாகாவரம் கிடைத்து விடுமே என்ற காரணத்தால்
அமிர்தத்தை பந்தியில் பரிமாறி வந்த மகாவிஷ்ணு தான் வைத்திருந்த அகப்பையால் அந்த அசுரனின் தலையை வெட்டி விட
அசுரன் வாயிலிட்ட அமிர்தமானது அசுரனின் உடலுக்கு செல்லாமல் வாயிலிருந்து கீழே விழுந்து விட
அந்த அமிர்தமே வேப்ப மரமாய் வளர்ந்து பூலோக அமிர்தமாய் பூமியில் இருக்கிறது என்றும்
இந்த வேப்பிலையை எனும் அமிர்தத்தை முறைப்படி உட்கொண்டு வந்தால் பல தீராத நோய்களைத் தீர்த்து வைக்கும் என்றும்
சித்தர்களில் முதன்மை சித்தரான அகஸ்தியர் பெருமான்
சாகா வரத்தை தருகின்ற அமிர்தமே வேப்பிலை எனும் திருநாமத்தை பெற்று ஒரு அரிய வகை மூலிகையாக பூமியில் அவதரித்து இருப்பதாக இதன் சிறப்பை அகஸ்தியர் பெருமான் கூறியிருக்கிறார்
வேம்பு எனும் கற்ப மருந்தை உண்ணும் விதமும் அதனால் கிடைக்கின்ற பயனும்
குறைந்தது நூறு ஆண்டை கடந்த முற்றிய வேப்பமரத்தின்
முதிர்ந்த இலை
இளம் கொழுந்து இலை
வேப்பம் பூ
வேப்பம் பிஞ்சு
வேப்பங்காய்
வேப்பம் விதை
வேப்ப மரப்பட்டை
இவைகளை தனித்தனியாக எடுத்து நிழலில் உலர்த்தி இடித்து பொடி செய்து அனைத்தையும் சம எடையாக கலந்துகொண்டு
இதன் எடைக்கு ஏழில் ஒரு பங்கு வேப்பம் பழத்தின் பழ ரசத்தைப் சாறாக பிழிந்து இந்த பொடியோடு கலந்து நிழலில் உலர்த்தி மீண்டும் இடித்து சலித்து இதை பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டு
உப்பு புளி காரத்தை தவிர்த்து பத்தியம் காத்து வேப்ப மரத்தின் அட்டங்க பொடியை சாப்பிட்டு வர அனைத்து விதமான உடல் நோய்களும் தீரும்
வேம்பு கற்பத்தை முறையாக ஒரு மண்டலம் உட்கொண்டு வந்தால்
வண்டுகடி வாதவலி கணுச்சூலை எனும் மூட்டுவலி சன்னி சொறி சிரங்கு குஷ்டம் கைகால் முடக்கு சீத சன்னி தனுர்வாதம் பச்சை வாதம் பாரிசவாதம்சூலை விப்புருதி கட்டி வீக்கம் இவைகளோடு தீராத மேகம் வெள்ளை நோய் உடல் அரிப்பு தடிப்பு ஊரல் இவைகள் தீரும் மேலும் கடுமையான இருமல் விலகும்
நமது உடலானது இறுகி கற்தூனை போல வலிமை பெறும் நாடி நரம்புகள் முறுக்கேறி சரீரத்தில் உள்ள நோய்கள் அனைத்தும் நீங்கும் முகத்திற்கு அழகு உண்டாகும்
வேப்ப மரத்தின்
மருத்துவ பயன்களில் சில
முகத்திற்கு அழகு சேர்க்க
ஒரு லிட்டர் தண்ணீரில் ஒரு கைப்பிடி வேப்பிலையை போட்டு நன்கு கொதிக்க வைத்து ஆறிய பின் முகம் கழுவி வர முகத்தில் தோன்றிய பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள் காணாமல் போய்விடும் முகமது கண்ணாடி போல் மின்னும் பார்ப்பதற்கு முகம் முன்பு இருந்ததை விட இப்பொழுது அழகாக தோன்றும்
வயிற்று புழு நீங்க
வேப்பம் கொழுந்தை மைபோல் அரைத்து ஒரு நெல்லிக்காய் அளவு எடுத்து அதிகாலையில் வெறும் வயிற்றில் மூன்று நாட்கள் உட்கொண்டு வர வயிற்றில் உள்ள புழுக்கள் இறந்து வெளியேறிவிடும்இதனால் வாய்வு தொல்லை நீங்கும் வயிற்று உப்பிசம் குறையும்
புண்கள் ஆற
வேப்பம் கொழுந்து மஞ்சள் கிழங்கை இரண்டையும் சம அளவாக எடுத்து அரைத்து புண்கள் மீது தடவி வர சீக்கிரம் புண்கள் ஆறிவிடும் சேற்றுப் புண்கள் மீது பூச சேற்றுப்புண்கள் ஆறிவிடும்
அக்கி புண் குணமாக
வேப்பிலை நெல்லிக்காய் இரண்டையும் மை போல அரைத்து அக்கி புண் மற்றும் அரிப்பு காயங்கள் உள்ள இடங்களில் தடவ இவை அனைத்தும் குணமாகும்
கண் வலி நீங்க
வேப்பிலையோடு சமமாக தோல் நீக்கிய சுக்கை சேர்த்து இதன் எடைக்கு நான்கில் ஒரு பங்கு இந்துப்பை கலந்து இதை அடுப்பிலிட்டு லேசாக சூடாக்கி வெதுவெதுப்பாக இருக்கின்ற பொழுது கண்களில் வைத்து கட்டி வர கண் வலி கண் அரிப்பு நீங்கும்
அஜீரண பேதி குணமாக
ஒரு கைப்பிடி அளவு முதிர்ந்த வேப்பிலையை எடுத்து மண்பானையிலிட்டு நன்கு கருகும்படி வறுத்து தூள் செய்து இதில் மூன்று கிராம் எடுத்து சுட்டு பொடித்த வசம்பு தூளை இதன் எடைக்கு பாதி சேர்த்து இதை மோரில் கலக்கி குடித்துவர அஜீரணக் கோளாறால் ஏற்பட்ட அடிக்கடி பேதியாவது குணமாகும்
அம்மை நோய் நீங்க
வேப்பிலை மற்றும் மஞ்சள் இரண்டையும் சமமாக எடுத்து நன்கு அரைத்து அம்மைப் புண் மீது பூசி வர புண்கள் ஆறிவிடும்
வேப்பிலையும் மஞ்சளையும் அரைத்து ஒரு ஒரு நெல்லிக்காய் அளவு எடுத்து அரை லிட்டர் தண்ணீரில் கலந்து இதை அடுப்பில் வைத்து பாதியாகச் சுண்டக் காய்ச்சி காலை மாலை இருவேளையும் அருந்தி வர அம்மை நோய் குணமாகும்
என்றும் ஆரோக்கியமாய் வாழ
கால் லிட்டர் தண்ணீரை முதல் நாள் இரவு நன்கு கொதிக்கவைத்து அதில் பதினைந்து வேப்பம் பூக்களை போட்டு மூடி வைத்திருந்து காலையில் இந்த நீரை வடிகட்டி குடித்துவர உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் ஆரோக்கியமும் அதிக பலமும் உண்டாகும்
தோல் நோய்கள் நீங்க
வேப்பமரத்து உள் பட்டையை காயவைத்து இடித்து இதன் எடைக்கு சமமாக கடுக்காய்த் தூளை சேர்த்து இதில் மூன்று கிராம் எடுத்து வெந்நீரில் கலந்து தினம் இருவேளை முப்பது நாட்கள் சாப்பிட்டு வர தோல் நோய்கள் அனைத்தும் நீங்கும் கொடிய குஷ்ட நோயும் இதனால் குணமாகும்
பல்வலி குணமாக
வேப்ப மரத்தின் வேரை இடித்து ஒரு கைப்பிடி எடுத்துக்கொண்டு ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து இதை பாதியாக சுண்ட காய்ச்சி இந்த நீரால் வாய் கொப்பளித்து வர பல்வலி குணமாகும் வாய் துர்நாற்றம் அகலும்
வயிறு சுத்தமாக
குடல் நோய்கள் அனைத்தும் குணமாக
வேப்பெண்ணெய் விளக்கெண்ணெய் இரண்டையும் சம அளவாக கலந்து வைத்துக் கொண்டு மாதம் இருமுறை பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை காலைவேளையில் இந்த எண்ணெயில் ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து சாப்பிட்டு வர மலக்குடலில் உள்ள பூச்சிகள் இருந்து மலத்துடன் வெளியேறும் வயிறு சார்ந்த நோய்கள் அனைத்தும் தீரும் குறிப்பாக வாய்வுத் தொல்லை வயிற்று உப்பிசம் அஜீரணக் கோளாறுகள் அனைத்தும் விலகும்
பாத வெடிப்பு நீங்க
இரவு வேளையில் கால் பாதத்திற்கு வேப்பெண்ணை தடவி வர பித்தத்தால் காலில் ஏற்படும் பித்த வெடிப்புகள் முழுமையாக நீங்கிவிடும்
தலைவலி நீங்க
வேப்பம்பூ வைத்தியம்
நன்கு கொதிக்க வைத்த நீரில் வேப்பம் பூவை போட்டு ஆவி பிடித்தால் தலைவலி காது வலி குணமாகும்
நீராவியை வாய்வழியாக உள்ளிழுத்து வெளியே விட வரட்டு இருமல் தொண்டைப்புண் தொண்டை வலி நீங்கும்
குளிர் சுரம் குணமாக
முதிர்ந்த வேப்பமரத்து பட்டையை கொண்டுவந்து மேற்புற நீயே நீக்கிவிட்டு உள்புறத்தில் உள்ள பட்டையை நிழலில் உலர்த்தி இடித்து சலித்து வைத்துக்கொண்டு இதில் மூன்று கிராம் எடுத்து காலை மாலை இருவேளையும் வெந்நீரில் கலந்து குடித்து வர குளிர் காய்ச்சல் குணமாகும்
வயிற்றுவலி குணமாக
வேப்பிலையோடு சீரகத்தை சம அளவாக சேர்த்து நன்கு அரைத்து ஒரு நெல்லிக்காய் அளவு எடுத்து கால் லிட்டர் தண்ணீரில் கலந்து இதை வடிகட்டி காலை வெறும் வயிற்றில் குடித்து வர வயிற்றுவலி குணமாகும்
சர்க்கரை நோயை சமப்படுத்த
வேப்பிலை வைத்தியம்
ஓமம் சுக்கு வேப்பில்லை பனைவெல்லம் இவைகளை சம அளவாகக் பொடி செய்து ஒன்றாக கலந்து கொண்டு இரவு சாப்பாட்டிற்கு பின்பு இந்தப் பொடியில் ஐந்து கிராம் எடுத்து சாப்பிட்டுவிட்டு அதன் பின் பால் அருந்திவர படிப்படியாக சர்க்கரை நோய் குறைந்து சர்க்கரையின் அளவு சமநிலைக்கு வந்துவிடும்
நோய் எதிர்ப்பு சக்தி உண்டாக
வேப்ப மரத்தின் கொழுந்து இலைகளை நிழலில் உலர்த்தி காயவைத்து இடித்து சலித்து வைத்துக்கொண்டு இதை தினந்தோறும் காலை வேளையில் மூன்று கிராம் அளவு எடுத்து வெந்நீரில் கலந்து ஒரு மாதம் சாப்பிட்டு வர உடலில் உள்ள கடி விஷங்கள் அனைத்தும் நீங்கும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் நோயின்றி வாழ இது ஒரு எளிய வழி முறையாகும்
#திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏🪔பிரதோசம் 🙏🪔ஓம் நந்தீஸ்வரர் போற்றி🪔🐂🙏🙏🪔🔱ஓம் நமசிவாய🔱🪔🙏
#திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #காலை வணக்கம் #🙏🪔பிரதோசம் 🙏🪔ஓம் நந்தீஸ்வரர் போற்றி🪔🐂🙏🙏🪔🔱ஓம் நமசிவாய🔱🪔🙏 #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🖌பக்தி ஓவியம்🎨🙏
பிரம்மாண்ட நாயகி பிரம்மாண்ட நாயகி கலியுகம் கண்கண்ட தெய்வம் பாரில் சிறந்த பெரிய தெய்வம் பருவதாரஜகுல பராசக்தி மாசி மாத பிறப்பை ஒட்டி சிறப்பானதொரு அலங்காரத்துடன் அருள்திரு காட்சி தருகின்றாள் அன்னை 🙏🙏🙏
🚩✨ மாசி மாதத்தில் அங்காளம்மன் வழிபாடு – சிறப்புகள்:
சிவனுக்கே பிரம்மஹத்தி தோஷம் நீங்கிய அங்காளம்மனை மாசி மாதத்தில் வணங்கி மகிழ்வதால் ஏற்படும் நன்மைகள். 🙏
அருளும் ஆக்கமும் தரும் மாதம் : மாசி மாதம் சக்தி வழிபாட்டிற்கு மிகவும் உகந்ததாக கருதப்படுகிறது. இம்மாதத்தில் அம்மனை வணங்கினால் சகல வளங்களும் கிடைக்கும்.
தீமைகள் நீங்குதல்: பகைவர்களால் நேரிடும் பிரச்சினைகள், கெட்ட சக்திகள், கண் திருஷ்டி போன்றவற்றிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும்.
குடும்ப ஒற்றுமை: குடும்பத்தினுள் அமைதி, மகிழ்ச்சி, மற்றும் நல்வாழ்வு நிலைக்க அம்மனை வழிபடுகிறார்கள்.
அங்காளம்மன் கோவில்களில் மாசி மகோற்சவம்: சில பகுதிகளில் மாசி மாதத்தில் அங்காளம்மன் கோவில்களில் பெரிய திருவிழாக்கள் நடக்கின்றன.
அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள்: மஞ்சல், சந்தனம், குங்குமம், பன்னீர் போன்ற அபிஷேகங்கள் செய்து அம்மனை மகிழ்விக்கிறார்கள்.
🌺 தீமைகளை நீக்கும் சக்தி – இந்த மாதத்தில் அங்காளம்மனை பக்திபூர்வமாக பூஜை செய்யும் போது, தீய சக்திகள், கண் திருஷ்டி, தோஷங்கள் அனைத்தும் விலகும்.
🌺 வாழ்க்கை பாதுகாப்பும் செழிப்பும் – மாசி மாத திருவிழாக்களில் அங்காளம்மன் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு பூஜை செய்யப்படுகிறாள். இதன் மூலம் குடும்ப நலம், பொருளாதார செழிப்பு மற்றும் பிள்ளை பாக்கியம் பெருகும்.
அமாவாசை வழிபாட்டின் சிறப்பு – மாசி அமாவாசையன்று அங்காளம்மனை வழிபட்டால், பித்ருக்கள் (மரணமடைந்த முன்னோர்கள்) திருப்தி அடைந்து, குடும்பத்தில் நல்ல மாற்றங்கள் ஏற்படும்
நீங்களும் மாசி மாதத்தில் அங்காளம்மனை பக்தியுடன் வழிபட்டு, அவளின் அருளைப் பெறுங்கள்!
மாசி மாதத்தில் அங்காளபரமேஷ்வரியை மனதார வழிபட்டால், பக்தர்களுக்கு சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும். இது வாழ்க்கையில் சக்தி, செழிப்பு, மற்றும் ஆன்மிக முன்னேற்றத்தை தரும்.🙏
ஓம்சக்தி அங்காளம்மா
அங்காளம்மா ஓம்சக்தி #திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவில் #🙏சமயபுரம் மாரியம்மன் #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #காலை வணக்கம் #🙏🪔பிரதோசம் 🙏🪔ஓம் நந்தீஸ்வரர் போற்றி🪔🐂🙏🙏🪔🔱ஓம் நமசிவாய🔱🪔🙏
#🖌பக்தி ஓவியம்🎨🙏 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #🙏🪔பிரதோசம் 🙏🪔ஓம் நந்தீஸ்வரர் போற்றி🪔🐂🙏🙏🪔🔱ஓம் நமசிவாய🔱🪔🙏 #காலை வணக்கம் #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥
#🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏🌺மகாலட்சுமி 🌺🙏 #மகாலட்சுமி #🙏சமயபுரம் மாரியம்மன் Sri Kamalavalli Naachiyaar Raapathu Utsavam Day 1 Purapaadu Dhivya Sevai.
அருள்மிகு உறையூர் கமலவல்லி நாச்சியார் திருக்கோயில்.
திருவாய்மொழி திருநாள்
இராப்பத்து முதல் நாள்
பரமபத வாசல் திறப்பு.
🙏🪷🙏 #திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவில்
#🖌பக்தி ஓவியம்🎨🙏 #காலை வணக்கம் #🙏🪔பிரதோசம் 🙏🪔ஓம் நந்தீஸ்வரர் போற்றி🪔🐂🙏🙏🪔🔱ஓம் நமசிவாய🔱🪔🙏 #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 ஓம்சர்வேஷ்சாய ஓம்கார்த்திகேய ஓம் நமோ நாராயணா சிரமாறு உடையான் 🌞 🙏 இன்று இனிய நாள் வாழ்க வளர்க நலத்துடன் துரைசாமி🪷🪷🪷
#காலை வணக்கம் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #முருகன் ஸ்டேட்டஸ் #முருகன் வீடியோஸ்#முருக கடவுள் #பக்தி வீடியோஸ் # #🕉️ஓம் முருகா #🙏ஓம் முருக சரணம்🙏












