
திருநீற்றுச் சுவடு
@193036147
நல்லதே நினை நல்லதே நடக்கும் திருச்சிற்றம்பலம்
#📅பஞ்சாங்கம்✨ #🔍ஜோதிட உலகம் 🌍 #🌙சந்திர தரிசனம்🔯 #🙏ஏகாதசி🕉️ *கோவில்* #🕉️நாக தோஷம் பரிகாரங்கள்🌠
#பக்தி #🖌பக்தி ஓவியம்🎨🙏 #காலை வணக்கம் #🔱🕉️சமயபுரம் மாரியம்மன் #🔱🕉️அம்மன் ஓம் சக்தி 🔱#📷 பக்தி படம் 🔱🕉️#🔱🕉️அம்மன் பக்தி ஸ்டேட்டஸ் #🙏ஏகாதசி🕉️
#🖌பக்தி ஓவியம்🎨🙏 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #பக்தி #📅பஞ்சாங்கம்✨ வெய்யன் புனலினும் தண்ணியன்
ஆயினும் ஈசன் அருள் அறிவார் இல்லை
சேயினும் நல்லன் அணியன் நல் அன்பர்க்குத்
தாயினும் நல்லன் தாழ்சடை யோனே
#🖌பக்தி ஓவியம்🎨🙏 #காலை வணக்கம் #பக்தி #கணபதி Ganapathiye potri 🙏 #🙏விநாயக போற்றி
#🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #காலை வணக்கம் அருள் உனக்கு எப்பொழுதும் இருக்கும்
அதனால்
எதற்கும் பயப்படாதே தைரியமாக இரு
ஓம் நமசிவாய
#திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 உள்ள அருள்மிகு குலசேகரநாதர் சுவாமி திருக்கோயில், தென்காசி பாண்டிய மன்னர்களில் ஒருவரான சடையவர்மன் அதிவீரராம பாண்டியன் காலத்தில் கட்டப்பட்டது.
இந்தக் கோயிலைப் பற்றிய சில கூடுதல் தகவல்கள்:
அமைப்பு: இந்தக் கோயில் தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகிலேயே அமைந்துள்ளது.
தென்காசி பாண்டியர்கள்: புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோயிலைக் கட்டியவர் பராக்கிரம பாண்டியன். அவருக்குப் பின் வந்த பாண்டிய மன்னர்கள் தென்காசியைத் தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்தபோது இந்தக் குலசேகரநாதர் கோயிலையும் மற்றும் சில கோயில்களையும் எழுப்பினர்.
தொடர்பு: காசி விஸ்வநாதர் கோயில் கட்டுமானப் பணிகள் பராக்கிரம பாண்டியனால் தொடங்கப்பட்டு, அவரது தம்பி குலசேகர பாண்டியனால் முற்றுவிக்கப்பட்டது. ஆனால், தனியாக உள்ள 'குலசேகரநாதர் கோயில்' அதிவீரராம பாண்டியன் காலத்தைச் சேர்ந்ததாகக் கருதப்படுகிறது.
#🔍ஜோதிட உலகம் 🌍
#காலை வணக்கம் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 வலம் வரும் எண்ணிக்கையும், பலன்களும்!*
கோயிலுக்குச் சென்று இறைவனை தரிசித்து வழிபட்ட பிறகு கோயில் பிராகாரத்தில் அல்லது இறைவனின் சன்னிதியில் வலம் வருவது வழக்கம். பெரும்பாலானவர்கள் நேரமில்லை என சொல்லி சாமியை மட்டும் தரிசனம் செய்துவிட்டு வெளியே சென்று விடுவார்கள். ஆனால், கோயிலை வலம் வருவது மிகவும் முக்கியமானதாகும். அப்படி வலம் வரும்போது மனதார இறைவனை நினைத்தபடி வலம் வந்தால் மனதில் உள்ள தீய எண்ணங்கள் நீங்கி, இறைவனிடம் இருந்து வெளிப்படும் நேர்மறை ஆற்றலால், நம்முடைய மனது சுத்தமாகும். நேர்மையான ஆற்றல்கள் பெறுவதால் நன்மைகள் அதிகம் நடைபெறும்.
கோயில்களை வலம் வரும்போது ஒற்றைப்படை எண்ணிக்கையில்தான் வலம் வர வேண்டும். ஒவ்வொரு தெய்வத்தையும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் வலம் வந்து வழிபட வேண்டும் என சொல்லப்படுகிறது. இதற்கு ஏற்றாற்போல் பலன்களும் மாறுபடும்.
விநாயகர் கோயில்: ஒரு முறை வலம் வந்து வழிபட வேண்டும். இதனால் தடைகள் விலகும்.
முருகர் கோயில்: ஆறு முறை வலம் வர வேண்டும். இதனால் எதிரிகள் தொல்லை நீங்கி, ஞானம் பெருகும்.
அம்மன் கோயில்: ஐந்து முறை வலம் வர வேண்டும். இதனால் வெற்றி, மன அமைதி கிடைக்கும். செவ்வாய் முதல் வெள்ளி வரை தினமும் அம்பிகையின் கோயிலுக்குக் சென்று ஐந்து முறை வலம் வந்தால் நினைத்த காரியம் நிச்சயம் நடக்கும் என்பது நம்பிக்கை.
சிவன் கோயில்: ஐந்து முறை வலம் வந்தால் நினைத்தது நடக்கும். செல்வ வளம் பெருகும். பிறவா நிலை ஏற்படும்.
பெருமாள் கோயில்: மூன்று முறை வலம் வர வேண்டும். இதனால் ஆட்சி அதிகாரம், செல்வாக்கு, அஷ்ட லட்சுமி கடாட்சம் ஆகியவை கிடைக்கும்.
நவகிரகங்கள்: ஒன்பது முறை வலம் வருவதால் ஜாதகத்தில் இருக்கும் குறைகள் நீங்கும்.
இப்படி எந்த தெய்வத்தின் கோயிலுக்குச் சென்று எத்தனை முறை வலம் வர வேண்டும் எனத் தெரியாதவர்கள், அவற்றை நினைவில் வைத்துக்கொள்ள, முடியாதவர்கள் பொதுவாக எந்தக் கோயிலுக்குச் சென்றாலும் எத்தனை முறை வலம் வந்தால் என்ன பலன் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
வலம் வரும் எண்ணிக்கையும் பலன்களும்:
1 முறை வலம் வந்தால் இறைவனிடம் நெருங்க முடியும்.
3 முறை வலம் வந்தால் மனச்சுமை குறையும்.
5 முறை வலம் வந்தால் திருப்பங்கள் நிறைவேறும்.
7 முறை வலம் வந்தால் காரியத்தில் வெற்றி கிடைக்கும்.
9 முறை வலம் வந்தால் எதிரிகள் தொல்லை நீங்கும்.
11 முறை வலம் வந்தால் ஆயுள் விருத்தி அடையும்.
13 முறை வலம் வந்தால் பிரார்த்தனை நிறைவேறும்.
15 முறை முறை வலம் வந்தால் செல்வம் பெருகும்.
17 முறை வலம் வந்தால் தானிய வளம் பெருகும்.
19 முறை வலம் வந்தால் நோய் தீரும்.
21 முறை வலம் வந்தால் கல்வி வளர்ச்சி பெருகும்.
27 முறை வலம் வந்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
108 முறை வலம் வந்தால் சகல நலன்களும் கிடைக்கும்.
208 முறை வலம் வந்தால் யாகம் செய்த பலன் கிடைக்கும்.
வழிபாட்டிற்காக மனத்தூய்மையுடன் நாம் ஒவ்வொரு முறையும் கோயிலுக்கு வரும்போதும் நம்மை அறியாமல் கோயிலை ஒரு முறை சுற்றி வலம் வருகிறோம். அப்படி கோயிலை சுற்றி வலம் வரும்போது நமக்கு புண்ணியங்கள் வந்து சேர்வதாக ஐதீகம்.
முக்கியமாக நமது முன்ஜன்ம பாவங்கள் ஒவ்வொன்றாக விலகி நம் பாவத்திலிருந்து முழுவதுமாக விடுபடுகிறோம் என்றும் நமது முன்னோர்கள் சொல்வது உண்டு. தினமும் கோயிலை வலம் வருவதால் எல்லா தெய்வங்களையும் ஒருசேர வலம் வந்த புண்ணியம் உண்டாகும்.
பௌர்ணமி, கார்த்திகை, திங்கள் சோமவாரம், வெள்ளி என குறிப்பிட்ட நாளில் வலம் வந்தால் எண்ணிய எண்ணம் விரைவில் நிறைவேறும். உடலும் மனமும் புத்துணர்ச்சியுடன் திகழும்.
கோயிலுக்குள் செல்லும்போது ஈர ஆடைகளுடன் செல்லக் கூடாது. கோயிலை வேகமாக, எண்ணிக்கை கணக்கிற்காக வலம் வருவது கூடாது. நிதானமாக, பேசாமல் இறை உணர்வுடன் வலம் வர வேண்டும்.
தெய்வ வழிபாட்டின் மிகச் சுலபமான வழி பிரதட்சணம் செய்வது ஆகும். இதேயே வலம் வருதல், சுற்றி வருதல் என்றும், முன் ஜன்ம பாவங்கள் விலக்குவதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன.
கோயிலை சுற்றி வலம் வருவது ஒரு புண்ணியச் செயல். கோயிலை வரும்போது இறைவனை நினைத்து வழிபட்டால் நாம் நினைத்த காரியங்கள் நிறைவேறும் என்பது ஐதீகம்.🌹 #பக்தி
#திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 எரியாத புனிதம் வாய்ந்த சிவலிங்கப் பூ!*
சிவலிங்க பூ (Cryptolepis buchananii) என்பது இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் மரபு மருத்துவத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் ஒரு புல்வகை கொடியாகும். இது ஆன்மிக மற்றும் மருத்துவ ரீதியாகப் பல பயன்பாடுகளைக் கொண்டுள்ளது. இந்தப் பூ சிவபெருமான் மீது அர்ப்பணிக்க உகந்த, தீயில் எரியாத, ஆன்மிகத் தன்மை வாய்ந்த ஒரு அரிய பூ. இதன் உருவும் பெயரும் சிவலிங்கத்தை நினைவூட்டுவதால் இது சைவ வழிபாட்டில் மிகுந்த முக்கியத்துவம் பெற்றது.
சில சைவ மரபுகளில், இந்தப் பூவை சிவலிங்கத்தின் மேல் வைக்கும்போது அதில் சிவபெருமானின் சக்தி நிறைந்திருப்பதாக நம்பப்படுகிறது. இது தமிழ் மற்றும் சான்றோர்களின் சைவ மரபில் முக்கியமான இடம் பெற்றுள்ளது. இது பொதுவாக ‘ஏகாந்த பூ’ என்றும் அழைக்கப்படுகிறது.
சிவலிங்க பூவின் வகை மற்றும் உருவம்: இந்தப் பூ எரியாதது. இதன் தன்மையால் தீயில் எரியாது என்பதற்காக, இது சிவபெருமானுக்கு உகந்த பூவாகக் கருதப்படுகிறது. கருப்பாக அல்லது நீல நிறமாக காணப்படும். சிறிது தடிமனான வடிவம் கொண்டது. அதன் வடிவம் சிவலிங்கத்தின் வடிவத்தைப் போன்றது என்பதால் இதற்கு, ‘சிவலிங்க பூ’ என்று பெயர்.
சிவலிங்க பூவின் தாவரவியல் பெயர் Cryptolepis buchananii. இது ஒரு வன்மரங்களை சுற்றி ஏறி வளரக்கூடிய கொடி வகைச் செடி. இந்த செடி இந்தியா, இலங்கை மற்றும் சில ஆசிய நாடுகளில் காணப்படுகிறது. இது ஒரு வலுவான கொடியாக வளர்ந்து, 6 மீட்டர் வரை செல்லக்கூடியது. இலைகள் பளிச்சென்ற, நீளமான, கருஞ்சாம்பல் நிறமுடையவை. மலர்கள் சிறிய, மஞ்சள் அல்லது பச்சை மஞ்சள் நிறத்தில், இனிமையான வாசனை கொண்டவை. கனி நீளமான, சிலிண்டர் வடிவம் கொண்டது.
ஆன்மிக முக்கியத்துவம்: சிவலிங்க பூ சிவபெருமானுக்கே உரியதாகக் கருதப்படுகிறது. இது பக்தி உணர்வுடன் அர்ச்சிக்கப்படும் பூவாகும். இதனால் அர்ச்சனை மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது. ‘ஓம் நமசிவாய’ என்ற மந்திரத்துடன் இந்தப் பூவை அர்ப்பணிப்பது சிவன்பெருமானின் அருள் பெருக வழிகாட்டும்.
மருத்துவப் பயன்கள்: சிவலிங்க பூ மற்றும் அதன் செடிக்குச் சில ஆயுர்வேத மருத்துவ குணங்களும் உண்டு. இது புண் ஆறுவதற்கு, உடல் வலிகளை குறைப்பதற்கு, சரும நோய்களுக்கு பயன்படுகிறது என்ற நம்பிக்கை உள்ளது. குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்காக (ரிக்கெட்ஸ்) பயன்படுத்தப்படுகிறது. நரம்பியல் சிக்கல்களுக்கு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. மூட்டு வலி மற்றும் வீக்கம் குறைக்கும் தன்மை கொண்டது. ஆனால், இது குறித்து மருத்துவ ஆலோசனை பெறும்போது மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
நினைவில் வைக்க வேண்டியது: இந்தப் பூவை எப்போதும் தரையில் விழாமல் தூய்மையான பாத்திரத்தில் வைக்க வேண்டும். கோயில்களில் சில இடங்களில் மட்டுமே இது அர்ச்சனைக்குப் பயன்படுகிறது. எல்லா ஆலயங்களிலும் இது கிடைப்பது கடினம்.🌹 #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🖌பக்தி ஓவியம்🎨🙏 #காலை வணக்கம்
#🔍ஜோதிட உலகம் 🌍 #பக்தி #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #முருகன் ஸ்டேட்டஸ் #முருகன் வீடியோஸ்#முருக கடவுள் #பக்தி வீடியோஸ் # யோகம் தரும் ஏலக்காய் மாலை வழிபாடு!*
இந்த உலகில் வாழ்வதற்கு அறிவு மட்டும் தேவையில்லை. கூடவே பொருளாதாரமும் இருந்தால் மட்டுமே வாழ்க்கை சிறக்கும். ஆன்மிக நம்பிக்கைகளில் செல்வத்துக்கு அதிபதியாக மகாலட்சுமி தேவி வணங்கப்படுகிறார். பொதுவாகவே, நறுமணம் கொண்ட பொருட்களில் மகாலட்சுமி தேவி வாசம் செய்வதாக நம்பப்படுவது உண்டு.
மகாலட்சுமியின் அம்சம் சில மணமிக்க பொருட்களில் இருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். இதில் கிராம்பு மற்றும் ஏலக்காய் போன்றவையும் அடங்கும். இவற்றை சமையலுக்குப் பயன்படுத்துவதால் சாதாரண பொருளாகி விடாது. கிராம்பும் ஏலக்காயும் மூலிகை வகையைச் சார்ந்த தாவரங்கள். மகாலட்சுமி தேவிக்கு மிகவும் விருப்பமான பொருட்களில் இவை அடங்கும். இந்த இரண்டையும் வைத்து செல்வ வளத்தை பெருக்குவது எப்படி என்பது பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
செல்வத்தில் நாட்டம் கொண்ட பலருக்கும் தங்கள் குடும்பத்தில் மகாலட்சுமி தேவி நிரந்தரமாக வாசம் செய்ய ஆசை இருக்கும். மகாலட்சுமியை வசியம் பண்ண பலவிதமான வழிகள் உண்டு. பணம் சம்பாதிப்பது கடினமான காரியம் என்றால், சேர்த்த பணத்தை நிலைக்க வைப்பது அதைவிட கடினமானதாக இருக்கும். ஒரு பக்கம் பணம் வந்து வந்து கொண்டே இருந்தாலும் மறுபக்கம் அது நிலைக்காமல் தேவையற்ற வழிகளில் கரைந்து கொண்டே இருக்கும். அடிக்கடி மருத்துவ செலவுகள் ஏற்படுதல், இயந்திரங்கள் பழுதடைதல், வண்டி வாகன செலவுகள் என்று எதிர்பாராத செலவுகள் உண்டாகிக்கொண்டே இருக்கும். இதற்குக் காரணம் மகாலட்சுமியின் அருள் குறைவு என்பதுதான் அர்த்தம்.
மகாலட்சுமியின் அருளைப் பெறுவதற்கு சுலபமான வழிபாடு ஒன்று உண்டு. ஒரு வெள்ளிக்கிழமை அன்று நீங்கள் வழக்கமாக செய்யக்கூடிய பூஜைகுரிய ஏற்பாடுகளை செய்த பின் குத்துவிளக்கு ஒன்றை தனியே பூஜையில் வைக்கவும். விளக்கிற்கு மஞ்சள், குங்குமம் வைத்து மலர்களால் அலங்காரம் செய்து விளக்கின் பாதத்தை சுற்றி பூக்களால் அலங்காரம் செய்யவும். பூக்களில் மணமிக்க மகாலட்சுமி பெரிதும் விரும்பும் மல்லிகை மலர் கட்டாயம் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்.
பின்னர் கிராம்புகளை 54 அல்லது என்ற 108 என்ற எண்ணிக்கையில் எடுத்துக் கொள்ளுங்கள். அதே எண்ணிக்கையில் ஏலக்காயும் எடுத்துக் கொள்ளுங்கள். ஏலக்காயை ஊசி நூல் கொண்டு கோர்த்து மாலையாக செய்து கொள்ளுங்கள். கிராம்பை பூ கட்டுவது போன்று ஒவ்வொன்றாக வைத்து கட்டிக் கொள்ளுங்கள். நைவேத்தியமாக சர்க்கரை பொங்கல், உலர் திராட்சை, மாதுளம் பழம், நெல்லிக்கனிகள் ஐந்து இவற்றை ஒரு தட்டில் விளக்கின் முன்னால் வைத்துக் கொள்ளுங்கள்.
வெற்றிலைப் பாக்கு, பழம் வைத்து அதன் மீது ரூபாய் 501 (அவரவர் இஷ்டம்) காணிக்கை வைத்து இந்த இரண்டு மாலைகளையும் விளக்கின் மீது சாற்றி விளக்கின் ஐந்து முகங்களிலும் தீபம் ஏற்ற வேண்டும். தீபம் ஏற்றிய பின் மகாலட்சுமி சுலோகத்தை வாசிக்கலாம். தொடர்ந்து 21 வாரங்கள் இந்த வழிபாட்டை முறையாக செய்து வருவதன் மூலம் குபேர யோகத்தை அடையலாம் என்று சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. இதனால் மகாலட்சுமி தேவியின் அருள் பரிபூரணமாக உங்களுக்குக் கிடைக்கும்.
மாலைகளை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. அதன் நிறமும் மணமும் மாறும் பட்சத்தில் வேண்டுமானால் மாற்றிக் கொள்ளலாம். இந்த பூஜையை வெள்ளிக்கிழமை செய்ய முடியாத நிலையில் ஒரு பௌர்ணமியிலும் துவங்கி செய்யலாம். மகாலட்சுமி உங்களது வீட்டில் வாசம் செய்ய இந்த பூஜை முறை சிறந்த பலனளிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், முழு நம்பிக்கையோடு இதை செய்து பயனடையலாம். பூஜை செய்ய வேண்டிய நேரம் காலை 6 முதல் 7, மதியம் 1 முதல் 2, இரவு 8 முதல் 9 மணி வரை.
நாமும் மகாலட்சுமியின் அம்சமான குத்துவிளக்குக்கு மணமிக்க ஏலக்காய் மாலைகளை அணிவித்து வாழ்வில் செல்வந்தராக உயர்வோம்.🌹
#திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #🙏🏾சனி பகவான் #🔍ஜோதிட உலகம் 🌍 #பக்தி வந்து வணங்கும் சனீஸ்வரர் ஆலயம் அமைந்த திருத்தலம் தெரியுமா?*
சனி பகவானிடமிருந்து வரும் சக்தி அலைகள் யாராவது நீதி, நேர்மை, சத்தியம், அன்பு, அஹிம்சை, பண்பு, பக்திக்கு விரோதமான காரியங்களை செய்தால் அவர்களுக்கு பலவிதமான இடையூறுகளையும், கஷ்டங்களையும், நஷ்டங்களையும், துன்பங்களையும், தீமைகளையும் உண்டாக்குகிறது. இதன் காரணமாகத்தான் சனி பகவானுக்கு பயப்படுகிறார்கள்.
பொதுவாக, சனி பகவான் காக்கை வாகனத்தின் மீது அமர்ந்து அருள்பாலிப்பார். ஆனால், திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே உள்ள ஏரிக்குப்பம் பகுதியில் உள்ள சனி பகவான் கோயிலில் கல்லில் யந்திரம் செதுக்கப்பட்டு அதுவே சனி பகவானாக வணங்கப்பட்டு வருகிறது. இது சித்தர்களால் உருவாக்கப்பட்ட சனி பகவான் என்கிறார்கள்.
திருவாரூர், திருத்துறைப்பூண்டி நெடுஞ்சாலையில் உள்ளது திருக்கொள்ளிக்காடு இங்குள்ள அக்னீஸ்வரர் ஆலயத்தில் சனி பகவான் கலப்பை ஏந்திய வடிவில் தனிச் சன்னிதியில் பொங்கு சனி எனும் அவதாரத்தில் அபய முத்திரையுடன் அருள்பாலிக்கிறார். சனீஸ்வரருக்கு அருகில் தனிச்சன்னிதியில் கோயில் கொண்டிருக்கிறார் ஸ்ரீ மகாலட்சுமி தாயார். எனவே, திருக்கொள்ளிக்காட்டில் பொங்கு சனீஸ்வரரையும் மகாலக்ஷ்மி தாயாரையும் மனதார வேண்டிக்கொண்டாலே, மங்கல காரியங்கள் சீரும் சிறப்புமாக நடைபெறும். ஐஸ்வர்யம் பெருகும் என்பது ஐதீகம். இங்கு நவகிரகங்களும் ‘ப’ வடிவில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தேனி மாவட்டம், குச்சனூரில் அமைந்துள்ளது பிரபலமான சனி பகவான் கோயில். சனி தோஷம் உடையவர்கள் இந்தக் கோயிலுக்கு வந்து மனமுருக வேண்ட, அவர்களுக்கு வரும் சோதனைகள் நீங்கி வாழ்க்கையில் வளம் பெற முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. சனிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகளும் ஆராதனைகளும் இக்கோயிலில் சிறப்பாக நடைபெறுகிறது. இங்கு வரும் பக்தர்கள் எள் விளக்கு போட்டு காகத்திற்கு அன்னமிட்டு வழிபடுகின்றார்கள். இரண்டாயிரம் ஆண்டுகள் பழைமையான கோயில் இது. வேறு எங்கும் இல்லாத வழக்கமாய் பூஜைக்கு மண்ணாலான காக்கை பொம்மைகளை காணிக்கையாக செலுத்துவது போன்ற பல அதிசயமான விஷயங்கள் நிறைந்துள்ள ஒரே கோயில் இதுவென்பது சிறப்பு.
சனி பகவானை எந்தக் கோயிலிலும் வலம் வர முடியாது. ஆனால், அவரை வலம் வரும் வகையில் சன்னிதி அமைந்துள்ள ஒரே கோயில் திருநெல்வேலி மாவட்டம், இலத்தூர் மதுநாத சுவாமி கோயில் மட்டும்தான். இங்கு மட்டுமே சனி பகவான் அருள் ஆசி வழங்கும் கோலத்தில் அருள்பாலிக்கிறார். அகத்தியருக்கு ஏழரைச் சனி நடைபெற்ற காலத்தில், இங்கு வடக்கு நோக்கி அமர்ந்து சனீஸ்வர ஸ்தோத்திரம் பாடியபோது, சனீஸ்வர பகவான் அகத்தியருக்குக் காட்சியளித்தார். இதன் அடிப்படையில், இங்கு பொங்கு சனியாக சனீஸ்வர பகவான் தனிச்சன்னிதியில், வலம் வந்து வழிபடும் விதம் எழுந்தருளியுள்ளார்.
மயிலாடுதுறை அருகிலுள்ள கூறை நாடு புணுகீஸ்வரர் ஆலயத்தில் உள்ள சனி பகவான் சிவப்பு நிறக் கல்லில் காட்சி தருகிறார். இது இங்கு மட்டுமே உள்ள தனிச்சிறப்பு. சனி பகவான் திருநள்ளாறில் இருப்பதைப் போன்று கிழக்கு நோக்கி தனி விமானத்துடன் கூடிய கருவறையில் அமர்ந்துள்ளார்.
விழுப்புரத்திலிருந்து திருக்கோவிலூர் செல்லும் வழியில் 18 கி.மீ. தொலைவில் உள்ளது கல்பட்டு எனும் ஊர். இங்கு வக்கிர சனி பகவானுக்கு தனிக் கோயில் உள்ளது. சனிக்கிழமை அன்று அகல் விளக்கில் கருப்பு துணியில் எள் வைத்து நல்லெண்ணெய் விளக்கேற்றி சன்னிதியை 9 முறை வலம் வந்து சனி பகவானின் வலது புறமாக நின்று வழிபட அனைத்து கஷ்டங்களும் விலகும் என்பது ஐதீகம்.
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டையில் வன்னிவேடு அகத்தீஸ்வரர் சிவன் கோயில் குளத்தில் ஆடி அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது விசேஷம். இங்குள்ள சனீஸ்வர பகவானுக்கு 17 பாகற்காயை மாலையாகத் தொடுத்து அணிவித்து தீபமேற்றி வழிபட வீடு, கட்டடம் கட்டும் பணி தடங்கள் இல்லாமல் நடக்கும் என்பது நம்பிக்கை.
வேலூர் மாவட்டம், அரக்கோணத்திலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது மங்கம்மாபேட்டை. இங்குள்ள மங்கள சனீஸ்வரர் ஆலயத்தில் உள்ள சனி பகவான், தன்னுடைய மனைவி நீலா தேவியை மடியில் அமர்த்தியபடி கல்யாண சனீஸ்வரராக காட்சியளிக்கிறார். எனவே, இந்த ஆலயத்தில் இங்கே சஷ்டியப்தபூர்த்தி, சதாபிஷேகம், பீமரதசாந்தி போன்ற சுப விசேஷங்களையும் செய்கிறார்கள். இவ்வாறு செய்வதால், ஆயுள் விருத்தியாகி, குடும்ப நலனும் மேம்படுவதாக பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். பிரமிடு போன்று அமைந்திருக்கும் இந்த ஆலயத்தின் கருவறை விமானம் மிகவும் சக்தி வாய்ந்ததாகத் திகழ்கிறது.🌹












