திருநீற்றுச் சுவடு
ShareChat
click to see wallet page
@193036147
193036147
திருநீற்றுச் சுவடு
@193036147
நல்லதே நினை நல்லதே நடக்கும் திருச்சிற்றம்பலம்
இதனால்தான் பெரியாழ்வார் என்று பெயர் வந்தது! - முனைவர் ஶ்ரீராம் பெரியாழ்வார். என்ன ஒரு அற்புதமான பெயர்! வேறு எந்த ஆழ்வாருக்கும் கிடைக்காத இந்தப் பெயர் இவருக்கு எப்படிக் கிடைத்தது? அதற்கு ஒரே வரியிலே பெரியவர்கள் பதில் சொல்லி விட்டார்கள். வேறு ஆழ்வார்களுக்கு இல்லாத பரிவு இவருக்கு இருந்ததால் பட்டர் பிரான், விஷ்ணு சித்தர் என்கின்ற பெயர் பெரியாழ்வார் என்னும் பெயராக மாறி நிலைத்தது. எல்லா ஆழ்வார்களுக்கும் தானே பரிவு? அதில் என்ன இவருக்கு ஒரு சிறப்பு இருக்க முடியும்? என்ற கேள்வி எழும். அதற்கு அருமையான விளக்கம் அளித்தார்கள், பெரியவர்கள். 99 மதிப்பெண் எடுத்தவர் உயர்ந்த நிலையில் கொண்டாடப்படுவர். ஆனால், அதைவிட ஒரு மதிப்பெண் கூடுதலாக நூற்றுக்கு நூறு வாங்கியவருக்கு அதைவிட ஒரு சிறப்பு உண்டு அல்லவா. எல்லா ஆழ்வார்களுக்கும் எம்பெருமான் மீது பரிவுதான். கொண்டாட்டம்தான். மங்கல வாழ்த்துக்களால் அவனை வாயாரப் பாடியவர்கள்தான். ஆனால், பெரியாழ்வாருக்கு இந்தப் பரிவு சற்று கூடுதலாக இருந்தது.அடுப்பில் பால் வைத்தால் சூடு பொறுக்காமல் பொங்குகிறதே, அதைப்போல இவருடைய மனதில் அன்பு எனும் பால் பொங்கியது. மற்ற ஆழ்வார்களுக்கு, எம்பெருமானுடைய மேன்மையிலும் மற்ற பிற குணங்களிலும் ஆழங்கால் பட்டு பாசுரம் பாடிக் கொண்டிருந்த பொழுது, ஒரு தாய் தன் குழந்தையை நினைத்து பாசத்தால் பொங்குவதுபோல, அன்பால் பொங்கினார். அந்தத் தாய்மை குணம் விஞ்சி நின்றதால் இவருக்கு பெரியாழ்வார் என்னும் பெயர். இவர் வாழ்வில் ஒரு நிகழ்ச்சி.மதுரை பாண்டியன் அவையிலே யார் பரத்துவம் என்பதை நிரூபிக்க வேண்டிய சூழல் இருந்தது. பலரும் முயன்றனர். இவர் இறைவன் ஆணைக்கு இணங்க நிரூபித்து விட்டார். அவையில் கூடியிருந்த அத்தனை புலவர்களுக்கும் மறு மொழி தந்தார். ஐயம் திரிபற அவர்கள் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் பதில் சொன்னார். பரிசுக்காகக் கட்டி வைத்திருந்த பொற்கிழி தானே ஆழ்வார் மடிமீது விழுந்தது. எல்லோரும் செல்வத்தை இரு கையால் பற்றிக் கொள்வர். ஆனால், அந்தச் செல்வமே இவரை பற்றிக் கொண்டது. மன்னன் மகிழ்ந்தான். மக்கள் மகிழ்ந்தனர். தன்னை திறம்பட வெளிப்படுத்திய ஞானத்தைக் கண்டு எம்பெருமானும் மகிழ்ந்தான். வைணவ சமய நெறியில் ஒரு அற்புதமான விஷயம் சொல்லப்படும். நீங்கள் ஆண்டவனைப் பார்ப்பது என்பது இருக்கட்டும். உங்கள் செயல் அவனுக்கு உகப்பாய் இருந்தால் அவன் உங்களைப் பார்க்க விரும்புவான். இது பெரியாழ்வார் விஷயத்தில் உண்மையாகியது. ஒரு பெரிய மைதானத்தில் யானையின் மீது ஆழ்வாரை உட்கார வைத்து, இருபுறமும் கவரி வீச, விழா எடுத்தான், பாண்டிய மன்னன். இந்த விழாவைக் காண எல்லோரும் ஆசைப்பட்டு கூடல் நகரத்தில் கூடினர். பகவானும் ஆசைப்பட்டான். வைகுந்தத்தில் கருடனை விளித்து, ‘‘கருடா, நம் விஷ்ணு சித்தருக்கு விரிவான விழாவை பாண்டியன் கொண்டாடுகிறான். அதைக் காணுவதற்குப் புறப்பட வேண்டும். தயாராக இரு” என்றான். பக்கத்தில் இருந்த தேவிமார்கள், ‘‘நீங்கள் மட்டும் போனால் எப்படி? நம்முடைய பிள்ளையின் விழாவைக் காண நாங்களும் வருவோம்” என்று கேட்க, எம்பெருமான் கருடன் மீதேறி வந்து, ஆழ்வாருக்குக் காட்சி தந்தான். இப்படி ஆழ்வாருக்குக் கூடல் மாநகரில் எம்பெருமான் காட்சி தந்த இடம் “மெய் காட்டும் பொட்டல்” என்று வழங்கப்படுகிறது. இப்பொழுதும் ஆண்டுதோறும் கூடலழகர் ஆலயத்திற்கு அருகே இந்த வைபவம் நடைபெறுகிறது. ஆழ்வார் பகவானைப் பார்க்கிறார். பகவான் ஆழ்வாரைப் பார்க்கிறான். பகவானுக்கு ஆனந்தமோ ஆனந்தம். அந்த ஆனந்தம் அவனுடைய அழகை இன்னும் கூட்டுகிறது. ஒரு நொடி எம்பெருமானுடைய ஒளிமயமான ஆனந்த மயமான அற்புத வடிவழகைச் சேவித்த ஆழ்வார், அடுத்த கணம் யானையின் கழுத்தில் இருந்த மணியை எடுத்து, அவனுக்குத் தமிழால் பாசுரம் பாடிக் காப்பிடுகின்றார். பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம் மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன் செவ்வடி செவ்விதிருக் காப்பு பல்லாண்டு என்று தொடங்கும் இந்தக் காப்பு தான் மங்கல வாழ்த்துகளுக்கு எல்லாம் மகத்தான மணிமகுடமாகக் கொண்டாடப்படுகிறது. அழகான குழந்தையை தாய் பார்த்து அனுபவிப்பாள். ஆனால், அதே தாய்க்கு ஒரு அச்சமும் வந்துவிடும். “ஐயோ, இந்த குழந்தை இவ்வளவு அழகாக இருக்கிறதே, என்னுடைய கண்ணே பட்டுவிடும் போல இருக்கிறதே, என்னுடைய கண்ணே பட்டுவிடும் படி இருந்தால், மற்றவர் கண் எச்சில் இந்தக் குழந்தைக்குச் சங்கடத்தைத் தருமே” என்று நினைப்பாள். மனம் பதைப்ப, கருப்பு மை இட்டு, சுற்றிப்போட்டு கண் எச்சிலைக் கழிப்பாள். இவைகள் எல்லாம் சடங்குகளாக இருக்கலாம். ஆனால் இவற்றின் இடையே இருப்பது பரிவு. விஞ்சிய பரிவு. அந்த விஞ்சிய பரிவு தாய்மை உணர்வு கொண்ட ஆழ்வாரிடம் இருந்து தமிழ்ப் பாசுரமாக விரிந்து மங்கல வாழ்த்து செய்ததால், இவருடைய விஷ்ணு சித்தர் என்ற பெயர் மாறி பெரியாழ்வார் என்ற பெயர் நிலைத்தது. இதை மணவாள மாமுனிகள் உபதேச ரத்தினமாலை என்ற பாசுரத்தில் உணர்ச்சிகரமாக எடுத்துரைக்கிறார். மங்களாசாசனத்தில் மற்றுள்ள ஆழ்வார்கள் தங்கள் ஆர்வத்தளவு தானன்றி - பொங்கும் பரிவாலே வில்லிபுத்தூர் பட்டர்பிரான் பெற்றான் பெரியாழ்வார் என்னும் பெயர் எல்லா ஆழ்வார்களுக்கும் பரிவு தான். எல்லா ஆழ்வார்களுக்கும் எம்பெருமானைத் துதிப்பதில் ஆர்வம் தான். ஆனால் இவருக்கு இவர் அறியாமலேயே அந்தப் பரிவு விஞ்சி வெளிப்பட்டதால் வில்லிபுத்தூர் பட்டர்பிரான் என்ற திருநாமம் பெரியாழ்வார் என்கிற பெயராக மலர்ந்தது. இன்றளவும் நிலைத்தது. அந்தப் பெரியாழ்வார் அவதார உற்ஸவம் பத்து நாள் திருவிழாவாக அவர் அவதரித்த ஸ்ரீவில்லிபுத்தூர் திருத்தலத்திலே, ஆனி மாதம் ஜோதி நட்சத்திரம் என்று சொல்லப்படும் சுவாதி நட்சத்திரத்தை ஒட்டி கொண்டாடப்படுகிறது. தாய்மை உணர்வு கொண்ட ஆழ்வார் அவதார இடம் என்பதால் பூமித்தாயே ஆழ்வாருக்கு திருமகளாய் அவதரித்தார். இன்னொரு விசேஷம். 12 ஆழ்வார்களில் இரண்டு ஆழ்வார்கள் அவதரித்த பெருமை உடையது ஸ்ரீவில்லிபுத்தூர். தந்தையும் மகளும் என இரண்டு ஆழ்வார்கள் அவதரித்த பெருமையுடையது. அதுவும் ஆனி, ஆடி என அடுத்தடுத்த மாதங்களில் அவதரித்த பெருமை உடையது. முதலில் வருவது ஆனி மாதம் என்பதால் திருத்தந்தையாக பெரியாழ்வாரும், அடுத்த மாதம் ஆடி என்பதால் திருமகளான ஆண்டாள் நாச்சியாரும் அவதரித்த பெருமை உடையது. அதனால் பகவானே இவர்களுக்குப் பின்னால்தான் நான் என்று காட்டுவது போல ஆவணி மாதத்திலே தன் அவதாரத்தை எடுத்துக்கொண்டார். தாய்மை உணர்வு விஞ்சியதால், பெரியாழ்வார் கண்ணனைக் குழந்தையாக்கி, தான் தாயாகி, கன்னித்தமிழில் அவருக்குப் பிள்ளைத்தமிழ் பாடினார். பின்னால் தமிழில் எத்தனையோ பிள்ளைத்தமிழ் நூல்கள் இயற்றப்பட்டாலும் பெரியாழ்வாரின் பிள்ளைத் தமிழுக்கு சீரும் சிறப்பும் வந்தது. என்ன சிறப்பு என்று கேட்கலாம்? இன்றைக்கும் இந்தப் பிள்ளைத்தமிழ் எல்லா திருமால் ஆலயங்களிலும், திருமால் அடியார் இல்லங்களிலும், ஓதப்படும் சிறப்பைப் பெற்றது. இந்தச் சிறப்பு மற்ற பிள்ளைத் தமிழ் நூல்களுக்கு இல்லை அல்லவா? எந்தப் பாசுரம் தொடங்கும் போதும், பிரணவத்தைப்போல, திருப்பல்லாண்டு ஓதப்படுகிறது. சரி திருமஞ்சன காலம் நடந்து கொண்டிருக்கிறது. அங்கே மற்ற ஆழ்வார்கள் பாசுரங்கள் எல்லாம் பிறகுதான்.பெரியாழ்வாரின் நீராட்ட பாசுரம் கம்பீரமாக ஒலிக்கும். வெண்ணெ யளைந்த குணுங்கும் விளையாடு புழுதியும் கொண்டு திண்ணெனெ இவ்விரா உன்னைத் தேய்த்துக் கிடக்கநான் ஒட்டேன் எண்ணெய்ப் புளிப்பழம் கொண்டு இங்குஎத்தனை போதும் இருந்தேன் நண்ண லரிய பிரானே. நாரணா நீராட வாராய். சரி அடுத்து பெருமாளுக்குப் பூச்சூடல். இதோ பெரியாழ்வார் பாசுரம். ஒவ்வொரு பாசுரமாகச் சொல்லிச் பூச்சூட்டுவார்கள். ஆனிரை மேய்க்க நீ போதி அருமருந் தாவதறியாய் கானக மெல்லாம் திரிந்துஉன் கரிய திருமேனி வாட பானையில் பாலைப் பருகிப் பற்றாதா ரெல்லாம் சிரிப்ப தேனி லினிய பிரானே செண்பகப் பூச்சூட்ட வாராய். மாலையாகி விட்டது. திருக் காப்பிடல் செய்யவேண்டும். அங்கும் பெரியாழ்வார் தான். இந்திர னோடு பிரமன் ஈசன் இமைய வரெல்லாம் மந்திர மாமலர் கொண்டு மறைந்து உவராய் வந்து நின்றார் சந்திரன் மாளிகை சேரும் சதிரர்கள் வெள்ளறை நின்றாய் அந்தியம் போது இது வாகும் அழகனே காப்பிட வாராய். கடைசி பூஜை அர்த்தஜாம பூஜை. சுவாமிக்கு பால் நிவேதனம் செய்து, பள்ளியறைப் பாசுரம் பாட வேண்டுமே. ஊஞ்சலில் போட்டுத் தாலாட்ட வேண்டுமே. தமிழ் கேட்டால் தானே அந்த தலைவனுக்கு கூட தூக்கம் வரும். அதற்கும் பெரியாழ்வார் தான் வருவார். மாணிக்கம் கட்டி வயிரம் இடைகட்டி ஆணிப்பொன் னால்செய்த வண்ணச் சிறுத்தொட்டில் பேணி உனக்குப் பிரமன் விடுதந்தான் மாணிக் குறளனே தாலேலோ! வைய மளந்தானே தாலேலோ! சரி எல்லாம் முடிந்துவிட்டது. பட்டர் சந்நதி கதவை அடைத்து விட்டு கோயிலுக்கு வெளியே வர வேண்டும். நம்மையெல்லாம் காக்கின்ற இறைவனுக்குப் பாதுகாப்பு வேண்டும் அவனைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும், என்ற பரிவால் ஏற்படும் பாச உணர்வு. இறைவன் நம்மைக் காப்பாற்றுவான் என்று நினைப்பது ஞான பாவம். இறைவனை நாம் காப்பாற்ற வேண்டும் என்று நினைப்பது பிரேம பாவம். ஞானபாவ முதிர்ச்சிதான் பிரேம பாவம் என்று சொன்னார்களே தவிர பிரேம பாவத்தின் முதிர்ச்சி ஞான பாவம் என்று சொல்ல மாட்டார்கள். அளவுக்கு விஞ்சிய பிரேம பாவம் வந்து விட்டால் அவனை விஞ்சிய பாகவதன் கிடையாது. பக்தனும் கிடையாது. இதைத்தான், ஸ்ரீமத் பாகவதத்தில் கோபியர்கள் எடுத்துக் காட்டுகின்றார்கள். அப்படி எளிமையானவர்கள் வாழும் இடம் தான் பகவானுக்கு பிருந்தாவனம் ஆகியது. அதனால்தான் ஆண்டாள் கண்ணன் பிருந்தாவனத்தில் இருக்கிறான் என்று கண்டு பிருந்தாவனத்தில் கண்டோமே என்று பாசுரம் விடுகிறாள். ராமாயணத்தில் ஒரு காட்சி. குகனைத் தேடி ராம லட்சுமணர்கள் சீதையோடு வந்து விட்டார்கள். குசலம் விசாரித்து முடித்து அவனுக்கு வேண்டிய வசதிகளைச் செய்து தந்துவிட்டு, குகன் தன் சேனைகளோடு நிற்கிறான். ராமபிரான் சீதையோடு உறங்குவதற்கு செல்லுகின்றான். ஒரு துளி கூட உறக்கம் இல்லாத லட்சுமணன், வில்லும் அம்புமாக இரவு முழுவதும் காவல் காக்கிறான். அவன்தான் காவல் இருக்கிறானே, குகன் தன்னுடைய பரிவாரங்களோடு போய் வேறு வேலைகளைப் பார்க்கலாமே? தம்பி பரதனை முன்னிட்டுக் கொண்டு ராமனை நாட்டிலிருந்து வெளியேற்றி விட்டார்கள் என்று கேட்டதிலிருந்து தன்னுடைய தலைவனான ராமனுக்கு, அயோத்தி படைகளாலோ, அல்லது வேறு ஏதாவது ஒருவராலோ ஆபத்து வந்து விட்டால் என்ன செய்வது என்று நினைக்கின்றான். அவன் அங்கே ராமனோடு துணைக்கு வந்த லட்சுமணனைக் கூட நம்புவதற்கு தயாராக இல்லை.ஏன், தன்னுடைய படைவீரர்களைக் கூட அவன் நம்புவதற்குத் தயாராக இல்லை. அதனால் தானே இரவு முழுக்க பல்வேறு ஆயுதங்களோடு காவல் காத்தான் என்று வரும். இந்த இடத்திலே உரையாசிரியர்கள் நுட்பமான ஒரு விஷயத்தை சொல்வார்கள். இவர்கள் எம்பெருமானைக் காப்பதாக நினைத்துக்கொண்டு காவல் இருக்கின்றார்கள். உண்மையில் எம்பெருமான் இவர்களுக்கு ஏதாவது வந்து விடுமே என்று காவல் காத்துக் கொண்டிருக்கிறான். அது இவர்களுக்குப் புரியவில்லை. புரியாததற்குக் காரணம் ஞானக் குறைவு அல்ல, பரிவின் நிறைவு என்பார்கள். இந்த நிறைவு பெரியாழ்வாரிடம் இருந்ததால், பெருமாளுக்கு ஏதாவது ஆபத்து வந்துவிட்டால் என்ன செய்வது என்று பதறுகிறார். ஒரு குழந்தை கட்டிலில் படுத்துக் கொண்டிருக்கும் பொழுது, விழுந்து விடுமோ, பூச்சிகள் கடிக்குமோ என்று ஒரு தாய் தூங்காமல் அந்தக் கட்டிலின் மீதும், குழந்தையின் மீதும் கண் வைத்திருப்பது போல பெரியாழ்வார் இருக்கிறார். அந்த பரிவு நிலை பாசுரமாக வெளிப்படுகிறது. சக்கரத்தாழ்வாரே கவனம்! சங்காழ்வாரே கவனம்! நாந்தகம் என்னும் வாளே, ஜாக்கிரதை! சார்ங்கம் என்னும் வில்லே கவனம்! கௌமோதகி என்கிற கதையே,கவனம்! இந்திரன் அக்னி, எமன், நைருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானனன் எனும் அஷ்டதிக்குப் பாலகர்களே!அதிக கவனம்! எப்பொழுதும் கூடவே இருக்கக்கூடிய அனந்தனே, பகவான்படுத்துக் கொண்டிருக்கிறான் கவனம்! வேத வித்தகனான கருடனே! பகவான் பள்ளி கொண்டிருக்கிறான் கவனம். உங்கள் கவனம் எல்லாம் நீங்கள் இந்தப் பள்ளி அறையைக் கவனமாகப் பாதுகாத்து வாருங்கள். இப்படி ஏதாவது ஒரு தமிழ் பாசுரம் இருக்கிறதா என்றால் இல்லை. இந்தப் பாசுரம் தான் ஒவ்வொருவரும் இரவில் தங்கள் பூஜை அறையில் திருத்தாள் இடும் போதும், கோயில் சந்நதியில் எல்லாம் முடித்து திருத்தாள் இடும் போதும் பாடுவார்கள். உறக லுறக லுறகல் ஒண்சுட ராழியே சங்கே அறவெறி நாந்தக வாளே அழகிய சார்ங்கமே தண்டே இறவு படாம லிருந்த எண்மர் உலோகபா லீர்காள் பறவை யரையா உறகல் பள்ளி யறைக்குறிக் கொண்மின். உறகல்... உறகல்... உறகல்... என்று மூன்று தரம் ஆணையிட்டு பேசுகின்றார்.. உறங்காது இருங்கள், உறங்காது இருங்கள், உறங்காது இருங்கள் என்பது இதன் பொருள். பெரியாழ்வார் என்ற பெயருக்கு, இதைவிடச் சிறந்த பாசுரத்தைச் சான்றாக எடுத்துக்காட்ட முடியுமா என்ன?. நன்றி - தினகரன் ஆன்மிகம் 25.6.2025 #🔍ஜோதிட உலகம் 🌍 #🔥🕉️அண்ணாமலையார் கோவில் •×சிவன்ו🕉️🔥 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶
🔍ஜோதிட உலகம் 🌍 - ShareChat
#🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🔥🕉️அண்ணாமலையார் கோவில் •×சிவன்ו🕉️🔥 #🔍ஜோதிட உலகம் 🌍 #🙏கோவில் பற்றிய இந்த சுவாரஸ்யத் தகவல்கள் உங்களுக்குத் தெரியுமா?* பகவான் மகாவிஷ்ணுவின் வாகனமாகத் திகழும் கருடனை கருடாழ்வார், விஷ்ணுப்பிரியன், விஹாகேஸ்வரன், வைநதேயன், சுபர்ணன், புள்ளரசன், பட்சிராஜன், பெரிய திருவடி, கருத்மான், சாபர்ணன், பந்தகாசனன், பதகேந்திரன், மோதகாமோதர், மங்களாலயர், சோமகாரீ, விஜயன், கிருஷ்ணன், ஜயகருடன், கலுழன், சுவணன்கிரி, ஓடும்புள், கொற்றப்புள் என பல்வேறு பெயர்களைக் கொண்டு அழைக்கின்றனர். கருடன் குறித்த சில சுவாரசியமான தகவல்களை இந்தப் பதிவில் காண்போம். * குப்தர்களுடைய நாட்டு நாணயத்தில் கருடனின் உருவத்தைப் பதித்திருந்தார்கள். * மௌரியர்கள் கருடனை அதிர்ஷ்டம் நிறைந்த கடவுளாகக் கருதி வழிபட்டனர். * தேவகிரி யாதவர்களின் கொடியும் சின்னமும் கருடன்தான். * ஸ்ரீரங்கம், ரங்கநாதர் கோயிலில் கருடாழ்வாருக்கு தனிச் சன்னிதி உண்டு. 5 அடி உயர பீடத்தில், 12 அடி உயரத்தில், இங்கு இவர் அமர்ந்த கோலத்தில் கம்பீரமாகக் காட்சி தருகிறார். * விண்ணுலகில் இருந்து கருடன் கொண்டு வந்த அமிர்த கலசத்தில் சூட்டப்பட்டிருந்த தேவலோகப் புல்லே தர்ப்பை ஆகும். * அட்சய திருதியை அன்று கும்பகோணத்தில் நடைபெறும் 16 கருட சேவை புகழ் பெற்றது. * திருவாரூர் மாவட்டம், திருக்கண்ணமங்கையில் கருடாழ்வார் பெரிய உருவில் காட்சி தருகிறார். இவர் பாம்பையே ஆடையாக அணிந்துள்ளதாக ஐதீகம். 9 கெஜ புடைவைதான் இவருக்கு அணிவிக்கப்படுகிறது. * கருடன் வேதங்கள் அறிந்த பண்டிதன் என்று பத்ம புராணம் இவரைப் புகழ்கிறது. * கும்பகோணம் அருகில் உள்ள நாச்சியார்கோவில் திருத்தலத்தில் 684 அடி நீளமும் 225 அடி அகலமும் கொண்ட ஒரு திருக்குளம் உள்ளது. இதில் உள்ள தீர்த்தம் மிகவும் புனிதமானது. இத்தலத்தில் அருளும் நம்பி எம்பெருமான் அனுபவிப்பதற்காக திருப்பாற்கடலில் இருந்து வைர முடியை கருடாழ்வார் எடுத்து வரும்போது, அதில் இருந்த ஒரு மணி கழன்று இந்தக் குளத்தில் விழுந்ததாக ஐதீகம். எனவே, இந்தக் குளம் மணிமுத்தாறு என்று அழைக்கப்படுகிறது. * ஸ்ரீவைகுண்டம் கோயிலில் கருட பகவான் தனது சிறகுகளை உயரே தூக்கி, பறக்கும் நிலையில் பறவையாகக் காட்சி தருகிறார். * ஆழ்வார்திருநகரி அருகில் பெருங்குளம் என்னும் ஊரில் உள்ள கருடாழ்வார் உத்ஸவ பெருமாளுக்கு அருகிலேயே காட்சி தருகிறார். * கருடன் தகர்த்த மேருமலையின் ஒரு பகுதிதான் இலங்கை. * ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோயில் சன்னிதியில், ஸ்ரீரங்கமன்னாருடன் ஆண்டாள் மற்றும் கருடாழ்வார் அருகருகே காட்சி தருவது விசேஷம். * சென்னை, சவுகார்பேட்டையில் உள்ள பைராகி மடம் திருவேங்கடம் ஏழுமலையான் ஆலயத்தில், பெண் வடிவிலான கருடனை தரிசிக்கலாம். கார்த்திகை மாத உத்ஸவத்தின்போது, அலர்மேலுமங்கை தாயார் இந்த பெண் கருட வாகனத்தில்தான் வீதி உலா வருகிறார். * திருக்கண்ணங்குடி தலத்தில் கருடாழ்வார் கைகளை காட்டிய கோலத்தில் தரிசனம் தருகிறார். * தஞ்சை - திருவாரூர் சாலையில் உள்ள எண்கண் தலத்தில் ஆதிநாராயண பெருமாள் கருடன் மேல் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். * மன்னார்குடி, ஸ்ரீ ராஜகோபால சுவாமி கோயிலில் உள்ள ஒற்றைக் கல்லால் ஆன கருட கம்பம் அபூர்வமானது. * கும்பகோணம், நாச்சியார்கோவில் கல் கருடனுக்கு, பயத்தம் பருப்பு, வெல்லம், தேங்காய் சேர்த்த அமிர்த கலசம் எனும் பிரசாதம் நைவேத்தியம் செய்யப்படுகிறது. * தஞ்சை, நீலமேகப் பெருமாள் கோயிலில் வைகாசி மாதம் திருவோணம் நட்சத்திரத்தன்று 18 கருட சேவை விமரிசையாக நடைபெறுகிறது.🌹
🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 - கருடனை பற்றிய இந்த சுவாரஸ்யத் தகவல்கள் உங்களுக்குத் தெரியுமா? கருடனை பற்றிய இந்த சுவாரஸ்யத் தகவல்கள் உங்களுக்குத் தெரியுமா? - ShareChat
#திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #ஸ்ரீ விநாயகா ஜோதிட நிலையம் #விநாயகர்
திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 - கணபதியை வலம்புரி, இடம்புரி விநாயகராக  வழிபடுவதன் தாத்பரியம்! கணபதியை வலம்புரி, இடம்புரி விநாயகராக  வழிபடுவதன் தாத்பரியம்! - ShareChat
*உமையாம்பிகை அம்பாள் உடனுறை வீரசேகரர் திருக்கோயில், சாக்கோட்டை, சிவகங்கை மாவட்டம்.* முன்னொரு காலத்தில் வனமாக இருந்த இப்பகுதிக்கு வந்த வேடுவன் ஒருவன், ஒருமரத்தின் அருகிலிருந்த வள்ளிக்கிழங்கு கொடியை கடப்பாரை கொண்டு தோண்டினான். அந்த இடத்தில் இருந்து ரத்தம் பீறிட்டது. ஆச்சர்யமடைந்த அவன், நிலத்திற்கு கீழே பார்த்தபோது, லிங்கம் ஒன்று இருந்தது. சிவன் நிகழ்த்திய இந்த அதிசயத்தை வேடுவன் மன்னரிடம் கூறினான். இதைக்கேட்டதுமே, குஷ்டநோயால் பாதிக்கப்பட்டிருந்த மன்னர் குணமானார். அவர் சுவாமியை முதல் முறை வலம் வந்தபோது, அங்கிருந்த வீரை மரம், பலா மரமாக மாறியது. மன்னன், திகைப்புற்று சிவனை வணங்கி மன்னிப்பு கேட்டான். அம்மரத்திலிருக்கும் கனியை உண்டால், அவனது நோய்கள் தீரும் என்று கூறி சுவாமி அருளினார். மன்னர், அப்பழத்தை உண்ட பிறகு, அம்மரம் மீண்டும் வீரை மரமாகவே மாறியது. சிவனை வணங்கிவிட்டு, இம்மரத்தை வணங்கினால் எண்ணியது நிறைவேறும் என்பது நம்பிக்கை. புழுங்கல் அரிசி நைவேத்தியம்: மதுரையில் பாண்டிய மன்னரிடம் பணியாற்றிய மாணிக்கவாசகர் குதிரைகள் வாங்க சென்றபோது, இவ்வழியே சென்றார். அப்போது, சிவனுக்கு தன்னிடமிருந்த புழுங்கல் அரிசியை சமைத்து நைவேத்யமாக படைத்தார். அன்று முதல், இங்கு புழுங்கல் அரிசி சாதமே நைவேத்யமாக படைக்கப்படுகிறது. அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்பட்டு அவர்களை ஏமாற்றுபவர்களை இத்தலத்து இறைவன் உடனடியாக தண்டிப்பவராக இருக்கிறார். இங்கு இறைவனுக்கு புழுங்கல் அரிசி சாதம் நைவேத்யம் செய்யப்படுகிறது. இத்தலவிநாயகர் விக்கிரம விஜய விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். வீரசேகர சுவாமியும், அம்பாள் உமையாம்பிகையும் தனித்தனி சன்னதிகளில் அருளுகின்றனர். இங்குள்ள பைரவர் இரட்டை நாய் வாகனங்களுடன் காட்சி தருவது சிறப்பு. 9 நிலையுடன் ராஜகோபுரமும் இருக்கிறது. புத்திர தோஷம் உள்ளவர்கள், கண் நோய் உள்ளவர்கள் இங்கு வேண்டிக்கொண்டால் நிவர்த்தியாவதாக நம்பிக்கை. காரைக்குடியிலிருந்து 10 கி.மீ., தூரத்தில் இத்தலம் இருக்கிறது. காரைக்குடியிலிருந்து பஸ்கள் உள்ளன. #🖌பக்தி ஓவியம்🎨🙏 #சிவன் #🔥🕉️அண்ணாமலையார் கோவில் •×சிவன்ו🕉️🔥 #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥
🖌பக்தி ஓவியம்🎨🙏 - ೩ ೩ - ShareChat
#திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🔥🕉️அண்ணாமலையார் கோவில் •×சிவன்ו🕉️🔥 #சிவன் #🖌பக்தி ஓவியம்🎨🙏 இது புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருப்பெருந்துறை (இன்று ஆவுடையார்கோயில்) எனும் தலத்தைப் போற்றிப் பாடப்பட்டது; இறைவன் மாணிக்கவாசகரை ஆட்கொண்டு, குதிரை வாங்கச் சென்றபோது அவரை ஆட்கொண்ட திருத்தலம் இது. இந்த பதிகங்களில், இறைவன் மீதுள்ள பேரன்பையும், அவர் அருளால் பெற்ற பேரின்பத்தையும், உலகப் பற்றுகளை நீக்கி, இறைவனுடன் ஒன்றிணைவதையும் குறித்த பாடல்கள் இடம்பெற்றுள்ளன. முக்கிய அம்சங்கள்: தலத்தின் பெருமை: திருப்பெருந்துறை என்பது உலக உயிர்கள் வீடுபேறு அடைய உதவும் 'பெரும் துறை' (பெரிய வழி) என்பதால் இப்பெயர் பெற்றது. இது ஆத்மநாதசுவாமி திருக்கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. மாணிக்கவாசகரின் அருள்: பாண்டிய மன்னனின் அமைச்சராக இருந்த வாதவூரரை, குருந்த மரத்தடியில் குருவாகத் தோன்றி இறைவன் ஆட்கொண்ட தலம் இது. பதிகத்தின் உள்ளடக்கம்: "பாரொடு, விண்ணாய், பரந்த, எம் பரனே!" (சிவபுரத்து அரசே) எனத் தொடங்கும் பாடல்கள். "வம்பனேன் தன்னை ஆண்ட மாமணியே!" (மாணிக்கவாசகரை ஆட்கொண்டது). "தேறலின் தெளிவே! சிவபெருமானே! திருப்பெருந்துறை உறை சிவனே!". இறைவனின் வடிவம்: இறைவனைப் பரம்பொருளாகவும், தனது உள்ளத்தில் ஊறி நிற்கும் அமுதாகவும் மாணிக்கவாசகர் போற்றுகிறார்.
திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 - ShareChat
#🔥🕉️அண்ணாமலையார் கோவில் •×சிவன்ו🕉️🔥 #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #சிவன் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 துறவிகள் ஏன் காவி (ஆரஞ்சு) உடை அணிகிறார்கள்? (மண்ணுடன் ஒன்றாக வாழ கற்ற ஆன்மீக மரபின் ஆழமான கதை) நற்றுணையாவது அண்ணாமலையாரே 🙏 ஒரு துறவியை நினைத்தாலே நம் கண் முன் தோன்றுவது — காவி நிற உடை. ஆனால் இந்த நிறம் ஒரு அலங்காரம் அல்ல. அது ஒரு ஆழமான உணர்வின் வெளிப்பாடு. இந்த கதை, துறவிகள் ஏன் காவி உடை அணிகிறார்கள் என்பதற்கான வெளிப்படையான விளக்கத்தை மட்டும் அல்ல, 👉 உடல், மனம், பூமி — மூன்றையும் ஒன்றாகப் பார்க்கும் இந்திய ஆன்மீக சிந்தனையை நமக்கு உணர்த்துகிறது. 🌍 உடல் என்பது பூமியின் ஒரு வெளிப்பாடு இந்திய துறவற மரபில் ஒரு அடிப்படை உண்மை உண்டு: "இந்த உடல், இந்த பூமியின் ஒரு நீட்சிதான்." நாம் உண்ணும் உணவு — மண்ணிலிருந்து. நாம் குடிக்கும் நீர் — பூமியிலிருந்து. நாம் சுவாசிக்கும் காற்று — இந்த உலகிலிருந்தே. அப்படியானால், 👉 இந்த உடல் தனிப்பட்டது அல்ல. 👉 இது பூமியின் ஒரு சிறிய வெளிப்பாடு மட்டுமே. இந்த உண்மையை வாழ்க்கை முழுவதும் நினைவில் வைத்திருக்க தான், துறவிகள் தங்கள் உடைகளை மண்ணால் நிறம் ஏற்றினர். 🟤 காவி நிறம் எப்படி வந்தது? பண்டைய காலங்களில் துறவிகள்: சிவப்பு மண் கருமண் எறும்புப் புற்றின் மண் இவற்றை நீரில் கரைத்து, தங்கள் துணிகளை அதில் நனைத்து உலர்த்துவார்கள். இதனால் உருவான நிறம்: 👉 காவி / ஆரஞ்சு / மண் சிவப்பு அதனால், துறவிகள் காவி உடை அணியவில்லை — மண்ணை உடையாக போர்த்திக் கொண்டார்கள். 🐜 எறும்புப் புற்றும் ஆன்மீக அறிவும் இந்த மரபில் எறும்புப் புற்றிற்கு ஒரு தனி முக்கியத்துவம் உண்டு. எறும்புகள் மண்ணை தங்கள் உமிழ்நீருடன் கலக்கி கட்டும் புற்றுகள் மழை, வெயில், காற்று — எதையும் தாங்கும் வலிமை இயற்கையின் அற்புதமான கட்டிடக்கலை இதன் பின்னணி உணர்வு: "பூமியுடன் நெருங்கி வாழும் உயிர்கள் — நிலைத்தன்மையை இயற்கையாகவே கற்றுக் கொள்கின்றன." அதனால் தான் பல துறவிகள்: எறும்புப் புற்றுகளின் அருகில் தியானம் காட்டிலும் மண்ணிலும் வாழ்வு என்ற வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தனர். 🧘‍♂️ உடல் — தடையா? தளமா? துறவற வாழ்க்கையின் நோக்கம்: உடலை அழிப்பது அல்ல — உடலைத் தாண்டுவது. உடல்: அதிகம் நோயுற்றால் → கவனம் உடலிலேயே அதிகம் அலங்கரிக்கப்பட்டால் → அகந்தை அதனால் துறவியின் இலக்கு: 👉 உடல் இருப்பதே தெரியாத நிலை "நான் அமர்ந்திருக்கிறேன் — உடல் இருக்கிறதா என உணரவே கூடாது." அதற்கான எளிய வழி: எளிய உணவு எளிய உடை மண்ணுடன் தொடர்பு 🧠 உடலும் மனமும் — பிரிக்க முடியாதவை நம் மனம் தனி உலகம் அல்ல. 👉 மூளை = உடலின் ஒரு பகுதி 👉 மனநிலை = உடல் ரசாயன நிலை இதனால்தான்: உடல் நிலைத்தன்மை → மன அமைதி உடல் குழப்பம் → மன குழப்பம் மண்ணால் நிறம் ஏற்ற உடைகள்: உடல் வெப்பத்தை சமநிலைப்படுத்தும் இயற்கையுடன் இணைப்பை வலுப்படுத்தும் மனதை நிலைநிறுத்தும் ⚰️ மரணத்திற்கும் பயமில்லை ஒரு துறவி வாழ்நாளெல்லாம் நினைவில் வைத்திருப்பது: "இந்த உடல் பூமியிலிருந்து வந்தது — பூமிக்கே திரும்பும்." அதனால்: மரணத்திற்கு எதிர்ப்பு இல்லை பயம் இல்லை பிடிப்பு இல்லை காவி உடை: 👉 வாழும் போதே பூமியுடன் ஒன்றாகிவிடும் பயிற்சி. 🌺 முடிவுரை காவி நிறம்: தியாகத்தின் அடையாளம் அல்ல மதத்தின் சின்னம் மட்டும் அல்ல 👉 அது ஒரு நினைவூட்டல். "நீ பூமி அல்லாமல் வேறல்ல." இந்த உணர்வுடன் வாழ்பவன் — துறவி எம்பெருமான் 💕 திருக்கருணை இருந்தவாறே 🙏 எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் அகிலம் காக்கும் அண்ணாமலையாரே போற்றி போற்றி . உன் ஆழ்ந்த கருணையை பெற என்ன தவம் செய்தேனோ🌹 சிவாய நம🙇 சிவமே ஜெயம் ‌ சிவமே தவம். சிவமே என் வரமே . எங்கும் சிவ நாமம் ஒலிக்கட்டும்.
🔥🕉️அண்ணாமலையார் கோவில் •×சிவன்ו🕉️🔥 - இனியகாலை வணக்கம் இனியகாலை வணக்கம் - ShareChat
#திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #சிவன் #🔥🕉️அண்ணாமலையார் கோவில் •×சிவன்ו🕉️🔥 வருடத்தில் ஒரு நாள் மட்டுமே தரிசனம் தரும் புரி லோகநாதர்! உலகப் புகழ்பெற்ற புரி ஜெகந்நாதர் ஆலயம் மட்டுமல்ல – அதே புரி நகரத்தில் இன்னொரு அதிசய தெய்வீக ரகசியமும் மறைந்திருக்கிறது. அது தான் அருள்மிகு லோகநாதர் சிவன் கோவில்! இந்த ஆலயத்தில் நிகழும் அதிசயம் உலகின் வேறு எந்த சிவாலயத்திலும் காண முடியாத ஒன்று. பொதுவாக சிவலிங்கங்கள் எப்போதும் பக்தர்களுக்குக் காட்சியளிக்கும். ஆனால் இங்கு உள்ள லோகநாதர் – வருடத்தில் 364 நாட்கள் முழுவதும் நீருக்குள் மூழ்கிய நிலையில் இருப்பார்! மட்டும் ஒரு நாள்தான் – அதுவும் ஆண்டுக்கு ஒரே ஒரு நாள்தான் – பக்தர்களுக்குத் தெளிவாக தரிசனம் தருவார்! நீரில் மூழ்கியிருக்கும் அதிசய சிவலிங்கம் புரி நகரத்தில் உள்ள முக்கியமான ஐந்து சிவாலயங்களில் ஒன்றாக விளங்குவது லோகநாதர் கோவில். இந்த கோவிலின் கருவறையில் இருக்கும் சிவலிங்கம் “சுயம்பு லிங்கம்” எனப் போற்றப்படுகிறது. ஆனால் இந்த சிவலிங்கம் எப்போதும் சாதாரணமாக காணப்படாது. கருவறை முழுவதும் எப்போதும் நீரால் நிரம்பியிருக்கும். அந்த நீருக்குள் முழுவதுமாக மூழ்கிய நிலையில்தான் லோகநாதர் வாசம் செய்கிறார். இந்த நீர் இயற்கையாகவே ஊறிக்கொண்டே இருப்பதாகவும், எவ்வளவு வெளியேற்றினாலும் மீண்டும் நிரம்பிவிடுவதாகவும் அர்ச்சகர்கள் கூறுகின்றனர். ஒரே ஒரு நாள் – அரிய தரிசனம்! இந்த அதிசய கோவிலில் லோகநாதரை நேரடியாக தரிசிக்க முடியும் நாள் – பங்கோத்த ஏகாதசி (Pankoddhar Ekadashi) எனப்படும் விசேஷ தினம். சிவராத்திரிக்கு மூன்று நாட்கள் முன்பாக அர்ச்சகர்கள் கருவறையில் நிரம்பியிருக்கும் நீரை முழுமையாக வெளியேற்றத் தொடங்குகிறார்கள். அப்போதுதான் – ஆண்டுக்கு ஒரே முறை – நீரிலிருந்து வெளிப்பட்டு லோகநாத சிவலிங்கம் பக்தர்களுக்குத் தெளிவாகக் காட்சியளிக்கிறது. இந்த அரிய தரிசனத்தை காண, நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புரி நகரை நோக்கி வருகிறார்கள். ஜெகந்நாதரின் காவல் தெய்வம் லோகநாதர் இந்த லோகநாதர் கோவில் ஜெகந்நாதர் கோவிலோடு நெருங்கிய ஆன்மிகத் தொடர்புடையது. லோகநாதரின் உத்சவ மூர்த்தி (உலா விக்ரகம்) ஜெகந்நாதர் கோவிலிலேயே பாதுகாக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. புராண நம்பிக்கைப்படி, ஜெகந்நாதரின் பொக்கிஷங்கள் நகைகள் ஆலயத்தின் செல்வங்கள் அனைத்திற்கும் லோகநாதரே காவல் தெய்வமாக விளங்குகிறார். புரியில் நடைபெறும் புகழ்பெற்ற “சோமவார மேளா” திருவிழாவின் போது, இந்த லோகநாதரின் உத்சவ மூர்த்தியும் நகரம் முழுவதும் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுவார். ராமாயணத்துடன் தொடர்புடைய தல வரலாறு இந்த கோவில் உருவானதற்குப் பின்னால் ஒரு அழகிய புராணக் கதை உள்ளது. இராமாயண காலத்தில், சீதையை தேடி இராமர் புரி பகுதிக்கு வந்தபோது, சிவபெருமானை வழிபட விரும்பினார். அப்போது அங்கு வாழ்ந்த ஒரு கிராமவாசி, இராமருக்கு ஒரு சுரைக்காயை வழங்கினாராம். அதை லிங்க வடிவமாக மாற்றி, அங்கேயே பிரதிஷ்டை செய்து இராமர் சிவபூஜை செய்தார். அந்த லிங்கமே காலப்போக்கில் “லோகநாதர் சிவலிங்கம்” ஆக மாறி, இன்றைய கோவிலாக உருவெடுத்தது எனப் புராணங்கள் கூறுகின்றன. இதனால் இந்த ஆலயம் ராமாயணத்தோடு தொடர்புடைய புனித தலமாகவும் கருதப்படுகிறது. கருவறை நீரின் அற்புத சக்தி லோகநாதர் சிவலிங்கத்தைச் சூழ்ந்திருக்கும் நீர் சாதாரண நீர் அல்ல என்று பக்தர்கள் நம்புகிறார்கள். ஏனெனில் மற்ற நாட்களில், பால் தேன் இளநீர் வில்வம் நெய் போன்ற புனித நிவேதனங்கள் அனைத்தும் அந்த நீரிலேயே சேர்க்கப்படுகின்றன. இதனால் அந்த கருவறை நீர் மருத்துவ குணம் கொண்டதாகவும், பல நோய்களுக்கு நிவாரணம் அளிப்பதாகவும் பக்தர்கள் ஆழமாக நம்புகிறார்கள். கோவிலின் அமைப்பும் சிறப்பும் இந்த ஆலயம் முழுவதும் மணற்கற்களால் கட்டப்பட்டுள்ளது. பிரதான கோவில் தரையிலிருந்து சுமார் 30 அடி உயரத்தில் அமைந்துள்ளது. கருவறையின் கிழக்குப் புறச் சுவரில் முருகப்பெருமான் (கார்த்திகேயன்) நான்கு கரங்களுடன் விநாயகர் என்ற திருவுருவங்கள் சிற்பக் கலை நுணுக்கத்துடன் வடிக்கப்பட்டுள்ளன. ஜெகந்நாதர் கோவிலிலிருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் இந்த லோகநாதர் ஆலயம் அமைந்துள்ளது. ஆன்மிக அனுபவத்தின் உச்சம் புரி நகரத்திற்கு வரும் பெரும்பாலான பக்தர்கள் ஜெகந்நாதரை தரிசிப்பதோடு நிற்காமல், லோகநாதர் கோவிலையும் தவறாமல் தரிசிக்கின்றனர். ஏனெனில், வருடத்தில் ஒரே ஒரு நாள் மட்டுமே தரிசனம் தரும் இந்த சிவலிங்கத்தை காண்பது – ஒரு மனிதனின் வாழ்நாளில் கிடைக்கும் மிகப் பெரிய ஆன்மிகப் பாக்கியமாகக் கருதப்படுகிறது. நீரில் மூழ்கியபடியே உலகைக் காக்கும் லோகநாதர், அந்த ஒரே நாளில் வெளிப்பட்டு அருள் புரிவது – பக்தர்களுக்கு மறக்க முடியாத தெய்வீக அனுபவமாக மாறுகிறது. “அதிசயங்கள் நிறைந்த இந்திய திருக்கோயில்களின் மகிமையில், லோகநாதர் ஆலயம் ஒரு உன்னதமான ஆன்மிக ரகசியம்!” எம்பெருமான் 💕 திருக்கருணை இருந்தவாறே 🙏 நற்றுணையாவது அண்ணாமலையாரே 🙏 எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் அகிலம் காக்கும் அண்ணாமலையாரே போற்றி போற்றி . உன் ஆழ்ந்த கருணையை பெற என்ன தவம் செய்தேனோ🌹 சிவாய நம🙇 சிவமே ஜெயம் ‌ சிவமே தவம். சிவமே என் வரமே . எங்கும் சிவ நாமம் ஒலிக்கட்டும்.
திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 - மட்டுமே வருடத்தில் நாள் ரு தரிசனம் தரும் லோகநாதர் சிவன்! தெரிந்துகொள்ளுங்கள் மட்டுமே வருடத்தில் நாள் ரு தரிசனம் தரும் லோகநாதர் சிவன்! தெரிந்துகொள்ளுங்கள் - ShareChat
#🔍ஜோதிட உலகம் 🌍 #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🖌பக்தி ஓவியம்🎨🙏 வெந்நீர் அபிஷேகம் நடைபெறும் அற்புத சிவன் கோயில்!* திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டம் தேவிகாபுரம் திருத்தலத்தில் அமைந்துள்ளது அருள்மிகு கனககிரீஸ்வரர் திருக்கோயில். கனககிரி எனும் மலையின் மீது இக்கோயில் அமைந்துள்ளது. கனககிரி மலையின் அடிவாரத்தில் அருளும் அம்பிகையின் திருநாமம் ஸ்ரீ பெரியநாயகி அம்மன். அம்பாள் ஆலயத்தின் பின்புறம் தென்மேற்கில் சற்றுத் தொலைவில் ஐநூறு அடி உயரமும் ஐந்து கிலோ மீட்டர் சுற்றளவும் முன்னூற்றி இரண்டு படிகளையும் கொண்டு கனககிரி என்னும் மலை அமைந்துள்ளது. இம்மலை உச்சியில்தான் ஈசன் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளி உள்ளார். வேடன் ஒருவன் கிழங்கு அகழ்ந்து எடுப்பதற்காக மலை உச்சியில் இரும்பு கருவியை கொண்டு தோண்டியபோது குபீரென இரத்தம் கொப்பளித்தது. அங்கு மேலும் தோண்டியபோது ஒரு அழகிய சிவலிங்கத் திருமேனி தென்பட்டது. அன்று முதல் மக்கள் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்து வந்தனர். காயம் ஏற்பட்டதன் காரணமாக இத்தல சுவாமிக்கு அன்று முதல் வெந்நீரில் அபிஷேகம் செய்யப்படுகிறது. சுயம்பு திருமேனி மிகவும் சிறிய அளவில் கண்ணுக்குத் தெரியும் அளவில் இருப்பதால் அருகிலேயே காசி விசுவநாதர் லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. காலம் காலமாக இங்கு அவருக்குத்தான் பூஜைகள் நடைபெறுகின்றன. மலையடிவாரத்தில் அமைந்த பெரியநாயகி கோயில் சக்தி பீடங்களில் ஒன்றாக விளங்குகிறது. விஜயநகர பேரரசரால் 14ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இக்கோயில், கிழக்கு - மேற்காக 475 அடி நீளமும், வடக்கு - தெற்காக 250 அகலமும், 30 அடி உயரமும் கொண்ட அழகிய சித்திர வேலைப்பாடுகளுடன் கூடிய மதில் சுவர்களுடன் விளங்குகிறது. மதிலின் முகப்பில் ராஜகோபுரம் சுமார் 150 அடி உயரமுடையதாவும் ஏழு நிலைகளையும் ஒன்பது கலசங்களையும் கொண்டு அமைந்துள்ளது. இந்த கோபுரத்திற்கு எதிரே நான்கு கால்களை கொண்ட உயர்ந்த மண்டபம் உள்ளது. இக்கோபுரத்திற்கு வடக்கு பக்கம் சித்திர வேலைப்பாடுகளுடன் கூடிய தேர் மண்டபம் காணப்படுகிறது. இத்தேர் மண்டபம் கிழக்கு தெற்கு ஆகிய இரு திசைகளையும் நோக்கிய வகையில் அமைந்துள்ளது. அம்பிகை இத்தலத்தில் தவமிருந்து ஈசனிடம் சேர்ந்ததால் திருமணத் தடை உள்ளவர்கள் பௌர்ணமி நாட்களில் கிரிவலம் வந்து வழிபட்டால் விரைவில் திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை. ஒரு சமயம் இத்தலத்தின் வழியே போருக்கு சென்ற பல்லவ மன்னன் ஒருவன், இங்குள்ள சிவனின் பெருமைகளைக் கேள்விப்பட்டு, போரில் வென்றால் இத்தல சிவனுக்கு ஒரு கோயில் கட்டுவதாக வேண்டிக் கொண்டான். அதன்படி வெற்றியும் பெற்றான். வெற்றி பெற்ற சில நாட்களில் இறைவனை மறந்தான். அவனுக்கு மீண்டும் ஒரு கஷ்டம் வரவே, இந்த சிவன் கோயிலைக் கட்டினான். ஆனால், வேடன் கண்டெடுத்த சுயம்பு லிங்கம் காணாமல் போய்விட்டது. இதனால் வருத்தம் அடைந்த மன்னன் காசியில் இருந்து வேறு ஒரு லிங்கம் கொண்டு வந்து கோயிலில் பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் நடத்தினான். கும்பாபிஷேகம் நடந்து முடிந்ததும் மறைந்த சுயம்பு லிங்கம் மீண்டும் கிடைத்தது. கடவுள் தன்னை மறந்தவரை தானும் மறந்து விடுகிறார் என்பதை உணர்த்துவதாகவே இந்த நிகழ்ச்சி அமைந்த்து. மன்னன் இத்தல இறைவனுக்கு கனககிரீஸ்வரர் எனப் பெயரிட்டு அதே கருவறையில் பிரதிஷ்டை செய்தான். இத்தல சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்புரிகிறார். ஒரே கருவறையில் எங்கும் தரிசிக்க முடியாதபடி இரண்டு லிங்கங்கள் உள்ளன. உள் மண்டபத்தின் தூணில் சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டாக ஒன்பது பெண்களின் சிலை வடிவில் யானை ஒன்று நிற்பது போல் வடிவமைத்துள்ளனர். மலையை விட்டு கீழே இறங்கும் வழியில் தேவி தவம் செய்ததாகக் கருதப்படும் இடத்தில் அன்னையின் திருவடி உள்ளது. மலையடிவாரத்தில் கோகிலாம்பாள் சமேத காமேஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயில் மொத்தமும் ஒன்பது கல்லால் அமைக்கப்பட்டுள்ளது. 500 அடி உயரத்தில் 365 படிக்கட்டுகளுடன் அமைந்துள்ள ஸ்ரீ கனககிரீஸ்வரர் கோயில், வருடத்தின் எல்லா நாட்களும் நல்ல நாட்களாக அமைய வேண்டும் என்பதற்காக இந்த எண்ணிக்கையில் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.🌹
🔍ஜோதிட உலகம் 🌍 - தினமும் வெந்நீர் அபிஷேகம் நடைபெறும் அற்புத சிவன் கோயில்! தினமும் வெந்நீர் அபிஷேகம் நடைபெறும் அற்புத சிவன் கோயில்! - ShareChat
#🖌பக்தி ஓவியம்🎨🙏 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #🔍ஜோதிட உலகம் 🌍 #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 கோவிலுக்கு போறீங்களா? ஆடை கட்டுப்பாடு உண்டு* கார்வாரில் உள்ள பிரசித்தி பெற்ற முருடேஷ்வர் கோவிலிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஆடை கட்டுப்பாடு விதித்து கோவில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. உத்தரகன்னடா (கார்வார்) மாவட்டம் பட்கல் தாலுகா முருதேஸ்வர் கடற்கரையில் பிரசித்திபெற்ற முருதேஸ்வர் சிவன் கோவில் அமைந்துள்ளது. 500 ஆண்டுகளுக்கு மேல் பழமையான இக்கோவிலின் இறைவன் “முருதேஸ்வர்” என அழைக்கப்படுகிறார். கந்துக கிரி மலையின் மீது அமைந்துள்ள இந்த கோவிலின் சிறப்பம்சம் இங்குள்ள சிவன் சிலை. இந்த சிலை 123 அடி உயரம் கொண்டது மற்றும் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கட்டப்பட்டது. காலை நேர சூரிய ஒளி சிலையின் மீது படும்போது, அது மின்னும் வகையில் கண்கொள்ளக்காட்சியாக இருக்கும். இந்த சிவன் சிலை, உலகின் மூன்றாவது உயரமான சிவன் சிலையாகும். மேலும் இங்குள்ள பசுமையான தோட்டத்தில் தேருடன் சித்தரிக்கப்பட்டுள்ள கீதோபதேசத்தின் ஒரு பெரிய சிலையும் உள்ளது. சிவன் சிலைக்கு பின்னால் கடற்கரை உள்ளதால் அந்த கண்கொள்ளா காட்சியை காணவும், கோவிலுக்கு சாமி தரிசனம் செய்யவும் கர்நாடகம் மட்டுமின்றி அனைத்து மாநில பக்தர்கள், சுற்றுலா பயணிகள் ஆயிரக்கணக்கானோர் வருவது உண்டு. கோவிலின் மூன்று பக்கங்களிலும் அரபிக் கடல் இருப்பதால் கோவிலின் காட்சி இன்னும் அழகாகவும் அமைதியாகவும் தெரிகிறது. இந்த கோவிலின் நுழைவாயிலில் 249 அடி உயரமுள்ள ஒரு பெரிய கோபுரம் உள்ளது. இந்த கோவிலில் அணையா தீபம் எரிகிறது. இதில் எண்ணெயை ஊற்றி, நாணயங்களை போட்டு, தங்களின் முக தோற்றம் அவ்வெளிச்சத்தில் தெரிகின்றதா என பக்தர்கள் பார்க்கிறார்கள். அப்படி தங்களின் உருவம் தெரிந்தால் தங்களுக்கு செல்வ செழிப்பு ஏற்படும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. அதேபோல் மலையின் அடிவாரத்தில் உள்ள ராமேஸ்வர லிங்கத்திற்கு பக்தர்கள் பூசாரி இல்லாமல் தாங்களாகவே சடங்குகளைச் செய்யலாம். இந்த கோவில் நடை அதிகாலை 3 மணி முதல் மதியம் 1.00 மணிவரையிலும், மதியம் 3.00 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும். அதுமட்டுமின்றி கோபுர லிஃப்ட் இந்த நேரத்தில் மட்டுமே செயல்படும் என்பதால், கோவில் பகுதியை இந்த நேரத்தில் பார்வையிடுவது சிறந்தது. இந்த நிலையில் முருதேஸ்வர் சிவன் கோவில் நிர்வாகத்தின் சார்பில் கோவிலின் முன்பக்க வாயிலில் பக்தர்களுக்கு ஆடை கட்டுப்பாடு விதித்து அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. அதில், ஆண்கள் வேட்டி அல்லது முழு நீள பேண்ட் அணிந்தும், பெண்கள் சேலை அல்லது சுடிதார் அணிந்தும் வர வேண்டும். இதை மீறுபவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்து அமைப்புகள் முருதேஸ்வர் கோவிலில் ஆடை கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியதை தொடர்ந்து முருதேஸ்வர் கோவில் நிர்வாகம் பக்தர்களுக்கு ஆடை கட்டுப்பாடுகளை விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.🌹
🖌பக்தி ஓவியம்🎨🙏 - ShareChat
#ஸ்ரீ விநாயகா ஜோதிட நிலையம் #விநாயகர் #🙏விநாயக போற்றி #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 மாறும் விநாயகரும் கிணற்று நீரும்... அதிசயமா? அம்மானுஷ்யமா?* தமிழ்நாட்டில் கன்னியாக்குமரி மாவட்டம் கேரளபுரத்தில், ஸ்ரீ மகாதேவர் ஆலயத்தில் உள்ள திறந்தவெளியில் இருக்கிறார் அரசமரத்தடி விநாயகர். இந்த விநாயகர் முதல் ஆறு மாதங்கள் ஒரு நிறத்திலும், அடுத்த ஆறு மாதங்கள் இன்னொரு நிறத்திலும் இருப்பார். இந்த விநாயகர் சிலை 2300 ஆண்டுகள் பழமையானது என்று சொல்லப்படுகிறது. நிறம் மாறும் இந்த அதிசய விநாயகரை தரிசித்தால், நம் வாழ்விலும் அதிசயம் நிகழும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. உத்தராயணம் காலமான தை முதல் ஆனி வரை விநாயகர் கருப்பாகவும், தட்சிணாயனம் காலமான ஆடி முதல் மார்கழி வரை விநாயர் வெண்மையாகவும் காட்சியளிக்கிறார். ஆடி மாதம் வரும் போது கொஞ்சம் கொஞ்சமாக வெண்மை நிறத்திற்கு மாறிவிடுவார் விநாயகர். அதைப்போல உத்தராயணம் காலம் தொடங்கும் போது விநாயகர் மீது சின்ன கருப்பு புள்ளிகள் விழத்தொடங்கி, கருமை நிறத்திற்கு மாறிவிடுவார். திருவிதாங்கூர் மன்னனாக இருந்த கேரளவர்மன் தம்புரான் ராமேஸ்வரம் கடலில் புனித நீராடிய போது கிடைத்தவர் தான் இந்த அதிசய விநாயகர். ஆறு அங்குலத்தில் இருந்த விநாயகரை இங்கே வைத்த பிறகு மெல்ல வளர்ந்து விட்டதாக சொல்லப்படுகிறது. விநாயகர் சிலை நிறம் மாறுவதற்கான காரணம் இச்சிலை சந்திரகாந்தம் என்ற அபூர்வ கல்லால் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதுதான். இக்கோவிலில் இருக்கும் இன்னொரு அதிசயம், இங்கு அமைந்திருக்கும் கிணற்று நீர். விநாயர் தான் நிறம் மாறிக்கொண்டிருக்கிறார் என்றால், இந்த கிணற்று நீரும் நிறம் மாறிக்கொண்டேயிருக்கிறது. விநாயகர் வெண்மையாக இருக்கும் போது கிணற்று நீர் கருமையாகவும், விநாயகர் கருமையாக இருக்கும் போது கிணற்று நீர் நன்றாக தெளிந்து வெண்மையாக இருப்பதாக சொல்லப்படுகிறது. 🌹 #🖌பக்தி ஓவியம்🎨🙏
ஸ்ரீ விநாயகா ஜோதிட நிலையம் - நிறம் மாறும் விநாயக ரும் கிணற்று நீரும். அதிசயமா? அம்மானுஷ்யமா? நிறம் மாறும் விநாயக ரும் கிணற்று நீரும். அதிசயமா? அம்மானுஷ்யமா? - ShareChat