#srirangam permal பகவத் கீதை - அமுத அலைகள் - 26
அர்ஜுன உவாச |
த்ருஷ்ட்வா இமம் ஸ்வஜனம் கிருஷ்ண யுயுத்ஸும் ஸமுபஸ்திதம்
ஸீதன்தி மம காத்ராணி முகம் ச பரிஶுஷ்யதி ||
|1 - 28 I
அர்ஜுனன் கூறினான்:
கிருஷ்ணா! என்னுடைய சொந்த மனிதர்களைக் கொல்ல வேண்டும், போரிட வேண்டும் என்று எண்ணி அவர்களைப் பார்க்கும் போது,
என்னுடைய கைகால்கள் நடுங்குகின்றன, வாய் உலர்ந்து போகின்றது.
தருமத்தின் மீதும், அதற்காகப் போராட வேண்டும் என்ற உறுதியையும்,
எம்பெருமான் மீது ஆசை அல்லது இணைப்பையும் மறந்து விட்டு,
அழியப் போகும் தன்னுடல் மீதும், உறவினர்கள் என்ற சிலரின் உடலின் மீதும் வைத்திடும் பிணைப்பு,
ஒருவருடைய மரணத்தோடு முடிந்து விடுகின்றது.
இதுவே நிலையற்ற துன்பத்திற்கே வழி வகுக்கின்றது