சட்டப்பேரவைத் தேர்தலில் நாதக வழக்கம் போல் தனித்துப் போட்டியிடுகிறது. இந்தத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தவெக-வை விட கூடுதல் வாக்குகளைப் பெற வேண்டுமென நாதக-வினர் முனைப்புக் காட்டுகின்றனர். இந்த நிலையில், பிப்.21-ம் தேதி திருச்சியில் `மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு' என்ற பெயரில் மாநாடு நடத்த ஏற்பாடுகளைச் செய்து வருகிறது நாதக.
இந்த மாநாட்டில் 234 தொகுதிகளுக்கான நாதக வேட்பாளர்களையும் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகப்படுத்த உள்ளார். இந்த நிலையில், அந்தந்த மாவட்டத்தில் உள்ள நாதக நிர்வாகிகள் தங்கள் பகுதிகளில் வீடு வீடாகச் சென்று மக்களை மாநாட்டுக்கு அழைத்து வருகின்றனர். சீமானின் சொந்த ஊரான சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகேயுள்ள அரணையூரில் அவரது தாயார் அன்னம்மாள் வீடு வீடாகச் சென்று வெற்றிலை, பாக்குடன் மாநாட்டுக்கு அழைப்பு விடுத்து வருகிறார்.
இந்த அழைப்பின் போது, "கண்டிப்பாக அனைவரும் மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும். அனைவருக்கும் வாகனம் ஏற்பாடு செய்துள்ளோம். தயாராக இருந்தால் போதும்" என்று கிராமத்து பாணியில் பேசி வருகிறார் அன்னம்மாள். அவருடன் மாநில கட்டமைப்பு குழுப் பொறுப்பாளர் தங்கராஜ், கிழக்கு மண்டலச் செயலாளர் திசைக்கர்ணன், மாநில இளைஞர் பாசறைஒருங்கிணைப்பாளர்கள் மனோஜ், விஷ்ணு, வடக்கு மாவட்டத் தலைவர் முத்துக்குமார் ஆகியோர் உடன் சென்றனர்.
தனது மகனின் கட்சி என்றாலும் நாதக விஷயத்தில் அன்னம்மாள் இதுவரை தலையிடாமல் இருந்து வந்தார். தற்போது அவரே களத்தில் இறங்கி வீடு வீடாகச் சென்று நாதக மாநாட்டுக்கு அழைப்பு விடுத்தது சொந்த ஊர் மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது #நாம் தமிழர் கட்சி #🔴இன்றைய முக்கிய செய்திகள்
சினிமாவுல வாய்ப்பு கிடைக்காதுனு நிறைய பெண்கள் தங்கள் நிறத்தை மாத்திக்கிறாங்க - சசிகுமார் #🎬 சினிமா செய்திகள் 🎥
தமிழ்நாடு தாய்மார்கள் ₹5000 வாங்கிய பிறகு. #😅Funny Caption வீடியோ மீம்ஸ்📱 #😅100% சிரிப்பு இலவசம் #🙄வித்தியாசமான வீடியோக்கள்😂 #🤩இன்றைய காமெடி🤣 #🙏 பெண்களுக்கு மாதம் 5000: யாரெல்லாம் தகுதி 😍
Happy valentine's day 💘| tag your love #💗காதலர் தின வாழ்த்துக்கள்💕 #💘Love Quotes & Videos #📽️காதலர் ஸ்பெஷல் படங்கள் & பாடல்கள்🍿 #💕காதலர் தினம் பரிசுகள்🎁 #💕 வாலெண்டைன் வைப் ஸ்பெஷல் ஸ்டேட்டஸ்💖
🖤🖤❤️🔥 #🥰Girls Love feeling #💘Love feel Forever 💌 #💝இதயத்தின் துடிப்பு நீ #💑என் காதல் கணவா💞 #❣️போதை ஏற்றும் கவிதை
நமது உடலில் உள்ள நரம்புகள் தான் மூளையிலிருந்து தகவல்களை கைகள், கால்கள், இதயம், குடல் போன்ற உறுப்புகளுக்கு கொண்டு செல்கின்றன. இந்த தகவல் பரிமாற்றம் பாதிக்கப்பட்டால் தான் "மரத்துபோன உணர்வு, மின்சாரம் பாய்வது போல சுடும் வலி, ஊசி குத்துவது போல சலசலப்பு" போன்ற அறிகுறிகள் தோன்றுகின்றன.
இதைக் கவனிக்காமல் விட்டால், சிறிய சளசளப்பு கூட நாளடைவில் கடுமையான வலியாக மாறலாம்.
நரம்புகள் எப்படி வேலை செய்கின்றன?
நமது உடலில் மூன்று வகை நரம்புகள் உள்ளன:
உணர்வு நரம்புகள் (Sensory) - தொடுதல், வலி, சூடு, குளிர் உணர்வு
அசைவு நரம்புகள் (Motor) - கை, கால் அசைவுகள்
தானியங்கி நரம்புகள் (Autonomic) - இதய துடிப்பு, ஜீரணம், வியர்வை
இந்த நரம்புகளில் ஏதேனும் ஒன்று சேதமடைந்தால், அதற்கேற்ப அறிகுறிகள் மாறுபடும். இதுவே Neuropathy.
Neuropathy எப்படி உருவாகிறது?
நரம்புகளுக்கு தேவையான ஆக்சிஜன், ஊட்டச்சத்து சரியாக கிடைக்காதால் அல்லது நரம்புகள் நேரடியாக சேதமடைந்தால் Neuropathy உருவாகிறது.சர்க்கரை நோய் (Diabetes), வைட்டமின் குறைபாடு, மதுபானம் அதிகம் அருந்துதல், தொற்று நோய்கள், விஷத்தன்மை உள்ள மருந்துகள், காயம், தைராய்டு பிரச்சனை போன்றவை முக்கிய காரணிகள்.
நரம்புகள் மிகவும் நுண்ணியவை. ஒரு சிறிய சேதமும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.
Neuropathy வகைகள்
Peripheral Neuropathy
கைகள், கால்களில் மரத்துபோன உணர்வு, சலசலப்பு, எரியும் வலி. மிகவும் பொதுவானது.
Autonomic Neuropathy
இதயம், குடல், சிறுநீர், வியர்வை செயல்பாடு பாதிப்பு. தலைசுற்றல், மலச்சிக்கல், இதய துடிப்பு மாற்றம்.
Focal Neuropathy
ஒரு குறிப்பிட்ட நரம்பு மட்டும் பாதிப்பு. முகம், கண், கை அல்லது காலில் திடீர் பலவீனம்.
Diabetic Neuropathy
சர்க்கரை நோயாளிகளில் அதிகம். கால்களில் புண்கள், உணர்வு இழப்பு, வலி.
முக்கிய அறிகுறிகள்
Neuropathy ஆரம்பத்தில் மெதுவாக தான் தெரியும்.கால்களில் முள் குத்துவது போல சலசலப்பு, இரவில் அதிக வலி, எரியும் உணர்வு, குளிர்/சூடு உணர்வு மாறுபாடு, காலில் மரத்துபோன உணர்வு, நடக்க சிரமம், கை பலவீனம், பொருட்கள் விழுந்துவிடுதல் போன்றவை பொதுவான அறிகுறிகள்.சிலருக்கு காலணியில்லாமல் நடப்பது போல உணர்வு ஏற்படும் - ஆனால் தரையை உணர முடியாது!
யாருக்கு அதிக ஆபத்து?
40 வயதுக்கு மேற்பட்டவர்கள், நீண்ட கால சர்க்கரை நோயாளிகள், மதுபான பழக்கம் உள்ளவர்கள், Vitamin B12 குறைபாடு உள்ளவர்கள், கிமோதெரபி எடுத்தவர்கள், தைராய்டு நோயாளிகள் ஆகியோருக்கு அதிக ஆபத்து உள்ளது.
"சர்க்கரை + கவனக்குறைவு = Neuropathy" என்றே சொல்லலாம்.
நோயறிதல் எப்படி?
மருத்துவர் முதலில் நரம்பு உணர்வு பரிசோதனை செய்வார். ஊசி, வெப்பம், குளிர் ஆகியவற்றை உணர்கிறார்களா என்று பார்க்கப்படும்.
பின்னர் Blood test, Nerve conduction study, EMG test, Vitamin level test போன்றவை செய்யப்படலாம். இவை நரம்பு சேதத்தின் அளவை காட்டும்.
சிகிச்சை முறைகள்
Neuropathy முழுவதும் குணமாகும் நோய் அல்ல. ஆனால் கட்டுப்படுத்த முடியும்.முதலில் காரணத்தை சரி செய்ய வேண்டும் - சர்க்கரை அளவை கட்டுப்படுத்துதல், வைட்டமின் மாத்திரைகள், வலி குறைக்கும் மருந்துகள், nerve protective medicines, physiotherapy ஆகியவை வழங்கப்படும்.
சிலருக்கு antidepressants அல்லது anticonvulsants மருந்துகள் கூட வலியை குறைக்க பயன்படும்.
வாழ்க்கை முறை மாற்றங்கள் - மிக முக்கியம்
தினசரி நடைபயிற்சி, yoga, stretching exercises நரம்பு ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்.
சர்க்கரை கட்டுப்பாடு, புகைபிடித்தல் தவிர்ப்பு, மதுபானம் நிறுத்தல், ஆரோக்கியமான உணவு, Vitamin B rich diet (பருப்பு, முட்டை, கீரை, பால்) எடுத்துக்கொள்வது அவசியம்.
கால்களில் புண்கள் வராமல் தினமும் பாதத்தை சுத்தமாக பரிசோதிக்க வேண்டும்.
பாத பராமரிப்பு அவசியம்
Neuropathy உள்ளவர்களுக்கு பாதங்களில் உணர்வு குறைவாக இருப்பதால் காயம் தெரியாமல் போகும்.
ஆகவே:
காலணியில்லாமல் நடக்காதீர்கள்
மென்மையான footwear அணியுங்கள்
தினமும் பாதத்தை சோதிக்கவும்
சிறிய புண் இருந்தாலும் மருத்துவரை அணுகவும்
இதுவே பெரிய சிக்கல்களைத் தவிர்க்கும்.
எப்போது மருத்துவரை அணுக வேண்டும்?
மரத்துபோன உணர்வு நீடித்தால், இரவில் தூங்க முடியாத வலி இருந்தால், காலில் புண்கள் ஆறாவிட்டால், பலவீனம் அதிகரித்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும். தாமதம் நரம்பு சேதத்தை அதிகரிக்கும்.
Neuropathy என்பது மெதுவாக நரம்புகளை பாதிக்கும் "silent problem". ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து சரியான சிகிச்சை எடுத்தால் வாழ்வை சாதாரணமாக வைத்திருக்க முடியும். #😷சுகாதார ஹெல்த் டிப்ஸ் #ஆரோகிய குறிப்புகள்🚹 #🌱 இயற்கை மருத்துவம் #💪Health டிப்ஸ் #🏋🏼♂️ஆரோக்கியம்
டயட்-ல இருக்கீங்களா? இதோ ஒரு சூப்பர் ஹெல்தி & டேஸ்டி ரெசிபி
(raw papaya salad, healthy weight loss recipes, thai style salad, easy salad dressing, nutritious dinner ideas) #ஹெல்த்தி உணவுகள்👨🏽🍳 #🌮சூப்பர் ஸ்நாக்ஸ் ரெசிபி #🥘உள்ளூர் சமையல் ரெசிபி #🍱லஞ்ச் பாக்ஸ் ரெசிபி #🧍♀️உடல் எடை குறைய டிப்ஸ்
ஏற்கனவே மகளிர் உரிமைத் தொகையாக 3,000 ரூபாயும், கோடைகால சிறப்புத் தொகையாக 2,000 ரூபாயும் என மொத்தம் 5,000 ரூபாய் வரவு வைக்கப்பட்ட நிலையில், இல்லத்தரசிகள் மத்தியில் இது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசின் இந்த நேரடிப் பணப் பரிமாற்றம், சாமானியக் குடும்பங்களின் அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், பெண்களின் வாழ்வாதாரத்தை ஓரளவு உறுதிப்படுத்தவும் பேருதவியாக இருப்பதாகப் பயனாளிகள் நெகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.
இந்த மகிழ்ச்சியான சூழலில், மேலும் ஒரு 5,000 ரூபாயை மகளிரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்க அரசு திட்டமிட்டு வருவதாகப் புதிய தகவல்கள் கசிந்துள்ளன. இது ஒரு நேரடி நிதியுதவியாகவோ அல்லது பெண்கள் சுயதொழில் தொடங்குவதற்கான ஆரம்பக்கட்ட முதலீடு அல்லது சிறு கடனுதவியாகவோ இருக்கலாம் என்று கூறப்படுகிறது. பெண்களைத் தொழில்முனைவோராக மாற்றும் நோக்கத்தில் இந்தத் திட்டம் அமையும் என எதிர்பார்க்கப்பட்டாலும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. அரசின் முறையான அறிவிப்பு வெளியானால் மட்டுமே, இந்த கூடுதல் நிதியுதவி யாருக்கெல்லாம் கிடைக்கும் மற்றும் இதற்கான நிபந்தனைகள் என்ன என்பது குறித்த தெளிவான விவரங்கள் தெரியவரும். #🔴இன்றைய முக்கிய செய்திகள் #முன் கூட்டியே மகளிர் உரிமை தொகை.
இருவரும் தொடர்ந்து பழகி வந்த நிலையில் இவர்களது பழக்கமானது நாளடைவில் காதலாக மாறியுள்ளது. பின்னர் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து நெருக்கமாக இருந்தத்தக்க சொல்லப்படுகிறது.
அதே நேரத்தில் நதீம் அலிஸ் தனது வீட்டிற்கு அருகில் வசித்து வந்த 13 வயதுடைய இளம் பெண் ஷிஃபா என்ற பெண்ணுடன் பழகி அவரையும் காதலிப்பதாக கூறி அந்த பெண்ணுடனும் நெருக்கமாக இருந்திருக்கிறார். இருவரையும் ஒரே நேரத்தில் காதலித்து அவர்களுடன் தனிமையில் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. நதீம் அலிஸ் தன்னை தவிர வேறு ஒரு பெண்ணுடன் பழகுவதை அறிந்த தபசும் ஷிஃபா குறித்த விவரங்களை அறிந்து கொண்டு நேரடியாக அவரது வீட்டிற்கு சென்றிருக்கிறார்.
பின்னர் வீட்டில் இருந்த ஷிஃபாவிடம் "நானும் நதீமும் நீண்ட நாட்களாக காதலித்து வருகிறோம் அவருடன் பேசுவதை விட்டு விடு இல்லையென்றால் நீ உயிருடன் இருக்க மாட்டே" என் மிரட்டி இருக்கிறார். அதற்கு ஷிஃபா 'என்னை தான் நதீம் உண்மையாக காதலிக்கிறார் நான் அவரை விட்டு பிரிய மாட்டேன்' என் கூறியிருக்கிறார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு நடைபெற்றது. எனவே அச்சமடைந்த ஷிஃபாவின் பெற்றோர் அவரது மகளை தங்களது சொந்த ஊரான பைபாவன் பகுதிக்கு அனுப்பி வைத்தனர்.
தங்களது சொந்த ஊரிலேயே ஆறு மாதம் இருந்த ஷிஃபா அங்கு குளிர் அதிகமாக இருப்பதால் தன்னால் இருக்க முடியவில்லை என கூறி மீண்டும் கோவண்டிக்கு கடந்த மாதம் 28 ஆம் தேதி வந்திருக்கிறார். அப்போது ஷிஃபாவை சந்தித்த நதீம் அவருடன் பேச தொடங்கியிருக்கிறார். இதனை அறிந்து ஆத்திரமடைந்த தபசும் தனது சகோதரனுடன் ஷிஃபா வீட்டிற்கு சென்றிருக்கிறார். அப்போது ஷிஃபா மட்டும் வீட்டில் தனியாக இருந்ததாக சொல்லப்படுகிறது. இருவருக்கும் இடையே காதல் குறித்து மீண்டும் பிரச்சனை வெடித்துள்ளது.
அப்போது தபசும் உடனிருந்த அவரது சகோதரர் அவர் மறைத்து வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை தபசுமிடம் கொடுத்த நிலையில் தபசும் ஷிஃபாவின் கன்னத்தில் துப்பாக்கியால் சுட்டு விட்டு அங்கிருந்து தப்பி சென்றிருக்கிறார். பின்னர் மகள்காயமடைந்ததை அறிந்து வீட்டிற்கு சென்ற ஷிஃபாவின் தந்தை அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு ஷிஃபாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்டவரின் தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஷிஃபாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து கொலைக்கு காரணமான தபசும் மற்றும் அவரது சகோதரரை கைது செய்திருக்கின்றனர். தொடர்ந்து பதுங்கி இருக்கும் காதலன் நதீமை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். வீட்டில் தனியாக இருந்த பெண் காதல் பிரச்சனையால் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது #🔴இன்றைய முக்கிய செய்திகள் #💔காதலர் தினத்தில் காதல் தோல்வி😢
பிப்ரவரி 5 ஆம் தேதி பிற்பகல் 2.30 மணியளவில் எம்.சி. சாலையில் உள்ள பள்ளம்-போர்மா சந்திப்பு அருகே, தனது தாய் மற்றும் தாய்வழி தாத்தா பாட்டியுடன் பயணித்த கார் எதிர் திசையில் வந்த வாகனத்தின் மீது மோதியதில் பத்தனம்திட்டாவைச் சேர்ந்த மல்லப்பள்ளியைச் சேர்ந்த 10 மாத பெண் குழந்தையான அலின் ஷெரின் ஆபிரகாம் படுகாயம் அடைந்து, சுய நினைவை இழந்தார்.
குழந்தையின் தாயும் தாயின் பெற்றோரும் காயமடைந்தனர். அவர் முதலில் சங்கனாச்சேரியில் உள்ள அரசு பொது மருத்துவமனையிலும், பின்னர் திருவல்லாவில் உள்ள மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டார். பிப்ரவரி 6 ஆம் தேதி கொச்சியில் உள்ள அமிர்தா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். பின்னர் அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஆல், நேற்று மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர். பின்னர் அவரது பெற்றோர் அவரது உறுப்புகளை தானம் செய்ய விருப்பம் தெரிவித்தனர். திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி SAT மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 10 வயது குழந்தைக்கு இரண்டு சிறுநீரகங்கள் தானமாக வழங்கப்படும். KIMS மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஆறு மாத குழந்தைக்கு ஒரு கல்லீரல், AIT மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஒரு குழந்தைக்கு ஒரு இதய வால்வு, அமிர்தா மருத்துவமனைக்கு கார்னியா தானமாக வழங்கப்படும்.
மிகுந்த துயரத்தின் மத்தியிலும் மற்றவர்களின் உயிரைக் காப்பாற்ற முடிவு செய்ததற்காக பெற்றோருக்கு நன்றி தெரிவிப்பதாகவும், குடும்பத்தின் துயரத்தில் தானும் பங்கு கொள்வதாக சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
கேரளாவின் கொச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சாலை விபத்தில் சிக்கி ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட பத்து மாத குழந்தை ஆலின் ஷெரின் ஆபிரகாம் நேற்று மூளைச்சாவு அடைந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், அவரது பெற்றோர் அவரது உறுப்புகளை தானம் செய்ய ஒப்புதல் அளித்ததால் நான்கு பேரின் உயிர் காக்கப்பட்டுள்ளது. #🔴இன்றைய முக்கிய செய்திகள்











