கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இந்த திட்டங்கள் குறித்த 14 அப்டேட்டுகளை கொடுத்திருக்கும் தமிழ்நாடு அரசு, தகுதியானவர்கள் இத்திட்டங்களுக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது. எனவே, இங்கே கொடுக்கப்பட்டுள்ள திட்டங்களைப் பற்றி தெரிந்து கொண்டு, தெரிந்தவர்கள் தெரியாதவர்கள் மற்றும் தகுதியான நபர்களுக்கு தெரியப்படுத்தவும்.
ரேஷன் கார்டு அப்டேட்
ரேஷன் கடைகளில் பல்வேறு தொழில்நுட்ப மேம்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.அதன் ஒருபகுதியாக யுபிஐ மூலம் பணப் பரிவர்த்தனை செய்யலாம் என அரசு அறிவித்துள்ளது. இனி ரேஷன் கடைகளுக்கு ரூபாய் நோட்டுகளை எடுத்துச் செல்ல வேண்டிய அவசியமில்லை. ஆன்லைனிலேயே பணம் செலுத்திக் கொள்ளலாம்.
கைத்தறி நெசவாளர்கள் முதியோர் ஓய்வூதியத் திட்டம்
கைத்தறி நெசவாளர்களுக்கு மாதந்தோறும் முதியோர் ஓய்வூதியமாக ரூ. 1200 வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ், தற்போது 28,108 கைத்தறி நெசவாளர்கள் முதியோர் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். 60 வயதை நிரம்பியவர்கள் பயன்பெறலாம். பழைய ஓய்வூதியம் 1000 ரூபாய் வழங்கப்பட்ட நிலையில், அதில் கூடுதலாக 200 ரூபாய் உயர்த்தி வழங்கப்படுகிறது.
வணிகர்களுக்கு திருமண உதவி
தமிழ்நாடு வணிகர் நலத்துறையின் கீழ் தமிழ்நாடு வணிகர் நல வாரியம் 1989 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. இவ்வாரியம் வணிகர்களுக்கு திருமண உதவித்தொகையாக 10 ஆயிரம் ரூபாய் வழங்கி வருகிறது.
தமிழறிஞர்களுக்கு ஓய்வூதியம்
அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு மாதந்தோறும் 8000 ரூபாய் உதவித்தொகை தமிழ்நாடு அரசு கொடுத்து வருகிறது. அரசு ஊழியர்களைப் போல் தமிழறிஞர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டமும் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது.
இலங்கை அகதிகளுக்கான சிறப்பு ஓய்வூதியத் திட்டங்கள்
இலங்கை அகதிகளுக்கான சிறப்பு ஓய்வூதியத் திட்டங்கள் OAP, DAP, DWP, DDWP ஆகிய திட்டங்களுக்கு வரையறுக்கப்பட்ட தகுதிகளின் கீழ் ஓய்வூதியம் வழங்கப்படுகின்றன. tnesevai.com -ல் கூடுதல் தகவல்களை பெற்றுக் கொள்ளவும்.
தாட்கோ அறிவிப்பு
தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு ஒப்பனை மற்றும் அழகுக்கலை பயிற்சி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து வழங்கும் இந்த பயிற்சியில் விருப்பம் உள்ளவர்கள் தாட்கோவின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://tahdco.com/ பதிவு செய்து பயிற்சி பெறலாம்.
இதேபோல், அமேசான் வலை சேவைகள் re/Start - AI Programmer பயிற்சி வழங்கப்பட உள்ளது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கான
செயற்கை நுண்ணறிவில் நிபுணத்துவம் பெற https://iei.tahdco.com/aws_reg.php என்ற பக்கத்தில் விண்ணப்பிக்கலாம்.
ஓய்வூதிய திட்டம் அப்டேட்
தமிழ்நாடு அரசின் சமூக பாதுகாப்பு ஓய்வூதிய திட்டங்களின் கீழ் மாதந்தோறும் 35,43,159 பயனாளிகள் ஓய்வூதியம் பெற்று பயனடைந்து வருகின்றனர் என அரசு கூறியுள்ளது.
அன்பு கரங்கள் திட்டம்
தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் அன்பு கரங்கள் திட்டம் மூலம் பெற்றோரை இழந்த 10,637 குழந்தைகளுக்கு மாதந்தோறும் 2000 ரூபாய் கொடுக்கப்படுகிறது. குழந்தைகளுக்கு 18 வயது அடையும் வரை இந்த நிதியுதவி வழங்கப்படும்.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்
தமிழ்நாட்டில் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 6650 கோடி ரூபாய் செலவு செய்து, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் 1.31 கோடி பெண்களுக்கு அவரவர் வங்கிக் கணக்கில் ரூ.5000/- வரவு வைக்கப்பட்டிருக்கிறது. இதில், பயனாளிகளுக்கு பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணம் ரூ.3000, கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பு ரூ.2000 வழங்கப்பட்டுள்ளது.
9801 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய முதலமைச்சர்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாடு அரசின் பணியாளர் தெரிவு முகமைகளான தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட சுமார் 9801 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
தமிழ்நாடு முதலிடம்
புதிய காற்றாலைகளை மீண்டும் புதுப்பித்தல் கொள்கையை செயல்படுத்துவதில், தமிழ்நாடு நாட்டிலேயே முதலிடம் வகிக்கிறது. இதுவரை 27.67 மெகாவட் திறன் கொண்ட பழைய காற்றாலைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன.
திறன் மேம்பாட்டு பயிற்சி
படித்த இளைஞர்களின் திறனை மேம்படுத்தி வேலைவாய்ப்புகள் பெற்றிட உதவும் நான் முதல்வன் திட்டம். 48.65 இலட்சம் மாணவர்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது. 1.17 இலட்சம் கல்லூரிப் பேராசிரியர்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
தூய்மை பணியாளர்களுக்கான திட்டம்
இந்தியாவிற்கே வழிகாட்டியாக தூய்மைப் பணியாளர்களுக்கு குடியிருப்பு திட்டம், உணவு வழங்கும் திட்டம், தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகளுக்கு புதிய உயர்கல்வி உதவித்தொகை திட்டம், தொழில் தொடங்கிட மானியத்துடன் கடனுதவி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளுக்கு விரிவுப்படுத்தி தொடங்கி வைத்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
திருமணமாகாத பெண்களுக்கு ஓய்வூதியம்
தமிழ்நாட்டில் திருமணமாகாத ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு மாத ஓய்வூதியம் தமிழ்நாடு அரசால் வழங்கப்படுகிறது. 50 வயதுக்கும் மேலானவர்கள் இத்திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம். குடும்ப ஆண்டு வருமானம் 1 லட்சம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும் #📢பிப்ரவரி 13 முக்கிய தகவல் 🤗
சாதம் தான் ரொம்ப பிடிக்கும் காரமா இருந்தாலும் சாப்பிடுவேன் #💕 வாலெண்டைன் வைப் ஸ்பெஷல் ஸ்டேட்டஸ்💖 #💑🏻Celebrity ஜோடிகள் #💕லவ்வருக்கான ஸ்பெஷல் ரெசிபி🍗 #💑கணவன் மனைவி காதல்💞
அவளின் முத்தம்
: சமூகத்தில் ஒருத்தன் #😘முத்த தின வாழ்த்துக்கள்💕 #💘Love Quotes & Videos #💕காதலர் தினம் பரிசுகள்🎁 #💕 வாலெண்டைன் வைப் ஸ்பெஷல் ஸ்டேட்டஸ்💖 #💗இதயம் ஆர்ட் & வரைபடங்கள்🖌️
மருமகனோடு ஓடிய மாமியாரின்
அடுத்த அதிரடி!
அலிகர் : கடந்த ஆண்டு மகளுக்கு நிச்சயிக்கப்பட்ட நபருடன் காதல் வயப்பட்டு, நகை, பணத்துடன் ஓடி நாட்டை அதிரவைத்தவர் சப்னா தேவி
தற்போது அந்த காதலனின் மைத்துனருடன் முன்பு போலவே வீட்டில் உள்ள நகை, பணத்துடன் ஓடிவிட்டதாக காதலன் புகார் #📢பிப்ரவரி 13 முக்கிய தகவல் 🤗
காதலர் தினம் எப்படி வந்தது? #💕காதலர் தினம் பரிசுகள்🎁 #💕 வாலெண்டைன் வைப் ஸ்பெஷல் ஸ்டேட்டஸ்💖 #💘Love Quotes & Videos #🤗சிறந்த டேட் ஐடியாக்கள்💕
அலிகார் பகுதியைச் சேர்ந்த 38 வயது பெண் 'சப்னா தேவி. இவருக்குத் திருமணமான நிலையில், கடந்த 2025 ஏப்ரல் மாதம் இவரது மகளுக்கும், ராகுல் என்ற இளைஞருக்கும் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டது.
நிச்சயதார்த்தத்திற்குப் பிறகு, ராகுலுக்கும் அவரது வருங்கால மாமியாருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, அது காதலாக மாறியுள்ளது. இதன் உச்சகட்டமாக, மகளின் திருமணத்திற்கு 12 நாட்களே இருந்த நிலையில், கடந்த 10 மாதங்களுக்கு முன்பு சப்னா தனது வருங்கால மருமகன் ராகுலுடன் வீட்டை விட்டு வெளியேறினார்.
இந்த விவகாரம் காவல் நிலையத்திற்குச் சென்றபோது, சரிதா தனது கணவர் மற்றும் குழந்தைகளைத் துறந்துவிட்டு, தன்னைவிட 18 வயது இளையவரான ராகுலுடன் வாழப்போவதாகத் திட்டவட்டமாகத் தெரிவித்தார். இதையடுத்து இருவரும் பீகார் மாநிலம் சீதாமர்ஹி பகுதிக்குச் சென்று குடியேறினர். அங்கு ராகுல் துணி வியாபாரம் செய்து பிழைப்பு நடத்தி வந்தார்.
சமீபத்தில் இந்தக் கதையில் யாரும் எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி, ராகுல் வேலைக்குச் சென்றிருந்த நேரத்தில், சப்னா வீட்டில் இருந்த 2 லட்ச ரூபாய் ரொக்கம் மற்றும் நகைகளுடன் மாயமானார்.
இதுகுறித்து ராகுல் தேடியபோது, சப்னா தற்போது தனது பெரியப்பாவுடன் ஓட்டம் பிடித்திருப்பது தெரியவந்தது. காதலுக்காகத் தன் மகளின் வாழ்வைச் சிதைத்து வந்தவர், இப்போது தன்னையும் ஏமாற்றிவிட்டதாக ராகுல் கண்ணீர் மல்கக் குற்றம் சாட்டியுள்ளார்.
பாதிக்கப்பட்ட ராகுல் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால், இந்தச் சம்பவம் பீகார் மாநிலத்தில் நடந்துள்ளதால், தாங்கள் தலையிட முடியாது என்றும், இது தங்களது அதிகார எல்லைக்கு அப்பாற்பட்டது என்றும் கூறி போலீஸார் ராகுலை பீகார் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ச்சியாக உறவு முறைகளைச் சிதைக்கும் வகையில் அந்தப் பெண் எடுத்து வரும் இந்த முடிவுகள், அப்பகுதி மக்களிடையே பெரும் விவாதத்தையும் அதிருப்தியையும் ஏற்ப #காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔 #வாழ்க்கையை அழிக்கும் கள்ளக்காதல் 💔 டுத்தியுள்ளது #📢பிப்ரவரி 12 முக்கிய தகவல் 🫠
அவற்றிற்கு கொடுக்கும் அதிக வேலைப்பளுவால் ஏற்படுகின்றன, என்று நினைத்திருப்போம். சில நேரங்களில் இந்த வலி தூக்கமின்மை, சோர்வு ஆகிய காரணங்களினாலும் ஏற்பட வாய்ப்புள்ளது.
இந்த வலியை தொடர்ச்சியாக உணர்ந்தாலோ, தினசரி அதை அனுபவித்தாலோ அதை சாதாரணமாக கருதி புறக்கணிப்பது ஆரோக்கியத்திற்கு மிகவும் ஆபத்தான செயலாகும். இந்த வலி திடீரென்று உருவாகலாம் அல்லது படிப்படியாக அதிகரித்துக் கொண்டே வரலாம். பலரும் இதை எலும்பு தேய்மானம் அல்லது தசை பிடிப்பு காரணமாக ஏற்படுகிறது என்று கூட நினைக்கிறார்கள். இதன் உண்மையான தீவிரத்தை பலரும் அறிவது இல்லை.
தலைவலி மற்றும் கழுத்து வலி ஆகியவை மற்ற சில காரணங்களாலும் ஏற்படலாம். குறிப்பாக உயர் ரத்த அழுத்தத்தின் அறிகுறியாகவும் இது இருக்கலாம். இந்த வலி எப்போது இயல்பானது? எப்போது இதற்கு எச்சரிக்கை தேவை? என்பதை புரிந்து கொள்வது மிகவும் அவசியம். ஒரே இடத்தில் மீண்டும் மீண்டும் வலி ஏற்பட்டாலோ, தொடர்ச்சியாக அதை அனுபவித்தாலோ, அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது.
இது போன்ற தருணங்களில் மருத்துவரை அணுகி, அவரது பரிந்துரையின் பெயரில் சில சோதனைகளை செய்து கொள்ளலாம்.
இரத்த அழுத்தம் இயல்பு நிலையை விட அதிகமாகும் பொழுது ரத்த நாளங்களில் அழுத்தம் ஏற்படுகிறது. இந்த அழுத்தத்தின் காரணமாக அது தலையின் பின்புறம் மற்றும் கழுத்து வலியை ஏற்படுத்துகிறது. இந்த வலி பெரும்பாலும் படிப்படியாக உருவாகி நீண்ட நேரம் நீடிக்கும்.
இந்த வலியை சிலர் காலை நேரங்களிலோ அல்லது மன அழுத்தம் அதிகமாக இருக்கும் நேரங்களிலோ, அனுபவிக்கிறார்கள்.
அடிக்கடி வரும் தலைச்சுற்றல், சோர்வு அல்லது விரைவான இதயத் துடிப்பு ஆகிய அறிகுறிகளுடன் இந்த வலி இருந்தால், அதைப் புறக்கணிக்கக் கூடாது. சரியான நேரத்தில் நோயறிதல் மற்றும் சரியான பராமரிப்பு எதிர்காலத்தில் நிகழ இருக்கும் பெரிய அபாயத்தில் இருந்து காப்பாற்றலாம்.
இது தவிர வேறு சில அறிகுறிகளையும் உயர் ரத்த அழுத்தத்தோடு தொடர்புபடுத்தி பார்க்கலாம். இதில் படபடப்பு, சோர்வு மற்றும் மங்கலான பார்வை ஆகியவை அடங்கும். நீண்டகால உயர் இரத்த அழுத்தம் ஒருவரின் நினைவாற்றலை கூட பாதிக்கும். சில சமயங்களில் மங்கலான பார்வை அல்லது பிரகாசமான வெளிச்சத்தில் பார்ப்பதில் சிரமத்தை ஏற்படுத்தும். இந்த அறிகுறிகள் ஆரம்பத்திலேயே கண்டறியப்பட்டால், கடுமையான உடல்நலப் பிரச்னைகளைத் தடுக்கலாம்.
இந்த வலிகளில் இருந்து மீளுதல் எவ்வாறு?
• வாரம் இருமுறை உங்கள் இரத்த அழுத்தத்தை சரிபார்த்துக் கொள்ளவும். அவை மருத்துவர்கள் பரிந்துரைத்த சராசரி அளவில் இருக்கிறதா? என்பதை உறுதி செய்யவும்.
• தினசரி உணவில் குறைந்த அளவு உப்பினை பயன்படுத்துங்கள்.
• அதிக எண்ணெய் கொண்ட பலகாரங்களை தவிர்த்து விடுங்கள்.
•மன அழுத்தத்தைக் குறைக்க யோகா மற்றும் தியானம் செய்யுங்கள்.
•போதுமான அளவில் தூங்கவும்.
•தினமும் உடற்பயிற்சி செய்யவும்.
• வலி தொடர்ந்தால் மருத்துவரை அணுகவும். #😷சுகாதார ஹெல்த் டிப்ஸ் #🏋🏼♂️ஆரோக்கியம் #💪Health டிப்ஸ்
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள வடகரை பகுதியைச் சேர்ந்தவர் முருகேஸ்வரி.. கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு மதுரை சரவணன் என்பவருடன் முருகேஸ்வரிக்கு திருமணம் நடைபெற்று.. அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
தேனி முருகேஸ்வரி
ஆனால் திருமணத்திற்கு முன்பே பல பெண்களுடன் தொடர்பு வைத்திருந்தவர் சரவணன்.. போதாக்குறைக்கு மதுபோதைக்கும் அடிமையானவர்.. தினமும் குடித்துவிட்டு வந்து முருகேஸ்வரியை வன்கொடுமை செய்துள்ளார்.
இதனால் மனமுடைந்த முருகேஸ்வரி, கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு கணவரைப் பிரிந்து தன்னுடைய அம்மா வீட்டுக்கு வந்துவிட்டார்.. தங்களது வாழ்வாதாரத்துக்காக ஜவுளிக்கடையில் வேலை பார்த்து தன் குழந்தைகளைக் காப்பாற்றி வந்தார்.
கணவன், காதலன்
மதுரையில் உள்ள ஜவுளிக்கடையில் முருகேஸ்வரி பணிபுரிந்தபோது, கார்த்திக் என்பவருடன் முருகேஸ்வரிக்கு அறிமுகம் ஏற்பட்டுள்ளது. முருகேஸ்வரிக்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் இருப்பதை அறிந்திருந்தும், கார்த்திக் அவரைத் தீவிரமாகக் காதலிப்பதாகவும், திருமணம் செய்துகொள்வதாகவும் உறுதியளித்தார். ஆனால் இதற்கு கார்த்திக்கின் வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது...
முருகேஸ்வரியை திருமணம் செய்ய கூடாது என்று அவரைக் குடும்பத்தினர் அடித்து தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இருந்தாலும் குடும்ப எதிர்ப்பை மீறி முருகேஸ்வரியை திருமணம் செய்துகொண்டு, பெரியகுளத்தில் குழந்தைகளுடன் குடியேறி தனிக்குடித்தனம் நடத்த துவங்கினார் கார்த்திக்...
சொத்துக்காக இப்படியா
வாழ்க்கை சீராக செல்லும் என்று நம்பியிருந்த நிலையில், திருமணமான 2 மாதங்களிலேயே கார்த்திக்கின் குடும்பத்தினர் அவருக்கு வேறொரு பெண்ணை திருமணம் செய்து வைக்கத் திட்டமிட்டனர். இதற்காக கார்த்திக்கை மிரட்டி அவர்கள் அழைத்துச் சென்றுவிட்டதாகத தெரிகிறது.
இது குறித்து முருகேஸ்வரி பெரியகுளம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். விசாரணையின் போது, முருகேஸ்வரியுடன் சேர்ந்து வாழ்வதாக கார்த்திக்கும் அவரது குடும்பத்தினரும் உறுதி அளித்ததால், அவர் புகாரைத் திரும்பப் பெற்றார். ஆனால், இந்த சமரசத்தின்போது கார்த்திக்கின் சொத்துகளில் உரிமை கோரக்கூடாது என முருகேஸ்வரியிடம் கட்டாயப்படுத்தி பத்திரத்தில் கையெழுத்து வாங்கியதாக கூறப்படுகிறது.
தேனி கலெக்டர்
மீண்டும் கணவருடன் வாழத் தொடங்கிய முருகேஸ்வரிக்குத் துன்பங்களே மிஞ்சின. கார்த்திக்கின் அம்மா சந்திரா மற்றும் குடும்பத்தினரின் தூண்டுதலால், கார்த்திக் தினமும் முருகேஸ்வரியை சித்திரவதை செய்து தாக்கியுள்ளார். ஒருகட்டத்தில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவிட்டு முருகேஸ்வரி வீடு திரும்பியபோது, வீட்டில் கணவர் கார்த்திக்கை காணவில்லையாம்.. எங்கேயே தன்னுடைய குடும்பத்துடன் சென்றுவிட்டது தெரியவந்தது..
முருகேஸ்வரி அவரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது, கார்த்திக்கின் குடும்பத்தினர் அவருக்கு வேறொரு திருமணம் செய்து வைக்கப்போவதாக சொல்லி, முருகேஸ்வரிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
கண்ணீர் போராட்டம்
இப்போது முருகேஸ்வரி 8 மாதக் கர்ப்பிணியாக உள்ளார். உடல்நிலை காரணமாக வேலைக்கு செல்ல முடியாமலும், தனது 2 குழந்தைகளைப் பராமரிக்கத் தேவையான அடிப்படை வசதிகள் இல்லாமலும் ஆதரவற்ற நிலையில் தவித்து வருகிறார்.
சட்ட ரீதியான பாதுகாப்பு இல்லாததாலும், உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாலும் வேறு வழியின்றி தனது இரு குழந்தைகளுடன் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து புகார் அளித்தார். தனது கணவரை மீட்டுத் தன்னுடன் வாழ வைக்க வேண்டும் என்றும், அவருக்குத் துணையாக இருந்து கொடுமை செய்த மாமியார் சந்திரா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கண்ணீர் மல்கக் கலெக்டரிடம் கோரிக்கை விடுத்துள்ளார் #📢பிப்ரவரி 12 முக்கிய தகவல் 🫠
சிவராத்திரி பூஜை என்பது இரவு நேரத்தில் நான்கு கால பூஜையாக நடைபெறும். மாசி மாதத்தில் வரும் அமாவாசைக்கு முந்தைய நாள் மகாசிவராத்திரி ஆக ஒவ்வொரு ஆண்டும் அனுஷ்டிக்கப்படும். 2026 மகாசிவராத்திரி பிப்ரவரி 15 ஞாயிற்றுக்கிழமை அன்று வருகிறது. ஆனால் சனிக்கிழமை இரவு கண்விழிக்க வேண்டுமா அல்லது ஞாயிற்றுக்கிழமை இரவு கண் விழிக்க வேண்டுமா, எந்த இரவில் மகாசிவராத்திரி பூஜை நடைபெறும் என்பது குறித்த கேள்விகளும் சந்தேகங்களும் உள்ளன. இது குறித்த முழு விவரங்கள் இங்கே.
சிவராத்திரி என்பது அமாவாசை மற்றும் பௌர்ணமிக்கு முன்பு வரும் சதுர்தசி என்ற திதியில் வரும் நாளாகும். திதிகள் எப்பொழுது துவங்குகிறது எப்பொழுது முடிகிறது என்பது தினமும் ஒரே நேரத்தில் நடக்காது. இதனால் தான் இது போன்ற விருது நாட்கள் மற்றும் விசேஷ நாட்களில் செடிகள் துவங்கும் மற்றும் முடியும் நேரம் பகல் நேரத்தில் இருக்கலாம் இரவு நேரத்தில் இருக்கலாம் அல்லது அதிகாலையிலும் இருக்கலாம். இதனாலேயே சிவராத்திரி விரதம் அமாவாசை திதி கொடுப்பது உள்ளிட்ட முக்கியமான நாட்களில் எந்த நேரத்தில் விரதம் இருக்க வேண்டும் எந்த நேரத்தில் பூஜை செய்ய வேண்டும் என்ற குழப்பம் ஏற்படுகிறது.
2026 மகா சிவராத்திரி தொடங்கும் மற்றும் முடியும் நேரம்
பிப்ரவரி 15 ஞாயிற்றுக்கிழமை மாலை 5:50 மணிக்கு, சதுர்த்தசி திதி துவங்குகிறது.
பிப்ரவரி 14 திங்கட்கிழமை மாலை 6:26 மணிக்கு சதுர்த்தசி திதி முடிவடைகிறது.
இதற்குப் பின்னர் அமாவாசை திதி துவங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மகா சிவராத்திரி 2026 - பூஜை, வழிபாடு தொடங்கும் நேரம்
மாலை நேரத்தில் ஆறு மணி அளவில் சதுர்த்தசி திதி துவங்குவதால் ஞாயிற்றுக்கிழமை இரவு மகாசிவராத்திரி பூஜைகள் மற்றும் விழா கொண்டாடப்படும்.
ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியில் இருந்து திங்கட்கிழமை விடியற்காலை சூரிய உதயம் முன்பு வரை, மகாசிவராத்திரியை முன்னிட்டு நான்கு கால பூஜைகள் நடைபெறும்.
சிவராத்திரி இரவு நேரத்தில் செய்யப்படும் வழிபாடு மற்றும் விசேஷமான பூஜைகள் உள்ளடக்கிய விரதம் என்பதால் ஞாயிறு இரவே கொண்டாடப்படுகிறது.
சனிக்கிழமை சிவபெருமானுக்கு உரிய மற்றொரு விசேஷமான நாளான மகா சனி பிரதோஷம், பிப்ரவரி 14 அன்று வருகிறது. எனவே சனிக்கிழமை இரவு கண் விழித்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை, சனிக்கிழமை இரவு மகாசிவராத்திரி கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
Disclaimer: இந்தப்பதிவு ஆன்மீக மற்றும் ஜோதிட நம்பிக்கைகளின் படிஎழுதப்பட்டதாகும். இதில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துக்களுக்கு அறிவியல் தொடர்பான விளக்கம் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் #🔔 மகாசிவராத்திரி முகூர்த்தம் 🌸 #🔥 ருத்ராபிஷேகம்🕉️ #✨ மகா சிவராத்திரி விரைவில் 🙏🏻 #🙏🏼ஓம் நமசிவாய #🪔 சிவராத்திரி சிறப்பு விரதம் 🙏🏻











