மாடியிலிருந்து விழுந்த குழந்தையை காப்பாற்றிய பூனை ❤️
❤️ #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #😊Positive Stories📰 #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #📺வைரல் தகவல்🤩 #விலங்குகளின் பாசம் 🐒
பச்சரிசி(Raw Rice) ,புழுங்கல் அரிசி (Parboiled Rice) என இரண்டே ரகங்கள் இருந்த நிலையில் சீரகசம்பா,பாஸ்மதி அரிசி என புதியவைகள் பிரியாணி செய்ய கண்டுபிடிக்கப்பட்டது . அத்துடன் விஞ்ஞான ரீதியாக நீரிழிவு பாதிப்புடன் அரிசி உணவை சம்பந்தப்படுத்தி ஆய்வுகள் பயமுறுத்த உடனே கருப்புக் கவுனி , மாப்பிள்ளை சம்பா உள்ளிட்ட இயற்கை முறை ஆர்கானிக் அரிசி ரகங்கள் உருவாக்கப்பட்டு தற்போது சந்தைகளில் கிடைக்கிறது.
இந்த வரிசையில், தற்போது சாதாரண அரிசியை விட 3 மடங்கு அதிக புரதச் சத்து உள்ள 'டிசைனர் அரிசி' (Designer Rice) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது நமக்கு ஆச்சரியத்தைத் தருகிறது.
யார் கண்டுபிடித்தது?
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் செயல்படும் மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில் துறை ஆராய்ச்சி கவுன்சிலின் (CSIR) கீழ் இயங்கும் தேசிய பல்துறை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (NIIST) இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளது.
இந்நிறுவனத்தின் குறிப்பிடத்தக்க சமீபத்திய கண்டுபிடிப்புகளில் ஆரோக்கிய உணவு தொடர்பான ஆய்வுகள் மூலம் உருவான உயர் புரதம் கொண்ட "designer rice" டிசைனர் அரிசி கவனம் பெறுகிறது. சாதாரண அரிசியில் இல்லாத கூடுதல் சத்துக்கள் அல்லது சிறப்பு பண்புகள் சேர்க்கப்பட்ட அரிசி வகைகளே "டிசைனர் அரிசி". எனப்படுகிறது. மரபணு மாற்றம் (Genetic Modification)தாவர இனப்பெருக்க மேம்பாடு (Plant Breeding) உயிரி தொழில்நுட்பம் (Biotechnology) அடிப்படையில் இந்த புதிய அரிசி ரகங்கள் கண்டுபிடிக்கப்படுகிறது.
டிசைனர் அரிசி சாதாரண அரிசியைப் போலன்றி அதிக புரோட்டீன், இரும்புச் சத்து, போலிக்அமிலம், வைட்டமின் பி12 உள்ளிட்ட ஊட்டச் சத்துகள் ஆகியவைகளுடன் சாதாரண அரிசியைவிட 3 மடங்கு அதிக புரதம், குறைந்த க்ளைக்கெமிக் குறியீட்டு வடிவத்தில் உருமாற்றம் செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், "டிசைனர் அரிசி ரகம் தொடர்பான தொழில்நுட்பம், டாடா கன்சியூமர் புராடக்ட்ஸ், திருப்பூரை சேர்ந்த எஸ்எஸ் சோல் புட்ஸ் நிறுவனங்களுக்கு வழங்கப்படவுள்ளது.இந்த ஒப்பந்தப் பரிமாற்றம் தொடர்பான நிகழ்ச்சி டெல்லியில் பிப்ரவரி 18-ஆம் தேதி நடைபெற்றது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதிலுள்ள அதிக ஊட்டச்சத்து தற்போதைய ஹெல்த் பிரச்சினையான ஊட்டச்சத்து குறைபாட்டிற்கு தீர்வு தரும். மேலும் டிசைனர் அரிசியில் கிளைசெமிக் இன்டெக்ஸ் (ஜிஐ) (Glycemic Index (GI) )அளவு மற்ற அரிசி வகைகளை விட மிக குறைவாக உள்ளதால் நீரிழிவு பாதிப்புள்ளவர்களுக்கு பயனுள்ளதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிறுதானிய கலவை அரிசி ,பழுப்பு அரிசி (Brown Rice),ஆர்கானிக் அரிசி , பாலிஷ்டு அரிசி (Polished Rice) என ஏற்கனவே இருக்கும் அரிசி வகைகள் வரிசையில் சேரும் இந்த டிசைனர் அரிசியும் உடல் நலம் தரும் என நம்புவோம். #💊சர்க்கரை நோய் #😷சுகாதார ஹெல்த் டிப்ஸ் #ஆரோகிய குறிப்புகள்🚹 #🌱 இயற்கை மருத்துவம் #💪Health டிப்ஸ்
சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த சிக்கம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் 24 வயது இளம் பெண் சண்முகப்பிரியா.. தனியார் பள்ளி ஆசிரியையாகப் பணியாற்றி வந்தார்..
இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த கவுதம் என்ற இளைஞரருக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாகக் காதல் இருந்து வந்துள்ளது.. ஆரம்பத்தில் சுமூகமாக சென்ற இவர்களது காதலில், சமீபகாலமாகப் பிளவு ஏற்பட்டுள்ளது..
இதனால் சண்முகப்பிரியா, கவுதமுடன் பேசுவதைத் தவிர்த்து வந்ததோடு, காதலையும் முறித்துக் கொள்ள முயன்றுள்ளார்.. ஆனால், கவுதம் அவரை விடாமல் துரத்தித் துரத்திக் காதலிப்பதாகவும், உடனே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும் கட்டாயப்படுத்தி வந்துள்ளார்.
மிரட்டலும் தற்கொலையும்
சண்முகப்பிரியா பிடிவாதமாக திருமணத்திற்கு மறுத்து வந்த நிலையில், கவுதம் அவருக்குத் தொடர்ந்து மன ரீதியாகத் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.. "என்னைத் திருமணம் செய்யவில்லை என்றால் உன்னுடைய தனிப்பட்ட போட்டோக்களை சோஷியல் மீடியாவில் வெளியிட்டு உன் வாழ்க்கையையே அழித்துவிடுவேன்" என்று மிரட்டியதாகக் கூறப்படுகிறது..
காதலனின் இந்தத் தொடர் தொந்தரவாலும், மிரட்டலாலும் சண்முகப்பிரியா கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.. ஒருகட்டத்தில் அவமானத்திற்கும் பயத்திற்கும் அஞ்சி, கடந்த பிப்ரவரி 18-ம் தேதி அவர் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்..
4 பக்க மரண வாக்குமூலம்:
சண்முகப்பிரியா தற்கொலை செய்வதற்கு முன்பாக ஆங்கிலத்தில் எழுதிய 4 பக்கக் கடிதத்தில், கவுதம் தனக்கு கொடுத்த சித்ரவதைகளை மிக விரிவாகவும் வேதனையுடனும் பதிவு செய்துள்ளார்..
அந்தக் கடிதத்தில் "அக்கா, கவுதமை மட்டும் சும்மா விட்றாதீங்க.. அவனுக்குக் கண்டிப்பா தண்டனை கிடைக்கணும்.. நான் பேச்சை நிறுத்தியும் அவன் என்னை விடாமத் துரத்தித் தொந்தரவு செஞ்சான்.. என் சாவுக்கு அவன் தான் முழு காரணம்.. என்னைத் தற்கொலை செஞ்சுக்கத் தூண்டிய அவனைச் சட்டத்தின் முன் நிறுத்துங்க.. அப்போதான் என் ஆத்மா சாந்தியடையும்.." என்றெல்லாம் எழுதியுள்ளார்..
போலீஸ் விசாரணை
இந்தச் சம்பவம் குறித்து ஓமலூர் போலீசார் தற்கொலைக்குத் தூண்டுதல் (பிரிவு 306) மற்றும் மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.. சண்முகப்பிரியாவின் செல்போனை ஆய்வு செய்தபோது, கவுதம் அவரைத் தொடர்ந்து செல்போனில் அழைத்து மிரட்டியதும், நெருக்கடி கொடுத்ததும் உறுதி செய்யப்பட்டுள்ளது..
ஆசிரியை மரணத்தைத் தொடர்ந்து கவுதம் மற்றும் அவரது குடும்பத்தினர் தலைமறைவாகிவிட்டனர்.. அவர்களைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டுச் சேலம் மற்றும் அண்டை மாவட்டங்களில் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது..
உறவினர்கள் கதறல்
ஆசிரியை சண்முகப்பிரியாவின் உடல் போஸ்ட் மார்ட்டம் செய்ய ஓமலூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.. ஆனால், சண்முகப்பிரியாவின் தற்கொலைக்குக் காரணமான கவுதமை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்றும், அதுவரை மகளின் உடலைப் பெற்றுக்கொள்ள மாட்டோம் என்றும் கூறி அவரது உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் மருத்துவமனை முன்பு திரண்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்..
இதனால் ஓமலூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பும் பதற்றமும் நிலவியது.. போராட்டக்காரர்களிடம் ஓமலூர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, குற்றவாளியைத் தப்பவிடாமல் பிடித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த பிறகும்கூட நேற்று உறவினர்கள் உடலை வாங்க மறுப்பு தெரிவித்துள்ளனர்..
பத்திர ஆபீஸ் ஊழியர்
இப்போது கவுதம் எங்கே என்று தெரியவில்லை... சண்முகப் பிரியாவும், அமரகுந்தி பகுதியைச் சேர்ந்த கௌதமும் கல்லூரியில் ஒன்றாக படித்தபோதே காதல் மலர்ந்துள்ளது.. கவுதம் சூரமங்கலத்தில் உள்ள பத்திர எழுத்தர் ஒருவரிடம் ஊழியராக வேலை பார்த்து வருகிறாராம்..
ஆரம்பத்தில் சரியாக இருந்த கவுதம், பிறகு நாளுக்கு நாள் நடவடிக்கை சரியில்லாமல் போயுள்ளது.. அதனால் சண்முகப்பிரியா அவரிடம் பேசுவதை நிறுத்திவிட்டார். அப்படி இருந்து கவுதம் சண்முகப்பிரியாவின் தாய் விஜயலட்சுமியை சந்தித்து திருமணம் தொடர்பாக பேசியபடியே இருந்தாராம்...!! #📢பிப்ரவரி 19 முக்கிய தகவல் 🫠
என் பிள்ளைங்க school 🏫 முடிஞ்சதும் 👍 ஆடு மேய்க்க வந்திட்டாங்க 💪 #🎥Trending வீடியோஸ்📺 #😊Positive Stories📰 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📱சிறப்பு வீடியோக்கள்🎦 #💑Couple Acting
கணவரை கழுத்து வரை புதைத்து, தலையில் பூஜை செய்த மனைவி | வைரல் வீடியோ..!
A bizarre viral video is taking over social media after a woman was seen burying her husband up to his neck and performing a full ritual pooja on his head. Treating him like a Shivling, she poured milk for abhishek, decorated his head with flowers, and chanted “Har Har Mahadev” with intense devotion.
While some viewers are calling it extreme faith and a unique cultural expression, others are shocked and labeling it superstition. The husband’s calm expression has even turned into a meme, with netizens joking about his “next-level patience.”
The location of the video remains unconfirmed, but the clip has sparked massive debate online about belief, tradition, and viral attention. #📺வைரல் தகவல்🤩 #🎥Trending வீடியோஸ்📺 #😊Positive Stories📰 #📱சிறப்பு வீடியோக்கள்🎦 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴










