#🔴இன்றைய முக்கிய செய்திகள் #காதலர் தினம்#லவ்வர்ஸ் 🤪டே கொண்டாட்டம் 🤩 #😱லவ்வர்ஸ் டே ரோஜாக்கள் விலை கிடுகிடு உயர்வு🌹 #லவ்வர்ஸ் டே பரிதாபங்கள் #💘💞லவ்வர்ஸ் டே முதல் முத்தம் 💋
🏍️💨Erode's Two wheeler Bikes Mechanic💥✅🔧🛠️ #👸🧕👰##பெண்களின் பெருமைகள் ## ##👸பெண்கள் நாட்டின் கண்கள் #உழைப்பே உயர்வு தரும் #உன் வாழ்க்கை உன் கையில் #💪ஊக்குவிக்கும் கதைகள்
.
.
"கிண்டர்கார்டனில் தொடங்கிய காதல்...
திருமணத்தில் முடிந்தது" #💞Feel My Love💖 #💖காதல் ஸ்டேட்டஸ்🥰 #💑திருமண ஜோடிகள் #💝இதயத்தின் துடிப்பு நீ #❤️Love Marriage
13 வயதில் நீங்கள் என்ன செய்துகொண்டிருந்தீர்கள்? #📢பிப்ரவரி 17 முக்கிய தகவல் 🤗
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் இப்பகுதியைச் சேர்ந்த 30 வயதான கார்த்தி, ஒரு தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் 28 வயதான பிரியங்காவிற்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று, தற்போது 7 மற்றும் 5 வயதில் இரண்டு குழந்தைகள் உள்ளனர். கணவர் வேலைக்குச் சென்ற நேரத்தில், அதே பகுதியைச் சேர்ந்த உறவினரான முருகன் என்பவருடன் பிரியங்காவிற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
முருகனுக்கு ஏற்கனவே ஜோதி என்ற மனைவியும் குழந்தைகளும் இருந்த நிலையில், பிரியங்காவுடனான அவரது பழக்கம் நாளடைவில் எல்லை மீறியுள்ளது. கார்த்தி வீட்டில் இல்லாத நேரங்களில் முருகன் அங்கு சென்று பிரியங்காவுடன் தனிமையில் இருப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். தனது கணவரின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த முருகனின் மனைவி ஜோதி, அவரைத் தீவிரமாகக் கண்காணித்தபோது இந்தத் தகாத உறவு அம்பலமானது. இதனால் அதிர்ச்சியடைந்த ஜோதி, இதுகுறித்து பிரியங்காவின் கணவர் கார்த்தியிடம் முறையிட்டார்.
இதனைத் தொடர்ந்து கார்த்தியும் ஜோதியும் இணைந்து, அந்த ஜோடியைக் கடுமையாகக் கண்டித்தனர். குழந்தைகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு இந்தத் தவறான உறவைக் கைவிடுமாறு அவர்கள் வலியுறுத்தினர். இருப்பினும், இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது, “மற்றொருவன் கணவனுடன் இப்படி இருக்க வெட்கமாக இல்லையா?” என்று ஜோதி ஊர் முன்னிலையில் பிரியங்காவைச் சாடியதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் பொதுவெளியில் தெரிந்ததால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான பிரியங்கா, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
தன் மனைவி தற்கொலை செய்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த கார்த்தி, உடனடியாகப் போலீசாருக்குத் தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சோமங்கலம் காவல்துறையினர், பிரியங்காவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கள்ளக்காதல் விவகாரத்தால் இரு பிஞ்சு குழந்தைகளைத் தவிக்கவிட்டுத் தாய் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
#வாழ்க்கையை அழிக்கும் கள்ளக்காதல் 💔 #காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔 #கள்ளகாதல் விவகாரம் #📢பிப்ரவரி 17 முக்கிய தகவல் 🤗
சென்னை கிழக்கு கடற்கரை சாலை சேர்ந்தவர்கள் இவரின் மனைவி ஜமுனா(35). இவர்களது எதிர் வீட்டில் சுசில் (32), அவரின் மனைவி கிரிஜா(29) ஆகியோர் குடியிருந்து வந்தனர். அதனால் பார்த்தசாரதியின் குடும்பமும் சுசில் குடும்பமும் பழகி வந்தனர்.
இந்தநிலையில் பார்த்தசாரதியின் மனைவி ஜமுனாவுடன் சுசில் நெருங்கிப் பழகி வந்தார். அதை பார்த்தசாரதி கண்டித்தார். அதனால் பார்த்தசாரதிக்கும் ஜமுனாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கணவரைப் பிரிந்து ஜமுனா சென்றுவிட்டார். மனைவி பிரிந்ததற்கு சுசில்தான் காரணம் என பார்த்தசாரதி கருதினார். அதைத் தொடர்ந்து சுசிலுக்கும் பார்த்தசாரதிக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது.
கொலை
இந்நிலையில் 15.02.2026- ம் தேதி மது போதையில் பைக்கில் பார்த்தசாரதி வீட்டுக்கு வந்தார். அப்போது அங்கு சுசில், தன்னுடைய பைக்கை அங்கு நிறுத்தியிருந்தார். அதனால் பார்த்தசாரதியால் பைக்கை அங்கு நிறுத்த முடியவில்லை. அதனால் பார்த்தசாரதி, சுசில் வீட்டுக்குச் சென்று வாக்குவாதம் செய்தார். அப்போது சுசிலும் பார்த்தசாரதியுடன் தகராறு செய்தாகக் கூறப்படுகிறது.
அதனால் ஆத்திரமடைந்த பார்த்தசாரதி, தன்னுடைய வீட்டுக்குள் சென்று கத்தியை எடுத்துக் கொண்டு வந்தார். பின்னர், சுசிலின் வயிற்றில் கத்தியால் குத்தினார். அதனால் அலறிய சுசிலின் சத்தம் கேட்டு அங்கு வந்த கிரிஜா, பார்த்தசாரதியை தடுக்க முயன்றார். அதனால் கிரிஜாவையும் பார்த்தசாரதி கத்தியால் குத்தினார். இருவரும் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தனர். பின்னர் பார்த்தசாரதி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். உயிருக்குப் போராடிய கணவன் மனைவியை மீட்ட அக்கம் பக்கத்தினர் இருவரையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அதோடு கானாத்தூர் காவல் நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற கானத்தூர் இன்ஸ்பெக்டர் ஆல்பின்ராஜ் தலைமையிலான போலீஸார், விசாரணை நடத்தினர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சுசில், அவரின் மனைவி கிரிஜா அடுத்தடுத்து உயிரிழந்தனர். அதனால் கொலை வழக்கு பதிந்த கானாத்தூர் போலீஸார், கணவன், மனைவி என இருவரின் சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கணவன் மனைவியைக் கொலை செய்த குற்றத்துக்காக பார்த்தசாரதியை போலீஸார் கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் என் மனைவி என்னை விட்டு பிரிந்து செல்ல சுசில்தான் காரணம் என பார்த்தசாரதி விசாரணையில் போலீஸாரிடம் தெரிவித்திருக்கிறார்.
பார்த்தசாரதி
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``கொலை செய்யப்பட்ட சுசிலுக்கு பார்த்தசாரதியின் மனைவியுடன் திருமணத்தை மீறிய உறவு இருந்ததாக தெரிகிறது. அதனால்தான் பார்த்தசாரதியின் மனைவி அவரைப்பிரிந்து சென்றுவிட்டார். தனியாக வசித்து வந்த பார்த்தசாரதிக்கு, சுசில் மட்டும் மனைவியுடன் வாழ்ந்து வருவது ஆத்திரத்தை ஏற்படுத்தி வந்திருக்கிறது. சம்பவத்தன்று மதுபோதையிலிருந்த பார்த்தசாரதி, சுசிலை கொலை செய்ய கத்தியால் குத்தியிருக்கிறார். அதை சுசிலின் மனைவி ஜமுனா தடுத்ததில் அவருக்கும் கத்தி குத்து விழுந்திருக்கிறது. தற்போது இரட்டை கொலை வழக்கில் பார்த்தசாரதியை கைது செய்திருக்கிறோம்" என்றனர்
#கள்ளகாதல் விவகாரம் #காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔 #வாழ்க்கையை அழிக்கும் கள்ளக்காதல் 💔 #📢பிப்ரவரி 17 முக்கிய தகவல் 🤗












