கர்ப்பப்பைவாய்ப் புற்றுநோய் பற்றி இளம்பெண்களுக்கு விழிப்பு உணர்வு ஏன்?
கர்ப்பப்பைவாய்ப் புற்றுநோய் என்பது கருப்பைவாயில் உள்ள செல்களில் உருவாகும் புற்றுநோய். இதற்கு முக்கிய காரணம் ஹெச்பிவி (HPV - Human Papilloma Virus) என்னும் வைரஸ். பொதுவாக நடுத்தர வயது பெண்களிடம் அதிகம் காணப்படும் இந்த புற்றுநோய், 25 வயதுக்குட்பட்ட பெண்களிடமும் பார்க்கலாம். இதுஅரிதானது. அதேநேரம் ஒரேஇரவில் உருவாகும் நோயல்ல. நீண்ட காலம் உடலுக்குள் மெதுவாக வளர்ந்து பின்னர் வெளிப்படுவதால், இளம் பெண்கள் இதைப் பற்றி முன்கூட்டியேஅறிந்துகொள்வது மிகவும் அவசியம்.
கர்ப்பப்பைவாய் புற்றுநோய் எப்படி வருகிறது?
சர்விகல் கேன்சர் பெரும்பாலும் ஆண்களிடமிருந்து பெண்களுக்குப் பரவும் HPV வைரஸ் காரணமாக ஏற்படுகிறது. பெண் குழந்தைகளுக்கு கர்ப்பப்பை வாயின் வெளிப்புற பகுதியில் 'ஸ்குவாமோகோலம்னர் சந்திப்பு' (Squamocolumnar Junction - SCJ) எனப்படும் பகுதி இருக்கும். இளம் வயதில் இந்த பகுதி கீழ்நிலையில் இருக்கும். அந்த நிலையில் பாலியல் உறவு ஏற்பட்டால், அந்த செல்கள் HPV வைரஸால் மெதுவாக பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
பெண்கள் வளர வளர, சுமார் 21 வயதுக்குப் பிறகு இந்த SCJ பகுதி கர்ப்பப்பைவாயின் மேல்பகுதிக்குச் செல்லும். இளம் வயதில் பாலியல் உறவில் ஈடுபடும் பெண்களுக்கு, இந்த பகுதி பாதிக்கப்படுவதன் மூலம் கர்ப்பப்பைவாய் புற்றுநோய் உருவாகும் அபாயம் அதிகரிக்கிறது. இதனால்தான், 9 முதல் 14 வயது வரை உள்ள பெண் குழந்தைகளுக்கு, முன்கூட்டிய தடுப்பு நடவடிக்கையாக HPV தடுப்பூசி போட மருத்துவர்கள் வலியுறுத்துகிறார்கள்.
சர்விகல் கேன்சர் வராமல் தடுக்க முடியுமா?
"இந்த நோயைகண்டிப்பாகத் தடுக்க முடியும். ஹெச்பிவி (HPV) வைரஸில் 16 மற்றும் 18 என்ற இரண்டு வகைகள் தான் கர்ப்பப்பைவாய் புற்றுநோயைஉருவாக்குகின்றன. இந்த வைரஸுக்கு எதிரான தடுப்பூசியைசெலுத்தினால், நோய் வருவதற்கான ஆபத்தைத் தவிர்க்கலாம். அதற்கான தடுப்பூசியும் தற்போது கிடைக்கிறது. இதனைஅடிப்படையாகக் கொண்டு, Indian Academy of Pediatrics - Immunization Schedule அமைப்பு பெண் குழந்தைகளுக்கு இந்த தடுப்பூசியைபோட பரிந்துரைசெய்துள்ளது."
யாருக்கெல்லாம் இந்த தடுப்பூசி தேவை?
9 வயது முதல் 14 வயது வரைஉள்ள பெண்குழந்தைகளுக்கு இந்த தடுப்பூசி போட வேண்டும்.போலியோ, டிப்தீரியா, டைஃபாய்டு போன்றவற்றைத் தடுப்பது போன்று இந்த கர்ப்பப்பைவாய் புற்றுநோயையும் தடுக்க முடியும்.15 வயதுக்கு மேற்பட்ட பெண் பிள்ளைகளுக்கு வருவதற்கான வாய்ப்பு உண்டு.
14 வயது கடந்த பெண்களுக்கு தடுப்பூசி போட முடியாதா?
9 முதல் 14 வயது வரைஉள்ள பெண் குழந்தைகளுக்கு இந்த HPV தடுப்பூசியைஇரண்டு டோஸ்களாக போட வேண்டும். 15 வயதைகடந்த பிறகு, 26 வயதிலும், ஏன் 40 வயதிலும் கூட இந்த தடுப்பூசியைபோட்டுக்கொள்ளலாம். அந்த வயதுகளில் இருப்பவர்களுக்கு 0 - 2 - 6 மாதங்கள் என்ற முறையில் மூன்று டோஸ்களாக தடுப்பூசி செலுத்த வேண்டும்.
தடுப்பூசிகளால் பக்கவிளைவுகள் ஏற்படுமா?
இந்த தடுப்பூசி பாதுகாப்பானது; குறிப்பிடத்தக்க பக்கவிளைவுகள் எதுவும் இல்லை. இது சுமார் 90 சதவீதம் வரைபுற்றுநோய் வராமல் தடுக்க உதவுகிறது. சமீபத்தில் தமிழக அரசு 9 முதல் 14 வயது வரைஉள்ள பெண் குழந்தைகளுக்கு இந்த தடுப்பூசியைஇலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளது. உண்மையில் இந்த தடுப்பூசி எல்லா பெண்களுக்கும் அவசியமானது. இந்த வயதில்தான் அவர்களுக்கு சர்விகல் கேன்சர் ஏற்படும் அபாயம் அதிகமாக இருப்பதால், முன்கூட்டிய தடுப்பு நடவடிக்கைமிகவும் முக்கியம்.
தடுப்பூசி போடுங்கள் இல்லையெனில் புற்றுநோய் வரும் என்பது அச்சத்தை ஏற்படுத்துகிறதே?
"இதில் பயம் தேவையில்லை; விழிப்புணர்வே முக்கியம். எப்படி போலியோவைதடுப்பூசி மூலம் ஒழித்தோமோ, அதேபோன்று சர்விகல் கேன்சரையும் முழுமையாகத் தடுக்க இந்த தடுப்பூசி அவசியம். மேலும், இந்த நோய் குறித்து நடுத்தர வயது பெண்கள் தெரிந்துகொண்டால் போதும் என்று நினைக்கக் கூடாது. சிறுவயது பெண் குழந்தைகளுக்கேஇதைப் பற்றி தெரிய வேண்டியது மிகவும் அவசியம். இளம் வயதிலேயேதடுப்பூசி மற்றும் விழிப்புணர்வு இருந்தால், எதிர்காலத்தில் இந்த புற்றுநோய் ஏற்படும் அபாயம் இருக்காது என்ற நம்பிக்கையைஇது உருவாக்குகிறது.
இளம்பெண்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்று வலியுறுத்த காரணம் என்ன?
பெண் பிள்ளைகள் திருமணம் செய்துகொள்ளும் வயது என்பது மிக முக்கியமான காலகட்டம். இதுவேபாலியல் வாழ்க்கையில் நுழையும் வயது. அதனால்தான், இந்த காலத்திலேயேகர்ப்பப்பைவாய் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வைமுதலில் அவர்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
தடுப்பூசி மட்டுமல்ல, முன்கூட்டிய பரிசோதனையும் அவசியம். இளம்பெண்கள் 21 வயதிலிருந்தே சர்விகல் கேன்சர் ஸ்க்ரீனிங் தொடங்க வேண்டும். குறிப்பாக பாலியல் உறவில் சுறுசுறுப்பாக இருக்கும் பெண்கள் இந்த பரிசோதனையைதவறாமல் செய்து கொள்ள வேண்டும்.
மூன்று ஆண்டுக்கு ஒருமுறை செய்யப்படும் 'பேப் ஸ்மியர்' (Pap Smear) எளிய மற்றும் பாதுகாப்பான பரிசோதனை. இதை HPV பரிசோதனையுடன் சேர்த்து செய்தால், ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை செய்தால் போதும். மேலும் இவர்களுக்கு பரிசோதனை செய்யும் போது அவர்களின் அம்மா, பாட்டி போன்றவர்களும் வந்து பரிசோதனை செய்து கொள்வார்கள். சர்விகல் கேன்சர் ஒரேநாள் இரவில் வந்துவிடும் நோய் அல்ல. அதனால் இத்தகைய பரிசோதனைகளைஎல்லா வயது பெண்களும் செய்து கொள்வது பாதுகாப்பானது.
சர்விகல் கேன்சர் பரிசோதனைசெய்ய வேண்டும் என்று உணர்த்தும் எச்சரிக்கை அறிகுறிகள் என்ன?
"ஒவ்வொரு முறையும் தாம்பத்திய உறவுக்குப் பிறகு இரத்தப்போக்கு ஏற்படுவது, நிறம் மாறிய வெள்ளைப்படுதல் போன்ற அசாதாரண வெளியேற்றம், மாதவிடாய்க்கு இடையில் உதிரப்போக்கு, தாங்க முடியாத அளவுக்கு இடுப்பு வலி போன்ற அறிகுறிகள் இருந்தால், உடனடியாக பரிசோதனைசெய்து கொள்வது அவசியம்."
"கர்ப்பப்பைவாய் புற்றுநோயை முற்றிலும் தடுப்பதற்கான மூன்று முக்கிய கருவிகள்: தடுப்பூசி, முறையான பரிசோதனை மற்றும் விழிப்புணர்வு. இவற்றை சரியாக பயன்படுத்தினால், இளம் பெண்களின் எதிர்காலத்தை பாதுகாக்கலாம்." #👩🏼⚕️ மகளிர் மருத்துவம் #பெண்களின் ஆரோக்கியம் ##😲அதிர்ச்சி - 83000 பேருக்கு புற்றுநோய் பாதிப்பு
உயிரிழந்தோரின் சடங்களில் இருந்து கொழுப்பை எடுத்து அதை ஊசி மூலம் தங்கள் உடலில் செலுத்திக் கொள்வதே இந்த முறை. மிகவும் வினோதமான மற்றும் சர்ச்சைக்குரிய இந்த டிரெண்ட் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.
அமெரிக்காவில் பெண்கள் தங்கள் மார்பகங்கள், இடுப்பு மற்றும் பின்புறத்தை அழகாகக் காட்டிக்கொள்ள, உயிரிழந்தோர் சடலத்திலிருந்து பெறப்பட்ட கொழுப்பை ஊசி மூலம் இந்தப் பாகங்களில் செலுத்திக் கொள்கிறார்களாம். இதை அவர்கள் ஃபில்லர்கள் போலப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இது அமெரிக்காவில் ஒரு புதிய மற்றும் சர்ச்சைக்குரிய அழகுசாதன டிரெண்டாக உருவாகியுள்ளது.
வினோதச் சிகிச்சை முறை
அங்கு அழகு சாதனப் பொருட்களை விற்கும் பிரபல நிறுவனம் இதை விற்று வருகிறது. இப்படித் தான் அங்கு வசிக்கும் 34 வயதான நிதி துறை வல்லுநர் தனது இடுப்பு மற்றும் பின்புறத்தை அழகாக மாற்ற இதுபோல ஃபில்லர்களை பயன்படுத்தியுள்ளார். அங்கு ஒரு முறை இந்தச் சிகிச்சைக்குக் கிட்டத்தட்ட ரூ.40 லட்சம் செலவழித்துள்ளனர்.
அதேநேரம் இது அங்கு சட்டத்திற்கு உட்பட்டே நடக்கிறது. இதற்காகச் சில விரிவான விதிமுறைகள் உள்ள சூழலில், அதை எல்லாம் அவர்கள் முறையாகப் பின்பற்றுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடுமையான ரூல்ஸ் இருப்பதால் இதில் மோசடிகள் நடக்காது என்றும் இந்த ஃபில்லர்கள் மறுசுழற்சி செய்யக்கூடியது என்றும் அவர் குறிப்பிட்டார்.
நம்ம ஊர் மாதிரி இல்லை! இத்தாலியில் இந்திய பெண்ணுக்கு இன்ப அதிர்ச்சி.. இப்படி கூட இருக்குமா! செம
எப்படி?
உயிரிழந்த பிறகு சிலர் தங்கள் உடலை ஆய்வுக்காக ஒப்படைப்பார்கள். அப்படி ஆய்வுக்காகத் தங்கள் உடல்களை தானம் செய்தோரின் உறுப்பு மற்றும் திசுக்களில் இருந்து கொழுப்பு சேகரிக்கப்படுகிறது. பின்னர் அது கிருமி நீக்கம் செய்யப்பட்டு, சுத்திகரிக்கப்பட்டு, செல்லுலார் கொழுப்பு மேட்ரிக்ஸில் பதப்படுத்தப்படுகிறது. அதாவது அனைத்து டிஎன்ஏ மற்றும் உயிருள்ள செல்களும் அகற்றப்படுகின்றன.
பெரும்பாலும் மெலிதாக உள்ளவர்கள் நோயாளிகள், ஏற்கனவே லிபோசக்ஷன் செய்து கொண்டவர்கள், போதுமான கொழுப்பு இல்லாதவர்களுக்கும் இது செலுத்தப்படும். ஓசெம்பிக் மற்றும் மவுஞ்சாரோ போன்ற எடை இழப்பு மருந்துகளைப் பயன்படுத்திக் குறிப்பிடத்தக்க எடையைக் குறைத்தவர்களும் கூட தங்கள் உடலை அழகாகக் காட்டிக் கொள்ள இதைப் பயன்படுத்துவதாக அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் டேரன் ஸ்மித் குறிப்பிடுகிறார்.
மயக்க மருந்து கூட தேவையில்லை
பாரம்பரிய அறுவை சிகிச்சையைப் போல இல்லாமல் இந்த சிகிச்சை செய்வது ரொம்பவே ஈஸியானதாம். மயக்க மருந்து கூட இல்லாமல் சாதாரண கிளினிக்குகளிலேயே இந்த ஃபில்லர்கள் செலுத்தப்படுகிறது. இடுப்பு, பின்புறம், மார்பகங்கள் அல்லது தோள்களில் தான் இவை அதிகம் பயன்படுத்தப்படுவதாக மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள்..
இது தொடர்பாக மருத்துவர்கள் மேலும் கூறுகையில், "வழக்கமான அழகு சார்ந்த அறுவை சிகிச்சையை விட இது காஸ்ட்லி தான். ஆனால், இது எளிமையானது. ஆபரேஷன் தேவையில்லை.. மயக்க மருந்து தேவையில்லை. தீவிரமான மருத்துவ நடைமுறைகள் தேவையில்லை. இதனால் இந்த வசதிக்காகவே மக்கள் அதிகத் தொகையைக் கட்டணமாகச் செலுத்துகிறார்கள்" என்றார்.
"இந்தியர்கள் எல்லாரும் சோம்பேறிகள்.." வாயை விட்டு வாங்கிக் கட்டி கொண்ட அமெரிக்க சுற்றுலா பயணி
எவ்வளவு செலவு?
இந்த வகைச் சிகிச்சை இப்போது தான் தொடங்கப்பட்டுள்ள நிலையில், இதற்கு அதிகப்படியான கட்டணம் வசூலிக்கப்படுகிறது. எவ்வளவு ஃபில்லர்கள் செலுத்தப்படுகிறது என்பதைப் பொறுத்து $10,000 முதல் $100,000 வரை, அதாவது 9 லட்சம் முதல் ரூ.90 லட்சம் வரை கூட கட்டணமாக வசூலிக்கிறார்களாம் #📢பிப்ரவரி 8 முக்கிய தகவல் 🫠
மதுரை திருப்பரங்குன்றம் அடுத்த சாமநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் (36). இவர் சாமநத்தம் ஊராட்சி மன்ற துணைத்தலைவராகவும், அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையின் முன்னாள் ஒன்றிய செயலாளராகவும் பொறுப்பு வகித்து வருகிறார்..
மதுரை அஇஅதிமுக செந்தில் குமார்
இவர் தன்னுடைய ஊரில் உள்ள பள்ளிக்கூடம் அருகே டீக்கடை ஒன்றையும் நடத்தி வந்தார். இவருக்கு காவியா என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.
காவியாவிற்கும் அவனியாபுரம் பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவருக்கும் இடையே கடந்த சில காலமாக கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக இரண்டு மாதங்களுக்கு முன்பு இருவரும் வீட்டை விட்டு ஓடிவிட்டார்கள்..
இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் சமரசம் செய்து காவியாவை மீண்டும் செந்தில்குமாருடன் சேர்த்து வைத்தனர்... ஆனாலும் காவியா தனது தொடர்பை கைவிடாமல் கார்த்திக்கிடம் செல்போனில் தொடர்ந்து பேசி வந்திருக்கிறார்.. அத்துடன் வீட்டிலிருந்த பணத்தையும் கள்ளக்காதலனுக்கு தந்து வந்துள்ளார்.. மேலும், இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர்.
கள்ளக்காதல் காவ்யா
இந்த விஷயம் தெரிந்த செந்தில்குமார் தனது மனைவியை கண்டித்ததால், இருவருக்கும் இடையே மோதல் வெடித்தது. இதனால் மீண்டும் கோபித்துக்கொண்டு அவனியாபுரத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார் காவியா.. இதனால் மனம் நொந்த பெற்றோர், கணவருடன் சேர்ந்து வாழுமாறு காவ்யாவுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
எங்கே திரும்பினாலும் அட்வைஸ் சத்தமாகவே உள்ளதால் கடுப்பான காவியா தனது அப்பா மீதே போலீஸில் புகார் தந்துவிட்டார்.. இந்த புகாரை கண்டு திடுக்கிட்ட போலீசார், காவ்யாவை சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.
தங்கள் காதலுக்கு மொத்த பேரும் எதிரியாக இருப்பதால் ஆத்திரமடைந்தார் காவ்யா.. கணவர் உயிரோடு இருந்தால் நாம் சந்தோஷமாக வாழ முடியாது என்றும் கார்த்திக்கிடம் சொல்லி உள்ளார்.. இதையடுத்து செந்தில்குமாரை கொலை செய்ய திட்டமிட்ட கார்த்திக், சம்பவத்தன்று தனது நண்பர்கள் 6 பேருடன் ஆட்டோ, பைக்குகளில் சாமநத்தம் பகுதிக்கு சென்றுள்ளார்.
விடிய விடிய காத்திருந்த கும்பல்
நேற்று முன்தினம் இரவு முழுவதும் டீக்கடை அருகிலேயே தண்ணி அடித்துவிட்டு செந்தில்குமாருக்காக விடிய விடிய காத்திருந்தது அந்த கும்பல்.. நேற்று அதிகாலை 5.30 மணியளவில் டீ கடையை திறக்க வந்தார் செந்தில்குமார்.. அப்போது அவரை வழிமறித்த கும்பல், அரிவாளால் செந்தில்குமாரை சரமாரியாக வெட்டியது.
இதில் அவரது கை துண்டிக்கப்பட்டதுடன், முகமும் சிதைக்கப்பட்டது.. இறுதியில் ரத்த வெள்ளத்தில் செந்தில்குமார் கொடூரமாக விழுந்து இறந்தார்..
காவ்யாவின் சதித்திட்டம்
இந்த சம்பவம் குறித்து எஸ்பி அரவிந்த் உத்தரவின் பேரில் சிலைமான் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் காவியாவின் சதித்திட்டம் வெளிச்சத்திற்கு வந்ததை அடுத்து, போலீசார் அவரை கைது செய்தனர்.
இதனிடையே கள்ளக்காதலன் கார்த்திக் உட்பட 3 பேர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். மதுரையில் அரங்கேறிய இந்த பயங்கர கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...!!! #📢பிப்ரவரி 8 முக்கிய தகவல் 🫠 #காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔 #வாழ்க்கையை அழிக்கும் கள்ளக்காதல் 💔
இந்த டிஜிட்டல் யுகத்தில் பணப்பரிவர்த்தனை செய்யும்போது மக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். யாராவது ஒரு நபர் பணத்தை அனுப்பச் சொல்லாமல், "இந்தக் குறியீட்டை ஸ்கேன் செய்யுங்கள், உங்களுக்குப் பணம் வரும்" என்று கூறினால், அது நூறு சதவீதம் மோசடியாகும்.
மேலும் பணத்தைப் பெறுவதற்கு உங்கள் ரகசிய எண்ணை உள்ளிட வேண்டிய அவசியமே இல்லை என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். அறிமுகமில்லாத நபர்களிடம் உங்கள் மொபைலை வழங்குவதோ அல்லது அவர்கள் அனுப்பும் லிங்குகளைக் கிளிக் செய்வதோ ஆபத்தானது. இத்தகைய சைபர் குற்றங்களில் இருந்து தப்பிக்க, விழிப்புணர்வு ஒன்றே சிறந்த வழியாகும். #📢பிப்ரவரி 8 முக்கிய தகவல் 🫠
திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் துரை. இவர் திருவாரூர் நகராட்சித் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வருகிறார். வழக்கம் போல் இன்று காலை தூய்மை பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு ஒரு பை இருப்பதை கண்டார்.
அதில் ஏதோ இருப்பதை உணர்ந்த அவர், அதை பிரித்து பார்த்து அதிர்ந்து போனார். அதில் 20 பவுன் தங்க நகையும் 1 கிலோ வெள்ளியும் இருந்தது. அதை பார்த்ததும் அவருக்கு கையும் ஓடலை காலும் ஓடலை!
இதையடுத்து அந்த நகையை பார்த்ததும் சற்றும் சபலப்படாத துரை, உடனே அவற்றை எடுத்துக் கொண்டு திருவாரூர் நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இதையடுத்து போலீஸார் , துரையை வெகுவாக பாராட்டினர்.
போலீஸ் விசாரணையில், சென்னையில் இருந்து திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்காக ராதாகிருஷ்ணன் என்பவர் அவரது குடும்பத்தினருடன் வந்திருந்தனராம். அப்போது அவர்கள் 20 பவுன் நகை, ஒரு கிலோ வெள்ளியை தவறவிட்டது தெரியவந்தது.
இதையடுத்து ராதாகிருஷ்ணன் குடும்பத்தினரும் திருவாரூர் நகர் காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளனர். இந்த நிலையில்தான் துரை, அந்த நகைகளை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இதையறிந்த ராதாகிருஷ்ணன் குடும்பத்தினர், துரையை அழைத்து நன்றி தெரிவித்தனர்.
மேலும் ராதாகிருஷ்ணன், தனது மகளின் திருமணத்திற்காக சிறுக சிறுக சேர்த்து வைத்த நகைகளாம். இந்த நகைகள் கிடைத்ததும் அவரது மனைவி ஆனந்தத்தில் கதறி அழுத காட்சி அங்கிருந்தவர்களை நெகிழ செய்தது. #📢பிப்ரவரி 8 முக்கிய தகவல் 🫠
புத்தூரைச் சேர்ந்த பத்மா என்ற பெண், சில ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி ஒருவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். திருமணத்தின் போது பல கனவுகளுடன் வாழ்க்கையைத் தொடங்கிய பத்மாவிற்கு, அடுத்தடுத்த நிகழ்வுகள் பெரும் சோதனையாக அமைந்தன.
அதாவது பத்மாவின் கணவர் கடந்த சில காலமாக வேலை இல்லாமல் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் கடன் தொல்லை காரணமாகக் குடும்பத்தில் அடிக்கடி மனக்கசப்புகள் ஏற்பட்டுள்ளன. வறுமையினாலும், கடன் கொடுத்தவர்களின் நெருக்கடியினாலும் மனம் உடைந்த பத்மா, தனது இரண்டு குழந்தைகளுடன் விபரீத முடிவை எடுத்துள்ளார்.
அவர் மறைவதற்கு முன் எழுதியுள்ள உருக்கமான வரிகளில், "பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் செய்பவர்களுக்கு என் வாழ்க்கை ஒரு பாடம். நான் பட்ட கஷ்டங்கள் எனக்குத்தான் தெரியும்" எனத் தனது வேதனையைப் பதிவு செய்துள்ளார்.
மேலும் இந்தத் துயரச் சம்பவம் குறித்து உள்ளூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். #📢பிப்ரவரி 8 முக்கிய தகவல் 🫠
கோட் சூட்டில் கூட அதே அரசியல் உடை நிறத்தை பின்தொடரும் விஜய் #📢பிப்ரவரி 8 முக்கிய தகவல் 🫠
முன்னாள் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் உறவினர் இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்ட தவெக தலைவர் விஜய்.
| | #📢பிப்ரவரி 8 முக்கிய தகவல் 🫠
ஆஹா ,என்ன ஒரு மென்மையான நடனம்,, #🎥Trending வீடியோஸ்📺 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📱சிறப்பு வீடியோக்கள்🎦 #💑Couple Acting #🎬Celebrity Dubsmash
குடிக்க பணம் கேட்டு மூதாட்டியை பலாத்காரம் செய்த இளைஞர்! #📢பிப்ரவரி 8 முக்கிய தகவல் 🫠












![📢பிப்ரவரி 8 முக்கிய தகவல் 🫠 - @re IE குடிக்க பணம் கேட்டு மூதாட்டியை பலாத்காரம் செய்த இளைஞர்! வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே மது போதையில் இளைஞர் ஓருவர் மூதாட்டியை தாக்கி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் 77 வயது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது பணம் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த அஜித்குமார் [24] மூதாட்டியை தாக்கி கொடூரமாக பாலியல் கிறது துன்புறுத்தியதாக கூறப்படு போலீசார் அவரை கைது செய்துள்ள நிலையில் பாதிக்கப்பட்ட மூதாட்டி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளார் @re IE குடிக்க பணம் கேட்டு மூதாட்டியை பலாத்காரம் செய்த இளைஞர்! வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே மது போதையில் இளைஞர் ஓருவர் மூதாட்டியை தாக்கி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் 77 வயது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது பணம் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த அஜித்குமார் [24] மூதாட்டியை தாக்கி கொடூரமாக பாலியல் கிறது துன்புறுத்தியதாக கூறப்படு போலீசார் அவரை கைது செய்துள்ள நிலையில் பாதிக்கப்பட்ட மூதாட்டி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளார் - ShareChat 📢பிப்ரவரி 8 முக்கிய தகவல் 🫠 - @re IE குடிக்க பணம் கேட்டு மூதாட்டியை பலாத்காரம் செய்த இளைஞர்! வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே மது போதையில் இளைஞர் ஓருவர் மூதாட்டியை தாக்கி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் 77 வயது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது பணம் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த அஜித்குமார் [24] மூதாட்டியை தாக்கி கொடூரமாக பாலியல் கிறது துன்புறுத்தியதாக கூறப்படு போலீசார் அவரை கைது செய்துள்ள நிலையில் பாதிக்கப்பட்ட மூதாட்டி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளார் @re IE குடிக்க பணம் கேட்டு மூதாட்டியை பலாத்காரம் செய்த இளைஞர்! வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே மது போதையில் இளைஞர் ஓருவர் மூதாட்டியை தாக்கி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் 77 வயது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது பணம் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த அஜித்குமார் [24] மூதாட்டியை தாக்கி கொடூரமாக பாலியல் கிறது துன்புறுத்தியதாக கூறப்படு போலீசார் அவரை கைது செய்துள்ள நிலையில் பாதிக்கப்பட்ட மூதாட்டி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளார் - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_10332_329aebab_1770558008744_sc.jpg?tenant=sc&referrer=user-profile-service%2FrequestType50&f=744_sc.jpg)