எல்லா ஆண்களும் ஒரே மாதிரி அல்ல; எல்லா பெண்களும் ஒரே காரணத்திற்காக தவறான உறவுகளுக்கு செல்லவில்லை. ஒவ்வொரு உறவும் தனித்துவமானது. காரணங்களும் சூழல்களும் மாறுபடும்.
திருமண வாழ்க்கையில் முக்கியமானவை நம்பிக்கை, திறந்த உரையாடல், பரஸ்பர மரியாதை, உணர்ச்சி ஆதரவு. இவை குறையும்போது தான் உறவுகள் பாதிக்கப்படுகின்றன.
கணவன்–மனைவி இருவரும் ஒருவரின் உலகத்தை மற்றொருவர் புரிந்துகொள்ள முயன்றால், உறவு வலுவாகும். குற்றம் சுமத்துவதற்குப் பதிலாக, காரணங்களை உணர்ந்து சரிசெய்வதே உறவை காப்பாற்றும் வழியாகும்.
உறவில் நிலைத்தன்மை வேண்டும் என்றால், அன்பும் பொறுப்பும் இரு பக்கமும் சமமாக இருக்க வேண்டும் #காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔 #கள்ளக்காதல் பண்ணலாம் வாங்க #கள்ளகாதல் விவகாரம் #📢பிப்ரவரி 19 முக்கிய தகவல் 🫠
கார் டிரைவராகப் பணியாற்றி வந்த கத்தி சுரேஷ், ஆரம்பத்தில் மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கையைத் தொடங்கினாலும், நாளடைவில் மதுவுக்கு அடிமையானது விபரீதத்தின் தொடக்கமானது. குடிப்பழக்கத்தால் மனைவியைத் துன்புறுத்தியதுடன், குடும்பப் பொறுப்புகளை மறந்த சுரேஷ், மனைவியின் வருமானத்தைச் சுரண்டி பிழைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார். இந்தச் சூழலால் ஏற்பட்ட விரக்தியில் தவறான பாதையைத் தேர்ந்தெடுத்த மௌனிகா, அஜய் என்பவருடன் கொண்ட கள்ளக்காதலால் தனது கணவனையே தீர்த்துக்கட்டத் துணிந்தார்.
சுரேஷைக் கொல்வதற்கு மௌனிகா தீட்டிய திட்டங்கள் மிகவும் கொடூரமானவை. மருத்துவ ஏஜென்சி உரிமையாளர் சிவகிருஷ்ணா கொடுத்த ஆலோசனையின் பேரில், சுரேஷின் மரணத்தை இயற்கையான மரணமாகக் காட்ட மௌனிகா முயன்றார். முதல் முயற்சியாக, மட்டன் குழம்பில் 15 வயாக்ரா மாத்திரைகளைக் கலந்து கொடுத்தார், ஆனால் வாசனை மாற்றத்தால் சுரேஷ் அதைக் கண்டுபிடிக்கவே அந்தத் திட்டம் தோல்வியடைந்தது. எனினும் பின்வாங்காத மௌனிகா, செப்டம்பர் 17, 2025 அன்று மதுவில் பிபி மற்றும் தூக்க மாத்திரைகளைக் கலந்து கொடுத்து சுரேஷை மயக்கமடையச் செய்தார். பின்னர் தனது கள்ளக்காதலன் மற்றும் கூட்டாளிகளுடன் சேர்ந்து, சுரேஷின் கழுத்தை இறுக்கி ஜன்னல் கம்பியில் தூக்கில் தொங்கவிட்டு கொலையை அரங்கேற்றினார்.
கொலைக்குப் பிறகு, சுரேஷ் உடலுறவின் போது மயங்கி விழுந்து இறந்ததாக மௌனிகா நாடகமாடினார். ஆனால், சுரேஷின் பெயரில் இருந்த ஆயுள் காப்பீட்டுப் பணத்தைப் பெறுவதற்காக உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளிக்க வற்புறுத்தியது மௌனிகாவுக்குச் சிக்கலாக மாறியது. ஆரம்பத்தில் தயங்கிய அவர், வேறு வழியின்றி புகார் அளித்தார். ஆனால், பிரேதப் பரிசோதனையில் சுரேஷின் கழுத்தில் இருந்த காயங்கள் மற்றும் மௌனிகாவின் முன்னுக்குப் பின் முரணான பதில்கள் போலீசாருக்குப் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தின. காவல்துறையினரின் கிடுக்குப்பிடி விசாரணையில், திட்டமிடப்பட்ட இந்தக் கொலைச் சதி வெளிச்சத்திற்கு வந்தது.
இறுதியில், மௌனிகா, அவரது கள்ளக்காதலன் அஜய், யோசனை வழங்கிய சிவகிருஷ்ணா மற்றும் உடந்தையாக இருந்த ஸ்ரீஜா, சந்தியா, தேவதாஸ் ஆகிய ஆறு பேரும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். ஒரு சாதாரண கார் டிரைவரின் மதுப்பழக்கம் குடும்ப வன்முறைக்கு இட்டுச் சென்று, இறுதியில் அவரது மனைவியையே ஒரு கொடூரமான கொலையாளியாக மாற்றியிருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்துவிடலாம் என்ற மௌனிகாவின் கணக்கு, காவல்துறையின் நுணுக்கமான விசாரணையால் முறியடிக்கப்பட்டு அனைவரும் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். #கள்ளகாதல் விவகாரம் #கள்ளக்காதல் பண்ணலாம் வாங்க #காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔 #📢பிப்ரவரி 19 முக்கிய தகவல் 🫠
சென்னை கிழக்கு கடற்கரை சாலையை சேர்ந்த இந்த மீனவர் யார்? சுசில் யார்? இங்கே சுருக்கமாக பார்ப்போம்....!!
சென்னை கானத்தூர் ரெட்டி குப்பம் பகுதியில் வசித்து வருபவர் பார்த்திபன் என்கிற பார்த்தசாரதி (42)... இவரது மனைவி ஜமுனா (36). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
சென்னை மீனவர் மனைவி
பார்த்திபன் மீன்பிடித் தொழிலுக்கு சென்ற நேரங்களில், அவரது மனைவி ஜமுனாவுக்கும் எதிர் வீட்டில் வசித்த சுசிலுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனை அறிந்த பார்த்திபன், தனது மனைவியையும் சுசிலையும் பலமுறை எச்சரித்துள்ளார்.
ஆனாலும் அவர்கள் தங்களது தொடர்பைக் கைவிடவில்லை. இதன் காரணமாக ஜமுனாவுக்கும் பார்த்திபனுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
கள்ளக்காதல் சம்பவம்
ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த ஜமுனா, தனது கணவர் பார்த்திபனை விட்டுப் பிரிந்து, தனது இரண்டு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு தனியாக வாழத் தொடங்கினார். தனது மனைவி தன்னை விட்டுப் பிரிந்து சென்றதற்கும், தனது குடும்பம் சிதைந்ததற்கும் சுசில் தான் முழுக்காரணம் என்று பார்த்திபன் கடும் மன உளைச்சலிலும் ஆத்திரத்திலும் இருந்துள்ளார்.
தான் மட்டும் தனிமரமாக இருக்கும்போது, சுசில் தனது மனைவி கிரிஜா மற்றும் மகனுடன் மகிழ்ச்சியாக வாழ்வது பார்த்திபனுக்குத் தாங்க முடியாத வன்மத்தை ஏற்படுத்தியுள்ளது.
பார்த்திபன் பைக்
இந்த நிலையில், கடந்த 15ம் தேதி இரவு பார்த்திபன் நன்றாக மது அருந்திவிட்டு போதையில் தனது வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது சுசில் தனது பைக்கை பார்த்திபன் வீட்டின் அருகே நிறுத்தியிருந்ததாக தெரிகிறது. இதனால் தனது வாகனத்தை நிறுத்த முடியாமல் போன ஆத்திரத்தில் இருந்த பார்த்திபன், சுசிலின் வீட்டிற்குச் சென்று கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
போதை தலைக்கேறிய நிலையில் இருந்த பார்த்திபன், மறைத்து வைத்திருந்த கத்தியால் சுசிலின் கழுத்து மற்றும் வயிற்றுப் பகுதியில் சரமாரியாகக் குத்தினார்.
ஈசிஆர் கானாத்தூர் குப்பம்
கணவரின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த கிரிஜா, தனது கணவனைக் காப்பாற்ற முயற்சி செய்தார். ஆனால், ஆத்திரம் தீராத பார்த்திபன் கிரிஜாவையும் கத்தியால் கொடூரமாகக் குத்தினார். இருவரும் ரத்த வெள்ளத்தில் சரிந்ததைக் கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக கானத்தூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
இன்ஸ்பெக்டர் ஆல்பின்ராஜ் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கிரிஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த சுசிலை 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர், ஆனால் அவர் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தனிமரம் - வாக்குமூலம்
தப்பியோடிய பார்த்திபனை போலீஸார் கைது செய்து விசாரித்தபோது, "என் மனைவி என்னை விட்டுப் பிரிந்து செல்ல சுசில்தான் காரணம், அதனால் அவர்களைத் தீர்த்துக்கட்டினேன்" என்று வாக்குமூலம் அளித்துள்ளார். இப்போது பார்த்திபன் மீது இரட்டைக் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் இருவரது உடல்களும் போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
பார்த்திபன், சுசில் இருவருமே மீன்பிடி தொழில் செய்து வருபவர்களாம்.. ஆரம்பத்தில் ஒன்றாகவே மீன்பிடிக்க சென்றுள்ளனர்.. சுசிலுடன் ஜமுனாவுக்கு பழக்கம் அதிகரித்ததும்தான், இவர்கள் ஒன்றாக கடலுக்கு செல்லவில்லையாம்.. பார்த்திபன் தொழிலுக்கு போனதும் ஜமுனா, எதிர் வீட்டு சுசிலுடன் பேசி பழகியதும் அதிகரிக்க துவங்கியதாம்..!! #காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔 #கள்ளக்காதல் பண்ணலாம் வாங்க #கள்ளகாதல் விவகாரம் #📢பிப்ரவரி 19 முக்கிய தகவல் 🫠
இனி வரும் ஆண்டுகளில் ஒவ்வொரு கோடை காலத்திலும், தமிழக மகளிருக்கு ₹2,000 சிறப்பு நிதி வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். கோடைக்காலம் நெருங்கி வரும் நிலையில், கடும் வெயில் காரணமாக மக்களுக்கு ஏற்படக்கூடிய திடீர் உடல்நலக் குறைவுகள் மற்றும் மருத்துவச் செலவுகளைச் சமாளிக்க இந்த நிதி பெரும் உதவியாக இருக்கும் என்று அவர் விளக்கமளித்துள்ளார்.
இந்தச் சிறப்புத் தொகையானது ஏற்கனவே வழங்கப்படும் மகளிர் உரிமைத் தொகையிலிருந்து மாறுபட்ட கூடுதல் நிதி என்பது குறிப்பிடத்தக்கது. வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக்கொள்ளவும், சத்தான உணவுகள் மற்றும் மருத்துவத் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் இந்தத் தொகையை அரசு ஒதுக்கியுள்ளது. அரசின் இந்தத் திடீர் அறிவிப்பு தமிழகம் முழுவதும் உள்ள இல்லத்தரசிகள் மற்றும் உழைக்கும் பெண்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. #📢பிப்ரவரி 19 முக்கிய தகவல் 🫠
மாங்காடு கீழ் ரகுநாதபுரம், ஆஞ்சநேயர் கோயில் தெருவில் வசித்து வரும் இம்ரான் (30), ஸ்ரீதேவி (26) கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தையை பெற்றுள்ளனர். வழக்கம் போல் தாய்ப்பால் கொடுத்து, குழந்தையை தூங்க வைக்க சென்ற ஸ்ரீதேவி, திடீரென குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது கண்டு பதறினார். குழந்தை மூச்சுத் திணறி சோர்வடைந்ததால் பதறிய பெற்றோர் உடனடியாக 108 ஆம்புலன்ஸை அழைத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் குழந்தையை பூந்தமல்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், குழந்தை சிகிச்சை அறையில் இறந்துவிட்டது என தெரிவித்தனர்.
மாங்காடு போலீசாருக்கு இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டு, குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. குழந்தை இறப்பிற்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது போலீசார் தற்போது ஆராய்ந்து வருகின்றனர். #📢பிப்ரவரி 19 முக்கிய தகவல் 🫠
#😅Funny Caption வீடியோ மீம்ஸ்📱 #😂வடிவேலு மீம்ஸ் #🙄வித்தியாசமான வீடியோக்கள்😂 #🤭அரசியல் மீம்ஸ் #அரசியல் நையாண்டி 😜🤪
#💞Feel My Love💖 #🥰Girls Love feeling #💖காதல் கவிதைகள்✍️ #❣️போதை ஏற்றும் கவிதை #📝என் இதய உணர்வுகள்










![📢பிப்ரவரி 19 முக்கிய தகவல் 🫠 - AI உச்சி மாநாட்டில் அதிசய குழந்தை தொழில்நுட்பம் குறித்த தனது Al பேச்சால் உலகளவில் கவனம் ஈர்த்துள்ள வயது சிறுவன் ரன்வீர் சச்தேவா 8 இந்தியாவின் அதிசய குழந்தை என்று அழைக்கப்படுகிறார் இவர் Al குறித்து புத்தகங்களும் எழுதியுள்ளார் இன்று உச்சிமாநாட்டில் முக்கிய இவர், Al தொழில்நுட்ப தலைவர்கள் ೨_6ಹ மத்தியில் உரையாற்றுகிறார் அதில், இந்திய தத்துவங்களை [boJ6oT தொழில்நுட்பங்களுடன் இணை ILILర] தொடர்பாக பேச உள்ளதாக AI உச்சி மாநாட்டில் அதிசய குழந்தை தொழில்நுட்பம் குறித்த தனது Al பேச்சால் உலகளவில் கவனம் ஈர்த்துள்ள வயது சிறுவன் ரன்வீர் சச்தேவா 8 இந்தியாவின் அதிசய குழந்தை என்று அழைக்கப்படுகிறார் இவர் Al குறித்து புத்தகங்களும் எழுதியுள்ளார் இன்று உச்சிமாநாட்டில் முக்கிய இவர், Al தொழில்நுட்ப தலைவர்கள் ೨_6ಹ மத்தியில் உரையாற்றுகிறார் அதில், இந்திய தத்துவங்களை [boJ6oT தொழில்நுட்பங்களுடன் இணை ILILర] தொடர்பாக பேச உள்ளதாக - ShareChat 📢பிப்ரவரி 19 முக்கிய தகவல் 🫠 - AI உச்சி மாநாட்டில் அதிசய குழந்தை தொழில்நுட்பம் குறித்த தனது Al பேச்சால் உலகளவில் கவனம் ஈர்த்துள்ள வயது சிறுவன் ரன்வீர் சச்தேவா 8 இந்தியாவின் அதிசய குழந்தை என்று அழைக்கப்படுகிறார் இவர் Al குறித்து புத்தகங்களும் எழுதியுள்ளார் இன்று உச்சிமாநாட்டில் முக்கிய இவர், Al தொழில்நுட்ப தலைவர்கள் ೨_6ಹ மத்தியில் உரையாற்றுகிறார் அதில், இந்திய தத்துவங்களை [boJ6oT தொழில்நுட்பங்களுடன் இணை ILILర] தொடர்பாக பேச உள்ளதாக AI உச்சி மாநாட்டில் அதிசய குழந்தை தொழில்நுட்பம் குறித்த தனது Al பேச்சால் உலகளவில் கவனம் ஈர்த்துள்ள வயது சிறுவன் ரன்வீர் சச்தேவா 8 இந்தியாவின் அதிசய குழந்தை என்று அழைக்கப்படுகிறார் இவர் Al குறித்து புத்தகங்களும் எழுதியுள்ளார் இன்று உச்சிமாநாட்டில் முக்கிய இவர், Al தொழில்நுட்ப தலைவர்கள் ೨_6ಹ மத்தியில் உரையாற்றுகிறார் அதில், இந்திய தத்துவங்களை [boJ6oT தொழில்நுட்பங்களுடன் இணை ILILర] தொடர்பாக பேச உள்ளதாக - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_377224_6ba244b_1771510375947_sc.jpg?tenant=sc&referrer=user-profile-service%2FrequestType50&f=947_sc.jpg)

