#😯 இன்ஸ்டாகிராம் Trending 📢 #இன்ஸ்டாகிராம் அப்டேட் #🌷🌷தகவல் தொழில்நுட்பம் இன்று😐😐
#📺டிசம்பர் 2 முக்கிய தகவல் 📢 #🏃♂️தடை அதை உடை #⚡️Trending Quotes✍️ #👌அருமையான ஸ்டேட்டஸ் #💪 தன்னம்பிக்கை
சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் 32 வயதான பிரியங்கா.. இவரது கணவர் பெயர் செல்வந்தர்.. இந்த தம்பதிக்கு 2 குழந்தைகளும் உள்ளனர்..
ஆரம்பத்தில் தம்பதி இருவரும் மகிழ்ச்சியுடன் குடும்பம் நடத்தி வந்த நிலையில், திடீரென இவர்களுக்குள் கருத்து வேறுபாடு வெடித்தது.
தண்ணி அடித்த கள்ளக்காதலர்கள்
இதனால் அடிக்கடி தகராறுகள் வலுக்கவும் தம்பதி இருவரும் பிரிந்துவிட்டனர்.. 2 குழந்தைகளுடன் 2 வருடங்களாக தனியாகவே வாழ்ந்து வருகிறார் பிரியங்கா.. இந்த நேரத்தில்தான், நெற்குன்றத்தைச் சேர்ந்த 34 வயதான கோவிந்தராஜ் என்ற நபருடன் பிரியங்காவுக்கு நட்பு ஏற்பட்டது. இந்த நட்பு நாளடைவில் கள்ள உறவாக வளர்ந்தது..
ஒருகட்டத்தில் கள்ளக்காதலர்கள் இருவரும் ஒன்றாக வசித்து வந்தனர்.. எனினும் சமீப நாட்களாகவே கள்ளக்காதலர்களுக்குள் கருத்து வேறுபாடுகள் வெடித்தன.. இதனால் தகராறுகள், சண்டைகள் வந்துள்ளன.. இறுதியில் பிரியங்கா மீது கோவிந்தராஜுக்கு வெறுப்பும், ஆத்திரமும் அதிகமாகி, அவரை கொலை செய்துவிடலாம் என்ற முடிவையும் எடுத்துள்ளார்... அதற்கான நாளையும் குறித்தார் கோவிந்தராஜ்.
மது பாட்டிலை எடுத்து
சம்பவத்தன்று பிரியங்காவிடம் நைசாக பேசி, மணலி பகுதியில் அழைத்து சென்றிருக்கிறார் கோவிந்தராஜ்.. அங்கு இருவரும் சேர்ந்து மது அருந்தியிருக்கிறார்கள்.. அப்போது மறுபடியும் கள்ள ஜோடிக்குள் வாக்குவாதம் வெடித்துள்ளது.
ஏற்கனவே கடுப்பில் இருந்த கோவிந்தராஜ், பிரியங்காவின் பேச்சில் மேலும் ஆத்திரமடைந்து, மது பாட்டிலால் பிரியங்காவின் கழுத்தை அறுத்துள்ளார்.. இதனால் ரத்த வெள்ளத்திலேயே பிரியங்கா சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.
பிரியங்காவுடன் எதற்காக தகராறு
இதற்குபிறகு கோவிந்தராஜ் நேரடியாக வியாசர்பாடி போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று சரணடைந்து விட்டார்.. இதையடுத்து, மணலி போலீசார் இது தொடர்பான விசாரணையை நடத்தி வருகிறார்கள்.. கோவிந்தராஜை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட இருப்பதாக போலீஸ் தரப்பில் சொல்லி உள்ளனர்..
உண்மையிலேயே பிரியங்காவுக்கும் கோவிந்தராஜூக்கும் என்ன தகராறு, எதற்காக கொலை வரை சென்றது என்று தெரியவில்லை. கோவிந்தராஜ் வாக்குமூலம் தந்தால்தான் உண்மை வெளியே வரும்.
விழிப்புணர்வு அவசியம்
எனினும், சமூகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும், கள்ளக்காதல் பின்னணியில் நிகழும் வன்முறைகள், மேலும் கவலையை உருவாக்கியுள்ளது... கடந்த சில ஆண்டுகளில் மட்டும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இத்தகைய சம்பவங்கள் கணிசமாக அதிகரித்து இருப்பதாக போலீசார் கூறுகிறார்கள்.
பெரும்பாலான சந்தர்ப்பங்களில், நீண்டநாள் பிரச்சனைகள், பொறாமை, சந்தேகம் போன்றவை வன்முறைக்கு வழிவகுக்கும் முக்கிய காரணிகளாக உள்ளதாக மனநல மருத்துவர்கள் கூறுகிறார்கள்..
பிரச்சனைகள், பிரிவு, புதிய உறவுகள் ஆகியன உருவாக்கும் மன அழுத்தங்களைப் பற்றி பலருக்கும் சரியான ஆலோசனைகள், உதவி சேவைகள் கிடைக்காததே இவ்வாறான சம்பவங்களுக்கு காரணம் என்றும் மனநலம் தொடர்பான விழிப்புணர்வு குறைவு மற்றும் ஆவேசத்தை கட்டுப்படுத்த முடியாத மனநிலை சமூகத்தில் பெரும் ஆபத்துகளை உருவாக்குவதாகவும் எச்சரித்து வருவதை கவனத்தில் கொள்ள வேண்டி உள்ளது. #📺டிசம்பர் 2 முக்கிய தகவல் 📢
காட்டுக்கூடலூர் குளத்தங்கரை தெருவில் வசித்து வருகிறார் தமிழரசி.. இவரது கணவர் பெயர் கோபாலகிருஷ்ணன்.. இவர்களுக்கு ஹரிகிருஷ்ணன் (13) மற்றும் ஹரிசக்தி (10) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.
கோபாலகிருஷ்ணன் எங்கே
கோபாலகிருஷ்ணனுக்கு பாலகிருஷ்ணன், முருகானந்தம் என்ற தம்பிகள் உண்டு.. இவர்கள் அனைவருமே ஒரே வீட்டில்தான் வசித்து வந்தனர்..
இதனிடையே, கருத்து முரண்பாடுகள் அதிகரித்து விட்டதால், தமிழரசியை விட்டு கடந்த 10 வருடங்களுக்கு முன்பே பிரிந்து சென்று விட்டார் கோபாலகிருஷ்ணன்.. கடலூரிலிருந்து சென்னைக்கு சென்று, அங்கேயே வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருவதாக தெரிகிறது.
எனினும், தன்னுடைய 2 பிள்ளைகளுடன் தமிழரசி, கணவரின் தம்பிகள் பாலகிருஷ்ணன் மற்றும் முருகானந்தம் ஆகியோருடன் அதே வீட்டில்தான் வாழ்ந்து வந்தார்..
தமிழரசியும், 2 குழந்தைகளும்
இப்படிப்பட்ட சூழலில், கணவரின் தம்பிகள் இருவரும் தன்னை பாலியல்ரீதியாக துன்புறுத்தி வந்ததாக சில நாட்களுக்கு முன்பு சிதம்பரம் தாலுகா போலீசில் தமிழரசி புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் பெண்கள் வன்முறை தடுப்பு சட்டத்தின் கீழ் இருவரையும் போலீசார் விசாரணைக்கு உட்படுத்தினர்.
இதில் முருகானந்தம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தலைமறைவாக இருந்த பாலகிருஷ்ணன், முன் ஜாமீன் பெற்று ஒரு வாரத்திற்கு முன்புதான் வெளியே வந்தார்.. அதேசமயம், முருகானந்தமும் ஜாமீனில் வெளியே வந்தார்..
தங்களை இப்படி போலீசில் சிக்க வைத்துவிட்டாரே என்று இருவரும் தமிழரசி மீது கடுமையான ஆத்திரத்தில் இருந்தனர்..
அண்ணி - கொழுந்தன்
இந்நிலையில், நேற்று சாயங்காலம் பாலகிருஷ்ணன் மதுபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார்.. அப்போது தமிழரசியுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.. இதனால் வாக்குவாதம் பலமாக வெடித்தது..
ஒருகட்டத்தில் உச்சக்கட்ட ஆத்திரமடைந்த பாலகிருஷ்ணன் அரிவாளை எடுத்து தமிழரசியின் கழுத்தை அறுத்துவிட்டார்.. பிறகு தலையையும் துண்டித்து கொன்றுவிட்டு, அங்கிருந்து தப்பியோடி விட்டார்.. இப்படியொரு கொலை நடக்கும்போது முருகானந்தம் வீட்டிலேயே இருந்ததாக கூறப்படுகிறது.
கடலூர் சம்பவம்
தமிழரசியின் அலறலை கேட்டு, பக்கத்து வீட்டினர் ஓடிவந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.. பிறகு உடனடியாக சிதம்பரம் தாலுகா போலீஸூக்கு தகவல் தரவும் அவர்கள் விரைந்து வந்து, தமிழரசியின் சடலத்தை மீட்டு போஸ்ட் மார்ட்டம் செய்ய அனுப்பி வைத்தனர்.. பிறகு இந்த கொலை தொடர்பாக விசாரணை மேற்கொண்டு, முருகானந்தத்தை கைது செய்தனர்.
மேலும், தமிழரசியை கொலை செய்து தப்பியோடிய பாலகிருஷ்ணனை கைது செய்ய தனி படை போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்..
இந்த கொடூர கொலையானது, சிதம்பரம் மற்றும் காட்டுக்கூடலூர் பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. மது போதை மண்டைக்கேறினால், விலைமதிக்க முடியாத மனித உயிர்களும் காவு வாங்கப்பட்டுவிடும் என்பதற்கு இந்த கடலூர் சம்பவம் மேலும் ஒரு உதாரணமாகும். #📺டிசம்பர் 2 முக்கிய தகவல் 📢
#📺டிசம்பர் 2 முக்கிய தகவல் 📢 #📺அரசியல் 360🔴 #🙋♂️தமிழக வெற்றி கழகம்
#🚹உளவியல் சிந்தனை #💪Motivational Quotes #🤔புதிய சிந்தனைகள் #👉வாழ்க்கை பாடங்கள் #⏱ஒரு நிமிட கதை📜
#என் குழந்தை என் உலகம் #👌அருமையான ஸ்டேட்டஸ் #👌இன்றைக்கான சிறந்த கோட்ஸ்✍️ #👉வாழ்க்கை பாடங்கள் #👪 அன்பான குடும்பம்













