இன்று புதன்கிழமை
தொட்டதெல்லாம் பொன்னாகும்!
பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பார்கள். அப்படி விசேஷமாக பார்க்கப்படும் புதன் கிழமையில் புதன் பகவானை வழிபடுவதன் மூலம் நாம் நினைத்த காரியம் நிறைவேறும் என்பது நம்பிக்கை.
நவகிரகங்களில் புதன் பகவானுக்குரிய கிழமையாக புதன்கிழமை சொல்லப்பட்டாலும் இந்த நாளில் நவகிரகங்கள் அனைத்தையும் வழிபாடு செய்யலாம். இந்த நாளில் இஷ்ட தெய்வங்களையும் வழிபடுவது சிறப்பு.
திருமணம், காதுகுத்து போன்ற சுப நிகழ்ச்சிகள் எப்படி நல்ல நாள், நல்ல நேரம் பார்த்து செய்கின்றோமோ, அதே போல் சில செயல்கள் திட்டமிட்டு அதற்குரிய நாட்களில் செய்வதால் மிக சிறப்பான பலன்களைப் பெற முடியும்.
புதன் கிரகத்திற்கு அதிதேவதை பெருமாள் ஆவார். இந்த கிழமையில் பெருமாள் வழிபாடு செய்வது மிகவும் முக்கியம்.
அறிவின் கடவுளாகவும், கல்வியின் நாயகனாகவும், வியாபாரத்தின் அதிபதியாகவும் விளங்கும் புதன் பகவானை இந்த நாளில் வழிபடுவது பல்வேறு நன்மைகளைத் தரும்.
புதன் பகவானை வழிபடும் முறை:
அன்றைய தினம் அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு, வீட்டின் பூஜையறையில், பீடத்திற்கு முன்பாக அரிசிமாவில் தாமரை பூ கோலம் போட வேண்டும்.
இக்கோலத்தின் நடுவில் கலசத்தில் நீரை நிரப்பி வைக்க வேண்டும். பீடத்தில் புதன் பகவானின் படத்தை வைத்து அதற்கு வாசமுள்ள பூக்களை சாற்றி, புது பச்சை நிறத் துணியை வைத்து, பச்சை காய்கறிகள் மற்றும் இனிப்புகளை நைவேத்தியமாக வைக்கலாம்.
விரதம் மேற்கொள்பவர்களும் பச்சை நிற ஆடை அணிந்து நெய்தீபம் ஏற்றி, புதன் பகவானுக்கு உரிய மந்திரங்களை பாராயணம் செய்து புதன் பகவானுக்கு பூஜைகளை செய்து முடிக்க வேண்டும்.
புதன்கிழமை விரதம் மேற்கொள்பவர்கள் காலை முதல் மாலை வரை ஏதும் உண்ணாமல் விரதம் மேற்கொள்வது சிறப்பு. காலை, மாலை ஆகிய இரண்டு வேளையும் புதன் பகவானுக்கு பூஜைகள் செய்ய வேண்டும்.
அன்று கோயிலுக்கு சென்று புதன் கிரகத்திற்கு பச்சை வஸ்திரம் செலுத்தி, ஐந்து விளக்கு ஏற்றி பூஜை செய்தும் வரலாம்.
புதன்கிழமையன்று பச்சைப்பயிறு தானம் கொடுக்கலாம். படிக்கும் குழந்தைகளுக்கு பேனா, புத்தகம் போன்ற பொருட்களையும் வாங்கி கொடுக்கலாம். இவற்றை தானமாக கொடுப்பதன் மூலம் புதன் பகவானின் பார்வை நம்மீது நேரடியாக விழும்.
தொழில், வியாபாரத்திற்கு உரிய காரகனாக புதன் இருப்பதால் இவரை வழிபடுபவர்களுக்கு தொழில், வியாபாரம் வெற்றியடைந்து லாபங்கள் பெருகி புகழ் உண்டாகும்.
புதன்கிழமையின் மகத்துவம்:
ஜாதகத்தில் புதன் தோஷம் உள்ளவர்கள் புதன்கிழமைகளில் விரதம் இருந்து புதன் பகவானை வழிபடுவதன் மூலம் தோஷத்தின் பாதிப்புகள் குறையும்.
ஞாபக சக்தி குறைபாடு உள்ளவர்கள் புதன் பகவானை வழிபடுவதன் மூலம் நல்ல பலன் பெறலாம்.
புதன் பகவான் அமைதியான மற்றும் சமநிலையான மனநிலையை அருள்பவர். அவரை வழிபடுவதன் மூலம் மனக்குழப்பங்கள் நீங்கி அமைதி கிடைக்கும்.
வியாபாரிகள் தங்கள் தொழிலில் நல்ல லாபம் பெறவும், தடைகள் நீங்கவும் புதன் பகவானை வழிபடுவது சிறந்தது.
புதன் பகவான் அறிவாற்றலுக்கு அதிபதி என்பதால் இவரை விரதமிருந்து வழிபடும் மாணவர்கள் கல்வி கலைகளில் சிறந்து பல நன்மைகளை பெறுவார்கள்.
பலன்கள்:
கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கலாம்.
புதன் கிரகத்தால் ஏற்படும் தோஷங்கள் விலகும்.
வியாபாரத்தில் இதுவரை இருந்த நஷ்ட நிலை மாறி, லாபம் பெருகும்.
சுபகாரியம் கைகூடும்.
எடுத்த காரியத்தில் நீங்கள் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும்.
திருமணத்தடைகள் நீங்கும்.
சந்தான பாக்கியம் கிடைக்கும்.
குடும்பத்தில் ஒற்றுமையும், அமைதியும் நிலவும்.
புதன் காயத்ரி மந்திரம்:
ஓம் கஜத்வஜாய வித்மஹே
சுகஹஸ்தாய தீமஹி
தந்நோ புத ப்ரசோதயாத்
புதன் பகவான் மந்திரம்
புதன் பகவான்:
இதமுற வாழ இன்னல்கள் நீக்கு புத பகவானே பொன்னடி போற்றி பதந் தந்தாள்வாய் பண்ணொலியானே உதவியே அருளும் உத்தமா போற்றி
நன்றி
#🌻வாழ்த்துக்கள்💐
*...க்ரஹணம் பாதிக்கும் நட்சத்திரங்கள் என்னென்ன ?...*
*...சொல்ல வேண்டிய ஸ்லோகம் என்ன...?*
*...பரிகாரம் என்ன செய்ய வேண்டும்...?* #🌻வாழ்த்துக்கள்💐
விருத்தாச்சலம் விருத்தகிரீஸ் ஆலயம் மாசி திருவிழா மாசி கொடியேற்றம் ஒரு அருமையான ஆன்மீக பதிவு #🌻வாழ்த்துக்கள்💐
விருத்தகிரீஸ்வரர் ஆலயம் மாசி திருவிழா விருத்தாச்சலம் கடலூர் மாவட்டம் #🙏ஆன்மீகம் #🌻வாழ்த்துக்கள்💐




