*NTA வின் அலட்சியத்தால், நீட் தேர்வில் நடக்கும் தொடர் குளறுபடிகளை வன்மையாக கண்டிக்கின்றோம்*
*நீட் தேர்வை முற்றிலுமாக ரத்து செய்திட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தமிழ்நாடு மாநிலக்குழு வலியுறுத்தல்.*
இந்தியாவில் மருத்துவக் கல்வி சேர்வதற்கான நுழைவுத் தேர்வை NTA தேசியத் தேர்வு முகாமையால் நீட் (NEET) தேர்வு நடத்தப்படுகிறது, இதில் 2026 ம் ஆண்டிற்கான நீட் தேர்வு மே 3 தேதி நாடு முழுவதும் நடைபெற்றது, இதில் 23 லட்சம் மாணவர்கள் வரை தேர்வு எழுதினார்கள், சமீபத்தில் ராஜஸ்தான் மாநிலத்தில் தேர்வு நடைபெறுவதற்கு முன்பாகவே வினாத்தாள் கசிந்ததால் நாடு முழுவதும் நடந்து முடிந்த நீட் தேர்வை ரத்து செய்து ஒன்றிய அரசு அறிவித்துள்ளது இந்த மோசடி கடும் கண்டனத்திற்குரியதாகும்.
நீட் தேர்வு ஆண்டுதோறும் பல மாணவர்களின் மன அழுத்தத்தையும் , சமூக அநீதியையும் அதிகரித்து வருகிறது. “தரமான கல்வி” என்ற பெயரில் ஒன்றிய அரசால் கொண்டு வரப்பட்ட இந்த தேர்வு, இன்று தனியார் பயிற்சி மையங்களின் லாபத்திற்கும் கல்வியின் வணிகமயத்திற்கும் கருவியாக மாறியுள்ளது. நீட் தேர்வு தொடர்ந்து வினாத்தாள் கசிவுகள், தேர்வு மைய குளறுபடிகள், மதிப்பெண் முறைகேடுகள் தொடர்ந்து இந்தியாவில் நடந்து வருகிறது, இதனால் நீட் தேர்வு எழுதக்கூடிய மாணவர்களுக்கு தேர்வின் மீதான நம்பகத்தன்மையை ஏற்படுத்துகிறது.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டா மாவட்டங்களில் நீட் பயிற்சி மையங்களில் தொடர்ந்து மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டு வரும் நிலையில், அதே பகுதியில் இந்த ஆண்டும் ராஜஸ்தான் உள்ளிட்ட பகுதிகளில் வினாத்தாள் கசிந்ததால் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக நாடு முழுவதும் தேர்வை ரத்து செய்திருப்பது என்பது மாதக்கணக்கில் உழைத்து தயாரான மாணவர்களின் எதிர்காலத்துடனும் மனநிலையுடனும் விளையாடும் செயல் ஆகும். கடந்த பல ஆண்டுகளாக நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு, போலி தேர்வர்கள், ஆள்மாறாட்டம், தேர்வு மைய கண்காணிப்பு குறைபாடுகள் போன்ற பல சர்ச்சைகள் தொடர்ந்து எழுந்துள்ளன.
NTA நடத்தும் நீட் தேர்வு தனியார் பயிற்சி மையங்களுக்கு சாதகமாகத்தான் செயல்படுகிறது கோடிக்கணக்கில் கட்டணம் செலுத்தும் நகர்ப்புற மாணவர்களுக்கு சாதகமான சூழல் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், அரசு பள்ளி, கிராமப்புற மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இதனால் கல்வியில் சமத்துவமும் சமூகநீதியும் பாதிக்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் நீண்டகாலமாக நடைமுறையில் இருந்த இட ஒதுக்கீடு சமூகநீதி அடிப்படையிலான மருத்துவ சேர்க்கை முறை பா அரசு பள்ளி மாணவர்களின் எதிர்காலத்தை சீர்குலைத்து ஒரே மாதிரியான தேர்வை திணிப்பது கூட்டாட்சி கொள்கைக்கும் எதிரானது.
நீட் தேர்வில் நடந்த குளறுபடிகளுக்கு தேசிய தேர்வு முகாமை அலட்சியம் தான் காரணம், இதற்கு ஒன்றிய அரசு தான் பொறுப்பேற்க வேண்டும், ராஜஸ்தானில் தனியார் பயிற்சி மையத்தில் லாப வெறிக்காக நீட் வினாத்தாள்களை விற்பது கடும் கண்டனத்திற்குரியதாகும், இதில் சம்பந்தப்பட்ட அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய நாட்டின் மாணவர்கள் நலன்கருதி நாடு முழுவதும் ஒரே மாதிரியாக நடக்கும் நீட் தேர்வை முற்றிலுமாக ரத்து செய்து மாணவர்களின் கல்வி உரிமையையும் மாநில உரிமையும் சமூக நீதியும் பாதுகாக்க வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தமிழ்நாடு மாநில குழு ஒன்றிய அரசை வலியுறுத்துகிறது.
செல்வராஜ்
மாநிலத் தலைவர்
எஸ்.கார்த்திக்
மாநிலச் செயலாளர்
#DYFI #dyfitamilnadu #📺அரசியல் 360🔴
இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் வகையில் ரயில்வே துறையில் 30 ஆயிரம் பணியிடங்கள் ஒழிப்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தமிழ்நாடு மாநிலக்குழு கடும் கண்டனம்.
மே 2 தமிழ்நாடு முழுவதும் வாலிபர் சங்கம் போராட்டம்
இந்திய ரயில்வே வாரியத்தின் இயக்குனர் அமித் சிங் மெஹ்ரா, அனைத்து மண்டல ரயில்வே பொது மேலாளர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில் ரயில்வேயின் மொத்த அங்கீகரிக்கப்பட்ட பணியிடங்களின் எண்ணிக்கையில் 2 % இந்த சீரமைப்பு நடவடிக்கைக்கு உட்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்திய ரயில்வேயில் சுமார் 14.80 லட்சம் பணியாளர்கள் உள்ள நிலையில், இந்த 2 சதவீத இலக்கின் கீழ் 29,608 பணியிடங்கள் குறைக்க உள்ளனர். இதன் வாயிலாக தென்னக ரயில்வேயில் மட்டுமே 2,000 பணியிடங்கள் வரை பறிபோகும் என தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன. இத்தகைய பணியிட ஒழிப்பு ஒவ்வோராண்டும் தொடர்ந்து ரயில்வே நிர்வாகத்தால் மேற்கொள்ளப்படுகிறது. 2024-25 இல் 28,815 பணியிடங்கள் ஒழிக்கப்பட்டன. இளைஞர் மத்தியில் பெரும் அதிர்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
உலகமய பொருளாதாரப் பாதையின் "வேலை பறிப்பு வளர்ச்சி" (Jobless Growth) என்பதற்கு ஒரு அரசுத் துறையே பெரும் சாட்சியமாக விளங்குகிறது. இந்த காலத்தில் ரயில்வே வளர்ச்சி அபரிமிதமானது. சரக்கு போக்குவரத்து 74 சதவிகிதம், என்ஜின்கள் 51 சதவிகிதம், தண்டவாளம் 25 சதவிகிதம் அதிகரிப்பை கண்டுள்ளன. ஆனால், 1991 க்கு பின்னர் 25 ஆண்டுகளில் இவ்வாறு ஒழிக்கப்பட்ட பணியிடங்கள் 1.7 லட்சம் ஆகும். ஆனால், பணியிட ஒழிப்பு பிரச்சனை இன்னும் ஆழமானது. அனுமதிக்கப்பட்ட பணி இடங்கள் குறைக்கப்பட்டாலும், குறைக்கப்பட்ட இடங்களாவது நிரப்பப்படுகிறதா என்றால் அதுவும் இல்லை. அப்படி நிரப்பப்படாத இடங்களான 2.5 லட்சத்தையும் சேர்த்தால் மொத்தம் 4.2 லட்சம் இடங்கள் 25 ஆண்டுகளில் பறி போயிருக்கின்றன. ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்பு என்றெல்லாம் வாக்குறுதி கொடுத்த மோடி அரசு, ஒரு துறையில் மட்டுமே ஒவ்வோராண்டும் பல்லாயிரக் கணக்கான வேலை வாய்ப்புகளை பறித்து வருகிறது. இதற்கு காரணம் தனியார்மயம், ஒப்பந்த பணி என்கிற அரசின் கொள்கையே ஆகும்.
மோடி அரசு குறிப்பாக அரசுத் துறையின் வேலை வாய்ப்புகள் கடுமையாக குறைத்து வேலையின்மை விகிதத்தை அதிகப்படுத்த மோடி அரசு திட்டமிடுகிறது, இந்தியாவில் இளைஞர்கள் மீது எந்த ஒரு அக்கறை கொள்ளாமலும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் கவனம் செலுத்தாமல் நிலுவையில் உள்ள பணியிடங்களை குறைத்து இளைஞர்களின் எதிர்காலத்தை சீர்குலைக்கிறது ரயில்வே துறையில் பணியாற்றலாம் என லட்சக்கண இளைஞர்கள் படித்து வரும் இந்நிலையில் அவர்களுக்கு அநீதியை இழைத்து இளைஞர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது.
மோடி அரசின் தவறான நிர்வாகத் திறனை கண்டித்து ரயில்வே துறையில் ஒழிக்கப்பட்ட பணியிடங்களை மீண்டும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை உறுதிப்படுத்திட வலியுறுத்தி தமிழ்நாட்டில் சென்னை , விழுப்புரம் , சேலம் , கோவை , திருச்சி , மதுரை , திருவாரூர் , கன்னியாகுமரி ஆகிய மையங்களில் மோடி அரசை கண்டித்து மே 2ம் தேதி போராட்டம் நடத்திட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தமிழ்நாடு மாநில குழு அறைகூவல் விடுக்கிறது....
செல்வராஜ்
மாநிலத் தலைவர்
எஸ்.கார்த்திக்
மாநிலச் செயலாளர்
#DYFI #dyfitamilnadu #railways #southrailway #📺அரசியல் 360🔴
எம் எல் ஏ சீட்டு கேட்டு கட்சி வாசலில் தவம் கிடக்கவில்லை இவர்கள்! கட்சி கமிட்டி கூடி முடிவு எடுத்து தேர்வு செய்தது ஒரு பைசா கூட தரவில்லை! மாநிலக்குழு உறுப்பினர் தவிர மற்ற வேட்பாளர் களுக்கு தாங்கள் தேர்வு செய்யப்பட்டதே அறிவிப்பு வரும் வரை தெரியாது! வேட்பாளர் டெபாசிட் தொகை கூட இவர்கள் கட்ட வேண்டிய தில்லை, கட்சி செலுத்தும்! தேர்தலுக்கு தங்கள் பாக்கெட்டில் இருந்து ஒரு பைசா கூட செலவு செய்ய வேண்டியதில்லை! அதனால் தான் எம் எல் ஏ வாக பணியாற்றும்போது ஒரு பைசா லஞ்சம் வாங்கியதில்லை, ஊழல் செய்ததில்லை! எம் எல் ஏ சம்பளத்தை லட்சமாக இருந்தாலும் கட்சிக்கு வழங்கிவிட்டு, கட்சி கொடுக்கும் 12000/- ரூ அலவன்ஸை மட்டும் பெற்றுக்கொண்டு மக்கள் பணியாற்றும் தோழர்கள் இவர்கள்! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாணிக்க ங்கள்! இதோ மக்களுக்காக பணியாற்ற மக்கள் முன்பு அனுமதி கேட்டு நிற்கிறார்கள்! பயன்படுத்திக் கொள்ளுங்கள் மக்களே! தவறவிட்டுவிடாதீர்கள்! சுத்தியல் அரிவாள் நட்சத்திரம்! #📺அரசியல் 360🔴








