இன்று ஓம் ஶ்ரீ தெய்வானை ஓம் ஶ்ரீ வள்ளி ஸமேத ஓம் ஶ்ரீ வெற்றிவேல் முருகனின் கார்த்திகை விரதம். ஓம் ஶ்ரீ வெற்றிவேல் முருகனைக் காண்பது கண்கொள்ளாக் காட்சியாகும். ஓம் ஶ்ரீ வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா. #👌இந்த நாள் நல்ல நாள்🤝
ஓம் ஶ்ரீ வாராஹித் தாயின் தரிசனம் காண்பது நாம் பெற்ற பேறு. ஓம் ஶ்ரீ வாராஹித் தாயே போற்றி. #🙏கோவில்
இந்தக் காணொளிக் காட்சியில் ஓம் ஶ்ரீ திருப்பதி ஏழுமலையானின் கற்பகிருக தீபாராதனை தலை முதல் பாதம் வரை தரிசனம். இதைக் காணும் அனைவரது உள்ளங்களும், இல்லங்களும் இன்புற்றிருக்க ஓம் ஶ்ரீ ஏழுமலையானை வேண்டுகிறேன். ஓம் ஶ்ரீ நமோ வேங்கடேசாய. #👌இந்த நாள் நல்ல நாள்🤝
ஓம் ஶ்ரீ வேலவனை அனுதினமும் துதிக்க நமக்கு அனைத்துக் காரியங்களிலும் கிடைப்பது வெற்றிமேல் வெற்றியே வந்து சேரும். வேலுண்டு வினையில்லை. மயிலுண்டு பயமில்லை. ஓம் ஶ்ரீ வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா. #👌இந்த நாள் நல்ல நாள்🤝
இந்தக் காணொளிக் காட்சியில் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டம், திருநறையூர் என்கிற நாச்சியார்க் கோவில் என்ற விஷ்ணு ஸ்தலத்தில் மார்கழி, பங்குனி மாதங்களில் பிரம்மோற்சவத்தில் நடைபெறும் கருடசேவை உற்சவமாகும். இந்தக் கருட வாகனம் கல்லினால் வடிவமைப்புக் கொண்டதாகும். இதன் சிறப்பம்சம் என்னவென்றால் இந்தக் கல் கருட வாகனம் கோயிலிலிருந்து புறப்படும் தோளில் சுமக்கும் நபர்கள் 4, 8, 16, 32, 64, 128 என உயர்ந்து பின் கோயிலைச் சென்றடையும் போது 128, 64, 32, 16, 8, 4 எனக் குறைந்து இன்றளவும் தெய்வ சங்கற்பமாகவே நடந்து வருவது என்பது குறிப்பிடத்தக்கது. மற்றொரு சிறப்பம்சம் இந்தக் கருடசேவையின்போது கல் கருடனின் உடல் முழுவதும் வியர்வை ஏற்படுத்தும் சிறப்புடையது. ஓம் ஶ்ரீ நமோ நாராயணா. #👌இந்த நாள் நல்ல நாள்🤝
இந்தக் காணொளிக் காட்சியில் செங்கற்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் ஸ்தலத்தில் உள்ள ஓம் ஶ்ரீ வேதபுரீஸ்வர் ஆலய சிவகங்கைத் தீர்த்தத்தில் பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளிவரும் வலம்புரிச் சங்கின் தெய்விகக் காட்சி. ஓம் ஶ்ரீ நமசிவாய. #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏
இந்தப் படத்தில் காண்பது ஓம் ஶ்ரீ தேவசேனா, ஓம் ஶ்ரீ வள்ளி ஸமேத ஓம் ஶ்ரீ ஆறுமுக வேலன் (ஓம் ஶ்ரீ பாண்டிய நாயகர்) திருக்கோயில், சிதம்பரம், கடலூர் மாவட்டம். இத்திருக்கோயில் சிதம்பரம் ஓம் ஶ்ரீ நடராஜர் கோயில் வளாகத்தில் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்டக் கோயில் என்பதால் இம்முருகன் ஓம் ஶ்ரீ பாண்டிய நாயகம் என்றழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. ஓம் ஶ்ரீ சுப்பிரமணியாய நமஹ. #👌இந்த நாள் நல்ல நாள்🤝
இந்தப் படத்தில் காண்பது தூதுவளை என்ற மூலிகைக் குணம் கொண்ட முள் கொடியாகும். இந்தியாவில் இந்த மூலிகைக் கொடி வெப்பம் நிறைந்த பகுதிகளில் அதிகமாகத் தானே உற்பத்தியாகிறது. இதன் இலைகளை முள் நீக்கி நெய்யில் வதக்கியும். காய்களை கூட்டு வைத்தும் வாரத்திற்கு ஒருமுறை ஒரு மண்டலம் சாப்பிட்டு வர நாள்பட்ட சளி, இருமல், கபம், ஆஸ்த்துமா போன்ற பிரச்சனைகள் அடியோடு விரட்டியடிக்கப்படுகிறதென்பது திண்ணம். #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏
தங்கக் கவசத்தோடு, பொன்னகைகளையும் அணிந்து கொண்டு புன்னகைச் சிந்தும் அழகோடு திகழும் ஓம் ஶ்ரீ மதுரை மீனாட்சி அன்னையின் ஊஞ்சல் உற்சவ கண்ணிறைந்த காட்சி. #🙏கோவில்





