🎯乃口口尺丹S📚 🗡⃟𝄟.⃝🐓🌽🥀❥⃟✬ᵛ͢ᵎᵖ🗡️
ShareChat
click to see wallet page
@3454dsm
3454dsm
🎯乃口口尺丹S📚 🗡⃟𝄟.⃝🐓🌽🥀❥⃟✬ᵛ͢ᵎᵖ🗡️
@3454dsm
புத்திசாலித்தனத்தை விட முட்டாள்தனமே சிறந்தது
#கதை சொள்ளரோம் #உற்சாக பானம்# #👪 cute family members 👪 #உற்சாக பானம் #பொழுது போக்கு
கதை சொள்ளரோம் - ShareChat
00:14
#பொழுது போக்கு #உற்சாக பானம் #கதை சொள்ளரோம் #👪 cute family members 👪 #உற்சாக பானம்#
பொழுது போக்கு - ShareChat
00:12
*சிந்தனை துளிகள்* 🤔 கருப்பாக இருந்தாலும் உடம்பில் ஓடும் இரத்தம் சிவப்புதான்... சிவப்பாக இருந்தாலும் நடக்கும் போது தோன்றும் நிழல் கருப்புதான்... கருப்பாக இருப்பதால் கஃபாவின் கண்ணியம் குறையப்போவதும் இல்லை... வெள்ளையாக இருப்பதால் கபன் துணி யாரையும் மகிழ்ச்சிப் படுத்துவதும் இல்லை... வண்ணங்களில் இல்லை வாழ்க்கை! மாறாக, மனித எண்ணங்களில் தான் உள்ளது!! 🍁🪻🍁🪻🍁🪻🍁🪻 #கதை சொள்ளரோம் #உற்சாக பானம்# #👪 cute family members 👪 #உற்சாக பானம் #பொழுது போக்கு
கதை சொள்ளரோம் - ShareChat
இன்பம், வீடு என்றால் என்ன? அறம் என்பது இரண்டு வகைப்படும், ஒன்று இல்லறம் மற்றும் துறவறம். இல்லறம் என்பது பொது நலத்தைச் சார்ந்தது. தனக்காகவும், பிறருக்காகவும் பொருள் ஈட்டித் தர்மம் செய்து வாழ்வதாகும், இது சிறந்த அறமாகும். துறவறம் என்பது சுயநலம் கருதி வாழ்வது. தான் மட்டும் தனிமையில் இருந்து பிறர் பொருளை அனுபவித்து இறைவனை அடையலாம் என்று நினைப்பதாகும். இது சரியான துறவறம் அல்ல!. பொருள் :− நேர்வழியில் பொருள் சம்பாதித்து அனைவருக்கும் கொடுத்து தானும் அனுபவித்து மற்றவர்களையும் மகிழ்ச்சி அடைய செய்விப்பதாகும். இது சிறந்த வழியில் பொருள் ஈட்டி வாழ்வதாகும், இன்பம் :− எல்லோரும் இன்பமுடன் வாழும் வழியைக் காட்டி அந்த இன்பத்தில் தானும் வாழும் வாழ்க்கையே சிறந்த இன்பமாகும். வீடு :− நாம் வாழும் இந்த உலகமும், உடம்பிற்குள் நாம் வாழும் வீடும் சொந்தமானது அல்ல, வாடகைக்கு குடி இருக்கிறோம் என்பதை அறிந்து, நாம் எங்கு இருந்து வந்தோம், நம்முடைய சொந்தமான வீடு எங்கே உள்ளது என்பதை அறிந்து சொந்தமான வீடு என்னும் ஆன்ம தேகம் (அதாவது ஒளி தேகம், அருள் தேகம்) பெற்று நமது அருட்பெருஞ்ஜோதி ஈசனின் இல்லத்திற்கு சென்று வாழ்வதே சொந்த வீடு பேராகும். மேலும் அறம், பொருள், இன்பம், வீடு இவை நான்கையும், நான்கு காலங்களில் நன்கு அனுபவித்து பின்பு பற்று அற்று இருப்பதே கடவுளை அடைய ஏதுவாக இருக்கும் என்று வள்ளல்பெருமான் மிகத் தெளிவாக பதிவு செய்து உள்ளார். மேலே கண்ட நான்கு வழிகளிலும் தடம் மாறாமல் வாழ்ந்து மக்களுக்கு வழி காட்டுவதே மனிதப் பிறப்பின் லட்சியமாகும், லட்சணமுமாகும். வாழ்வோம் வழி காட்டுவோம். 😊😊😊 #பொழுது போக்கு #உற்சாக பானம்# #👪 cute family members 👪 #கதை சொள்ளரோம் #உற்சாக பானம்
பொழுது போக்கு - ShareChat
சிந்தனைக்கு சில நிமிடங்கள் : கேள்விகளே சாவிகள்! வாழ்க்கையில் வெற்றி பெற நினைப்பவர்களுக்கு என் நல்வாழ்த்துகள். உங்களுக்கு நன்மை உண்டாகட்டும். உங்களால் வீடும் நாடும் விரிந்த உலகமும் நன்மை பெறட்டும். வாழ்க்கை என்பது ஒரு சூதாட்டம் என்றே பலர் கருதுகிறார்கள். இதன் வெற்றி, தோல்விகள் அதிருஷ்டத்தின் மூலமாகவே நிர்ணயிக்கப்படுகின்றன என்றும் நிறைய பேர் நினைக்கிறார்கள். வாழ்க்கையின் வெற்றி, தோல்விகள் தேர்தல் முடிவுகள் போல் குழப்பமானவை அல்ல. தேர்வின் முடிவு போல் தீர்க்கமானவை. என்னிடத்தில் உதவிகள் கேட்டுச் சில இளைஞர்கள் வருவதுண்டு. அதில் அதிகமான பேர் வேலை வாங்கித் தரும்படித் தான் கேட்பார்கள். ""என்ன வேலை?'' என்றால், ""ஏதாவது வேலை'' என்பார்கள். வருத்தப்படாதீர்கள். இவர்கள் வெற்றி பெறுவது கடினம். என்ன வேலை என்கிற தெளிவு இல்லாமல் ஏதாவது ஒரு வேலை என்றால் நான் அவருக்கு எந்த வேலைக்கு முயற்சி செய்வது? என்னுடைய வேலையைத் தான் அவருக்குத் தர முடியும்! இது மிக முக்கியமான விஷயம். எதை அடைய வேண்டும் என்கிற தெளிவு உங்களுக்கு இருந்தால் தான் அதை நீங்கள் அடைய முடியும். அடைய வேண்டியது எது என்கிற முடிவே இல்லை என்றால் எதை அடைய முடியும்? நமக்கு எது வேண்டும் என்கிற தெளிவு இருந்தால் தான் அது கிடைக்கும். கிடைத்தாலும் ருசிக்கும். இல்லையென்றால் கிடைக்காது. கிடைத்தாலும் ருசிக்காது. காரணம், கிடைத்ததே தெரியாது. ஹோட்டலில் கூட பல பேர் என்ன சாப்பிடுவது என்ற தெளிவேயின்றி மெனுகார்டை, பட்சணப் பட்டியலை வெறித்து வெறித்துப் பார்ப்பார்கள். எதையும் முடிவு செய்ய மாட்டார்கள். இந்தக் குழப்பவாதிகள் முறையாக வெற்றிக் கனியைப் பறிப்பது கடினம். எனவே, வாழ்க்கையில் உங்களுக்கு என்ன வேண்டும் என்கிற தெளிவு கண்டிப்பாக இருக்க வேண்டும். இப்போது நாம் இருக்கும் நிலை என்ன? இனி அடைய வேண்டிய நிலை என்ன? அதற்கு நாம் செய்ய வேண்டிய முயற்சிகள் எவை? எவை என்கிற விழிப்பு நம்முள் தோன்றி விட்டால் நமக்கு வெற்றி நிச்சயம். எங்கே இருக்கிறோம்? எங்கே போக வேண்டும்? எப்படிப் போகப் போகிறோம் என்கிற தெளிவு பிறந்து விட்டால் வெற்றி நிச்சயம். அமெரிக்க ஜனாதிபதியாகப் புகழுடன் விளங்கியவர் ஜான் எஃப். கென்னடி. அவர் வெள்ளை மாளிகையில் தம்மைக் காண வந்திருக்கும் பார்வையாளர்களுடன் நாள்தோறும் சில நிமிடங்கள் செலவிடுவார். தம்மைப் பார்க்க வந்திருந்த இளைஞர்கள், பள்ளி மாணவர்களுடன் சிறிது நேரம் பேசுவார் பார்வையாளர்களில் பளிச்சென்ற புன்னகையுடன் இருந்த மாணவன் கன்னத்தைத் தட்டி, ""உன் எதிர்கால லட்சியம் என்ன?'' என்றார் கென்னடி.பளீரென்று பதில் சொன்னான் அந்த மாணவன். ""இன்று நீங்கள் இருக்கும் இடத்தில் நாளை நான் இருக்க வேண்டும். இதுதான் என் லட்சியம்'' என்றான். விழிகளை உயர்த்தி விட்டு, ""குட்'' என்று வாழ்த்தி விட்டு கென்னடி நகர்ந்தார். அமெரிக்க ஜனாதிபதியாக ஆவது தான் லட்சியம் என்ற அந்தச் சிறுவன் பிற்காலத்தில் அப்படியே ஆனான். அவன் வேறு யாருமல்ல புகழ் பெற்ற பில் கிளிண்டன். அவர் எண்ணம் வெறும் ஆசையோ, கற்பனையோ அல்ல. தீர்க்கமான தீர்மானம். அதனால் அது நடந்து விட்டது. எல்லோருக்கும் இப்படி நடக்குமா? இப்படி நடக்கிறதா என்று என்னை ஏளனமாகப் பார்க்கும் மூடர்களுக்கு ஒன்று சொல்கிறேன். நம்பிக்கைகள் நடக்காமல் போகும் பட்டியலில் நம் பெயர் ஏன் இருக்க வேண்டும்? பழித்தவர் பட்டியலில் நம் பெயர் இருக்க வேண்டும் என்று நினைக்கக் கூடாதா? மனம் இருந்தால் மார்க்கம் உண்டு. இப்போது நாம் இருக்கும் நிலை என்ன? நம் குடும்பத்தின் நிலை என்ன? நாம் வளர, முன்னேற என்ன செய்யலாம் என்கிற சின்னச் சின்னக் கேள்விகள் உங்களுக்குள் பிறந்து விட்டால் கொஞ்சம் கொஞ்சமாக விடைகள் கிடைக்கத் தொடங்கும். ஒன்றை மறந்து விடாதீர்கள். எவ்வளவு பெரிய கதவுக்கும் தாழ்ப்பாள் சின்னது தான். பூட்டோ அதை விடச் சின்னது. சாவியோ... பூட்டை விடச் சின்னது. சின்னச் சாவியால் பூட்டைத் திறக்கலாம். பூட்டைத் திறந்தால் தாழ்ப்பாளைத் திறக்கலாம். தாழ்ப்பாளைத் திறந்தால் பெரிய பெரிய கதவுகளையே சுலபமாகத் திறக்கலாம். எனவே சின்னச் சின்னக் கேள்விகள், பெரிய பெரிய கோட்டை வாயில்களைத் திறக்கப் போகும் சாவிகள். இதை நீங்கள் உணர்ந்தால் வெற்றி நிச்சயம். 😊😊😊 #உற்சாக பானம் #உற்சாக பானம்# #👪 cute family members 👪 #பொழுது போக்கு #கதை சொள்ளரோம்
உற்சாக பானம் - ShareChat
கொண்டாட்டம்....! வாழ்வே பிரச்னை. எங்கே திரும்பினாலும் சுவர். சலித்து விட்டது. என்ன வாழ்க்கை போ ? என் நண்பர் இந்த மனநிலையோடு ஒவ்வொரு நாளையும் எதிர்கொண்டால், எதுவுமே சரியாக வராது...! இது நான். என்ன செய்வது? நண்பர். நான் ஒன்று சொல்கிறேன். சிரிக்காமல் திட்டாமல் செய்ய வேண்டும்" என்றேன். என்ன அது ? உங்கள் அறைக்குள் சென்று கதவை மூடி விட்டு, உங்களுக்கு மிகவும் பிடித்த பாட்டை போட்டு மெய்மறந்து அதனோடு ஒன்றி விடுங்கள். ஒரு நடனமும் இசைக்கேற்றவாறு தன்னை மறந்து ஆடலாம்...! என்றேன். உனக்கென்ன பைத்தியமா ? என்றார். இதன் அருமை உங்களுக்குப் புரியாது. எத்தனை துன்பமாக இருந்தாலும், நல்ல பிடித்த பாட்டை, இசையைக் கேட்கும் போது நம்மை மறந்து ரசிக்கிறோம் இல்லையா?அது போலத்தான்." என்றேன். புரியவில்லையே? என்றார். ஓஷோ தியானத்தில், தன்னை மறந்து ஆடும் இயல்பான நடனத்திற்கு பெரிதும் முக்கியத்துவம் கொடுப்பார்கள். வாழ்வே கொண்டாட்டம்....இது தாரக மந்திரம். ஓஷோ groups Pune commune videos கிடைத்தால் பார்க்கலாம். மெல்லிய மனதை வருடும் இசை. வயது வித்தியாசம் இல்லாமல் ஆண் பெண் இருபாலரும் தன்னிச்சையாக, கண்ணை மூடி, பரவச நிலையோடு நடனம் ஆடுவார்கள். நடனத்திற்கு எந்த இலக்கணமும் கிடையாது. அந்த இசைக்கு ஏற்றவாறு நமக்கு என்ன தோன்றுகிறதோ, அதன்படி எந்த நிர்ப்பந்தமுமில்லாமல் நடனம் ஆடலாம். இப்படி நம்மை மறந்து ஆடுவதால், "நான் " என்ற Ego தொலைவதோடு, உடலின் ஒவ்வொரு அணுவும் Relex ஆவதோடு புத்துணர்ச்சி பெறும். வியப்போடு என்னைப் பார்த்தார். முதலில் நான் சொன்னது போல் செய். ஆரம்பத்தில் தயக்கமாக இருக்கும். உங்கள் பிரச்னைகளை எல்லாம் அறைக்கு வெளியே விட்டு விட்டு, நீங்கள்,இசை, உங்கள் நடனம் இதில் மட்டும் கவனம் செலுத்துங்கள் இதுவும் ஓஷோவின் தேநீர் தியானம் போலத் தான். நீங்கள்,தேநீர், அதன் சுவை. மனம் லேசாகி விடும். களைத்த உடல் அணுக்கள் எல்லாம் புத்துணர்ச்சி பெறுவதை உணர்வீர்கள். புது மனிதனாக உருவெடுக்கலாம். இதனால் உங்கள் பிரச்னைகள் தீராது. ஆனால் பிரச்னைகளை எதிர்கொள்ள தெளிவு பிறக்கும். மனதில் அமைதி நிலவும். நிதர்சனம் புரியும். " என்றேன். குழப்பத்தோடு தலையசைத்தார். செய்வாரோ இல்லையோ ?அது எனக்கு தெரியாது. விதை, விதைத்தாகி விட்டது. இனி அது காலத்தால் முளை விடும்...!!! 😊😊😊 #கதை சொள்ளரோம் #உற்சாக பானம்# #👪 cute family members 👪 #உற்சாக பானம் #பொழுது போக்கு
கதை சொள்ளரோம் - எதையும் யாரும் ன்னொருவருக்கு கொடுத்து விட முடியும் (೧( ஆனால் ೧೧ (( நிம்மதியை மட்டும் மனிதன் தன்னிடமிருந்து தான் பெற்றுக் கொள்ள முடியும்! SRagu எதையும் யாரும் ன்னொருவருக்கு கொடுத்து விட முடியும் (೧( ஆனால் ೧೧ (( நிம்மதியை மட்டும் மனிதன் தன்னிடமிருந்து தான் பெற்றுக் கொள்ள முடியும்! SRagu - ShareChat
பிப்ரவரியில் மட்டும் 28 நாட்கள் தெரியுமா ? நாட்காட்டியானது ஆரம்பத்தில் விவசாயத்திற்கான பருவநிலை மாற்றங்களைக் கண்டறியவே உருவாக்கப்பட்டன. முதலாவது ரோம நாட்காட்டியில் 304 நாட்களே இருந்தன. (அதில் ஜனவரி, பிப்ரவரி மாதங்கள் இருக்கவில்லை!) 304 நாட்களைக் கொண்ட நாட்காட்டி சரியாக பருவ மாற்றங்களைத் தரவில்லை. ஏனெனில் பூமி சுழற்சிக்கு 365 1/4 நாட்கள் தேவைப்பட்டது. Numa Pompilius என்ற அரசர் ஜனவரி, பிப்ரவரி என்ற இரு மாதங்களையும் இணைத்து 355 நாட்களைக் கொண்ட புதிய நாட்காட்டியை உருவாக்கினார். எனினும் அதுவும் சரியான பருவ மாற்றத்தைட் காட்டவில்லை. காரணம், பூமி சுற்றுகைக்கு 10 நாட்கள் வித்தியாசப்பட்டன. பின்னர் வந்த அரசர் Julius Caesar (ஜூலியஸ் சீசர்) 12 மாதங்களையும் 365 நாட்களையும் கொண்ட நாட்காட்டியை உருவாக்கினார். ஜூலை தான் பிறந்த மாதமாக வருவதனால் அது மற்ற சில மாதங்களை விடக் குறைவான நாட்களைக் கொண்டிருப்பதை விரும்பாத சீசர், வருடத்தின் இறுதி மாதமாக விளங்கிய பிப்ரவரியில் இருந்து 1 நாளை எடுத்து ஜூலையுடன் இணைத்துக் கொண்டார்! பிப்ரவரிக்கு 29 நாள் ஆனது. சீசருக்குப் பின் வந்த அகஸ்டஸ் (Augustus) தனது பெயரில் ஒரு மாதம் இருக்க வேண்டும் என விரும்பி, தான் பிறந்த மாதத்திற்கு ஆகஸ்ட் எனப் பெயர் மாற்றம் செய்தார் எனினும் ஆகஸ்டில் 30 நாட்களே இருந்தன, சீசரை விட தான் குறைந்தவன் அல்ல எனக் காட்டுவதற்காக வருட இறுதி மாதமான பிப்ரவரியில் இருந்து மீண்டும் ஒரு நாள் எடுத்துக் கொள்ளப்பட்டது. ஆகஸ்ட் 31 ஆனது, பிப்ரவரி 28 ஆக மெலிந்தது! நாட்காட்டியின் தொடக்க மாதமாக, மார்ச் மாதம் விளங்கியது. பின்னர், காலப்போக்கில் ஜனவரி மாதத்தை முதலாவது மாதமாக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், பிப்ரவரி இரண்டாம் மாதமாகியது! இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளதனால் தான் ஏழு என்ற அர்த்தம் கொண்ட செப்டம்பர், எட்டு என்ற அர்த்தம் வரும் அக்டோபர், ஒன்பது என்று அர்த்தம் வரும் நவம்பர், 10 என்று அர்த்தம் வரும் டிசம்பர் ஆகிய மாதங்கள் சம்பந்தமே இல்லாமல், முறையே ஒன்பது, 10, 11, 12வது மாதங்களாக வேறு இடங்களுக்கு மாறியுள்ளன. நாம் இன்றைக்குப் பயன்படுத்துவது கிரகோரியன் நாட்காட்டி. இது 1582ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இவ்வாறாக நம் முன்னோர்கள் உருவாக்கிய காலத்தை வீணாக்காமல் நம் கடமையை செய்வோமா! 😊😊😊 #பொழுது போக்கு #உற்சாக பானம்# #👪 cute family members 👪 #கதை சொள்ளரோம் #உற்சாக பானம்
பொழுது போக்கு - February 8 February 8 - ShareChat
🙏🏻 💐💐🌹🌹 *இன்றைய சிந்தனை (01.02.2026)* ........................................................................ *"அன்பான வார்த்தை...!"* ........................................................ பல நேரங்களில் நல்லதாக, அன்பாக சொல்லப்படும் நான்கு வார்த்தைகள் ஏற்படுத்தும் தாக்கத்தை, பணத்தாலும், பொருளாலும் ஏற்படுத்த முடிவதில்லை... அதுவும், துன்பமான காலங்களில் ஒருவன் சிக்கித் தவிக்கும் போது, அவனிடம் அன்பாகவும், ஆறுதலாகவும், நம்பிக்கையூட்டும் விதமாக சொல்லப்படும் வார்த்தைகள் ஏற்படுத்தும் நன்மைகளுக்கு அளவேயில்லை... கல்கத்தா வீதிகளில் யாசகம் (பிச்சை) செய்துக் கொண்டிருந்த தொழுநோயாளி ஒருவரது உடல்நிலை மிகவும் மோசமாகி விட, அவர் அன்னை தெரசாவின் கருணை இல்லம் ஒன்றில் அடைக்கலம் புகுந்தார்... சில இடங்களில் அழுகிய நிலையில் இருந்த அவர் உடலைச் சுத்தம் செய்து கொண்டிருந்த சேவகர் ஒருவர், ஒரு கட்டத்தில் அந்த நெடியைத் தாங்க முடியாமல் பின்வாங்க, அன்னை தெரசா அந்த வேலையை தானே மேற்கொண்டு தொடர்ந்தார்... சிறிதும் முகம் சுளிக்காமல், நெடியைப் பொருட்படுத்தாமல் அன்னை தொடர்ந்து செய்த அந்தப் பணி, அந்தத் தொழுநோயாளியின் கண்களில் கண்ணீரை வரவழைத்து விட்டது... "அம்மா இது போன்ற அருவருக்க வைக்கும் வேலையைச் செய்ய உங்களுக்கு சிரமமாகத் தோன்றவில்லையா?" என்று அவர் கேட்டார்... "சகோதரரே..!" நீங்கள் அனுபவிக்கும் இந்த வேதனையுடன் ஒப்பிடும் போது, நான் செய்வது ஒரு சொல்லத்தக்க செயலே இல்லை" என்று அன்புடன் பதிலளித்தார் அன்னை தெரசா... அன்னையுடைய அந்தத் தன்னலமில்லாத சேவைக்கு இணையாக ன, அந்தத் தொழுநோயாளியின் இதயத்தைத் தொட்டது அந்த அன்பான வார்த்தைகள்... *ஆம் நண்பர்களே...!* 🟡 *சொற்கள்!, சக்தி வாய்ந்தவை. அவை ஆக்கமும், அழிக்கவும் வல்லமை படைத்தவை. மற்றவர்கள் வருத்தத்தில் மூழ்கியிருக்கையில் ஆத்மார்த்தமாய் ஆறுதல் வார்த்தைகளைச் சொல்லுங்கள்...!* 🔴 *வருத்தங்களும் தோல்விகளும் இயல்பானவை என்பதையும் அதைத் தாண்டாமல் யாரும் பெரிய வெற்றிகளை அடைந்ததில்லை என்பதை நினைவூட்டுங்கள். உங்களுக்குத் தெரிந்து அதே போன்ற நிலைகளில் இருந்து விடுபட்டு மேலுக்கு வந்தவர்கள் பற்றி எடுத்துச் சொல்லி தைரியப்படுத்துங்கள்...!!* ⚫ *அதன் மூலம் அதிலிருந்து மீண்டு வர அவர்களுக்கு நீங்கள் உதவுகிறீர்கள். காணும் ஒவ்வொரு திறமையையும் சுட்டிக் காட்டி வாழ்த்தத் தயங்காதீர்கள். ஒரு திறமை வெளிப்படுகையில் அடையாளம் காணப்பட்டு பாராட்டப்படும் போது அந்தத் திறமை வேரூன்ற உதவுகிறீர்கள்...!!!* 🔘 _*தங்கள் திறமைகள் மீது உண்மையிலேயே நம்பிக்கை ஏற்படும் வரை எல்லாத் திறமையாளர்களுக்கும் ஆரம்பத்தில் இதுபோன்ற நல்ல வார்த்தைகள் தேவைப்படுகின்றன. அந்த நல்ல வார்த்தைகளைச் சொல்ல என்றுமே தயங்காதீர்கள்...!*_ *- உடுமலை சு. தண்டபாணி*✒️ ( 94429-28401) 🌹🌹💐💐 🙏🏻 💐💐🌹🌹 #உற்சாக பானம் #உற்சாக பானம்# #👪 cute family members 👪 #பொழுது போக்கு #கதை சொள்ளரோம்
உற்சாக பானம் - ஒருவரின் அன்பு கலந்த வார்த்தை மட்டுமே துன்பத்தில் இருக்கும் ஒருவருக்கு துவண்டு அரு மருந்தாகும் ஒருவரின் அன்பு கலந்த வார்த்தை மட்டுமே துன்பத்தில் இருக்கும் ஒருவருக்கு துவண்டு அரு மருந்தாகும் - ShareChat
1⃣ *வெற்றி நிச்சயம்* 👏👏👏👏👏👏👏👏👏 சிறந்த அறிவாளியென்பவன் சூரியனாக பிரகாசிக்க வேண்டியதால், அகல்விளக்காய் எரியும் நம் அறிவுதனை வளர்க்க நாளும் சிந்தனையென்னும் தூண்டுகோலும் அவசியம்.. ஊஞ்சலின் ஆட்டமெல்லாம் உந்துவிசை உள்ள வரையே... உந்துவிசை நின்றுவிட்டால் ஊஞ்சலின் ஆட்டமும் நின்றுவிடும்... உன்னை நீயே தயார் செய்.. என்னை நானே தயார் செய்கிறேன்... இதுவே சுய தேர்ச்சி... லட்சியம் எதுவாயினும் சுய தேர்ச்சியே படிகற்களாகிறது, இலட்சியத்தை எட்டிப் பிடிக்க.. 👏👏👏👏👏👏👏👏👏 *வெற்றி நிச்சயம்!* 👏👏👏👏👏👏👏👏👏 உற்சாகமான காலை வணக்கம்💐🙏 #கதை சொள்ளரோம் #உற்சாக பானம்# #👪 cute family members 👪 #உற்சாக பானம் #பொழுது போக்கு
கதை சொள்ளரோம் - 0| @ ழைப்பாளியின் வீட்டிற்குள்  பசி எட்டிப் பார்க்குமே தவிர நுழைந்து விடத் துணியாது | உள்ளே வததாவசு ` 18 பிப்ரவரி 12 இராசி பல ஷாபான்  (mum] மேஷம் வெற்றி ரிஷபம் கவலை பௌர்ணமி 55.17 (A.M.4.43) 48L 46.3 (AM1.1) Sur UlglcTu பயம் 32சித்தயோகம் பௌர்ணமி தைப்பூசம் திருமயம் ஸ்ரீசத்திய  7 கடகம் நட்பு மூர்த்தி பவனி முன்னாள் தமிழக முதல்வர் ஓமந்தூர் ராமசாமி சிம்மம் தடங்கல் ரெட்டியார் பிறந்த நாள் அரசு விடுமுறை செப்த கஸிமா  கன்னி மகிழ்ச்சி துலாம் தாமதம் சூரிய உதயம் மேற்கு 6.36 சூலம் 8 விருச்சி சுகம் பரிகாரம் வெலலம் மகர இருப்புநாழி 210 பௌர்ணமி தனுசு வரவு கரணம் 10.30-12 1மதர - =5் சரி சிக்கல் நல்ல நேரம் கும் மகரம் கௌரி நநேரம் இராகு 4.30-6.00 24 6৩ 885 கும்பம் செலவு 730-830 1.30-2.30 காலை 616 கா குளி 3.00-4.30 மீனம் எதிர்ப்பு 3.30-4.30 1.30-2.30 12.00-1.30 மாலை மா எமக உலாந்த வேப்பம் விதைகளின் உள்ளிருக்கும்  சந்திராஷ்டமம் [IT6iT மருத்துவக் பருப்பை நசுக்கி வெல்லத்துடன் , சாப்பிட்டு வர குறிப்பு கேட்டை, மூலம் மூல வியாதி குணமாகும் 1 0| @ ழைப்பாளியின் வீட்டிற்குள்  பசி எட்டிப் பார்க்குமே தவிர நுழைந்து விடத் துணியாது | உள்ளே வததாவசு ` 18 பிப்ரவரி 12 இராசி பல ஷாபான்  (mum] மேஷம் வெற்றி ரிஷபம் கவலை பௌர்ணமி 55.17 (A.M.4.43) 48L 46.3 (AM1.1) Sur UlglcTu பயம் 32சித்தயோகம் பௌர்ணமி தைப்பூசம் திருமயம் ஸ்ரீசத்திய  7 கடகம் நட்பு மூர்த்தி பவனி முன்னாள் தமிழக முதல்வர் ஓமந்தூர் ராமசாமி சிம்மம் தடங்கல் ரெட்டியார் பிறந்த நாள் அரசு விடுமுறை செப்த கஸிமா  கன்னி மகிழ்ச்சி துலாம் தாமதம் சூரிய உதயம் மேற்கு 6.36 சூலம் 8 விருச்சி சுகம் பரிகாரம் வெலலம் மகர இருப்புநாழி 210 பௌர்ணமி தனுசு வரவு கரணம் 10.30-12 1மதர - =5் சரி சிக்கல் நல்ல நேரம் கும் மகரம் கௌரி நநேரம் இராகு 4.30-6.00 24 6৩ 885 கும்பம் செலவு 730-830 1.30-2.30 காலை 616 கா குளி 3.00-4.30 மீனம் எதிர்ப்பு 3.30-4.30 1.30-2.30 12.00-1.30 மாலை மா எமக உலாந்த வேப்பம் விதைகளின் உள்ளிருக்கும்  சந்திராஷ்டமம் [IT6iT மருத்துவக் பருப்பை நசுக்கி வெல்லத்துடன் , சாப்பிட்டு வர குறிப்பு கேட்டை, மூலம் மூல வியாதி குணமாகும் 1 - ShareChat
*ஏமாந்து நிற்கும் போது தான் நாம் சிந்திக்கிறோம்.* இவ்வளவு நாட்கள் எப்படி எல்லாம் ஏமாற்றப்பட்டு இருக்கிறோம் என்று. #பொழுது போக்கு #உற்சாக பானம்# #👪 cute family members 👪 #கதை சொள்ளரோம் #உற்சாக பானம்
பொழுது போக்கு - ShareChat