கேள்விக்கு என்ன பதில் ?- 59
அறிவியலில் கற்றுத் தேர்ந்து புதிய கண்டுபிடிப்புகளை
கண்டுபிடிப்பது இருக்கட்டும், தங்களைச் சுற்றியுள்ள அறிவியல் உண்மைகளை புரிந்துகொள்வதற்காகவேண்டியாவது கொஞ்சமாவது அறிவு வேண்டாமா ?
நில அளவைக் கல்லலை விளக்குத் தூண் என்று பிடிவாதம் பிடிக்கிறார்கள் பக்தி வேசம் போடும் கலவரக் கும்பல்.
அத்தாண்டி மலை மேல அத்தாண்டி தூணை நட்டு 50 மில்லிவிட்டர் கொள்ளளவு குழி அமைத்து விளக்கேற்றினால் யாருக்கு என்ன பயன் ?
50 மில்லி லிட்டர்
எண்ணெயை எடுத்துக் கொண்டு அவ்வளவு தூரம் ஏறிப்போய் விளக்கு போட்டிருந்தால் உண்மையில் அவன் வெளக்கெண்ணெய்தான்.
தியோடோலைட் கருவி பொருத்துவதற்கான
ஒரு கற்தூணை ஆங்கிலேயன் அமைத்து நில அளவை செய்து குறிப்பும் எழுதி வைத்துவிட்டுப் போயிருக்கிறான்.
தியோடோலைட் கருவி பொருத்தும் நில அளவைத் தூணை, கலவரக் கும்பல் விளக்குத்தூண்தான் என்று ஒற்றைக் காலில் நிற்கிறார்கள்.
அறிவியலைப் பற்றி எடுத்துச் சொன்னால் புரிந்து கொள்வதற்கு கொஞ்சமாவது அடிப்படை அறிவு வேண்டும்தானே.
இந்த IIT என்று சொல்லக் கூடிய உயர் தொழில் நுட்ப நிறுவனங்கள் பரத நாட்டியத்தையும் கணிதத்தையும் சரி விகிதத்தில் கலப்பதில் மட்டும் கவனம் செலுத்தாமல் இது போன்ற அறிவியல் குறித்த சிக்கல் எழும்போது தங்களது உயரிய கருத்துக்களை உதிர்க்கலாம்தானே ?
ஒருவேளை அவர்களும் அதை விளக்குத் தூண் என்று நம்பிக்கொண்டிருக்கிறார்களோ ?
பாவம அவர்கள் மட்டும் வைத்துக்கொண்டா வஞ்சகம் செய்கிறார்கள். தெரிந்திருந்தால் சொல்லியிருக்கமாட்டார்களா ?
பூமியை எடுத்துக்கொண்டு போய் கடலுக்குள் ஒளித்து வைக்க முடியும் என்று நம்புகிற நாட்டில்
பன்றி வேசம் போட்ட கிருஷ்ணரும், பூமியும் காதலித்து குழந்தை பெற்றுக்கொள்ள முடியும் என்று நம்புகிற நாட்டில்.
இத்துனூண்டு விநாயகருக்கு அத்தாண்டி யானைத் தலையைப் பொருத்தி உயிர்ப்பித்து நடமாடச் செய்ய முடியும் என்று நம்புகிற நாட்டில்
சமஸ்கிருதத்தில் மந்திரம் சொல்லி தெவசம் கொடுத்தால் சட்டை துணிமணி, அரிசி பருப்பு, குடை, காலணி, பசுமாடு எல்லாம் சொர்க்கத்தில் இருக்கின்ற முன்னோருக்குச் சென்று சேர்ந்துவிடும் என்று நம்புகிற நாட்டில்
மரத்திற்கும், மைல் கல்லுக்கும் சேலை கட்டி, சந்தனம் பொட்டு வைத்து சாமி கும்பிடுகிற நாட்டில்
தியோடோலைட் கருவி பொருத்துகின்ற கற்தூண் விளக்குத்தூணாகத்தான் பார்க்கப்படும்.
விளக்கு ஏத்திட இந்தனை வேகம் காட்டும் மரமண்டைகள் இருக்கும் நாட்டில் என்ன பெரிய அறிவியல் கண்டுபிடிப்புகள் வந்துவிடும் ?
தீபம் ஏற்ற உதவும் தீ குச்சி / வத்திக்குச்சி கூட வெளிநாட்டு கண்டுபிடிப்பு தான்.
பக்தி வந்தால் புத்தி போய்விடும் என்றார் பெரியார். புத்தி மட்டுமா, வெட்கம், மானம், சூடு, சொரனை என அனைத்தும் போய்விடும் என்பதுதான் உண்மை.
(சிந்தனைகள் தொடரும்)
#அரசியல்
அண்ணல் அம்பேத்கர் நினைவு தினம் #அரசியல் #அரசியல் #அரசியல் மாற்றம் #தமிழ் தேசிய அரசியல்
#😊எனது முதல் பதிவு🤙🏼 தீபமேற்றவிடவில்லை என்று எதிர்ப்பு தெரிவித்து திருப்பரக்குன்ற கடைகளை மூடச்சொன்னால் ஒரு வியாபாரி கூட அதை மதிக்கவில்லை. நடுவிரலை உசத்திக்காட்டி இதை வேணும்னா சூப்பிட்டுப் போ என்றிருக்கின்றனர். குன்றத்து குசும்பே தனி !












