
Arunachalam
@463115585
ஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்
🚨 மத்தியில் ஜனநாயக அரசு அல்ல...
கொள்ளைக்கார சந்தை நடத்தும் ஆட்சி! - Rahul Gandhi
🗳️ தேர்தலில் வாக்கு திருட்டு
📄 தேர்வுகளில் கேள்வித்தாள் கசிவு
🌳 ஆதிவாசிகளின் காடுகள் பறிப்பு
🌾 விவசாயிகளின் MSP உரிமை பறிப்பு
🏠 ஏழைகளின் நிலம் பறிப்பு
👥 OBC மக்களின் பங்கு பறிப்பு
💻 வெளிநாட்டு ஒப்பந்தங்களில் டேட்டா திருட்டு
⚠️ நாட்டின் உரிமைகள் ஒன்றன் பின் ஒன்றாக பறிக்கப்படுகின்றன!
🔥 இந்த அநீதிக்கு எதிராக
இளைஞர்கள் எழுந்து நிற்க வேண்டிய நேரம் இது!
✊ “நாட்டை காப்பாற்றும் பொறுப்பு
நாட்டு இளைஞர்களுக்கே உள்ளது!”
🇮🇳 உரிமைக்காக குரல் கொடுப்போம்
🛡️ ஜனநாயகத்தை பாதுகாப்போம்
📢 உண்மையை மக்களிடம் கொண்டு செல்வோம்.- #RahulGandhi #Congress #RahulGandhiVoiceOfIndia #👨மோடி அரசாங்கம்
இவர் தான் திரு. வெங்கடரமணன்.. இவரை தமிழ்நாட்டில் கல்வி அமைச்சராக இந்த அரசு நியமிக்கப்பட்டிருக்கிறது, இவர் ஒரு பிராமணர் மற்றும் RSS க்காரர் என்பது எல்லோரும் அறிந்த ஒன்று..
இவர் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு ஒரு பிரபல ஆங்கில பத்திரிகைக்கு ஒரு பேட்டி கொடுத்திருந்தார்.
அதில் திராவிட ஆட்சி தமிழ்நாட்டிலிருந்து துடைக்தெரியப்பட்டதாகவும், திராவிட அரசியலுக்கு தமிழ்நாட்டுல இனி வேலையே இல்லையென்றும், இனி முழுமுழுக்க தமிழ்நாட்டை ஆளப்போறது எங்கவா மட்டும்தான் என்று பேட்டியில் கூறியிருக்கிறார்..
இந்த பிராமணர் எப்படி TVK கட்சியில் இணைந்தார், அதில் இவர் எப்படி வெற்றிப்பெற்று அதிலும் குறிப்பாக
கல்வி அமைச்சர் ஆனார் என்பது தனி அத்தியாயம்..
தமிழ்நாட்டில் படிக்கும் பிள்ளைகளின் தலையெழுத்தை தீர்மானிக்கும் கல்வித்துறை இப்போது இவர் கையில் சிக்கியிருக்கிறது என்பது தற்போது படிக்கும் பிள்ளைகள் எதிர்கால மாணவர்களின் விதி..
இனி PM Shree, NEP, மூன்று மொழி கொள்கை உள்ளே வந்துவிடும்.. NEP யில் மூன்று மொழி கொள்கையை மட்டுமே நாம் பார்க்கிறோம், ஆனால் அதில் 10, +2 வில் ஃபெயில் என்று இருந்தது போய் 3, 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளில் கூட மாணவர்கள் ஃபெயில் ஆவது என்றாகிவிடும்.. அதாவது அவர்கள் பிஞ்சியிலேயே வடிக்கட்ட படுவார்கள், குலக்கல்வியும் உள்ளே வந்துவிடும்.. RSS சாகா பயிற்சியும் மாணவர்களுக்கு கொடுக்கப்படும்..
ஒரு RSS க்காரர் கையில் நாடு கிடைத்தால் அது என்னாவாகும் என்பது உங்கள் அனைவருக்குமே தெரியும்..
#தற்_போதைக்கு_மகிழ்ச்சியா #👨மோடி அரசாங்கம்
2015 சென்னை பெருவெள்ளத்தின்போது ஜெயலலிதா ஆட்சி. பெருவெள்ளம் வடிந்தபிறகு முடிச்சூர் , தாம்பரம் பகுதிகளில் இருந்த ஏரி ஆக்ரமிப்புகளை அகற்றி கால்வாய்களை தூர்வாரி அந்தப்பகுதியில் அடுத்தடுத்த வருடங்களில் வெள்ள பாதிப்புகள் ஏற்படாமல் மாற்றியமைத்த பெருமை அமுதா ஐ.ஏ.எஸ் அவர்களை சேரும். மற்ற பகுதிகள் குறிப்பாக மட்டக்களப்பு, ஆஸ்திரேலியா தமிழர்களுக்கு இவரை பற்றி தெரிந்திருக்காது. ஆனால் முடிச்சூர் , தாம்பரம் வாசிகள் இவரை எப்போதும் நினைவில் வைத்திருப்பார்கள். நல்ல அதிகாரிகளுக்கு காத்திருப்பு பட்டியல். ஜோஸ்யக்காரனுக்கு எல்லாம் பதவிகள். வெளங்கிடும் . காக்கா பிரியாணி துன்னா உன்னிகிருஷ்ணன் குரலா எதிர்பார்க்க முடியும்? #👨மோடி அரசாங்கம்
சனாதனம் போற்றி அரசியல் நாடகம் நடத்துகின்ற உங்களை ஏன் தூக்கிக் கொஞ்சி முத்தமிடவில்லை தமிழ்நாட்டு மக்கள்!
ஆன்மீகத்திற்கும் சனாதனத்திற்கும் உள்ள வேறுபாடு என்ன என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றாகத்தெரியும்!
முருகனுக்கும் இராமருக்கும் உள்ளவேறுபாடு அது!
திருக்குறளுக்கும் மனுஸ்மிருதிக்கும் உள்ள வேறுபாடு அது!
வள்ளலாருக்கும் வர்ணாஸ்ரமத்திற்கும் உள்ள வேறுபாடு அது!
குன்றக்குடி அடிகளாருக்கும் சங்கராச்சாரியாருக்கும் உள்ள வேறுபாடு அது!
உதயநிதி ஆன்மீகத்தை மறுதலிக்கவில்லை! மாறாக நாராயணன் போன்றவர்களின்
சாதித்திமிருக்கு எதிராக பேசுகிறார்!
பார்ப்பன உயர்சாதி திமிரை ஒழிப்பதுதான் சனாதன ஒழிப்பு! #👨மோடி அரசாங்கம்
#சனாதனத்தை_ஒழிக்க_வேண்டும்_என்று_உதயநிதி_ஸ்டாலின்_பேசியதில்_என்ன_தவறு?
இன்று, தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில், எதிர்க்கட்சித் தலைவராகப் பேசிய உதயநிதி ஸ்டாலின், "மக்களைப் பிரிக்கும் சனாதனம் நிச்சயம் ஒழிக்கப்பட வேண்டும்" என்று வலியுறுத்தி பேசினார்.
" ஐயையோ, ஐயையோ, கோடிக்கணக்கான இந்துக்களின் நம்பிக்கையை புண்படுத்தி விட்டார், ஐயையோ ஐயையோ " என்று வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு கதறுகிறார் நயினார் நாகேந்திரன் போதாததற்கு, இந்து முன்னணி உள்ளிட்ட பார்ப்பன மற்றும் பார்ப்பன பாதம் தாங்கி வகையறாக்கள் சனாதன தர்மத்தை எதிர்த்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசிவிட்டார் என்று குதியாய் குதிக்கிறார்கள்!
இந்து முன்னணி, ஆர் எஸ் எஸ் வகையறாக்களே! உங்கள் சனாதன தர்மம் எங்களைப் போன்ற கோடிக்கணக்கான மக்களை சூத்திரர்கள் என்றும் பஞ்சமர்கள் என்றும் இழிவு செய்கிறதா, இல்லையா? உங்கள் சனாதன தர்மப்படி, உங்கள் சாஸ்திரங்கள்படி, நாங்கள் சூத்திரர்கள் என்று வகைப்படுத்தப்பட்டிருக்கிறோமா இல்லையா?
கோடிக்கணக்கான இந்துக்களின் உணர்வை புண்படுத்தி விட்டார் உதயநிதி ஸ்டாலின் என்று பேசுகிறீர்களே, எந்த இந்துக்களின் மனதை புண்படுத்தி விட்டார் ?
பார்ப்பனர்கள் தான் பரிதவிக்கிறார்கள், "தங்களுடைய சமூக மேலாதிக்கம் தகர்ந்து போகுமோ " என்று. சூத்திரப்பட்டமும் பஞ்சமர் பட்டமும் போக வேண்டும் என்றுதான் நாங்கள் விரும்புகிறோம்.
உங்களை வேண்டிக் கேட்டுக்கொள்கிறோம்.
எங்களைப் போன்ற பெரும்பாலோரை, பல கோடி மக்களை, சூத்திரர்கள் என்று இன்று வரை உங்கள் சாஸ்திரங்கள்படி, சட்டபூர்வமாக நிலை நிறுத்தப்பட்டு இருப்பதை, அப்படி அழைப்பதை , இனியாவது "சட்டவிரோதமானது " என்று விதிமுறை செய்ய, இந்து முன்னணி வகையறாக்கள் கோர வேண்டும். தயாரா?
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளும் கூட சூத்திரர் என்ற வருணப் பிரிவு இருப்பதை உறுதி செய்திருக்கிறது. இன்னும் எவ்வளவு காலம் நாங்கள் சூத்திரர்களாக இருக்க வேண்டும் என்பதையாவது இந்து முன்னணி கூற வேண்டும். இதற்கு பதில் உண்டா?
நீங்கள் எங்கள் மீது திணித்த சூத்திரப்பட்டதை நாங்கள் தூக்கி சுமக்கத்தான் வேண்டும் என்றால், அதை ஒருக்காலும் ஏற்க முடியாது.
எங்களை "உங்கள் சனாதனம்" சூத்திரர் என்றும் பஞ்சமர் என்றும் இதற்குமேலும் அழைக்கும் என்றால், உங்கள் சனாதனத்தை ஒழித்தே தீருவோம்!
-- Perasiriyar Jayaraman
பேராசிரியர் செயராமன்
நெறியாளர்,
தமிழ்மண் தன்னுரிமை இயக்கம்
12.05.2026 #👨மோடி அரசாங்கம்
இன்று எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், சட்டப் பேரவையில் மிக அருமையான ஐந்து கருந்துக்களைச் சொன்னார்.
1.) மக்கள் உங்களை மைனாரிட்டியாகத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். எங்கள் கூட்டணியின் மூலம் வென்றவர்களுடைய ஆதரவில்தான் நீங்கள் ஆளத் துவங்கியிருக்கிறீர்கள் !
2.) நம் தமிழ்த்தாய் வாழ்த்தைத்தான் நீங்கள் என்றும், எப்பொழுதும் முதலில் பாட வேண்டும். அதை மூன்றாவது இடத்திற்கு தள்ளப்படுவதை இனி நீங்கள் அனுமதிக்கக் கூடாது. ஏனெனில் இனி அப்படி செய்ய முனைந்தால் நாங்கள் அதை அனுமதிக்க மாட்டோம் !
3.) லயோலா கல்லூரில நீங்க எனக்கு சீனியர். நான் ஜூனியர். ஆனா இந்தச் சட்டசபைக்கு நான்தான் சீனியர், நீங்க ஜூனியர் !
4.) மக்களைப் பிரிக்கும் சனாதனம் ஒழிய வேண்டும். சனாதனம் என்றால் இந்துமதம் என்று சங்கிகளும், நூலர்களும் பதற்றமடைவார்கள். சனாதனம் என்பது மதங்களிலிருக்கும் பிரிவினை வாதங்கள், பெண்ணடிமைத்தனம், பிற்போக்கு கருத்துக்கள் என்பதாகும் !
ஏன் இந்துக்களுக்கு மட்டும் புசுக்குன்னு கோபம் வருதுன்னா அவன்தான் தன்னை சனாதனி எனச் சொல்லிக் கொள்பவன். சனாதனி என்றால் சங்கி என்றர்த்தம். நாங்கள் சங்கி ஒழிக என்றால் சங்கித்தனம் ஒழிக என்றர்த்தம்.
அய்யய்யோ எங்களை சாகச் சொல்லிட்டான், அழிப்பேன்னுட்டான்னு கதறுவன்னா அப்படி ஓரமா நின்னு கதறிட்டு போ 🐶யே. சனாதனம் என்றால் சங்கித்தனம். தர்கால போய் மோட்சதீபம் ஏற்றுவேன் என்பதுதான் சனாதனம் அலைஸ் சங்கித்தனம். உங்க ஆத்தா அதை ஒழிப்போம்ன்னுதான்டா சொல்லுவோம். சொல்லிக்கிட்டே இருப்போம்டா சங்கீதா புருஷன்களா !
5.) எப்பவும் ஆளும் கட்சி ஆட்கள் அதிகமாகவும், எதிர்கட்சி ஆட்கள் குறைவாகவும்தான் பொதுவா சட்டசபைகள் அமையும். ஆனால் மக்கள் இம்முறை எதிர்கட்சி வரிசையைத்தான் பெருசா நிர்ணயிச்சிருக்காங்க. எனவே ஆளுங்கட்சி எதிர்கட்சிகளாகிய நாங்கள் சொல்வதைக் கேட்க வேண்டும். எதிர்கட்சிகள் குரலாகவும், ஆளுங்கட்சி செவியாகவும் இருப்பதே ஒரு நல்ல மக்களாட்சிக்கு சான்று !
(ஒண்ணு கவனிங்க. இதுவும் ஸ்க்ரிப்ட்தான். அதாவது மண்டபத்தில் யாராலோ எழுதிக் கொடுக்கப்பட்டதுதான். ஆனா எப்படி இருக்கு ?
முதலமைச்சருக்கும் அதுவேதான். வழக்கம் போல ஒரு குட்டிக்கதை. அது சுவாரசியமாத்தான் இருந்தது. ஆனால் அதெல்லாம் பாக்யாத்தனம். அதாவது பாக்யா இதழில் பாக்யராஜ் அனைத்துக்குமே ஒரு கதை சொல்வார். அதுபோல ரொம்பப் பழசு. உங்ககிட்ட பழச யாரும் விரும்ப மாட்டாங்க சி எம் சார். நாளைக்கு நம்பிக்கை வாக்கெடுப்புல நீங்க ஜெயிச்சிட்டா அடுத்து முழுக்க முழுக்க own on the spot speech தான். இருவரும் என்ன பண்ணப் போறீங்கன்னு உலகமே பார்க்கும்)
#TVKVijay
#udhayanithistalin #👨மோடி அரசாங்கம்
குடும்ப பொறுப்புகளை கடமைகளை விட்டு ஒரு வித மத மன நோய் பிடித்து மனிதர்கள் தெருவில் அலைவதை இப்பொழுது நிறைய பார்க்க முடிகிறது..வாழ்க தமிழ் வெல்க தமிழ்நாடுன்னு சொல்றவங்களை எல்லாம் தவறாக பார்க்கும் மன நோய்க்கு இப்போதைக்கு மருந்து இல்லை.. #👨மோடி அரசாங்கம்
மூன்று நாட்களாக என் மூளைக்குள் முடங்கிக்கிடந்த சமாச்சாரத்தை கொஞ்சம் இறக்கி வைத்து இளைப்பாறுவோம் வாருங்கள் உடன்பிறப்புகளே...!
சந்தர்ப்ப சூழ்நிலையால பல மனிதர்கள் கொஞ்சம் தடம் மாறி போவதை பார்த்து இருக்கிறோம்... அவர்களே மீண்டும் நல்வழிக்குத் திரும்பும் போது ஏற்றுக் கொள்வது மனித இயல்பு...
பாராளுமன்றத்தில் சங்கிகள் பப்பு என்று ராகுலை கேலி கிண்டல் செய்த போதெல்லாம், ராகுல் பப்பு இல்லை... இவர்தான் இந்தியா கூட்டணியின் பிரதம வேட்பாளர் என்று உரக்கச் சொன்ன முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினை இனிப்பு கொடுத்து கட்டித் தழுவியது எல்லாம் போலி நடிப்புதான் என்று அப்போது எங்களுக்கு புரியவில்லை.
புதிதாக ஒரு நடிகனின் சிநேகிதம் கிடைத்ததும், ஸ்டாலினின் முகம் பார்க்க அஞ்சி, இந்திய கூட்டணியில் இருந்தும் இல்லாதது போல் மறைந்து வாழ்ந்த மானங்கெட்ட ராகுலை ஒரு சராசரி மனிதனாக கூட இப்போது நம்மால் பார்க்க முடியவில்லை.
திமுகவை தீய சக்தி என்றும், அடுத்த முதல்வர் நான் தான் என்றும் நின்ற ஒரு நடிகனிடம் கள்ளத்தொடர்பு வைத்துக் கொண்டு இந்தியா கூட்டணியில் இருப்பது போல் வேஷம் போட்டு, கண்ட காங்கிரஸ் கபோதிகளை எல்லாம் திமுகவுக்கு எதிராக பேசவிட்டு, ஒரு நியமன எம்பியையும் - 28 எம் எல் ஏ சீட்டுகளையும் பெற்றுக்கொண்டு தேர்தல் பிரச்சாரத்திற்கே வராமல் நீ போட்ட வேஷத்தை பார்த்து அரசியல் வட்டாரமே கைகொட்டி சிரித்தது சிரித்தது...!
நீ தவெகவுடன் கள்ள உறவில் இருந்ததை அறிந்தும் அதை பொருட்படுத்தாமல், திமுக காரர்கள் இரவு பகல் பாராமல் மக்களை சந்தித்து ஐந்து இடங்களை வெற்றி பெற வைத்ததற்கு நன்றி கூட சொல்லாமல் ஐந்து எம்எல்ஏ-க்களையும தவெக என்ற குப்பைக் கூடையில் கொட்டிவிட்டு, நடிகனோடு கூட்டணி அமைத்துக் கொண்டாய்... அரசியலில் குறைந்தபட்ச நேர்மை கூட இல்லாமல் இப்படி துரோகியாகிப் போனாயே ஏன்...?
கூட்டணிப்பற்றி பேசும்போதே நாங்கள் தவெகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறோம் என்று சொல்லிவிட்டு மரியாதையோடு ஒதுங்கியிருக்கலாமே ஏன் அதை செய்யவில்லை நன்றிகெட்ட ராகுலே...?
திமுகவிடம் சொல்லிக் கொள்ளாமல் தவெக-வுடன் கூட்டணி வைக்க நினைப்பது காங்கிரஸின் உரிமை என்றால், திமுக கொடுத்த ஒரு எம்பி சீட்டையும் - ஐந்து எம்எல்ஏ-வையும் ராஜினாமா செய்துவிட்டு அல்லவா ஓடி இருக்க வேண்டும்...?
திமுக காரர்கள் காங்கிரஸ்காரர்கள் வெற்றி பெற உழைத்துக் கொண்டிருக்கும் போது... காங்கிரஸ்காரர்கள் விசில் வெற்றி பெற உழைத்துக் கொண்டிருந்தார்கள்.
தவெக பெருவாரியாக வெற்றி பெற்றவுடன், அதை பட்டாசு வெடித்துக் கொண்டாடிய பாவிகள் காங்கிரஸ் சங்கிகள்.
நன்றி கெட்ட காங்கிரசை அழிக்க இனி திமுக தேவையில்லை... பாஜக அதை கனகச்சிதமாக செய்துமுடிக்கும்.
நன்றிகெட்ட காங்கிரசை இனி நாடு பார்த்துக் கொள்ளும்.
எதிரிகளோடு எத்தனை காலம் வேண்டுமென்றாலும் போராடலாம்... துரோகி என்று தெரிந்த பிறகு நாம் தூரமாக நிற்பதே நல்லது...!
காங்கிரஸ் இல்லாமல் திமுக வெற்றி பெற முடியும்... ஆனால் திமுக இல்லாமல் காங்கிரசுக்கு வாழ்க்கையே இல்லை.
குட் பை ராகுல்.
-Rajan Kandhasamy. #👨மோடி அரசாங்கம்
#இத்தனைத்திட்டம் இருந்தும்
ஏன் மக்கள் மீண்டும் ஆட்சியைத் தரவில்லை?
சினிமா மோகம் இல்லை
என்று கூறிட முடியாதுதான்.
ஆனாலும்,
மக்களின் மனம் மாற ஏதோ ஒன்றல்ல, இதுபோல் ஏராளம் இருந்திருக்கிறது.
அவைகள் என்ன? என்ன? என ஆய்ந்து, அதிலிருந்து விடுபட்டு வரவேண்டும்.
இனி, புலம்பி பயனில்லை. #👨மோடி அரசாங்கம்
முதல் நாளே பயத்தில் விஜய்.
இந்த மைனாரிட்டி அரசு வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத பட்சத்தில் திமுக பக்கம் பழி போடுவதற்காக தமிழ்நாடு அரசுக்கு 10 லட்சம் கோடி கடன் என்று முன்பே பதிவு செய்கிறார்.
💠 15 finance commission பரிந்துரைப்படி மாநிலங்கள் தங்கள் GSDP இல் குறிப்பிட்ட சதவீதம் வரை கடன் வாங்கலாம்.
💠 மாநிலங்கள் சராசரியாக 30% வரை கடன் வாங்குகிறது.
💠 ஆட்சிப் பொறுப்பேற்ற 5 ஆண்டும் திமுக அரசு 30% சதவீதத்திற்கு குறைவாக கடன் வாங்கியுள்ளது.
💠 தமிழ்நாடு GSDP (35+ லட்சம் கோடி) யில் இந்தியாவிலேயே 2 வது இடத்தில் உள்ளது. (2025-2026 RE)
💠 பைனான்ஸ் கமிஷன் பரிந்துரையின்படி தமிழ்நாடு இன்னும் அதிகமாக கடன் வாங்க அனுமதி இருக்கிறது.
💠 மற்ற மாநிலங்களுடன் ஒப்பிட்டால் கடன் வாங்குவதில் தமிழ்நாடு 20 வது இடத்தில் உள்ளது.
#Tvk #DMK #ADMK #tamilnadupolitics #👨மோடி அரசாங்கம்












