saravanan.
ShareChat
click to see wallet page
@60258885saravanan
60258885saravanan
saravanan.
@60258885saravanan
ஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்
#sithar sivavaakkiyar. சிவவாக்கியர் அருளிய🌹...!* ▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️ *🙏சிவவாக்கியம்..!* ➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿ 💛💚💛💚💛💚💛💚💛💚💛💚💛💚 *நூல்: 213...!* அன்னைகர்ப்பத் தூமையி லவதரித்த சுக்கிலம் மின்னையே தரித்தும் பனித்துளிபோ லாகுமே உன்னிதொக் குளழலுந் தூமையுள்ளே யடங்கிடும் பின்னையே பிறப்பதும் தூமைகாணும் பித்தரே. *பொருள் விளக்கம்:* பித்தர்களே! தாயின் கர்ப்பத்தில் உள்ள தூமையில் சேர்ந்த சுக்கிலம் மின்னலைப் போன்ற ஒளியால் தரித்து பனித்துளி போலாகி உயிர் உண்டாகும். அவ்வுயிரே உடல் எடுத்து தாயின் வயிற்றுக்குள் உழன்று பத்து மாதம் தூமையின் உள்ளேயே அடங்கி இருக்கும். பின்னர் குழந்தையாகப் பிறக்கிறது. இப்படி நாம் பிறந்ததே தீட்டினால்தான் என்றும், அத்தூமையில்தான் ஈசன் இருக்கிறான் என்பதனையும் உணர்ந்து கொண்டு யாரையும் தீட்டு என்று ஒதுக்காதீர்கள். *🌷நமசிவய ௐ🌷* *சித்தர் சிவ வாக்கியர் மலரடிகளையும் - நம்பெருமான் (அப்பன்) திருவடிகளையும் போற்றி   வணங்குகின்றேன்....!!!!* *🙏சிவாய நம🙏* *🙏திருச்சிற்றம்பலம்🙏* *வளரும்...* 🟩🔻🟩🔻🟩🔻🟩🔻🟩🔻🟩🟩🔻🟩🔻🟩🔻🟩🔻🟩🔻🟩
sithar sivavaakkiyar. - ~ட19 உர10 e _0 o @7 0 6, சிவவாக்கியர்சித்தர் ~ட19 உர10 e _0 o @7 0 6, சிவவாக்கியர்சித்தர் - ShareChat
#nalaairam thiviya prabantham. திவ்ய பிரபந்தம்...!* 〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰 🔵🟠🔴🟤🟣🟢🟡🔵🟠🔴🟤🟣🟢🟡🔵 *ஸ்ரீ:* *ஸ்ரீமதே ராமாநுஜாய நம:* 〰〰〰〰〰〰〰〰〰〰〰〰 ❤️🧡💛💚💙💜🖤🤍🤎❤️🧡💛 *ஸ்ரீமத் வரவரமுநயே நம:* 〰〰〰〰〰〰〰〰〰〰〰〰 🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷 *பெரியாழ்வார் திருமொழி...!* 〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰 🌿🌷🌿🌷🌿🌷🌿🌷🌿🌷🌿 *பாசுரம்:152...!* வெண்ணெ யளைந்த குணுங்கும் விளையாடு புழுதியும் கொண்டு திண்ணெனெ இவ்விரா உன்னைத் தேய்த்துக் கிடக்கநான் ஒட்டேன் எண்ணெய்ப் புளிப்பழம் கொண்டுஇங்கு எத்தனை போதும் இருந்தேன் நண்ண லரிய பிரானே நாரணா நீராட வாராய் *விளக்க உரை:* ***- கண்ணபிரான் * தாரார்தடந்தோள்கள் உள்ளளவும் கைநீட்டி வெண்ணெயளைந்ததனால் உடம்பெல்லாம் அவ் வெண்ணெய்பட்டு மொச்சைநாற்றம் வீசும்.. அதனோடு விளையாடப் போனால் அதன்மேல் புழுதியும் படியும, இவ்விரண்டும் உடம்பிலிருந்தால் தினவுதின்னும்; அதற்காகக் கண்ணன் உடம்பைப் படுக்கையிலே தேய்ப்பானாம், இப்படி எல்லாம் வருந்துவதைப் பொறுக்கமாட்டாமல் நீராடவழைக்கின்றனளென்க, விளையாடுபுழுதி – வினைத்தொகை, விளையாடின புழுதியென விரிக்க, ‘உண்ட இளைப்பு’ என்றவிடத்துப் போல, விளையாடியதனால் தோன்றிய புழுதியென்க. புளிப்பழம் – எண்ணெயைப் போக்குவதாய்ப் புளிப்புச் சுவையுடையதாய் இருக்கின்ற ஒருவகைப் பழத்தைக் குறிக்குமென்பர், சீக்காயைக் காட்டு மென்பாருமுளர். எள் + நெய் = எண்ணெய். *🌹பாடல் என் :153 ஐ நாளை நாம் பார்க்கலாம்🌹* *🙏ஸ்ரீமன் நாராயணனிம்🙏* *🙏ஓம் நமோ🙏* *🙏நாராயணா🙏* *தொடரும்...* 🟧❤️🟧❤️🟧❤️🟧❤️🟧❤️🟧🟧❤️🟧❤️🟧❤️🟧❤️🟧❤️🟧
nalaairam thiviya prabantham. - ShareChat
#bakthi paravasam ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் வசந்த உற்சவம். 19.5.26
bakthi paravasam - ShareChat
#sithar sivavaakkiyar. #sithar sivavaakkiyar. சிவவாக்கியர் அருளிய🌹...!* ▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️ *🙏சிவவாக்கியம்..!* ➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿ 💛💚💛💚💛💚💛💚💛💚💛💚💛💚 *நூல்: 213...!* அன்னைகர்ப்பத் தூமையி லவதரித்த சுக்கிலம் மின்னையே தரித்தும் பனித்துளிபோ லாகுமே உன்னிதொக் குளழலுந் தூமையுள்ளே யடங்கிடும் பின்னையே பிறப்பதும் தூமைகாணும் பித்தரே. *பொருள் விளக்கம்:* பித்தர்களே! தாயின் கர்ப்பத்தில் உள்ள தூமையில் சேர்ந்த சுக்கிலம் மின்னலைப் போன்ற ஒளியால் தரித்து பனித்துளி போலாகி உயிர் உண்டாகும். அவ்வுயிரே உடல் எடுத்து தாயின் வயிற்றுக்குள் உழன்று பத்து மாதம் தூமையின் உள்ளேயே அடங்கி இருக்கும். பின்னர் குழந்தையாகப் பிறக்கிறது. இப்படி நாம் பிறந்ததே தீட்டினால்தான் என்றும், அத்தூமையில்தான் ஈசன் இருக்கிறான் என்பதனையும் உணர்ந்து கொண்டு யாரையும் தீட்டு என்று ஒதுக்காதீர்கள். *🌷நமசிவய ௐ🌷* *சித்தர் சிவ வாக்கியர் மலரடிகளையும் - நம்பெருமான் (அப்பன்) திருவடிகளையும் போற்றி   வணங்குகின்றேன்....!!!!* *🙏சிவாய நம🙏* *🙏திருச்சிற்றம்பலம்🙏* *வளரும்...* 🟩🔻🟩🔻🟩🔻🟩🔻🟩🔻🟩🟩🔻🟩🔻🟩🔻🟩🔻🟩🔻🟩
sithar sivavaakkiyar. - ~ட19 உர10 e _0 o @7 0 6, சிவவாக்கியர்சித்தர் ~ட19 உர10 e _0 o @7 0 6, சிவவாக்கியர்சித்தர் - ShareChat
#sithar sivavaakkiyar. சிவவாக்கியர் அருளிய🌹...!* ▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️ *🙏சிவவாக்கியம்..!* ➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿ 💛💚💛💚💛💚💛💚💛💚💛💚💛💚 *நூல்: 213...!* அன்னைகர்ப்பத் தூமையி லவதரித்த சுக்கிலம் மின்னையே தரித்தும் பனித்துளிபோ லாகுமே உன்னிதொக் குளழலுந் தூமையுள்ளே யடங்கிடும் பின்னையே பிறப்பதும் தூமைகாணும் பித்தரே. *பொருள் விளக்கம்:* பித்தர்களே! தாயின் கர்ப்பத்தில் உள்ள தூமையில் சேர்ந்த சுக்கிலம் மின்னலைப் போன்ற ஒளியால் தரித்து பனித்துளி போலாகி உயிர் உண்டாகும். அவ்வுயிரே உடல் எடுத்து தாயின் வயிற்றுக்குள் உழன்று பத்து மாதம் தூமையின் உள்ளேயே அடங்கி இருக்கும். பின்னர் குழந்தையாகப் பிறக்கிறது. இப்படி நாம் பிறந்ததே தீட்டினால்தான் என்றும், அத்தூமையில்தான் ஈசன் இருக்கிறான் என்பதனையும் உணர்ந்து கொண்டு யாரையும் தீட்டு என்று ஒதுக்காதீர்கள். *🌷நமசிவய ௐ🌷* *சித்தர் சிவ வாக்கியர் மலரடிகளையும் - நம்பெருமான் (அப்பன்) திருவடிகளையும் போற்றி   வணங்குகின்றேன்....!!!!* *🙏சிவாய நம🙏* *🙏திருச்சிற்றம்பலம்🙏* *வளரும்...* 🟩🔻🟩🔻🟩🔻🟩🔻🟩🔻🟩🟩🔻🟩🔻🟩🔻🟩🔻🟩🔻🟩
sithar sivavaakkiyar. - ~ட19 உர10 e _0 o @7 0 6, சிவவாக்கியர்சித்தர் ~ட19 உர10 e _0 o @7 0 6, சிவவாக்கியர்சித்தர் - ShareChat
*சின்னத்திரையில் இன்றைய சினிமா* (Enn iniya share shart nanbargalkkum thangal inimayaana kudumbathaarukkum irav vanakkam mukkiyamaaga thangal thaai thanathay avargalukkum irav vanakkam) #irav vanakkam
irav vanakkam - ShareChat
#bathil dollungo. அரசியல் சண்டையில கருப்பு படம் எப்படி இருக்குனு யாருமே சொல்ல ..* *அரசியல விட்டு எப்ப சகஜ நிலமைக்கு வரபோறீங்க*
bathil dollungo. - by Bala g reated / led  by Bala , 4 Bala ated by ಫ9 క్డీ created BALA VETTAYAN by Bala g reated / led  by Bala , 4 Bala ated by ಫ9 క్డీ created BALA VETTAYAN - ShareChat
#gopura tharisanam ஒரு கோபுர தரிசனம்:"* *காலை சூரிய உதயத்தில்...* *கோபுர தரிசனம் என்றும் கோடி புண்ணியம்||* *கோபுர தரிசனம் - பாவ விமோசனம்...* *இன்றைய கோபுர தரிசனம்.* *அருள்மிகு பால்வண்ணநாதர் திருக்கோயில்,* *மூலவர் : பால்வண்ணநாதர்.* *அம்மன்/தாயார் : வேதநாயகி.* *திருக்கழிப்பாலை-608002.* *சிவபுரி போஸ்ட்,* *அண்ணாமலை நகர்,* *சிதம்பரம் தாலுகா,* *கடலூர் மாவட்டம்.* *காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7.15 மணி வரை திறந்திருக்கும்.* *+91-98426 24580.* *╔•═•-⊰❉⊱•═•⊰❉❉⊱•═•⊰❉⊱═•╗* *★❀·.:::::::பகிர்வு::::::::.·❀★* *சோழ.அர.வானவரம்பன்* *Mobile No +918072055052* *╚•═•-⊰❉⊱•═•⊰❉❉⊱•═•⊰❉⊱═•╝* *!!♤♤♤♤♤♤♤ S.R.V.♤♤♤♤♤♤♤!!* *சிறப்பு : தைப்பூசம், நவராத்திரி, கார்த்திகை சோமவாரம், ஐப்பசி அன்னாபிஷேகம், மார்கழி திருவாதிரை.இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். குதிரையின் கால் குளம்பு பட்டு பிளந்து போன வெண்ணிற லிங்கத்திற்கு தான் இன்றும் பூஜை நடக்கிறது. லிங்கத்திற்கு பின்னால் சிவனும் பார்வதியும் திருமணக்கோலத்தில் உள்ளனர். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 4 வது தேவாரத்தலம் ஆகும்.* *கிழக்கு நோக்கிய 3 நிலை ராஜ கோபுரம். உள்பிரகார நுழைவு வாசலின் இருபுறமும் அதிகார நந்தியர் தமது துணைவியருடன் உள்ளனர். பிரகாரத்தில் விநாயகர், வள்ளி தெய்வானையுடன் சுப்ரமணியர், கஜலட்சுமி, விஷ்ணு, பிரம்மா, அகோர மூர்த்தி, முயலகன் மாறிய நிலையில் தெட்சிணாமூர்த்தி, கிராதமூர்த்தி, நாயன்மார்கள், சதுரா துர்க்கை, புவனேஸ்வரி ஆகியோர் உள்ளனர்.* *இத்தலம் முன்பு கொள்ளிட ஆற்றின் வடகரையில் கரைமேடு என்னுமிடத்தில் இருந்ததால், இத்தலத்திற்கு கழிப்பாலை என்ற பெயர் இருந்தது.* *கொள்ளிட ஆற்றின் வெள்ளப்பெருக்கால் கோயில் முழுவதும் சிதலமடைந்து விட்டது. எனவே தற்போது உள்ள இடத்தில் கோயில் கட்டி அதில் கழிப்பாலை இறைவனையும், இறைவியையும் பிரதிஷ்டை செய்துள்ளார்கள்.* *லிங்கத்திற்கு அபிஷேகம் செய்த பாலை அருந்தினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும், உஷ்ணம் சம்பந்தப்பட்ட நோய் விலகும் என்பது நம்பிக்கை.* *எல்லா செயல்களிலும் வெற்றிகிடைக்க இங்குள்ள விஜய விநாயகருக்கு சங்கடஹர சதுர்த்தியில் அபிஷேகம் செய்து வழிபடுவது சிறப்பு.* *இங்குள்ள பைரவர் காசியில் உள்ளது போல நாய் வாகனம் இல்லாமல், 27 மண்டை ஓட்டுடன், பூணூல் அணிந்து, சர்ப்பத்தை அரைஞானாக அணிந்து, ஜடாமுடி, சிங்கப்பல்லுடன் தனிக்கோயிலில் அருளுகிறார். காசியில் பைரவரை வடிவமைத்த சிற்பியே இங்குள்ள பைரவரையும் வடிவமைத்ததாக கூறப்படுகிறது.* *இத்தல பைரவரை வணங்கினால் காசி பைரவரை வணங்கிய பலன் கிடைக்கும் என புராணங்கள் கூறுகின்றன. எனவே இப்பகுதி மக்கள் இத்தலத்தை பைரவர் கோயில் என்றே அழைக்கின்றனர். தேய்பிறை அஷ்டமி இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.* *அகத்தியருக்கு காட்சி தந்த தலங்களில் இதுவும் ஒன்று வால்மீகி முனிவர் இங்கு வழிபாடு செய்துள்ளதாக புராணங்கள் கூறுகின்றன. அருணகிரிநாதர் இத்தல முருகன் மீது திருப்புகழ் பாடியுள்ளார்.* *இங்குள்ள நடராஜரின் சடைமுடி அள்ளிமுடிந்த கோலத்தில் உள்ளது. அருகில் சிவகாமியம்மன், தன் தோழிகளான விஜயா, சரஸ்வதியுடன் உள்ளது தனி சிறப்பாகும்.* *கபிலமுனிவர் ஒவ்வொரு சிவத்தலங்களாக தரிசித்து வரும் போது, வில்வ வனமாக இருந்த இப்பகுதியில் தங்கி சிவபூஜை செய்ய நினைத்தார். இப்பகுதியில் பசுக்கள் தானாக பால்சுரந்து வந்த காரணத்தினால் மணல் முழுவதும் வெண்ணிறமாக காட்சியளித்தது.* *முனிவர் இந்த வெண்ணிற மணலை எடுத்து லிங்கம் அமைத்து வழிபாடு செய்தார். ஒருமுறை அந்த வழியாக வந்த மன்னனது குதிரையின் கால் குளம்பு,மணல் லிங்கத்தின்மீது பட்டு லிங்கம் பிளந்து விடுகிறது.* *வருந்திய முனிவர் பிளவுபட்ட லிங்கத்தை எடுத்துவிட்டு வேறு லிங்கம் பிரதிஷ்டை செய்ய நினைத்த போது, இறைவன் பார்வதி சமேதராக காட்சி தந்து,"முனிவரே! பசுவின் பால் கலந்த வெண்ணிற மணலில் செய்த லிங்கம் பிளவு பட்டிருந்தாலும் அதை அப்படியே பிரதிஷ்டை செய்து விடுங்கள்.* *காமதேனுவே பசுவடிவில் இங்கு வந்து பால்சொறிந்துள்ளது. எனவே இந்த லிங்கத்தை வழிபடுபவர்கள் சகல செல்வங்களும் அடைவார்கள் என்றார்.* *இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். குதிரையின் கால் குளம்பு பட்டு பிளந்து போன வெண்ணிற லிங்கத்திற்கு தான் இன்றும் பூஜை நடக்கிறது. லிங்கத்திற்கு பின்னால் சிவனும் பார்வதியும் திருமணக்கோலத்தில் உள்ளனர்.* *இனிய காலை வணக்கம்.🙏💐* *🌹★★★அன்புடன்★★★🌹* *சோழ.அர.வானவரம்பன்*. *+918072055052* ⭐️⭐️⭐️⭐️⭐️⭐️⭐️⭐️⭐
gopura tharisanam - DINAMA COM DINAMA COM - ShareChat
#innraya SINTHANAY சிந்தனை.*.( 19..05.2026).. …………………………………………….............. *‘’ தேவைப்படாத பொருட்களை..’’* .................................................................... அண்மைக் காலங்களில் தொலைக்காட்சிகளின் விளம்பரங்கள் பல நடுத்தர வர்க்க மக்களைக் கூடத் தொற்று நோய் போல் தொற்றிக் கொண்டு, ஆடம்பர பொருள்களை வாங்கிக் குவிக்கச் செய்கிறது! அதிலும் வங்கிகள் தந்த (Credit Cards) கடன் அட்டைகளை வைத்துக் கொண்டு ஆடம்பரப் பொருள்களை வாங்குவது தேவையைக் கருதி அல்ல ஆசையைக் கருதி,தன் தகுதியை விளம்பரப்படுத்திக் கொள்ளும் வெளிச்ச வியாதிக்கு பலர் பலியாகி, கண்டபடி குறிக்கோள் இன்றிச் செலவு செய்வதைப் பார்க்கின்றோம்.. தேவையில்லாத நேரத்தில் தேவைப்படாத பொருட்களை வாங்குவதால், தேவைப்படும் போது அதை வாங்க முடியாமல் தள்ளப்படுகின்றார்கள்.. கையில் கிரிடிட் கார்டு இருந்தால் போதும் கடைகளில் இருக்கும் பொருட்கள் அனைத்தையும் வாங்கி வீட்டில் அடைத்து வைத்து விடுகிறார்கள். அதில் பாதிக்கு மேல் தேவையே இருக்காது. சும்மா இருக்கட்டுமே என்று வாங்கி வீட்டில் அடைத்து விட்டு, மாதக் கடைசியில் அவசர செலவுக்குக் கையில் காசில்லாமல் திண்டாடிக் கொண்டு இருப்பார்கள்.. ஆடம்பரத்திற்காக, கட்டாயமாக ஆன்லைனில் ஷாப்பிங் செய்வதை அனுபவிப்பதாலும் இது தங்களின் சுயமரியாதையை உயர்த்துவதாக நினைப்பதாலும், தங்களுக்குத் தேவையே இல்லாத, விருப்பம் அற்ற,பயன்படுத்த முடியாத பொருட்களை வாங்குவதற்கு ஆளாக்கப்படுகிறார்கள். அதனால் தான் ஆடம்பரக் காலணிகள், உடல் பராமரிப்புப் பொருட்கள் மற்றும் விலையுயர்ந்த எலக்ட்ரானிக் பொருட்கள் ஆகியவை, இவர்களுக்குத் தேவை இருக்கின்றதோ, இல்லையோ இவர்கள் வாங்கும் பட்டியலில் அடிக்கடி இடம் பெறுகின்றன கிரேக்க நாட்டின் தத்துவ மேதை சாக்ரடீஸ் ஒரு முறை ஏதென்ஸ் நகரின் அங்காடித் தெருக்களில் சுற்றிக் கொண்டே வந்தார்.நாலைந்து தெருக்களின் உள்ளே நுழைந்து கடைகளில் உள்ள பொருட்களை எல்லாம் கூர்ந்து கவனித்து கொண்டே வந்தாராம். மறுநாளும் அங்காடித் தெருவில் நுழைந்து கடைகளில் உள்ள பொருட்களைக் கூர்ந்து நோக்கிய வண்ணம் நடந்து சென்று விட்டார். இப்படியே ஒரு வாரமாக அங்காடித் தெருக்களில் சுற்றிப் பார்த்து விட்டுச் சென்று விடுவார். ஏழாம் நாள் சாக்ரடீஸ் அங்காடித் தெருவில் உலா வருவதைக் கண்ட ஒரு கடைக்காரர், "அய்யா நானும் கடந்த பல நாட்களாகப் பார்த்துக் கொண்டே வருகிறேன். கடைத்தெரு வழியே வருகிறீர்கள் , கடையில் உள்ள பொருட்களைப் பார்க்கிறீர்கள், ஆனால் இது நாள் வரையிலும் எந்தப் பொருளையும் வாங்கவே இல்லை! உங்களுக்கு எந்தப் பொருள் வேண்டும் என்றால் நான் அந்தப் பொருளை வரவழைத்துத் தருவேனே?" என்று கேட்டார். அதற்கு சாக்ரடீஸ்,- அய்யா கடைக்காரரே., இங்குள்ள பல கடைகளில் உள்ள பொருட்கள் எவையும் என் வீட்டில் இல்லை!. இந்தப் பொருட்கள் எவையும் இல்லாமல் என்னால் வாழ முடிகிறதே! என்று எண்ணிப் பார்த்து ஒவ்வொரு நாளும் மகிழ்கிறேன்", எனக் கூறினாராம். கடைக்காரர் வியந்து போய் விக்கித்து நின்று விட்டாராம்!வீண் செலவு செய்து தேவை அற்ற பொருள்களை வாங்கிக் குவிப்பதால் ஒருவனின் பொருளாதாரம் மட்டும் அழிவது இல்லை. மாறாக இப்படிப்பட்ட மக்கள் பல ஆயிரம் பேர்கள் இருந்தால் ஒரு நாட்டின் பொருளாதாரமும் பாதிக்கப்படும் *ஆம்.. நண்பர்களே.,* ஏதேனும் ஒரு பொருளை வாங்குவதற்கு முன்பு ஒரு முறைக்கு இருமுறை யோசனை செய்யுங்கள். தேவையற்ற பொருட்கள் உங்கள் பட்டியலில் இருந்தால் முதலில் அதை நீக்கி விடுங்கள்.. இன்று நீங்கள் தேவையற்ற ஒரு பொருளை வாங்கினால் நாளை தேவையான ஒரு பொருளை விற்க வேண்டிய சூழ்நிலை உங்களுக்கு வரலாம்...... ( ஆக்கம் உடுமலை சு.தண்டபானி.........)💐💐💐💐💐💐*
innraya SINTHANAY - உங்களுக்கு எது தேவையோ அந்த பொருளை மட்டுமே வாங்குங்கள்.உங்கள் ஆசைக்கு வாங்காதீர்கள். உங்களுக்கு எது தேவையோ அந்த பொருளை மட்டுமே வாங்குங்கள்.உங்கள் ஆசைக்கு வாங்காதீர்கள். - ShareChat