#thannambikkay thulirgal நீங்கள் உங்களுக்கே ஊக்கம் சொல்லிக் கொள்ளுங்கள், வேறு யாரையும் எதிர்பார்க்காதீர்கள் அப்போழுதுதான் வாழ்க்கையில் ஜெயிக்க முடியும்.*_
_உண்மையாக இருப்பவருக்கு ஊரே பகையாய் போய்விடும். பொய்யாய் நடிப்பவருக்கு அந்த ஊரே உறவாய் நிற்கும். இது தான் இன்றைய நிலை._
_*இங்கே நல்லதுக்கும் நல்லவர்களுக்கும் காலம் இருக்கிறதா என்பது தெரியவில்லை, ஆனால் நடிப்பவர்களுக்கும் நடிப்பிற்கும் நல்ல காலம் உள்ளது என புரிகிறது.*_
_சில மனிதர்களுக்கு தன்னால் முடிந்ததை பிறருக்கு உதவாவிட்டால் தூக்கம் வராது, சில மனிதர்களுக்கு தன்னால் முடிந்தவரை பிறருக்கு உபத்திரவம் தராவிட்டால் தூக்கம் வராது._
_*Victory comes from finding opportunities in problems.*_
#innraya SINTHANAY 🙏🏻 💐💐🌹
*இன்றைய சிந்தனை*
( 27.09.2025)
...........................................................
*‘’ஆர்வம் என்னும் உந்து சக்தி...!’’*
.................................................
உலகில் எவரலும் செய்ய முடியாது என்று கைவிட்ட செயல்களை சிலர் நிறைவேற்றிக் காட்டியது, அவர்கள் அந்த செயலின் மீது உள்ள தனியாத ''ஆர்வம்''தான்...
எடுத்த செயலில் ஒருவனிடம் ''ஆர்வம்'' இருந்து விட்டால், ஒவ்வொரு நாளும் அவனது குறிக்கோளை நெருங்கிக் கொண்டிருப்பான் என்பது திண்ணம்...
வாழ்வின் வெற்றி என்பது, ஒருவரின் செயலில் காட்டும் முயற்சி மட்டும் போதாது. அதன் மீது மிகுந்த ஆர்வத்தைப் பொறுத்தது...
பிரிட்டன் பிரதமர் பெஞ்சமின் டிஸ்ரெலி ஒரு நாவல் ஆசிரியரும் கூட. அவர் அறுபத்தேழு நாவல்களை எழுதியுள்ளார்...
ஒருமுறை செய்தியாளர்கள் அவரிடம்,’’ எழுத்தில் உங்களுக்கு இவ்வளவு ஆர்வம் எப்படி ஏற்பட்டது...? என்று வினவினார்கள்...
அதற்கு அவர் கூறியதாவது... '’எனக்கு படிப்பதில் மிகுந்த ஆர்வம் உண்டு. படிப்பதற்கு புத்தகம் ஏதும் கிடைக்காவிட்டால் அதற்காகாவே நானே நாவல் எழுதிப் படிக்க ஆரம்பித்து விடுவேன். அப்படியே எழுதி எழுதி எழுத்தாளராகி விட்டேன் என்றார் பெஞ்சமின் டிஸ்ரெலி...
குருதியில் உறுதியும், நெருப்பும் கொண்டு, சிந்தனை வேகமும் ஆர்வமுள்ள மனிதர்கள் தான் உலக ஓட்டத்திற்குக் காரணமாக இருக்கின்றார்கள்...
அரை மனமுள்ளவர்கள், குறிக்கோள் அற்றவர்கள் வாழ்க்கையென்னும் கடலிலே அடித்துச் செல்லப்பட்டு அவதிக்குள்ளாகிறார்கள்...
*ஆம் நண்பர்களே...!*
புவி அச்சிலிருந்து வெளியேறி வளிமண்டலம் செல்ல ஒரு ஏவூர்திக்கு அதிக 'உந்துசக்தி' தேவைப்படுகிறது, அதிக 'உந்துசக்தி' இருந்தால் மட்டுமே ஏவூர்தி தனது இலக்கை அடைய முடியும்...! (ஏவூர்தி- ராக்கெட்)*
அதுபோலத்தான்!, ஒரு செயலைத் தொடங்குகையில் நம் மனதிற்கு அபாரமான உந்துசக்தி தேவைப்படுகிறது , அது இல்லாமல் தான், நம்மில் பலரும் முதல் நிலையிலேயே இருந்து விடுகிறோம்...!!
அந்த ஆரம்ப உந்துசக்தி கிடைத்து, ஒரு செயலை நாம் தொடங்கி விட்டால்,எதிரே என்ன தடை வந்தாலும் நொறுக்குவதற்கு நம்மால் முடியும். எந்த செயலிலும் ஆர்வம் என்னும் உந்துசக்தி இருந்தால் வெற்றி உங்களைத் தேடி வரும்...!!!
-உடுமலை சு. தண்டபாணி✒️
🌹🌹🌹💐💐💐 🙏🏻 💐🌹🌹
AANMEEGA kathay.
https://www.instagram.com/reel/DPGCUa_kyC9/?igsh=NGx1OTJxenZnbDU1 #aanmeega kathay.
Bakthi valimuray.
https://www.instagram.com/reel/DPGCNkNk-C1/?igsh=bWFwMXBycTExNDR2 #bakthi valippaadu.
Ellaam avan seyal.
https://www.instagram.com/reel/DPF9uCwE7ig/?igsh=MzZ0c3U5ZjBkd3R6 #ellaam avan seyal.
Thirukkral.
https://www.instagram.com/reel/DPF9d2kE06F/?igsh=azJyNGd3b2lhancz #thirukkral
Sree venkateshwara.
https://www.instagram.com/reel/DPF9VQrk2WY/?igsh=aTdlaXQzMTJ2d3pw #sree venkateshwara.
Enn iniya share shart nanbargalkkum thangal inimayaana kudumbathaarukkum kaalay vanakkam mukkiyamaaga thangal thaai thanathay avargalukkum kaalay vanakkam. #kaalay vanakkam.
#innraya SINTHANAY 🙏🏻 💐💐🌹
*இன்றைய சிந்தனை*
( 26.09.2025 )
…………………………………………………........
*இவர்களுக்கு தோல்வி என்பதே கிடையாது...!*
.....................................................................................
மிருகத்திடம் மனிதன் கற்றுக் கொள்ள வேண்டியவை...!"
..........................................
சிங்கத்திடம் இருந்து ஒன்றையும்,
கொக்கிடம் இருந்து இரண்டையும்,
கழுதையிடம் இருந்து மூன்றையும்,
கோழியிடம் இருந்து நான்கையும்,
காக்கையிடம் இருந்து ஐந்தையும்,
நாயிடம் இருந்து ஆறினையும்,
நாம் கற்றுகு கொள்ள வேண்டும்...!
1. சிங்கம்
......................
சிங்கம் எந்த ஒரு செயலையும் உடனடியாகச் செய்யாது. நன்கு ஆலோசனை செய்த பின்பு முழு மனதுடன் உறுதியாகச் செயல்படும்...
2. கொக்கு
.......................
கொக்கு தன் இரையான மீன் வரும் வரை காத்து நிற்கும். அதுபோல் அறிவாளி ஒரு செயலை செய்வதற்கு முன் காலம், இடம், தன் ஆற்றல் கூடும் வரை காத்திருந்து செய்வார்கள்...
3. கழுதை
......................
கழுதையானது களைப்புற்றாலும் தன் வேலையைத் தொடர்ந்து செய்யும்..வெயில், மழை என்று பாராமல் உழைக்கும்..
தன் முதலாளிக்கு எப்போதும் கட்டுப்பட்டிருக்கும் . ஆகிய மூன்றும் கழுதையிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டியவை...
4. சேவல்
.....................
சேவல் நாம் படுக்கையில் இருந்து எழும் முன்பே அதிகாலையிலேயே எழும். மற்ற மிருகங்களிடம் தன் குஞ்சுகளைக் காக்க துணிவாக சண்டையிடும்....
தன் குஞ்சுகளுக்குத் தேவையானவற்றை சேகரித்துப் பிரித்துக் கொடுக்கும்...
தனக்குத் தேவையானவற்றை தானே உழைத்துத் தேடிக் கொள்ளும்...
இந்த நான்கும் சேவலிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியவை...
5. காகம்
...................
இரவில் தன் குடும்பத்துடன் சேர்ந்திருக்கும். தேவையான பொருள்களை முன் கூட்டியே சேமித்து வைக்கும். யாரையும் எளிதில் நம்பாது, துணிவு, எச்சரிக்கை உணர்வு ஆகிய ஐந்தும் காக்கை யிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியவை...
6. நாய்
.................
நாய் கிடைப்பதை உண்டு மனநிறைவு கொள்ளும். உணவு கிடைக்காத நேரத்தில் பட்டினியாக இருக்கும். நன்றாகப் பசி இருந்தும் கட்டளை வரும் வரை காத்து இருக்கும்...
நல்ல உறக்கத்தில் இருந்தாலும் சிறிய சலசலப்புக் கேட்டாலும் உடனடியாக எழுந்து விடும். தன் முதலாளிக்கு இறுதிவரை விசுவாசமாக இருக்கும்...
தன்னை விடவும் உருவத்தில் பெரிய மிருகமாக இருந்தாலும் துணிவுடன் எதிர்க்கும்...
இந்த ஆறு குணங்களை நாயிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும்...
எவரொருவர் மேலே கூறப்படும் இந்த ஆறு வழிமுறைகளைக் கடைபிடிக்கிறாரோ, அவர் எதிலும் வெற்றியடைவார். எடுத்த செயல்கள் அனைத்திலும் வெற்றியும் பெறுவார்...!
*ஆம் நண்பர்களே...!*
''அன்பு, பாசம், பணிவு, நன்றி, பொறுமை, சுறுசுறுப்பு, கடும் உழைப்பு, ஈகை குணம், மன உறுதி, ஆரோக்கியம், இருப்பதில் மனநிறைவு, இவைகள் ஒருசார பெற்றிருப்பவர்கள் வாழ்வில் எப்போதும் சாதனை படைப்பார்கள்...!
-உடுமலை சு. தண்டபாணி✒️
🌹🌹🌹💐💐💐 🙏🏻 💐💐💐🌹