பக்தர்களுக்காக விரதம் இருக்கும் சமயபுரம் மாரியம்மன்
பொதுவாக பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேற அம்மனுக்கு விரதம் இருப்பார்கள் ஆனால் தன் பிள்ளைகளாகிய பக்தர்களின் அருகனுக்காக அகிலாண்டகோடி பிரம்மாண்டநாயகி சமயபுரம் மாரியம்மன் விரதம் இருக்கும் அதிசய நிகழ்வு
மாசி மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை சமயபுரத்தில் மிக விசேஷமானது அன்றுதான் உலகப் புகழ்பெற்ற பூச்சொளிகள் விழா தொடங்குகிறது பலடன் கணக்குல ஆன நறுமண மலர்கள் அம்மன் மீது சொரியப்பட்டு மாரியம்மன் மலர் கோலத்தில் காட்சி அளிப்பாள் இந்த நறுமணத் திருவிழாவோடு அம்மனின் பச்சை பட்டினி விரதம் துவங்குகிறது
உலகத்தை காக்கும் அன்னை மாசி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை வரை 27 நாட்கள் விரதம் மேற்கொள்கிறாள் இந்த விரத காலத்தில் அன்னைக்கு அண்ணம் நிவேதனம் செய்யப்படுவதில்லை ஒருவேளை மட்டுமே அன்னைக்கு பானகங்கள் இளநீர் துள்ளு மாவு குளிர்ச்சி தரும் வெள்ளரிப்பிஞ்சு ஆகியவை மட்டுமே அன்னைக்கு சமர்ப்பிக்கப்படுகின்றன
அம்மா பட்டினியாக இருக்கும்போது பிள்ளைகள் மட்டும் உண்பார்களா ? அம்மன் விரதம் இருக்கும் அதே 27 நாட்களும் சமயபுரம் மக்களும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் மிகுந்த பக்தியுடன் விரதம் இருக்கிறார்கள். அம்மனின் திருமேனியில் ஏற்படும் உஷ்ணத்தை தணிக்கவே குளிர்ச்சியான பொருள்கள் படைக்கப்படுகின்றன இத்தலத்து அம்மன் சுயம்புவாக உருவானவர் இங்குள்ள மூலவர் திருமேனி மூலிகைகள் ஆனது என்பதால் அபிஷேகம் கிடையாது உற்சவருக்கு மட்டுமே அபிஷேகம் நடைபெறும்
சமயபுரத்தாளை வழிபடுவோம் நன்மைகளை அடைவோம் #ஆன்மீகம்
ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே தரிசனம்
தமிழ்நாட்டில் எத்தனையோ சிவா தலங்கள் இருந்தாலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரகோசமங்கை மிகவும் சிறப்புடையது இங்கு உள்ள நடராஜர் சிலையும் அதை சுற்றி நடக்கும் நிலைகளும் அறிவியலுக்கும் ஆன்மீகத்துக்கும் இடைப்பட்ட மிகப்பெரிய பெரும் மர்மம்
இங்குள்ள நடராஜர் சிலை சுமார் ஐந்தரை அடி உயரம் கொண்டது விலைமதிப்பற்ற தூய பச்சை மரகத கல்லால் ஆனது இவ்வளவு பெரிய மரகத சிலை வேறு எங்குமே காண முடியாது என்பது குறிப்பிடத்தக்கது
மரகத முறை மென்மையான கல் இது ஒலி ஒளி மற்றும் காற்று ஆகியவற்றின் அதிர்வுகளால் விரிசல் அடைய வாய்ப்பு உள்ளது இந்த சிலையை பாதுகாப்பதற்காகவே ஆண்டு முழுவதும் சந்தன காப்பு சாத்தப்பட்டிருக்கும் மேலதாளங்கள் கூட இந்த சிலைக்கு அருகில் இசைக்கக் கூடாது
ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் வரும் ஆருத்ரா தரிசனம் அன்று காலை படும் அன்று ஒரு நாள் மட்டுமே பச்சை நிற மரகதமேனியில் தரிசிக்க முடியும் அப்போது சிலையின் மீது சூரிய ஒளி படும்போது சிலை உயிருடன் இருப்பது போன்ற பிரமையை ஏற்படுத்தும் மிக நுணுக்கமாக கவனித்தால் சிலையின் உடலில் மனிதர்களுக்கு இருப்பது போன்ற நரம்புகள் தெரிவதை இன்றும் காணலாம் இதுதான் இந்த சிலையின் மிகப்பெரிய அதிசயம்
மரகத சிலையின் மீது அபிஷேகம் செய்யப்படும் போது அந்த புனித நீர் மற்றும் சந்தனம் பல்வேறு நோய்களை தீர்க்கும் மருந்தாகும் குறிப்பாக சிலையிலிருந்து எடுக்கப்படும் பழைய சந்தனம் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது
மண் தோன்றிய போது மங்கை தோன்றியது என்பது இக்கோயிலின் பழமை சொல்லும் வாசகம் அதாவது பூமி உருவான காலத்தில் இருந்தே இந்த தலம் இருப்பதாக நம்பப்படுகிறது ராவணன் ஈசனை வழிபட்டு வரங்களை பெற்றதாக புராணங்கள் கூறுகின்றன
அறிவியல் விதிகளையும் தாண்டி நம் முன்னோர்களின் சிற்பக்கலையும் ஆன்மீக ரகசியமே இந்த மரகத நடராஜர் சிலையில் ஒளிந்துள்ளது வாழ்நாளில் ஒருமுறையாவது காண வேண்டிய அற்புதமான தரிசனம் ஈசனை வழிபடுவோம் ஈசன் அருளை பெறுவோம் #ஆன்மீகம்
விழுப்புரம் அருகே பிரமாண்டமான தட்சிணாமூர்த்தி தலம் உள்ளது பொதுவாக சிவன் கோயில்களில் கருவறை சுவரில் சிறிய சிலையாக காட்சியளிக்கும் குரு பகவான் இங்கு 12 அடி உயரத்தில் கம்பீரமாக அருள் புரிகிறார் மாமல்லபுரம் சிற்பிகளால் செதுக்கப்பட்ட 12 அடி உயர தட்சிணாமூர்த்தி சிலை மெய்சிலிர்க்க வைக்கிறது
27 நட்சத்திரங்களை குறிக்கும் விதமாக இந்த கோயில் கருவறை கோபுரம் 27 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது பக்தர்கள் தங்கள் கைகளாலேயே குரு பகவானுக்கு பாலாபிஷேகம் செய்யலாம் இது எங்கும் கிடைக்காத ஒரு அரிய வாய்ப்பு
கோயிலின் வாசலில் நாகத்துடன் கூடிய அபூர்வ விநாயகரை தரிசிக்கலாம்
கல்வியில் மேன்மை அடைய திருமண தடை நீங்கி நல்லவரன் கிடைக்க உத்திர பாக்கியம் ஏற்பட வேலை வாய்ப்புகள் கிடைக்க ராகு கேது மற்றும் நாக தோஷம் உள்ளவர்கள் மனதை ஒருநிலைப்படுத்தி நம்பிக்கை வெளிப்பட நன்மைகள் உண்டாகும்
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் வட்டம் பையூர்கிராமம்
இது தென்பெண்ணை ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ளது
விழுப்புரம் அல்லது திருக்கோவிலூர் நகரப் பேருந்து மூலமாக பையுரை அடையலாம்
திருவெண்ணெய் நல்லூரில் இருந்தும் எளிதாக செல்லலாம் #ஆன்மீகம்






