பொதுவாக முருகன் இளமை துடிப்புடன் காட்சி தருவார் ஆனால் இத்தலத்தில் அருணகிரிநாதருக்கு முருகப்பெருமான் முதியோர் கோலத்தில் நடன காட்சி கொடுத்ததாக புராணங்கள் கூறுகின்றன
முருகன் சன்னதி என்றாலே எதிரே மயில் வாகனம் இருக்கும் ஆனால் இங்கே ஒரு மாற்றமாக முருகனுக்கு எதிரே யானை வாகனம் அமைந்துள்ளது இந்த யானையை முருகன் சன்னதி மகேஸ்வரி உள்ள 18 துவாரங்கள் கொண்ட ஜன்னல் வழியாக மட்டுமே தரிசிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது
சூரபத்மனை வதம் செய்ததால் ஏற்பட்ட தோஷத்தை நீக்கிக்கொள்ள முருகப்பெருமான் இங்கே இரண்டு சிவலிங்கங்களை பிரதிஷ்டை செய்து வைக்கப்பட்டுள்ளார் அவை சொக்கலிங்கம் ராமலிங்கம் என்று அழைக்கப்படுகின்றன
இந்த இரண்டு லிங்கங்களுக்கு நடுவில் முருகப்பெருமான் பாலருபத்தில் காட்சி தருகிறார் தந்தையாகிய சிவன் இருபுறம் இருந்து மகனை பாதூகாப்பதை குறிப்பதாக இந்த அமைப்பு சொல்லப்படுகிறது
இங்குள்ள பைரவருக்கு சித்திரை திருவிழாவின் போது பக்தர்கள் பால்குடம் எடுத்து வழிபடுகிறார்கள் முருகனைப் போலவே பைரவரும் சிவனிலிருந்து தோன்றியவர் என்பதால் இங்கு இந்த வழிபாடு நடைபெறுகிறது
பயமுள்ளவர்கள் பைரவருக்கு சாம்பார் சாதம் படைத்து வடமாலை சாத்தி வேண்டிக்கொண்டால் நன்மைகள் கிட்டும்
இக்கோவிலில் உள்ள குஷ்டவிலக்கி சுனை மிகவும் பிரசித்தி பெற்றது நீண்ட நாள் உள்ள வியாதிகள் மற்றும் தோல் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த தீர்த்தத்தில் நீராடி இறைவனை வழிபட்டால் நோய் நீங்கும் என்பது நம்பிக்கையான ஐதிகம்
முருகனை வழிபடுவோம் நன்மைகளை அடைவோம் #ஆன்மீகம்
தீராத நோய்களை தீர்க்கும் வைத்திய வீரராகவர் திருக்கோயில் திருவள்ளூரில் அருள்பாலிக்கும் அருள்மிகு வீரராகவ பெருமாள்
108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும்
இத்தலத்து பெருமாள் நோய்களை தீர்க்கும் மருத்துவராக போற்றப்படுகிறார் தொடர்ந்து மூணு அமாவாசைகள் இங்கு வந்து வேண்டிக் கொண்டால் தீராத வயிற்று வலி கை கால் உபாதைகள் நீங்கும் என்பது ஐதீகம்
உடலில் தேவையற்ற மருக்கள் கட்டிகள் இருப்பவர்கள் அவை மறைய வேண்டும் என்று வேண்டிக் கொண்டு பிரகாரத்தில் உப்பு மற்றும் மிளகை சமர்ப்பிக்கிறார்கள் உப்பு கரைவது போல் நோய்களும் கரைந்து விடும் என்பது ஐதீகம்
மூலவர் வீரராகவ பெருமாளுக்கு தண்ணீர் அல்லது பாலில் அபிஷேகம் கிடையாது சந்தன தைலம் மட்டுமே அபிஷேகம் ஆக நடைபெறுகிறது
இக்கோயிலில் ஹிருதாபதனி தீர்த்தம் கங்கையை விட புனிதமாக கருதப்படுகிறது இதில் குளித்தால் மனக்கவலைகள் நீங்கும் என்பது ஐதீகம்
பெருமாளுக்கு விசேஷமான கம்பளி அங்கு காணிக்கை இங்கே பிரபலம்
சென்னையில் இருந்து சுமார் 45 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது காலை ஆறு மணி முதல் 12 மணி வரை மாலை நாலு மணி முதல் 8 மணி வரை அமாவாசை நாட்களில் நாள் முழுவதும் நடை திறந்திருக்கும்
இந்த வைத்திய வீரராகவ பெருமாள் வழிபாடு சிறப்பாகும் #ஆன்மீகம்








