திருமங்கலக்குடி ஏன் இந்த தளம் விசேஷம் உடையது
ஊர் திருமங்கலக்குடி
அம்பாள் மங்களநாயகி
விநாயகர் மங்களவிநாயகர்
தீர்த்தம்
மங்கள தீர்த்தம்
விமானம்
மங்கள விமானம்
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு சோழ மன்னனின் அமைச்சராக இருந்த அலைவாணர் என்பவர்
இறைபணியில் கொண்ட ஈடுபாட்டால் மன்னனுக்கு தெரியாமல் அரசு பணத்தைக் கொண்டு கோயிலை கட்டினார் இதை அறிந்த மன்னன் அவருக்கு மரண தண்டனை விதித்தான்
மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன்பாக அமைச்சர் என் உடல் திருமங்கலக்குடி எல்லையிலேயே அடக்கம் செய்யப்பட வேண்டும் என்று வேண்டினான் அதன்படியே அவரது உடல் அங்கு கொண்டு வரப்பட்ட போது அமைச்சரின் மனைவி மங்களாம்பிகையின் பாதத்தில் விழுந்து தாயே என் மாங்கல்யத்தை காத்து தா என உருக்கமாக வேண்டினாள் அம்மன் மனம் இறங்கினாள் இறந்த அமைச்சர் மீண்டும் உயிர்பெற்று எழுந்தார் மாங்கல்யத்தை அம்மன் மீட்டுக் கொடுத்ததால் இங்கு அன்னை மங்களாம்பிகை என்று அழைக்கப்படுகிறாள்
பெண்களின் நம்பிக்கை இந்தக் கோயிலில் மிகப்பெரிய அதிசயம் இங்கு வழங்கப்படும் பிரசாதமே தாலி தான்
இங்கு வந்து அம்மனுக்கு மக்கள் நாண் அதாவது தாலி சரடு சாற்றி வழிபாடு செய்கிறார்கள் பின்னர் அம்மன் பாலத்தில் வைத்து பூஜை செய்த அந்த தாலி சரடு பெண்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது இதனை அணிந்து கொள்ளும் பெண்களுக்கு விரைவில் திருமணம் கூடி வரும் என்பது ஐதீகம் மேலும் கணவருக்கு நீண்ட ஆயுளும் கிடைக்கும் என்பது நம்பிக்கை இக்கோயிலில் நவகிரகங்கள் கிடையாது பிரம்ம சாபம் பெற்ற நவக்கிரகங்கள் இங்கே ஈசனை நோக்கி தவம் செய்தன அந்த தவத்திற்கு மகிழ்ந்த ஈசன் அவர்களுக்கு காட்சி கொடுத்து நவக்கிரகங்களின் சாபத்திலிருந்து விமர்சனம் அளித்தார் மேலும் இந்தக் கோயிலுக்கு வந்த பிறகுதான் அருகில் உள்ள சூரியனார் கோயிலுக்கு செல்ல வேண்டும் சூரியனார் கோவிலில் நவக்கிரங்களுக்கு தனித்தனி சன்னதி உண்டு
மேலும் ஞாயிற்றுக்கிழமையில் தயிர் சாதம் நெய்வேத்தியம் செய்து ஈசனை வழிபட்டு எரித்த இலையில் தரும் தயிர் சாதத்தை அங்கேயே சாப்பிடுவது தோல் சம்பந்தப்பட்ட வியாதி நீங்கும் என்பது ஐதீகம்
கும்பகோணத்தில் இருந்து கஞ்சனூர் செல்லும் பாதையில் திருமங்கலக்குடி அமைந்துள்ளது #பக்தி
தமிழகத்தின் புண்ணிய நதியான தாமிரபரணியின் கரையில் அமைந்துள்ள நவகைலாய தலங்களில் பல அதிசயங்களை கொண்ட தலம் முறப்பநாடு அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் ஆகும்
நவகைலாய தல வரிசையில் ஐந்தாவது தலமாகும் நவகிரகங்களில் குரு பகவானுக்குரிய தலமாகவும் போற்றப்படுகிறது நவகைலாய தலங்களின் மையப் பகுதியில் அமைந்திருப்பதால் இதனை நடு கைலாயம் என்றும் அழைக்கிறார்கள்
பொதுவாக நந்தி பகவான் காளை உருவில் இருப்பார் இந்த சுவாமிக்கு எதிரே நந்தி குதிரை முகத்துடன் காட்சி அளிப்பது உலகிலேயே எங்கும் காண முடியாத அதிசயம்
சோழ மன்னனின் மகளுக்கு பிறவியிலேயே குதிரை முகம் இருந்தது அவ்வளவு இப்ப பாவத்தை போக்க அவளது குதிரை முகத்தை தான் ஏற்றுக் கொண்டதாக புராணங்கள் கூறுகின்றன பிறருக்காக தன் உருவத்தை மாற்றிக் கொண்ட நந்தியின் கருணை வியப்புக்குரியது
சன்னதி முன்புறம் துவாரகபாலகர்களுக்கு பதிலாக இரண்டு விநாயகர்கள் காவல் தெய்வங்களாக இருக்கிறார்கள்
இங்குள்ள பைரவ சன்னதியில் இரண்டு பைவர்கள் அருள் பாலிக்கின்றனர் நாய் வாகனத்துடன் இருக்கும் பைரவர் கால பைரவர்
வாகனம் இன்றி இருக்கும் பைரவர் வீர பைரவர்
கையில் பணம் தங்கவில்லை என்பவர்கள் பொருளாதார சிக்கலில் இருப்பவர்கள் இங்கு வந்து கைலாசநாதருக்கு மஞ்சள் வஸ்திரம் சாந்தி கொண்டக்கடலை நெய்வேத்தியம் படைத்து வழிபட்டால் தரித்திரம் விலகி செல்வ செழிப்பு ஏற்படும் என்பது ஐதீகம்
அசுரர்களின் கொடுமை தாங்க முடியாமல் முனிவர்கள் இறைவனிடம் வந்து முறையிட்டதால் இந்த இடம் அதாவது இந்த ஊர் முறப்பநாடு
என்று பெயர் பெற்றது கல்வியில் சிறந்து விளங்க திருமண தடை அகல குழந்தை பாக்கியம் கிடைக்க இத்தல வழிபாடு நன்மைகளை ஏற்படுத்தும்
தாமிரபரணி ஆற்றின் மேற்கு கரையில் அமைந்துள்ள இந்த கோயிலுக்கு சென்று வழிபடுவது நன்மைகளை ஏற்படுத்தும் #பக்தி








