முருகனுக்கு சுருட்டு நெய் வைத்தியம் விராலிமலை சண்முகர் கோயில்
தமிழகத்தில் எத்தனையோ முருகன் கோயில்கள் இருந்தாலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விராலிமலை சண்முக கோவில் விசித்திரமானது இங்கே சாயரட்ஷையின் போது சுருட்டு நைய்வேத்தியமாக படைக்கப்படுகிறது பல ஆண்டுகளுக்கு முன்பு விராலிமலை கோயில் திருப்பனையில் கருப்பமுத்து என்ற தீவிர பக்தர் ஈடுபட்டு வந்தார் ஒருமுறை இப்பகுதியில் பலத்த காற்று மறையும் பெய்து கொண்டிருந்தபோது கர்ப்பமுத்து ஆற்றை கடந்து செல்ல வேண்டியிருந்தது ஆனால் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் அவரால் ஆற்றே கடக்க முடியவில்லை மழையிலும் குளிரும் நடுங்கியபடி நின்றிருந்த அவர் முருகனை பிரார்த்தனை செய்துகொண்டே குளிரை தாங்குவதற்காக தன்னிடம் இருந்த ஒரு சுருட்டை பற்ற வைத்தார் அப்போது அவர் அருகே ஒரு முதியவர் நெருங்கிய படி வந்து நின்றார் அவர் மீது இறக்கப்பட்ட கருப்பமுத்து தன்னிடமிருந்த மற்ற சுருட்டை எடுத்து உங்களிடம் கொடுத்து உங்களுக்கும் சுருட்டு வேண்டுமா என்று கேட்டார் அந்த முதியவரும் சுருட்டை வாங்கிக் கொண்டால் பின்னர் அந்த நபரே கருப்பம்பூத்துக்கு பாதுகாப்பாக ஆற்றைக் கடக்க உதவி செய்தார் கரையை சேர்ந்தவுடன் அந்த நபர் திடீரென காணாமல் போய்விட்டார் இதனைத் தொடர்ந்து கருப்ப முத்து கோயிலுக்கு சென்று முருகனை தரிசித்த போது அங்கு ஒரு பெரும் அதிசயம் காத்திருந்தது தான் அந்த முதியவருக்கு கொடுத்த அதே சுருட்டு முருகன் கருவறையில் முருகன் சிலையின் முன்னாலா இருப்பதைக் கண்டு முத்து அதிர்ச்சி அடைந்தார் மற்ற பக்தர்களும் இதை கண்டு வியந்தனர் முதியவராக வந்து உதவி செய்தது முருகப்பெருமானே என்பதை அனைவரும் உணர்ந்தனர் இந்த நிகழ்வின் காரணமாக அன்று முதல் மாலை வேளையில் முருகனுக்கு சுருட்டு நைய்வேத்தியம் வைத்தியம் படைக்கும் பழக்கம் உருவானது இடைக்காலத்தில் புதுக்கோட்டை மகாராஜா இறைவனுக்கு சுருட்டு படைப்பது முறையில்லை என்று அந்த பழக்கத்திற்கு தடை விதித்தார் அன்று இரவில் மன்னர் கனவில் முருகன் தோன்றி எனக்கு சுருட்டு படைப்பது என்பது முக்கியம் தருவதற்கு அல்ல துன்பப்படும் ஒருவனுக்கு ஏதோ ஒரு வகையில் உதவி செய்ய வேண்டும் என்று எண்ணிய என் பக்தரின் உயர்ந்த மனப்பான்மையை மதிப்பிற்காகவே நான் அதை ஏற்றுக் கொண்டேன் அந்த சுருட்டு தகுதியற்றதாக தோன்றினாலும் அன்பிற்காகவே அதை ஏற்றுக் கொண்டேன் இந்த பழக்கம் தொடரட்டும் தடை செய்யாதே என்று முருகன் கூறினார் இதன் பின்னர் மன்னர் தடையை விலக்கிக் கொண்டார் இன்றும் இக்கோயிலில் சுருட்டு பிரசாதமாக வழங்கப்படுகிறது இறைவனுக்கு நாம் என்ன கொடுக்கிறோம் என்பதை விட எவ்வளவு அன்புடன் கருணையுடன் கொடுக்கிறோம் என்பதை இத்தலம் உணர்த்துகிறது
காலை ஆறு மணி முதல் 11 மணி 30 நிமிடம் வரை மாலை 5 மணி முதல் 8 மணி வரை நடை திறந்திருக்கும் #பக்தி
செல்வமும் செல்வாக்கும் தரும் குபேர தலம்
மதுரை
திருவாப்புடையார்
""""""""""""""""""""""""""""'""""''''''''""""''""""""""""""""""'
செல்வத்தின் அதிபதியான குபேரன் அந்த பதவியை பெற காரணமான தலம் மதுரை செல்லூரில் அமைந்துள்ள அருள்மிகு திருவாப்புடையார் திருக்கோயில் ஆகும்
பிரம்மதேவனின் குலத்தில்வந்த புண்ணிய சேனன் சிவ பக்தன் அழியாத செல்வத்தை பெற விரும்பேன் அகத்திய முனிவரின் ஆலோசனைப்படி இத்தலத்தில் கடும் தவம் புரிந்தார் அவரது பக்தியால் மகிழ்ந்த சிவன் அவருக்கு குபேரன் என்ற அந்தஸ்தையும் அழகாபுரியும் நகத்தையும் பரிசாக அளித்தார்
அதுமட்டுமின்றி உலகத்தின் ஒட்டுமொத்த செல்வங்களான சங்க நிதி மற்றும் பதுமை நிதி ஆகியவற்றை நிர்வகிக்கும் பொறுப்பை இத்தல இறைவன் குபேரனுக்கு வழங்கினார்
செல்வம் பெருக பணத்தடை நீங்க தொழிலில் லாபம் பெற வெள்ளிக்கிழமைகளில் இங்கு சிவனுக்கு அர்ச்சனை செய்வது விசேஷம் இங்கே ஒரு நெய் விளக்கு ஏற்றி வைத்தால் ஆயிரம் பசுக்களை தானம் செய்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்
வாழ்நாள் முழுவதும் வறுமை நீங்கி செல்வாக்கு வாழ்க விரும்புவோர் வழிபட வேண்டிய அருமையான தலம் ஆகும்
மதுரையில் இருக்கும் பஞ்சபூத தலங்களில் இது அப்பு தம்ம் ஆகும் அதாவது நீர் தலம் ஆகும்
ஒருமுறை இத்தலத்திற்கு சென்று திருவாப்புடையாரை வணங்கி சகல சம்பந்துக்ககளை பெறலாம் #பக்தி









