*ஈரான் போர் எதிரொலி இந்தியா முழுவதும் சமையல் கேஸ் சிலிண்டர் தட்டுபாடு கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் 5000 ஹோட்டல்கள் சமையல் கேஸ் இல்லாமல் மூடும் அபாய நிலை - சுமார் 35 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளதாக குமரி மாவட்ட ஹோட்டல்கள் சங்க தலைவர் ஷாஜகான் வேதனை தெரிவித்து உள்ளார்-மத்திய மாநில அரசுகள் மாற்று நடவடிக்கை எடுக்க கோரிக்கை.* #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் நலன் கருதி இரவு நேரங்களில் ஒலிபெருக்கிகள் பயன்படுத்துவதை தவிர்க்க பொதுமக்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் R.ஸ்டாலின் IPS அவர்கள் அறிவுறுத்தல்.
* தமிழகத்தில் தற்போது 12 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரசுப் பொதுத்தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. மாணவர்கள் அமைதியான முறையில் தேர்வுக்குத் தயாராவதற்கு ஏதுவான சூழலை உருவாக்குவது நம் அனைவரின் கடமையாகும்.
* எனவே, பொதுமக்களின் நலன் மற்றும் மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு, கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை பின்வரும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது:
நேரக் கட்டுப்பாடு:
* இரவு 10:00 மணி முதல் காலை 06:00 மணி வரை பொது இடங்களில் எந்தவிதமான ஒலிபெருக்கிகள் (Loud Speakers) அல்லது அதிக சத்தம் எழுப்பும் இசைக்கருவிகளைப் பயன்படுத்தக் கூடாது.
விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகள்:
* காலை 06:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை அனைத்து மதம் சார்ந்த விழாக்கள்; அரசியல் கூட்டங்கள், திருமண நிகழ்ச்சிகள் அல்லது தனியார் இல்ல விழாக்களில் நிர்ணயிக்கப்பட்ட 55 டெசிபல் ஒலி அளவைத் தாண்டி சத்தம் எழுப்பக் கூடாது. குறிப்பாக இரவு 10 மணிக்கு மேல் ஒலிபெருக்கிப் பயன்பாடு முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.
காவல்துறையின் எச்சரிக்கை:
* இந்த விதிகளை மீறி, மாணவர்களின் படிப்பிற்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயல்படுபவர்கள் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், அவர்களின் ஒலிபெருக்கிகள் பறிமுதல் செய்யப்படும்.
* பொதுமக்கள் மற்றும் விழா அமைப்பாளர்கள் இந்த தேர்வு காலத்தில் சமூக அக்கறையுடன் மாணவர்களுக்கு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
* இது குறித்து புகார் தெரிவிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் R.ஸ்டாலின் IPS அவர்களின் Feedback Centre 7708239100 மற்றும் 8122223319 என்ற Whatsapp எண்ணிற்கு நேரடியாக தொடர்பு கொள்ளலாம். #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே பொட்டலம் கட்டி கஞ்சா விற்பனை சென்ற பெயிண்டர் கைது #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் போக்குவரத்து காவல் நிலையத்தின் புதிய காவல் ஆய்வாளராக கணேஷ் ராம் இன்று(10.03.26) பொறுப்பேற்றுக் கொண்டார் #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே திரவியம் மருத்துவமனை முன்பு உள்ள சாலையில், திருநெல்வேலி இருந்து நாகர்கோவில் நோக்கி வந்த இண்டிகோ காரை, மீன் ஏற்றி வரும் ட்ரக் இடித்து விபத்து, அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இது குறித்து போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை! #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
கேரளாவில் இருந்து லோடு ஏற்றிக்கொண்டு வரும் வாகனங்கள் குமரி மாவட்டத்தில் அதிவேகத்தில் சாலைகளில் செல்வதால் தொடர் விபத்துக்கள் ஏற்படுகிறது,எனவே இதனை கட்டுப்படுத்த போக்குவரத்து போலீசார் கண்காணிக்க வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை! #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே வாலிபரை இரும்பு கம்பியால் தாக்கி தலைமறைவாக இருந்த ரவுடி கைது! #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
சிற்றாறு - 2 அணையின் அவலநிலை! நடவடிக்கை எடுக்கபடுமா?
கன்னியாகுமரி மாவட்டம் ஆலஞ்சோலை அருகே சிற்றாறு 2 அணை கடந்த பல வருடங்களாக பராமரிப்பு இன்றி முள் புதர் பிடித்து, சுகாதார மின்றி, குப்பைகள் நிறைந்து காணப்படுகிறது. அழகிய கண்களை கவரும் வண்ணம் அழகாக அமைந்திருந்த அணை தற்போது அழகு குன்றி காணப்படுகிறது. அதுபோல முள் புதர்களுக்குள் பாம்புகள் மற்றும் விஷ ஜந்துகளுக்கு உறைவிடமாக மாறியுள்ளது. மேலும் அணை திறக்கப்படாததால் சுற்றுலாவுக்கு வரும் பயணிகள் ஏமாற்றத்துடன் முள் புதர்களையும், குப்பைகளையும் கண்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே பொது பணி துறை அதிகாரிகள் புதர்களை மற்றும் குப்பைகளை அகற்றி அழகுப்படுத்த நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி பகுதியில் உள்ள (SBI)பாரத ஸ்டேட் வங்கியில் தற்காலிக நகை மதிப்பீட்டாளராக பணியாற்றிய வெட்டூர்ணிமடம் பகுதியைச் சேர்ந்த ரகுவரன்(36) என்பவர் வெவ்வேறு நபர்களின் பெயரில் கவரிங் நகைகளை அடகு வைத்து சுமார் 2 கோடி ரூபாய் மோசடி செய்தது வங்கி சுற்றறிக்கையில் கண்டுபிடிப்பு
இதனைத் தொடர்ந்து வங்கி மேலாளர் கொடுத்த புகாரின் பேரில் வடசேரி போலீசார் மோசடியில் ஈடுபட்ட நபரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் நகை மதிப்பீட்டாளருடன் இந்த மோசடி சம்பவத்தில் வேறு நபர்களுக்கு தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை. #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
*மண்டைக்காடு திருவிழாவில் காணாமல் போன 7 வயது சிறுவன் கண்டுபிடித்து பெற்றோரிடம் ஒப்படைத்த கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையினர்*
மார்ச் 08,
🟢கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் *டாக்டர்.R. ஸ்டாலின் IPS* அவர்கள் உத்தரவில் மண்டைக்காடு பகவதி அம்மன் திருவிழாவிற்க்கு வருகின்ற பக்தர்களுக்கு உதவிடும் நோக்கத்தில் May I Help You என்ற பெயரில் பல உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
🟣மணிக்கட்டி பொட்டல் குஞ்சன் விளையை சேர்ந்த வேலுச்சாமி என்பவருடைய 7 வயது மகன் மண்டைக்காடு திருவிழாவிற்கு குடும்பத்துடன் வந்திருந்த போது, கூட்ட நெரிசலில் திடீரென காணாமல் போன சிறுவன் விரைவில் காவல் துறையினர் கண்டுபிடிக்கப்பட்டு பாதுகாப்பாக அவரது பெற்றோருடன் ஒப்படைக்கப்பட்டார்.
🟤சிறுவனின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர்கள் காவல்துறையினருக்கு நன்றி தெரிவித்தனர். #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்













