
அன்புமணி ராமதாஸ்
@anbumani_ramadoss
Dr. அன்புமணி ராமதாஸ் அவர்களின் அதிகாரப்பூர்வ ஷேர்சாட் பக்கம்
சென்னையில் நடைபெற்ற, பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் முனைவர் சௌமியா அன்புமணி MLA அவர்களுடன் பங்கேற்ற போது.! ##PMK2.0
பாட்டாளி மக்கள் கட்சியின் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளரும், மேற்கு ஆரணி ஒன்றிய குழு துணை பெருந்தலைவருமான ஆ.வேலாயுதம் - சாந்தி தம்பதியரின் மகன் மற்றும் கோ.கதிரவன் - கலைவாணி தம்பதியரின் மகள், வே.சண்முகம் - க.மீனாட்சி இணையரின் திருமணத்தை தலைமையேற்று நடத்தி வைத்த போது.! ##PMK2.0
திரைப்படத் தயாரிப்பாளர் கே.இராஜன் மறைவுக்கு இரங்கல்.
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளரும், நடிகருமான கே.ராஜன் அவர்கள் காலமானார் என்ற செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
தமிழ்த் திரையுலகில் சிறிய முதலீட்டில் திரைப்படங்களை எடுக்கும் தயாரிப்பாளர்களின் உரிமைகளையும், நலன்களையும் பாதுகாக்கப் போராடியவர். பாட்டாளி மக்கள் கட்சி நடத்திய சமூகநீதிப் போராட்டங்களில் பங்கேற்று ஆதரவளித்தவர்.
தயாரிப்பாளர் இராஜன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். ##PMK2.0
ஊர்க்காவல் படையினருக்கு மாதம் 30 நாள் வேலை; காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்!
தமிழ்நாட்டில் ஊர்க்காவல் படையில் பணியாற்றி வரும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள், தங்களுக்கு மாதம் 10 நாள்களுக்கு பதிலாக 30 நாள்கள் வேலை வழங்க வேண்டும்; பணி நிலைப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை மீண்டும் எழுப்பியிருக்கிறார்கள். புதிய அரசின் வாயிலாக தங்களுக்கு நன்மை கிடைக்கும் என்று அவர்கள் நம்பும் வேளையில், அந்த நம்பிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும்.
தமிழ்நாட்டில் ஊர்க்காவல் படையினரின் சேவை புறக்கணிக்க முடியாதது; ஆனால், அவர்களின் நலன்கள் மட்டும் பல பத்தாண்டுகளாக புறக்கணிக்கப்பட்டே வருகின்றன. அவர்களின் ஊதியம் தொடர்பாக உச்சநீதிமன்றம் ஆணையிட்டு பத்தாண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில், ஆட்சிகள் மாறினாலும் அவர்களின் வாழ்வாதாரப் பாதுகாப்பற்ற நிலை மட்டும் மாறவில்லை என்பது தான் வேதனையான உண்மை.
காவல்துறையினருக்கு உதவும் வகையில், தமிழகத்தில் 1963&ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட ஊர்க்காவல் படையில் பணி செய்பவர்களுக்கு 2011&ஆம் ஆண்டு வரை ஒருநாள் ஊதியமாக ரூ.67 மட்டும் தான் வழங்கப்பட்டு வந்தது. அந்த ஆண்டில் அவர்களுக்கான ஊதியம் ரூ.152 ஆகவும் உயர்த்தப்பட்டது. ஆனாலும், மாத ஊதியம் 2800 ரூபாயைத் தாண்டாமல் அரசு பார்த்துக்கொண்டது. ஊதிய உயர்வு கோரி ஊர்க்காவல் படையினர் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அவர்களின் ஊதியத்தை நாள் ஒன்றுக்கு ரூ.560 ஆக உயர்த்தி ஆணையிட்டது. அதன்படியே அவர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை நாள் ஒன்றுக்கு ரூ.560 ஆக உயர்த்தி 2017&ஆம் ஆண்டில் ஆணையிட்ட அரசு, அவர்களின் பணி நாட்களின் எண்ணிக்கையை ஐந்து நாட்களாக குறைத்துவிட்டது. அதனால், அவர்களின் மாத ஊதியம் ரூ.2800&லிருந்து உயரவில்லை.
மாதத்திற்கு 5 நாள்கள் வேலை போதுமானதல்ல என்றும், பணி நாள்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என்றும் ஊர்க்காவல்படையினர் கோரிக்கை விடுத்தனர். அதன்படி, 2019&ஆம் ஆண்டில் அவர்களுக்கான பணி நாள்கள் எண்ணிக்கையை 10 ஆக உயர்த்தப்பட்டாலும், பணி நேரம் 4 மணி நேரமாகவும், ஊதியம் ரூ.280 ஆகவும் குறைக்கப்பட்டது. அதனால், பணிநாள்கள் அதிகரித்தாலும் ஊதியம் மட்டும் உயரவே இல்லை. கூடுதல் நாள்கள் அவர்கள் வேலை செய்தாலும் அதற்கு ஊதியம் வழங்கப்படவில்லை.
2021&ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த திமுக, ,‘‘காவல்துறையினருக்கு பல வகையிலும் உறுதுணையாக நிற்கும் ஊர்க்காவல் படையினரின் நலன் காக்கும் நோக்குடன் அவர்களின் பணி நாள்கள் உயர்த்தப்படும்; ஊர்க்காவல் படையினரின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரிக்கப்படும்’’ என்று வாக்குறுதி அளித்தது. ஆனால், ஐந்தாண்டுகள் ஆட்சி செய்தும் வாக்குறுதியை நிறைவேற்ற எந்த முயற்சியும் செய்யவில்லை.
அதிக நாள்கள் வேலை வழங்கும் விஷயத்தில் தங்களுக்கு இழைக்கப்படும் அநீதியை சுட்டிக்காட்டி ஊர்க் காவல் படையினர் மீண்டும் உச்சநீதிமன்றத்தை அணுகினார்கள். அந்த வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம், ஊர்க்காவல் படையினருக்கு மாதம் முழுவதும் பணி வழங்க வேண்டும்; மாத ஊதியமாக ரூ.16,800 என்று ஆணையிட்டது. உச்சநீதிமன்றத்தின் இந்த ஆணை ஆந்திரா, ஒதிஷா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் செயல்படுத்தப்படும் போதிலும், தமிழ்நாட்டில் மட்டும் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி, ஊர்க்காவல் படையினரின் பணி நாள்களையும், மாத ஊதியத்தையும் உயர்த்தி வழங்க வேண்டும் என்று முந்தைய திமுக ஆட்சியில் தமிழக அரசுக்கு ஊர்க்காவல் படைப்பிரிவு கூடுதல் தலைமை இயக்குனர் பரிந்துரைத்திருந்தார். ஆனால், அந்தப் பரிந்துரையையும் திமுக அரசு நிறைவேற்றவில்லை.
பணி நிலைப்பு, ஊதிய உயர்வு தொடர்பாக கடந்த 10 ஆண்டுகளாக ஊர்க்காவல் படையினர் ஏமாற்றப் பட்டு வரும் நிலையில், முதலமைச்சர் விஜய் அவர்கள் தலைமையில் அமைந்துள்ள புதிய அரசிலாவது தங்களுக்கு நன்மை கிடைக்கும் என எதிர்பார்க்கின்றனர். அதை நிறைவேற்ற வேண்டியது புதிய அரசின் கடமையும் கூட.
தமிழ்நாட்டில் சட்டம் & ஒழுங்கை பாதுகாப்பதில் கிட்டத்தட்ட காவல்துறையினருக்கு இணையாக ஊர்க்காவல் படையினருக்கும் பங்கு இருக்கிறது. திருவிழாக்கள், போராட்டங்கள், வன்முறைகள் மற்றும் எதிர்பாராத வகையில் ஏற்படும் நெருக்கடியான சூழல்களில் சட்டம் - ஒழுங்கை பாதுகாப்பதில் காவல்துறையினருக்கு உதவியாக இருப்பவர்கள் ஊர்க்காவல் படையினர் ஆவர். பெயரளவில் இந்த அமைப்பு காவல்துறைக்கு துணை அமைப்பு என்றாலும், கள அளவில் இவர்கள் காவல்துறைக்கு இணையாகவே செயல்பட்டு வருகின்றனர். காவல்துறையில் அதிகரித்துக்கொண்டே செல்லும் காலியிடங்கள், பெருகி வரும் காவல்பணி தேவைகள் ஆகியவற்றைக்கொண்டு பார்க்கும்போது ஊர்க்காவல் படையின் சேவை ஒவ்வொரு நாளும் தேவை. இது காவல்துறையின் அனைத்து நிலை அதிகாரிகளும் ஒப்புக்கொண்ட உண்மை.
இவை அனைத்திற்கும் மேலாக முதலமைச்சர் விஜய் அவர்கள் தலைமையிலான புதிய அரசு, தமிழகத்தில் போதை ஒழிப்பு, பெண்கள் பாதுகாப்பு ஆகியவற்றுக்கான புதிய முயற்சிகளைத் தொடங்கியிருக்கும் நிலையில், அவற்றுக்கும் ஊர்க்காவல் படையினரின் ஆதரவும், ஒத்துழைப்பும் தேவைப்படும். இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டும், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நிறைவேற்றும் வகையிலும் ஊர்க்காவல் படையினருக்கு காலமுறை ஊதியத்துடன் கூடிய பணி நிலைப்பு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ##PMK2.0
ஜஸ்டின் திரவியம் தந்தை மறைவுக்கு இரங்கல்.
திண்டுக்கல் மாவட்டம், அனுமந்த ராயன் கோட்டையைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் ச.ஜஸ்டின் திரவியம் அவர்களின் தந்தை ஆசிரியர் பூசாரி மை.சவரிமுத்து காலமானார் என்ற செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
பூசாரி மை.சவரிமுத்து அவர்களை இழந்து வாடும் ஜஸ்டின் திரவியம் உள்ளிட்ட குடும்பத்தினர், நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். ##PMK2.0
நெல் கொள்முதல் விலையை ரூ.72 மட்டும் அதிகரித்தது போதாது : குவிண்டாலுக்கு ரூ.3,500 ஆக உயர்த்தி வழங்க வேண்டும்!
இந்தியா முழுவதும் அரசு நிறுவனங்களால் கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கான கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ரூ.72 உயர்த்தி மத்திய அரசு ஆணையிட்டிருக்கிறது. இதன் மூலம் சாதாரண வகை நெல்லின் விலை ரூ.2441 ஆக உயரும். ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.3,500 கொள்முதல் விலை வழங்க வேண்டும் என உழவர்கள் வலியுறுத்தி வரும் நிலையில் இந்த உயர்வு போதுமானதல்ல.
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் சாதாரண வகை நெல்லின் கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ரூ.2,441 ஆகவும், சன்ன வகை நெல்லுக்கான விலையை ரூ.2,461 ஆகவும் உயர்த்துவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டில் இந்த இரு வகை நெல்களுக்கான கொள்முதல் விலை முறையே ரூ.2,369 ஆகவும், ரூ.2,389 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டிருந்த நிலையில், நடப்பாண்டில் குவிண்டாலுக்கு ரூ.72 மட்டும் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டின் விலையுடன் ஒப்பிடும் போது இந்த விலை உயர்வு வெறும் 3% மட்டும் தான். கடந்த ஆண்டில் நெல் கொள்முதல் விலையை 3%, அதாவது குவிண்டாலுக்கு ரூ.69 உயர்த்திய மத்திய அரசு, நடப்பாண்டும் அதே அளவிலேயே உயர்த்தியுள்ளது. நெல்லின் உற்பத்திச் செலவுடன் ஒப்பிடும் போது இது மிகவும் குறைவு.
நெல்லுக்கான உற்பத்திச் செலவுடன், எம்.எஸ்.சுவாமிநாதன் குழுவின் பரிந்துரைப்படி, 50% இலாபம் சேர்த்து கொள்முதல் விலை வழங்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டில் ஒரு குவிண்டால் நெல்லை உற்பத்தி செய்ய ரூ.2300&க்கும் கூடுதலாக செலவாவதாக உழவர்கள் தரப்பில் கூறப்படும் நிலையில், அதை விட குவிண்டாலுக்கு ரூ.141 மட்டும் உயர்த்தி வழங்குவது எந்த வகையில் நியாயம்? கிட்டத்தட்ட உற்பத்திச் செலவுக்கு இணையாகவே கொள்முதல் விலையும் நிர்ணயிக்கப்பட்டால் உழவர்களுக்கு லாபமே கிடைக்காது. வட்டிக்கு கடன் வாங்கி வேளாண்மை செய்யும் உழவர்கள், போதிய லாபம் கிடைக்காவிட்டால் மீள முடியாத கடன் சுமையில் சிக்கிக் கொள்வர். இது தவிர்க்கப்பட வேண்டும்.
நெல் கொள்முதல் விலை மிகவும் குறைவாக நிர்ணயிக்கப்பட்டிருப்பதற்கு காரணம், அதற்கான உற்பத்திச் செலவு முறையாக கணக்கிடப்படாதது தான். நெல்லுக்கான உற்பத்திச் செலவை கணக்கிடும் போது, நிலத்தை தயார் செய்தல், விதை மற்றும் நடவு, உரங்கள், நீர்ப்பாய்ச்சுதல், களை எடுத்தல், பயிர்ப்பாதுகாப்பு, அறுவடை செய்தல் ஆகிய செலவுகளுடன் நிலத்திற்கான குத்தகை மதிப்பு, பணியாளர்களுக்கான கூலி ஆகியவையும் கணக்கில் சேர்க்கப்பட வேண்டும். ஆனால், தொழிலாளர்கள் கூலி, குத்தகை உள்ளிட்ட பல செலவுகளை மத்திய அரசு கணக்கில் சேர்க்காதது தான் நெல் கொள்முதல் விலை மிகவும் குறைவாக நிர்ணயிக்கப்பட காரணம் ஆகும். இந்தக் குறைகளை களைந்து நெல்லுக்கான விலையை மத்திய அரசு உயர்த்த வேண்டும்.
மத்திய அரசால் நிர்ணயிக்கப்படும் நெல் கொள்முதல் விலை மிகவும் குறைவாக இருக்கும் போது, அதனால் உழவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை ஓரளவாவது சரி செய்வதற்காகத் தான் மாநில அரசுகளின் மூலம் ஊக்கத்தொகை வழங்கும் முறை நடைமுறையில் உள்ளது. ஆனால், கடந்த ஆட்சியின் ஐந்தாண்டு காலத்தில் கொள்முதல் விலைக்கான ஊக்கத்தொகை வெறும் ரூ. 51 மட்டுமே உயர்த்தப்பட்டது. அதனால் தான் நடப்பாண்டில் நெல் கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ.2500 என்ற அளவை தாண்டவில்லை.
விவசாயிகளுக்கு செய்த துரோகத்திற்காக திமுக அரசு வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், புதிதாக பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் விஜய் அவர்கள் தலைமையிலான புதிய அரசும் அதே துரோகத்தைத் தொடரக் கூடாது. ஒதிஷா அரசு ஒரு குவிண்டாலுக்கு ரூ.800, ஆந்திரம் மற்றும் தெலுங்கானா ரூ.500 வீதம் ஊக்கத்தொகை வழங்குகின்றன. அண்டை மாநிலமான கேரளத்தை ஆட்சி செய்த இடதுசாரி அரசு குவிண்டாலுக்கு ரூ.631 ஊக்கத்தொகை வழங்கியது. ஆனால், அதை ரூ.500 குறைவாகத் தான் முந்தைய திமுக அரசு வழங்கியது. உழவர்களுக்கு திருப்தியளிக்கும் வகையில் ஊக்கத்தொகை உயர்த்தப்பட வேண்டும்.
நெல் கொள்முதலுக்கான ஊக்கத்தொகையை உயர்த்தி வழங்குவதால், தமிழக அரசுக்கு பெரிய நிதிச்சுமை ஏற்படாது. தமிழ்நாட்டில் ஆண்டுக்கு சராசரியாக 40 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்படும் நிலையில், குவிண்டாலுக்கு ரூ.3,500 கொள்முதல் விலை வழங்க அரசின் சார்பில் ரூ.1059 ஊக்கத்தொகை வழங்க வேண்டும். அதற்காக அரசுக்கு ரூ.4,196 கோடி மட்டுமே செலவாகும். நடப்பாண்டில் குவிண்டாலுக்கு ரூ.131 வீதம் ஊக்கத்தொகை வழங்க ரூ.524 கோடி செலவிடப்பட்டுள்ளது. இந்தத் தொகை போக ஆண்டுக்கு ரூ.3,672 கோடி மட்டும் தான் கூடுதலாக செலவாகும்.
தமிழ்நாடு அரசின் சார்பில் ஆண்டுக்கு ரூ.4.50 லட்சம் கோடிக்கு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் நிலையில், இந்தத் தொகை ஒரு விழுக்காட்டுக்கும் குறைவு தான். எனவே, உழவர்களுக்கு ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.3,500 கொள்முதல் விலை கிடைக்க வசதியாக ஊக்கத்தொகையை ரூ.1,059 ஆக தமிழக அரசு உயர்த்தி வழங்க வேண்டும். ##PMK2.0
கோயம்பேடு பேருந்து நிலையத்தை வணிக மால் ஆக மாற்றக்கூடாது: 66 ஏக்கரில் பசுமைப் பூங்கா அமைக்க வேண்டும்!
சென்னை கோயம்பேட்டில் உள்ள புறநகர் பேருந்து நிலையத்தின் பயன்பாடு விரைவில் முடிவுக்கு வரவிருக்கும் நிலையில், பேருந்து நிலையம் அமைந்துள்ள 36 ஏக்கர் நிலத்தில் வணிக மால் அமைக்கலாம் என்பது உள்ளிட்ட 3 திட்டங்களை சி.எம்.டி.ஏ எனப்படும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் உருவாக்கி இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மால் அமைப்பது உள்ளிட்ட இரு திட்டங்கள் வணிக நோக்கம் கொண்டவை என்பதால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அத்திட்டங்களை அரசு ஏற்கக் கூடாது.
சென்னை கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டதைத் தொடர்ந்து, கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட்டு வந்த பெரும்பாலான பேருந்துகள் அங்கு மாற்றப்பட்டன. சென்னை குத்தம்பாக்கம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்ட பிறகு மீதமுள்ள பேருந்துகளும் அங்கு மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதன்பின் இப்போது கோயம்பேடு பேருந்து நிலையம் அமைந்திருக்கும் 36 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தில், 1. நகர்ப்புற பசுமைப் பூங்கா அமைக்கலாம், 2. வணிக வளாகங்கள், அலுவலங்கள், திரையரங்குகள், உணவகங்கள் மற்றும் பசுமைவெளி கொண்ட வளாகம் அமைக்கலாம், 3. பிரமாண்ட வணிக மால் அமைக்கலாம் என்பன உள்ளிட்ட 3 திட்டங்களை சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் தயாரித்து இருப்பதாகவும், விரைவில் அரசின் ஆய்வுக்காக அத்திட்டங்கள் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
முந்தைய திமுக ஆட்சியில் ஆளுங்கட்சிக்கு நெருக்கமாக இருந்த பன்னாட்டு நிறுவனத்திற்கு அந்த இடத்தை தாரை வார்க்கவும், அந்த இடத்தில் மிகப் பிரமாண்டமாக வணிக மால் அமைக்க அந்த நிறுவனத்திற்கு அனுமதி அளிக்கவும் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அதற்கு எதிராக பாட்டாளி மக்கள் கட்சி குரல் கொடுத்ததுடன், 10 லட்சம் பேரிடம் கையெழுத்து வாங்கும் இயக்கத்தையும், பரப்புரை இயக்கத்தையும் மேற்கொண்டது. அதன் பயனாகத் தான் கோயம்பேடு பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ள நிலத்தில் மால் மட்டும் தான் அமைக்கப்படும் என்ற நிலைப்பாட்டில் இருந்து மாறி பசுமைப் பூங்கா அமைப்பது உள்ளிட்ட மேலும் இரு திட்டங்களையும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் உருவாக்கியுள்ளது. ஆனாலும், பிரமாண்ட மால் அமைக்கும் யோசனையை இன்னும் வலியுறுத்துவது திமுக அரசின் சிந்தனை தான்.
எந்த வகையில் பார்த்தாலும் கோயம்பேடு பேருந்து நிலையம் அமைந்துள்ள இடத்தையும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளையும் சேர்த்து மொத்தம் 66 ஏக்கர் பரப்பளவில் பசுமைப்பூங்கா அமைப்பது தான் சரியான நடவடிக்கையாக இருக்கும். “சென்னையில் ஒரு தனி மனிதருக்கான பசுமை நிலப் பகுதி (Per capita green cover) 1.03 சதுர மீட்டராகவும் உள்ளது. மேலும் சென்னைப் பெருநகரின் பசுமை வெளியானது, வனப்பகுதி, பூங்காக்கள், விளையாட்டுத் திடல்கள், திறந்த வெளித்திடல்கள் என அனைத்தும் சேர்ந்து ஒட்டுமொத்தமாக சென்னையின் பரப்பில் வெறும் 6.7 விழுக்காடாகத் தான் உள்ளது” என்பதை முந்தைய அரசே ஒப்புக் கொண்டுள்ளது. இந்த நிலைமையை மாற்றவும், சென்னையின் தனிநபர் பசுமை நிலப்பகுதியை அதிகரிக்கவும் கோயம்பேட்டில் பசுமைப் பூங்கா அமைப்பது மிகச்சிறந்த வாய்ப்பு ஆகும்.
நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், இருதய நோய்கள், அதீத உடல்பருமன் உள்ளிட்ட பாதிப்புகள் அதிகமாகி வருகின்றன. இவற்றை கட்டுப்படுத்துவதற்கும் மக்களின் உடலுழைப்பு வாய்ப்புகளை அதிகரிப்பதற்கும் பூங்காக்கள் தேவை. அதனால், சென்னையின் பசுமைப்போர்வை பரப்பு குறைந்து விட்ட நிலையில் அதை ஈடுகட்ட புதிய பூங்காக்களை உருவாக்குவது மிகவும் அவசியமாகும். அது மட்டுமின்றி, சென்னையில் பெரிய பூங்காக்கள் இல்லை. டெல்லியில் மெஹ்ராலி பூங்கா 200 ஏக்கரிலும் லோதி பூங்கா 90 ஏக்கரிலும் அமைந்துள்ளன. இவை தவிர புதுடெல்லியின் பதர்பூர் பகுதியில் ஆசியாவின் மிகப்பெரிய பூங்கா 880 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டு வருகிறது. பெங்களூரில் லால்பாக் பூங்கா 240 ஏக்கரிலும், கப்பன் பூங்கா 100 ஏக்கரிலும் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், சென்னையில் அத்தகைய பூங்காக்கள் இல்லை.
கிண்டியில் சென்னை ரேஸ் கிளப்பிடமிருந்து மீட்கப்பட்ட இடத்தில் 118 ஏக்கரில் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கப்பட்டு வரும் போதிலும், சென்னையின் தேவைக்கு அது போதுமானதல்ல. அதுமட்டுமின்றி, கோயம்பேடு, அண்ணா நகர் போன்ற பகுதிகளையிட்டிய புறநகர் பகுதி வேகமாக விரிவடைந்து வரும் நிலையில், கோயம்பேட்டில் பசுமைப்பூங்காவை அரசு அமைப்பது தான் மிகச்சரியான முடிவாக இருக்கும்.
கோயம்பேடு பேருந்து நிலையம் உள்ள பகுதி பசுமைப் பூங்காவாக மாற்றப்பட்டால், அண்ணா நகர், கோயம்பேடு, முகப்பேர், அம்பத்தூர், பெரம்பூர், வடபழனி, கோடம்பாக்கம், அரும்பாக்கம், சூளைமேடு, அசோக்நகர், வளசரவாக்கம், விருகம்பாக்கம், சாலிகிராமம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பயனடைவர். அவர்களுக்கு நடைபயிற்சியும், உடற்பயிற்சியும் செய்ய பசுமைச் சூழலுடன் கூடிய வளாகம் கிடைக்கும். இதற்கெல்லாம் மேலாக இந்தப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களின் குழந்தைகளுடன் வந்து ஆரோகியமான சூழலில் பொழுதுபோக்குவதற்கும் கோயம்பேடு பசுமைப் பூங்கா பெருமளவில் பயன்படும்.
எனவே, சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமம் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள 3 திட்டங்களில் மால் அமைக்கும் திட்டம், வணிக வளாகங்கள் மற்றும் திரையரங்குகள் அமைக்கும் திட்டம் ஆகியவற்றை புதிய அரசு கைவிட வேண்டும். மாறாக, சென்னை புறநகர் பேருந்து நிலையம் அமைந்துள்ள 36 ஏக்கர், அதைச் சுற்றியுள்ள ஆம்னி பேருந்து நிலையம் அமைந்துள்ள பகுதி உள்ளிட்ட 30 ஏக்கர் என மொத்தம் 66 ஏக்கர் நிலப்பரப்பில் மிகப்பெரிய அளவில் பசுமைப்பூங்காவை அமைக்க தமிழக அரசு முன்வர வேண்டும். ##PMK2.0
ஆணைகவுண்டனூர் வை.மாணிக்கம் மறைவுக்கு இரங்கல்.
ஈரோடு மாவட்டம், ஆணை கவுண்டனூர் கிராமத்தைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் மாவட்டத் தலைவர் வை. மாணிக்கம் அவர்கள் காலமானார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
வன்னியர் சங்கம் தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே அதில் தன்னை இணைத்துக் கொண்டு பணியாற்றி வந்த மாணிக்கம் அவர்கள், பாட்டாளி மக்கள் கட்சியின் வளர்ச்சிக்காகவும் பங்களித்துள்ளார். சங்கம், கட்சி சார்பில் நடத்தப்பட்ட அனைத்துப் போராட்டங்களிலும் பங்கேற்று சிறை சென்றவர்.
ஆணை கவுண்டனூர் மாணிக்கம் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். ##PMK2.0
717 மதுக்கடைகள் மூடப்படுவது வரவேற்கத் தக்கது: மீதமுள்ள கடைகளையும் படிப்படியாக மூடி முழு மதுவிலக்கை ஏற்படுத்த வேண்டும்!
தமிழ்நாட்டில் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள், மக்கள் அதிகம் கூடும் பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்கள் ஆகியவற்றுக்கு அருகில் உள்ள 717 மதுக்கடைகளை மூட முதலமைச்சர் விஜய் அவர்கள் ஆணையிட்டிருப்பது வரவேற்கத்தக்கது. முழுமதுவிலக்கை நடைமுறைப்படுத்தும் மாநிலம் என்ற உன்னத இலக்கை நோக்கிய தமிழ்நாட்டின் பயணத்திற்கு நம்பிக்கையளிக்கும் தொடக்கமாக இது அமைந்துள்ளது.
தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மாநிலத்தின் சட்டம் & ஒழுங்கு குறித்து அதிகாரிகளுடன் விவாதித்த விஜய் அவர்கள், பள்ளிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து 500 மீட்டர் சுற்றளவில் உள்ள 186 மதுக்கடைகள், வழிபாட்டுத் தலங்களில் இருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள 276 மதுக்கடைகள், மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு அருகில் உள்ள 255 மதுக்கடைகள் என மொத்தம் 717 கடைகளை மூட ஆணையிட்டதாகவும், அடுத்த இரு வாரங்களில் இந்தக் கடைகள் மூடப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் உள்ள அரசு மதுக்கடைகளின் எண்ணிக்கை இப்போதுள்ள 4765&லிருந்து 4048 ஆக குறையும். உண்மையாகவே இது மக்கள் நலன் காக்கும் நடவடிக்கை தான்.
தமிழ்நாட்டில் முதலமைச்சர் விஜய் அவர்கள் தலைமையிலான புதிய அரசு பதவியேற்ற பின்னர் வெளியிடப்பட்ட மூன்று அறிவிப்புகளை வரவேற்று அறிக்கை வெளியிட்ட நான், தமிழ்நாட்டில் படிப்படியாக மதுக்கடைகளை மூடி முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தேன். முதலமைச்சர் அவர்கள் நேற்று என்னை சந்தித்த போதும் இதே கோரிக்கையை வலியுறுத்தினேன். சேலம் சீலநாயக்கன்பட்டி அருகில் ஒரு மாணவனை சக மாணவர்கள் மது போதையில் குத்தி படுகொலை செய்தது தொடர்பான அறிக்கையிலும் இதை வலியுறுத்தியிருந்தேன். மது போதையை ஒழிக்க வேண்டியதன் தேவையை முதலமைச்சர் அவர்களும் உணர்ந்து மதுக்கடைகளை மூட ஆணையிட்டுள்ளார். ஒரு காலத்தில் தமிழ்நாட்டில் 8,000&க்கும் கூடுதலாக இருந்த மதுக்கடைகளின் எண்ணிக்கையை அரசியல் மற்றும் சட்டப் போராட்டங்களின் வாயிலாக பாதியாக குறைக்கச் செய்த பா.ம.க., இந்த நடவடிக்கையால் மேலும் மகிழ்ச்சியடைகிறது; பெருமிதம் கொள்கிறது.
ஒரு மாணவன் பள்ளிக்கு செல்ல ஒன்று முதல் 2 கி.மீ பயணிக்க நேரிடும் போது, குறைந்தது இரு மதுக்கடைகளை கடந்து செல்ல வேண்டியுள்ளது. மாணவர்களுக்கு கைக்கெட்டும் தொலைவில் மது கிடைப்பது தான் அவர்கள் மதுவுக்கு அடிமையாவதற்கு காரணம் ஆகும். இதைத் தடுக்க இந்த நடவடிக்கை பெரிதும் உதவும்.
தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்புக்கும், சட்டம் & ஒழுங்கை நிலை நிறுத்தவும் இந்த துணிச்சலான நடவடிக்கை பயனளிக்கும். இதன் மூலம் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு சமூகநீதி வழங்க முடியும்.
அதே நேரத்தில் தமிழகத்தின் மூலை முடுக்குகள் வரை பரவியுள்ள மது வணிகக் கட்டமைப்பை தகர்க்க இந்த நடவடிக்கை மட்டும் போதுமானதல்ல. தமிழ்நாட்டில் இன்றைய நிலையில் 4765 மதுக்கடைகள் மட்டுமே செயல்பட்டு வருவதாக கூறப்பட்டாலும், அவற்றைக் கடந்து மாநிலம் முழுவதும் சந்துக்கடைகள் என்ற பெயரில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சட்டவிரோத மதுக்கடைகள் செயப்பட்டு வருகின்றன. இவை தவிர மனமகிழ் மன்றங்கள் என்ற பெயரில் 1500&க்கும் மேற்பட்ட மதுக் குடிப்பகங்கள் செயல்பட்டு வருகின்றன. ஒருவர் நினைத்தால் அடுத்த 2 நிமிடங்களில் மதுவை வாங்கிக் குடிக்க இந்தக் கட்டமைப்பு தான் காரணமாக உள்ளது. சந்துக் கடைகளும், மனமகிழ் மன்றங்களும் மூடப்படாவிட்டால், எந்த நோக்கத்திற்காக 717 மதுக் கடைகளை மூட முதலமைச்சர் ஆணையிட்டாரோ, அந்த நோக்கத்தை அடைய முடியாது என்பது திண்ணம்.
மது போதையின் தீய விளைவுகளை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப் பட வேண்டும். மதுவுக்கு அடிமையான இளைஞர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரையும் அதிலிருந்து மீட்காவிட்டால், அவர்கள் வெகுதூரம் பயணித்து சென்றாவது மதுவைக் குடிக்கத் துடிப்பார்கள். அத்தகைய நிலை ஏற்படுவதைத் தடுக்க வட்ட மருத்துவமனைகளில் மறுவாழ்வு மையங்கள் அமைக்கப்பட வேண்டும். அதேபோல், மதுக்கடைகள் இல்லாத பகுதிகளில் கள்ளச்சாராயம் தலைதூக்குவதற்கு அனுமதிக்கக் கூடாது.
மது மற்றும் போதையில்லாத தமிழ்நாடு அமைக்கப்பட்டால், அதை விட பெரும் மகிழ்ச்சியை மக்களுக்கு அளிக்க முடியாது. அந்த இலக்கை நோக்கி முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு பயணிக்க வேண்டும். அதற்கான அரசின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பாட்டாளி மக்கள் கட்சி முழுமையான ஆதரவை வழங்கும். ##PMK2.0
வட மாவட்டங்களில் தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகள்: தாமதமின்றி அரசே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும்!
காஞ்சிபுரம், திருவண்ணாமலை உள்ளிட்ட வட மாவட்டங்களில் நவரைப் பருவ சாகுபடியில் அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகள், நெல் கொள்முதல் நிலையங்களில் ஒரு வாரத்திற்கும் மேலாக கொள்முதல் செய்யப்படாததால் உழவர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். கோடைப் பருவத்தில் உழவர்கள் அரும்பாடுபட்டு உற்பத்தி செய்த நெல்லை கொள்முதல் செய்யாமல் தாமதிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் திசம்பர் & ஜனவரி மாதங்களில் விதைத்தோ, நடவு நட்டோ ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நெல் அறுவடை செய்யப்படுகிறது. சம்பா பருவத்திற்கு பிந்தைய இந்தக் காலம் நவரைப் பருவம் என்றழைக்கப்படுகிறது. நவரைப் பருவ அறுவடை கடந்த 10 நாள்களாக தீவிரம் அடைந்திருக்கும் நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர், ஒத்திவாக்கம் உள்ளிட்ட இடங்களில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் உழவர்கள் கொண்டு வந்துள்ள பல்லாயிரக்கணக்கான நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படாமல் திறந்த வெளியில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. கடந்த சில நாள்களுக்கு முன் பெய்த மழையில் பெருமளவிலான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகிவிட்டன.
திருவண்ணாமலை மாவட்டம் வாணாபுரம், தண்டராம்பட்டு, மலமஞ்சனூர் புதூர், கரிப்பூர் ஆகிய இடங்களில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களிலும் கடந்த இரு வாரங்களாக நெல் கொள்முதல் நடைபெறாததால் ஒவ்வொரு நிலையத்திலும் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் தேங்கிக் கிடங்கின்றன. இந்தப் பகுதியிலும் மழையில் நனைந்து நெல் மூட்டைகள் சேதமடைந்துள்ளன. இராணிப்பேட்டை, செங்கல்பட்டு, கள்ளக் குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களிலும் இதே நிலை காணப்படுகிறது. கொள்முதல் நிலையங்களில் தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகள் எப்போது கொள்முதல் செய்யப்படும் என்பது யாருக்கும் தெரியவில்லை.
காஞ்சிபுரம் முதல் கள்ளக்குறிச்சி வரை அனைத்து வட மாவட்டங்களிலும் நெல் மூட்டைகள் தேங்கிக் கிடப்பதற்கு காரணம் ஏற்கனவே கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் கிடங்குகளுக்கு கொண்டு செல்லப்படாதது தான். போதிய சரக்குந்துகள் இல்லாததால் தான் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் கிடங்குகளுக்கு கொண்டு செல்லப்படவில்லை என்று கூறும் உணவுத் துறை அதிகாரிகள், இந்தப் பிரச்சினை எப்போது தீரும்? உழவர்களுக்கு எப்போது விடியும்? என்பதைக் கூற மறுக்கின்றனர்.
வட மாவட்டங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் குறித்த காலத்தில் கிடங்குகளுக்கு கொண்டு செல்லப்படாததும், அதனால் கொள்முதல் நிலையங்களில் போதிய இட வசதி இன்றி, நெல் கொள்முதல் நிறுத்தப்படுவதும் இது முதல்முறையல்ல. பல ஆண்டுகளாகவே இந்த அவலம் தொடர்கிறது. காஞ்சிபுரம், திருவண்ணாமலை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் தமிழக அரசின் நுகர்பொருள் வாரியம் நேரடியாக நெல் கொள்முதல் செய்யாமல், தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையம் என்ற மத்திய அரசின் கூட்டுறவு நிறுவனத்திடம் இந்தப் பொறுப்பை ஒப்படைத்தது தான் அனைத்து குழப்பங்களுக்கும் காரணம்.
தமிழக அரசால் நெல் கொள்முதல் அதிகாரம் அளிக்கப்பட்ட தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையத்திற்கு எந்த அடிப்படைக் கட்டமைப்பு வசதியும் இல்லை. அதனால் அது தமிழ்நாடு அரிசி உற்பத்தியாளர் கூட்டமைப்பு என்ற தனியார் அமைப்புடன் உடன்பாடு செய்து கொண்டது. இந்த தனியார் அமைப்பின் கட்டமைப்புகளை வைத்தே நிலைமையை சமாளித்து வரும் தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையம், நெருக்கடியான காலக் கட்டங்களில் வட மாவட்ட உழவர்களை அம்போவென கைவிடுவதையே வாடிக்கையாகக் கொண்டிருக்கிறது.
கடந்த ஆண்டில் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, இராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட 8 வட மாவட்டங்களில் ரூ.800 கோடிக்கும் கூடுதலாக உழவர்களிடம் நெல் கொள்முதல் செய்த தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையம், அதற்கான தொகையை அரசிடமிருந்து பெற்ற பிறகும் உழவர்களிடம் வழங்காமல் ஏமாற்றி வந்தது. இதற்கு எதிராக பாட்டாளி மக்கள் கட்சியும், உழவர் நல அமைப்புகளும் போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து தான் அந்தத் தொகையை உழவர்களுக்கு தமிழக அரசு பெற்றுக் கொடுத்தது. அப்போதே வட மாவட்டங்களில் தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையத்தை இனியும் தமிழகத்தில் நெல் கொள்முதல் செய்ய அனுமதிக்கக் கூடாது என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்திய பிறகும், அதே அமைப்பையே நெல் கொள்முதல் செய்ய அனுமதித்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
உலகிற்கு உணவு படைக்கும் கடவுள்களான உழவர்களை கண்ணீர் சிந்தும் நிலைக்கு எந்த அரசும் அழைத்துச் செல்லக் கூடாது. தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் நெல் கொள்முதல் செய்வதில் ஏற்பட்டுள்ள அனைத்து முட்டுக்கட்டைகளையும் தமிழக அரசு போக்க வேண்டும். தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகளை உடனடியாக கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவை அனைத்திற்கும் மேலாக வட மாவட்டங்களில் நெல் கொள்முதல் செய்ய தேசிய நுகர்வோர் இணையத்திற்கு அளிக்கப்படுள்ள அனுமதியை ரத்து செய்து விட்டு, தமிழக அரசே நேரடியாக நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும். ##PMK2.0











![#PMK2.0 - மதுக்கடைகள் மூடப்படுவது வரவேற்கத்தக்கது: 717 மீதமுள்ள கடைகளையும் படிப்படியாக மூடிமுழு மதுவிலக்கை ஏற்படுத்தவேண்டும் WI NIT - பIபவDADIB மதுபானக்கடை RRmtraಣ noLacn `3/ 12.05.26 மருத்துவர்அன்புமணி ரராமதாஸ் எம்பிர பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ddraramadoss] AnbumaniRamadoss dranbumaniramadoss மதுக்கடைகள் மூடப்படுவது வரவேற்கத்தக்கது: 717 மீதமுள்ள கடைகளையும் படிப்படியாக மூடிமுழு மதுவிலக்கை ஏற்படுத்தவேண்டும் WI NIT - பIபவDADIB மதுபானக்கடை RRmtraಣ noLacn `3/ 12.05.26 மருத்துவர்அன்புமணி ரராமதாஸ் எம்பிர பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ddraramadoss] AnbumaniRamadoss dranbumaniramadoss - ShareChat #PMK2.0 - மதுக்கடைகள் மூடப்படுவது வரவேற்கத்தக்கது: 717 மீதமுள்ள கடைகளையும் படிப்படியாக மூடிமுழு மதுவிலக்கை ஏற்படுத்தவேண்டும் WI NIT - பIபவDADIB மதுபானக்கடை RRmtraಣ noLacn `3/ 12.05.26 மருத்துவர்அன்புமணி ரராமதாஸ் எம்பிர பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ddraramadoss] AnbumaniRamadoss dranbumaniramadoss மதுக்கடைகள் மூடப்படுவது வரவேற்கத்தக்கது: 717 மீதமுள்ள கடைகளையும் படிப்படியாக மூடிமுழு மதுவிலக்கை ஏற்படுத்தவேண்டும் WI NIT - பIபவDADIB மதுபானக்கடை RRmtraಣ noLacn `3/ 12.05.26 மருத்துவர்அன்புமணி ரராமதாஸ் எம்பிர பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ddraramadoss] AnbumaniRamadoss dranbumaniramadoss - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_950057_2f2223ce_1778593928934_sc.jpg?tenant=sc&referrer=user-profile-service%2FrequestType50&f=934_sc.jpg)
![#PMK2.0 - வட மாவட்டங்களில் தேங்கிக்கிடக்கும் நெல் மூடடைகள்} தாமதமின்றி அரசே நேரடியாக கொள்முதல் செய்யவேண்டும் 11.05.26 மருத்துவர்அன்புமணி ரராமதாஸ் எம்பிர பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ddraramadoss] AnbumaniRamadoss dranbumaniramadoss வட மாவட்டங்களில் தேங்கிக்கிடக்கும் நெல் மூடடைகள்} தாமதமின்றி அரசே நேரடியாக கொள்முதல் செய்யவேண்டும் 11.05.26 மருத்துவர்அன்புமணி ரராமதாஸ் எம்பிர பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ddraramadoss] AnbumaniRamadoss dranbumaniramadoss - ShareChat #PMK2.0 - வட மாவட்டங்களில் தேங்கிக்கிடக்கும் நெல் மூடடைகள்} தாமதமின்றி அரசே நேரடியாக கொள்முதல் செய்யவேண்டும் 11.05.26 மருத்துவர்அன்புமணி ரராமதாஸ் எம்பிர பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ddraramadoss] AnbumaniRamadoss dranbumaniramadoss வட மாவட்டங்களில் தேங்கிக்கிடக்கும் நெல் மூடடைகள்} தாமதமின்றி அரசே நேரடியாக கொள்முதல் செய்யவேண்டும் 11.05.26 மருத்துவர்அன்புமணி ரராமதாஸ் எம்பிர பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ddraramadoss] AnbumaniRamadoss dranbumaniramadoss - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_41915_2de4c9b6_1778506022084_sc.jpg?tenant=sc&referrer=user-profile-service%2FrequestType50&f=084_sc.jpg)