பாஸ்கர் இராமாநுஜதாசன் 969 ஓம்திருமூர்த்தி மண்ணு
ShareChat
click to see wallet page
@baskar3883
baskar3883
பாஸ்கர் இராமாநுஜதாசன் 969 ஓம்திருமூர்த்தி மண்ணு
@baskar3883
ஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்
ஸ்ரீ (969)நம் அழகிய மணவாளன் #நம்பெருமாள் ஸ்ரீரங்கம் #அரங்கன் ஸ்ரீரங்கம்
நம்பெருமாள் ஸ்ரீரங்கம் #அரங்கன் ஸ்ரீரங்கம் - ShareChat
00:40
ஸ்ரீ (969) #பெருமாள் உடையவரின் செல்லப்பிள்ளை
பெருமாள் - ShareChat
00:30
||श्री:||ஸ்ரீ (969) #ராமாநுஜர் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே ஶரணம் என் மனமே ! ஓங்கியுயர்ந்து வளர்ந்த எம்பெருமான் திருமால் ஒலியை உண்டாக்கிப் பெருவெள்ளம் உண்டான உலகப் பிரளய காலத்தில் அப்பெருவெள்ளத்தில், உலகங்கள் அனைத்தையும் தன் திருவயிற்றில் அடக்கி வைத்துக்கொண்டு, ஒரு சிறு குழந்தையாகி ஆலந்தளிரில் மெல்ல மெல்லப் பள்ளி கொண்டருளினான். இவ்வுலகில் அத்தகைய எம்பெருமான் ஸ்ரீமந்நாராயணனையே சரணடைய வேண்டுமென்றெண்ணித் தெளிவுபெறக் கூடியவர் எவரேனும் உண்டோ! அவ்வாறு ஒருவருமில்லையே! என் மனமே ! நீயாவது அந்த எம்பெருமானை உன் மனதில் வைத்துக் கொண்டிருப்பாயாக ! பேயாழ்வார் திருவடிகளே ஶரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ராமாநுஜர் - பேயாழ்வார் அருளிச்செய்த மூன்றாம் திருவந்தாதி (93 ) நினைத்தஉலகில்ஆர்தெளிவார்? நீண்டதிருமால் அனைத்துலகுமுள்ளொடுக்கிஆல்மேல்* கனைத்துவவு வெள்ளத்தோர்பிள்ளையாய்மளளத்துயின்றானை ள்ளத்தேவைநெஞ்ச!உய்த்து ے னிய வணக்கம் 5ೊ6o6 பேயாழ்வார் அருளிச்செய்த மூன்றாம் திருவந்தாதி (93 ) நினைத்தஉலகில்ஆர்தெளிவார்? நீண்டதிருமால் அனைத்துலகுமுள்ளொடுக்கிஆல்மேல்* கனைத்துவவு வெள்ளத்தோர்பிள்ளையாய்மளளத்துயின்றானை ள்ளத்தேவைநெஞ்ச!உய்த்து ے னிய வணக்கம் 5ೊ6o6 - ShareChat
ஸ்ரீ (969) சனிக்கிழமைகாலை வணக்கம் #கிருஷ்ணன்
கிருஷ்ணன் - Good Morning Good Morning - ShareChat
ஸ்ரீ (969)*கண்டிப்பாக படிக்க வேண்டியது*🇪🇬🇪🇬 டெல்லியில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றும் இளம் சுற்றுலாப் பயணி ஒருவர், தனது குடும்பத்துடன் ஒரு வார விடுமுறைக்காக லடாக் வந்திருந்தார். அங்கு அவருக்குக் கிடைத்த டிரைவர் சுமார் 28 வயதுடைய இளைஞர். அவருக்கு வயதான பெற்றோர், மனைவி மற்றும் இரண்டு மகள்கள் இருந்தனர். பயணத்தின் போது உரையாடல் தொடங்கியது. சுற்றுலாப் பயணி: “இந்த வார இறுதியில் சுற்றுலா சீசன் முடிந்துவிடும். அதன் பிறகு நீங்கள் என்ன செய்வீர்கள்? கோவா, டெல்லி அல்லது வேறு பெரிய நகரங்களில் ஹோட்டல்களில் வேலைக்கு போவீர்களா?” இளைஞர்: “இல்லை, நான் இங்கேயே இருப்பேன். லடாக்கை விட்டு எங்கும் போக மாட்டேன்.” சுற்றுலாப் பயணி: “ஆனால் குளிர்காலத்தில் இங்கே கடும் குளிர் இருக்குமே. அப்பொழுது என்ன செய்வீர்கள்?” இளைஞர்: “அதிகம் ஒன்றுமில்லை… சியாச்சனுக்கு போவேன்.” சுற்றுலாப் பயணி (ஆச்சரியத்துடன்): “சியாச்சனா? அங்கே இங்கதைவிட இன்னும் அதிக குளிர் இருக்குமே!” இளைஞர்: “அங்கே இந்திய ராணுவத்துக்காக லோடராக வேலை செய்கிறேன். ஒப்பந்த வேலை. என்னைப் போல சிலர் சேர்ந்து, இங்கிருந்து சியாச்சன் பேஸ் கேம்ப் வரை சுமார் 250 கிலோமீட்டர் நடந்து செல்வோம். அதற்கு 15 நாட்கள் ஆகும். அங்கே மருத்துவ பரிசோதனை நடக்கும். தகுதி இருந்தால், யூனிஃபாரம், பூட்ஸ், குளிர் ஆடைகள், ஹெல்மெட் வழங்கப்படும். பின்னர் 3 முதல் 4 மாதங்கள் அங்கேயே தங்கி வேலை செய்வோம்.” சுற்றுலாப் பயணி: “அங்கே நீங்கள் செய்யும் வேலை என்ன?” இளைஞர்: “சரக்குகளை சுமப்பது. தேவையான அனைத்தையும் ராணுவம் வானிலிருந்து வீசிவிடும். அதை ஒரு போஸ்டிலிருந்து இன்னொரு போஸ்டுக்கு எங்கள் முதுகில் சுமந்து செல்வோம். அந்த முழுப் பகுதியும் பனிப்பாறைகளால் மூடப்பட்டுள்ளது. லாரிகள் அங்கே செல்ல முடியாது. ஸ்னோ ஸ்கூட்டர்கள் சத்தம் செய்யும்; அது எதிரியின் துப்பாக்கிச் சூட்டை ஈர்க்கலாம். அதனால் இரவு 2 மணியளவில் கிளம்புவோம். டார்ச்சுகள்கூட பயன்படுத்த முடியாது. முழு அமைதியிலும் இருட்டிலும் நடக்க வேண்டும். அங்கே குதிரைகளோ, கழுதைகளோ இல்லை. மைனஸ் 50 டிகிரி செல்சியஸ் குளிரிலும், 18,000 அடி உயரத்திலும் எந்த விலங்கும் உயிர்வாழ முடியாது.” சுற்றுலாப் பயணி (கடுமையான குரலில்): “அங்கே ஆக்சிஜன் அளவும் குறைவுதானே. இவ்வளவு பாரத்தை எப்படி சுமப்பீர்கள்?” இளைஞர்: “அதனால்தான் பாரம் ஒருபோதும் 15 கிலோவுக்கு மேல் இருக்காது. மேலும் ஒரு நாளைக்கு இரண்டு மணி நேர வேலை மட்டுமே. மீதமுள்ள நேரம் உடலை உயிருடன் வைத்திருக்க முயற்சிப்பதிலேயே செல்கிறது.” சுற்றுலாப் பயணி: “இது உயிருக்கு ஆபத்தான வாழ்க்கையே…” இளைஞர் சில நிமிடங்கள் அமைதியாக இருந்தார். பின்னர் கூறினார்: “பல நண்பர்கள் திரும்பவே இல்லை. சிலர் பள்ளங்களில் விழுந்தார்கள், சிலர் எதிரியின் துப்பாக்கியால் உயிரிழந்தார்கள். மிகப் பெரிய ஆபத்து ஃப்ராஸ்ட் பைட் (உறைபனி காயம்)… ஒரு வகையில் மரணம் தவிர்க்க முடியாததே.” சுற்றுலாப் பயணி: “அப்படியென்றால் உங்களுக்கு நல்ல சம்பளம் கிடைக்குமா?” இளைஞர்: “மாதம் 18,000 ரூபாய். எல்லா செலவுகளையும் ராணுவம் ஏற்றுக்கொள்கிறது. அதனால் மூன்று மாதத்தில் சுமார் 50,000 ரூபாய் சேமிக்க முடிகிறது. அது போதுமானதே. குடும்பத்தை நடத்த உதவுகிறது. அதைவிட முக்கியமாக, நாட்டுக்கும் ராணுவத்துக்கும் ஏதாவது செய்தோம் என்ற மனநிறைவு கிடைக்கிறது.” டெல்லியிலிருந்து வந்த அந்த சுற்றுலாப் பயணி அமைதியாகி விட்டார். ஏசி அலுவலகத்தில், வசதியான வாழ்க்கையுடன், 50 லட்சம் சம்பளப் பேக்கேஜில் வாழும் அவர், முதன்முறையாக தன்னை சிறியவராக உணர்ந்தார். இங்கே — மைனஸ் 50 டிகிரி செல்சியஸ் குளிரில், 18,875 அடி உயரத்தில், இரவு 2 மணிக்கு, மரண நிழல் சூழ்ந்த நிலையில் ஒரு நாளைக்கு க்கு 600 ரூபாய் சம்பளம் “பெரிதாக” உணரப்படுகிறது. நாட்டுக்காக ஏதாவது செய்தோம் என்ற உணர்வே வாழ்க்கைக்கு அர்த்தம் தருகிறது. நகரங்களில் உட்கார்ந்து அறிவுரை கூறுபவர்கள், சமூக வலைதளங்களில் விஷம் கக்கும் பலர்… அந்த இருட்டான, உறைபனி அமைதியில் பத்து நிமிடங்கள்கூட நிற்கத் துணிவில்லை. 👊🤜🏼 நீங்கள் உங்கள் குழந்தையை மாலுக்கு அழைத்துச் சென்று ஷாப்பிங் செய்யலாம், பீட்சா ஊட்டலாம்; ஆனால் ஒருநாள் இதையும் அவர்களுக்கு சொல்லுங்கள்… இந்த நாட்டின் உண்மையான முதுகெலும்பு எங்கே இருக்கிறது என்பதை அவர்கள் புரிந்துகொள்ள. தேசபக்தி என்பது கோஷங்கள் எழுப்புவதோ, விவாதங்களில் ஈடுபடுவதோ மட்டும் அல்ல; அது தியாகம், கட்டுப்பாடு, கடமை ஆகியவற்றிலிருந்து பிறக்கிறது என்பதை நாம் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுப்போம். அடுத்த முறை நாமொரு வசதியான அறையில் அமர்ந்திருக்கும்போது, ஒரு கணம் நின்று நினைவுகூருவோம் — இரவு 2 மணிக்கு, இருட்டிலும் பனியிலும், நமது அமைதிக்கான சுமையை தங்கள் தோள்களில் சுமந்து நிற்பவர்களை. ஏனெனில், அவர்கள் இருப்பதால்தான் நாம் இருக்கிறோம். எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள்!! உங்களுக்கு கிடைத்திருப்பது… போதுமானதே!! *மீண்டும் மீண்டும் பகிர வேண்டிய ஒரு செய்தி* 🇪🇬🇪🇬 #⚔️இந்திய🇮🇳 இராணுவம்⚔️😎
⚔️இந்திய🇮🇳 இராணுவம்⚔️😎 - ShareChat
ஸ்ரீ (969) #கிருஷ்ணன் 06/02/26 Udupi Shree Krishna Mukhyaprana Darshana. . 6.2.26
கிருஷ்ணன் - ಚ೦dಯu ಶೀರೂರು _ aಯಾEಯ ಗರ್ಯಾಯ ಶೀರೂರು ಪರ್ಯಾಯ ೌರೂರು O0 paಯ9 ದೀಗೂರು PIoUUDSO { J009 ಚ೦dಯu ಶೀರೂರು _ aಯಾEಯ ಗರ್ಯಾಯ ಶೀರೂರು ಪರ್ಯಾಯ ೌರೂರು O0 paಯ9 ದೀಗೂರು PIoUUDSO { J009 - ShareChat
ஸ்ரீ (969)ஸ்ரீ தேவ்யை நம: #💵மகாலக்ஷ்மி
💵மகாலக்ஷ்மி - ShareChat
00:39
ஸ்ரீ (969)ஶ்ரீ: ஶ்ரீ மஹாபூர்ண குரவே நம: ஶ்ரீ மதே ராமானுஜாய நம: *தை* மாதம் *ஹஸ்தம்* நக்க்ஷசத்திரம் இன்று ஸ்வாமி எம்பெருமானார் சிஷ்யர்களுள் முதன்மையானவர் ஸ்வாமி *ஶ்ரீ கூரத்தாழ்வான்* அவதார திருநக்க்ஷத்திரம். வாழி எதிராஜன் வாழி எதிராஜன்.. *மொழியைக் கடக்கும் பெரும் புகழான் வஞ்ச முக்குறும்பாம் குழியைக் கடக்கும் "நம் கூரத்தாழ்வான்" திருநக்ஷத்ரம் தை - ஹஸ்தம் இன்று* ஸ்ரீ வத்ஸ சிஹ்ன மிஸ்ரேப்யோ நம உக்தி மதி மஹே யதுக்த்யஸ் த்ரயீ கண்டே யாந்தி மங்கள ஸூத்ரதாம் ஸ்ரீ மத் கூர குலாதீசம் ஸ்ரீ வத் சாங்கம் உபாஸ்மஹே அக்ரயம் யதீந்திர சிஷ்யாணாம் ஆத்யம் வேதாந்த வேதிநாம் இன்று ஜகதாசார்யர் ஸ்ரீ ராமானுஜரின் முக்யமான சீடரான கூரத்தாழ்வான் திருநக்ஷத்ரம். நம் ஆசார்யர்களில் வேறு ஒருவருக்கும் இல்லாத வைபவம் ஆழ்வானுக்கு உண்டு. அர்வாஞ்சோ யத் பத ஸரஸிஜ த்வந்த்வம் ஆஸ்ரித்ய பூர்வே மூர்த்நா யஸ்யாந்வயம் உபகதா தேசிகா முக்திமாபு: | ஸோயம் ராமாநுஜ முநிர் அபி ஸ்வீய முக்திம் கரஸ்தாம் யத் ஸம்பந்தாத் அமநுத கதம் வர்ண்யதே கூரநாத: II பூர்வாச்சாரியர்கள் அருளிய மேற்கண்ட ஸ்லோகத்தின் திரண்ட கருத்து, "நம் சம்பிரதாயத்தில் எம்பெருமானாருக்கு பிற்பட்ட (காலத்தலால்) ஆசார்யர்கள் அவர் திருவடி சம்பந்தத்தினால் உயர்ந்த பேற்றை (முக்தி) அடைந்தார்கள். எம்பெருமானாருக்கு முற்பட்ட ஆசார்யர்கள் அவர் திருமுடி சம்பந்தத்தினால் முக்தி அடைந்தார்கள்". ஆனால் "உடையவரோ தாம் ஆழ்வானின் சம்பந்தம் பெற்றதனால் தான் தமக்கு உயர்ந்த பேறு கிடைத்து என்று உறுதி கொண்டிருந்தார். அப்படிப்பட்ட வைபவம் வாய்ந்த ஆழ்வானின் பெருமையை நாம் எப்படி சொல்லி முடிக்க முடியும்" இதே கருத்தை இராமானுச நூற்றந்தாதி பாசுரத்திலும் "மொழியை கடக்கும் பெரும் புகழான்" என்று அமுதனார் தெரிவித்தார். "மொழியை கடக்கும் பெரும் புகழான் என்கிற சந்தையை வடமொழியில் மொழிபெயற்கும் விதமாக "வாசாம் அகோசர மஹா குண தேசிக அக்ர்ய கூராதி நாத" என்று யதிராஜ விம்சதியில் மாமுனிகளும் அருளிச் செய்தார். ஆக இப்படி எல்லா ஆசார்யர்களும் ஆழ்வானின் பெருமையை பேசி தலைக்கட்ட முடியாது என்றே திருவுள்ளமானார்கள். சீராரும் திருப்பதிகள் சிறக்க வந்தான் வாழியே தென்னரங்கர் சீரருளை சேருமவன் வாழியே பாராரும் எதிராசர் பதம் பணிந்தோன் வாழியே பாடியத்தின் உட்பொருளைப் பகருமவன் வாழியே நாராயணன் சமயம் நாட்டினான் வாழியே நாலூரான் தனக்கு முக்தி நல்கினான் வாழியே ஏராரும் தையில் அத்தத்திங்கு உதித்தான் வாழியே எழில் கூரத் தாழ்வான் தன் இணையடிகள் வாழியே பொருள் விரிக்கும் எதிராசர் பொன்னடியோன் வாழியே பொன் வட்டில் தனை எறிந்த புகழுடையோன் வாழியே மருள் விரிக்கும் முக் குறும்பை மாற்ற வந்தான் வாழியே மயர்வறவே மெய்ஞ் ஞானம் விளங்கிடுவான் வாழியே இருள் விரிக்கும் சிவம் எதிரிட்டு எழுத்திட்டோன் வாழியே ஏதமற வெவ்வுயிர்க்கும் இதமளித்தோன் வாழியே அருள் விரிக்கும் அரங்கத்தான் அடியிணைகள் வாழியே அழகாரும் கூரத் தாழ்வான் அடியிணைகள் வாழியே மட்டவிழும் பொழில் சூழ் குருகேசர் மறைத் தமிழ் வாழ்ந்திடு நாள் மண்ணுலகில் ஸ்ரீ பாஷ்யம் விளங்கிட வந்து பிறந்தவர் நாள் எட்டும் இரண்டும் இசைந்த சுலோகம் இசைத்திட வந்தவர் நாள் இல்லை எனச் சிவமென்றே எதிரிட்டு எழுத்திட வந்தவர் நாள் துட்ட குதிர்ட்டிகள் மாயிகள் வாழ்வைத் துரத்திட வந்தவர் நாள் சூரிய பூமியர் ஆரியர் என்று துதித்திட வந்தவர் நாள் அட்ட திசைக்கும் நிறைந்த புகழ் அந்தணர் வாழ கூரத் ஆழ்வான் வந்தருளிய தையில் விளங்கிடு அத்தமது நன்னாளே - அத்தமது எனு நாளே கூரத்தாழ்வான் திருவடிகளே சரணம் பெரிய நம்பிகள் திருவடிகளே சரணம் பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் -அடியேன் கோபிநாத் ராமானுஜதாஸன் (சாம்பு) #ராமாநுஜர்
ராமாநுஜர் - ShareChat