||श्री:||ஸ்ரீ (969) #ராமாநுஜர்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே ஶரணம்
எம்பெருமான் ஸ்ரீமந் நாராயணனே ! எங்கும் நிறைந்தவராகவும், எங்கும் சென்று புகுந்து, ஆராய்ந்து கொண்டிருக்கும் உன்னை பற்றிச் சிறிதும் சிந்தித்து அறியாதவர்களாக இருக்கின்ற மக்கள் நால்வகைப் பட்ட பிறவிகளில் மீண்டும் மீண்டும் பிறந்து, அப்பிறவிகளுக்கு ஏற்ற துன்பங்களை அடையுமாறு செய்தாய் ! மேலும் நீ சந்திரனுக்கு உண்டான துன்பத்தைப் போக்கி அருளினாய் ! மேலும் ஒரு மடுவில் இருந்த நீரைப் பருகச் சென்றிருந்த கஜேந்திராழ்வானை முதலை ஒன்று பற்றிக் கொண்டு துன்புறுத்திக் கொண்டிருக்க அதனைப் பொறுத்துக் கொள்ள இயலாத யானை ஆதிமூலமே என்று அழைத்த உடனேயே அந்த கஜேந்திராழ்வானைக் காப்பாற்றும் பொருட்டு, முதலை மீது திருவாழியாழ்வானைச் செலுத்தினாய் ! அதனால் அம்முதலை சாபம் நீங்கப் பெற்றது. கஜேந்திராழ்வானும் திருப்பரமபதம் அடைந்தான்.
திருமழிசைப்பிரான் திருவடிகளே ஶரணம்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏