
பாஸ்கர் இராமாநுஜதாசன் 969 ஓம்திருமூர்த்தி மண்ணு
@baskar3883
ஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்
ஸ்ரீ (969)உய்யக்கொண்டார் கோதைக்குச் சூட்டிய பெயர்!
நாதமுனிகள், தன் மகன் ஈசுவரமுனிக்குப் பிறக்கும் குழந்தைக்கு 'யமுனைத்துறைவன்' எனப் பெயர் சூட்டி அருளுரை வழங்குமாறு உய்யக்கொண்டாரைக் கேட்டுக்கொண்டார். ஆனால், அவர் காலத்தில் அது இயலாமல் போகவே, உய்யக்கொண்டார் தன் இறுதிக்காலத்தில் இப் பணியைத் தனது மாணாக்கரான மணக்கால் நம்பியிடம் ஒப்படைத்தார். மணக்கால் நம்பியும் தனது ஆசிரியரின் விருப்பப்படியே, ஈசுவரமுனியின் மகனுக்கு 'யமுனைத்துறைவன்' என்று திருநாமம் சூட்டி, அவருக்கு அருளிச்செயல் (திவ்யபிரபந்தம்) பாடங்களை உபதேசித்தார்.
“யமுனைத்துறைவன்” என்ற பெயர் எங்கிருந்து வந்திருக்கும் என்பது நாம் அறிந்ததே. ஆண்டாள் திருப்பாவையில்:
மாயனை மன்னு வடமதுரை மைந்தனை
தூய பெரு நீர் யமுனைத் துறைவனை
என்று கண்ணனைப் போற்றுகிறார். திருவரங்கத்து அமுதனார் தமது 'இராமானுச நூற்றந்தாதியில்', ஆளவந்தாரைக் குறிப்பிடும்போது, நாதமுனிகள் விரும்பிய பெயரையே பயன்படுத்திப் பாடுகிறார்:
எதிகட்கு இறைவன் யமுனைத் துறைவன் இணை அடியாம்
கதி பெற்றுடைய இராமாநுசன் என்னை காத்தனனே
நாதமுனிகளின் நேர் சீடரான உய்யக்கொண்டாரின் இயற்பெயர் புண்டரீகாக்ஷர். (இவர் திருவெள்ளறையில் அவதரித்தவர்). இவருக்கு 'உய்யக்கொண்டார்' என்ற பெயர் எப்படி வந்தது?
ஸ்ரீமத் நாதமுனிகள் யோக சாஸ்திரத்தில் விற்பன்னர்; யோகத்தின் மூலம் பகவானை உணரும் ஆற்றல் பெற்றவர். நாதமுனிகள், குருகைகாவலப்பனுக்கு அஷ்டாங்க யோகம் கற்பித்தபோது, உய்யக்கொண்டாருக்கும் அதைக் கற்றுக்கொடுக்க விரும்பினார். அப்போது உய்யக்கொண்டார், “பிணம் கிடக்க மணம் புணரலாமோ?” என்றார்.
அதாவது, ஒரு வீட்டில் இழவு விழுந்து பிணம் கிடக்கும்போது, அங்கே மகிழ்ச்சியான திருமணப் பேச்சுகளைப் பேசமாட்டார்கள். இதன் உட்பொருள்: உலகில் பல கோடி மக்கள் சம்சாரத் துன்பங்களில் உழன்று கிடக்கையில், நாம் மட்டும் சுயநலமாகப் பகவானை அனுபவித்துக் கொண்டிருக்கலாமா? என்பதாகும்.
இதைக் கேட்டு மகிழ்ந்த நாதமுனிகள், அவருடைய பெருந்தன்மையை வியந்து, “இந்த வையம் உய்யக் கொண்டீரோ?” (உலகத்தையே உய்யச் செய்ய வந்தவரோ?) என்று பாராட்டினார். இதனால் அவருக்கு உய்யக்கொண்டார் என்ற பெயர் நிலைத்தது. எனினும், நாதமுனிகள் ஆழ்வார் திருவாக்கில் வந்த வார்த்தையையே இவருக்குப் பெயராகச் சூட்டினார் என்றும் கொள்ளலாம்.
திருமங்கை ஆழ்வார் பெரிய திருமொழியில்:
“தாய் இருக்கும் வண்ணமே உம்மை தன் வயிற்று இருத்தி உய்யக்கொண்டான்” என்கிறார்.
நாதமுனிகள் ஆழ்வார்களின் பாசுரங்களிலேயே மூழ்கியவர் என்பதால், ஆழ்வாரின் சொற்களே அவருடைய சொல்லகராதியாக (Vocabulary) இருந்தன.
திருப்பாவைக்கு ஆண்டாள் வைத்த பெயர் 'சங்கத் தமிழ்மாலை'. சங்கத் தமிழில் இயல், இசை, நாடகம் என்ற மூன்றுமே இருக்கும். அதனால்தான் அதனை 'முத்தமிழ்' என்கிறோம். சங்க இலக்கியங்களில் இவை தனித்தனியே இருக்கலாம், ஆனால் திருப்பாவையில் இவை மூன்றும் ஒருசேர அமைந்திருப்பதைக் காணலாம்.
இயல் (செய்யுள்): திருப்பாவை மிகக் கடினமான 'வெண்டளையால் வந்த எட்டடி நாற்சீர் ஒரு விகற்பக் கொச்சகக் கலிப்பா' வகையைச் சேர்ந்தது. (இதனை 'இயற்றரவிணைக் கொச்சகக் கலிப்பா' என்றும் கூறுவர்). ஆண்டாள் சாதாரணமாகப் பேசுவதே செய்யுள் வடிவில்தான் இருந்திருக்கும் என்று எண்ணத் தோன்றுகிறது.
நாடகம்: திருப்பாவையை நாட்டுப்புறப் பாடல் பாணியில் அமைந்த ஒரு திரைக்கதை (Screenplay) என்றே சொல்லலாம். பாவை நோன்பு நோற்கும் பெண்கள் ஒருவரை ஒருவர் எழுப்பிக்கொண்டு செல்வது போன்ற ஒரு நாடகத் தன்மை இதில் உள்ளது.( சென்ற மார்கழியில் ஆண்டாளும் தோழிகளும் என்ற அடியேன் எழுதியது நினைவிருக்கலாம்).
இசை: உய்யக்கொண்டார் அருளிய தனியனே இதற்குச் சான்று. “இன்னிசையால் பாடிக் கொடுத்தாள்” என்று அவர் குறிப்பிடுகிறார்:
அன்ன வயற்புதுவை ஆண்டாள் அரங்கற்குப்
பன்னு திருப்பாவைப் பல்பதியம் – இன்னிசையால்
பாடிக் கொடுத்தாள்நற் பாமாலை; பூமாலை
சூடிக் கொடுத்தாளைச் சொல்லு
கோதை 'ஆண்டாள்' ஆன கதை
ஆண்டாள் தன்னை 'சுரும்பார் குழல்கோதை' (நாச்சியார் திருமொழி) என்றும், 'பட்டர்பிரான் கோதை சொன்ன' (திருப்பாவை) என்றும், 'கோதை' என்றே அடையாளப்படுத்திக் கொள்கிறாள். எங்கும் தன்னை 'ஆண்டாள்' என்று கூறிக்கொள்ளவில்லை. ஆனால், இன்று 'ஆண்டாள்' என்பதே பிரசித்தமான பெயராக உள்ளது. இப்பெயரைச் சூட்டியது யார்?
நாச்சியார் திருமொழியின் தனியனில், நாதமுனிகளின் மற்றொரு சீடரான ஸ்ரீ திருக்கண்ணமங்கையாண்டான்:
மல்லிநாடு ஆண்ட மடமயில்... என்கிறார்.
பாண்டிய மன்னன் தன் செல்வாக்கினால் நாட்டை ஆண்டான்; ஆனால், ஆண்டாள் தன் பக்தியின் 'சொல்வாக்கினால்' நாட்டை ஆண்டாள். எனவே, 'ஆண்டாள்' என்றால் மல்லிநாட்டைப் (ஸ்ரீவில்லிப்புத்தூர் அல்லது அதன் அருகில் இருக்கும் மல்லி நாடு) பக்தியால் ஆண்டவள் என்று பொருள்.
எனினும், உய்யக்கொண்டார் அருளிய திருப்பாவைத் தனியனில்தான் “ஆண்டாள் அரங்கற்குப் பன்னு திருப்பாவைப் பல்பதியம்” என முதன்முதலில் 'ஆண்டாள்' என்ற திருநாமம் இடம்பெறுகிறது.
நமது கோதைக்கு 'ஆண்டாள்' என்று பெயர் சூட்டி மகிழ்ந்த உய்யக்கொண்டாரின் 1200-வது திருநட்சத்திரம் இன்று.
- சுஜாதா தேசிகன்
(2021-இல் எழுதியது: சித்திரை - கார்த்திகை) #ராமாநுஜர்
ஸ்ரீ (969) #ராமாநுஜர்
ஸ்ரீ (969) #ராமாநுஜர்
ஸ்ரீ (969) ஸ்வாமி கூரத்தாழ்வான் #ராமாநுஜர்
ஸ்ரீ (969) #ராமாநுஜர்
ஸ்ரீ (969) #ராமாநுஜர்
ஸ்ரீ (969)ராமாநுஜனும்,ராமாநுஜரும் !!
(எம்பெருமானார்-- 1009 ஆவது திருநட்சித்திர உற்சவம்--பதிவு 6)
🙏💐🌺🌸💮🌹🌻🌼🥀💐🙏
விபீக்ஷணரிடம் "நின்னொடும் எழுவர் ஆனோம்-தயரதன் உன் தந்தை" என்று உரைத்து ஸ்ரீராம பிரான் அவரை தம் அனுஜனாக ஏற்றுக் கொண்டார்.
"எம்முழை அன்பின் வந்த
அகன் அமர் காதல் ஐய! நின்னொடும் எழுவர் ஆனோம் !!!
புகல் அருங் கானம் தந்து, புதல்வரால் பொலிந்தான்நினைன
நுந்தை !!" (கம்ப ராமாயணம்)
'எங்களிடம் அன்பு கொண்டு வந்த, உள்ளத்திலே நிறைந்த அன்புடையவனே !
--உன்னுடன் சேர்த்து சகோதரர்கள் ஏழுபேர் ஆயினோம் !
எவரும் புகுதற்கரிய கானக வாழ்வை எனக்குத் தந்து,உனது தந்தை
யாகிய தயரதன் புதல்வர்களால் நிறைவு பெற்றுவிட்டான் !"
ராம அனுஞன் விபீஷணரது வைபவங்ளோடு, ஸ்ரீ ராமாநுஜரது வைபவங்களை ஒப்பிட்டு அநுபவிப்போம்.
1.அந்தரிக்ஷ கத ஸ்ரீமானும்,உபய விபூதி உடையவரும் !
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இலங்கை இளவரசு பட்டம்,உடைமை
கள்,சொந்த பந்தங்கள் ஆகியவற்றை
த்துறந்து விட்டு ஸ்ரீ ராமரிடம் சரணடைய வந்த விபீஷணரை" அந்தரிக்ஷ கத ஸ்ரீமான்"--"ஆகாய மார்க்க பெரும் செல்வந்தன்" (ராம கைங்கர்யம் எனும் பெருஞ்செல்வம்)
என்று வால்மீகி முனிவர் வர்ணிக்
கிறார்.திருப்புல்லாணிக் கடற்கரையில் ராமரிடம் சரணடைய வந்த விபீஷணர் ஆகாயத்தில் நின்று கொண்டு, தன்னுடைய கதையைத் தலைகீழாகக் கவிழ்த்து சேவித்தார்.
ஸ்ரீ ராமாநுஜர் அனைத்து பற்றுக்களையும்,உடைமைகளையும் விட்டு,ஸ்ரீரங்கம் பெரிய கோயிலுக்கு வந்த போது,நம்பெருமாள் கைத்தல சேவையாக எழுந்தருளி ராமாநுஜரை எதிர் கொண்டு வரவேற்றார்.
ராமாநுஜரை லீலா விபூதிக்கும்
(அனைத்து, லோகங்கள்) நித்ய விபூதிக்கும்(ஸ்ரீ வைகுண்ட லோகம்) சொந்தக்காரர்/உடையவர் ஆக்கி அவரை "உடையவர்" என்று அழைத்தார்.
2.விபீஷணாழ்வானும் ஆழ்வார்கள் வரிசையில் கொண்டாடப்பட்ட உடையவரும் !
👌👍👌👍💐🌸💐👍💐👍💐👌
விபீஷணரின் நற்குணங்களாலும்,
அவரது ஸ்ரீராம கைங்கர்யங்களாலும்
"விபீஷணாழ்வான்" என்று கொண்டாடப் பட்டார். ராமாநுஜர் எவ்வாறு ஆழ்வார்கள் வரிசையில் வைத்துக் கொண்டாடப் பட்டார் என்பதை பதிவு 2 ல் (பரதாழ்வான் பதிவு)
3.விபீஷண தாசர்களுக்கும்,
ராமாநுஜ தாசர்களுக்கும்
பெருமாள் அருளிய மெய்மைப் பெருவார்த்தை !
🙏👣🙏👣🙏👣🙏👣🙏👣🙏⛰️🙏
விபீஷணர் ஸ்ரீ ராமரிடம் சரணமடைய
வந்த போது விபீஷணரை ஏற்றுக் கொள்ளலாமா/வேண்டாமா என்று விவாதம் நடந்தது.சுக்ரீவன்,
ஜாம்பவான் முதலானோர் சேர்த்துக் கொள்ளக் கூடாது என்றனர்.ஸ்ரீராமர் தன்னிடம் சரணம் என்று வந்தவர்
களுக்கு அடைக்கலம் அளிப்பது தமது கர்த்தவ்யம்/உறுதிப்பாடு(ராம ஸரம ஸ்லோகம்--பதிவு 5:ல் விரிவாக) என்று கூறி சுக்ரீவனையே அனுப்பி விபீஷணரை அழைத்து வரச் சொன்னார்.அப்படி அழைத்து வரும் போது விபீஷணரோடு யார் வந்திருந்தாலும்--ராவணனே வந்திருந்தாலும்--அழைத்து வரவும்;அவர்ளுக்கும் அடைக்கலம் அளிப்போம் என்று உறுதிபடக் கூறினார்.
விபீஷணர் இலங்கையிலிருந்து ஆகாய மார்க்கமாக வந்த போது அவரோடு அவரது தொண்டர்கள் நாலு பேரும் வந்தனர்.ஸ்ரீராமர் நியமனப்படி விபீஷணரோடு அந்த --ஊர்/பேர் தெரியாத --நாலு பேரையும்
சுக்ரீவர் அழைத்து வந்தார்.
"அபயம் ஸர்வபூதேப்ய ததாமி !" என்று அவர்களுக்கும் அடைக்கலம் கொடுத்தார்.
"ராமாநுஜ ஸம்பந்தம் பெற்ற ராமாநுஜ தாசர்கள் அனைவரும் பரமபதம் பெறக் கடவர்கள்" என்பது ஸ்ரீ ராமரின் குல தெய்வமான பெரிய பெருமாள் ராமாநுஜரிடம் அருளிச் செய்த மெய்மைப் பெருவார்த்தை !!
நாலு பேர் மட்டுமல்ல; நான்கு கோடி பேர்களுக்கும் மேலாகவும் என்றென்றும் வந்து சேரும் ராமாநுஜ
தாசர்களுக்கும் அடைக்கலம் அளிப்பேன் என்று உறுதி அளித்துள்ளார்.
4.விபீஷணருக்கும்,ராமாநுஜருக்கும் முதல் சந்திப்பிலேயே முடி சூட்டிய பெருமாள் !
👑👑👑👑👑👑👑👑👑👑👑
விபீஷணர் சரணாகதியை ஏற்றவுடன்
ஸ்ரீ ராமர் லக்ஷ்மணரை அழைத்து,
விபீஷணருக்கு இலங்கை மன்னனாக முடி சூட்டச் செய்தார்.இலங்கையின் மன்னனாக ராவணன் இன்னும் இருக்கிறான்.ராவணனுடான யுத்தமே இன்னும் ஆரம்பிக்க வில்லை.
அப்படியிருந்தும் விபீஷணுனுக்கு
உடனே முடி சூட்டினார்,
முக்காலத்தையும் நடத்தும் பெருமாள்.
ராமாநுஜர் துறவறம் பூண்டவுடன் தேவப்பெருமாளைச் சேவித்து நின்ற போது,தேவப் பெருமாள் அவரை "எதிராஜர்" என்றழைத்தார்.அவர் அப்போது தான் 'எதி' ஆனார்.
அப்போது அவரிடம் எதிகள் யாரும் சீடர்களாக இல்லை(பிற்காலத்தில் 700 எதிகள் அவரது சீடர்களாக இருந்தனர்).
ராமாநுஜர் முதன் முதலாக ஸ்ரீரங்கம் வந்த போதே பெரிய பெருமாள் அவரை உபய விபூதிகளுக்கும் "உடையவர்" ஆக முடி சூட்டி விட்டார் !
ராமாநுஜர் முதன் முதலாக திருமலை சென்று திருவேங்கடவரைச் சேவித்து
"வேதார்த்த ஸங்கரஹம்" என்னும் ஸ்லோக மாலையைப் பாடி முடித்த போது,திருமலை ஸ்ரீநிவாசப் பெருமாள் அவருக்கு,"தேசிகேந்திரன்"
என்று முடி சூட்டினார் ! தேசிகன் என்றால் "ஆசார்யன்";இந்திரன் என்றால் "ராஜா/தலைவன்" எனவே தேசிகேந்திரன் என்றால் "ஆசார்யர்களுக்கு தலைவர்/ராஜா" என்று பொருள்.
இந்த ஜகத்துக்கே--ஜகத்திலுள்ளோர்
எல்லோருக்கும் ஆசார்யர் என்று பொருள்படும் "ஜகதாசார்யர்" என்னும் பட்டப்பெயர் நோக்கத் தக்கது.
5.தம் பிரிய அடியார்களுக்காக திசை மாறி எழுந்தருளிய பெருமாள் !
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஸ்ரீராம பிரான் தமக்கு அருளித்தந்த பெரிய பெருமாள்(மூலவர்,உற்சவர்)
பெரிய பிராட்டியார்,உபய நாச்சி
மார்கள் அர்ச்சாவதாரத் திருமேனிகள் மற்றும் பிரணவாகார விமானத்தை எடுத்துக் கொண்டு அயோத்தியிலி
ருந்து இலங்கைக்குப் புறப்பட்டார்.
இலங்கை செல்லும் வழியில் தம் அனுஷ்டானங்களை முடிப்பதற்காக ஸ்ரீரங்கம் காவிரிக் கரையில் பெருமாள்/பரிவாரங்களை
எழுந்தருளப் பண்ணினார். விபீஷணர் மீண்டும் இலங்கை செல்வதற்காக பெருமாள் இருக்கும் விமானத்தைத் தூக்க முயற்சித்த போது அவரால் தூக்க முடியவில்லை,
பெருமாளைச் சேவித்து இலங்கை
க்கு எழுந்தருளுமாறு வேண்டிய போது,பெருமாள் ஸ்ரீரங்கத்திலேய இருக்க விரும்புவதாகக் கூறினார்.
அப்படி என்றால் தாமும் ஸ்ரீரங்கத்திலேயே இருந்து பெருமாளுக்குக் கைங்கர்யம் செய்வதாகச் சொன்னார்.ஆனால் பெருமாள் விபீஷணன் இலங்கை அரசனாக அந்நாட்டு மக்களைப் பேண வேண்டிய கடமை இருப்பதால் இலங்கை செல்லுமாறு நியமித்தார்.
விபீஷணரின் பக்தியை மெச்சி தாம்,
" தென் திசை இலங்கை நோக்கி எழுந்தருளியிருப்பதாக" அருளினார்.
(பொதுவாக பெருமாள் கிழக்கு நோக்கி எழுந்தருளி இருப்பார்.தென் திசை நோக்கி இருப்பது மிக மிக அரிது !)
ஸ்ரீ பூரி ஜெகந்நாதர் கோயிலுக்குச் சென்ற ராமாநுஜர் கனவில் தோன்றிய ஜெகந்நாதப் பெருமாள்,அந்தக் கோயிலுள்ள ஆராதனை முறைகளை மாற்ற வேண்டாம் என்றும், அவருக்கு வேறு முக்கியமான கைங்கர்யம் காத்திருப்பதாகவும் கூறினார்.தம் வாகனமாகிய கருடனை ஏவி,
ராமாநுஜரை ஶ்ரீகூர்மத்தில் விட்டு விடுமாறு ஆணையிட்டார்,அவ்வாறே கருடன் ராமாநுஜரை இரவோடு இரவாக ஶ்ரீகூர்மத்தில் விட்டு விட்டார்.காலையில் எழுந்து பார்த்த போது,தாம் ஒரு புதிய இடத்தில் இருப்பதையும்,தம் சீடர்கள் யாரும் உடன் இல்லாததையும் அறிந்தார்.
இது ஜெகந்நாதப்பெருமாளின் திருவிளையாடல் என்பதை உணர்ந்தார்.
சுற்று முற்றும் பார்த்த அவர் அருகில் ஒரு குளம் இருப்பதைக் கண்டார்.
அவர் இருக்குமிடத்துக்குப் பின்புறம் ஒரு இடிந்த கட்டிடமும்,நடுவில் செவ்வக வடிவில்,லிங்கம் போன்ற ஒரு கருங் கல்லும்,அதன் மேற்
புறத்தில் ஒரு சிறிய கல் இருப்பதை
யும் பார்த்தார்.அந்த ஊர்க்காரர்
களிடம் விசாரித்ததில், அந்தக்கல் அங்கு பல நெடுங்காலமாக இருப்பதாகவும்,சிலர் அவ்வப்போது அதை ஸ்வாமி என்று வழிபடுவ
தாகவும் கூறினர்.அதை நன்றாக உற்றுப் பார்த்ததில் அதில் ஏதோ ஒரு உருவம் தெரிந்தது.ஆனால் என்ன என்று கண்டுபிடிக்க முடியவில்லை. பெருமாளுக்கு நைவேத்யம் செய்த பிரசாதத்தையே ராமாநுஜர் புசிப்பதால்,பக்கத்தில் எங்கும் பெருமாள் கோயில் இல்லாததால்,
அன்று முழுதும் அவர் உபவாசம் இருந்தார்.சோர்வாகக் கண்ணயர்
ந்தவர் கனவில் அன்று இரவு மீண்டும் ஜெகந்நாதப் பெருமாள் தோன்றி தாமே "சமுத்ர மர்த்தனத்தில்" அவதரித்த கூர்ம அவதாரமாக அங்கு எழுந்தருளி இருப்பதாக அருளினார்.
மிக மகிழ்ந்த ராமாநுஜர் கிராமத்தாரை அழைத்து அவர் கூர்மாவதாரப் பெருமாள் என்று கூற,அவர்கள் நம்ப மறுத்தனர்.
ஆமைக்கும் அந்த இடத்துக்கும் தொடர்பு இருப்பதாக அவர்கள் சொன்னாலும்,அவர் பெருமாள் என்பதை யாரும் ஒத்துக்கொள்ள வில்லை.கூர்மத்தின் பின்பகுதியில் நின்று கொண்டிருந்த ராமாநுஜர்,
பெருமாளை மனமுருகப் பிரார்த்தித்து தம் பக்கம் திரும்புமாறு வேண்டினார்.
பெருமாளும் உடனே ராமாநுஜரை நோக்கி மேற்குப் பக்கமாகத் திரும்பி விட்டார்.கிராமத்தார்கள் பெருமாளை உணர்ந்து, வணங்கி,ராமாநுஜரை மிகப் பெரிய ஆசார்யராக ஏற்றுக்
கொண்டு நமஸ்காரம் செய்தனர்.
பெருமாளை ஶ்ரீ கூர்மநாதர் என்று போற்றினர்.இன்றும் கிழக்குப் பார்த்த இந்தக் கோயிலில்,ஶ்ரீகூர்மநாதர் மேற்கு நோக்கியே காட்சி தருகிறார்.
அதனால் இங்கு இரண்டு த்வஜ ஸ்தம்பங்கள் -ஒன்றுகிழக்கில் (பழையது),மற்றொன்று மேற்கில் உள்ளன.ஊர்க்காரர்களின் உதவியுடன் மிகப் பெரிய கோவிலைக் கட்டினார் ராமாநுஜர்.
(அடியேன் பார்த்தசாரதி ராமாநுஜ
தாசன்)
படங்கள்:
நேற்று இரவு:
ஸ்ரீபெரும் புதூர்:
1--3--ராமாநுஜரும் கூரத்தாழ்வ்னும்
திருநாராயணபுரம்-:
4,5--கோவிந்தராஜ முடி சேவை
இன்று காலை:
6--8: ஸ்ரீபெரும்புதூர்
9,10: திருவல்லிக்கேணி
11.திருமலை
ஸ்ரீகூர்மம்:
12.கிழக்கே உள்ள த்வஜஸ்தம்பம்.
13&14)மேற்குத்வஜஸ்தம்பம்(கல்வெட்டுடன்)
15: ஶ்ரீ கூர்மநாதர்,ஸ்ரீகூர்மம். #ராமாநுஜர்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஸ்ரீமதே இராமாநுஜாய நம: (969)🚩
ஸ்ரீமத்வரவர முனயே நம:
🪷🪷🪷🪷🪷🥭🦜🪷🪷🪷🪷🪷
ருத்ரபாளையம், கமலவல்லி ராமாநுஜ தாஸி அவர்கள் திருமாளிகை ஆசாரியர் நம்பி ஸ்வாமி 13வது திருநக்ஷத்ரத்தையொட்டி திருவாய்மொழி சேவாகாலம் முதல் திரு நாள்
நாளை சாற்று முறை
ஜெய்ஸ்ரீமந் நாராயணா!
🏹🏹🏹🏹👣👣👣👣🎠🎠🎠🎠 #பெருமாள்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஸ்ரீமதே இராமாநுஜாய நம: (969)🚩
ஸ்ரீமத்வரவர முனயே நம:
🪷🪷🪷🪷🪷🥭🦜🪷🪷🪷🪷🪷
ருத்ரபாளையம், கமலவல்லி ராமாநுஜ தாஸி அவர்கள் திருமாளிகை ஆசாரியர் நம்பி ஸ்வாமி 13வது திருநக்ஷத்ரத்தையொட்டி திருவாய்மொழி சேவாகாலம் முதல் திரு நாள்
நாளை சாற்று முறை
ஜெய்ஸ்ரீமந் நாராயணா!
🏹🏹🏹🏹👣👣👣👣🎠🎠🎠🎠 #ராமாநுஜர்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஸ்ரீமதே இராமாநுஜாய நம: (969)🚩
ஸ்ரீமத்வரவர முனயே நம:
🪷🪷🪷🪷🪷🥭🦜🪷🪷🪷🪷🪷
ருத்ரபாளையம், கமலவல்லி ராமாநுஜ தாஸி அவர்கள் திருமாளிகை ஆசாரியர் நம்பி ஸ்வாமி 13வது திருநக்ஷத்ரத்தையொட்டி திருவாய்மொழி சேவாகாலம் முதல் திரு நாள்
நாளை சாற்று முறை
ஜெய்ஸ்ரீமந் நாராயணா!
🏹🏹🏹🏹👣👣👣👣🎠🎠🎠🎠 #பெருமாள்









