துரைசாமி வழக்கம் போல் பாரில் தனியாக உட்கார்ந்து மூன்று கிளாஸ்களில் தனித் தனியாக மது ஊற்றி குடித்துக் கொண்டிருந்தார். அடித்த சரக்கு பத்தாமல் மீண்டும் பிராந்தி ஒன்று வாங்கி, மூன்று கிளாஸ்களில் ஊற்றி குடித்துக் கொண்டிருந்தார்.
வெயிட்டர் சிறிது நேரம் பார்த்துவிட்டு, "சார், நீங்க தப்பா நினைக்கலன்னா ஒன்னு கேட்கலாமா?"
"கேளுப்பா...."
"நீங்க மூணு கிளாஸ்ல தனித்தனியா வாங்கி குடிக்கிறீங்களே... ஏன்னு எனக்கு புரியல".
"இல்லப்பா, நாங்க அண்ணன் தம்பி மூணு பேரு. ஒரு அண்ணன் பரமக்குடியில் இருக்கான், மற்றொரு தம்பி காரைக்குடியில் இருக்கான், நான் இங்க தூத்துக்குடியில் இருக்கேன். நாங்க மூணு பேரும் எப்பவுமே ஒன்னாதான் சரக்கடிப்போம். நாங்க மூணு பேரும் ஆளுக்கு ஒரு மூலையா பிரிஞ்சு போனதால, சரக்கு சாப்பிடறதா இருந்தா மூணு கிளாஸ்ல வாங்கி,
மத்தவங்க ஞாபகார்த்தமா அந்த சரக்கை சாப்பிடனும்னு ஒரு சத்தியம் பண்ணியிருக்கோம். என்னோட பிரதர்ஸ் ரெண்டு பேருமே இதே மாதிரி செஞ்சுட்டுதான் அங்கேயும் குடிப்பாங்க, அதனால தான்" என்றார்.
ஆச்சர்யமாக பார்த்தான் அந்த Bar வெய்ட்டர். சில நாட்கள் கழித்து, இரண்டு கிளாஸ் மட்டும் தரச்சொல்லி மது வாங்கி குடித்தார். இதைக்கண்ட Bar வெயிட்டர் அவரிடம் "ரொம்ப ஸாரி சார்," என்று வருத்தப்பட்டான்.
"ஏம்ப்பா என்னாச்சு" என்றார் அந்தக் குடிமகன்...
"இல்லை எப்போதும் நீங்க உங்க பிரதர்ஸ் ஞாபகார்த்தமா மூணு கிளாஸ்ல வாங்கிக் குடிப்பீங்க. உங்க பிரதர்ல யாரோ ஒருத்தர் இறந்துட்டாங்க போலிருக்கு, அதான் இரண்டு கிளாஸ்ல மட்டும் ஊத்தி குடிக்கிறீங்க" என்றான்.
அந்த இரண்டு கிளாஸ் மதுவை, நிதானமாக சிப் பண்ணி குடித்துக் கொண்டே சொன்னார் துரைச்சாமி, "யாருக்கும் எதுவும் ஆகல, நேத்தோட நான் தான் குடியை நிறுத்திட்டேன்".
😳😳😳
#நக்கல்