#✝️கிறிஸ்துவ ஸ்டேட்டஸ் #✝பிரார்த்தனை #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝பைபிள் வசனங்கள் #⛪கிறிஸ்துவ பிரசங்கம்📕 இரவு செபம் †*
அடுத்தவர் அறியாமல் அயலானுக்கு உதவிடும்போது, ஆண்டவராகிய நீர் கைமாறு அளிக்கின்றீர் என்று எங்களுக்கு கற்றுக் கொடுத்த இயேசுவே! இன்றைய நாள் முழுவதும் உமது அருளுதவியில் எங்களுக்கு அடைக்கலம் கொடுத்து, உமது அன்பு பிள்ளைகளைப்போல் அரவணைத்து காத்து, வழிநடத்தியதற்காக நாங்கள் உம்மைப் போற்றி புகழ்கின்றோம்.
நாங்கள் இயங்குவதும், இருப்பதும் உம்மாலே; உமது அருட்கரம் எங்களோடு இருந்து, அறவழிகாட்டி, வாழ்வு என்னும் பாதையில் அழைத்துச் சென்று, அற்புதங்கள் செய்து வாழ வைத்ததற்காக நன்றி கூறுகின்றோம். அடுத்தவர் தரும் அங்கீகாரம் அல்ல; ஆண்டவராகிய நீர் தரும் அருள் ஆசீர் அபரிமிதமானது என்பதை உணர்ந்து, ஒவ்வொரு செயலையும் உமது மகிமைக்காக செய்ய, நீர் தந்த அருளுக்காக நன்றி கூறுகின்றோம்.
ஆண்டவரே! சிறிய அளவு செய்தாலும், உள்ளத்திலிருந்து கொடுக்கும்போது, உள்ளத்தை உற்றும் நோக்கும் நீர், உரிய கைமாறு செய்வீர் என்பதை உணர்ந்து, எங்களால் முடிந்ததை பிறருடைய வாழ்வுக்காக வழங்கிட, எங்களைத் தூண்டியதற்காக நன்றி கூறுகின்றோம்.
ஆண்டவரே! இந்த இரவு வேளையில் உறங்கச் செல்லும் நாங்கள், உமது அருட்கரங்களை நோக்கி எங்களுடைய புறக்கரங்களை நீட்டுகின்றோம். உமது காயப்பட்ட கரங்கள், எங்களுடைய உள்மனக் காயங்களை ஆற்றி, தேற்றி இளைப்பாறுதல் தந்து, இனிய உணர்வுகளோடு, உறவுகளோடு புதிய நாளை வாழ்ந்திட வழிகாட்ட வேண்டும் என்று, எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம். ஆமென்.
#⛪கிறிஸ்துவ பிரசங்கம்📕 #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝பைபிள் வசனங்கள் #✝பிரார்த்தனை #✝️கிறிஸ்துவ ஸ்டேட்டஸ்
*குழந்தை இயேசுவுக்கு ஜெபம், மன்றாட்டு மற்றும் புகழ்மாலை*
🌷✨🌷✨🌷✨🌷✨🌷
*🌻குழந்தை இயேசு செபம்🌻*
⚜️🌹⚜️🌹⚜️🌹⚜️🌹⚜️
அற்புத குழந்தை இயேசுவே! அமைதியற்ற எங்கள் உள்ளங்களின் மேல் உமது கருணைக் கண்களைத் திருப்பியருளுமாறு தாழ்ந்து, பணிந்து, வணங்கி வேண்டுகிறோம். இரக்கமே உருவான உம் இனிய இதயம் கனிவோடு எங்கள் செபத்தை ஏற்று உருக்கமாக நாங்கள் வேண்டும் இந்த
*(வேண்டியதை உறுதியோடு கேட்கவும்)*
வரத்தை அளித்தருளுமாறு பணிவாக உம்மை கேட்கிறோம்.
எங்களை வாட்டி வதைக்கும் துன்பத் துயரங்களையும் வேதனைச் சோதனைகளையும் நீக்கி உமது திருக்குழந்தை திருப்பருவத்தின் பெயரால் எங்கள் மன்றாட்டை ஏற்றருளும். அதனால் உமது ஆறுதலையும் ஆதரவையும் பெற்று, தந்தையோடும், தூய ஆவியோடும் உம்மை என்றென்றும் நாங்கள் வாழ்த்திப் போற்றுவோமாக
- *ஆமென்🙏🏻*
*குழந்தை இயேசு பாலனிடம் மன்றாட்டு*
🌺🌻🌺🌻🌺🌻🌺🌻
(உன் பாவங்களுக்காக துக்கிப்பதாக இயேசுவிடம் சொல்)
*🙏🏻வல்லமையுள்ள செபம்:🙏🏻*
இனிய இயேசுபாலனே, உம்மை நேசித்து ஆராதித்து உம்முடனே எனது துயரங்களைப் பகிர்ந்து கொள்ள தாழ்ச்சியுடன் வருகிறேன். எனக்குத் தேவையான உதவியை அன்புடன் தருவீர் என்னும் நம்பிக்;கையுடன் வருகிறேன். ஏனெனில் உம்மால் இயலாதது ஒன்றும் இல்லை. பாவத்தினுடையவும், சாத்தானுடையவும் அடிமைத் தனத்திலிருந்து எங்களை மீட்கும்படி எங்கள் மனித சுபாவத்தை எடுத்து எங்கள்மேல் உள்ள அன்பால் நீர் பலவீனர் போல் ஆனீர். உமது நன்மைத்தனத்தில் நாங்கள் நம்பிக்கை வைத்து, 'தந்தாய், இந்த கிண்ணத்தை என்னிடமிருந்து அகற்றியருளும். ஆயினும் என் மனதின்படி அல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகட்டும்' என்று நீர் மரண அவஸ்;தைப்படும் போது சொன்னதையே நானும் சொல்கிறேன்.
சிறுவர்களுக்கு உமது அரசைத்தருவதாக வாககளித்தீரே. சிறுமை நிறைந்த என்னை கண்ணோக்கும். எனது துயரத்தை மகிழ்ச்சியாக மாற்றுவீராக. இவ்விதம் நான் நட்பில் உமது நண்பனாக வளர்வேன். உமது நட்பை பரகதியில் என்றென்றும் அனுபவிப்பேனாக.
*-🙏🏻 ஆமென்.🙏🏻*
*அற்புத குழந்தை இயேசுவுக்குப் புகழ்மாலை*
❣️🌻❣️🌻❣️🌻❣️🌻
ஆண்டவரே இரக்கமாயிரும்-2
கிறிஸ்துவே இரக்கமாயிரும்-2
ஆண்டவரே இரக்கமாயிரும்-2
கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்-2
கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டைக் கனிவாகக் கேட்டருளும்-2
வானகத் தந்தையாகிய இறைவா
எங்கள் மேல் இரக்கமாயிரும்
உலகை மீட்ட, மகனாகிய இறைவா
தூய ஆவியாகிய இறைவா
எங்கள் மேல் இரக்கமாயிரும்
அற்புதக் குழந்தையாகிய இயேசுவே
*(பதில் -எங்கள் மேல் இரக்கமாயிரும்.)*
வியத்தகு முறையில் செயல்படும் ஒப்பற்ற வல்லமையுடைய குழந்தை இயேசுவே...
எங்கள் எண்ணத்தையும் உள்ளத்தையும் ஆய்ந்தறியும் ஞானமுடைய குழந்தை இயேசுவே....
எங்களுக்கு உதவிட என்றும் விரைந்துவரும் நன்மனமுடைய குழந்தை இயேசுவே...
வாழ்க்கையின் முடிவுக்கும், கடைசி கதிக்கும் உமது பராமரிப்பால் எங்களை நடத்திச் செல்லும் குழந்தை இயேசுவே...
உமது உண்மையின் ஒளியால் எங்கள் இதயத்தின் இருளை ஓட்டும் குழந்தை இயேசுவே...
எங்கள் வறுமையை ஒளிக்கும் கொடை வள்ளலாகிய குழந்தை இயேசுவே
துன்புறுவோரைத் தேற்றும் நட்புறவுடைய குழந்தை இயேசுவே...
உமது இரக்கத்தால் எங்கள் பாவங்களை மன்னிக்கும் குழந்தை இயேசுவே...
எங்களைத் திடப்படுத்தும் வல்லமையுடைய குழந்தை இயேசுவே...
தீமைகளை எல்லாம் அகற்றும் ஆற்றலுடைய குழந்தை இயேசுவே...
உமது நீதியால் பாவத்திலிருந்து எங்களைத் தடுத்தாட்கொள்ளும் குழந்தை இயேசுவே...
நரகத்தை வெல்லும் திறமையுள்ள குழந்தை இயேசுவே....
எங்கள் இதயங்களைக் கவரும் எழில் வதனமுள்ள குழந்தை இயேசுவே...
உம் கையில் உலகத்தை ஏந்தும் பேராற்றலுள்ள குழந்தை இயேசுவே...
ஆர்வமற்ற எங்கள் உள்ளங்களை உமது அன்புத் தீயால் பற்றி எரியச் செய்யும் குழந்தை இயேசுவே...
எல்லா நன்மைகளாலும் எங்களை நிரப்பும் குழந்தை இயேசுவே
ஆசீரை அளிக்கின்ற அற்புத கரமுள்ள குழந்தை இயேசுவே...
பக்தர்களின் உள்ளங்களை மகிழச்செய்யும் இனிய பெயருடைய குழந்தை இயேசுவே...
உலகை எல்லாம் நிரப்பும் மாட்சிமையுள்ள குழந்தை இயேசுவே...
கருணை கூர்ந்து. . . *எங்களைப் பொறுத்தருளும் இயேசுவே.*
கருணை கூர்ந்து. . . *எங்கள் மன்றாட்டைக் கனிவாய் கேட்டருளும் இயேசுவே.*
எல்லாத் தீமையிலிருந்து . . . *எங்களை மீட்டு இரட்சித்தருளும் இயேசுவே.*
எல்லாப் பாவத்திலிமிருந்து, அளவற்ற உம் நன்மைக்கு எதிராக எழும் எல்லா அவ நம்பிக்கையிலுமிருந்து
*எங்களை மீட்டருளும் இயேசுவே.*
அற்புதம் புரியும் உமது ஆற்றலுக்கு எதிராக எழும் எல்லாசந்தேகத்திலுமிருந்து
*எங்களை மீட்டருளும் இயேசுவே.*
உமது வழிபாட்டில் ஏற்படும் எல்லாக் குறைபாட்டிலுமிருந்து
*எங்களை மீட்டருளும் இயேசுவே.*
எல்லாத் தீமையிலும், கேட்டிலுமிருந்து
*எங்களை மீட்டருளும் இயேசுவே.*
உமது கன்னித்தாய் தூய மரியாள், வளர்ப்பு தந்தை தூயசூசையப்பர் இவர்களின் பரிந்துரை வழியாக எங்களை நீர் மன்னிக்க வேண்டுமென்று மன்றாடுகிறோம்
*எங்களை மீட்டருளும் இயேசுவே.*
உமது திருக்குழந்தைப் பருவத்தின் பால் எங்களுக்குள்ள அன்பையும், பக்தியையும் காத்து வளர்த்திட வேண்டும் என்று..
*(பதில்:-உம்மை மன்றாடுகிறோம்.)*
அற்புத உம் திருக்கரம் எங்களை விட்டு விலகாதிருக்க வேண்டுமென்று
எண்ணற்ற உமது நன்மைகளை நாங்கள் என்றும் மறவாதிருக்க வேண்டுமென்று
உமது திரு இருதய அன்பால் எஙகள் உள்ளங்களை மேன்மேலும் பற்றி எரியச்செய்ய வேண்டுமென்று..
நம்பிக்கையோடு உம்மை கூவியழைப்போரின் குரலுக்குக் கனிவாய்ச் செவிமடுக்க வேண்டுமென்று...
எங்கள் நாடு அமைதியலே நிலைத்திருக்க அருள்தர வேண்டுமென்று...
எல்லாத் தீமையிலிருந்தும் எங்களை விடுவித்தருள வேண்டுமென்று...
உமது பக்தியிலே நிலைத்திருக்கும் அனைவருக்கும் நித்திய வாழ்வை அளித்தருள வேண்டும் என்று
உம்மை மன்றாடுகிறோம்
பொதுத்தீர்வை நாளிலே இரக்கத்துடன் எங்களுக்கு தீர்ப்பிட வேண்டும் என்று
உம்மை மன்றாடுகிறோம்..
உமது அற்புத திருச்சுரூபபத்திலே எங்களுக்கு ஆறுதலாகவும், அடைக்கலமாகவும் நீர் இருக்க வேண்டும் என்று..
இறைமகனே, மரிமகனே, இயேசுவே
உம்மை மன்றாடுகிறோம்
உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே,
*எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும் குழந்தை இயேசுவே.*
உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே,
*எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் குழந்தை இயேசுவே.*
உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே,
*எங்கள் மேல் இரக்கமாயிரும் குழந்தை இயேசுவே.*
*செபிப்போமாக:-*
🌺🌻🌺🌻🌺🌻🌺🌻
எங்கள் ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசுவே! தேவரீர் சிறு குழந்தையாய்ப் பிறந்து உமது தெய்வீகத்தையும் நீரெடுத்த மனுஷீகத்தையும் சிறுமையான ஸ்ததியில் தாழ்ந்து திருவுளமானீரே, உமக்கே தோத்திரமுண்டாகக் கடவது. உமது பாலத்துவத்தில் உமக்கு உண்டாயிருந்த திவ்விய ஞானத்தையும் பலவீனத்தில் வல்லமையையும் தாழ்ச்சியில் மகிமையையும் நாங்கள் அறிந்து இப்பூலோகத்தில் தாழ்ந்தப்பட்டவராகிய உம்மை ஆராதித்த பின்பு மோட்சத்திலே நீர் அடைந்திருக்கிற மகிமைப் பிரதாபத்தைத் தரிசிக்கவும் நித்திய பேரின்பத்தை அனுபவிக்கவும் கிருபை செய்தருளும் சுவாமி.
*ஆமென்.🙏🏻*
🌸🌻🌸🌻🌸🌻🌸🌻
*👑வெளியீடு👑*
*✝️கத்தோலிக்கன்📖*
*🛡️🗡️ஜெப📿வீரர்கள்🗡️🛡️*
#✝️கிறிஸ்துவ ஸ்டேட்டஸ் #✝பிரார்த்தனை #✝பைபிள் வசனங்கள் #⛪ வேளாங்கண்ணி சர்ச் #⛪கிறிஸ்துவ பிரசங்கம்📕
*புனித சூசையப்பரை*
*நோக்கி ஜெபம், மன்றாட்டு*
*மற்றும் புகழ்மாலை*
🌻🌷🌻🌷🌻🌷🌻🌷🌻🌷
மகா பாக்கியம்பெற்ற அர்ச். சூசையப்பரே! எங்களுடைய துன்ப வேளையில் உமது பரிசுத்த பத்தினியின் உதவியை இரந்து மன்றாடின பின்பு, உமது பாதுகாவலையும் நம்பிக்கையோடு தேடி வருகிறோம். தேவதாயாரான ஜென்ம பாவமில் லாமல் உற்பவித்த அர்ச். கன்னிமரியாயிடத்தில் உமக்குள்ள சிநேகத்தின் பேராலும், திவ்விய குழந்தை சேசுநாதருக்கு நீர் காண்பித்த தந்தைக் குரிய அன்பைக் குறித்தும், உம்மிடத்தில் நாங்கள் கேட்கும் மன்றாட்டு ஏதென்றால்
*🌷(விரும்பியதைக் கேட்கவும்.)🌷*
சேசுக்கிறீஸ்துநாதர் தமது இரத்தத் தால் நமக்காக சம்பாதித்த சுதந்தரத்தை தேவரீர் கிருபையாய்ப் பார்க்கவும் எங்கள் இக்கட்டிலே உமது பலமுள்ள ஒத்தாசையால் துணையா யிருக்கவும் மன்றாடுகிறோம்.
ஓ! திவ்விய குடும்பத்தை உத்தம ஞானத்தோடு நடத்திவந்த கைத்தாதையே! சேசுக்கிறீஸ்து நாதர் தம்முடையவர்களாகத் தெரிந்து கொண்ட ஜனங்களைப் பராமரித்தருளும். ஓ! மிகவும் அன்பு நிறைந்த எங்கள் தகப்பனே! நாங்கள் எவ்வித தப்பிதத்திலும் கேட்டிலும் விழாதபடி எங்களைக் காப்பாற்றும். ஓ! எங்களைப் பாதுகாத்தருளும்படி மேலான வல்லமையுள்ளவரே! நரக சத்துருக்களோடு நாங்கள் செய்யும் யுத்தத்திலே நீர் மோட்ச சிம்மாசனத்திலிருந்து கிருபையாய் எங்களைப் பார்த்து துணையாய் வருவீராக. திவ்ய பாலகன் முன்னாள் சாவின் ஆபத்துக்குத் தப்பித் துக் கொள்ளும்படி தேவரீர் எவ்விதம் ஏதுவாயிருந் தீரோ அவ்விதமே சர்வேசுரனுடைய திருச்சபையை பசாசின் வலையிலும், எவ்வித ஆபத்திலுமிருந்து பாதுகாத்தருளும். உமது பாதுகாவல் இடைவிடாமல் என்றும் இருக்கக்கடவது. உமது புண்ணிய மாதிரிகையாலும், உம்முடைய உதவியின் துணை யாலும் நாங்கள் எல்லோரும் பரிசுத்தமாய்ச் சீவித்து பக்தியாய் மரித்துப் பரகதியின் முடிவில் லாப் பாக்கியம் பெற்று வாழும்படி கிருபை செய்ய உம்மை மன்றாடுகிறோம்.
*🙏🏻ஆமென்.🙏🏻*
🌺🌻🌺🌻🌺🌻🌺🌻🌺🌻
*🙏🏻புனித சூசையப்பரிடம் மன்றாட்டு🙏🏻*
🌺🌻🌺🌻🌺🌻🌺🌻🌺🌻
புனித சூசையப்பரே! உம் அடைக்கலம் மிகவும் மகத்தானது. வல்லமை மிக்கது. இறைவனின் சந்நிதியில் உடனடி பலன் அளிக்க வல்லது. ஏனவே என் ஆசைகளையும், எண்ணங்களையும் உம் அடைக்கலத்தில் வைக்கிறேன்.
உம் வல்லமை மிக்க பரிந்துரையால் உம் திருமகனும் எங்கள் ஆண்டவருமாகிய சேசுவிடம் எங்களுக்குத் தேவையான எல்லா ஆன்ம நலன்களையும் பெற்றுத்தாரும். இதன் வழியாக மறு உலகில் உமக்குள்ள ஆற்றலைப் போற்றி எல்லாம் வல்ல தந்தையாகிய இறைவனுக்கு நன்றியும், ஆராதனையும் செலுத்தக் கடவேன்.
புனித சூசையப்பரே! உம்மையும் உம் திருக்கரங்களில் உறங்கும் சேசுவையும் சதா காலமும் எண்ணி பூரிப்படைய தயங்கியதில்லை. இறைவன் உம்மார்பில் சாய்ந்து தூங்கும் வேளையில் அவரைத் தொந்தரவு செய்ய விரும்பவில்லை. உம் மார்போடு அவரை என் பொருட்டு இணைத்து அணைத்துக் கொள்ளும். என் பெயரால் அவருக்கு நெற்றியில் முத்தமிடும். நான் இறக்கும் தருணத்தில் அந்த முத்தத்தை எனக்குத் தரும்படி கூறும். மரித்த விசுவாசிகளின் ஆன்ம காவலனே எங்களுக்காக மன்றாடும்.
*-🙏🏻 ஆமென்.🙏🏻*
🌷🌿🌷🌿🌷🌿🌷🌿🌷🌿
புனித.சூசையப்பருக்கு
புகழ்மாலை
🌷🌿🌷🌿🌷🌿🌷🌿🌷🌿
🌷சுவாமி கிருபையாயிரும்
🌷கிறீஸ்துவே கிருபையாயிரும்
🌷சுவாமி கிருபையாயிரும்
🌷கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும்.
🌷கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையை நன்றாகக் கேட்டருளும்.
🌷பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
🌷உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
🌷இஸ்பீரீத்து சாந்துவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
🌷அர்ச்சியசிஷ்ட தமதிருத்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
🌷அர்ச்சியசிஷ்ட மரியாயே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
🌷அர்ச்சியசிஷ்ட சூசையப்பரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
🌷தாவீது ராஜாவின் கீர்த்தி பெற்ற புத்திரனே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
🌷பிதாப்பிதாக்களின் மகிமையே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
🌷தேவதாயாரின் பத்தாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
🌷கன்னிமரியாயின் கற்புள்ள காவலனே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
🌷தேவ குமாரனை வளர்த்த தகப்பனே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
🌷கிறீஸ்துநாதரை உற்சாகப்பற்றுதலுடன் காப்பாற்றினவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
🌷திருக்குடும்பத்தின் தலைமையானவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
🌷உத்தம நீதிமானான அர்ச். சூசையப்பரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
🌷உத்தம விரத்தரான அர்ச். சூசையப்பரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
🌷உத்தம விவேகமுடைத்தான அர்ச். சூசை யப்பரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
🌷உத்தம தைரியசாலியான அர்ச். சூசையப்பரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
🌷உத்தம கீழ்ப்படிதலுள்ளவரான அர்ச். சூசை யப்பரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
🌷உத்தம பிரமாணிக்கமுள்ளவரான அர்ச். சூசையப்பரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
🌷பொறுமையின் கண்ணாடியே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
🌷தரித்திரத்தின் அன்பனே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
🌷தொழிலாளிகளுக்கு மாதிரிகையே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
🌷சமுசார வாழ்க்கையின் ஆபரணமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
🌷கன்னியர்களின் காவலனே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
🌷குடும்பங்களுக்கு ஆதரவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
🌷கஸ்திப்படுகிறவர்களுக்கு ஆறுதலே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
🌷வியாதிக்காரர்களுக்கு நம்பிக்கையே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
🌷மரிக்கிறவர்களுக்குப் பாதுகாவலே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
🌷பசாசுக்களை நடுநடுங்கச் செய்பவரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
🌷பரிசுத்த திருச்சபையின் பரிபாலனே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
🌷உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்கள் பாவங்களைப் போக்கியருளும் சுவாமி.
🌻உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும் சுவாமி.
🌷உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்களைத் தயை பண்ணி இரட்சியும் சுவாமி.
🌻கர்த்தர் அவரைத் தமது வீட்டின் எஜமானாக ஏற்படுத்தினார். அவருடைய உடைமைகளையயல்லாம் நடப்பிக்கவும் ஏற்படுத்தினார்.
*மன்றாடுவோமாக*
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
சர்வேசுரா சுவாமி! உம்முடைய மகா அர்ச்சியசிஷ்ட திருமாதாவின் பரிசுத்த பத்தாவாக முத்தரான சூசையப்பரை மனோவாக்குக்கெட் டாத பராமரிக்கையினால் தெரிந்து கொள்ளத் திருவுளமானீரே. பூலோகத்தில் அடியோர்களை ஆதரிக்கிறவரென்று எங்களால் வணங்கப்படுகிற அவர் பரலோகத்தில் எங்களுக்காக மனுப்பேசுகிற வராயிருக்கும்படிக்கு நாங்கள் பாத்திரவான்கள் ஆகத்தக்கதாக, தேவரீர் அனுக்கிரகம் செய்தருள வேணுமென்று மன்றாடுகிறோம். பிதாவோடும் இஸ்பிரீத்துசாந்துவோடும் சதாகாலம் சீவியருமாய் இராச்சிய பரிபாலனம் பண்ணுகிறவருமா யிருக்கிற ஆண்டவரே.
*🙏🏻ஆமென்.🙏🏻*
திரு இருதயத்தின் சிநேகிதராகிய அர்ச். சூசையப்பரே!
எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
*👑வெளியீடு👑*
*✝️கத்தோலிக்கன்📖*
*🛡️🗡️ஜெப📿வீரர்கள்🗡️🛡️*
#⛪கிறிஸ்துவ பிரசங்கம்📕 #✝பைபிள் வசனங்கள் #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝பிரார்த்தனை #✝️கிறிஸ்துவ ஸ்டேட்டஸ்
#✝️கிறிஸ்துவ ஸ்டேட்டஸ் #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝பிரார்த்தனை #✝பைபிள் வசனங்கள் #⛪கிறிஸ்துவ பிரசங்கம்📕
#⛪கிறிஸ்துவ பிரசங்கம்📕 #✝பைபிள் வசனங்கள் #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝பிரார்த்தனை #✝️கிறிஸ்துவ ஸ்டேட்டஸ்
#✝️கிறிஸ்துவ ஸ்டேட்டஸ் #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝பிரார்த்தனை #✝பைபிள் வசனங்கள் #⛪கிறிஸ்துவ பிரசங்கம்📕
#⛪கிறிஸ்துவ பிரசங்கம்📕 #✝பைபிள் வசனங்கள் #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝பிரார்த்தனை #✝️கிறிஸ்துவ ஸ்டேட்டஸ்
#✝️கிறிஸ்துவ ஸ்டேட்டஸ் #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝பிரார்த்தனை #✝பைபிள் வசனங்கள் #⛪கிறிஸ்துவ பிரசங்கம்📕
#⛪கிறிஸ்துவ பிரசங்கம்📕 #✝பைபிள் வசனங்கள் #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝பிரார்த்தனை #✝️கிறிஸ்துவ ஸ்டேட்டஸ்






