B. CELLIN
ShareChat
click to see wallet page
@cellin8516
cellin8516
B. CELLIN
@cellin8516
ஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்
#✝️கிறிஸ்துவ ஸ்டேட்டஸ் #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝பிரார்த்தனை #✝பைபிள் வசனங்கள் #⛪கிறிஸ்துவ பிரசங்கம்📕
✝️கிறிஸ்துவ ஸ்டேட்டஸ் - ShareChat
00:22
#⛪கிறிஸ்துவ பிரசங்கம்📕 #✝பைபிள் வசனங்கள் #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝பிரார்த்தனை #✝️கிறிஸ்துவ ஸ்டேட்டஸ்
⛪கிறிஸ்துவ பிரசங்கம்📕 - ShareChat
00:43
#✝️கிறிஸ்துவ ஸ்டேட்டஸ் #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝பிரார்த்தனை #✝பைபிள் வசனங்கள் #⛪கிறிஸ்துவ பிரசங்கம்📕
✝️கிறிஸ்துவ ஸ்டேட்டஸ் - ShareChat
00:42
#⛪கிறிஸ்துவ பிரசங்கம்📕 #✝பைபிள் வசனங்கள் #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝பிரார்த்தனை #✝️கிறிஸ்துவ ஸ்டேட்டஸ்
⛪கிறிஸ்துவ பிரசங்கம்📕 - ShareChat
00:28
#✝️கிறிஸ்துவ ஸ்டேட்டஸ் #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝பிரார்த்தனை #✝பைபிள் வசனங்கள் #⛪கிறிஸ்துவ பிரசங்கம்📕
✝️கிறிஸ்துவ ஸ்டேட்டஸ் - ShareChat
00:52
#⛪கிறிஸ்துவ பிரசங்கம்📕 #✝பைபிள் வசனங்கள் #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝பிரார்த்தனை #✝️கிறிஸ்துவ ஸ்டேட்டஸ் *👑புனித அந்தோனியாரை👑* *👑நோக்கி ஜெபம், வேண்டுதல் மற்றும் புகழ்மாலை.👑* 💞⚜️💞⚜️💞⚜️💞⚜️💞⚜️💞 இப்புண்ணிய தலத்தில் மாட்சிமை தங்கிய மேலான சிம்மாசனத்தில் கிருபாசனங் கொண்டு எழுந்தருளியிருக்கிற புனித அந்தோணியாரே! தூய்மை துலங்கும் லீலியே! விலைமதிக்கப்படாத மாணிக்கமே! விண்ணுலக மண்ணுலக காவலரே! கஸ்தி துன்பப்படுபவர்களுக்கு பரம சந்சீவியானவரே! பாவிகளின் தஞ்சமே! உமது இன்பமான சந்நிதானம் தேடி வந்தோம். உமது திருமுக மண்டலத்தை அண்ணார்ந்து பார்த்து உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறோம். மகா சிரவணம் பொருந்திய புனித அந்தோணியாரே! சூரத்தனமுள்ள மேய்ப்பரே! பசாசுகளை மிரட்டி ஓட்டுபவரே! திருச்சபையின் கருணையின் கண்ணாடியானவரே! உலகில் எங்கள் ஆதரவும் நீரல்லவோ! எங்கள் தஞ்சம் நீரல்லவோ! எங்கள் மகிழ்ச்சியும், நம்பிக்கையும், பாக்கியமும் நீரல்லவோ! நீர் எங்கள் ஞானத் தந்தை என்பதை எங்களுக்குக் காண்பியும். பிள்ளைகள் செய்த குற்றங்களை தாய் தந்தையர் பாராட்டுவார்களோ? உம்மை தேடிவந்த நிர்பாக்கியர்பேரில் தயவாயிரும். அழுகிறவர்களை அரவணையும். அல்லல்படுகிறவர்களுக்கு ஆறுதலாக வாரும். நீர் இறங்காவிட்டால் எங்களுக்கு வேறு யார் இறங்குவார்? நீர் ஆதரியா விட்டால் எங்களை வேறு யார் ஆதரிப்பார்? நீர் நினையாவிட்டால் எங்களை வேறு யார் நினைப்பார்? நீர் உதவாவிட்டால் எங்களுக்கு வேறு யார் உதவுவார்? தஞ்சமென்று ஓடிவந்த அடியோர்கள் பேரில் தயவாயிரும். பரிசுத்த வெண்மையின் தூய்யதான தாபரமே! தயைக்கடலே! தவிப்பவர்களுக்குத் தடாகமே! தனித்தவர்க்கு தஞ்சமே! உமது இன்பமான சந்நிதானம் ஒடி வந்தோம். துன்பம், பிணி, வறுமை முதலிய கேடுகளினாலே வாடி நொந்தோம். எங்கள் நம்பிக்கை வீண்போகுமோ? எங்கள் மன்றாட்டு மறுக்கப்படுமோ? எங்கள் யாத்திரைகள் பயனற்றதாய்ப் போகுமோ? எங்கள் அழுகைக் கண்ணீர் உம்முடைய இதயத்தை உருக்காது போகுமோ! அப்படி ஆகுமோ? ஐயா எங்களின் அன்பான தகப்பனே! எங்களை முழுவதும் ஒப்புக் கொடுக்கிறோம் எங்களைக் கையேற்றுக் கொண்டு ஆசீர்வதித்தருளும். - *🙏🏻ஆமென்.🙏🏻* ⚜️🎈⚜️🎈⚜️🎈⚜️🎈⚜️🎈⚜️ *புனித அந்தோனியாரிடம் வேண்டும் ஜெபம்* ⚜️🎈⚜️🎈⚜️🎈⚜️🎈⚜️🎈⚜️ எங்கள் பாதுகாவலரான புனித அந்தோணியாரே! மகிமையில் விளங்கிடும் புனித லீலியே...! துன்பப் படுவோரின் துயர் துடைப்பவரே...! அழுவோரின் ஆறுதலே...! உம்மை நாடி நிற்கும் எங்களை உம் அன்பால் அரவணைத்து ஏற்றுக் கொள்ளும். துன்ப துயரங்களிலிருந்து எங்களைக் காப்பாற்றும்! வறுமையில் வாடும் எங்கள் வாழ்வை வளமாக்கும். சோதனைகளை வெல்ல வலிமையைப் பெற்றுத் தாரும். அமைதியின்றி அலையும் எங்களுக்கு ஆறுதல் தாரும். வாழ்வதற்கு அறியாது வருந்தும் எமக்கு வாழ வழி காட்டும். எங்கள் குடும்பங்களையும், பணிகளையும், நில உடைமைகளையும், பாதுகாத்தருளும். நீங்காத நோய்களை உம் வல்லமை நிறைந்த இறை வேண்டலால் எங்களிடமிருந்து நீக்கியருளும். அலகையின் தந்திரங்களிலிருந்தும் அதன் தீய சக்திகள் அனைத்திலிருந்தும் எங்களைப் பாதுகாத்தருளும். *🙏🏻ஆமென்🙏🏻* 🌺🌻🌺🌻🌺🌻🌺🌻🌺🌻 *🙏🏻பதுவை பதியரான புனித அந்தோனியாருக்கு புகழ்மாலை.🙏🏻* 🌺🌻🌺🌻🌺🌻🌺🌻🌺🌻 சுவாமி கிருபையாயிரும் கிறிஸ்துவே கிருபையாயிரும் சுவாமி கிருபையாயிரும் கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையைக் கேட்டருளும் கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையை நன்றாகக் கேட்டருளும் பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா -எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி. உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா -எங்களை இஸ்பிரித்து சாந்துவாகிய சர்வேசுரா -எங்களை தூய தமத்திருத்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா -எங்களை தூய மரியாயே -எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் பக்தி சுவாலகருக்கு ஒத்தவராகிய புனித பிரான்சிஸ்குவே -எங்களுக்காக பதுவைப் பதியரான புனித அந்தோனியாரே -எங்களுக்காக பரமண்டல திருவின் திருப்பெட்டியான புனித அந்தோனியாரே -எங்க.... மூப்பின் கீழமைச்சலுக்குக் கண்ணாடியான புனித அந்தோனியாரே தர்மைத்தை மிகவும் பின் தொடர்ந்தவரான புனித அந்தோனியாரே தர்ம நெறியில் மாறாத மனதை அபேட்சித்தவரான புனித அந்தோனியாரே தூய்மையில் லீலிமலரான புனித அந்தோனியாரே சர்வேசுரனுடைய திருவசனத்தின் தொனிச்சத்தமான புனித அந்தோனியாரே இஸ்பானிய நாட்டுக்கு நட்சத்திரமான புனித அந்தோனியாரே சுவிசேஷத்தை ஊக்கத்துடனே பிரசங்கித்து நடத்தினவரான புனித அந்தோனியாரே இஸ்பிரித்து சாந்துவாகிய சர்வேசுரனுடைய படிப்பினைகளை விரும்பினவரான புனித அந்தோனியாரே அவிசுவாசிகளுக்கு பயங்கரமாக உபதேசித்தவரான புனித அந்தோனியாரே புண்ணியவான்களுக்குக் குறையற்ற படிப்பினையாகிய புனித அந்தோனியாரே மீனாரென்கிற சந்நியாசிகளுக்குப் படிப்பனையாகிய புனித அந்தோனியாரே அப்போஸ்தலருடைய கொழுந்தாகிய புனித அந்தோனியாரே பாவிகளுக்கு வெளிச்சம் கொடுக்கிரவரான புனித அந்தோனியாரே வழிதப்பிப்பி போகிறவர்களுக்குத் துணையான புனித அந்தோனியாரே ஆச்சரியங்களைச் செய்கிறவரான புனித அந்தோனியாரே குற்றமில்லாத ஜனங்களுக்கு ஆறுதலும் பாதுகாவலுமான புனித அந்தோனியாரே ஊமைகளைப் போதிக்கிற உபதேசியாரான புனித அந்தோனியாரே பிசாசுகளை மிரட்டி ஓட்டுகிறவரான புனித அந்தோனியாரே அடிமைப்பட்டவர்களை மீட்கிறவரான புனித அந்தோனியாரே வியாதிக்காரர்களை குணமாக்குகிறவரான புனித அந்தோனியாரே மரணமடைந்தவர்களை சர்வேசுரனுடைய உதவியினாலே உயிர்பித்தவரான புனித அந்தோனியாரே பிறவிக் குருடனுக்கு கண் கொடுத்தவரான புனித அந்தோனியாரே காணமற்போனவைகளைக் காட்டிக் கொடுக்கிறவரான புனித அந்தோனியாரே இழந்துபோன வஸ்துக்களை கண்டெடுக்கச் செய்கிறவரான புனித அந்தோனியாரே வழக்காளிகளுடைய உண்மையைப் பாதுகாக்கறவரான புனித அந்தோனியாரே பரமண்டலத்திற்குச் சுதந்திரவாளியான புனித அந்தோனியாரே தரித்திரருக்கு இரத்தினமான புனித அந்தோனியாரே சமுத்திரத்தின் மச்சங்களுக்கு உபதேசித்தவரான புனித அந்தோனியாரே அப்போஸ்தலருடைய குறையற்ற சுத்திகரத்தை நேசித்தவரான புனித அந்தோனியாரே புண்ணிய மென்கிற ஞானவெள்ளான்மையை பல நாடுகளில் விளைவித்தவரான புனித அந்தோனியாரே உலகம் என்கிற அப்பத்தைப புறக்கணித்தவரான புனித அந்தோனியாரே சமுத்திரத்தில் உபத்திரப்படுகிறவர்களை இரட்சித்தவரான புனித அந்தோனியாரே சிற்றின்ப ஆசையை ஜெயித்தவரான புனித அந்தோனியாரே எண்ணிறந்த ஆத்துமக்களைப் பரலோகத்தில் சேர்பித்தவரான புனித அந்தோனியாரே நஞ்சிருக்கக்கண்டும் போசனம் அருந்தினவரான புனித அந்தோனியாரே நன்நாக்கழியாத நற்தவத்தினரான புனித அந்தோனியாரே புதுமைகளினால் பிரபல்யியமான புனித அந்தோனியாரே திருச்சபையின் தெளிவான தீபமான புனித அந்தோனியாரே ஐம்புலன் வென்றோர்களுடைய சபைக்கு அரணான புனித அந்தோனியாரே சிறு குழந்தை சுரூபத்தைக் கொண்டிருந்த கர்த்தரைக் கையில் ஏந்தின புனித அந்தோனியாரே உலகத்தின் பாவங்களைப் போக்கின்ற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய இயேசுவே எங்கள் பாவங்களைப் போக்கியருளும் சுவாமி உலகத்தின் பாவங்களைப் போக்கின்ற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய இயேசுவே எங்கள் மன்றாட்டை தயவாய் கேட்டருளும் சுவாமி உலகத்தின் பாவங்களைப் போக்கின்ற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய இயேசுவே எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி. புனித அந்தோனியாரே! சூரத்தனமுள்ள மேய்பரே, கஷ்டப்டுகிறவர்களுக்குச் சந்தோஷம் வருவிக்கிறவருமாய் பாவ அக்கினியுடைய சாந்தியைசீக்கிரத்திலே அமர்த்துகிறவரும் உன்னதப் பரம மண்டலங்களில் இருக்கிறவருமான பிதாவானவர். இம்மையினுடைய அவதிக்கு பிற்பாடுஎளியவர்களாயிருக்கிற எங்களுக்கு மோட்ச விருந்து தந்தருளவேண்டுகிறோம். இயேசு கிறிஸ்து நாதருடைய திருவாக்குத்தத்தங்களுக்கு நாங்கள் பாத்திரமாயிருக்கத்தக்கதாக, பதுவைப் பதியரான புனித அந்தோனியாரே -எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். *செபிப்போமாக:-* 🍃🌸🍃🌸🍃🌸🍃 சர்வேசுரா சுவாமி ! உமது ஸ்துதியரும் முத்தப்பேறு பெற்றவருமான தூய அந்தோனியாரை ஸ்துதிக்கிற உமது புனித பத்தினியான திருச்சபையின்பிள்ளைகளெல்லோரும் அவருடைய மன்றாட்டினால் சகல அவசரங்களிலும் உமது உபகார சகாயங்களை அடையும்படியாகவும், நித்தியபேரின்பத்திற்கு பாத்திரமாயிருக்கத் தக்கதாகவும் கிருபை கூர்ந்தருளும். *-🙏🏻ஆமென்🙏🏻* 🍃🌸🍃🌸🍃🌸🍃🌸🍃🌸 *👑வெளியீடு👑* *✝️கத்தோலிக்கன்📖* *🛡️🗡️ஜெப📿வீரர்கள்🗡️🛡️*
⛪கிறிஸ்துவ பிரசங்கம்📕 - ShareChat
#✝️கிறிஸ்துவ ஸ்டேட்டஸ் #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝பிரார்த்தனை #✝பைபிள் வசனங்கள் #⛪கிறிஸ்துவ பிரசங்கம்📕 இரவு ஜெபம்* நாள்தோறும் உமது பேரன்பை, எங்கள் மீது பொழிகின்ற ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே! இன்றைய நாள்முழுவதும் உமது பேரன்பை எங்கள் மீது தாராளமாக பொழிந்து, எங்களுடைய வேலை, பயணம் போன்ற எல்லாவித சூழ்நிலையிலும்; எந்த ஒரு தீயசக்திகளும், பாவச்செயல்களும் எங்களை நெருங்காமல் பாதுகாத்து, உமது ஒளியின் பாதையிலே எங்களை வழிநடத்தியதற்காக, உமக்கு நன்றி செலுத்துகிறோம். இந்த நாள் முழுவதும், நாங்கள் உம் ஆசீர்வாதத்தை பெற, உம் வல்லமையால் எங்கள் வாழ்வையும், எங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதித்தீரே உமக்கு நன்றி ஆண்டவரே. அன்னை மரியாளின் பரிந்துரையும், அன்னை மரியாளின் ஆசிர்வாதமும்.. எங்கள் வாழ்வையும், எங்கள் குடும்பங்களையும் உயர்த்தட்டும் அப்பா. உமது ஆற்றலின் கரம் எங்களோடு இருந்து செயல்பட்டதற்காக நன்றி இயேசுவே. அன்பு இறைவா! இந்த இரவு வேளையில் உமது பேரன்பை எங்கள்மீது பொழிந்து, அமைதியான ஆழ்ந்த உறக்கத்தை தந்து; அதிகாலையில் முழு ஆன்ம, உடல் சுகத்தோடு விழித்தெழுந்து, உமது திருமுகத்தை கானும் வரத்தை எங்களுக்கு தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம். - ஆமென் *நன்றி இயேசுவே* *நன்றி ஆன்டவரே* *மரியே வாழ்க*
✝️கிறிஸ்துவ ஸ்டேட்டஸ் - ShareChat
#⛪கிறிஸ்துவ பிரசங்கம்📕 #✝பைபிள் வசனங்கள் #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝பிரார்த்தனை #✝️கிறிஸ்துவ ஸ்டேட்டஸ் *சேசுக்கிறிஸ்துநாதருடைய திருப்பாடுகளின் தியானங்கள்..!!* (நாளை முதல் தொடர்ந்து நாற்பது நாட்கள், ஒவ்வொரு தியானங்கள் பதிவு செய்யப்படும், பக்தியோடு தியானிப்போம்) *முகவுரை:* சேசுநாதருடைய உருக்கத்துக்குரிய இத்தியானங்கள் எந்த அந்தஸ்திலும் இருக்கக்கூடிய சகல  கிறிஸ்தவர்களுக்கும் மகா பிரயோசனமாயிருக்கும். தியானம் செய்யப் பழகாதவர்கள் முதலாய் இத்தியானங்களில் சொல்லப்பட்டிருக்கும் ஒவ்வொரு நாள் தியானத்தை  சிறுகச் சிறுகக் கவனமாய் வாசித்தால் தியானம் செய்யும் விதத்தைக் கற்றுக் கொள்ளலாம். ஒவ்வொரு தியானத்துக்கு முன் 2 ஆயத்த சிந்தனைகள் குறிக்கப்பட்டிருக்கின்றன. முதல் சிந்தனையில் தியானம் செய்யும் ஒவ்வொருவரும், தான் தியானம் செய்ய இருக்கும் பொருளைப் புத்திக் கண்ணால் பார்ப்பதாக மனதில் ரூபிகரித்துக் கொள்ள வேண்டியது. 2-ம் சிந்தனையில் தியானத்திலே தான் செய்யும் நல்ல பிரதிக்கினையைச் சர்வேசுரன் ஆசீர்வதிக்கவும், அல்லது தான் கேட்கும் மன்றாட்டை அவர் அளிக்கவும் தாழ்ச்சியுடன் வேண்டிக் கொள்ளுகிறது. ஆயத்த சிந்தனையில் இரண்டொரு நிமிஷம் செலவழித்து, இருதயத்தில் பக்தி விசுவாசத்தை எழுப்பி, வாசிக்கப்படும் பொருளைக் குறித்துத் தியானிக்க வேண்டியது. சாதாரணமாக நாள் தோறும் அரைமணி நேரம் தியானம் செய்யப் பழக்கப்பட்டவர்கள், அநேக விசை தியான வேளையில் பக்தி கவனமின்றி வெகு பராக்குக்கும், மனவறட்சிக்கும் உள்ளாகி, யாதோர் பிரயோசனமும் அடையாமல் போவார்கள். அப்பேர்ப்பட்ட சமயத்தில் சேசுநாதருடைய திருப்பாடுகளைக் குறித்துத் தியானம் செய்வார்களேயாகில் மேற்படி குறைகளுக்கு உள்ளாகாமல் அதனால் வெகு ஞானப் பிரயோசனங்களை அடைந்து சாங்கோபாங்கத்தில் (புண்ணியத்தில்) அதிக வளர்ச்சி அடைவார்களென்று அறியவும். அநேக பெரிய அர்ச்சியசிஷ்டவர்கள் சேசுநாதருடைய திருப் பாடுகளைத் தங்கள் அனுதினத் தியானமாகத் தெரிந்து கொண்டார்கள். அப்படியே தேவமாதா சிமியோனுடைய தீர்க்கதரிசனத்தைக்   கேட்டது முதல் தமது மரணபரியந்தம் தமது பிரிய குமாரனுடைய   பாடுகளைக் குறித்து நினைத்து அழுவார்கள். அர்ச். இராபப்பர் நமது கர்த்தருடைய பாடுகளைக் குறித்து நினைக்கும் போது  படும் கஸ்தி அழுகையால் தமது கன்னத்தில் பள்ளம்படும்படி "அவ்வளவு ஏராளமாய்க் கண்ணீர் சொரிந்தார். அர்ச். இஞ்ஞாசியாரும், சிலுவை அருளப்பரும் பாடுகளைக் குறித்துத் தியானம் செய்யும் படி படிப்பித்தார்கள். அர்ச். சவேரியார் திருப்பாடுகளின் மேல் வைத்த விசேஷ பக்தியால் தமது சிலுவைச் சுரூபத்தை விட்டு பிரிய மனமின்றி, அத்திருச்சிலுவையின் இரகசியத்தைக் குறித்து  தியானித்து வருவார். திருச்சபையில் பேர்பெற்ற சாஸ்திரியாகிய  தோமாஸ் அக்குயினாஸ் என்பவர் பாடுபட்ட சுரூபத்தை தமது கண்கள் முன் வைத்து    அதன் பேரில் தியானித்தால் அரிதான  சாஸ்திரங்களை அறிந்து கொண்டார். அர்ச், ஐந்து காய பிரான்சிஸ்கு   என்பவர் சேசுநாதருடைய திருப்பாடுகளை இடை விடாமல் , தியானித்து வந்தபடியால் அதற்குச் சம்பாவனையாக நமதாண்டவர்  தமது ஐந்து காயங்களை அவருடைய சரீரத்தில் பதியச் செய்தார்  அர்ச். லிகோரியாரும், பிரான்சிஸ்கு சலேசியாரும். இன்னும்  கணக்கற்ற அர்ச்சியசிஷ்டவர்களும் திருப்பாடுகளின் பேரில் வெகு பக்தி வைத்துத் தியானித்ததுமன்றி, மற்றவர்களும் இவ்விதம் செய்யும்படி தூண்டி விட்டுப் பாடுகளைக் குறித்து அநேக புத்தகங்களை எழுதி வைத்தார்கள். தமது திருப்பாடுகளின் மேல் விசேஷ பத்தி வைத்து அவைகளை அடிக்கடி தியானிப்பவர்களை நமதாண்டவர் அதிகமாய்க் சிநேகித்து, அவர்களுக்கு ஏராளமான நன்மைகளைச் செய்து வருவாரென்பது சத்தியம். "யாதொருவன் நாம் பாடுபட்ட சுரூபத்தைப் பக்தியோடு எத்தனைவிசை பார்ப்பானோ, அத்தனை விசையும் நாம் நமது இரக்கமுள்ள கண்களை அவன் மேல் திருப்புவோம்” என்று ஜெர்த்துருத்தம்மாளுக்குக் காட்டிய காட்சியில் நமதாண்டவர் திருவுளம் பற்றியிருக்கிறார். ஆகையால் இந்தத் தியானங்களை வாசிக்கும் பக்தியுள்ள ஆன்மாக்களே, சேசுநாதருடைய திருப்பாடுகளின் மேல் விசேஷ பக்தி வைப்பது நமக்கு எவ்வளவு பிரயோசனமென்று நமது கர்த்தருடைய வார்த்தைகளால் தெளிவாய் விளங்குகின்றது. இந்த தியானங்கள் தபசு காலத்துக்காக எழுதப்பட்ட போதிலும், வருஷத்தில் வரும் வெள்ளிக்கிழமைகள் தோறும் இதில்  ஓர் தியானத்தைச் செய்வது உத்தமம்.  திருப்பாடுகளைக் குறித்துத் தியானிக்க போகும் பிரியமுள்ள சகோதர சகோதரிகளே  சேசுநாதர் சுவாமி பாடுபட்டு மரிக்கும்போது நடந்த அற்புதங்கள் உங்கள் இருதயத்திலும் நடக்குமென்பது தப்பாது. பூமி நடுநடுங்கினது போல மண்ணான உங்கள் சரீரம்தான் கட்டிக் கொண்ட பாவ அக்கிரமங்களைக் கண்டு வெட்கி, மனஸ்தாபப்பட்டு தன் ஆத்துமத்துக்கு அடங்கி நடக்கும் கல் மலைகள் பிளந்து தகர்ந்தது போலப் பாறைக்கொப்பான உங்கள் இருதயம் பாடுகளைத் தியானிப்பதால் மெழுகு போல் உருகும். தேவாலயத்தின் திரைச்சீலை இரண்டாய்க் கிழிந்ததுபோல் உங்கள் இருதயத்தை மூடிக்கொண்டிருக்கும் சுகபோக ஆசாபாசப் படலங்கள் அகன்று போகும். கடைசியாய் நமதாண்டவர் மரித்த மூன்றாம் நாள் மகிமையுள்ளவராய் உயிர்த்ததுபோல் நீங்களும் அவர் திருப்பாதம் போய்ச் சேர்வீர்கள் என்பது நிச்சயம். ஆகையால் பக்தியுள்ள ஆன்மாக்களே, இந்த நாற்பது நாட்கள்  திருப்பாடுகளைக் குறித்து அடிக்கடி தியானிக்கறதுமன்றி, மற்றவர்களும் இவ்விதம் செய்யும்படி பிரயாசைப் படுவீர்களாக. ஆமென். கிறிஸ்து இயேசுவில் பிரியமுள்ள சகோதர சகோதரிகளே நாளை முதல் தினமும் ஒரு தியானம் என்று நாற்பது நாட்கள் பதிவு செய்யப்படும். தொடர்ந்து பக்தியோடு தியானித்து, நம்மை ஆண்டவருக்கு உகந்த வாழ்வு வாழ, மரியாயின் மாசற்ற இருதயத்தின் வழியாக அர்ப்பணிப்போம். ஆமென். தொடர்ந்து இனைந்திருங்கள்...
⛪கிறிஸ்துவ பிரசங்கம்📕 - தவக்காலம் புனித வாரங்கள் 2026 Os1.XAYIERS புனித வார நிகழ்வுகள் + + புனித வியாழன் திருநீற்று புதன் (2 ஏப்ரல் 2026) (18 பிப்ரவரி 2026) + புனித வெள்ளி புனித நாட்கள் (3 6UI6b 2026) பு8பிப்ரவரி 28மார்ச் 2026) புனித சனி (4 6UI6b 2026) புனித வாரங்கள் 2026 1 உயிர்ப்பு பெருவிழா குருத்து ஞாயிறு (5 ஏப்ரல் 2026) (29 மார்ச் 2026) STರXAVIER SHRINE IKSTACAAF   YouuBE ] தவக்காலம் புனித வாரங்கள் 2026 Os1.XAYIERS புனித வார நிகழ்வுகள் + + புனித வியாழன் திருநீற்று புதன் (2 ஏப்ரல் 2026) (18 பிப்ரவரி 2026) + புனித வெள்ளி புனித நாட்கள் (3 6UI6b 2026) பு8பிப்ரவரி 28மார்ச் 2026) புனித சனி (4 6UI6b 2026) புனித வாரங்கள் 2026 1 உயிர்ப்பு பெருவிழா குருத்து ஞாயிறு (5 ஏப்ரல் 2026) (29 மார்ச் 2026) STರXAVIER SHRINE IKSTACAAF   YouuBE ] - ShareChat
#✝️கிறிஸ்துவ ஸ்டேட்டஸ் #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝பிரார்த்தனை #✝பைபிள் வசனங்கள் #⛪கிறிஸ்துவ பிரசங்கம்📕
✝️கிறிஸ்துவ ஸ்டேட்டஸ் - Lr) DOYBOSCO MIDU ~ தீருநீற்றுப் பூதன ள்ளதைக் மறைவாய் 2 உங்கள் தந்தையும் காணும் உங்களுக்கு ஏற்ற கைம்மாறு அளிப்பார் மத்தேயு 6.18 Lr) DOYBOSCO MIDU ~ தீருநீற்றுப் பூதன ள்ளதைக் மறைவாய் 2 உங்கள் தந்தையும் காணும் உங்களுக்கு ஏற்ற கைம்மாறு அளிப்பார் மத்தேயு 6.18 - ShareChat
#⛪கிறிஸ்துவ பிரசங்கம்📕 #✝பைபிள் வசனங்கள் #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝பிரார்த்தனை #✝️கிறிஸ்துவ ஸ்டேட்டஸ்
⛪கிறிஸ்துவ பிரசங்கம்📕 - ShareChat
00:11