#✝பிரார்த்தனை #✝பைபிள் வசனங்கள் #✝️கிறிஸ்துவ ஸ்டேட்டஸ் #⛪கிறிஸ்துவ பிரசங்கம்📕 #⛪ வேளாங்கண்ணி சர்ச் அருள் நிறை மந்திரம்.*
*அர்ச்சியசிஷ்டதனமுள்ள பாப்பரசராகிய ஒன்பதாம் பத்திநாதர் நம் இரட்சகருடையவும், அவருடைய வியாகுல மாதாவுடையவும், மிகக்கசப்பான துன்பங்களின் மீது ஆழ்ந்த பக்தி கொண்டிருந்தார். நமது ஆண்டவரின் பாடுகளையும், அவரது திருமாதாவின் வியாகுலங்களையும் அடிக்கடி தியானிப்பது, பாவிகளை மனந்திருப்பவும், மனஸ்தாபம், தவம், பரிகாரம் ஆகியவற்றிற்கான ஒரு நிலையான தூண்டுதலை அவர்களுக்குத் தரவும், மிகப்பயனுள்ள ஒரு வழியாக அவருக்குத் தோன்றியது. எனவே 1847-ல் அவர் வியாகுல மாதாவுக்குத் தோத்திரமாக இயற்றப்பட்ட ஒரு புதிய அருள்நிறை மந்திரத்தை அங்கீகரித்தார். அந்த ஜெபம் பின்வருமாறு:*
*வியாகுலங்கள் நிறைந்த மரியாயே வாழ்க, சிலுவையில் அறையப்பட்டவர் உம்முடனே. பெண்களுக்குள் மிகுந்த இரக்கத்திற்குத் தகுதியுள்ளவர் நீரே, உம்முடைய திருவயிற்றின் கனியாகிய சேசுவும் மிகுந்த இரக்கத்திற்குத் தகுதியானவரே. அர்ச். மரியாயே, சிலுவையில் அறையப்பட்டவரின் மாதாவே, உம்முடைய திருக்குமாரனை சிலுவையில் அறைந்த நாங்கள், மனஸ்தாபக் கண்ணீரை இப்பொழுதும், எங்கள் மரண நேரத்திலும் பெற்றுக் கொள்ளும்படியாக, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும். ஆமென்.*
#⛪ வேளாங்கண்ணி சர்ச் #⛪கிறிஸ்துவ பிரசங்கம்📕 #✝பைபிள் வசனங்கள் #✝️கிறிஸ்துவ ஸ்டேட்டஸ் #✝பிரார்த்தனை
#✝பிரார்த்தனை #✝️கிறிஸ்துவ ஸ்டேட்டஸ் #✝பைபிள் வசனங்கள் #⛪கிறிஸ்துவ பிரசங்கம்📕 #⛪ வேளாங்கண்ணி சர்ச்
#⛪ வேளாங்கண்ணி சர்ச் #⛪கிறிஸ்துவ பிரசங்கம்📕 #✝பைபிள் வசனங்கள் #✝️கிறிஸ்துவ ஸ்டேட்டஸ் #✝பிரார்த்தனை
#✝பிரார்த்தனை #✝️கிறிஸ்துவ ஸ்டேட்டஸ் #✝பைபிள் வசனங்கள் #⛪கிறிஸ்துவ பிரசங்கம்📕 #⛪ வேளாங்கண்ணி சர்ச் இணைந்து செபிப்போம்*
*ஆண்டவரே இயேசுவே, வானில் நின்று இறங்கிய தேவ மைந்தரே! உம்மை ஆராதிக்கின்றேன். இயேசுவே! திவ்விய திருச்சிலுவையே! உம்மை அன்பு செய்கின்றேன். எனக்காய் சிலுவையில் மரித்தவரே! உம்மை முழுமனதுடன் வணங்குகின்றேன்.*
*“பலிப் பீடத்தின்முன் உங்கள் காணிக்கையை வைத்துவிட்டுப் போய், முதலில் அவரிடம் நல்லுறவு ஏற்படுத்திக்கொள்ளுங்கள். பின்பு வந்து உங்கள் காணிக்கையைச் செலுத்துங்கள்” என்று, இன்றைய இறைவார்தையின் மூலமாய், இறைவனுக்கு உகந்த பலி, மனம்மாறிய நொருங்கிய அன்பு இதயமே என்று அறிவுரை தந்து, மனம்மாற அழைக்கின்ற அன்பிற்காக நன்றி கூறுகின்றேன். இயேசுவே! இந்தத் தவகாலத்துக்குள் பயணித்துக் கொண்டிருக்கும் நான்; என் பாவங்களை நினைத்து மனம் வருந்தவும், புது உருமாற்றம் பெற்று அவற்றை இனி என் வாழ்வில் செய்யாமல் இருக்கவும், உமது தெய்வீகச் சிலுவையால் என்னை வழிப்படுத்தி உம்மில் திடப்படுத்தும். எனக்காய் உடைக்கப்பட்டவரே! உம்மை இன்னும் அதிகமாய் அன்பு செய்ய, அறிந்து கொள்ள, தூய ஆவியின் வல்லமை தாரும். சிலுவையில் தொங்கியபோதும், என் மீது தாகம் கொண்டு, இறைவனிடம் பரிந்து பேசியவரே! உம்மோடு தங்க, விண்ணகத்தில் உம்மைத் துதித்து மகிழ, வரம் தாரும்.*
*இயேசுவே ஆண்டவரே! இந்த நாள் என் வாழ்வின், என் குடும்பத்தில் மனமாற்ற நாளாக மாற அருள் தாரும். “தீயவரின் சாவையா நான் விரும்புகிறேன்? அவர்கள் தம் வழிகளினின்று திரும்பி வாழவேண்டும் என்பதன்றோ என் விருப்பம்” என்ற வார்தையால், வாழ்வளிக்க வேண்டும் என்று, இயேசுவின் தூய கல்வாரி நாமத்தில் செபிக்கிறேன். ஆமென்.*
நன்றி - தமிழ் ஆன்மீக பணியகம்
#⛪கிறிஸ்துவ பிரசங்கம்📕 #✝பைபிள் வசனங்கள் #✝️கிறிஸ்துவ ஸ்டேட்டஸ் #✝பிரார்த்தனை
#⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️கிறிஸ்துவ ஸ்டேட்டஸ் #✝பிரார்த்தனை #✝பைபிள் வசனங்கள் #⛪கிறிஸ்துவ பிரசங்கம்📕
#⛪கிறிஸ்துவ பிரசங்கம்📕 #✝பைபிள் வசனங்கள் #✝️கிறிஸ்துவ ஸ்டேட்டஸ் #✝பிரார்த்தனை #⛪ வேளாங்கண்ணி சர்ச்
#⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️கிறிஸ்துவ ஸ்டேட்டஸ் #✝பிரார்த்தனை #✝பைபிள் வசனங்கள் #⛪கிறிஸ்துவ பிரசங்கம்📕
#⛪கிறிஸ்துவ பிரசங்கம்📕 #✝பைபிள் வசனங்கள் #✝பிரார்த்தனை #✝️கிறிஸ்துவ ஸ்டேட்டஸ் #⛪ வேளாங்கண்ணி சர்ச்







