yalinypoonki
ShareChat
click to see wallet page
@ipoongulali032
ipoongulali032
yalinypoonki
@ipoongulali032
ஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்
#பொதுமக்கள் விருப்பம் @ #👌அருமையான ஸ்டேட்டஸ்
பொதுமக்கள் விருப்பம் @ - ShareChat
00:15
#👌அருமையான ஸ்டேட்டஸ் #பொதுமக்கள் விருப்பம் @
👌அருமையான ஸ்டேட்டஸ் - ShareChat
00:15
#பொதுமக்கள் விருப்பம் @*திருமலை திருப்பதி பிரம்மோற்சவத்தில் இன்று காலை* *மலையப்ப சுவாமி தாயார்கள் உடன் கற்பக விருட்சம் வாகனத்தில் பக்தர்களுக்கு அருட்காட்சி. 27.9.25
பொதுமக்கள் விருப்பம் @ - ShareChat
00:27
#👌அருமையான ஸ்டேட்டஸ் #பொதுமக்கள் விருப்பம் @
👌அருமையான ஸ்டேட்டஸ் - ShareChat
#பொதுமக்கள் விருப்பம் @ #👌அருமையான ஸ்டேட்டஸ் #அழகிய குழந்தைகள்
பொதுமக்கள் விருப்பம் @ - ShareChat
00:08
#🖌பக்தி ஓவியம்🎨🙏 #பொதுமக்கள் விருப்பம் @ #👌அருமையான ஸ்டேட்டஸ்
🖌பக்தி ஓவியம்🎨🙏 - ShareChat
01:19
#🛕புரட்டாசி மாதம் வழிபாடு #👌அருமையான ஸ்டேட்டஸ் #பொதுமக்கள் விருப்பம் @ #🖌பக்தி ஓவியம்🎨🙏
🛕புரட்டாசி மாதம் வழிபாடு - ShareChat
00:07
#🛕புரட்டாசி மாதம் வழிபாடு #பொதுமக்கள் விருப்பம் @ #👌அருமையான ஸ்டேட்டஸ் #🖌பக்தி ஓவியம்🎨🙏
🛕புரட்டாசி மாதம் வழிபாடு - கந்தனே போற்றி கந்தனே போற்றி - ShareChat
எப்படிப்பட்ட துன்பமாக இருந்தாலும் அதில் இருந்து விடுபட காக்கும் கடவுளான பெருமாளை, புரட்டாசி மாதத்தில் சரணடைந்தால், துன்பங்களை நீக்கி, பெருமாள் நம்மை காத்து அருள்வார் என்பது நம்பிக்கை. பொதுவாக எந்த மாதமாக இருந்தாலும் சனிக்கிழமையில் விரதம் இருந்து, பெருமாளை வழிபடுவது நல்லது. அப்படி மற்ற மாதங்களில் வரும் சனிக்கிழமைகளில் விரதம் இருந்து பெருமாளை வழிபட முடியாமல் போனாலும், புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் விரதம் இருந்து, பெருமாளை வழிபடுவதால் பல மடங்கு அதிகமான பலன் கிடைக்கும். பெருமாளின் அருளும், சனி பகவானின் அருளும் கிடைக்கும். சனி பகவானால் ஏற்படும் தொல்லைகள் குறையும். புரட்டாசி மாதம், பெருமாள் மாதம் என்பதால் இந்த மாதத்தில் திருப்பதி ஏழுமலையானை வழிபடுவதால் இரண்டு மடங்கு பலன் கிடைக்கும். புரட்டாசி மாதத்தில் சனிக்கிழமை விரதம் மட்டுமின்றி அனந்த பத்மநாப விரதம், ஏகாதசி விரதங்களும் சிறப்பு மிக்கவையாகும். இந்த ஆண்டு புரட்டாசியின் முதல் நாளிலேயே ஏகாதசி விரதம் அமைந்திருப்பது மிகவும் விசேஷமானதாகும். இந்த நாளில் பெருமாளுக்கு துளசியால் அர்ச்சனை செய்வதும், துளசி மாலை படைத்து வழிபடுவதும் மிகவும் சிறப்புக்குரியதாகும். புரட்டாசி மாதத்தின் முதலில் பெருமாளுக்கு மாவிளக்கு, தளிகை போட்டும் வழிபடலாம். அன்றைய தினம் திருப்பதி ஏழுமலையானை மனதார நினைத்து வழிபடலாம். பெருமாளுக்குரிய மந்திரங்களை சொல்லுவதும், விஷ்ணு சகஸ்ரநாமம் படிப்பதும் பெருமாளின் பரிபூரணமான அருளை பெற்றுத் தரும் #காலை வணக்கம் நண்பர்களே #👌அருமையான ஸ்டேட்டஸ் #பொதுமக்கள் விருப்பம் @ #தேய்பிறை சர்வ ஏகாதேசி #🙏 வைகுண்ட ஏகாதேசி பெரு விழா 🙏
காலை வணக்கம் நண்பர்களே - ShareChat
00:15
*பாம்புக்கு_பால்_வார்த்த_கதை* *ஸ்ரீகிருஷ்ணின் தந்திரம்* இதுவரை கேட்டிராதது... பாண்டவர்களும் திரௌபதியும் எல்லோரையும் பந்தியில் உபசரித்து உணவு பரிமாறினார்கள். துரியோதனன், துச்சாதனன், கர்ணன், சகுனி முதலானோர் வரிசையாக அமர்ந்திருந்தனர். திரௌபதி பரிமாறிக் கொண்டே துரியோதனன் இலைக்கு அருகில் வந்தாள். அவளை அவமானப்படுத்த எண்ணிய துரியோதனன், *ஐவரின் பத்தினியே... இன்று யாருடைய முறை?'*' என்று கேட்டான். *திரௌபதிக்குத் தூக்கி வாரிப் போட்டது. நாடி நரம்புகளெல்லாம் தளர்ந்தன. அவளால் அந்தக் கேள்வியை ஏற்க முடியவில்லை. செய்வதறியாது, பரிமாறுவதை நிறுத்திவிட்டு உள்ளே ஓடினாள்.* *கண் கலங்கினாள்.* அதேநேரம் அங்கு தோன்றினார் ஸ்ரீகிருஷ்ணர். *கலங்காதே திரௌபதி! நடந்ததை நானும் கவனித்தேன். எல்லோர் முன்னிலையிலும் உன்னை அவமானப்படுத்தி அழவைக்க நினைத்திருக்கிறான் துரியோதனன். அவனுக்கு பாடம் கற்பிக்கலாம். நான் சொல்வது போல் செய்.* நீ மீண்டும் உணவு பரிமாறப் போ! துரியோதனன் மீண்டும் உன்னிடம் அதே கேள்வியைக் கேட்டு, *'ஏன் பதில் கூறவில்லை?’* என்பான். உடனே நீ, *'தக்ஷகன் முறை’* என்று சொல். *அதன் பிறகு துரியோதனன் அந்த இடத்திலேயே இருக்க மாட்டான்'*' என்றார் பகவான். கிருஷ்ணனின் வார்த்தையைத் தட்டமுடியாமல் விருந்து மண்டபத்துக்குச் சென்றாள் திரௌபதி. துரியோதனன் இலை அருகில் அவள் வந்ததும், விஷமத்துடன் அதே கேள்வியை மீண்டும் கேட்டான். *'எனக்குப் பதில் கூறவில்லையே... இன்று யாருடைய முறை?'* ஸ்ரீகிருஷ்ணன் சொல்லியனுப்பியது போலவே, இன்று தக்ஷகன் முறை' என்று பளிச்சென பதில் தந்தாள் திரௌபதி. *அதைக் கேட்டு விஷ நாகம் தீண்டியது போன்று அதிர்ந்தான் துரியோதனன். சட்டென எழுந்து அங்கிருந்து வெளியேறினான்.* திரௌபதிக்கு ஆச்சரியம். கண்ணனிடம் ஓடோடி வந்தாள். *''கண்ணா! இதென்ன மாயம்? யாரந்த தக்ஷகன்? அவன் பெயரைக் கேட்டதும் துரியோதனன் ஏன் இப்படிப் பேயறைந்தாற்போல் பதறி, பயந்து ஓடுகிறான்?''* என்று கேட்டாள். கண்ணன் அதற்கான காரணத்தையும் கதையையும் சொன்னான். *துரியோதனனின் மனைவி பானுமதி மகா பதிவிரதை. கணவனையே தெய்வமாகக் கருதும் உத்தமி. ஆனால், துரியோதனனோ பாண்டவர்களின் ராஜ்ஜியத்தை அடைவதில் குறியாக இருந்தான். மனைவியிடம் அன்புடன் பேசக்கூட அவனுக்கு நேரம் இல்லை.* திருமணமாகி மாதங்கள் பல கடந்தும், மண வாழ்க்கையின் பயனை அடையும் பாக்கியம் பானுமதிக்குக் கிட்டவில்லை. அவனது அன்புக்காக ஏங்கினாள். தெய்வங்களை வேண்டினாள். அவள் தவம் பலிக்கும் வேளை வந்தது. *ஒருமுறை, முனிவர் ஒருவர் பானுமதியின் துயர் நீக்கும் வழி ஒன்றைக் கூறினார். மகிமை மிக்க மூலிகை வேர் ஒன்றை மந்திரித்து அவளிடம் கொடுத்து, அதைப் பாலில் இட்டு கணவனுக்குக் கொடுக்கும்படி கூறினார் முனிவர்.* பானுமதியும் அதன்படியே பால் காய்ச்சி, அதில் இனிப்பும் இன்சுவையும் சேர்த்து, முனிவர் தந்த வேரையும் அதில் இட்டு, கணவனின் வருகைக்காகக் காத்திருந்தாள். அன்று பௌர்ணமி. *இரவின் இரண்டாம் யாமத்தில் அந்தப்புரம் வந்தான் துரியோதனன். அப்போது அவன் மது அருந்தியிருந்தான். பால் அருந்தும் மனோநிலையில் அவன் இல்லை. ஆசையுடன் மனைவி நீட்டிய பால் கிண்ணத்தைப் புறங்கையால் ஒதுக்கினான்.* கை தவறிய கிண்ணத்தில் இருந்த பால் தரையில் சிந்தியது. அப்போது அங்கே சென்றுகொண்டிருந்த 'தக்ஷகன்’ எனும் நாகம் அந்தப் பாலைச் சுவைத்தது. *தக்ஷகன் சர்ப்பங்களின் ராஜன். பாலைப் பருகியதும் அதிலிருந்த வேரின் வசிய சக்தியால், அவனுக்குப் பானுமதி மீது ஆசையும் நேசமும் பிறந்தது.* உடனே அவன் அவள் முன் தோன்றித் தன் ஆவலை வெளியிட்டான். தன்னை வருந்தி அழைத்தது அவள்தான் என்றும் வாதாடினான். பதிவிரதையான பானுமதி பதறினாள்; துடிதுடித்தாள். *துரியோதனனுக்குத் தன் மனைவியின் உயர்ந்த கற்பு நெறி பற்றி நன்கு தெரியும். தான் அவளது அன்பையும் பிரேமையையும் புரிந்து நடக்காததால் விளைந்த விபரீதத்தை எண்ணித் தவித்தான்.* தக்ஷகன் கால்களில் விழுந்து தன் மனைவியின் கற்பைக் காக்க வேண்டினான். *தக்ஷகன் பாம்பு எனினும் பண்பு மிக்கவன். பாலில் கலந்திருந்த வேரின் சக்தியால் உந்தப் பெற்றதால்தான், அவன் உள்ளம் பானுமதியை விரும்பியது. எனினும், அவளுக்குக் களங்கம் விளைவிக்க அவன் விரும்பவில்லை.* அதே நேரம், அவளின் அன்பை இழக்கவும் தயாராக இல்லை. எனவே ஒரு நிபந்தனை விதித்தான். *'அந்தப்புரத்தில் அமைந்துள்ள அரச விருட்சத்தின் அடியில் உள்ள புற்றுக்கு, பௌர்ணமிதோறும் பானுமதியைக் காண வருவேன்.* *பானுமதி புற்றில் பால் ஊற்றி என்னை உபசரித்து, வணங்கி அனுப்ப வேண்டும். அப்போது அவள் கற்புக்குக் களங்கம் இல்லை என்பதற்குச் சாட்சியாக அவளின் கணவனான துரியோதனனும் என்னை வணங்க வேண்டும்’* என்று கூறிவிட்டு மறைந்தான் தக்ஷகன். அன்று முதல் இன்றுவரை பௌர்ணமி தோறும் பாம்புக்குப் பாலூற்றி வருகிறாள் பானுமதி. துரியோதனனும் பயபக்தியோடு பங்குகொள்கிறான். *இந்தச் சம்பவம் துரியோதனனுக்கும் பானுமதிக்கும் தக்ஷகனுக்கும் மட்டுமே தெரியும். 'இதனை வெளியே யாரிடமும் சொல்வதில்லை’ என்பது அவர்களுக்குள் செய்து கொண்ட ஒப்பந்தம். இதை நீ கூறியதுதான் துரியோதனனின் அதிர்ச்சிக்குக் காரணம்''* என்றார் ஸ்ரீகிருஷ்ணர். துரியோதனனால் தனக்கு நேர்ந்த அவமானத்தைத் துடைத்து ஆறுதல் கூறிய கண்ணனுக்கு நன்றி கூறினாள் திரௌபதி. *இதை தான் நம் பெரியோர்கள் பாம்புக்கு பால் வார்த்த கதை என்று சொல்வது வழக்கத்தில் வந்தது* என்று எத்தனை பேர்களுக்கு தெரியும் ? *"ஸ்ரீ கிருஷ்ணா உன் திருவடிகளே சரணம்"* #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #பொதுமக்கள் விருப்பம் @ #👌அருமையான ஸ்டேட்டஸ் #🙏 வைகுண்ட ஏகாதேசி பெரு விழா 🙏 #காலை வணக்கம் நண்பர்களே
😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் - ShareChat