
⋆⋇💥꧁🅱🅷🅰🅺🆃🅷🅴🅴🔥꧂💥⋇⋆
@jai_sree_ramm
🕉 இறைவன்⚛️ இருக்க✡️ பயமேன்🕉
பட்டு வேஷ்டி
இன்று இந்தக் கதையில் வருபவர் விசித்ரமானவர். பாண்டு ரங்கனின் மீது கொள்ளை பிரேமை கொண்டவர். அவர் பெயர் யோகி ப்ரேமானந்தர். அவருடைய வழக்கமான வேலை விடிகாலை எழுந்ததும் நதிக்கு செல்வது. நீராடுவது. விட்டலனுக்கு பிரார்த்தனை. பிறகு ஷோடசோபசாரம் செய்து 700 நமஸ்காரம் பண்ணுவது. நம்மால் நினைத்துப் பார்க்கவாவது முடியுமா?. அதற்கப்புறம் பகவத் கீதை பாராயணம். மறுபடியும் நமஸ்காரம். பிறகு தான் இலையில் சோறு . என்ன பக்தி பார்த்தீர்களா. இப்படி பகவானுக்கு பிரார்த்தனை பண்ணாமல் சாப்பிட உட்காருவது நாய் சோற்றைக்கண்டதும் பறந்து தாவி உண்பது போல என்பார். ஆனால் பூச்சி,, பறவை இனம் மிருகங்களுக்கு மனிதர்களின் சாஸ்திரம் பொருந்தாது என்றும் தலை ஆட்டுவார். எப்போது கிடைப்பதற்கு அறிய மனிதப்பிறவி எடுத்துவிட்டோமோ அதற்கேற்ப அதை இதுவரை பல ஜன்மங்களில் செய்த பாபங்களைப்போக்க நல்ல விதமாக உபயோகிக்க வேண்டாமா? நல்லவைகளைச் செய்து , நல்ல எண்ணம் , மனம், சாது ஜன சத் சங்கம் இவைகளை அடைவதால் பாபம் குறைய வழி உண்டே.
ஒரு சுருக்கு வழி இருக்கிறது. எங்கெங்கோ புண்ய நதி, ஸ்தலம், கோவில் குளம் என்று தேடி ஓட வேண்டாம். உட்கார்ந்த இடத்திலேயே ஸ்ரீ கிருஷ்ணனை, பாண்டுரங்கனை, ராமனை, சிவனை நினைத்தாலே போதும். அந்த சகல புண்ய பலனும் கிட்டும். நாம ஜபம் தான் கலியுகத்தில் கண் கண்ட மருந்து. இது ரகசியம் இல்லை. யாவரும் அறிந்தது. பின் ஏன் மனம் அதில் செல்லவில்லை? அந்த அனுபவம் அதன் சொல்லொணா இன்பம் ஆனந்தம் புரியவில்லை!! அதனால் தான். திருப்பதியிலேயே இருப்பவன். ஸ்ரீரங்கத்திலேயே இருப்பவன் பெருமாளை என்றோ ஒரு நாள் தான் தரிசிப்பது போல அவனுக்கு தக்க நேரமும் காலமும் குரு உபதேசமும் கிட்டினால் புரிந்துகொள்வான். அது வரை அவஸ்தைப் படுவதற்கு அவன் தயாராக இருக்கும்போது நாம் என்ன சொல்ல முடியும். செய்ய முடியும்.
நாம் யோகி ப்ரேமானந்தர் பற்றி மேலே பேசுவோம். அவர் மனத்தில் பாண்டுரங்கன் சதா சர்வகாலமும் இருந்தான். இன்பம் தந்தான்.
ஒருநாள் அந்த ஊருக்கு ஒரு பட்டுத்துணி வியாபாரி வந்தான். விட்டலன் கோவிலுக்கு சென்றான். அந்த நேரம் பார்த்து திடீரென்று விடாத இடி இடித்து பெரிய மழை. வானம் பொத்துக்கொண்டது. சள சள வென்று பெய்த மழையில் தரை மண்ணெல்லாம் சேரும் சகதியுமாகியது. வியாபாரியின் பார்வை தூரத்தில் இதெல்லாம் சற்றும் லக்ஷியம் செய்யாத ஒரு சாமியார் மேல் சென்றது. நமது ப்ரேமானந்தர் தான். பாண்டுரங்கனை நோக்கி கோவில் வாசலில் நமஸ்காரம் செய்துகொண்டிருந்தார். ஒன்றா இரண்டா. வழக்கமான 700 ஆச்சே. ''அடடா என்ன பக்தி இவருக்கு. மழை, சேர் சக்தி எதையுமே லட்சியம் செய்யவில்லையே. சந்தோஷத்தோடு அல்லவா நமஸ்காரங்கள் விடாமல் பண்ணிக்கொண்டிருக்கிறார். '' மழை விட்டது. கையில் வைத்திருந்த மூட்டையிலிருந்து ஒரு நல்ல விலையுயர்ந்த வட்டு வேஷ்டியை எடுத்தான் வியாபாரி. அதை யோகியிடம் கொடுத்தான்.
'' சுவாமி, தாங்கள் இதை உடுத்திக்கொள்ளுங்கள் '' என்றான். நமஸ்காரம் பண்ணினான். அவர் பார்த்தார். தலையை ஆட்டினார்.
'' எனக்கெதற்கு இதெல்லாம். கிழிசல் துணி ஏதாவது இருந்தால் கொடு. அது போதுமே. நான் அன்றாடம் பிக்ஷை எடுத்து அதில் கிடைப்பதை உண்பவன். அது தொந்தரவு இல்லாமல் என்னுடைய வேலையை செய்ய உதவும்.''
''இல்லை சுவாமி, இது நீங்கள் உடுத்திக்கொள்ள வேண்டும் என்று எனக்கு ஆசை''
'
'தப்பு அப்பனே, இதை பாண்டுரங்கனுக்கு சாற்றினால் அவனை கண்ணாரப் பார்க்கலாம்.. அவன் உனக்கு சர்வ மங்களமும் தருவான்'' வியாபாரி காதில் இது ஏறவில்லை. பக்தி மிகுதியால் தானே அவர் இடுப்பில் அந்த பட்டு வேஷ்டியை கட்டிவிட்டான். அவனுக்குத் தெரியவில்லை, பறவைக்கு நீரும், பசுவுக்கு புல்லும் தான் தேவை என்று. வேருக்கு நீர் வார்த்தால் புஷ்பங்களும் காய் கனிகளும் கிடைக்கும். வியாபாரி போய்விட்டான். யோகி திரு திருவென்று விழித்தார். அந்த பள பள துணியை எடுத்து இடுப்பில் சொருகிக்கொண்டார். நமஸ்காரம் பண்ணும்போது மண் பட்டு அழுக்காகாமல் பார்த்துகொள்வது கஷ்டமாக இருந்தது. வழக்கமாக சுலபமாக சந்தோஷத்தோடு பண்ணும் நமஸ்காரம் இப்போது தடை பட்டது. வெயில் ஏறியது. வியர்த்துக் கொட்டியது. பசியை அடக்கிக்கொண்டு பண்ணவேண்டிய நமஸ்காரங்களை பண்ணினார். முடியவில்லை. எண்ணம் பட்டு வேஷ்டி மீது சென்றது இடைஞ்சலாக இருந்தது. நமஸ்காரம் முடியாமல் சாப்பாடு கிடையாதே. வியர்த்து களைத்தார் .
''எனக்கு இன்று ஏன் இப்படி ஒரு தண்டனை?'' புரியவில்லையே? அடேடே எப்படிப்பட்ட சர்வ முட்டாள் நான்.
''இந்த பட்டு வேஷ்டிஅல்லவோ என்னை நிலை குலைய வைத்துவிட்டது. காரியம் கெட்டு குட்டிச் சுவராகி விட்டதே. பூரண சந்திரனை ராகு பிடித்து கவ்வியது போல் இந்த வேஷ்டி என்னை விழுங்கிவிட்டதே. எனக்கும் விஷ்ணுவுக்கும் இடையே ஒரு வேஷ்டியா எதிரியானது?''
இந்த வேஷ்டிக்கு இடம் கொடுத்த இந்த உடம்புக்கு ஒரு சரியான தண்டனை உடனே கொடுத்தாக வேண்டுமே என்ன செய்யலாம்? என்று யோசிக்கும்போது '' சரி காட்டுக்கு செல்வோம். நிறைய காய்ந்த கட்டைகளை தீமூட்டி தீக்குளித்தால் தான் சரியாகும். இல்லை பேசாமல் ஏதாவது புண்ய நதியில் மூழ்கி இந்த உடலை விடலாமா? விட்டலன் அப்போது தான் மன்னிப்பான். கோவில் வாசலில் அமர்ந்து எதைச் செய்யலாம் என்று யோசித்தார்.
அந்தப் பக்கமாக ஒரு ரெட்டை மாட்டு வண்டிக்காரன் வந்தான். அவனை நிறுத்தினார்.
''உனக்கு ஒரு விலை உயர்ந்த இந்த பட்டு வேஷ்டி தரேன். உன் ரெட்டை மாட்டையும் அவற்றை பிணைத்திருக்கும் கழுத்தில் இருக்கிற கட்டையோடு தருகிறாயா ?''
தனது தொத்தல் மாட்டால் இவ்வளவு பெரிய வருமானம் கிடைக்கும் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. ஆச்சர்யத்தோடு ஒப்புக்கொண்டான்.
''என் கால் இரண்டையும் இந்த கட்டையில் கட்டு''.
அவன் யோசிக்க, '' சொன்னதைச் செய்'' என்றார் யோகி. கால்கள் ரண்டையும் ரெண்டு மாட்டுக்கும் இடையே கட்டையில் பிணைத்தான்.
''மாட்டை விரட்டு'' .
சுளீர் என்று சாட்டை யடி விழுந்ததும் ரெண்டு மாடுகளும் ஓடின. இடையே கட்டையில் யோகி புரண்டுகொண்டு தொடர்ந்தார். மாடுகள் தலைதெறிக்க ஓடின. நிற்கவே இல்லை. யோகியின் உடல் கிழிந்தது. ரத்தம் ஆறாக பெருக சதை பிய்ந்துகொண்டே வந்து கடைசியில் வெறும் எலும்புகள் மட்டும் தேயும் நிலை. அவர் உயிர் கொஞ்சம் இன்னும் ஊசலாடிக்கொண்டிருந்தது. மனம் பூரா ''விட்டலா'' என்றே நினைவில் ஆழ்ந்தது. மாட்டுக்காரன் ஓடி வந்தான். அவன் கண்களில் நீர் ஆறாக வழிந்தது. என்ன காரியம் செய்தீர்கள். இதை ஏன் என்னைச் செய்யச் சொன்னீர்கள் என்றான்.
அவர் கடைசி நிமிஷ நினைவில் இருந்தார். மாட்டுக்காரன் முகம் லேசாக தெரிந்தது. பேச்சு வரவில்லை. மூச்சு கொஞ்சம் கொஞ்சமாக அடங்க முயன்றது. காலை கட்டையில் இருந்து அவிழ்த்தான் மாட்டுக்காரன். அவரை விடுவித்து மடியில் போட்டு புண்களையும் ரணங்களையும் அந்த பட்டு வேஷ்டியாலேயே துடைத்தான்.
ஏன் இப்படிச் செய்தீர்கள் என்று மீண்டும் அவன் அவரைப் பார்த்து கேட்டபோது அவன் கண்களில் கண்ணீர் ஆறாக இன்னும் ஓடிக்கொண்டிருந்தது. யோகி அவனைப் பார்த்தார்.
அவன்.... அவன் ... ''விட்டலா .. நீயா நீயா'' என்றார். அவன் அவரை அணைத்துக்கொண்டான்.
''என்னுடன் வாருங்கள்'' என்று அழைத்த அவனோடு வைகுண்டம் ஏகினார் யோகி. #🤔 ஆன்மீக சிந்தனைகள் #🙏பெருமாள் #🙏ஏகாதசி🕉️ #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🙏ஆன்மீகம்
#அபரா_ஏகாதசி
நன்றி :
Samayam Tamil
ஏகாதசி விரதம் என்பது ஒவ்வொரு மாதமும் 11வது திதியில் கடைபிடிக்கப்படும் விரதமாகும். ஏகாதசி விரதம் இருப்பதால் பாவங்கள் நீங்கி, மனஅமைதி கிடைக்கும் என நம்பப்படுகிறது. ஒருவர் செய்த பாவங்களை நீங்கி, அவர்களை பிறப்பு-இறப்பு சுழற்சியில் இருந்து விடுவித்து, வைகுண்ட பதவியை தரும் மிக உயர்ந்த விரதமாக ஏகாதசி விரதம் கருதப்படுகிறது. இவற்றில் மே மாதத்தில் வரும் முதல் ஏகாதசி விரதமான அபரா ஏகாதசி அன்று என்ன செய்ய வேண்டும், பெருமாளை எப்படி வழிபட்டால் அவரது அருள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
ஏகாதசி விரதம் என்பது இந்து மத கலாச்சாரத்தில் மிக முக்கியமான, புண்ணிய பலன் தரும் உயர்வான விரதமாக கருதப்படுகிறது. பெருமாளின் அருளை பெறுவதற்கும், பல விதமான துன்பங்களில் இருந்து விடுபடுவதற்கும் மிக உன்னதமான விரதமாக ஏகாதசி விரதம் கருதப்படுகிறது. ஏகாதசி என்ற சமஸ்கிருத சொல்லில், ஏகம் என்றால் ஒன்று; தச என்றால் பத்து. அதாவது பதினோறாவதாக வரும் திதி என்பதை குறிப்பதாகும்.
ஒரு மாதத்தில் 2 என்ற ரீதியில் ஒரு ஆண்டில் மொத்தம் 24 ஏகாதசிகள் வருவது உண்டு. இவற்றில் சில ஏகாதசிகள் மிக முக்கியமானதாக கருதப்படுகின்றன. அந்த வகையில்
#ஜேஷ்ட_மாதம் என்படும் வைகாசி மாதம் துவங்குவதற்கு முன் சித்திரை மாத இறுதியில் #தேய்பிறையில் வரும் ஏகாதசிக்கு
#அபரா_ஏகாதசி
என்று பெயர். இந்த ஆண்டு அபரா ஏகாதசி மே 13ம் தேதி புதன் கிழமை வருகிறது.
அபரா ஏகாதசி 2026 தேதிமே 13 புதன்ஏகாதசி திதி துவக்கம்மே 12 காலை 10.37ஏகாதசி திதி நிறைவுமே 13 காலை 09.37பாரணை செய்யும் நேரம்மே 14 காலை 05.31 முதல் 08.14 வரை
அபரா ஏகாதசி சிறப்புகள் :
அபரா ஏகாதசி என்பது ஒருவருடைய வாழ்க்கையில் இருக்கும் தடைகளை நீக்கி, அமைதியை தரக் கூடிய விரதமாகும். அதனால் இந்த நாளில் உணவு ஏதும் உண்ணாமல் முழு உபவாசமாக விரதம் இருந்து வழிபட வேண்டிய நாள் என சொல்லப்படுகிறது. இந்த விரதம் நிலையான மகிழ்ச்சியை தரக் கூடியதாகும். வாழ்வில் நெருக்கடிகள், பலவிதமான பிரச்சனைகளில் சிக்கிக் கொண்டிருப்பவர்கள் இந்த விரதத்தை கடைபிடிக்கலாம். மன அமைதி, செல்வ வளம், வாழ்க்கையில் உயர்ந்த நிலையை தரக் கூடிய விரதம் அபரா ஏகாதசி விரதம் என்பதால் இந்த விரதத்தை அதிகமானவர்கள் கடைபிடிப்பது வழக்கம்.
அபரா ஏகாதசியில் கண்டிப்பாக செய்ய வேண்டியவை :
- அபரா ஏகாதசி அன்று பெருமாளுக்கு மஞ்சள் நிற மலர்கள், இனிப்புக்கள் படைத்து வழிபட வேண்டும்.
அதோடு துளசி, பழங்கள், பஞ்சாமிர்தம் படைத்தோ அல்லது அபிஷேகம் செய்வதும் அவசியம்.
இந்த நாளில் பெருமாளுக்கு துளசியால் அர்ச்சனை செய்வது மிக விசேஷமானதாக கருதப்படுகிறது.
அபரா ஏகாதசி அன்று பெருமாளுக்கு கடலைப் பருப்பு சுண்டல் செய்து படைத்து வழிபட்டால் மகிழ்ச்சியும், செல்வ வளமும் கிடைக்கும்.
ஏகாதசி கதைகள் இந்த நாளில் படிப்பதும், பிறருக்கு சொல்லுவது மிகுந்த புண்ணியத்தை தரும்.
கையில் துளசி மாலை வைத்தோ அல்லது கழுத்தில் அணிந்து கொண்டோ "ஓம் நமோ பகவதே வாசுதேவாய" என்ற மந்திரத்தை 108 முறை சொல்வது சிறப்பு.
இந்த நாளில் பாகவதம், விஷ்ணு சகஸ்ரநாமம்
ஆகியவற்றை படிப்பது சிறந்தது.
துவாதசியில் யாராவது ஒருவருக்கு அன்னதானம் வழங்கிய பிறகு விரதத்தை நிறைவு செய்வதால் ஏகாதசி விரதத்தின் முழு பலனையும் பெற முடியும். #🙏ஏகாதசி🕉️ #🤔 ஆன்மீக சிந்தனைகள் #🙏பெருமாள் #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #✨கடவுள்
#அபரா_ஏகாதசி
நன்றி :
Samayam Tamil
ஏகாதசி விரதம் என்பது ஒவ்வொரு மாதமும் 11வது திதியில் கடைபிடிக்கப்படும் விரதமாகும். ஏகாதசி விரதம் இருப்பதால் பாவங்கள் நீங்கி, மனஅமைதி கிடைக்கும் என நம்பப்படுகிறது. ஒருவர் செய்த பாவங்களை நீங்கி, அவர்களை பிறப்பு-இறப்பு சுழற்சியில் இருந்து விடுவித்து, வைகுண்ட பதவியை தரும் மிக உயர்ந்த விரதமாக ஏகாதசி விரதம் கருதப்படுகிறது. இவற்றில் மே மாதத்தில் வரும் முதல் ஏகாதசி விரதமான அபரா ஏகாதசி அன்று என்ன செய்ய வேண்டும், பெருமாளை எப்படி வழிபட்டால் அவரது அருள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
ஏகாதசி விரதம் என்பது இந்து மத கலாச்சாரத்தில் மிக முக்கியமான, புண்ணிய பலன் தரும் உயர்வான விரதமாக கருதப்படுகிறது. பெருமாளின் அருளை பெறுவதற்கும், பல விதமான துன்பங்களில் இருந்து விடுபடுவதற்கும் மிக உன்னதமான விரதமாக ஏகாதசி விரதம் கருதப்படுகிறது. ஏகாதசி என்ற சமஸ்கிருத சொல்லில், ஏகம் என்றால் ஒன்று; தச என்றால் பத்து. அதாவது பதினோறாவதாக வரும் திதி என்பதை குறிப்பதாகும்.
ஒரு மாதத்தில் 2 என்ற ரீதியில் ஒரு ஆண்டில் மொத்தம் 24 ஏகாதசிகள் வருவது உண்டு. இவற்றில் சில ஏகாதசிகள் மிக முக்கியமானதாக கருதப்படுகின்றன. அந்த வகையில்
#ஜேஷ்ட_மாதம் என்படும் வைகாசி மாதம் துவங்குவதற்கு முன் சித்திரை மாத இறுதியில் #தேய்பிறையில் வரும் ஏகாதசிக்கு
#அபரா_ஏகாதசி
என்று பெயர். இந்த ஆண்டு அபரா ஏகாதசி மே 13ம் தேதி புதன் கிழமை வருகிறது.
அபரா ஏகாதசி 2026 தேதிமே 13 புதன்ஏகாதசி திதி துவக்கம்மே 12 காலை 10.37ஏகாதசி திதி நிறைவுமே 13 காலை 09.37பாரணை செய்யும் நேரம்மே 14 காலை 05.31 முதல் 08.14 வரை
அபரா ஏகாதசி சிறப்புகள் :
அபரா ஏகாதசி என்பது ஒருவருடைய வாழ்க்கையில் இருக்கும் தடைகளை நீக்கி, அமைதியை தரக் கூடிய விரதமாகும். அதனால் இந்த நாளில் உணவு ஏதும் உண்ணாமல் முழு உபவாசமாக விரதம் இருந்து வழிபட வேண்டிய நாள் என சொல்லப்படுகிறது. இந்த விரதம் நிலையான மகிழ்ச்சியை தரக் கூடியதாகும். வாழ்வில் நெருக்கடிகள், பலவிதமான பிரச்சனைகளில் சிக்கிக் கொண்டிருப்பவர்கள் இந்த விரதத்தை கடைபிடிக்கலாம். மன அமைதி, செல்வ வளம், வாழ்க்கையில் உயர்ந்த நிலையை தரக் கூடிய விரதம் அபரா ஏகாதசி விரதம் என்பதால் இந்த விரதத்தை அதிகமானவர்கள் கடைபிடிப்பது வழக்கம்.
அபரா ஏகாதசியில் கண்டிப்பாக செய்ய வேண்டியவை :
- அபரா ஏகாதசி அன்று பெருமாளுக்கு மஞ்சள் நிற மலர்கள், இனிப்புக்கள் படைத்து வழிபட வேண்டும்.
அதோடு துளசி, பழங்கள், பஞ்சாமிர்தம் படைத்தோ அல்லது அபிஷேகம் செய்வதும் அவசியம்.
இந்த நாளில் பெருமாளுக்கு துளசியால் அர்ச்சனை செய்வது மிக விசேஷமானதாக கருதப்படுகிறது.
அபரா ஏகாதசி அன்று பெருமாளுக்கு கடலைப் பருப்பு சுண்டல் செய்து படைத்து வழிபட்டால் மகிழ்ச்சியும், செல்வ வளமும் கிடைக்கும்.
ஏகாதசி கதைகள் இந்த நாளில் படிப்பதும், பிறருக்கு சொல்லுவது மிகுந்த புண்ணியத்தை தரும்.
கையில் துளசி மாலை வைத்தோ அல்லது கழுத்தில் அணிந்து கொண்டோ "ஓம் நமோ பகவதே வாசுதேவாய" என்ற மந்திரத்தை 108 முறை சொல்வது சிறப்பு.
இந்த நாளில் பாகவதம், விஷ்ணு சகஸ்ரநாமம்
ஆகியவற்றை படிப்பது சிறந்தது.
துவாதசியில் யாராவது ஒருவருக்கு அன்னதானம் வழங்கிய பிறகு விரதத்தை நிறைவு செய்வதால் ஏகாதசி விரதத்தின் முழு பலனையும் பெற முடியும். #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🙏பெருமாள் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #🙏ஏகாதசி🕉️ #✨கடவுள்
#🙏ஏகாதசி🕉️ “ஸ்ரீ ராமர் ஏன் தனது வாழ்க்கையில் இத்தனை கஷ்டங்களை அனுபவித்தார் தெரியுமா…?” 🏹🙏
அவர் #கடவுள்…
அவர் நினைத்திருந்தால் ஒரு நொடியில் எல்லாத்தையும் மாற்றியிருக்கலாம்…
ஆனால் அவர் அப்படி செய்யவில்லை. 👀
#அரசராக பிறந்தவர்…
ஆனால் காட்டில் வாழ்ந்தார்.
அன்பான மனைவியை பிரிந்தார்.
நம்பியவர்களால் துரோகம் அனுபவித்தார்.
போராட வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார்… ⚡
ஏன் தெரியுமா? ✨
“கஷ்டம் வந்தாலே வாழ்க்கை முடிந்துவிடாது…” என்பதை மனிதர்களுக்கு கற்றுக்கொடுக்க. ❤️
அதனால் தான் இன்றும் பலர் வாழ்க்கையில் உடைந்து போகும் நேரத்தில் ராமரை நினைக்கிறார்கள்… 🙏
ஏனெனில் எவ்வளவு வலி இருந்தாலும்
அதை அமைதியாக தாங்கி
தர்மத்தை விட்டுவிடாமல் வாழ முடியும் என்பதற்கே #ஸ்ரீ_ராமர் ஒரு #உயிருள்ள எடுத்துக்காட்டு. 🔥
புராணங்களில் சொல்லப்படும் ஒரு அழகான நம்பிக்கை என்ன தெரியுமா? 👀
உண்மையா “ஸ்ரீ ராம்” என்று மனசார
சொல்லும் இடத்தில் பயம் மெதுவாக குறையும்… கோபம் அடங்கும்…
மனசுக்கு ஒரு விசித்திரமான அமைதி வரும்… 🌸
இந்த உலகம் உன்னை புரிந்துகொள்ளாமல் போகலாம்…
ஆனால் ராமர் ஒருபோதும் நல்லவர்களை கைவிடமாட்டார்… ✨🙏
🏹 “ஜெய் ஸ்ரீ ராம் ஜெயம்”
என்று நம்பிக்கையோடு எழுதுங்கள்…
ஒரு நாள் வாழ்க்கை முழுக்க மாறும் ❤️
#ஸ்ரீ_ராமர் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும் பகிருங்கள் 🙏
#ஸ்ரீராம் #ராமர் #SriRam #JaiShriRam #TamilSpiritual #Bhakthi #ViralPost #TrendingTamil #SpiritualTamil #Trendingnow
#🤔 ஆன்மீக சிந்தனைகள் #🙏பெருமாள் #✨கடவுள் #🥰அன்புடன் காலை வணக்கம்🌞
#🤔 ஆன்மீக சிந்தனைகள் #✨கடவுள் #🔍ஜோதிட உலகம் 🌍 #✡️ஜோதிட பரிகாரங்கள் #🙏ஏகாதசி🕉️ வைகாசி 1
#🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🔍ஜோதிட உலகம் 🌍 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🙇♀️பக்தி வீடியோஸ்🛐 #🙏பெருமாள்
#🙏🏼முருகப்பெருமான் பாடல்கள்🎵 #🔍ஜோதிட உலகம் 🌍 #🙏அம்மன் துணை🔱 #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #✡️தோஷ பரிகாரங்கள்
#🕉️ஓம் முருகா #🤔 ஆன்மீக சிந்தனைகள் #🙇♀️பக்தி வீடியோஸ்🛐 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🙏ஆன்மீகம்
#✨கடவுள் #🕉️ஓம் முருகா #🗓️ தமிழ் மாதங்களின் சிறப்புக்கள் 🌼 #🤔 ஆன்மீக சிந்தனைகள் #📸பக்தி படம்
#🙏ஜெய் ஆஞ்சநேயா #🙇♀️பக்தி வீடியோஸ்🛐 #🤩ஜெய் ஸ்ரீ ராம்🙏 #🏹ராம நவமி வாழ்த்துக்கள்🙏 #🙏பெருமாள்







