கண்ணன்
ShareChat
click to see wallet page
@kongundr
kongundr
கண்ணன்
@kongundr
நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்
உங்கள் தனிப்பட்ட #வாழ்க்கையை ரகசியமாக வைத்திருங்கள்: அளவுக்கு அதிகமாகப் பகிர்வதை நிறுத்துங்கள். பாதுகாக்கத் தொடங்குங்கள். .உங்கள் மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையை சமூக ஊடகங்களில் வெளிக்காட்டாதீர்கள். உங்கள் பிள்ளைகளின் சாதனைகளை உலகம் காணும்படி வெளியிடாதீர்கள். உங்கள் ஆடம்பரமான வாழ்க்கை முறையை இணையத்தில் வெளிக்காட்டாதீர்கள். இதோ உண்மை 1. உங்கள் வெற்றியைப் பார்க்கும் அனைவரும் உங்களுக்காக மகிழ்ச்சி அடைவதில்லை. 2. பல "நல்ல" கருத்துகள் திரைக்குப் பின்னால் பொறாமையால் நிரப்பப்பட்ட போலியானவை. 3. நீங்கள் அறியாமலேயே உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தினர் மீதும் கண்திருஷ்டியை வரவழைக்கிறீர்கள். 4. நீங்கள் #மௌனமாக உங்களை வெறுப்பவர்களையும் பொறாமைக்காரர்களையும் உங்கள் வாழ்க்கைக்குள் ஈர்க்கிறீர்கள். 5. உங்கள் புகைப்படங்களை யார் சேமிக்கிறார்கள், உங்கள் பதிவுகளை யார் பின்தொடர்கிறார்கள், அல்லது யார் மௌனமாகத் திட்டமிடுகிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியாது. கடுமையானது ஆனால் உண்மையானது: அளவுக்கு அதிகமாகப் பகிர்ந்துகொள்வது உங்கள் நிம்மதியையும், குடும்பத்தையும், திருமண வாழ்க்கையையும், ஏன் உங்கள் தொழில் வாழ்க்கையையுமே கூட மெல்ல அழித்துவிடும். சமூக ஊடகங்கள் சாத்தானின் கண்கள், காதுகள் மற்றும் வாய் ஆகும். சாத்தானின் வலையில் சிக்காதீர்கள். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையைத் தனிப்பட்டதாகவே வைத்திருங்கள். உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். மனிதனாக இருங்கள், அன்பானவராக இருங்கள். அமைதியாக வாழுங்கள். உரக்க வெற்றி பெறுங்கள்... #💪Motivational Quotes #👌இன்றைக்கான சிறந்த கோட்ஸ்✍️ #🚹உளவியல் சிந்தனை #🤔புதிய சிந்தனைகள் #✍️Quotes
💪Motivational Quotes - ShareChat
''நியாயமான வழியில் சேர்த்தப் பணம் தான்...'' முறைகேட்டில் சேர்த்த பணத்தை ஈட்டுபவர்கள் மகிழ்ச்சியாகவும் இருக்க முடியாது; அந்தப் பணத்தைப் பலர் அறிய நிம்மதியாக அனுபவிக்கவும் முடியாது. பணத்தை அனுபவிக்காமல், பிறருக்குக் கொடுக்காமல் இருப்பவனுடைய செல்வம், வீதியில் செல்பவர்களுக்குத் தான் சொத்தாகப் போய்ச் சேரும்’ என்பது பழமொழி. வாழ்க்கையில் பெரும் பணக்காரர்கள் ஆவது தான் பெரும் லட்சியம் என்று நினைக்கக் கூடாது. பெரும் பணக்காரர்களாக ஆக வேண்டும் என்றால் பெரும்பாலும் நேர்மையைக் கைவிட வேண்டி இருக்கும். மேலும் பெரும் பணக்காரர்கள் எல்லோரும் பெரும்பாலும் நிம்மதியாக வாழ்வதில்லை.. இதில் ஒரு சிலர் விதிவிலக்காக இருக்கலாம்.. நியாயமான வழிகளில் பணத்தைச் சேமிப்பவர்களே எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க முடியும். உழைத்து ஈட்டுகின்றப் பணம் தான் திருப்தியையும் பெருமையையும் தரும். அதில் நாம் வாங்குகிற பொருள்கள் ஒவ்வொன்றும் நம் வியர்வையின் நினைவுச் சின்னங்களாக நீடிக்கும். ஒரு பெரிய மென்பொருள் நிறுவனத்தின் இயக்குனர் நான்காயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்ததார் எனக் குற்றம் சுமத்தப்பட்டு நீதிபதி முன் ஆஜர் படுத்தப்பட்டார். நீதிபதிக்கு அவரைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது. "காலையில் உங்களுக்கு உணவு ஏதாவது கொடுத்தார்களா?' "இல்லை' என்று தலையாட்டினார் இயக்குனர். நீதிமன்ற ஊழியரிடம் நான்கு இட்லி வாங்கி வருமாறு ஆணையிட்டார். இயக்குனரின் கையில் இட்லிப் பொட்டலம் கொடுக்கப்பட்டது. "பரவாயில்லை. இங்கேயே சாப்பிடுங்கள். அதற்குள் நான் இன்னொரு வழக்கு விசாரணையை முடித்து விடுகிறேன்" என்றார்.. இயக்குனரால் மூன்று இட்லிக்கு மேல் சாப்பிட முடியவில்லை. பேந்தப் பேந்த விழித்தபடி நின்று கொண்டு இருந்தார். "என்ன ஒரு இட்லியை வைத்து விட்டீர்கள்? சாப்பிட்டு விடுங்கள்" என்றார் நீதிபதி.. "முடியவில்லை ஐயா... என்னால் சாப்பிட முடியவில்லை.'' "பார்த்தீர்களா? உங்களால் சாப்பிட முடிந்தது மூன்று இட்லி தான். அதற்கு மேல் உங்கள் வயிற்றில் இடமில்லை. இதற்காகவா நீங்கள் நான்காயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்தீர்கள்? மனிதனின் அத்தியாவசியத் தேவைகள் மிகவும் குறைவானவை. பேராசையின் தேவைகள் தான் அதிகம். உங்கள் வயிற்றுக்குத் தீனி போடுவது எளிது. அதற்கு நான்கு இட்லியே அதிகம். உங்கள் பேராசைக்கு... நான்காயிரம் கோடி என்ன... நாற்பதாயிரம் கோடி கூடப் போதாது..'' என்றார் நீதிபதி. இயக்குனர் பெரிதாக அழ ஆரம்பித்தார். அவர் மீதம் வைத்த அந்த நான்காவது இட்லி அவருக்கு மட்டும் அல்ல, நமக்கும் பல மகத்தான பாடங்களைச் சொல்லிக் கொடுக்கிறது. ஆம்.,நண்பர்களே.., மக்களை ஏமாற்றிச் சம்பாதிப்பவர்கள், பிறர் சொத்தை அபகரிப்பவர்கள், அடுத்தவரை மிரட்டிப் பொருளைப் பறிப்பவர்கள்.... யாரானாலும் பறித்த சொத்துக்கள் என்றைக்கும் நிலைக்காது. கொண்டு போக முடியாதப் பொருளைச் சேர்ப்பதை விட, இருப்பதை மற்றவர்களுக்குப் பகிர்ந்துக் கொள்வோம். இந்த உலகம் நமக்குப் பயன்பட்டதைப் போல், வரும் காலத்தில் வருபவர்களுக்கும் பயன்பட வேண்டும். #🤔புதிய சிந்தனைகள் #✍️Quotes #🚹உளவியல் சிந்தனை #👌இன்றைக்கான சிறந்த கோட்ஸ்✍️ #💪Motivational Quotes
🤔புதிய சிந்தனைகள் - # ಕ 90   0 # ಕ 90   0 - ShareChat
👹#பயம்.... ஓர் ஊரில் ஒரு குடியானவன் தன் மனைவி மகனுடன் மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து வந்தான். அவனுக்குத் தன் மனைவியின் மேல் கொள்ளைப் பிரியம். அவளை அதிகமாக நேசித்தான். இப்படி சந்தோஷமாக இருக்கும் பொழுது அவன் மனைவியை ஒரு பாம்பு கடிக்க அவள் இறந்துவிட்டாள். இந்த நிகழ்ச்சியை அந்த மனிதனால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அளவிற்கு அதிகமாக உருண்டு பிரண்டு அழுதான். ஊர் மக்கள்இ தன் மனைவியைச் சுடுகாட்டிற்கு கொண்டு சென்று எரிக்க வேண்டும் என்று சொன்னதும் அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் மேலும் அழுதான். அவனைப் பார்க்கவே பாவமாக இருந்தது. ஆனால் வேறு வழியில்லாமல் அவனைச் சமாதானப்படுத்தி சுடுகாட்டிற்கு அழைத்துச் சென்று அந்தப் பிணத்தை எரித்தார்கள். அவனால் தாள முடியாமல் அங்கேயே உருண்டு பிரண்டும் கத்தி அழுதான். சரி இவன் அழுது அழுது தன்னைத் தானே சமாதானமாக்கிக் கொள்ளட்டும் என்று அவனை அங்கேயே விட்டுவிட்டு ஊர் மக்கள் சென்று விட்டார்கள். மனிதன் தன்னைத் தானே சமாதானம் செய்துக் கொண்டால் தான் முழு ஆறுதல் அடைந்த திருப்தி பெறுவான். அவனும் அன்று இரவெல்லாம் அந்தச் சுடுகாட்டில் கத்தி அழுது கொண்டிருந்தான். அவன் அழுது கொண்டிருந்த இடத்தில் ஒரு மரம் இருந்தது. அதில் ஓர் அம்மா பேயும் ஒரு குட்டிப் பேயும் இருந்தது. இந்த மனிதன் கத்தி அழுதுக்கொண்டே இருந்ததால் அந்தக் குட்டிப் பேய்கு தூக்கம் வரவில்லை. அதனால் அது கோபமாகத் தன் தாயிடம் அம்மா... அந்த ஆள் அழுவதால் எனக்குத் தூக்கம் வரவில்லை. நீ போய் அவனை பயமுறுத்தி துரத்திவிட்டு வா... என்று சொன்னது. அதற்கு அம்மா பேய்... வேண்டாம். அந்த மனிதன் இப்பொழுது அதிக கவலையில் இருக்கிறான். இந்த நேரத்தில் அவன் கவலை மட்டும் தான் அவனுக்குப் பெரியதாகத் தெரியும். இந்த நேரத்தில் நாம் போய் பயமுறுத்தினாலும் அவன் பயப்பட மாட்டான் என்றது. இந்தக் கூற்றை குட்டிப்பேய் ஏற்கவில்லை. எவ்வளவு பெரிய மனிதனானாலும் நிச்சயம் ஒரு பேயிக்கு பயந்து தான் போவான். நான் போய் அவனைத் துரத்துகிறேன் என்று சொல்லிவிட்டு அவன் எதிரில் வந்து நின்று அவனைப் பயமுறுத்தியது. பலவித பயங்கர சத்தங்களைக் கொடுத்தது. அங்கிருந்த மண் மற்றும் மர இலைகளை அவன் மேல் விழுமாறு செய்தது. மரத்தைப் பயங்கரமாக உலுக்கி அவனைப் பயமுறுத்தப் பார்த்தது. உம்ம்ம்... ஒன்றிற்கும் அவன் பயப்படவில்லை. அவன் தன் கவலையை நினைத்தே அழுது கொண்டிருந்தான். குட்டி பேயிக்கே சலிப்பு வந்து அவனை விட்டுவிட்டு திரும்பி வந்து பேசாமல் இருந்து விட்டது. இப்பொழுது கொஞ்ச காலம் ஓடிவிட்டது. இந்தக் குடியானவன் தன் ஊர் மக்கள் சொன்னார்கள் என்று தன் மகனைக் காரணம் காட்டி இன்னொறு பெண்ணை மணந்து கொண்டு புதுப் பெண்ணுடன் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருந்தான். ஒரு நாள் வியாபாரத்திற்காக அந்தச் சுடுகாடு தாண்டிப் போக வேண்டியிருந்ததால் அப்பக்கமாகப் போய் கொண்டு இருந்தான். அவனை அந்தக் குட்டி பேய் பார்த்துவிட்டு தன் அம்மாவிடம்....தன் வாழ்நாளிலேயே தான் பார்த்தத் தைரியசாலி இவன் தான் என்றது. அதற்கு அம்மா பேய்... அவன் தைரியசாலி கிடையாது. வேண்டுமானால் இப்பொழுது அவன் எதிரில் நீ போய் சும்மா நின்று பார் என்றது. குட்டிப்பேயும் உடனே அந்தக் குடியானவன் முன் சும்மா வந்து நின்று சிரித்தது. அந்தக் குட்டிப்பேயைப் பார்த்தது தான் தாமதம். அந்தக் குடியானவன் பயந்து வாய் உலறி நடுங்கிப் போய் தலைதெரிக்க ஓடி போனான். குட்டிப் பேய் அம்மாவிடம் வந்து... அன்றைக்கு தான் முழ பலங்கொண்டு பயமுறுத்தியும் பயப்படாதவன் இன்று நான் சாதாரணமாக எதிரில் போய் நின்றதும் பயந்து ஓடியது ஏன்...? என்று கேட்டது. இதற்கு அம்மா பேய்இ மனிதன் சந்தோஷமாக இருக்கும் பொழுது தனக்கு ஏதாவது துன்பம் வந்து விடுமோ என்ற பயத்திலேயே வாழ்கிறான். அந்த நேரத்தில் ஒரு சிறிய பயத்தைக் கொடுத்தாலும் அவன் அதிகமாக பயந்து விடுகிறான். இதே கவலையான நேரத்தில் அந்தக் கவலையை விட தனக்கு வேறு துன்பம் இல்லை என்று அரட்டுகிறான். அதனால் மனிதன் அதிக சந்தோஷமாக இருக்கும் பொழுது தான் அவனை மிகச் சாதாரணமாக பயங்கொள்ள வைத்துவிட முடியும் என்றதாம். 👹#இரவு வணக்கத்துடன் 🙏🏽 #💪Motivational Quotes #👌இன்றைக்கான சிறந்த கோட்ஸ்✍️ #🚹உளவியல் சிந்தனை #🤔புதிய சிந்தனைகள் #✍️Quotes
💪Motivational Quotes - ShareChat
கள்ளக்காதல் பெருகி வருவதற்கு முக்கிய காரணம் ஆண் தான்… திருமணம் ஆன ஒரு ஆண் வேறு ஒரு பெண்ணிடம் ஏன் செல்கிறான் என்றால் அதுக்கு 99% காரணம் பாலியல் ஆசையில் தான்… ஆனால் ஒரு பெண் வேறு ஒருவனை நாடுகிறார் என்றால் அது முழுக்க முழுக்க பாலியல் தேவைக்கு அன்று…பெண்கள் (90%) பாலியல் ஆசைகளுக்காக வேறு ஒரு ஆணிடம் செல்வதில்லை.. ஒவ்வொரு பெண்ணின் உலகம் வேறு. அந்த உலகத்தை அவன் கணவன் தான் புரிந்துக் கொள்ள வேண்டும்… பெண்ணின் உலகத்தைப் புரிந்துக் கொ்ள்ளாத ஆண்களால் தான் பெரும்பாலான பெண்கள், தம்மைப் புரிந்துக் கொள்ளும் அல்லது புரிந்துக் கொண்டதாக நடிக்கும் ஆணின் பக்கம் சாய்கிறார்கள். சமீபத்தில் நான் ஒரு குறும்படம் பார்த்தேன் ஆண் விபச்சாரம் செய்யும் ஒரு ஆண் ஒரு பணக்கார பெண்மணியின் வீட்டுக்குச் செல்கிறான். அது ஒரு ஆடம்பரமான வீடு. அற்புதமான வசதி. விலையுயர்ந்த பட்டு புடவை மற்றும் நகைகளை அணிந்த அந்தப் பெண்மணி அவனைப் புன்னகையுடன் வரவேற்கிறார். வேறு எதும் அவனிடம் பேசவில்லை. சாப்பிட வாங்க என்று சொல்லி பெரிய வாழை இலையில் அவள் கைகளால் சமைத்த வித விதமான உணவுகளைப் பரிமாறி சிறு குழந்தைப் போல் ரசித்து ஒவ்வொரு உணவும் எப்படி இருக்கு என்று சாப்பிட்டு முடிக்கும் வரை அவனை கேட்டுக் கொண்டே இருக்கிறாள். அவன் சாப்பிட்டு முடித்த உடன் அவனிடம் பணத்தைக் கொடுத்து நீ உடனே சென்று விடு என்று கூறினாள். அவனுக்கு ஒரே ஆச்சரியமாக இருந்தது. அவன் ஆச்சரியத்துடன் கேட்கிறான்… அதற்கு அவள் கூறிய பதில்.. "எனக்கு எல்லாம் இருக்கிறது. ஆனால் என் கணவருக்கு என் கையால் சமைத்து அவர் ரசித்துப் பரிமாறும் பாக்கியம் எனக்கு இதுவரை அமையவில்லை.. பாதி நா‌ள் வெளியூர். மீதி நாள் எதாவது ஒரு நிகழ்ச்சி. அப்படியே வீட்டில் சாப்பிட்டாலும் ஏனோ ஒரு அவசரத்தில் பாதி தின்றும் திங்காமல் கிளம்பி விடுவார். அதனால் தான் உன்னை அழைத்தேன். உன் வடிவில் என் கணவர் சாப்பிட்டு மகிழ்ச்சி அடைந்த திருப்தி எனக்கு என்று அவள் கூறினாள். ஒவ்வொரு பெண்ணின் மனதிலும் பெரும் காதலும், தன்னைப் பாராட்ட மாட்டாரா என்ற எதிர்பார்ப்பும், தன் அழகை ரசிக்க மாட்டாரா என்ற ஆவலும் மனதில் கனன்றுக் கொண்டிருக்கிறது. தீப்பிழம்பாய் இருக்கும் மனதிற்கு யாராவது ஆறுதல் என்ற நீர் ஊற்றி……. "அணைக்கும்" போது அப்பெண் சூரியனை கண்ட அல்லி போல் தடம் மாறுகிறாள். நான் படித்ததில் பிடித்தது √ #✍️Quotes #🤔புதிய சிந்தனைகள் #🚹உளவியல் சிந்தனை #👌இன்றைக்கான சிறந்த கோட்ஸ்✍️ #💪Motivational Quotes
✍️Quotes - ஆடை அவிழ்த்த a { பின்னும் ( a { 08 வெட்கம் தொலைந்த பின்னும் a న a மேனி முழுவதும் ரசித்த பின்பும் a a న காமம் தீர்ந்த பின்பும் [ ருவரை மனம் 6@ a இன்னும் 9|885ف ~ நேசித்தால் ( a அதுவே உண்மையான 85/86. n న [ 0 { n ஆடை அவிழ்த்த a { பின்னும் ( a { 08 வெட்கம் தொலைந்த பின்னும் a న a மேனி முழுவதும் ரசித்த பின்பும் a a న காமம் தீர்ந்த பின்பும் [ ருவரை மனம் 6@ a இன்னும் 9|885ف ~ நேசித்தால் ( a அதுவே உண்மையான 85/86. n న [ 0 { n - ShareChat
கோவில் மணி அடிப்பீங்கதானே? அதன் பின்னால் உள்ள உளவியல் உண்மை உங்களுக்கு தெரியுமா? நற்றுணையாவது அண்ணாமலையாரே 🙏 கோவிலுக்குள் நுழைந்தவுடனே நாம் செய்யும் முதல் செயல் மணி அடிப்பது. பலர் இதை கடவுளை அழைப்பதற்கான சடங்காக மட்டும் நினைக்கிறார்கள். ஆனால், அதுதான் தவறு. இந்தச் செயலில் ஒரு உளவியல் மற்றும் அறிவியல் பின்னணி இருப்பது நம்மில் பல பேருக்குத் தெரிவதில்லை. இந்தச் சிறிய மணி ஓசைக்குள் ஒளிந்திருக்கும் உளவியல் உண்மைகளைப் பற்றி இந்தப் பதிவில் தெரிந்துகொள்வோமா... கோவிலுக்குள் நுழையும்போது நமது மனம் ஆயிரக்கணக்கான கவலைகளிலும், சிந்தனைகளிலும் சிதறி இருக்கும். மணியின் கூர்மையான ஓசை, சிதறி இருக்கும் மனதை ஒரு புள்ளியில் குவித்து, தற்போது நடக்கும் நிகழ்வில் உங்களை நிலைநிறுத்துகிறது. இந்த மனநிலைதான் தியானத்திற்கும், இறை வழிபாட்டிற்கும் மிக அவசியமானது. நவீன உளவியலில் இதை Attention Reset அல்லது Mindfulness Trigger என்று குறிப்பிடுகிறார்கள். அதாவது, சிதறி ஓடிய கவனத்தை ஒரே புள்ளியில் திரட்டும் ஒரு எளிய வழி. பாரம்பரிய கோவில் மணிகள் பெரும்பாலும் செம்பு மற்றும் தகரம் கலந்த Bell Metal அல்லது Bronze போன்ற உலோகங்களால் செய்யப்பட்டவை. இந்த உலோகங்கள் நீடித்த ஒலியை உண்டாக்கும் தன்மை கொண்டவை. அந்த ஒலி சில விநாடிகள் நீடிப்பதால், அதைக் கவனித்துக் கேட்பதன் மூலம் மூளையில் உள்ள சிந்தனைகளை கட்டுப்படுத்தி, ஒரு அமைதியான நிலைக்கு உங்களைக் கொண்டு செல்கிறது. இது தியானம் அல்லது வழிபாட்டுக்கு மனதை தயார் செய்ய உதவுகிறது. மணியோசையின் அதிர்வு நமது நரம்பு மண்டலத்தை (Nervous System) அமைதிப்படுத்துகிறது. ஒருமுறை ஓங்கி அடித்து, அந்த ஓசை மெல்ல மெல்லக் குறைந்து மறைவதை நீங்கள் கூர்ந்து கவனித்தால், உங்கள் மன அழுத்தம் பெருமளவு குறைவதை நீங்களே உணரலாம். மேலும், இது இதயத் துடிப்பு மற்றும் மூச்சு வேகத்தை சற்றே சமநிலைப்படுத்த உதவுகிறது. மணி அடிக்கும்போது கவனிக்க வேண்டியவை: மணியை மிக மெதுவாகவோ அல்லது விளையாட்டாகவோ தட்டக் கூடாது. ஒருமுறை பலமாக அடித்து, அதன் அந்தப் பிணைப்பை (Vibration) உங்கள் உடல் உணர வேண்டும். மணி ஓசை முழுமையாக அடங்கும் வரை சில நொடிகள் அமைதியாக நின்று அந்தத் தருணத்தை அனுபவிப்பது சிறப்பு. இனி நீங்கள் கோவிலுக்குச் செல்லும்போது, மணி அடிப்பதை ஏதோ ஒரு சடங்காகக் கருதாமல், அது உங்கள் உடலையும் மனதையும் தயார் செய்யும் ஒரு ஹீலிங் முறை என்பதை உணர்ந்து செய்யுங்கள். நமது கலாச்சாரம் என்பது மூடநம்பிக்கை அல்ல, அது வாழ்வியலோடு கலந்த அறிவியல். எம்பெருமான் 💕 திருக்கருணை இருந்தவாறே 🙏 எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் அகிலம் காக்கும் அண்ணாமலையாரே போற்றி போற்றி . உன் ஆழ்ந்த கருணையை பெற என்ன தவம் செய்தேனோ🌹 சிவாய நம🙇 சிவமே ஜெயம் ‌ சிவமே தவம். சிவமே என் வரமே . எங்கும் சிவ நாமம் ஒலிக்கட்டும். 🙏 #💪Motivational Quotes #👌இன்றைக்கான சிறந்த கோட்ஸ்✍️ #🚹உளவியல் சிந்தனை #🤔புதிய சிந்தனைகள் #✍️Quotes
💪Motivational Quotes - ShareChat
#உதிர்ந்த_பூ.. ஆசைப்பட்ட வாழ்க்கை வாழலாம் என்று நினைத்தேன். விதி விளையாடிவிட்டது.. தந்தையின் கவுரவத்துக்காக முகம் தெரியாத ஒருவனுக்கு திருமணம் முடித்து வைத்தார்கள். திருமணம் முடிந்து மூன்று மாதங்கள் கூட சரியாக வாழவில்லை. பிறந்து வீட்டுக்கு வந்து விட்டேன். அவன் குடிகாரனும் அல்ல குடிகாரன் கூட போதை தெளிந்தவுடன் தன் மனைவிடம் அன்பாகவும் பாசமாகவும் இருப்பான். ஆனால் எனக்கு வாய்த்த கணவன் ஒரு சந்தேகப் பேரொளி. காயத்துக்கு மருந்து போடும் புருஷனை தான் மனைவிக்கு பிடிக்கும். காயப்படுத்தி விட்டு காயத்தை குத்திக் கொண்டு இருந்தால் இந்த மனைவிக்குத் தான் பிடிக்கும் அதனாலதான் வந்துவிட்டேன் என் தாய் வீட்டுக்கு... என் தந்தையிடம் கண்ணீர் விட்டு அழுதேன் என்ன செய்வது சமாளித்து வாழ வேண்டும் என்று சொல்லிவிட்டார்.. ஒரு மாதம் வீட்டில் இருந்தேன் என் உறவினர்கள் என்னை மூளை சலவை செய்து அழைத்துக் கொண்டு என் கணவர் வீட்டில் சேர்த்து விட்டார்கள்... ஒரு மாத காலம் எந்த பிரச்சனையும் இல்லாமல் குடும்பம் ஓடிக் கொண்டிருந்தது. பழைய குருடி கதவைத் திருடி போல வேதாளம் முருங்கை மரம் ஏற ஆரம்பித்து விட்டது.. ஒரு நாள் தெருவில் மல்லிகை பூ வந்தது நான் வாங்கி தலையில் வைத்துக் கொண்டேன். இப்போது பூ வைத்து யாரை பார்க்க போகிறாய்? என்று கேட்டான் என் கணவன் தலையில் வைத்த பூவை தூக்கி எரிந்து விட்டேன் அதற்குப் பிறகு பூ வைக்கவே மறந்து விட்டேன் 😭.. ஒரு நாள் நல்ல புடவை கட்டினேன் நல்ல புடவை கட்டி யாரை பார்க்க போற என்று கேட்டான். எனக்கு கோபம் வந்துவிட்டது இனிமேல் இவன் கூட ஒரு நாள் கூட வாழ முடியாது என்று சொல்லிவிட்டு வந்து விட்டேன்... . மூன்று மாதம் கழித்து ஊர் பெரியவர்களை அழைத்துக் கொண்டு என்னை கூப்பிட வந்தான் நான் பேசியதெல்லாம் தவறுதான் என்று சொன்னான். ஊர் பெரியவர்கள் அவன் செய்தது தவறு என்று ஏற்றுக் கொண்டான் இனிமேல் அவன் தவறு செய்தால் நாங்க இருக்கோம் என்று சொல்லி திரும்பவும் வாழ வேண்டும் என்று சொன்னார்கள் நான் முடியவே முடியாது என்று சொன்னேன்.. என்னுடைய தகப்பனாரும் ஊர் பெரியவர்கள் வந்து சொல்கிறார்கள் நீ போக வேண்டும் என்று சொன்னார் சரி நான் போகிறேன் ஆனால் நாளை காலை பிணமாக தான் இருப்பேன் என்று சொல்லிவிட்டேன்.. உன்னை பிணமாக பார்க்க எனக்கு விருப்பமில்லை உன் விருப்பப்படி இங்கே இரு என்று சொல்லிவிட்டார் வந்த பெரியவர்களும் போயிட்டார்கள் அதற்கு பிறகு ஒரு தீர்வு கிடைத்தது என் வாழ்க்கையில் இருந்து விவகாரத்து பெற்றேன்.. தகப்பன் வீட்டில் சந்தோஷமாக வாழவில்லை என்றாலும் நிம்மதியாக வாழ்ந்து வந்தேன்.. நல்ல புடவை கட்டுனேன் தலையில் பூ வைத்தேன் யாரும் எதுவும் சொல்ல முடியாது.. என் தகப்பனாரிடம் வாழ வேண்டி பிள்ளையை வீட்டில் வைத்துப் பார்க்க கூடாது இரண்டாவது திருமணம் முடித்து என்று சொன்னார்கள்... என்னுடைய தகப்பனாரும் தெரிந்த நபர்களிடம் சொன்னார் தெரிந்தவர்களும் ஏற்கனவே திருமணம் முடிந்து விவகாரத்தான ஒருவரை அழைத்து வீட்டுக்கு வந்தார்கள். நானும் வந்தவர்களை வரவேற்றேன் யாரோ அப்பாவை தேடி வந்திருக்கிறார் என்று வெளியே போன எங்க அப்பா வந்தார் என்ன விசேஷம் என்று கேட்டேன் உனக்கு இரண்டாவது திருமணம் முடித்து வைக்க வேண்டும் என்று சொன்னார் அதற்காகத்தான் வந்திருக்கிறார்கள் என்றார்... நான் இப்போதுதான் நிம்மதியாக இருக்கிறேன். திரும்பவும் நான் என் நிம்மதியை இழக்க வேண்டுமா? எனக்கு திருமணமே வேண்டாம் என்னுடைய தம்பி தங்கைகள் இருக்கிறார்கள் அவர்கள் நல்லா இருந்தால் போதும் நீயும் அம்மாவும் இருக்கும் வரை என்னை பார்த்துக் கொள்வீர்கள் அதன் பிறகு தம்பி என்னை பார்த்துக் கொள்வான் தங்கை இருக்கிறாள் தங்கை பிள்ளைகளும் என்னை கவனத்திற்கு கொள்வார்கள் என்று சொன்னேன். வந்தவர்கள் வெளியே போய் விட்டார்கள் அதற்கு பிறகு இரண்டாவது திருமணத்திற்கு யாரும் என்னை வற்புறுத்தவும் இல்லை.. இப்போது நான் சந்தோஷமாக இருக்கிறேன் மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன். ஆனால் சில சமயங்களில் நமக்கென்று ஒரு பிள்ளை இருந்தால் நல்லா இருக்குமோ? என்று தோன்றும். தம்பி பிள்ளையும் தங்கச்சி புள்ளையும் வளர்த்தாலும் ஒரு சில நேரங்களில் அவர்கள் செயலால் கண் கலங்கி விடுகிறது.... எல்லோருக்கும் சொல்ல வருவது என்னவென்றால் கண்டிப்பாக இரண்டாவது திருமணம் முடித்துக் கொள்ளுங்கள் உங்களுக்கென்று ஒரு குழந்தை பெற்றுக் கொள்ளுங்கள். #✍️Quotes #🤔புதிய சிந்தனைகள் #🚹உளவியல் சிந்தனை #👌இன்றைக்கான சிறந்த கோட்ஸ்✍️ #💪Motivational Quotes
✍️Quotes - பணம் ருந்தால் 66 நீங்களா 99 6160[ ஆச்சர்யமாக கேட்பதும் 8 அதுவே பணம் ouounuo 66 ஓ நீயா 92 ருந்தால் , என்று கேவலமாக பார்ப்பதும் தான் உலகம் 8 பணம் ருந்தால் 66 நீங்களா 99 6160[ ஆச்சர்யமாக கேட்பதும் 8 அதுவே பணம் ouounuo 66 ஓ நீயா 92 ருந்தால் , என்று கேவலமாக பார்ப்பதும் தான் உலகம் 8 - ShareChat
#வாயால் வடை சுடுவது என்றால் என்ன??? புளியங்குடி பக்கத்திலேயே ஒரு கிராமம் இருக்கிறது அந்த கிராமத்தில் உள்ள நண்பர்கள் வெளிநாட்டில் அதிகம் இருக்கிறார்கள். அதிலும் குவைத்திலும் அதிகமாக இருக்கிறார்கள்.. எங்க ஊரை சேர்ந்தவர் நபரும் அந்த கிராமத்தைச் சேர்ந்த நபரும் ரொம்பவும் மாமா மச்சான் உறவு முறை சொல்லிக் கொள்ளும் அளவுக்கு பழக்க வழக்கம் இருந்தது.. #அண்ணே எப்போ ஊருக்கு வந்தாலும் என் வீட்டுக்கு கண்டிப்பா நீங்க வரவேண்டும் என்று அந்த கிராமத்தை சேர்ந்தவர் உரிமையுடன் சொல்லி இருக்கிறார்.. என்னுடைய கிராமத்தை சேர்ந்தவர் தற்செயலாக அந்த ஊர் அருகில் உள்ள ஊருக்கு ஒரு வேலை விஷயமாக போயி இருக்கிறார். அப்போது நம்ம கூட வெளிநாட்டில் இருந்தவன் இந்த ஊரில் தான் இருக்கிறன் அவனை பார்த்துட்டு போலாமே என்று என்று நினைத்தார் அப்போது போன் வசதி இல்லாத காலம் வீட்டை விசாரித்து வீட்டுக்கு சென்று விட்டார். . அவர் சென்ற நேரம் ஞாயிற்றுக்கிழமை குடும்பத்தோடு வீட்டில் இருந்தார். வீட்டுக்கு சென்றவுடன் சரியான உபசரிப்பு.. அண்ணே இந்த தம்பி நினைப்பு இப்பதான் உங்களுக்கு வந்ததா??? என்று கேட்டார் அப்போது மதியம் ஒரு மணி இருக்கும் நம்ம ஆளுக்கு சரியான பசி வேறு... இவ்வளவு உபசரிப்பு இருக்கிறதே சரி சாப்பிட சொல்லுவார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்த சமயத்தில் அண்ணே சாப்பிடுங்கள் என்று சொன்னார் நம்ம ஆளு ஒரு பேச்சு இல்லை வேண்டும் என்ற சொல்ல உடனே நீங்க எல்லாம் பெரிய ஆளு துரை நம்ம வீட்டுல சாப்பிடுவீங்களா??? என்று பொசுக்கென்று சொல்லிவிட்டார்.. .நம்மாளு என்னடா சாப்பிட சொன்னா ஒரு பெயருக்கு வேண்டாம் என்று சொன்ன இப்படி சொல்லி விட்டானே என்று நினைத்து இனிமேல் இந்த வீட்டில் எப்படி சாப்பிட முடியும் என்று நினைத்து சரி தம்பி கிளம்பிவிட்டார்..,. இதற்குப் பெயர் தான் வாயால் வடை சுடுவது.. இன்னொன்று என் கூட வேலை செய்யும் கன்னியாகுமரியை சேர்ந்த ஒரு அண்ணாச்சி வேலை செய்கிறார்... கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் அதிகமாக குடும்பத்துடன் இங்கே வசித்து வருகிறார்கள் . இவருக்கும் நல்ல பழக்க வழக்கம் உண்டு அப்போது ஒரு சமயம் ஒவ்வொரு வீட்டுக்கு போயிருக்கிறார் அண்ணே வாங்க காபி போடட்டுமா?? என்று கேட்டிருக்கிறார் இவரும் சரி பிள்ள போடு என்று சொல்லிவிட்டார் சொல்லிவிட்டு கிச்சன் பக்கம் போகவில்லையாம்😃😃 பேசிக் கொண்டே இருந்திருக்கிறார் அந்தப் பெண்மணி அந்த அண்ணாச்சியும் சரி காப்பி போடுவார்கள் என்று நினைத்துக் கொண்டே இருந்திருக்கிறார் போடவே இல்லை... கடைசியில் கிளம்பிவிட்டார் நான் போயிட்டு வரேன் பிள்ள என்று சொல்லும்போது அண்ணன் ஒருவாய் பச்ச தண்ணி கூட சாப்பிட போறீங்க என்று பரிதாபமாக சொல்லி இருக்கிறார்.. இதுவும் வாயால் வடை சுடுவது தான்.. #⭐விஜய் தொலைக்காட்சி #⭐விஜய் தொலைக்காட்சி #😎கொரியன் டிராமா #😎கொரியன் டிராமா #🚹உளவியல் சிந்தனை #🤔புதிய சிந்தனைகள் #✍️Quotes
⭐விஜய் தொலைக்காட்சி - ShareChat
முன்பெல்லாம் கூட்டு #குடும்பமாக வாழ்வார்கள். வீட்டின் மூத்தவர்களான #அப்பத்தா, ஆத்தா, அய்யாமை, அவ்வா,ஆச்சி, பாட்டி, தன் பேரன் பேத்திகளை காலில் படுக்க போட்டு நல்லா குளிப்பாட்டி மூக்கு பிடித்து விட்டு, தலையை உருட்டி விட்டு. நெத்தியை பிடித்து விட்டு. காதில் இருக்கும் தண்ணியை ஊதி விட்டு, தொப்புளில் இருக்கும் தண்ணியை ஊதி விட்டு. இரண்டு கையும் பிடித்து மேல்நோக்கி தூக்கி, காலை பிடித்து கீழ்நோக்கி தூக்கி குளிப்பாட்டி விட்டு தண்ணி எல்லாம் துடைத்து எடுத்து பிள்ளைக்கு சாம்பிராணி போட்டு தன் மகளிடமோ மருமகளிடமோ #பேரன் #பேத்தியைகொடுத்து இந்த பசிஅமர்த்து என்று சொல்லி கொடுப்பார்கள்.. இதெல்லாம் எதற்காக என்று கேட்டால் தலையை நல்லா உருட்டி விட்டால் உருண்டையாக தலை வரும், மூக்கை பிடித்து விட்டால் சப்ப மூக்கு இருக்காது நீண்ட மூக்காக இருக்கும். நெற்றியைப் பிடித்து விடுதல் அகல நெத்தியாக இருக்கும். கையைப் பிடித்து மேலே தூக்குவதும் காலை பிடித்து கீழ்நோக்கி தூக்குவதும் பயமும் அறியக்கூடாது என்பதற்காக.. செய்வார்கள்... இப்பல்லாம் யாரும் கூட்டு குடும்பமாக வாழ்வதில்லை எல்லோரும் தனி குடும்பத்தாக தான் வாழ்கிறார்கள் இப்போதெல்லாம் யார் இந்த மாதிரி குளிப்பாட்டுகிறார்கள்.... #முதியோர்கள் என்பது ஒரு பொக்கிஷம் போன்ற அந்த பொக்கிஷத்தை நாம் தொலைத்துக்கொண்டு இருக்கிறோம்... வருத்தமளிக்கிறது... #💞Feel My Love💖 #💑கணவன் - மனைவி #💖காதல் ஸ்டேட்டஸ்🥰 #💘Love Quotes & Videos #❤️எங்கேயும் காதல்
💞Feel My Love💖 - ShareChat
#❤️எங்கேயும் காதல் #💘Love Quotes & Videos #💖காதல் ஸ்டேட்டஸ்🥰 #💑கணவன் - மனைவி #💞Feel My Love💖
❤️எங்கேயும் காதல் - ShareChat
00:55
#💖காதல் ஸ்டேட்டஸ்🥰 #💞Feel My Love💖 #💘Love Quotes & Videos #👩‍❤️‍👨Long Distance Relationship #❤️எங்கேயும் காதல்
💖காதல் ஸ்டேட்டஸ்🥰 - ShareChat
00:35