பாடலுக்கு இசையமைத்தவர் இசைமேதை ஜி. ராமநாதன். பாடகர் திலகத்துடன் அஷ்டாவதானி பானுமதி அவர்களும் இணைந்து பாடி இன்றும் பேச வைத்துக் கொண்டு இருக்கிறார்கள். மற்றபடி காதல் கொண்டாடும் பாடல்தான். இரவில் சந்தித்து காதல் வளர்க்கின்றனர் என்பதற்காகவே "சீருடன் வான் மீதில் தாரகை பலகோடி தீபமாய் ஒளிவீசுதே கண்ணே" என்று பொருத்தமாகவே வரிகளை வைத்து கொண்டாடுகிறார் பாடலாசிரியர். கம்பீரத்துடன் நடிகர் திலகமும், பானுமதியும் நடித்து பாடலுக்கு அம்பிகாபதி, அமராவதியாய் வாழ்ந்திருக்கிறார்கள். சரி பாடல் வரிகள், காணொளிக்கும் உங்களுக்கும் இடையே நான் எதற்கு. இதோ கிளம்புகிறேன்.
----------------------------------------------------------------------
மாசில்லா நிலவே நம் காதலை மகிழ்வோடு
மாநிலம் கொண்டாடுதே.. கண்ணே
மாநிலம் கொண்டாடுதே
பேசவும் அரிதான ப்ரேமையின் ஸ்திரம் கண்டு
பேசவும் அரிதான ப்ரேமையின் ஸ்திரம் கண்டு #💝இதயத்தின் துடிப்பு நீ #😍Old மூவிஸ் #📷நினைவுகள் #🎬 சினிமா #💪கெத்து ஸ்டேட்டஸ்