
நடேசன் S
@natesan9597
ஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்
புதையல் 1957-இல் வெளிவந்த திரைப்படமாகும்.
மு. கருணாநிதி திரைக்கதை வசனம் எழுதிய இப்படத்தை கிருஷ்ணன்-பஞ்சு இயக்கியிருந்தார்.
இதில் சிவாஜி கணேசன் மற்றும் பத்மினி போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
10 மே 1957 ல்
இப்படம் வெளிவந்தது. #💝இதயத்தின் துடிப்பு நீ #📷நினைவுகள் #🎬 சினிமா #💪கெத்து ஸ்டேட்டஸ்
சங்கீத தென்றலிலே சதிராடும் பூங்கொடியே
சந்தோஷம் காண உள்ளம் நாடுதே
சந்தோஷம் காண உள்ளம் நாடுதே
மங்காத தங்கமிது மாறாத வைரமிது
ஒன்றாகி இன்ப கீதம் பாடுவோம் வாழ்விலே
விளையாடி…… இசைபாடி……
விழியாலே உறவாடி இன்பம் காணலாம்
திரைப்படம்: புதையல் (1957)
பாடியவர்கள்: சி.எஸ். ஜெயராமன், பி. சுசீலா
இசை : எம்.எஸ்.விஸ்வநாதன், ராமமூர்த்தி
வரிகள் : ஆத்மநாதன் #💪கெத்து ஸ்டேட்டஸ் #💝இதயத்தின் துடிப்பு நீ #📷நினைவுகள் #🎬 சினிமா
திருப்பதி ஸ்ரீனிவாச பெருமாளை ஏழுமலையான் என்று ஏன் அழைக்கிறோம்? -
திருப்பதி மலையில் வாழும் ஸ்ரீனிவாச பெருமாளை அனைவரும் ஏழுமலையான் என்று அழைக்கிறார்கள். ஸ்ரீனிவாசன், கோவிந்தன், வெங்கடாசலபதி என்று பல பெயர்கள் கொண்ட திருமலை நாதனுக்கு ஏழுமலை யான் என்று பெயர் வர காரணம் தெரியுமா? ஸ்ரீனிவாச பெருமாளுக்கு ஏழு மலைகள் உள்ளது. ஒவ்வொரு மலையின் பெயரிலும் ஒரு அர்த்தம் உள்ளது. ஏழு மலைகளை கொண்டுள்ளதால் ஏழுமலையான் என்று அனைவரும் அன்புடன் அழைக்கின்றனர்.
ஒன்றாம் மலை : வேம்” என்றால் பாவம், ‘கட” என்றால் ‘நாசமடைதல்”. பாவங்களைப் போக்கும் மலை என்பதால் இந்த மலைக்கு ‘வேங்கட மலை” என்று பெயர். இம்மலையில் வெங்கடாசலபதியாக (ஸ்ரீனிவாசன்) மகாவிஷ்ணு காட்சி தருகிறார்.
இரண்டாம் மலை : பெருமாளின் அவதாரத்திற்காக ஆதிசேஷன் மலையாக வந்தார். அவதாரத்திற்காக வந்த ஆதிசேஷன் பெயரால் ‘சேஷமலை” என்று அழைக்கப்படுகிறது.
மூன்றாம் மலை : வேதங்கள் அனைத்தும் இங்கு மலை வடிவில் தங்கி எம்பெருமானை பூஜித்தன. எனவே இது ‘வேத மலை” என்று அழைக்கப்படுகிறது.
நான்காம் மலை : சுவாமியை வணங்க வந்த கருடாழ்வார் வைகுண்டத்திலிருந்து ஏழுமலையை எடுத்து வந்தார். அதனால் இந்த மலை ‘கருட மலை” எனப் பெயர் பெற்றது.
ஐந்தாம் மலை :விருஷபன் என்ற அசுரன், சுவாமியை வணங்கி மோட்சம் பெற்றதால் இம்மலைக்கு ‘விருஷப மலை” எனப் பெயர் வந்தது.
ஆறாம் மலை :ஆஞ்சநேயரின் தாய் அஞ்சனை தனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க ஆதிவராகரை வேண்டி தவமிருந்தாள். அதன் பயனாக ஆஞ்சநேயரைப் பெற்றாள். இவளது பெயரில் ஏற்பட்ட மலை ‘அஞ்சன மலை” எனப்படுகிறது.
ஏழாம் மலை : ஆதிசேஷனுக்கும், வாயு பகவானுக்குமிடையே போட்டி ஏற்பட்டபோது, மகாவிஷ்ணு நடுவராக இருந்தார். இருவரும் பலத்தில் சமமானவர்கள் என்று தீர்ப்பளித்தார். #ஏழுமலையான் #திருப்பதி ஏழுமலையான் #திருப்பதி ஏழுமலையான்
காவேரி திரைப்பட பாடல்
என் எஸ் கிருஷ்ணன் டி எ மதுரம்
இந்த பாடலில் ஒரு வித்தியாசம் இருக்கிறது அது என்ன என்று தெரிகின்றதா #💪இலட்சிய கனவு 💭 #😍Old மூவிஸ் #📷நினைவுகள் #💝இதயத்தின் துடிப்பு நீ #💪கெத்து ஸ்டேட்டஸ்
முத்தான முத்தல்லவோ திரைப்படம் #💪கெத்து ஸ்டேட்டஸ் #🎬 சினிமா #📷நினைவுகள் #😍Old மூவிஸ் #💪இலட்சிய கனவு 💭
MSV, TMS, கவியரசு, சிவாஜி கூட்டணியின் 'முத்துக்களில்' இதுவும் ஒன்று.. .. #📷நினைவுகள் #😍Old மூவிஸ் #💪கெத்து ஸ்டேட்டஸ் #🎬 சினிமா
இந்திய சினிமாவில் முதல்முறை ZOOM லென்ஸ் பயன்படுத்தப்பட்ட சிவாஜி படம்!
இன்றைக்கு ஸும் லென்ஸ்கள் மானாவாரியாக பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், 60 வருடங்களுக்கு முன்னால் இந்திய சினிமாவில் ஸும் லென்ஸ் என்ற ஒன்று இல்லை. ஒரு குறிப்பிட்ட தொலைவில் இருக்கும் பொருளை அல்லது நடிகர்களை அந்தத் தொலைவு காட்டும் உருவத்தில் மட்டுமே படம் பிடிக்க முடியும். ஸும் செய்து அந்த பொருளின், நடிகர்களின் உருவத்தை பெரிதாக காண்பிக்க வழியில்லை. சுமார் 64 வருடங்களுக்கு முன் முதன் முதலில் தமிழ்ப் படம் ஒன்றில் ஸும் லென்ஸ் ஒரேயொரு காட்சியில் படமாக்கப்பட்டது. அது சிவாஜி இரு வேடங்களில் நடித்த தமிழ் படம் என்பது தமிழர்களுக்கு பெருமைக்குரிய விஷயம்.
உத்தம புத்திரன் 1940-ல் பி.யூ.சின்னப்பா, கன்னட நடிகை எம்.வி.ராஜம்மா நடிப்பில் மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரம் இயக்கிய படம். பிற்காலத்தில் நகைச்சுவையில் கொடிகட்டிப் பறந்த பாலையா இதில் வில்லனாக நடித்தார்.
பி.யூ.சின்னப்பா இதில் இரண்டு வேடங்களில் நடித்தார். தமிழில் ஒரு நடிகர் இரண்டு வேடங்களில் நடித்த முதல் படம் இதுவாகும். 1939-ல் ஹாலிவுட்டில் வெளியான தி மேன் இன் தி அயர்ன் மாஸ்க் திரைப்படத்தை தழுவி உத்தம புத்திரனை எடுத்தனர்.
பி.யூ.சின்னப்பாவின் உத்தம புத்திரனை தழுவி எடுப்பது என ஸ்ரீதரும், சிவாஜியும் முடிவு செய்தனர்.
ஸ்ரீதர் திரைக்கதை, வசனம் எழுத, பிரகாஷ்ராவ் படத்தை இயக்கினார். வீனஸ் பிக்சர்ஸ் சார்பில் தனது நண்பர்கள் கிருஷ்ணமூர்த்தி, கோவிந்தராஜனுடன் இணைந்து ஸ்ரீதரே படத்தை தயாரித்தார்.
உத்தம புத்திரன் பட விளம்பரத்தை வெளியிட்ட அதே நேரம், எம்ஜிஆரும் அதே உத்தம புத்திரன் பெயரில் ஒரு விளம்பரத்தை வெளியிட்டார்.
எம்ஜிஆர் இரு வேடங்களில் நடிப்பதாக விளம்பரத்தில் குறிப்பிட்டிருந்தனர். இது குழப்பத்தை ஏற்படுத்தியது. பிறகு எம்ஜிஆர் தனது உத்தம புத்திரன் அறிவிப்பை விலக்கிக் கொண்டார்.
உத்தம புத்திரனில் இடம்பெறும், என்னழகை கன்னியர்கள்... பாடலை மைசூர் பிருந்தாவனம் பூங்காவில் எடுத்தனர். அந்த நேரம் ஏராளமான பொதுமக்கள் படப்பிடிப்பை வேடிக்கைப் பார்க்க குழுமியிருந்தனர்.
அதில் ஒரு பிரெஞ்ச் பெண்மணி, ஒளிப்பதிவாளர் ஏ.வின்சென்ட் காட்சியை படமாக்குகையில் அதே கோணத்தில் அவரும் காட்சியை படமாக்குவதை கவனித்தார்.
16 எம்எம் மில் எடுக்கப்பட்ட அந்தக் காட்சியை லண்டனுக்கு அனுப்பி, 35 எம்எம் மாக மாற்றி பார்த்த போது ரிசல்ட் அபாரமாக வந்திருக்கிறது.
அவரும், ஸ்ரீதரும் அந்தப் பெண்மணியை அழைத்து விசாரித்துள்ளனர். அவரது கேமராவில் இருந்தது ஸும் செய்யக் கூடிய லென்ஸ். ஆச்சரியமாகிப் போன ஸ்ரீதரும், வின்சென்டும். அந்த லென்ஸை தங்களிடமிருந்த Paillard Bolex 16 mm கேமராவில் பொருத்தி, அருகில் நிற்கும் பத்மினியிடமிருந்து தொலைவில் நீரூற்று அருகில் மது அருந்திக் கொண்டிருக்கும் சிவாஜியை ஸும் செய்தனர்.
இன்றும் அந்தப் பாடலின் ஆரம்பத்தில் அருகில் இருக்கும் பத்மினியை காண்பிக்கும் கேமரா அப்படியே ஸும் ஆகி, நீரூற்று அருகில் அமர்ந்திருக்கும் சிவாஜியை காண்பிப்பதைப் பார்க்கலாம். இதுதான், இந்திய சினிமாவில் முதல்முதலாக ஸும் லென்ஸ் பயன்படுத்தி எடுக்கப்பட்ட காட்சியாகும்.
உத்தம புத்திரன் 1958 பிப்ரவரி 7 வெளியாகி மகத்தான வரவேற்பை பெற்றது.
அதன் கதையும், மேக்கிங்கும், சிவாஜியின் நடிப்பும் பாராட்டப்பட்டன. பல திரையரங்குகளில் 100 நாள்களை கடந்து ஓடி லாபம் ஈட்டியது. சிவாஜியை கமர்ஷியல் ஹீரோவாக நிலைநிறுத்திய படங்களில் இதுவும் ஒன்று. #🎬 சினிமா #💪கெத்து ஸ்டேட்டஸ் #📷நினைவுகள் #😍Old மூவிஸ்
1971 ஆம் ஆண்டு ஜெய்சங்கர் நடித்து வெளிவந்த ' வீட்டுக்கு ஒரு பிள்ளை' திரைப்பட த்தில் இடம்பெற்ற பாடல் 'பெண்ணென்றால் நானன்றோ சொல்லுங்கள் வேறுண்டோ '. பாடியவர் L. R. ஈஸ்வரி . பாடலாசிரியர் கவியரசு கண்ணதாசன். இசையமைப்பு மெல்லிசைமன்னர் M. S. விஸ்வநாதன். #😍Old மூவிஸ் #🎶இன்றைய ட்ரெண்டிங் பாடல்💃 #📷நினைவுகள் #💪கெத்து ஸ்டேட்டஸ் #🎬 சினிமா
#📷நினைவுகள் #💝இதயத்தின் துடிப்பு நீ #😍Old மூவிஸ் #🎶இன்றைய ட்ரெண்டிங் பாடல்💃
#மைக்_மோகன்
10_05_2026
80-களின் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வந்தவர் மோகன். மோகன் நடித்த ‘பயணங்கள் முடிவதில்லை’, ‘கோபுரங்கள் சாய்வதில்லை’, ‘விதி’, ‘மௌனராகம்’, ‘மெல்லத் திறந்தது கதவு’ உள்ளிட்ட பல்வேறு படங்கள் பெரும் வெற்றி பெற்றன. இதனாலேயே ரசிகர்களால் வெள்ளி விழா நாயகன் என்று அழைக்கப்பட்டார்.
#இனிய_பிறந்தநாள்_வாழ்த்துக்கள் #நடிகர் மோகன் ஹிட்ஸ் #நடிகர் மோகன்







