
நடேசன் S
@natesan9597
ஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்
🌹 🌿 திருச்சிற்றம்பலம்🌿🌹
🌹சிவபெருமான் பாதங்களை இறுக பற்றிக்கொள்வோம்
🌹 கர்ம வினை !
🌹 உலகில் கோடிக்கணக்கான மக்கள் இருக்கிறார்கள். நாம் பழக்கம் வைத்துக் கொண்டிருப்பவர்கள் ஆயிரக்கணக்கு. ஆனால் எதோ ஒரு குறிப்பிட்ட நபர் நமக்கு துணைவராக அல்லது துணைவியாக அமைவது ஏன் ?
🌹 நம் வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்விலும் ஒரு கர்மாவை நாம் ஏற்படுத்துகிறோம். அதாவது அந்தக் கர்மாக்களின் மூலம் ஒன்று நாம் ஏதாவது பெற்றுக் கொள்கிறோம், அல்லது அடுத்தவருக்கு ஏதேனும் ஒரு உபகாரம் செய்கிறோம். சில சமயங்களில் ஏமாற்றப்படுகிறோம். பல சமயங்களில் ஏமாற்றுகிறோம். சிலருக்கு நல்லது செய்கிறோம்.
🌹 பலரிடமிருந்து அளவுக்கு அதிகமாக நன்மைகளைப் பெற்றுக் கொள்கிறோம். இந்த கொடுக்கல் வாங்கலே "ருண பந்தம்" எனப்படுகிறது.
🌹 சிலருடைய உறவுகள் ஆனந்தத்தைக் கொடுக்கிறது. சிலருடைய வருகை மட்டற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. சிலர் கூடவே இருந்து தொல்லைப் படுத்துகிறார்கள்.சிலரின் வருகை துக்கத்தை ஏற்படுத்துகிறது. பல சமயங்களில் இது ஏன் நிகழ்கிறது என்று தெரியாமலேயே தன் போக்கில் நம் வாழ்வில் பல நிகழ்ச்சிகள் நடக்கின்றன. கனவில் கூட காண முடியாத பல ஆச்சர்யங்கள் நமக்கு சிலசமயங்களில் ஏற்படுகிறது.
🌹 இதற்கெல்லாம் என்ன காரணம் ?
🌹 ஏன் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் ?
🌹 நாமே நம் தாயை, தந்தையை, சகோதர சகோதரிகளை, நண்பர்களை, மனைவியை, கணவனை, பிள்ளைகளை, தேர்ந்தெடுப்பதில்லை. நண்பர்களைத் தேர்ந்தெடுக்கலாம் என்று யாரேனும் கூறலாம். ஆனாலும் அதுவும் தானே நிகழ வேண்டும். நம்மால் உருவாக்க முடியாது. முயற்சி மட்டுமே நம்முடையது. முடிவு ? . ஒரு சிலர் நம் வாழ்க்கையிலிருந்து திடீரென்று காணாமல் போய்விடுவர். அது இறப்பால் மட்டும் அல்ல , பல காரணங்களினால் நிகழும். அதே நபர் மீண்டும் நம் வாழ்வில் வேறு கோணத்தில் வேறு பார்வையில் தோன்றுவர்.
🌹 எதோ ஒன்று நம்மை அடுத்தவர் பால் ஈர்க்கிறது, அல்லது அடுத்தவரை காரணம் இல்லாமல் வெறுக்க வைக்கிறது. அது என்ன ? சமன் செய்யாமல் மிச்சம் வைத்திருக்கும் கர்ம கதிகளின் எச்சங்களே அவ்வாறு ஒரு ஈர்ப்பை அல்லது வெறுப்பை ஏற்படுத்துகிறதா ? இதற்கெல்லாம் தெரிந்த ஒரே காரணம் நம்முடைய "கர்ம வினை" தான் .
🌹 இது நாள் வரை எத்தனையோ பிறவிகளை நாம் கொண்டிருக்கிறோம். அத்தனைப் பிறப்பிலும் பலப் பல பாவ புண்ணியங்களை சேர்த்திருக்கிறோம். அந்தக் கூட்டின் பெயரே "சஞ்சித கர்மா" எனப்படுகிறது. அதன் ஒரு பகுதியை இந்தப் பிறவியில் அனுபவிக்க கொடுக்கப்படுகிறது. அதுவே 'பிராரப்தக் கர்மா' எனப்படுகிறது. இந்த பிராரப்தக் கர்மா நிறைவடையாமல் நம்முடைய இந்தப் பிறவி முடிவடையாது.நாம் இவ்வுலக வாழ்க்கையிலிருந்து விடுதலைப் பெற முடியாது.
🌹 இந்த வாழ்க்கை நடைமுறையில் நாம் ஒவ்வொருவரிடமும் ஏதேனும் ஒன்றை கற்கிறோம் அல்லது கற்றுக் கொள்கிறோம்.இதில் நாம் அனைவரும் அதிகமாக கற்பது அல்லது கற்பிப்பது நம் துணையுடன் மட்டுமே.
🌹 இது தவிர 'ஆகாம்ய கர்மா' என்று ஒன்றுள்ளது. அது கொடுக்கப்பட்டுள்ள இந்தப் பிறவியில் நாம் செய்யும் நல்ல - கெட்ட செயல்களால் ஏற்படுவது. யாராலும் யாருக்கும் எந்த கர்மாவையும் ஏற்படுத்தவோ உருவாக்கவோ முடியாது.அவரவர்கள் செய்வினையின் பயனாலேயே அவரவர்கள் அனுபவம் மற்றும் வாழ்க்கை அமையும் . துக்கமும், சந்தோஷமும், சண்டையும், சமாதானமும், ஏற்றமும், இறக்கமும், வெறுப்பும், ஆதரவும், அவரவர்கள் கர்ம கதியே. இதைத் தான் "தீதும் நன்றும் பிறர் தர வாரா"
என நம் மதம் போதிக்கிறது.
🌹 நம்முடைய நல்ல கெட்ட காலங்களுக்கு நாம் மட்டுமே பொறுப்பு. அப்படி என்றால் ஆகாமி கர்மா நம்முடைய கையிலேயே இருக்கிறது. இந்தப் பிறவியில் யார் எப்படி இருந்தாலும், நீ எப்படி இருக்கப் போகிறாய் என்பது உன் கையிலேயே உள்ளது. நீ செய்யும் நற்செயல்களையும், வினைச்செயல்களையும் நீ மட்டுமே எதோ ஒரு பிறவியில் அனுபவிக்கப் போகிறாய் என்பதை உணர்ந்தால், நீ என்ன செய்யப் போகிறாய் ? எப்படி நடந்து கொள்ளப் போகிறாய் ? எது போன்ற வாழ்க்கைத் தடத்தை ஏற்படுத்திக்கொள்ளப் போகிறாய் என்பது உனக்குப் புலப்படும்.
இதை போதிப்பது தான் " ஹிந்து மதம் ".
🌹 There is NO cancellation of GOOD and BAD deeds .
🌹 பாவ புண்ணியங்களுக்கு கூட்டல் கழித்தல் கிடையாது. இரண்டையும் நாம் அனுபவித்தே ஆகவேண்டும். பணம் மட்டுமே எல்லாப் பிரச்சனைகளையும் தீர்த்துவிடும் என்று ஒரு சித்தாந்தம் உள்ளது. ஆனால், பணமே இல்லாத ஒரு சாதாரண மனிதன் கூட தன்னுடைய வாழ்க்கையில் பல சமயங்களில் சந்தோஷமாக இருக்கிறான்.அதேபோல பெரும் பணக்காரர்களையும் 'துக்கங்கள்' விடுவதில்லை.
🌹 சர்க்கரை ஆலை அதிபரானாலும் Diabetic ஆக இருந்தால் இனிப்புப் பண்டங்களை உண்ண முடியாது. பல கார்களுக்குச் சொந்தக்காரராக இருந்தாலும் தன கால்களையே நடை பயிற்சிக்கு நம்ப வேண்டியதாக உள்ளது.
🌹 'வினை விதைத்த வழியில் விதி நடக்கும்'
'விதி வகுத்த வழியில் நாம் நடக்க வேண்டும்'
🌹 படித்ததை பகிர்ந்தேன் 🙏 #💪கெத்து ஸ்டேட்டஸ் #📷நினைவுகள் #💪இலட்சிய கனவு 💭
அடுத்த வாரிசு திரைப்படம் #📷நினைவுகள் #🎬 சினிமா #💪கெத்து ஸ்டேட்டஸ் #🎶இன்றைய ட்ரெண்டிங் பாடல்💃 #💝இதயத்தின் துடிப்பு நீ
கண்கள் தேடுவதும் பாடல்
நாகேஷ் ராம பிரபா
சாந்தி நிலையம் . #🎶இன்றைய ட்ரெண்டிங் பாடல்💃 #💝இதயத்தின் துடிப்பு நீ #📷நினைவுகள் #💪கெத்து ஸ்டேட்டஸ் #🎬 சினிமா
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சார்
வாழ்க பல்லாண்டு காலம் #டி_ராஜேந்தர். #டி ராஜேந்தர் HBD #💫🖤💜டி ராஜேந்தர் மனதில் நீங்க இடம் பிடித்தே பாடல்கள் 🖤💜💫
#மனோகரா படத்தில் முதலில் #சிவாஜி_கருணாநிதி ரெண்டு பேருமே இல்லை… எப்படி மாறிச்சு தெரியுமா?!. -
சிவாஜியின் நடிப்பில் 1954ம் வருடம் வெளியான திரைப்படம் மனோகரா. இந்த படத்தில் சிவாஜியின் அம்மாவாக கண்ணாம்பாள் நடித்திருப்பார். இந்த படத்தில் இடம் பெற்ற ‘பொறுத்தது போதும் மனோகாரா பொங்கியெழு’ என்கிற வசனம் அப்போது மிகவும் பிரபலம். தாய் பாசத்தில் தவிக்கும் வாலிபனாக சிவாஜி சிறப்பான நடிப்பை இப்படத்தில் வழங்கியிருந்தார்.
மேலும், டி.ஆர்.ராஜகுமாரி, எஸ்.எஸ்.ராஜேந்திரன், பண்டரிபாய் என பலரும் இப்படத்தில் நடித்திருந்தனர். இப்படத்தை எல்.வி.பிரசாத் இயக்கியிருந்தார். இப்படத்திற்கு திரைக்கதை மற்றும் வசனத்தை கருணாநிதி எழுதியிருந்தார். இந்த படத்தில் இடம் பெற்ற வசனங்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.
ஆனால், இந்த திரைப்படம் முதலில் துவங்கப்பட்டபோது அதில் சிவாஜி, கருணாநிதி மற்றும் இயக்குனர் எல்.வி.பிரசாத் என யாருமே அதில் இல்லை என்று சொன்னால் நம்ப முடிகிறதா!.. ஆனால் அதுதான் உண்மை.
மனோகரா கதை முதலில் நாடகமாகத்தான் வெளியானது. அதில், கே.ஆர்.ராமசாமி என்பவர் மனோகரனாக நடித்திருந்தார். இவர் பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார். எனவே, அவரை கதாநாயகனாகவும், அப்போது பிரபல எழுத்தாளராக இருந்த இளங்கோவன் வசனம் எழுதுவது எனவும், படத்தை இயக்குவதற்கு ஏ.எஸ்.சாமியையும் ஜூபிடர் பிக்சர்ஸ் ஒப்பந்தம் செய்தனர். ஆனால், சில காரணங்களால் அது டேக் ஆப் ஆகவில்லை
அதன்பின்னரே சிவாஜி, கருணாநிதி, எல்.வி.பிரசாத் ஆகியோரை வைத்து இந்த படத்தை எடுத்துள்ளனர். இந்த படம் ரசிகர்களை கவர்ந்து பெரிய வெற்றியை பெற்றது குறிப்பிடத்தக்கது.
இணையத்தில் இருந்து
Natesan Natesan #💪கெத்து ஸ்டேட்டஸ் #📷நினைவுகள் #🎬 சினிமா #💝இதயத்தின் துடிப்பு நீ #🎶இன்றைய ட்ரெண்டிங் பாடல்💃
`#திருவிளையாடல்' திரைப்படம் எக்காலத்தையும் வென்று தனித்துவம் பெற்று இன்றளவும் திகழ்கின்றது. எல்.பி ரெக்கார்டுகளில், கிராமபோன் இசைத்தட்டில் `திருவிளையாடல்' கதை, வசனம் ஒலிக்காத திருவிழாக்களே இல்லை என்கிற அளவில் பட்டிதொட்டியெங்கும் பட்டையைக் கிளப்பியது. #🎶இன்றைய ட்ரெண்டிங் பாடல்💃
வணங்காமுடி திரைப்படத்திலிருந்து #🎬 சினிமா #💪கெத்து ஸ்டேட்டஸ் #📷நினைவுகள் #😍Old மூவிஸ் #💝இதயத்தின் துடிப்பு நீ
ராஜா மலை சிம்மா திரைப்படத்திலிருந்து #🎬 சினிமா #💪கெத்து ஸ்டேட்டஸ் #📷நினைவுகள் #😍Old மூவிஸ்
ஊரு கெட்டுப் போனதுக்கு
மூரு மாருக்கெட்டு அடையாளம்
நாடு கெட்டுப் போனதுக்கு
மெட்ராஸு நாகரிகம் அடையாளம்
அனுபவி ராஜா அனுபவி திரைப்படத்திற்காக. #💪கெத்து ஸ்டேட்டஸ் #📷நினைவுகள் #🎬 சினிமா
சிட்டுப் போல முல்லை மொட்டுப்போலே - இந்தச்
சிங்காரப் பெண்ணைப் பாரு பொட்டுப் போலே....
வட்டம் போடும் கண்கள் வெட்டுப் பாரு
திட்டம் போடும் நெஞ்சைத் தொட்டுப்பாரு..
இஷ்டம் போலத் தாலி கட்டி வாழ நெஞ்சம்
கொஞ்சுதே கெஞ்சுதே மிஞ்சுதே – இந்தச்
சிங்காரப் பெண்ணைப் பாரு பொட்டுப்போல.....(சிட்டு)
கண்ணைப் பார்த்துப் பார்த்து சொக்குறாரு
கையில் காசை அள்ளி வைக்குறாரு
வெட்கம் மானம் கொஞ்சம் மிச்சம் மீதி கொண்ட
நெஞ்சமே கொஞ்சவே அஞ்சுதே- இந்தச்
சிங்காரப் பெண்ணைப் பாரு பொட்டுப்போலே (சிட்டு)
#தெனாலிராமன் #😍Old மூவிஸ் #🎬 சினிமா #📷நினைவுகள் #💪கெத்து ஸ்டேட்டஸ்






