சந்தனமா? சாக்கடையா?. சிறுகதை.
காலை நேரத்து இளவெயில் குருகுலத்தின் வேப்பமர இலைகளுக்கு இடையே புகுந்து விளையாடிக் கொண்டிருந்தது. அன்று குருவின் முகத்தில் ஒரு விசித்திரமான அமைதி நிலவியது. பாடம் முடிவடைந்ததும், குரு மாணவர்களை நோக்கி, "கேள்விகள் அறிவின் திறவுகோல். யாரிடமாவது சந்தேகம் உள்ளதா?" என்று கேட்டார்.
அனைவரும் அமைதியாக இருக்க, துடிப்பான மாணவன் ஒருவன் எழுந்து நின்றான். அவன் கண்கள் ஒரு குழப்பத்தை பிரதிபலித்தன.
"குருவே, ஒரு சந்தேகம்! இறைவன் கருணையுள்ளவன் என்கிறோம். ஆனால், அவன் ஏன் நல்லவர்களையும் சோதிக்கிறான்? கண்ணீர் சிந்த வைக்காமல், வலிகளைத் தராமல் அவனது அருளை நாம் பெறவே முடியாதா? ஏன் இந்த அக்னிப் பரீட்சை?"
குரு மென்மையாகப் புன்னகைத்தார். "நல்ல கேள்வி. இதற்கான விடையை நாளை இதே நேரத்தில் ஒரு காட்சியின் மூலம் சொல்கிறேன்," என்றார்.
மறுநாள் காலை, மாணவர்கள் ஆவலுடன் கூடினர். அங்கே மேடை மீது இரு ஜாடிகள் வைக்கப்பட்டிருந்தன. ஒரே களிமண்ணால் செய்யப்பட்டவை, ஒரே அளவில் செதுக்கப்பட்டவை, ஒரே மாதிரியான வேலைப்பாடுகள் கொண்டவை. பார்ப்பதற்கு அவை இரட்டைக் குழந்தைகள் போல இருந்தன.
குரு கேட்டார்: "மாணவர்களே, இந்த இரண்டு ஜாடிகளுக்கும் இடையே ஏதாவது வித்தியாசம் தெரிகிறதா?"
மாணவர்கள் உற்றுப் பார்த்தனர். "இல்லை குருவே! இரண்டும் ஒரே அழகோடு, சமமாகத்தான் இருக்கின்றன," என்றனர்.
"உண்மைதான். ஆனால், வெளித்தோற்றம் எப்போதும் உண்மையைச் சொல்வதில்லை," என்ற குரு, திடீரென முதல் ஜாடியை வேகமாகத் தள்ளிக் கவிழ்த்தார்.
அனைவரும் திடுக்கிட்டனர். ஜாடியிலிருந்து நறுமணம் வீசும் சுத்தமான சந்தன கலவை நதியாகப் பெருகி ஓடியது. அந்த இடமே நறுமணம் நிறைந்திருந்தது. அடுத்த நிமிடம், இரண்டாவது ஜாடியையும் கவிழ்த்தார். அதிலிருந்து நாற்றம் எடுக்கும் சாக்கடை நீர் வெளிப்பட்டு, தரையை அசுத்தமாக்கியது. மாணவர்கள் முகத்தைச் சுளித்துக் கொண்டு பின்வாங்கினர்.
குரு நிதானமாகப் பேசத் தொடங்கினார்:
"இந்த ஜாடிகளைத் தள்ளும் வரை, அதற்குள் என்ன இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியவில்லை. இரண்டும் புனிதமானவை என்றே நினைத்தீர்கள். ஆனால், ஒரு விசை (அழுத்தம்) கொடுக்கப்பட்டபோதுதான், அதற்குள் இருந்த உண்மைத் தன்மை வெளியே வந்தது."
அவர் தொடர்ந்தார்:
"இறைவன் தரும் சோதனைகளும் இந்த 'அழுத்தத்தைப்' போன்றதுதான். வாழ்க்கை சுகமாக இருக்கும்போது, நாம் அனைவரும் நல்லவர்களாகவும், அமைதியானவர்களாகவுமேத் தெரிவோம். ஆனால், ஒரு கஷ்டம் வரும்போதுதான்...
நமக்குள் இருப்பது சந்தனமா? (பொறுமை, அன்பு, நம்பிக்கை)
அல்லது சாக்கடையா? (கோபம், பொறாமை, அதர்மம்) என்பது வெளிப்படும்."
அந்த மாணவன் குறுக்கிட்டு, "குருவே, நாம் எப்படிப்பட்டவர்கள் என்பது இறைவனுக்குத் தெரியாதா? பிறகு ஏன் அவர் சோதிக்க வேண்டும்?" என்று கேட்டான்.
குரு சொன்னார், "இறைவனுக்குத் தெரியும்! ஆனால், உனக்குத் தெரியாது. நீ உன்னை ஒரு நல்லவன் என்று நினைத்துக் கொண்டிருக்கலாம். ஆனால், ஒரு துன்பம் வரும்போது நீ மற்றவர்களைக் காயப்படுத்தினால், உனக்குள் இருக்கும் 'சாக்கடையை' நீயே அடையாளம் கண்டு கொள்ள இறைவன் ஒரு வாய்ப்பளிக்கிறான்."
"சோதனைகள் உன்னை அழிப்பதற்கு அல்ல; உனக்குள் இருக்கும் அழுக்குகளை உனக்கு அடையாளம் காட்டி, உன்னைத் தூய்மைப்படுத்திக் கொள்ள இறைவன் தரும் அரிய வாய்ப்பு. உன்னை நீயே திருத்திக் கொள்ளாதவரை, நீ இறைவனின் அருளைப் பெறத் தகுதியற்றவனாகவே இருப்பாய்."
மாணவர்கள் தலைகுனிந்து உண்மையை உணர்ந்தனர். சோதனைகள் என்பது தண்டனை அல்ல, அது நம் ஆன்மாவைச் சுத்திகரிக்கும் ஒரு ரகசிய சிகிச்சை என்பதை அவர்கள் புரிந்து கொண்டனர்.
நீதி:
கஷ்டங்கள் வரும்போது நாம் காட்டும் எதிர்வினைதான் நமது உண்மையான அடையாளம். நம்மை நாமே செதுக்கிக் கொள்ள இறைவன் கொடுக்கும் உளிதான் 'சோதனை'. #🤔 Unknown Facts #👉வாழ்க்கை பாடங்கள் #🤩எளிய லைஃப் ஹேக்ஸ்♻️
#👉வாழ்க்கை பாடங்கள் #🤩எளிய லைஃப் ஹேக்ஸ்♻️ #🤔 Unknown Facts
பிணங்களைப் பதனிடும் பெண்:
எனது சீருடையில் கறை பட்டால் கூட,
அது பிணத்தின் இரத்தக்கறை என
ஏளனம் செய்தார்கள்.
இலங்கையின் ஒரே பெண் எம்பாமர்
"மிகவும் பணக்காரக் குடும்பங்களில் இருந்து வரும் வயதான பெற்றோரின் சடலங்களை நான் அடிக்கடி பார்க்கிறேன். அவர்கள் உயிருடன் இருந்தபோது வாரக்கணக்கில், ஏன் மாதக்கணக்கில் கூட அவர்களின் உடைகள் மாற்றப்படாமல், அசுத்தமாக இருந்திருப்பதைச் சடலத்தைப் பார்க்கும் போதே உணர முடிகிறது.
வீட்டின் பின்புறத்திலோ, சேமிப்புக் கிடங்குகளிலோ அல்லது மாடி அறைகளிலோ அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, யாராலும் கவனிக்கப்படாமல் விடப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் உடலிலிருந்து வரும் துர்நாற்றத்தைச் சினேகப் பாக்கு (betel) பயன்படுத்தியும் கூட என்னால் தாங்கிக் கொள்ள முடியாத சந்தர்ப்பங்கள் உண்டு.
ஆனால், அதே பெற்றோர் இறந்த அடுத்த நிமிடம், அந்தப் பணக்காரப் பிள்ளைகள் ஓடி வந்து, 'எனது பெற்றோரின் உடல் மிக அழகாக இருக்க வேண்டும்' என்று கட்டளையிடுகிறார்கள். விலையுயர்ந்த சவப்பெட்டிகளை ஓடர் செய்கிறார்கள், புதிய மலர்களால் அலங்கரிக்கிறார்கள். உயிருடன் இருந்தபோது ஒருவேளைச் சோறு போடாதவர்கள், இறந்த பின் காட்டும் இந்த 'ராஜமரியாதை' மிகப்பெரிய போலித்தனம்" எனச் சினேகா வேதனையுடன் கூறுகிறார்.
மரணத்திற்கு முன்னால் அனைவரும் சமம் என்பார்கள். ஆனால், ஒரு பெண் இறந்த பிறகு அவளது உடலைப் பராமரிப்பதிலும், இறுதிச் சடங்கிற்காகத் தயார் செய்வதிலும் (Embalming) பிணங்களைப் பதனிடுபவர் அவளுக்குரிய கண்ணியம் பேணப்பட வேண்டும் என்பதில் இந்த இளம் பெண் உறுதியாக நிற்கிறார்.
பொதுவாக ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் இந்த 'எம்பாமிங்' துறையில், ஒரு பெண்ணாகத் தடம் பதித்து, இன்று பலரது பாராட்டுகளைப் பெற்று வருபவர் தான் பிணங்களைப் பதனிடும் இந்த இளம் பெண்.
உயிருடன் இருப்பவர்களுக்கு ஒப்பனை செய்யும் ஆயிரக்கணக்கான பெண்களை நாம் பார்த்திருப்போம். ஆனால், இறந்து போனவர்களுக்கு (சடலங்களுக்கு) ஒப்பனை செய்து, அவர்களை இறுதிப் பயணத்திற்காகத் தயார் செய்யும் ஒரு 19 வயது இளம் பெண்ணைப் பார்ப்பது அரிது. கிரிஉல்ல பகுதியைச் சேர்ந்த சினேகா உத்யானி நேத்ர குமாரி, ஆண்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தும் 'எம்பாமிங்' துறையில் தனது தாரக மந்திரமாக 'கண்ணியத்தை' ஏந்திச் செயல்படுகிறார்.
எட்டு வயதில் தொடங்கிய ஆர்வம்
சினேகாவின் தந்தை சஞ்சீவ குமார (40) ஒரு எம்பாமர். பாடசாலை முடிந்ததும் சினேகாவை அழைத்துச் செல்லும் தந்தை, தனது வேலை முடியும் வரை சவக்கிடங்கு அலுவலகத்திலேயே அவரை இருக்க வைப்பார். "எனக்கு 13 வயதாக இருந்தபோது, தந்தை செய்வதை தூரத்திலிருந்து பார்க்க உரிமையாளர் அனுமதித்தார். அதைப் பார்க்க எனக்குப் பயமாக இல்லை" எனத் தனது ஆரம்ப காலத்தை நினைவுகூருகிறார் சினேகா.
ஆரம்பத்தில் தந்தை எதிர்ப்புத் தெரிவித்தாலும், சினேகாவின் பிடிவாதத்தால் 15 வயதில் அவருக்கு அனுமதி கிடைத்தது. எம்பாமிங் செய்வதற்கு முன்னதாக சடலத்தை பிளாஸ்டிக் உறையிட (Packing) தந்தை மீதே பயிற்சி எடுத்துக்கொண்ட சினேகா, இன்று இலங்கையின் ஒரே பெண் எம்பாமராகப் புகழ்பெற்றுள்ளார்.
துரோகமும்.. துணிச்சலும்..
சினேகாவின் பயணம் அத்தனை எளிதானதாக இருக்கவில்லை. இத்தொழிலைச் செய்வதால் பாடசாலையில் சக மாணவர்களாலும், ஆசிரியர்களாலும் அவர் ஓரங்கட்டப்பட்டார்.
"என் பெற்றோர்கள் சடலங்களைக் கையாளுவதால் நாங்கள் அசுத்தமானவர்கள் எனப் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை என்னுடன் பேச விடவில்லை."
"பாடசாலையில் எனது மேசை மற்றவர்களிடமிருந்து தள்ளி வைக்கப்பட்டது. எனது சீருடையில் தெரியாமல் கறை பட்டால் கூட, அது பிணத்தின் இரத்தக் கறை என ஏளனம் செய்தார்கள்." இத்தகைய மன உளைச்சலால் சினேகா தனது கல்வியை பாதியிலேயே நிறுத்த வேண்டியிருந்தது. ஆனால், இன்று அதே பாடசாலையில் அதிபர், சினேகாவின் சேவையைப் பாராட்டியது அவருக்குக் கிடைத்த முதல் வெற்றியாக அமைந்தது.
பெண்களின் கண்ணியம் காக்கும் கரம்
ஆண்கள் குடிபோதையில் சடலங்களைக் கையாளுவதையும், பெண் சடலங்களுக்கு இழைக்கப்படும் அவமரியாதையையும் கண்ட சினேகா, பெண் சடலங்களை எம்பாமிங் செய்வதில் அதிக கவனம் செலுத்துகிறார்.
"ஒரு பெண் இறந்தாலும் அவளுக்குரிய மரியாதையை இறுதிவரை காக்க வேண்டும். நான் வேலை செய்யும் போது சடலத்தை எப்போதும் மூடியே வைத்திருப்பேன். எம்பாமிங் அறைக்குள் தேவையற்ற ஆண்களை நான் அனுமதிப்பதில்லை" என்கிறார் அவர் உறுதியுடன்.
சடலங்களின் ஒப்பனை கலைஞர் (Beautician of Corpses)
வெறும் எம்பாமிங் மட்டுமன்றி, விபத்துக்களில் சிதைந்த உடல்களை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டுவரும் 'Restorative Art' எனும் கலையில் சினேகா கைதேர்ந்தவர். விலையுயர்ந்த அழகு சாதனங்கள் இல்லாவிட்டாலும், யூடியூப் (YouTube) பார்த்துத் தானே உருவாக்கிய எளிய முறைகளைப் பயன்படுத்திச் சிதைந்த முகங்களை அழகாக மாற்றுகிறார்.
வாழ்வியல் தத்துவம்
தற்போது தனது கணவர் கிரிஷான் தனுஷ்காவுடன் (சவப்பெட்டி தயாரிப்பாளர்) இணைந்து பணியாற்றும் சினேகா, மிகக் குறைந்த வருமானத்திலும் சேமித்துத் தனது சொந்த 'மலரகம்' (Funeral Parlour) ஒன்றைத் திறக்கக் கனவு காண்கிறார்.
"வாழும் போது பெற்றோரை கவனிக்காமல் விட்டுவிட்டு, இறந்த பின் அவர்களுக்கு விலையுயர்ந்த சவப்பெட்டி வாங்குவதில் அர்த்தமில்லை. இறந்தவர்களுக்குப் பயப்படாதீர்கள், உயிருடன் இருப்பவர்களுக்குத் தான் பயப்பட வேண்டும். வாழ்க்கையின் உண்மையை அறிய வேண்டுமானால் ஒருமுறை எம்பாமிங் அறைக்கு வாருங்கள்" - இது 19 வயதில் வாழ்க்கையைச் சடலங்களிடையே கற்றுக்கொண்ட சினேகாவின் முதிர்ச்சியான வரிகள்.
#🤩எளிய லைஃப் ஹேக்ஸ்♻️ #👉வாழ்க்கை பாடங்கள் #🤔 Unknown Facts
சோத்து பிசாசு - உண்மை சம்பவம்* 😱🍚💖
2019... திருவனந்தபுரம்... கஞ்சிரம் குளம் 😨
என் பேரு அனிதா 😢 IT-ல வேலை 😢 கல்யாணம் ஆகி 5 வருஷம் 😢 கணவர் அருண் 😢 ஆனா 😢 குழந்தை இல்ல 😢
டாக்டர் டாக்டரா பார்த்தாச்சு 😢 "உங்களுக்கு குழந்தை பிறக்காது"னு 😢 ரிப்போர்ட் 😢 வீடே சுடுகாடு மாதிரி 😢
அப்ப தான் 😨 புது வீடு குடி போனோம் 😨 3-வது மாடி 😨 வாடகை வீடு 😨
முதல் நாள் 😊 சமையல் 😊 சாப்பிட உட்கார்ந்தோம் 😊 சாதம் போட்டேன் 😊 அருண் முதல் வாய் எடுத்தான் 😊
அப்ப 😨 "க்கா... பசிக்குதுக்கா..."னு 😨 ஒரு குரல் 😨
ரெண்டு பேரும் 😨 எழுந்து பார்த்தோம் 😨 யாரும் இல்ல 😨 ஜன்னல் சாத்தி இருக்கு 😨 கதவு பூட்டி இருக்கு 😨
"பிரமை"னு 😨 சாப்பிட்டோம் 😨
மறுநாள் 😨 மதியம் 😨 நான் மட்டும் சாப்பிட உட்கார்ந்தேன் 😨 தயிர் சாதம் 😨
வாய் வச்சேன் 😨 அப்ப 😨 டைனிங் டேபிள் கீழ இருந்து 😨 "அம்மா... எனக்கும்..."னு 😨 ஒரு சின்ன குரல் 😨 4 வயசு பிள்ளை மாதிரி 😨
நான் 😱 அலறி எழுந்தேன் 😱 கீழ பார்த்தா 😱 யாரும் இல்ல 😱 ஆனா 😱 தரைல 😱 சின்ன பிஞ்சு கால் தடம் 😱 ஈரமா 😱
அருண் வந்தான் 😨 "என்னடி..."னு 😨 சொன்னேன் 😨 "லூசு மாதிரி பேசாத"னு 😨 திட்டினான் 😨
ஆனா 😨 அன்னைல இருந்து 😨 தினமும் 😨 நாங்க சாப்பிட உட்கார்ந்தா மட்டும் 😨
"அப்பா... ஒரு வாய்..." 😭
"அம்மா... பசிக்குது..." 😭
"என்ன விட்டுட்டு சாப்பிடாதீங்க..." 😭
சாப்பாடு 😨 தட்டுல இருந்து காணாம போகும் 😨 ஸ்பூன் ஆடும் 😨 சில நேரம் 😨 "ம்ம்ம்... டேஸ்ட்டா இருக்கு..."னு 😨 சத்தம் 😨
பயந்து போனோம் 😨 சாப்பிடவே முடியல 😨 ஹோட்டல்ல சாப்பிட்டா 😨 பிரச்சனை இல்ல 😨 வீட்ல சாப்பிட்டா மட்டும் 😨
சாமியார் கூப்பிட்டோம் 😨 "இது குழந்தை பேய்... சாப்பாட்டு பிசாசு... துரத்தணும்"னு 😨 பூஜை பண்ணினாரு 😨 மந்திரம் சொன்னாரு 😨
அன்னைக்கு ராத்திரி 😭 நான் அழுதேன் 😭 "கடவுளே... எனக்கு குழந்தை கொடுக்கல... இப்ப இப்படி பயம் காட்டுறியே..."னு 😭
அப்ப 😨 பக்கத்துல 😨 "அம்மா... அழாதம்மா..."னு 😨 குரல் 😨 திரும்பினேன் 😨
*பெட்ரூம் மூலைல 😭 ஒரு சின்ன பொண்ணு 😭 வயசு 4 இருக்கும் 😭 பாவாடை சட்டை 😭 மெலிஞ்சு போய் 😭 கண்ணு குழி விழுந்து 😭*
"யாரு நீ..."னு 😱
"அம்மா... நான் தான்மா... உங்க வீட்ல தான் இருக்கேன்... 2 வருஷமா..."னு 😭
"என்ன சொல்ற..."னு 😨
"அம்மா... நான் செத்துட்டேன்... பசில செத்துட்டேன்... இந்த வீடு கட்டும் போது... கட்டிட வேலை செய்யுற அம்மாக்கு பிறந்தேன்... அம்மா கூலி வேலை... பால் இல்ல... சோறு இல்ல... ஒருநாள்... பசி தாங்காம... போய்ட்டேன்..."னு 😭💔
என் நெஞ்சு வெடிச்சுடுச்சு 😭😭😭 "ஐயோ..."னு 😭
"அம்மா... அன்னைல இருந்து நான் இங்க தான்... யாரும் சாப்பாடு தரல... நீங்க வந்தீங்க... வாசனை... எனக்கு பசி... அதான் கேட்டேன்... தப்பா அம்மா..."னு 😭
நான் 😭 ஓடி போய் கட்டிப்பிடிச்சேன் 😭 ஐஸ் மாதிரி 😭 ஆனா 😭 விடல 😭 "இல்லடா தங்கம்... தப்பில்ல... வா... சாப்பிடு..."னு 😭
அருண் எழுந்தான் 😨 "ஏய் என்ன பண்ற..."னு 😨
"அருண்... நம்ம மக... இவ தான் நம்ம மக..."னு 😭
அன்னைல இருந்து 😊 நாங்க மாறிட்டோம் 😊
தினமும் 😊 சமைக்கும் போது 😊 "மகளே... இன்னைக்கு என்ன வேணும்..."னு கேப்பேன் 😊
"அம்மா... தயிர் சாதம்... உருளைக்கிழங்கு..."னு 😊 சத்தம் 😊
3 தட்டு போடுவோம் 😊 நான், அருண், மக 😊
முதல் வாய் 😊 "அம்மா உனக்கு..."னு 😊 காத்துல வைப்பேன் 😊 சாப்பாடு 😊 கொஞ்சம் கொஞ்சமா காணாம போகும் 😊 "ம்ம்ம்... சூப்பர்மா..."னு 😊 சத்தம் 😊
பக்கத்து வீட்டுக்காரங்க 😂 "ஏங்க... யார் கூட பேசுறீங்க..."னு 😂
நான் 😂 "என் மக கூட..."னு 😂
ஆச்சரியம் 😭 6 மாசம் கழிச்சு 😭 நான் 😭 கர்ப்பம் 😭 டாக்டர் 😭 "அதிசயம்... எப்படி..."னு 😭
பிரசவ நாள் 😊 பொண்ணு பிறந்தா 😊 முகம் 😊 அப்படியே 😊 அந்த பேய் குழந்தை மாதிரி 😊
காது கிட்ட 😊 "அம்மா... நான் தான்மா வந்துட்டேன்... இனிமே பசிக்காது..."னு 😊 ஒரு குரல் 😊 அப்புறம் 😊 அந்த "பசிக்குது" குரல் 😊 கேக்கவே இல்ல 😊
1. *சில பேய்... பயமுறுத்த வரல... பசி ஆத்த வருது* 😢
2. *நீ கொடுக்காத அன்பு... வேற ரூபத்துல உன்ன தேடி வரும்* 😢
3. *சாப்பிடும் போது ஒரு வாய்... இல்லாதவங்களுக்கு கொடு... அது தான் புண்ணியம்* 😢
4. *குழந்தை இல்லனு அழாத... கடவுள் எப்படியாவது அனுப்பி வைப்பாரு* 😢
*இனிமே சாப்பிட உட்கார்ந்தா 😊 ஒரு வாய் எடுத்து 😊 "இல்லாதவங்களுக்கு"னு 😊 வெளிய வைங்க 😊*
*யார் கண்டா 😊 உங்க வீட்டு "சோத்து பிசாசு" 😊 உங்க வீட்டு லட்சுமியா மாறலாம்.
Share பண்ணுங்க... ஒரு வாய் சோறு... ஒரு உயிர் காப்பாத்தும் 🙏😭* #🤔 Unknown Facts #🤩எளிய லைஃப் ஹேக்ஸ்♻️ #👉வாழ்க்கை பாடங்கள்
#🤔 Unknown Facts #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺வைரல் தகவல்🤩 #😎வரலாற்றில் இன்று📰













