தினமும் ஒரு டம்ளர் மஞ்சப் பூசணி ஜூஸைக் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து தெரியுமா.....
பொதுவாக பூசணிக்காயை நாம் பொரியல் அல்லது சாம்பார் செய்து தான் உட்கொள்வோம். அதிலும் மஞ்சள் பூசணியை நம்மில் பலரும் அமாவாசை நாட்களில் தவறாமல் பொரியல் செய்து நம் முன்னோர்களுக்கு படைத்து சாப்பிடுவது வழக்கம். அத்தகைய மஞ்சள் பூசணியை ஜூஸ் வடிவில் எடுக்கலாம் என்பது தெரியுமா? மஞ்சள் பூசணியில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளது. தற்போது தெருவோரங்களில் இந்த மஞ்சள் பூசணி ஜூஸ் விற்கப்பட்டு வருகிறது.
இதைப் பார்க்கும் போது, பலருக்கும் மஞ்சள் பூசணி ஜூஸ் குடிப்பதால் அப்படி என்ன நன்மை கிடைக்கும் என்ற கேள்வி மனதிற்குள் எழும். உங்களது இந்த கேள்விக்கான விடை இக்கட்டுரையில் கிடைக்கும். ஏனெனில் கீழே ஒருவர் மஞ்சள் பூசணி ஜூஸைக் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் பட்டியலிடப்பட்டுள்ன. மஞ்சள் பூசணி ஜூஸ் எனர்ஜி பானங்களுக்கு ஓர் சிறந்த மாற்றாக இருக்கும்.
மஞ்சள் பூசணியில் வைட்டமின்களான பி1, பி2, பி6, சி, டி, ஈ மற்றும் பீட்டாக கரோட்டீன் போன்றவைகளுடன், கனிமச்சத்துக்களான பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம், காப்பர், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், சுக்ரோஸ் போன்றவைகளும் ஏராளமான அளவில் உள்ளது. அதோடு இதில் கார்போஹைட்ரேட்டுகளும், குறிப்பிட்ட புரோட்டீன்களும் உள்ளது. சரி, இப்போது மஞ்சள் பூசணி ஜூஸைக் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளைக் காண்போம்.
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கல்லீரல் மற்றும் சிறுநீரகம்
மஞ்சள் பூசணி கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களுக்கு மிகவும் நல்லது. சிறுநீரக கற்கள் மற்றும் பித்தப்பை பிரச்சனைகள் உள்ளவர்கள், 1/2 டம்ளர் பூசணிக்காய் ஜூஸை தினமும் மூன்று வேளை என 10 நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தால், இப்பிரச்சனைகளில் இருந்து முற்றிலும் விடுபடலாம்.
ஆர்டிரியோஸ்கிளிரோஸிஸ்
இந்த ஆரஞ்சு நிற ஜூஸ், தமனிக் குழாய்களில் ஏற்கனவே தேங்கி, இதய நோய் மற்றும் பக்கவாதத்திற்கு வழிவகுக்கும் கழிவுப் பொருட்களை நீக்க உதவும். மஞ்சள் பூசணியில் உள்ள அதிகளவிலான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், தமனி தடிப்பால் ஏற்படும் ஆர்டிரியோஸ்கிளிரோஸிஸ் பிரச்சனையைத் தடுக்க உதவும்.
செரிமான பிரச்சனை
செரிமான பிரச்சனைகளால் அடிக்கடி அவஸ்தைப்படுகிறீர்களா? இந்த பிரச்சனைக்கு உடனடி தீர்வு காண நினைக்கிறீர்களா? அப்படியானால் தினமும் சிறிது மஞ்சள் பூசணி ஜூஸைக் குடித்து வாருங்கள். இதனால் செரிமானம் சிறப்பாக நடைபெறுவதோடு, செரிமான மண்டலத்தின் ஆரோக்கியமும் மேம்படும்.
மலச்சிக்கல்
உங்களுக்கு அடிக்கடி மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படுகிறதா? என்ன செய்தாலும் மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுபட முடியவில்லையா? அப்ப மஞ்சள் பூசணி ஜூஸை தினமும் குடியுங்கள். ஏனெனில் மஞ்சள் பூசணியில் உள்ள மலமிளக்கும் பண்புகள் மலச்சிக்கலைத் தடுப்பதோடு, வயிற்றுப் போக்கு பிரச்சனையில் இருந்தும் விடுவிக்கும்.
சிறுநீரக அமைப்பின் செயல்பாடு
ஒருவரது உடலில் சிறுநீரகங்கள் சரியாக நடைபெற்றால் தான், உடலில் இருந்து கழிவுகள் முறையாக வெளியேற்றப்படும். இல்லாவிட்டால் கழிவுகள் உடலில் தேங்கி, அதுவே பல பிரச்சனைகளை உண்டாக்கும். எனவே உங்கள் சிறுநீரகங்கள் சிறப்பாக செயல்பட வேண்டுமானால், தினமும் ஒரு டம்ளர் மஞ்சள் பூசணி ஜூஸைக் குடியுங்கள்.
தூக்கமின்மை
மஞ்சள் பூசணியில் மயக்கமூட்டும் பண்புகள் உள்ளது. எனவே இந்த ஜூஸைக் குடித்தால், தினமும் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம். அதிலும் தூக்கமின்மை பிரச்சனையால் கஷ்டப்படுபவர்கள், தினமும் மஞ்சள் பூசணி ஜூஸில் தேன் கலந்து குடித்து வாருங்கள். இதனால் உடனடி பலனைக் காணலாம்.
உயர் இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால்
உங்களுக்கு உயர் இரத்த அழுத்தம் மற்றும் உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளதா? இதற்காக அன்றாடம் மாத்திரைகளை தவறாமல் எடுக்க வேண்டியுள்ளதா? உங்கள் இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், கொலஸ்ட்ராலைக் குறைக்கவும், மஞ்சள் பூசணி உதவும். இதற்கு அதில் உள்ள பெக்டின் என்னும் பொருள் தான் காரணம். எனவே மஞ்சள் பூசணி ஜூஸைக் குடித்து, உங்கள் இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ராலைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளுங்கள்.
உடல் சூடு
மஞ்சள் பூசணியில் குளிர்ச்சிப் பண்புகள் அதிகம் உள்ளது. நீங்கள் வெயிலில் அதிகம் சுற்றுபவராக இருந்தால், உடல் சூடு அதிகரிக்காமல், உடலின் வெப்பநிலையை சீராக வைத்துக் கொள்ள, தினமும் ஒரு டம்ளர் மஞ்சள் பூசணி ஜூஸைக் குடியுங்கள். உடல் சூடு அதிகரித்தாலும் மலச்சிக்கல் பிரச்சனை வரக்கூடும். எனவே உடலை அதிக சூடு அடையாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
ஹைபடைடிஸ் ஏ
ஹைபடைடிஸ் ஏ பிரச்சனையால் அவஸ்தைப்படுபவர்கள், அன்றாட டயட்டில் மஞ்சள் பூசணி ஜூஸை சேர்த்துக் கொள்வது நல்லது. இதில் உள்ள உட்பொருட்கள், பாதிக்கப்பட்ட கல்லீரலின் செயல்பாட்டை மேம்படுத்த உதவி, ஹைபடைடிஸ் ஏ பிரச்சனையில் இருந்து விரைவில் விடுவிக்கும்.
நோயெதிர்ப்பு சக்தி
மஞ்சள் பூசணியில் வைட்டமின் சி மற்றும் இதர கனிமச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இவை நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தி, உடலைத் தாக்கும் பல்வேறு நோய்களின் தாக்கத்தில் இருந்து, உடலைப் பாதுகாக்கும். ஆகவே உங்கள் நோயெதிர்ப்பு மண்டலததை வலிமைப்படுத்த நினைத்தால், மஞ்சள் பூசணி ஜூஸை தினமும் ஒரு டம்ளர் குடியுங்கள்.
சரும ஆரோக்கியம்
மஞ்சள் பூசணி ஜூஸைக் குடிப்பதால், உடல் ஆரோக்கியம் மேம்படுவதோடு, சரும பிரச்சனைகள் நீங்கி, சரும ஆரோக்கியமும் மேம்படும். இதற்கு மஞ்சள் பூசணியில் உள்ள வைட்டமின் சி, ஈ மற்றும் பீட்டா கரோட்டீன் தான் முக்கிய காரணம். இவை அனைத்துமே ஆரோக்கியமான மற்றும் அழகான சருமத்திற்கு அவசியமானவை. எனவே அழகாக இருக்க நினைத்தால், மஞ்சள் பூசணி ஜூஸைக் குடியுங்கள்.
சரும சுருக்கம் நீங்கும்
சருமத்தில் முதுமைத் தோற்றத்தைத் தரும் சுருக்கங்கள் காணப்படுகிறதா? இதற்காக ஆன்டி-ஏஜிங் க்ரீம்களைப் பயன்படுத்தி வருகிறீர்களா? ஆனால் எவ்வித பலனும் கிடைத்த பாடில்லையா? அப்படியானால் மஞ்சள் பூசணியை அரைத்து, அத்துடன் சிறிது தேன், தயிர், எலுமிச்சை சாறு மற்றும் வைட்டமின் ஈ ஆயில் சேர்த்து கலந்து, வாரத்திற்கு 2-3 முறை சருமத்திற்கு மாஸ்க் போடுங்கள்...
#🏋🏼♂️ஆரோக்கியம்
தொப்பையை குறைக்க உதவும் பானம்.....
நெல்லிக்காய், இஞ்சி, எலுமிச்சை சேர்த்த பானம் குடித்தால் கல்லீரல் செயல்பாடு அதிகரித்து தொப்பை குறையும்.....
இதற்கு, ஒரு பெரிய நெல்லிக்காய், சிறிய துண்டு இஞ்சி அரைத்துக்கொள்ளவும். இதில் அரை எலுமிச்சை சாறு சேர்த்து ஒரு லிட்டர் தண்ணீர் கலந்து கொள்ளவும். இந்த பானத்தை காலையில் எழுந்தவுடன்(காலையில் எழுந்த 1 மணிநேரத்தில்) தொடர்ந்து 3 மாதங்கள் குடித்துவர நல்ல பலன் கிடைக்கும். இதோடு உடற்பயிற்சியும் செய்து வர வேண்டும்..... #🏋🏼♂️ஆரோக்கியம்
நவ 15 - கடலோரப் பகுதிகளை நெருங்கி வரும் மழை மேகக் குவியல்...
இன்று இரவு முதல் தமிழகத்தின் டெல்டா கடலோர மாவட்டங்களில் மழை தொடங்கி நாளை ஞாயிற்றுக்கிழமை நவ 16 மழை தீவிரமாக இருக்கக்கூடும்...
நாகப்பட்டினம், காரைக்கால், திருவாரூர் ,மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை தீவிரமாக இருக்க கூடும் விவசாய நண்பர்கள் சற்று எச்சரிக்கை இருப்பது நல்லது குறுகிய நேரத்தில் கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும்..
சீர்காழி, காவேரிப்பட்டினம், மயிலாடுதுறை ,குத்தாலம் ,ஆடுதுறை ,திருக்கடையூர் ,கொல்லுமங்குடி, தரங்கம்பாடி, தேடியூர், நன்னிலம், காரைக்கால், கீழ்வேளூர் ,நாகூர், உள்ளிக்கோட்டை, தகட்டூர், சிதம்பரம் சுற்று பகுதிகளில் நாளை ஞாயிற்றுக்கிழமை பலத்த மழை பெய்யக்கூடும்...
வேதாரண்யம், பாம்பன், ராமேஸ்வரம் பகுதிகளில் மிக கனமழை முதல் சற்றே அதிக கனமழை வரை பெய்யும்...
கடலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் மாவட்டங்களில் பரவலாக மிதமான முதல் கனமழையும்..
பெரம்பலூர், அரியலூர் , ராமநாதபுரம் ,சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை பரவலாக லேசான முதல் மிதமான மழை பெய்யும்
சென்னை முதல் கன்னியாகுமரி வரை உள்ள கடலோர மாவட்டங்களில் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை பரவலான இடங்களில் மிதமான முதல் கனமழையும் ஒரு சில இடங்களில் சற்றே மிக கனமழையும் பெய்யக்கூடும்...
சென்னையில் திங்கட்கிழமை கன மழை பெய்யக்கூடும்
#🌧️மழைக்கால மீம்ஸ்😆
🇨🇭 ஆண்களைத்
தாக்கும்... ‼️⁉️
🇨🇭 இரைப்பை_ஏற்றம்⁉️
🇨🇭 Hiatal_Hernia.‼️⁉️
🔰 இதை கண்டு கொள்ளாமல் விட்டால் சந்திக்கும் அபாயம் என்ன தெரியுமா⁉️
🇨🇭ஆண்களுக்கு இரைப்பை ஏற்றம் என்னும் பாதிப்பு ஏற்படுவது மிகவும் பொதுவானது. இரைப்பை ஏற்றம் என்பது ஒரு வகையான குடலிறக்கம். ஆனால் இதனை புறக்கணிப்பதன் காரணமாக இது தீவிர.. விளைவுகளை உண்டாக்கும் நோயாக மாறுகிறது.
பொதுவாக ஆண்களுக்கு மட்டுமே ஏற்படும் இந்த பாதிப்பு, சில நேரங்களில் பெண்களையும் தாக்கக்கூடும்.பெண்களுக்கு இந்த பாதிப்பு பிரசவத்திற்கு பின் ஏற்படலாம்.
🇨🇭 இரைப்பை ஏற்றம் Hiatal Hernia ஏற்படுவதற்கான காரணங்கள்⁉️
உடலில் வயிற்றையும் நெஞ்சையும் இரண்டாகப் பிரிப்பது ‘உதரவிதானம்’ (Diaphragm) என்னும் தடிமனான சவ்வு.
Diaphragm.... உதரவிதானம் என்பது நெஞ்சறையையும் (thoracic cavity) வயிற்றறையையும் (abdominal cavity) பிரிக்கும் ஒரு குவிமாடவடிவ தசை ஆகும். இது சுவாசத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது, மார்புக்கூடு விரிவடைந்து, சுவாசம் எளிதாக்க உதவுகிறது. இதன் ஆங்கிலப் பெயர் Diaphragm.
நாம் சாப்பிடும் உணவு, உணவுக்குழாய் வழியாக இரைப்பையை அடைகிறது. இந்த உணவுக்குழாய் உதரவிதானத்தில் உள்ள ஒரு சிறு துளை (Hiatus) வழியாகச் செல்கிறது. உதரவிதானத்தில், இந்தத் துளையைச் சுற்றி, உணவுக் குழாயை ஒட்டி, வட்டமான ரப்பர் பேண்டைப் போட்டது போல ஒரு சிறிய சவ்வுப்படலம் அமைந்துள்ளது. இது, இந்தத் துளை பெரிதாகிவிடாமல் பார்த்துக் கொள்கிறது. இதனால், உணவுக்குழாயும் இரைப்பையும் இணையும் பகுதி உதரவிதானத்துக்குக் கீழே வயிற்றில் இருக்கிறது. இந்தச் சவ்வுக்கு விரிந்து சுருங்கும் தன்மை இருப்பதால், உணவுக்குழாயில் உணவு வரும்போது, விரிந்து கொடுத்து, உணவு இரைப்பைக்குச் செல்ல வழி கொடுக்கிறது.
இந்த இயல்பான அமைப்பில் பிழை உண்டாகும்போது பிரச்சினை ஆகிறது. எப்படி? வயதாக ஆக இந்தச் சவ்வு பலவீனமாகிறது. அல்லது வேறு சில காரணங்களால் இது வயதான சல்லடைபோல் தொங்கிவிடுகிறது. அப்போது மேற்சொன்ன இடைத்துளை பெரிதாகிவிடுகிறது. இதன் விளைவால், இரைப்பையின் மேற்பகுதியில் கொஞ்சம் இந்தத் துளை வழியாக நெஞ்சுக்குள் புகுந்து
கொள்கிறது. இந்த நிலைமையைத்
தான் ‘இரைப்பை ஏற்றம்’ (Hiatal hernia) என்கிறார்கள்.
🇨🇭 யாருக்கு வருகிறது⁉️
இது வருவதற்கு முதுமை ஒரு காரணம் என்றாலும், இன்னும் சில காரணிகள் இதற்குத் துணை போகின்றன. இடைச்சவ்வான உதரவிதானம்’ (Diaphragm) பிறவியிலேயே பலவீனமாக இருந்தால், இது குழந்தைக்கும் ஏற்படுவது உண்டு. அடுத்து, அதிக உடல் எடை கொண்டவர்
களுக்கும் கர்ப்பிணிகளுக்கும் வயிற்றுக்குள் அழுத்தம் அதிகரிப்பதால், இந்த இடைச்சவ்வு பலவீனமடைந்து, இந்தப் பாதிப்பு ஏற்பட வழிவிடும். மலச்சிக்கல் கடுமையாக இருப்பவர்களுக்கும், விபத்து போன்றவற்றால் வயிற்றில் கடுமையாக அடிபட்டவர்களுக்கும் இது ஏற்படுவதுண்டு.
🇨🇭 இதன்
அறிகுறிகள்⁉️
உணவைச் சாப்பிட்டதும் நெஞ்சில் எரிச்சல் (Heartburn) ஏற்படும். மிகவும் இனிப்பான, காரமான, கொழுப்பு மிகுந்த உணவு வகைகளைச் சாப்பிட்டால், உடனே நெஞ்சு முழுவதும் எரியும். வழக்கமாக, பெண்கள் சாப்பிட்ட பின்பு வீட்டைச் சுத்தம் செய்கிறேன் என்று குனிந்து நிமிர்ந்து வேலை செய்வார்கள். இதனால் வயிற்றில் அழுத்தம் அதிகரித்து, அமிலம் மேலேறி, நெஞ்செரிச்சலை உண்டாக்கிவிடும். இவற்றோடு ஏப்பம், குமட்டல், வாந்தி போன்ற தொல்லைகளும் சேர்ந்துகொள்ளும்.
🇨🇭 ஹைட்டல் ஹெர்னியா வகைகள்⁉️இதில் பல நிலைகள் உண்டு.
🇨🇭 Hiatal hernia types⁉️
1️⃣ Type I- Sliding type
2️⃣ Type II- Paraesophageal hiatal hernia
3️⃣ Type III- Both paraesophageal and sliding hernia
4️⃣ Type IV- When the stomach, colon, small intestine, or spleen herniate into the chest
🔰 வகை 1:⁉️
1️⃣ஸ்லைடிங் ஹைட்டல் ஹெர்னியா: ⁉️
Type I- Sliding type
இது மிகவும் பொதுவான வகை. இதில், வயிற்றின் மேல் பகுதியும், உணவுக்குழாய் சந்திப்புப் பகுதியும் உதரவிதானத்தில் உள்ள இடைவெளி வழியாக மேலும் கீழும் நகர்கின்றன.
🔰வகை 2:⁉️
2️⃣ பாராசோ பேஜியல் ஹைட்டல் ஹெர்னியா:⁉️
Type II- Paraesophageal hiatal hernia
இதில், உணவுக்குழாய் சந்திப்புப் பகுதி நிலையாக இருக்கும் போது, வயிற்றின் ஒரு பகுதி (உதாரணமாக, மேல் பகுதி) மட்டுமே மார்புப் பகுதிக்குள் நகர்கிறது.
🔰வகை 3:⁉️
3️⃣ கலப்பு வகை (ஸ்லைடிங் மற்றும் பாராசோபேஜியல்):⁉️
Type III- Both paraesophageal and sliding hernia
இந்த வகையிலும் வயிற்றின் மேல் பகுதி மார்புப் பகுதிக்குள் நகர்கிறது. ஆனால், இது ஸ்லைடிங் மற்றும் பாராசோபேஜியல் குடலிறக்கத்தின் கூறுகளைக் கொண்டுள்ளது.
🔰வகை 4:⁉️
4️⃣ சிக்கலான வகை:⁉️
Type IV- When the stomach, colon, small intestine, or spleen herniate into the chest
இது மிகவும் அரிதான வகையாகும். இதில், வயிறு மட்டுமின்றி, சிறுகுடல், பெருங்குடல் அல்லது மண்ணீரல் போன்ற மற்ற வயிற்று9994379988 உறுப்புகளும் மார்புப் பகுதிக்குள் தள்ளப்படும்.
⛔ அறிகுறி⁉️ அடிப்படையிலான வகைகள்⁉️
✅அவ்வப்போது தோன்றும் இரைப்பை ஏற்றம் (Mild/Intermittent GERD):⁉️இந்த வகையினருக்கு அறிகுறிகள் (நெஞ்செரிச்சல், ஏப்பம், குமட்டல்) எப்போதாவது தோன்றி மறையும். உணவுமுறை மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம் இதை நிர்வகிக்க முடியும்.
✅தொடர்ச்சியான இரைப்பை ஏற்றம் (Moderate/Frequent GERD):⁉️இந்த வகையினருக்கு அறிகுறிகள் அடிக்கடி (வாரத்திற்கு இரண்டு முறைக்கு மேல்) ஏற்படும். இதற்கு மருந்துச் சீட்டுடன் கூடிய மருந்துகள் தேவைப்படலாம்.
✅கடுமையான இரைப்பை ஏற்றம் (Severe GERD):⁉️அறிகுறிகள் மிகத் தீவிரமாகவும், வலியுடனும் இருக்கும். மருந்துகளாலும் முழுமையாகக் கட்டுப்படுத்த முடியாமல் போகலாம். சில சமயங்களில் அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்
படலாம்.
✅இரண்டும் கலந்த வகை (Combined type):⁉️
சில சமயங்களில், வழுக்கும் வகை மற்றும் பெரிய நிலை வகை இரண்டும் ஒரே நேரத்தில் ஏற்படலாம்.
✅இரைப்பை அழற்சி (Gastritis):⁉️
இது இரைப்பைச் சுவரில் ஏற்படும் அழற்சி ஆகும், இது இரைப்பை ஏற்றத்தின் அறிகுறிகளை ஒத்திருக்கும் ஆனால் இது ஒரு தனிப்பட்ட நோயாகும்.
✅ ஆரம்பத்தில் இந்தப் பகுதி நெஞ்சுக்குள் புகுவதும் மீண்டும் வயிற்றுக்குள் திரும்புவதுமாக இருக்கும். இது ‘நழுவும் இரைப்பை ஏற்றம்’ (Sliding Hiatal hernia). இந்தப் பாதிப்புதான் 100-ல் 95 பேருக்கு இருக்கும். இது இருப்பது பலருக்குத் தெரியாமலேகூட இருப்பதுண்டு.
✅வேறு ஆரோக்கியப் பிரச்சினைகளுக்காக நெஞ்சை எக்ஸ்-ரே, சி.டி. ஸ்கேன் எடுக்கும்போது அல்லது இரைப்பையை எண்டாஸ்கோப்பி பரிசோதனை செய்யும்போது இது இருப்பது தெரியவரும்.
🔻மற்றொரு வகை இருக்கிறது. இதுதான் பெரிதும் பிரச்சினை கொடுப்பது. ஆரம்பத்தில் வயிற்றுக்கும் நெஞ்சுக்கும் நழுவிக்கொண்டிருந்த இரைப்பையின் மேற்பகுதி, ஒரு கட்டத்தில் வயிற்றுக்குத் திரும்பாமல், நெஞ்சுக்குள்ளேயே நிலையாக இருந்து விடும். இந்த நிலைமைக்கு ‘இடமாறு இரைப்பை ஏற்றம்’ (Para - oesophageal hiatal hernia) என்று பெயர். இந்த நிலைமை தொடருமானால், இரைப்பையின் சிறு பகுதி நெஞ்சுக்குள் முறுக்கிக்கொள்ளவும் (Volvulus) வாய்ப்புண்டு. இதுதான் இந்தப் பாதிப்பின் மோசமான கட்டம்.
1️⃣முதல் வகை இரைப்பை ஏற்றம் உள்ளவர்களுக்கு இந்த அறிகுறிகள் அவ்வப்போது தோன்றி மறையும். 2️⃣இரண்டாம் வகையினருக்கு இவை தொடர்ந்து தொல்லைப்
படுத்தும். இந்தப் பாதிப்பின் மோசமான கட்டத்தில் நெஞ்சுவலி கடுமையாக இருக்கும். மாரடைப்பு வந்துவிட்டதுபோல் பயமுறுத்தும்.
💞 குழந்தை
களுக்குப் பிறவியிலேயே இது இருந்தால், அடிக்கடி சளி பிடிக்கும்.
🇨🇭 இதன்_பிற⁉️ அறிகுறிகள்.⁉️
✅விழுங்குவதில் சிரமம் மற்றும் நெஞ்சு வலி
✅ இரும்புச்சத்துக் குறை இரத்தசோகை, குடல்முறுக்கம் போன்றவையும் ஏற்படலாம்.
🇨🇭 இரைப்பை ஏற்றமானது பெரும்பாலும் "great mimic" (பெருநடிப்பு) என்று அழைக்கப் படுகிறது, ஏனெனில் அதன் அறிகுறிகள் பல உடல்... சீர்குலைவுகளை ஒத்திருக்கின்றன.
⛔#இரைப்பை #ஏற்றத்துக்கு #ஆளானவர்கள்⁉️
☑️மார்பில் மந்தமான வலி,
☑️மூச்சு வாங்குதல் (உதரவிதானத்தின்மீது இரைப்பை ஏறுவதால் உண்டாகிறது),
☑️இதயப் படபடப்பு (வேகஸ் நரம்பு எரிச்சல் காரணமாக),
☑️அடிக்கடி நெஞ்செரிச்சல் ஏற்படுவதும்,
☑️மார்பக வலி அல்லது உணவை விழுங்குவதில் வலி ஏற்படக்கூடும்.
☑️பெரும்பாலும் இரைப்பை ஏற்றமானது எந்த அறிகுறிகளும் இல்லாமல் இருப்பதும் உண்டு...
🇨🇭 இரைப்பை⁉️ ஏற்றத்தின் பொதுவான
அறிகுறிகள்:⁉️
☑️ நெஞ்செரிச்சல்:⁉️
நெஞ்சின் நடுப்பகுதியில் எரியும் உணர்வு, இது பொதுவாக சாப்பிட்ட பிறகு அல்லது படுக்கும்போது மோசமாக இருக்கும்.
☑️வாயில் அமிலச் சுவை:⁉️
வயிற்றில் உள்ள அமிலம் வாய்க்குள் வருவது, இது பொதுவாக துர்நாற்றத்தை ஏற்படுத்தும்.
☑️விழுங்குவதில் சிரமம்:⁉️
உணவு அல்லது பானங்களை விழுங்குவது கடினமாக இருக்கலாம்.
☑️நெஞ்சு வலி:⁉️
நெஞ்சில் வலி ஏற்படும், இது இதய நோயின் அறிகுறியாக தவறாக நினைக்கப்படலாம்.
☑️வீக்கம் மற்றும் ஏப்பம்:⁉️
வயிறு வீக்கம் மற்றும் அடிக்கடி ஏப்பம் விடுவது போன்ற அறிகுறிகள் ஏற்படலாம்.
🇨🇭 பிற அறிகுறிகள்:⁉️
குமட்டல்:⁉️குமட்டல் உணர்வு ஏற்படலாம்.
வாந்தி:⁉️சில சமயங்களில் வாந்தி ஏற்படலாம், குறிப்பாக வாந்தியில் பித்தப்பையிலிருந்து வரும் பச்சை நிற திரவம் இருக்கலாம்.
தசைப்பிடிப்பு:⁉️வயிற்றுப் பகுதியில் மிதமான அல்லது கடுமையான தசைப்பிடிப்பு ஏற்படலாம்.
குறைந்த பசி:⁉️பசி குறைவது ஒரு அறிகுறியாக இருக்கலாம்.
சிக்கல்கள்:⁉️இரும்புச்சத்துக் குறைபாடு (Anemia):⁉️நீண்ட காலத்திற்கு இந்த நிலை தொடர்ந்தால், இரும்புச்சத்துக் குறைபாடு ஏற்படலாம்.
குடல் அடைப்பு அல்லது குடல் முறுக்கம்:⁉️இந்த நிலை தீவிரமடைந்தால் குடல் அடைப்பு அல்லது குடல் முறுக்கம் போன்ற சிக்கல்கள் ஏற்படலாம்.
* வயிற்று கொழுப்பு வெளியில் தெரிவது
* குறிப்பிட்ட கால் மூட்டில் வீக்கத்தை உணர்வது
* வீக்கமடைந்து மூட்டு பகுதியில் வலி தெரிவது
* நீண்ட நேரம் நிற்பதில் சிரமம் ஏற்படுவது
* குடல் இயக்கங்களில் தொந்தரவு இருப்பது
🇨🇭 என்ன⁉️ பரிசோதனை செய்வது⁉️
அடிக்கடி நெஞ்சில் எரிச்சல் ஏற்பட்டால், தொடக்கத்திலேயே ‘கேஸ்ட்ரோ எண்டாஸ்கோப்பி’ (Gastro endoscopy), நெஞ்சு மற்றும் வயிற்று சி.டி. ஸ்கேன், இ.சி.ஜி. (ECG) ஆகிய பரிசோதனைகளைச் செய்து காரணம் தெரிந்துகொள்ள வேண்டும்.
🔰அறுவை‼️ சிகிச்சை⁉️
பாதிப்பு கடுமையாக உள்ளவர்களுக்கு லேப்ராஸ்கோப் முறையில் அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்படுவதும் உண்டு. ஆனால், இது எல்லோருக்கும் பலன் தரும் என்று உறுதிகூற முடியாது. எனவே, யாருக்கு அறுவைசிகிச்சை செய்வது என்பதை மருத்துவர்தான் முடிவு செய்ய வேண்டும்.
🇨🇭 தடுப்பது🔰 எப்படி⁉️எப்போது⁉️ மருத்துவரை அணுக வேண்டும்⁉️
✅தேவைக்குச் சாப்பிடுங்கள்.
✅அதிகச் சூடாக எதையும் சாப்பிடாதீர்கள்.
❌காரம், மசாலா கலந்த, எண்ணெய் மிகுந்த, கொழுப்பு நிறைந்த, புளிப்பேறிய உணவைக் குறைத்துக் கொள்ளுங்கள்.
✅ஒரே நேரத்தில் வயிறு நிறையச் சாப்பிடுவதைவிட மூன்று மணி நேர இடைவெளியில் சிறிது சிறிதாகச் சாப்பிடலாம்.
❌காபி, தேநீர், சாக்லேட், சிட்ரஸ் பழங்கள், தக்காளி, வாயு நிரப்பப்பட்ட பானங்கள், கோலா பானங்கள் வேண்டாம்.
✅சாப்பிட்ட பின் குனிந்து வேலை செய்யக் கூடாது.
❌கனமான பொருளைத் தூக்கக் கூடாது.
❌சாப்பிட்டவுடன் படுக்காதீர்கள்.
✅குறைந்தது இரண்டு மணி நேரம் கழித்துப் படுக்கச் செல்லுங்கள்.
✅அப்போதுகூட படுக்கையின் தலைப்பகுதியை அரை அடியிலிருந்து ஒரு அடிவரை உயர்த்திக் கொள்வதும்,
✅இடது புறமாகத் திரும்பிப் படுப்பதும் நெஞ்செரிச்சலைக் குறைக்கும்.
❌புகையிலை, பான்மசாலா ஆகாது. புகைப்பிடிப்பதும் மது அருந்துவதும் ஆகவே ஆகாது.
✅ மலச்சிக்கல் போன்ற பாதிப்புகளை அலட்சியம் செய்ய வேண்டாம். நீண்ட நாட்கள் மலச்சிக்கல் பாதிப்பு இருந்தால் மருத்துவரை அணுகவும்.
✅ மேல் வயிற்றில் தீவிர வலி இருந்தால் உங்கள் மருத்துவரை அணுகவும்.
✅ அடிக்கடி வலி நிவாரணி மருந்துகளைப் பயன்படுத்தி வலியை அடக்க வேண்டாம்.
✅ தொடர்ந்து நெஞ்செரிச்சல் இருந்து வந்தால் உடனடியாக மருத்துவரை அணுகவும்.
✅ மருந்துகளால் நிலை மேம்படா விட்டால், லேப்ராஸ்கோப் முறையில் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்படுவதும் உண்டு.
மேலே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகளை நீங்கள் உணர்ந்தால் நீங்கள் இரைப்பை ஏற்றத்தை கண்டு கொள்ளாமல் விடுகிறீர்கள் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளலாம். இதன் விளைவுகள் இன்னும் தீவிரமாக இருக்கலாம். நாளுக்கு நாள் இரைப்பை ஏற்றத்தின் அபாயம் அதிகரித்தபடி இருக்கும்.சரியான நேரத்தில் இரைப்பை பாதிப்பை சரிசெய்யாமல் போனால், தீவிர பாதிப்புகளைச் சந்திக்க நேரிடும். அதனால் இதன் விளைவுகளைத் தவிர்க்க, இரைப்பை பாதிப்புகள் குறித்த அறிகுறிகளை அசட்டை செய்ய வேண்டாம். #🏋🏼♂️ஆரோக்கியம்










