மாற்றம் நிறைந்தது ஏமாற்றம் மிகுந்தது வாழ்க்கை
ShareChat
click to see wallet page
@smraja2345
smraja2345
மாற்றம் நிறைந்தது ஏமாற்றம் மிகுந்தது வாழ்க்கை
@smraja2345
நல்ல ரசிகன் அவன் இவனே SanmugaRaja இவன் அவனே,
``ஏன் இதெல்லாம் வாங்க பொண்ணுங்க வெட்கப்படணுமா?’’ ``நான் ஒரு பாலியல் பொருளை ஆர்டர் செய்திருந்தேன். அதை எடுத்து வந்த டெலிவரி பாய் என்னை ஒரு மாதிரி பார்த்தார். அப்போதே சங்கடமாக உணர்ந்தேன். ஆர்டரை பிரித்ததும் சீல் வைக்காமல் இருந்ததை கண்டு பதறினேன். சில நொடிகளில் அவர் போன் செய்து, ``இதெல்லாம் ஏன் யூஸ் பண்றீங்க.. அதான் நான் இருக்கேன்ல’’ என சொன்னார். அதிர்ச்சியில் உறைந்துவிட்டேன். என்ன மாதிரியான மனநிலை இது? பாலியல் பொருளை வாங்க பெண்கள் இன்னும் ஏன் வெட்கப்பட வேண்டும்? அதை பயன்படுத்துவதாலேயே அத்துமீறும் உரிமையை ஆண்களுக்கு யார் கொடுத்தது?’’ - டெல்லியை சேர்ந்த பெண் ஒருவர் பகிர்ந்த இந்த பதிவு நெட்டிசன்களிடையே கடும் விவாதத்தை எழுப்பியுள்ளது #பெண்கள் #ஆரோக்கியம் #👩🏼‍⚕️ மகளிர் மருத்துவம் #மகளிர் மட்டும் #பெண்
பெண்கள் - தந்த AMGE THANTH TV இதெல்லாம் ஏன வாIங்க பொண்ணுங்க வெட்கப்படணுப மா?99 66 பாலியல் பொருளை ஆர்டர் செய்திருந்தேன் அதை @ நான் என்னை ஒரு மாதிரி பார்த்தார் எடுத்து வந்த டெலிவரி பாய் அப்போதே பிரித்ததும் சீல் சங்கடமாக உணர்ந்தேன் ஆர்டரை பதறினேன் வைக்காமல் இருந்ததை சில நொடிகளில் கண்டு அவர் போன் செய்து, 66 இதெல்லாம் யூஸ் பண்றிங்க. ஏன் இருக்கேன்ல அதான் 99 அதிர்ச்சியில் சொன்னார் என DIIICUT றைந்துவிட்டேன் என்ன மாதிரியான மனநிலை இது? உ பெண்கள் இன்னும் பாலியல் பொருளை வாங்க ஏன் அதை பயன்படுத்துவதாலேயே வெட்கப்பட வேண்டும்? கொடுத்தது?' அத்துமீறும் உரிமையை ஆண்களுக்கு யார் சேர்ந்த பெண் ஒருவர் பகிர்ந்த இந்த பதிவு டெல்லியை நெட்டிசன்களிடையே கடும் விவாதத்தை எழுப்பியுள்ளது 26.05.2026 | IHAIIHIIV THANTHIONETV | தந்த AMGE THANTH TV இதெல்லாம் ஏன வாIங்க பொண்ணுங்க வெட்கப்படணுப மா?99 66 பாலியல் பொருளை ஆர்டர் செய்திருந்தேன் அதை @ நான் என்னை ஒரு மாதிரி பார்த்தார் எடுத்து வந்த டெலிவரி பாய் அப்போதே பிரித்ததும் சீல் சங்கடமாக உணர்ந்தேன் ஆர்டரை பதறினேன் வைக்காமல் இருந்ததை சில நொடிகளில் கண்டு அவர் போன் செய்து, 66 இதெல்லாம் யூஸ் பண்றிங்க. ஏன் இருக்கேன்ல அதான் 99 அதிர்ச்சியில் சொன்னார் என DIIICUT றைந்துவிட்டேன் என்ன மாதிரியான மனநிலை இது? உ பெண்கள் இன்னும் பாலியல் பொருளை வாங்க ஏன் அதை பயன்படுத்துவதாலேயே வெட்கப்பட வேண்டும்? கொடுத்தது?' அத்துமீறும் உரிமையை ஆண்களுக்கு யார் சேர்ந்த பெண் ஒருவர் பகிர்ந்த இந்த பதிவு டெல்லியை நெட்டிசன்களிடையே கடும் விவாதத்தை எழுப்பியுள்ளது 26.05.2026 | IHAIIHIIV THANTHIONETV | - ShareChat
முதல் இரவில் என்ன செய்ய வேண்டும்..!! எல்லாத்தையும் தியரியாவே படித்த என் மாணவர்களை திடீரென்று ஆய்வு கூடத்தில் விட்டுட்டு, அதான் வகுப்பறையில் சொல்லி குடுத்தேனே கவனிக்கல? அப்படினு கேட்பது எந்த விதத்தில் நியாயமாகும்? அதே தான். முதல் இரவு முடித்து வெளியே வரும் புதுமண தம்பதிகளிடம் "எல்லாம் நல்லபடியா முடிஞ்சிதாப்பானு?" கேட்பது. உடல் பாகங்கள் பற்றி நம் கல்வி முறை பெரிதா ஏதும் சொல்லிதரல. படத்திலும் இலை மறைவு காய் மறைவாகவே காண்பித்து விட்டு கல்லாவில் காசு கட்டினால் போதும் கடமை முடிந்ததென்று கைவிரித்து விட்டார்கள். பெற்றோர் இதைப் பற்றி பேசுவதே இல்லை, கல்வி முறையும் உடல் பாகங்கள் மற்றும் அதன் தேவைகளை கற்று தர வெட்கப்பட்டதன் விளைவு, இந்த பாடத்தை கற்க எம் தலைமுறையினர் சன்னி லியோன் மற்றும் சகிலா அக்காவின் வகுப்பறைக்கு செல்ல வேண்டியதாயிற்று. ஒரு விசயத்தை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். இனப்பெருக்கம் என்பதும் ஒரு பாடம் தான். அதை ஏன் வெளிப்படையாக யாரும் அடுத்த தலைமுறைக்கு கற்று தருவதில்லை என்பது நம் சமூகத்தில் நடக்கும் அவலங்களுள் ஒன்று தான். இதை கற்றுதர மறுத்துவிட்டு, உலகில் அதிகம் ஆபாச வீடியோக்கள் பார்க்கும் நாடுகளில் என் நாடும் என் நாட்டு மக்களும் முதலிடம் பிடித்தார்கள் என்று வேதனைப்படுவது எந்த விதத்தில் நியாயம்? இதை யாரோ ஒருவர் கற்றுக் கொடுத்தால் யாரோ ஒருவருக்கு உதவும் என்றால் அந்த கற்றுக்கொடுக்கும் பணியை முதலில் கையில் எடுப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன் முதல் இரவில் என்ன செய்ய வேண்டும்? இது முழுவதும் ஒரு practical question. இளைய தலைமுறையினர் ஒன்றை தெரிந்து கொள்ள வேண்டும். இந்த முதல் இரவு என்னும் practical தேர்வில் முதல் முறை தேர்ச்சி பெறுபவன் உண்மையில் முதல் முறை முயன்றவனாக இருக்க முடியாது. இந்த கேள்விக்கு எதை எல்லாம் செய்ய வேண்டாம் என்று சொல்லிவிட்டால் போதும். கேள்விக்கான விடை கிடைத்துவிடும். இந்த கேள்விக்கான பதில் திருமணம் ஆகாதவர்களுக்கு தான் தேவை என்பதால் இளைய தலைமுறையினரை கருத்தில் கொண்டே அவர்களின் சந்தேகங்களுக்கு பதில் அளிக்க விழைகிறேன். பெண்களுக்கு சில சந்தேகங்கள் இருக்கும். அவற்றில் சில, என் மார்பு அவ்வளவு அழகாக இருக்காதே இது என் கணவருக்கு பிடிக்குமா? என் உடல் பாகங்களில் சில தழும்புகள் எல்லாம் இருக்குமே, அவருக்கு அதெல்லாம் பிடிக்காமல் போய்விடுமோ? முதல் இரவிலே அவர் பல எதிர்பார்ப்புகளை முன் வைத்தால் என்ன செய்து? எனக்கு இப்படி இருக்குதே, என்னை இப்படியே ஏற்றுக் கொள்வாரா? என்ன இப்படி இருக்கனு சொல்லிடுவாரா? அவருக்கு என்னை பிடிக்காமல் போய்விட்டால்? இதே போன்ற எண்ணற்ற பயங்களுடன் தான் ஒவ்வொரு பெண்ணும் முதல் இரவை நோக்கி பயணிக்கிறாள். ஒரு பெண்ணிற்கு இது போன்ற பயங்கள் என்றால் ஆண்மகனிற்கு சொல்லவே வேண்டாம். இதை சரிவர செய்யவில்லை என்றால் என்னவள் என்னை ஒன்றுக்கும் லாக்கி இல்லாதவன் இதை கூட சரிவர செய்ய தெரியல நீ எல்லாம்...., என்று நினைத்துவிடுவாளோ? சொதப்பிட்டோம்னா? எல்லாம் சரியா வருமா? தோற்றுவிட்டோம்னா அசிங்கமா பார்ப்பாலோ? இன்னைக்குனு பார்த்து எதுவும் சரியா நடக்கவில்லை என்றால்? இன்னும் பல.... அவன் வேண்டாத தெய்வம் இருக்காது. பரிட்சைக்கு கூட அவன் அப்படி பயந்துருக்க மாட்டான். முதல் இரவு இருவருக்குமே பயம் கலந்த இரவு தான். அந்த பயத்தை எதிர்கொள்ளுவது எப்படி என்பதை பற்றிய ஒரு பாடத்தை கையில் எடுத்து பதில் எழுவதில் மகிழ்ச்சியே எனக்கு. எதிர்பார்ப்பை ஓரம் கட்டுங்கள் நீங்கள் படத்தில் பார்த்த கதா நாயகிகள், கதா நாயன்கள் போன்று உங்கள் துணை இருக்க மாட்டார்கள். தொப்பையுடனும், தொடைகள் கருத்தும் உடலின் பல பகுதிகளில் ரோமங்கள் கொண்டும் தான் இருப்பார்கள். இது தான் இயற்கை. தொலைக்காட்சியும், யூடிப்பும் உங்கள் கண்களுக்கு விருந்து படைத்து உங்களை இயற்கையிலிருந்து இழுத்துச் சென்றுவிட்டது வெகு தூரம். உங்கள் துணையின் உடல் உறுப்புகள் பற்றிய எதிர்ப்பார்ப்பை குறைத்துக் கொண்டு முதல் இரவிற்கு செல்லுங்கள். உண்மையில் அந்த இரவு உங்களை மகிழ்விக்கும். ஏற்றுக் கொள்ளுங்கள் : உங்கள் துணை எப்படி இருந்தாலும் அவரை ஏற்றுக் கொண்டு அரவணைத்துக் கொள்ளுங்கள். நீ எப்படி இருந்தாலும் நான் உன்னை நேசிக்கிறேன், உன்னை அப்படியே ஏற்றுக்கொள்கிறேன் சொல்லி நம்பிக்கைக் கொடுங்கள். அது சிறந்த ஒன்றை உங்கள் துணை உங்களுக்கு பரிசளிக்க உதவும். உங்கள் துணைக்கு நீங்கள் அளிக்கும் நம்பிக்கை தான் அந்த இரவை ஒரு வெற்றியுள்ள இரவாக்கும். தெரிந்து வைத்திருக்கும் அத்தனை வித்தையையும் ஒரே இரவில் செய்து முடிக்க வேண்டிய அவசியம் இல்லை. முதல் இரவு என்பது ஒரு ரேஸ் இல்லை.அடுத்தடுத்து வரும் இரவுகளில் படிப்படியாக முன்னேறுங்கள். முதல் இரவிலே எல்லாம் என்பது சரியில்லை. உங்கள் துணை சொளகரியமாக இருக்கும் ஒரு உணர்வை பரிசளித்திடுங்கள். அதற்கு அதிகம் பேசுங்கள். Communication தான் முதலிரவின் மூலத்தனமே. எவ்வளவு பேச முடியுமோ அவ்வளவு பேசுங்கள். அவர்களின் எதிர்ப்பார்ப்பு என்ன? ஆசை கனவுகள் என்ன? அந்த இடம் மற்றும் சூழல் அவர்களுக்கு நல்ல மன நிலையை கொடுத்திருக்கிறதா? அவர்கள் பேச ஏதேனும் நினைத்திருக்கிறார்களா? என்பதை கேளுங்கள். இனி எதையும் மறைக்க வேண்டிய அவசியம் இல்லை. மனம் விட்டு பேசுங்கள். உங்கள் ஆசைகள் எதிர்ப்பார்ப்புகள் அத்தனையையும் சொல்லுங்கள். அதை உங்கள் துணை செய்திட கால அவகாசம் கொடுங்கள். நான் உன் கூட தான் இருக்குறேன் எப்பவும் இருப்பேன். பயப்படாத. இன்னைக்கு தோற்றால் நாளைக்கு ஜெயிக்கலாம். நீ வெற்றி பெரும்வரை நானும் உனக்கு உதவுவேன் என்னும் வார்த்தைகள் போதும். இந்த கேள்வியை நான் கையில் எடுத்ததே இதற்காக தான். இந்த ஒன்றை பதிவு செய்வதற்காக தான். மனைவியிடம் முதல் இரவில் தோற்றுவிடக் கூடாதென்பதற்காக விபச்சாரம் செய்யும் ஒரு பெண்ணிடம் இந்த கலையை கற்றுக் கொண்டு செல்ல வேண்டிய அவசியமே இல்லை. இன்றைய தலைமுறையினர் செய்யும் தவறே இது தான். முதல் இரவின் வெற்றி என்பது முதலில் நடக்கும் இரவில் இல்லை உண்மையில். முதல் இரவின் வெற்றி உங்கள் முதல் குழந்தையை கையில் ஏந்துவீர்கள் பாருங்க அது தான். சில விசயங்கள் நான் வேதத்தின் மூலம் கற்றுக் கொண்டது. அதை பகிர்ந்து கொள்கிறேன் விருப்பம் இருந்தால் மட்டும் தொடர்ந்து வாசியுங்கள். புருஷர்களே உங்கள் மனைவியினிடத்தில் அன்பு கூறுங்கள். அவர்களை கசந்து கொள்ளாதீர்கள். ஆங்கிலத்தில், do not be harsh with them. வேசித்தனம் மற்றும் விபச்சாரம் எல்லாம் தவறென்பது அனைவரும் அறிந்ததே. அதை முற்றிலும் அளிக்கக் கூடிய வல்லமை பெற்ற ஒன்று விவாக மஞ்சம். அத்தகைய அசுத்தம் இல்லாமல் போக வேண்டும் என்றால் விவாக மஞ்சம் அசுசிப்படாததாக இருக்கட்டும். மனைவியானவள் தன் சுய சரீரத்திற்கு அதிகாரியல்ல, புருஷனே அதற்கு அதிகாரி; அப்படியே புருஷனும் தன் சுய சரீரத்திற்கு அதிகாரியல்ல, மனைவியே அதற்கு அதிகாரி. சிம்பிளா சொல்லனும்னா இது தான் முதல் இரவின் அடிப்படை விதி, என் பார்வையில். இன்னும் அதிகம் எழுத வேண்டுமானால் 1 கொரிந்தியர் 7 அதிகாரம் முழுவதையும் எழுத வேண்டும். ஆனால் அதற்கு நேரமில்லை. விட்டுவிடுகிறேன். எனக்கு பிடித்த ஒன்றை இருவரிகளில் இணைத்துவிட்டு செல்கிறேன். "உன் இளவயதின் மனைவியோடே மகிழ்ந்திரு. அவளே நேசிக்கப்படதக்க பெண்மானும், அழகான வரையாடும் போலிருப்பாளாக; அவளுடைய ஸ்தனங்களே (மார்பகங்கள்)/உன்னைத் திருப்தி செய்வதாக; அவளுடைய நேசத்தால் நீ எப்பொழுதும் மயங்கியிருப்பாயாக...." முதல் இரவை பயமும், எதிர்ப்பார்ப்பும் இன்றி எதிர் கொள்ளுங்கள். இனி எல்லாம் சுப(க)மே..... இது ஒரு ப்ராக்டிகல் question. கோராவில் இருக்கும் பெரியவர்கள் இது போன்ற சந்தேகங்களுக்கு பதில் அளித்தால் எங்கள் போன்ற இளைய தலைமுறையினர் சரியான அறிவும் புரிதலும் பெருவோம். யூடியூப் சென்று சன்னி லியோனின் தரிசனத்திற்காக காத்திருக்க மாட்டாங்க நம்ம பசங்க. இதைப்பற்றி அறிந்திட அவர்களுக்கு உதவுங்கள். இது ஒரு பாடம். வீடியோ மூலம் கற்றுக் கொள்வதை விட வாசிப்பின் மூலம் கற்று தருதல் இதை பற்றிய நல்ல கண்ணோட்டத்தை தரும் என்பதால் இங்குள்ள பெரியவர்கள் இக்கேள்விக்கு பதில் அளித்து வருங்கால சந்ததிக்கு உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன். #🤵வாழ்க்கை நிகழ்வுகள்😎 #😇வாழ்க்கையின் எதார்த்தங்கள் #🤝நேர்மையான துணை👫 #💕காதல் வாழ்க்கை #💑கணவன் மனைவி காதல்💞
சூரியன் மறைவதற்குள் ஏன் பிணங்களை ... எரித்து விட வேண்டும் என்று கூறுகிறார்கள் .... இறுதிச் சடங்குகள் என்பது இந்தியாவில் அனைத்து மதங்களிலும் நடத்தப்படும் ஒன்றாகும். ஆனால் மற்ற மதங்களுடன் ஒப்பிடுகையில் இந்து மதத்தில் அதிகளவு வித்தியாசமான இறுதிச் சடங்குகள் நடத்தப்படுகிறது. ஆனால் இந்த ஒவ்வொரு சடங்கிற்கு பின்னரும் ஒரு காரணத்தை நம் முன்னோர்கள் வைத்துள்ளனர். இறந்தவர்கள் மரணத்திற்குப் பிறகு அமைதியான வாழ்க்கையை மேற்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் தான் அனைத்து இறுதிச்சடங்குகளும் நடத்தப்படுகிறது. ஆனால் பல இறுதி சடங்குகள் ஏன் செய்யப்படுகிறது என்பதே நமக்கு தெரியாது. இந்த பதிவில் அனைத்து இறுதி சடங்குகளுக்கும் பின்னால் இருக்கும் காரணங்கள். மூக்கில் பஞ்சு வைப்பது. இறந்தவர்களின் உடல் என்பது பாக்டீரியாக்கள் அதிகம் வசிக்கும் இடமாக மாறி விடும். எனவே அவர்களின் உடலில் இருந்து நுண்ணுயிர்கள் மூலம் சில வாயுக்கள் வெளிவரும். இதனால் சுற்றுசூழல் பாதிக்கப்படும். இதனை தடுக்கத்தான் நாடிகட்டு என்னும் பெயரில் காதையும், வாயையும் சேர்த்து கட்டுகிறார்கள். மேலும் மூக்கில் பஞ்சு வைக்கப்பட காரணமும் நுண்ணுயிர்கள் உடலில் பரவாமல் இருக்கத்தான். இறந்தவர்கள் வீட்டில் கண்டிப்பாக விளக்கேற்றி வைக்க வேண்டும் என்பது முக்கியமான சடங்காகும். உயிர் சக்தியானது உடலை விட்டுப் பிரிந்து விட்டால் உடலானது வெற்றுடலாக மாறி விடும். அவர்கள் உடலில் இருந்து வாயுக்கள் வெளியேறத் தொடங்கி விடும். ஆன்மீகரீதியாக அவர்கள் உயிர் அலைகள் அந்த இடத்திலேயே சுற்றி வரும். இந்த அலைகள் மற்றவர்கள் உடலில் நுழைந்தால் அவர்கள் பல துன்பங்களுக்கு ஆளாக நேரிடும். இதனை தடுக்கவே விளக்கேற்றி வைக்கப்படுகிறது. இந்த விளக்கு தெற்கு திசை நோக்கி ஏற்றி வைக்கப்பட வேண்டும், ஏனெனில் இதுதான் மரணத்தின் கடவுளான எமனுக்கான திசையாகும். விளக்கேற்றி வைத்த பின் எமதர்மரிடம் அந்த அலைகள் தன்னை நெருங்காமல் விளக்கின் தீபத்திற்கு செல்லும்படி வேண்டிக் கொள்ள வேண்டும். ஒரு திரி மட்டும் உபயோகிக்க வேண்டும் ஒருவர் இறந்த பிறகு பஞ்ச பூதங்களால் நிறைந்த அவரின் உடலானது உயிரற்றதாகி விடும். அதன்பின் ஒரே ஆன்மா மட்டுமே ஒளிரும். விளக்குகளில் பயன்படுத்தப்படும் ஒற்றை திரியானது ஒளிரும் ஆன்மாவை குறிக்கும். ஏன் பகலில் மட்டுமே செய்யப்படுகிறது? அனைத்து இறுதி சடங்குகளும் பகல் நேரத்தில் மட்டுமே செய்ய வேண்டும், ஏனெனில் உடலை தகனம் செய்வது முதன்மையானதாகும். ஏனெனில் இரவு என்பது எதிர்மறை சக்திகள் அதிகம் உலவும் மேலும் அவற்றின் பலமும் இரவு நேரங்களில் அதிகம் இருக்கும். இறந்த எதிர்மறை சக்திகள் எப்பொழுதும் மற்ற உடல்களில் நுழைய முயலும். எதிர்மறை சக்திகளின் இந்த தாக்குதல்களை தவிர்க்கவே உடல் பகல் பொழுதில் தகனம் செய்யப்படுகிறது. அறிவியல் ரீதியாக கூறும் போது இறந்தவர்களின் உடலில் இருந்து வெளிப்படும் நுண்ணுயிர்களின் அளவு அதிகமாக இருக்கும். இது சுற்றி இருப்பவர்களுக்கு எளிதில் தாக்கக்கூடும். அதனால்தான் உடல் தகனம் பகலில் செய்யப்படுகிறது. மூங்கில்களில் குறிப்பிட்ட ஒலி ஆற்றலை வெளியிடும் தன்மை உள்ளது, இது சுற்றி வரும் தன்மையுடையது. இதில் இருந்து வெளிப்படும் ஒலி ஆற்றல் இறந்து உடலுக்கு கவசமாக அலைகளை ஏற்படுத்தக்கூடும். மூங்கிலால் செய்யப்பட்ட பாடையில் இருக்கும் போது அந்த உடல் ஒலி ஆற்றலால் எதிர்மறை சக்திகளிடம் இருந்து பாதுகாக்கப்படும். கால்கள் சேர்த்து கட்டப்படுவது இறந்தவர்களின் உடல் தகனம் செய்யப்படுவதற்கு முன்பு அவர்கள் உடல் தரையில் வைக்கப்பட்டு அந்த உடலின் காலின் பெருவிரல் இ. இறந்த உடலை சுற்றி இருக்கும் ஆற்றலை ஒருமுகப்படுத்த பல பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது, அதில் ஒன்றுதான் மண்பானை. மண்ணால் செய்யப்பட்ட பொருட்கள் இந்த வேலையை சிறப்பாக செய்கிறது. உடலை எதிர்மறை சக்திகளின்பின்பற்றுவோம தாக்குதல்களில் இருந்து பாதுகாக்க மண்பானை உதவுகிறது. மண்பானையிலிருந்து வெளிப்படும் ஒலி ஆற்றல்கள் மிகவும் வேகமாக பரவக்கூடியவை... இந்துரண்டும் சேர்த்து கட்டப்படும். இது உடலின் வலது மற்றும் இடதுபுற ஆற்றல்கள் இரண்டையும் ஒன்று சேர்த்து உடலையே சுற்றி வர காலின் விரல்கள் கட்டப்படுகிறது #🙏நமது கலாச்சாரம் #😇வாழ்க்கையின் எதார்த்தங்கள் #😁தமிழின் சிறப்பு #🤵வாழ்க்கை நிகழ்வுகள்😎